top of page

போதகரும் இரட்சிப்பில்லாத நபரும் உரையாடுதல்

 

இரட்சிப்பில்லாத நபர்: ஐயா உங்களிடம் சில கேள்விகளை கேட்கலாமா?

போதகர்:  தம்பி, அதற்காகத்தான் தேவன் என்னை இந்த சபையில் போதகராக நியமித்திருக்கிறார்

இரட்சிப்பில்லாத நபர்: ஐயா கர்த்தருடைய மகிமை, கர்த்தருடைய மகிமை என்று எல்லாரும் அடிக்கடி பேசுகிறதை நான் கேள்விப்படுகிறேனே? அப்படி என்றால் என்ன?

போதகர்: தேவன் இருக்கிறார் என்பதை அதாவது தேவ வெளிப்பாடு, எப்படியென்றால் தாம் வல்லமையான தேவன் என்பதை தம்முடைய வல்லமையோடு தம்மை வெளிப்படுத்துவதுதான் கர்த்தருடைய மகிமை என்கிறோம். பாருங்கள் நாம் யாத்திராகமம் புஸ்தகத்தில் வாசிக்கும் போது, அதில் கர்த்தர் தம்மை சீனாய் மலையில் வெளிப்படுத்துகிறார், எப்படியென்றால் அக்கினியின் மத்தியில் என்று பார்க்கிறோம். இப்படியாக தேவன் தம்முடைய மகிமையை பலவிதங்களில் வேதத்தில் சொல்லியிருக்கிறார் [ சுருங்கக்கூறின் அவருடைய பரிசுத்த ஆவியின் வெளிப்பாடு ஆகும் ]

இரட்சிப்பில்லாத நபர்:இந்த மகிமையை நானும் பார்க்க முடியுமா?

போதகர்: தம்பி, இந்த மகிமையை பார்க்க வேண்டுமானால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இரட்சிப்பில்லாத நபர்: இயேசு கிறிஸ்து இல்லாமல் இந்த சிறந்த மகிமையை பார்க்க முடியாதா?

போதகர்: தம்பி, பழைய ஏற்பாட்டில் தேவன் தம்முடைய மகிமையை நேரடியாக காண்பித்தார். ஆனால் இந்த நாட்களிலோ அவருடைய மகிமையை மனுஷகுமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாகவே மகிமையை வெளிப்படுத்துகிறார். அதுமட்டுமல்லாமல் இயேசுவே இந்த மகிமையை, பரிசுத்த ஆவியை அனுப்பி நமக்கு வெளிப்படுத்துகிறார்.

இரட்சிப்பில்லாத நபர்:ஐயா இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

போதகர்: தம்பி உன் இருதயத்தில் அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவரை உன் வாயினாலும் அறிக்கை செய்ய வேண்டும். பின்பு விசுவாசித்து ஞானஸ்நானத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இரட்சிப்பில்லாத நபர்: ஐயா நான் ஞானஸ்நானத்தை பெற்றுக் கொள்கிறேன். நீங்க சொன்னீர்கள் பரிசுத்த ஆவியின் மூலம் இந்த மகிமை வெளிப்படும் என்பதாக பரிசுத்த ஆவியை நான் பெற்றுக் கொண்டேன் என்பதை எப்படி அறிந்து கொள்வது?

போதகர்: பரிசுத்த ஆவி நமக்குள் இருக்கிறார் என்பதை அன்னிய பாஷையின் அடையாளமே வெளிப்படுத்துகிறது அதுமட்டுமல்லாமல் இந்த மகிமை வெளிப்படுவதை உன்னிடத்தில் பரிசுத்த ஆவியின் வரங்கள் கிரியை செய்யும் போது இந்த மகிமையை தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் கர்த்தருடைய மகிமையே அற்புதங்களை செய்கிறது.

இரட்சிப்பில்லாத நபர்: பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்ட பிறகு இந்த வரங்கள் எல்லாம் கிரியை செய்யுமா?

போதகர்: இல்லை தம்பி நீ ஒவ்வொரு நாளும் அவர் சமுகத்தில் உட்கார வேண்டும் மற்றும் எப்பொழுதும் பரிசுத்தமான ஒரு வாழ்க்கையை வாழ நீ கற்றுக் கொள்ள வேண்டும்.

இரட்சிப்பில்லாத நபர்: கர்த்தருடைய மகிமையை நாம் இழந்து போக சந்தர்ப்பம் உண்டா?

போதகர்: தம்பி, நாம் பாவம் செய்யும் போது மற்றும் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களை செய்யும் போது அவருடைய மகிமையை இழந்து போக நேரிடும் இத்தகைய காரியத்தை நாம் சாமுவேல் புஸ்தகத்தில் ஏலியின் வாழ்க்கையில் பார்க்க முடிகிறது மற்றும் புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் அதிகாரத்திலும் பார்க்க முடிகிறது.

இரட்சிப்பில்லாத நபர்: ஐயா நான் எப்பொழுதும் கர்த்தருக்கு பிரியமாய் வாழ்ந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தந்த அவருடைய மகிமையை பாதுகாத்துக் கொள்வேன்.

போதகர்: ரொம்ப நல்லது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னை ஆசீர்வதிப்பாராக.

bottom of page