top of page
BEWARE.jpeg
BEWARE_edited.jpg

கிறிஸ்தவர்களே! உங்களை, பிசாசின் பிள்ளைகள் மனம் திரும்புங்கள் என்று சொல்கிற இவர்களை குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்.

நாங்கள் அழைக்கப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொண்டு எங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொண்டு  வேதாகமத்தை புரட்டுகிற Jesus only குழுவை சேர்ந்தவர்களே? இன்றைக்கு கிராமம் கிராமமாக சென்று ஊழியம் செய்வது யார்?இன்றைக்கு எல்லா இடத்திலும் சுவிசேஷம் சொல்லி அடி வாங்குகிறவர்கள் யார்?ஆவிக்குறிய சபைகளை சார்ந்தவர்களும் CSI போன்ற பிற சபையினரும் தான் கிராமங்கள் தோறும் போய் ஊழியம் செய்கிறார்கள்.உங்கள் முன்னோர்களை கிறிஸ்துவுக்குள்  ஆதாயப்படுத்தினவர்களும் அவர்களே. அவர்களை தேவன் அனுப்பியிரா விட்டால் நீங்கள் விக்கிரகத்தை வழிப்பட்டு கொண்டு தோப்புகரணம் போட்டு கொண்டிருப்பீர்கள்.

அப்படியென்றால் உங்களை ஆதாயப்படுத்தியவர்கள்,உங்கள் உபதேசத்தின் படி சாத்தானின் பிள்ளைகளா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கட்டளையிட்ட பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்ற உங்கள் முன்னோர்கள் அப்பா அம்மா பாட்டி தாத்தா,சகோதர சகோதரிகள் எல்லாம்  உங்கள் உபதேசத்தின் படி விபச்சார சந்ததிகளா?அவர்கள் உங்கள் உபதேசத்தின் படி சாத்தானுக்கும் ஏவாளுக்கும் பிறந்த காயினின் சந்ததிகளா?மேலும் பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் நரகத்துக்கு போவார்கள் என்று நியாயம் தீர்க்கிறார்கள். இவர்கள் நியாயாதிபதியின் ஸ்தானத்தில் உட்கார்ந்து கொண்டு நியாயப்பிரமாணத்துக்கே நியாயாதிபதியாகிவிட்டார்கள்.

 

இன்றைக்கு அமெரிக்காவிலிருந்து வந்த கள்ள உபதேசத்தை பெற்று கொண்டு உனக்கடுத்த சகோதர சகோதரிகளை பார்த்து நீங்கள் எல்லாம்  பிசாசின் கூட்டம். மனம் திரும்புங்கள் என்று சொல்வதற்கு யார் உங்களை பின் புலத்தில் இயக்குவது?

 

இணையத்தளத்தில் கிறிஸ்தவர்களை மறைமுகமாக தாக்கி கொண்டு கள்ள உபதேசத்தை பரப்புகிறவர்களே தெருவில் இறங்கி ஊழியம் செய்ய அருகதை இருக்கிறதா?

 

கிறிஸ்தவர்களே!!இரட்சிக்கப்பட்ட பலரை குறி வைத்து இடறப்பண்ணுகிற இவர்களை குறித்து உங்கள் சபை ஜனங்களையும் குறிப்பாக வாலிப பிள்ளைகளையும் எச்சரியுங்கள்.பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்கிற திரித்துவ உபதேசத்தை பின்பற்றுகிறவர்கள் சாத்தானின் பிள்ளைகள்.அதாவது காயீனுக்கு பிறந்தவர்கள் என்று இந்த Only Jesus குழுவினர்கள் சொல்லி வருகிறார்கள். இவர்களை தமிழில் இயேசு நாமக்காரர்கள் என்று சொல்கிறார்கள். நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள் என்கிற வசனத்தை கொண்டு பிதா குமாரன் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்றவர்களை பிசாசினால் பிறந்தவர்கள் என்று சொல்லி ஜனங்களை வஞ்சித்து இயேசுவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். பெந்தேகோஸ்தே ஊழியக்காரர்கள் பிசாசின் ஆவியால் நிரப்பபட்டவர்கள் என்கிறார்கள்.

 

இன்றைக்கு பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுத்த கிறிஸ்தவர்களை பார்த்து நீங்கள் எத்தனை அப்பாக்களுக்கு பிறந்தவர்கள் மேலும் நீங்கள் விபச்சார சந்ததி என்று கிண்டல் செய்கிறார்கள்.

 

கிறிஸ்தவர்களே மனம் திரும்புங்கள்  என்று சொல்லும் இவர்களை உங்கள் சபைகளில் பயன்படுத்தாதீர்கள்.

 

இந்த jesus only குழுவினர் கிறிஸ்தவ வாலிபர்களை Target பண்ணி இடற செய்கிறார்கள்.உங்கள் சபைகளில் கூட மறைந்திருக்கிறார்கள். பல Whatsapp குழுக்களில் மறைந்திருக்கிறார்கள்.மெதுவாக அழகாக தங்கள் உபதேசத்தின் மூலம் பல கேள்விகளை கேட்டு பலரை வஞ்சிக்கிறார்கள்.

சமீபத்தில் ஒருவர் இணையத்தளத்தில் Hollywood style இசையுடன் குரலை மாற்றி கொண்டு ஜனங்களை பயமுறுத்தி பிதாவாகிய தேவன் தேவனல்ல.

 

இயேசு தான் பிதாவாகிய தேவன் என்றும், கிறிஸ்தவர்களே மனம் திரும்புங்கள் என்று குரல் கொடுத்து கொண்டிருக்கிறார்.

இத்தகய அந்தி கிறிஸ்துவின் ஆவியை உடைய கள்ள உபதேசிகள் எழும்புகிறார்கள்.

 

ஊழியக்காரர்களே நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? கடைசி நாள்களில் கள்ள போதகர்கள் கள்ள தீர்க்கதரிசிகள் உங்களுக்குள்ளே இருப்பார்கள் என்று இயேசு எச்சரித்தார்.தயவு செய்து இந்த எச்சரிப்பை அசட்டை பண்ணாதீர்கள். இத்தகய நூதன உபதேசங்களின் பின்னணியை  தெரிந்து கொள்ளவில்லையென்றால் நீங்களும்  உங்கள் சபை ஜனங்கள் வஞ்சிக்கப்பட்டு போவார்கள்.

 

இன்றைக்கு நம்மை ஒட்டு மொத்தமாக தரக்குறைவாக பிசாசுக்கு பிறந்தவர்கள்.அதாவது சாத்தானின் பிள்ளைகள் என்று கேலி செய்கிறவர்கள் இந்துவோ முஸ்லீமோ இல்லை.

Jesus only என்கிற குழுவினர் தான். இன்றைக்கு சுவிசேஷத்துக்கு விரோதமாக சாத்தான் எழுப்புவது ஜனங்களை வஞ்சிக்கும் 

கள்ள போதகர்களை.

 

இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

1 யோவான் 2-22

 

மேற் சொல்லப்பட்ட வசனத்தின்படி இவர்களே அந்தி கிறிஸ்துவின் ஆவியை உடையவர்கள்.

 

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள், உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். மத்தேயு 7-15

 

கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளை தந்திரமாய் நுழையப்பண்ணுகிறார்கள். 2 பேதுரு 2-1.

 

இத்தகய வஞ்சிக்கிறஅந்தி கிறிஸ்துவின் ஆவியை உடையவர்கள் யார்?இவர்கள் என்ன கேள்வி கேட்பார்கள், இவர்களுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பதை உங்கள் சபைகளில் ஜனங்களுக்கு சொல்லி கொடுங்கள்.இத்தகய கள்ள உபதேசிகளை குறித்து உங்கள் வாலிபர்களை எச்சரியுங்கள்.

 

இன்றைக்கு கிராமம் கிராமமாக சென்று ஆத்தும ஆதாயம் செய்து அவர்களை இரட்சிப்புக்குள் நடத்திய ஊழியக்காரர்களை பார்த்து பிசாசின் பிள்ளைகள் என்று சொல்லுகிறவர்களே?அவர்கள் இயேசுவின் கட்டளையின் படி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே கொடுத்த ஞானஸ்நானத்தை தவறு என்று சொல்லி மறுபடியும் ஞானஸ்நானம் கொடுத்து இயேசுவின் கட்டளையை மறுதலிக்காதீர்கள்.

 

முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.  கலாத்தியர் 1:9

bottom of page