top of page
Mountain Cliff Hiker

இரட்சிக்கப்பட்டேன் ஆனால் என் சுபாவத்தில் மாற்றமில்லை…

ரட்சிப்பு என்றால் என்ன? நீங்கள் உங்கள் இருதயத்தில்  விசுவாசித்து இயேசுவே மெய்யான தெய்வம் என்பதையும்,இயேசு தான் எனக்காக இரத்தம் சிந்தி எனக்காக தன் ஜீவனையும் கொடுத்தார் என்பதையும்,அவர் என் பாவத்துக்காக மரித்தார், நான் பாவம் செய்ததற்கான தண்டனையை ஏற்று கொண்டார்.என் பாவத்தை சிலுவையில் சுமந்தார், சிலுவையில் இயேசு என் பாவத்தையும் சாபத்தையும் நீக்கினார் என்று விசுவாசித்து அறிக்கையிட்டு பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்று கொண்டு,பாவ உணர்விலிருந்து விடுதலை பெறுவதே இரட்சிப்பு.

 

புற மதத்திலிருந்து இரட்சிக்கப்பட்ட பாலமுருகன் என்பவர் இப்படியாகசொல்கிரார், முன்பு நான் அடக்க முடியாத கோபக்காரனாக இருந்தேன் முரட்டாட்டம் உள்ள மனிதனாக இருந்தேன், பகைமை உணர்வு என்னிடம் இருந்தது.   யாரை பார்த்தாலும் கோபத்தில் முறைப்பது திட்டுவது.  ஆனால், ஆண்டவர் என்னை சந்தித்த பொழுது என்னுடைய எல்லா பொல்லாத சுபாவத்தையும்  மாற்றினார். நான் ஒரு பொறாமை உள்ள மனிதனாக இருந்தேன். நான் இரட்சிக்கப்பட்ட பிறகு கர்த்தர் என்னுடைய பொறாமை என்கிற தீய  சுபாவத்தை மாற்றினார். இரட்சிக்கப்படுவதற்கு முன்பு நான் ஒரு ஜாதி வெறியனாக இருந்தேன். இரட்சிக்கப் பட்ட பிறகு என்னுடைய ஜாதி வெறியும்  என்னை விட்டுப் போய் விட்டது.

மனிதர்களை விலையேறப் பெற்ற ஆத்துமாக்களாக பார்க்க ஆரம்பித்தேன். முன்பு  கெட்ட வார்த்தை பேசுகிறவனாகவும், பரியாசம் பண்ணுகிறவனாகவும் இருந்தேன் எப்பொழுதும் என் வாயிலிருந்து கெட்டவார்த்தை தான் வரும். ஆனால், இரட்சிக்கப்பட்ட பிறகு மோசேயிடம் இருந்த அந்த சாந்த குணத்தை கர்த்தர் எனக்கு கொடுத்தார். அதன் பிறகு என் வார்த்தை கிருபையுள்ள வார்த்தைகளாகவும் அநேகரை தொடக்கூடிய வார்த்தைகளாக மாறியது. நான் இரட்சிக்கப்பட்ட பிறகு  எனக்குள் இருந்த கசப்பு உணர்வுகள், பாவத்தை தூண்டும் உணர்வுகள் குற்றப்படுத்துகிற காரியங்கள்,பிறரை கேவலப்படுத்துகிற சுபாவங்கள்  எல்லாம் மாறி போனது. படிப்படியாக உள்ளான ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். நான் இருளில் இருந்தேன் வெளிச்சத்துக்கு வந்தேன், நான் பாவ உணர்விலிருத்து விடுதலைப் பெற்று புதிய மனுஷனானேன். ஒரு சிறு பிள்ளையை போல மாறிப் போனேன். இவனா இப்படி மாறிப்போனான் என்று அனைவரும் ஆச்சரியப்படும் படி ஒரு மாற்றம் எனக்குள் வந்தது.

 

 

இன்றைக்கு இரட்சிக்கப்பட்ட பலர் 20 வருஷங்கள் 30  வருஷங்கள் ஆன நிலையில்ல பழைய கேடு கெட்ட சுபாவத்தை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய பேச்சுகள் கூட அநேகரை குற்றப்படுத்துகிறதும் அநேகரை  கேவலப்படுத்துகிறதாகவும் அநேகரை, வேதனைப்படுத்தக்கூடிய பேச்சுகளாக இருக்கிறது. இரட்சிக்கப்பட்டு பல வருடங்களாக சபைக்கு போகிறவர்கள், சூழ்நிலை மாறும் போது  கெட்ட வார்த்தைகளையும் தூஷண வார்த்தைகளையும் பெருமையான வார்த்தைகளையும் பேசுகிறார்கள்.பலர் கண்ணின் இச்சை மாம்சத்தின் இச்சை என்கிற அடிமைத்தனத்துக்குள் விழுந்து கிடக்கின்றனர்.

 

 

என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக. சங்கீதம் 19-14

 

 

பல ஊழியக்காரர்கள்  முரட்டாட்டம் உள்ளவர்களாக தான் இருக்கிறார்கள். இவர்கள்  இரட்சிப்பில் நிலைத்திருக்கிறோம் என்று  தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு போதிக்கிற அவர்கள் தங்களுக்கு போதிப்பதில்லை. போதிக்கிற வசனத்தில்  நிலைத்திராமல்  இரட்சிப்பை  பெற்றுக் கொள்ளாமல் இரட்சிப்பை பற்றி பிரசங்கிக்கிற மாயமாலக்காரர்களாக இருக்கிறார்கள்.

 

 

மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான் தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். 1 கொரிந்தியர் 9-27.

 

 

அடுத்ததாக முடிவு பரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான் என்று இயேசு சொன்ன எச்சரிப்பை கவனியுங்கள்.  நீங்கள் அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். பிலிப்பியர் 2-12

 

 

பிரியமானவர்களே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு சிலுவையில் பெற்று தந்த இரட்சிப்பு விலையேறப்பெற்றது அதை கடைசி வரை காத்துக் கொள்ளும்படியாக பயத்தோடு நடுக்கத்தோடும் ஜாக்கிரதையாக இருங்கள். ஏனென்றால்? எந்த ராஜாவுக்கும் எந்த ஜனாதிபதிக்கும் எந்த பணக்காரனுக்கும் கிடைக்காத விலை மதிக்க முடியாத இரட்சிப்பை உங்களுக்காகவும் எனக்காகவும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் பெற்று தந்திருக்கிறார். நீங்கள் மரணிக்கும் போது அதாவது  நீங்கள் மகிமைக்குள் பிரவேசிக்கும் போது தான் அந்த இரட்சிப்பின் மகிமையை  அறிந்து கொள்வீர்கள்.

 

 

இயேசு பெற்று தந்த இரட்சிப்பு அதன் மூலமாக வரும் பரிசுத்தமாகுதலின் பூரணம் மற்றும் நித்திய ஜீவன் என்பது விலை மதிக்க முடியாதது.தகுதியில்லாத நமக்கு கிருபையாய் கொடுக்கப்பட்டது. இது அவர் நமக்கு கொடுத்த கிருபை, நம் ஜீவனை விட அவர் கிருபை பெரியது  என்று தாவீது சொல்வதை புரிந்து கொண்டீர்களா?

 

ஊழியக்காரர்களே! இரட்சிப்பை பற்றி போதிக்கிற உங்களில் அநேகர் அந்த இரட்சிப்பில் நிலைத்து நிற்கவில்லை. ஆவிக்குறியவன் தன்னை தானே நிதானித்தறிகிறான் பிறரை இரட்சிப்புக்குள் நடத்துகிற நீங்கள் உங்கள் ஜீவனை நஷ்டப்படுத்தினால் எல்லா மனிதர்களை விட பரிதபிக்கபட்டவர்களாக இருப்பீர்கள்.

 

 

இரட்சிக்கப்பட்ட ஒருவன் தேவன் விரும்பும் படியான பரிசுத்த ஜீவியம் ஜீவிப்பதற்கு தொடர்ச்சியாக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட வேண்டும். தேவ மகிமையில் இருக்கக்கூடிய மனுஷனால் நிச்சயமாக  தேவனுக்கு பிரியமாய் வாழ முடியும். அந்த மகிமை அல்லது அந்த பிரசன்னம் வரும்போது தேவ குணா திசயங்களாகிய கிருபை இரக்கம் தயவு மனதுருக்முகம் நற்குணங்கள் ஆகியவை சேர்ந்தே வருகின்றன.நம் வாழ்க்கையானது நிச்சயமாக மாற்றப்படுகிறது பரிசுத்த ஆவியானவர் தம்மோடு கூட கலாத்தியர் 5 22 23 வசனங்களில் கூறப்பட்டுள்ள ஆவியின் கனிகளை கொண்டு வருகிறார்.

 

 

மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? ரோமர் 2-21

 

 

உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய். 1 தீமோத்தேயு 4-16

 

 

மற்றவர்களுக்கு போதிக்கிற நானே ஆகாதவனாய் போகாதப்டடி என் சரிரத்தை ஒடுக்கி கீழ்ப்படுத்துகிறேன் என்கிற வசனத்தின் அர்த்தம் புரிகிறதா? போதிக்கிற வசனத்தில் நிலைத்திருந்தால் தான் நீங்கள் உங்களை இரட்சித்துக் கொள்ள முடியும் என்று வேதம் எச்சரிக்கிறதை உணர்ந்து கொண்டீர்களா? அந்த எச்சரிப்பை குறித்த  பயம் இருக்கிறதா?

 

 

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5:17

 

 

பிரியமானவர்களே, நீங்கள் இரட்சிக்கப்பட்டோம் என்று சொல்லிக் கொள்கிறீர்கள் ஆனால் உங்களில் அநேகர் உங்கள் பொல்லாத சுபாவத்தினாலே இன்னும் கட்டப்பட்டு இருக்கிறீர்கள்!  உங்கள் பழைய சுபாவம் இத்தனை வருஷமாகியும் மாறவில்லை!மனம் புதிதாகவில்லை! 

இன்றைக்கு அநேகருடைய கிரியைகள் பொல்லாதவைகளாக இருக்கிறது, ஏனென்றால்? உண்மையான மனமாற்றம் அவர்களுக்குள்  இல்லை. எனவே தயவு செய்து உங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு மனம் திரும்ப ஒப்பு கொடுங்கள். ஏனென்றால்?  ஆண்டவருடைய திவ்விய சுபாவத்துக்கு பங்குள்ளவர்களாக அதாவது அவரது  சாயலின் படியாக ஒரு மறுரூபம் என்கிற மாற்றம்  மனதில் ஏற்படாத  வரை இன்னும் நாம் முழுமையாக இரட்சிப்பை பெற்றுக் கொள்ளவில்லை.

 

 

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். 1 யோவான் 2:6

 

 

அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான் 1 யோவான் 3:3

 

 

என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன், கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். யோவான் 15:4

 

 

ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். மத்தேயு 21-43

 

நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். மத்தேயு 7-19

 

 

ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார், விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார், அந்தத்தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும், நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய். ரோமர் 11-22

 

ஆமென்.

bottom of page