பரலோகத்தின் தேவனால் ஊழியத்துக்கு அழைக்கப்பட்ட ஊழியக்காரனே!!
வரதட்சணை வாங்குவது தேச சட்டத்தின் படி குற்றம் என்பது உனக்கு தெரியாதா?
விதைக்காததை அறுப்பது நீதியல்ல. ஒருவன் தான் பிரயாசப்படாததை பெற்று கொள்வது, அடுத்தவர்கள் சம்பாதித்த பணத்தை அபகரிப்பது தேவநீதியாகுமா?
உன் சபை மக்கள் வரதட்சணை வாங்குவதற்கு பாவத்தைக் குறித்தும் நீதியை குறித்தும் பிரசங்கிக்காத மேலும் ஜனங்களின் சுய இச்சைக்கேற்றபடி நடக்கும் போதகனாகிய நீ தான் காரணம். சபை ஜனங்கள் உலகத்துக்கு வெளிச்சமாய் பூமிக்கு உப்பாய் இருக்க வேண்டும். மேலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் இருக்க வேண்டும்.
இப்படி அநியாயமாக சம்பாதித்த வரதட்சணை பணத்தை ஆசீர்வாதம் பண்ணி ஜெபிக்க போகிற ஊழியக்காரனே நீ மனம் திரும்பு!!! உன் சபையில் வரதட்சணை வாங்குவது தவறு என்பதை குறித்து பேசு.
இது தேவ நீதி அல்ல என்பதை சொல்லிக் கொடு.
பணத்தை சார்ந்து திருமணங்களை நிச்சயிக்காதீர்கள் என்பதை கண்டித்து உணர்த்து. காணிக்கைக்காக வரதட்சனை பணத்தை ஆசீர்வதிக்க போய் உன்னை அசுசி படுத்திக் கொள்ளாதே.
பண ஆசை எல்லா தீங்குக்கும் வேராய் இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் விசுவாசத்தை விட்டு விலகி தங்களை தாங்களே உருவ குத்திக்கொள்ளுகிறார்கள் என்பதை பற்றி புத்தி சொல்லு.
பணத்தின் மேல் நம்பிக்கை கொண்டு தேவன் மேல் விசுவாசமாயிராமல் தேவனுக்கு பிரியமாய் இருப்பது கூடாத காரியம் என்பதை சொல்லிக் கொடு.