
நீ உயிர்தெழ போகிறாய் என்பதை அறிந்திருக்கிறாயா?
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். யோவான் 11:25
மண்ணான வருடைய சாயலை அணிந்திருக்கிற நீ வானவருடைய மகிமையின் சாயலை அணிந்து கொள்ளும் காலம் வரும். லாசருவின் நாறிப்போன உடல் உயிரடைந்தது போல தீர்க்கத்தரிசனம் உரைத்தபோது உலர்ந்த போன எலும்புகள் உயிரடைந்தது போல, கிறிஸ்து மரித்த போது கல்லறைகள் திறந்து நித்திரை அடைந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்கள் எழுந்து, மேலும் அவர் உயிர்த்தெழுந்தபோது இவர்கள் கல்லறைகளை விட்டு புறப்பட்டு பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்கு காணப்பட்டது போல எக்காளம் தொனிக்கும் அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாக எழுந்திருப்பார்கள் நாமும் மறுரூபமாக்கப்படுவோம் என்று தீர்க்கதரிசனமாக எழுதப்பட்ட இந்த காரியம் உன்னில் நிறைவேறுவதற்கு நீ உன்னை ஆயத்தப்படுத்து.
அழிந்து போகிற நீ அழியாமையையும் சாவுக்கேதுமான உன் சரிரம் சாவாமையும் தரித்துக்கொள்ளும் நாள் வரும்.
ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்பிக்கப்பட கூடிய ஒரு காலம் வருகிறது
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். பிலிப்பியர் 3:21
இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி,எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடேழுந்திருப்பதற்குத் தகுதியாயிருக்கும்படிக்கும்,
அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன். பிலிப்பியர் 3:10,11
உலகத்தில் வாழ்கிற நீ உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்காதே. உலகத்துக்கு சினேகிதனாய் இருக்காதே. இரண்டு எஜமான்களாகிய உலகத்துக்கும் தேவனுக்கும் ஊழியம் செய்யாதே. உலகமும் அதன் ஆசை இச்சைகளும் அழிந்து போகும்.அழிந்து போகக்கூடிய பொல்லாங்கனுக்குள் கிடக்கிற உலகத்தின் ஆசை இச்சைகளுக்கு மயங்கி தேவனுடைய ராஜியத்தை இழந்து விடாதே.
உலகத்தால் கறை படாத படிக்கு உன்னை காத்துக் கொள். கிறிஸ்து சீஷர்களை குறித்து சொன்னது போல நான் உலகத்தானல்லாதது போல இவர்களும் உலகத்தார்கள் அல்ல என்று உங்களைப் பற்றி அவர் சொல்லும்படியாய் சாட்சியாய் வாழ ஒப்புகொடு.
நீயும் அவருடையஉயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவனாய் மாறுவாய்.நன்மை செய்கிற நீ ஜீவனை அடையும் படி புறப்பட்டு போவாய்.
நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக. அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். கலாத்தியர் 6:14
ஆமென்