top of page
baptized.jpg

பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தில்

ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு நரகம்?!

  • Facebook
  • Twitter
  • LinkedIn
  • Instagram

பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் எடுத்தவர்கள் நரகத்துக்கு போவார்களாம் என்ற இயேசு நாமக்காரர்கள் கர்த்தராகிய இயேசுவின் கட்டளையை மறுதலிப்பது மாத்திரமல்லாமல் அவர் சொன்னபடி செய்தால் நரகத்துக்கு போவீர்கள் என்று இயேசுவை அவமானப்படுத்தி தங்கள் மேல் ஆக்கினையை குவித்து கொள்கிறார்கள். இது ஒரு பயங்கரமான கள்ள உபதேசம்.

பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 
அப்போஸ்தலர் 2:38

இந்த வசனத்தை கொண்டு இவர்கள் போதிப்பது, இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுத்தால் மாத்திரம் பரிசுத்த ஆவியின் வரத்தை பெற்று கொள்வார்கள் என்கிறார்கள்.


இப்பொழுது கீழே உள்ள வசனத்தை பார்ப்போம்....

இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு  அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.  அப்போஸ்தலர் 8:17

இங்கு இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றவர்கள் பரிசுத்த ஆவியின் வரத்தை பெற்று கொள்ளவில்லை என்பதை விளங்கி கொள்ளலாம்.

அடுத்து, இயேசு சொன்ன கட்டளையான பிதா குமாரன் பரிசுத்தாவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுப்பவர்கள் பரலோகத்துக்கு போக மாட்டார்கள் என்று சொல்லி அவர்களுக்கு இயேசுவின் நாமத்தினாலே மீண்டும் ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்.கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன கட்டளையை நிராகரித்து  மாறாக மீண்டுமாய் ஞானஸ்நானம் கொடுப்பது  சாபமல்லவா.

இதோ, சீக்கிரமாய் வருகிறேன், இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார். வெளிப்படுத்தினத விசேஷம் 22:7.

மேலே சொல்லப்பட்ட வசனத்தை ஒரு முறை படியுங்கள், உங்களை வஞ்சிக்கிறார்கள் என்பது உங்களுக்கு புரியும். மேலும், இவர்கள் சொல்வது என்னவெனில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றவர்கள் பிசாசின் பிள்ளைகள்   என்று கர்த்தராகிய இயேசுவின் கட்டளையையே அசிங்கப்படுத்துகிறார்கள். இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுத்தவர்கள் மாத்திரம் பரலோகம் போவார்கள்.


இவர்கள் மாத்திரமே பரிசுத்தாவியின் வரத்தை பெறுவார்கள் என்கிறார்கள். இதில் பரிசுத்தாவியின் எந்த வரத்தை பெறுவார்கள் என்பது முக்கியம்.

அப்போஸ்தலர் 8-13 ல்  விசுவாசித்து  இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்ற சீமோன் பணத்தினால் பரிசுத்த ஆவியின் வரத்தை பெறும்படி முயற்சி செய்கிறான், பேதுரு அவனை பார்த்து மனம் திரும்ப சொல்கிறான்.

 பேதுரு அவனை நோக்கி; தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்
கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது. 


உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள். ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். 


நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான். அப்போஸ்தலர் 8:20-23

ஞானஸ்நானம் எடுத்தும் இன்னும் பாவத்திலிருந்து விடுதலைப் பெறாதவர்கள் அநேகர். இவர்கள் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை பெற்று கொண்டு சகல சத்தியத்துக்குள்ளும் நடத்தபட வேண்டியதாக இருக்கிறது. நாம் எல்லாரும் ஞானஸ்நானம் எடுத்த போதும்  பரிசுத்தமாகுதலின் பூரணத்தை நோக்கி செல்கிறோம்.

பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1-8.


மேற் சொல்லப்பட்ட வசனத்தின் படி பரிசுத்த ஆவியானவரே நம்மை சகல சத்தியத்துக்குள் நடத்துகிறார்.

  1. இயேசு கட்டளையிட்ட பிதா குமாரன் பரிசுத்தாவி நாமத்தினாலே ஞானஸ்நானம் எடுத்தவர்கள் பிசாசின் பிள்ளைகள் என்று இயேசுவின் கட்டளையை அவமானப்படுத்துகிறவர்கள் யாருடைய பிள்ளைகள்? 

  2. இவர்களை ஆளுகை செய்வது எந்த ஆவி ?

  3. இயேசு சொன்ன கட்டளை தவறானது என்று மறைமுகமாக போதிக்கிற இவர்கள் யார்? இந்த உபதேசம் எங்கிருந்து வந்தது?

 

இயேசுவின் கட்டளை க்கு கீழ்படிந்தால் நரகம் என்று சொல்லி இயேசுவின் கர்த்தத்துவத்தையே அவமானப்படுத்தும் இத்தகய மாயமாலமான உபதேசத்துக்கு எச்சரிக்கையாக இருங்கள்.

வேத வசனத்துக்கு புறம்பாக ஏவாளிடம் சாத்தான் சொன்னது போல இப்படியும் எழுதியிருக்கிறதே என்று வேத வசனத்தை புரட்டுகிறவர்கள் ஒரு நாள் தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும்.


ஏனென்றால் தேவனுடைய கட்டளைகளுக்கு மாறாக ஆதாமையும் ஏவாளையும் கீழ்படியாமைக்குள் நடத்தின பிசாசும் சபிக்கப்பட்டது. தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படியாத ஆதாமும் ஏவாளும் சபிக்கப்பட்டார்கள். இயேசுவின் கட்டளைகளுக்கு மாறாக கள்ள உபதேசத்தை போதித்து ஜனங்களை வஞ்சிக்கிற இவர்கள்  சாபத்தை தங்கள் மேல் குவித்து கொள்கிறார்கள்.


வசனத்துக்கு மாறாக வீணான வார்தைகளை பேசுகிறவர்கள் சந்திப்பின் நாளிலே தேவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம்மை சகல சத்தியத்துக்கு கீழ்படியும்படி நடத்துகிறார். பிசாசு ஏவாளை வஞ்சித்தது போல நம்மை  கீழ்படியாமைக்குள் நடத்துகிறான்.

மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.மத்தேயு 12-36

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.  யோவான் 12:48,49

1 யோவான் 5-7 ன் படி (பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். 


1 யோவான் 5:7 - பரலோகத்தில் சாட்சியிடுகிற மூவரும்...மேலும் இம்மூவரும் என்ற வார்த்தையை கவனியுங்கள்.இதில் ஒருமையும் பன்முகத்தன்மையும் இருக்கிறதே.

 

1 யோவான் 5-8 ன் படி  (பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஐலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.


தெய்வத்துவத்தின் ஆதீனத்துக்கடுத்த காரியங்களை மனித உறவுகளோடு Compare பண்ணி உங்களுடைய குறைந்த அறிவினால் வேதத்தை வியாக்கியானம் பண்ணாதீர்கள்.

பூமியிலே ஒரு மனிதன் இயேசுவின் இரத்தத்தாலே பாவம் கழுவப்பட்டு இரட்சிக்கப்பட்டு ஜலத்தினாலே ஞானஸ்நானம் பெற்று ஆவியினாலும் அபிஷேகம் பண்ண பட வேண்டும். பரலோகத்தில் சாட்சியிடுகிற பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்தினால் ஞானஸ்நானம் எடுப்பது என்பது இயேசுவின் கட்டளை.மேலும் சகல அதிகாரங்களை உடைய,கர்த்தத்துவத்தை உடைய,தெய்வத்துவத்தின் பரிபூரணத்தினால் நிறைந்திருந்த இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பதிலும் தவறில்லை.

அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார். தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
1 பேதுரு 3-22

அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் பெர்ன்ஹாம் என்பவர் தான் இந்த உபதேசத்தை ஒரு தூதனிடமிருந்து பெற்றதாக சொன்னார். இத்தகய துர் உபதேசத்தை பரப்புகிறவர்களை விட்டு விலகுங்கள்.


ஏனென்றால், இவரது மரணமே சபிக்கபட்டதாயிருந்தது.இவரது உபதேசத்தை பரப்புகிறவர்கள் இவரது ஆவியை உடையவர்களாக இருக்கிறார்கள். இவரை இரண்டாம் கிறிஸ்து என்று இவரை பின்பற்றுகிறவர்கள் அழைக்கிறார்கள்.

மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷருக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். 1 கொரிந்தியர் 2:1

நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து,  வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.  கலாத்தியர் 1-8

இத்தகய துர் உபதேசத்தை பரப்புகிறவர்களுக்கு ஆத்தும பாரம் கிடையாது.சதாகாலமும் ஊழியங்களையும் ஊழியக்காரர்களையும் தூசித்து குறை சொல்கிறவர்களாகவே இருக்கிறார்கள்.  அந்தி கிறிஸ்துவின் ஆவியை உடைய இவர்கள் குற்றம் சாட்டி கொண்டே இருப்பார்கள்.


வேதாகமத்தில் சொல்லப்பட்ட குற்றம் சாட்டுகிறவன் யார்?என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


பல பரிசுத்தவான்கள் மிஷனரிகள் தேவனுடைய ஊழியத்தை உண்மையாக செய்தவர்கள் மற்றும் இரத்தசாட்சியாக மரித்தவர்கள் பிதா குமாரன் பரிசுத்தாவி நாமத்தில் ஞானஸ்நானம் பெற்ற இவர்களெல்லாம் நரகத்தில் இருப்பார்கள் என்று பொய் சொல்லி நியாயாதிபதி ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு நியாயம் தீர்க்கிற  இவர்களை பகுத்தறியுங்கள்.

தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே" அவர்களை நீதிமான்களாக்குகிடொறவர். ரோமர் 8-33

 

நம்முடைய"  தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான். வெளிப்படுத்தின விசேஷம் 12-10

கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். 


ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான். 2 யோவான் 1:9-11

ஒரு சில வசனங்களை வைத்து கொண்டு பிதாவும் பரிசுத்த ஆவியானவரும் இயேசு தான் என்று முழு வேதாகமத்தையும் புரட்டுகிற இவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.


இவர்களால் வஞ்சிக்கப்பட்டு மீண்டும் ஞானஸ்நானம் எடுத்த ஒருவர்,நான் நன்றாக தான் இருந்தேன். ஒழுங்காக ஆலயத்துக்கு போனேன்.தேவனை ஆராதித்தேன்.


ஆனால் இவர்கள் வேதாகமத்திலிருந்து  சில வசனங்களை சொல்லி என்னை குழப்பி மீண்டுமாய் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்துவிட்டார்கள் என்றார்.இவர்கள் புறமதத்தினரிடம் கிறிஸ்துவை பற்றி சொல்வதில்லை. ஆலயத்துக்கு போகும் கிறிஸ்தவர்களை வஞ்சித்து தங்கள் உபதேசத்தை திணிக்கிறார்கள். இந்த உபதேசத்தில் இருந்த திருநெல் வேலியை சேர்ந்த லாரி பிரசங்கியாரின் முடிவு என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?இயேசுவும் கிருஷ்ணனும் ஒன்று என்று சொல்லி அரே ராமா அரே கிருஷ்ணா இயக்கத்தில் சேர்ந்தார், கடைசி நாள்களில் கள்ள போதகர்கள் உங்கள் நடுவில் இருப்பார்கள் என்ற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன காலக்கட்டத்தில் இருக்கிறோம். எனவே நீங்கள் கற்று கொண்ட உபதேசத்துக்கு மாறாக மாறுபாடான  உபதேசங்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்.


இப்பொழுது Jesus only மாதிரி பிதாவையும் இயேசுவையும் மறுதலிக்கும் Holyspirit only என்கிற உபதேசம் பரவுகிறது. ஏற்கனவே பிதா Only என்று சொல்லி கொண்டு இயேசுவின் கர்த்ததுவத்தை மறுதலிக்கும் எஹோவா சாட்சிகள் அநேக கிறிஸ்தவர்களை வீடு தேடி சென்று வஞ்சிக்கிறார்கள். எனவே மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்.

இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.   வெளிப்படுத்தினத விசேஷம் 22:18.


ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.   வெளிப்படுத்தினத விசேஷம் 22:19

அதற்கு இயேசு: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.  லூக்கா 11-28.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.  2 கொரிந்தியர் 13-14

தமிழ் கிறிஸ்தவ இணையதளம்

bottom of page