வேதாகம கேள்வி பதில்
சகோதரி. அமுதா ராஜேந்திரன்
1: வானமும் பூமியும் எப்போது படைக்கப்பட்டது??
ஆதியிலே ஆதி 1:1
2: ஆதியிலே இருள் எங்கிருந்தது??
ஆழத்தில் ஆதி 1:2
3: முதலாம் நாளில் படைக்கப்பட்டது எது??
வெளிச்சம் ஆதி 1:5
4: ஆகாய விரிவுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டது??
வானம் ஆதி 1:8
5: எதற்காக ஆகாயவிரிவில் சுடர்கள் படைக்கப்பட்டன??
பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாக்க ஆதி 1:14
6: பூமியின் படைப்புகளை தேவன் என்ன செய்தார்??
ஆசீர்வதித்தார் ஆதி 1:22
7: மனுஷனுக்கு தேவன் கொடுத்த முதல் கட்டளை எது??
பலுகிப் பெருகி பூமியை நிரப்பி அதை கீழ்படுத்தி ஆண்டு கொள்ளுங்கள்
ஆதி 1:28
8: தேவன் தம்முடைய கிரியைகளை எந்த நாளில் நிறைவேற்றினார்??
ஏழாம் நாளில் ஆதி 2:2
9: பூமியின் மீது சகலவித பூண்டுகளும் இன்னும் உண்டாக்கப்படாததன் காரணம் என்ன??
மழை பெய்யவில்லை ஆதி 2:5
10: ஆவிலா தேசத்தின் விளைபொருள் என்ன??
பொன் ஆதி 2:11
11 : மனுஷனை தேவனாகிய கர்த்தர் எதற்காக ஏதேன் தோட்டத்தில் கொண்டு வைத்தார்??
தோட்டத்தை பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆதி 2:15
12: எது மனுஷனுக்கு நல்லது அல்ல??
தனிமையாய் இருப்பது ஆதி 2:18
13: தேவன் படைத்த படைப்புகளுக்கு பெயர் சூட்டியவர் யார்??
ஆதாம் ஆதி 2:19
14: தந்திரமுள்ளதாயிருந்த காட்டு ஜீவன் எது??
சர்ப்பம் ஆதி 3:1
15: நீ எங்கே இருக்கிறாய் என தேவன் யாரிடம் கேட்டார்??
ஆதாமிடம் ஆதி 3:9
16: பூமி யார் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்??
ஆதாமினிமித்தம் ஆதி 3:17
17: ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவன் என்ன உடை உண்டாக்கி உடுத்தினார்??
தோல் உடை ஆதி 3:21
18: காயீன் ஆபேலை எந்த இடத்தில் கொலை செய்தான்??
வயல்வெளியில் ஆதி 4:8
19 : காயீன் எங்கு குடியிருந்தான்??
நோத் என்னும் தேசத்தில் ஆதி 4:16
20: ஏனோக்கின் மகன் பெயர் என்ன??
ஈராத் ஆதி 4:18
21 : தனக்கு காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றவன் யார்??
லாமேக்கு ஆதி 4:23
22: யாருடைய காலத்தில் மக்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ள ஆரம்பித்தனர்??
ஏனோசின் காலத்தில் ஆதி 4:25
23: எந்த நாளிலே மனுஷன் என்ற பெயர் சூட்டப்பட்டது??
அவனை சிருஷ்டித்த நாளில் ஆதி 5:2
24: ஆதாம் உயிரோடிருந்த வருஷங்கள் எத்தனை??
தொள்ளாயிரத்து முப்பது ஆதி 5:5
25: முன்னூறு வருஷம் தேவனோடு சஞ்சரித்த மனிதன் யார்??
ஏனோக்கு ஆதி 5:22
26: நோவாவின் பெயரின் பொருள் என்ன??
இவன் நம்மை தேற்றுவான் ஆதி 5:29
27: நோவா எந்த வயதில் தன் மூன்று பிள்ளைகளையும் பெற்றான்??
ஐந்நூறு வயதான போது ஆதி 5:32
28: எது மனுஷனோடே என்றென்றைக்கும் போராடுவது இல்லை
கர்த்தருடைய ஆவி ஆதி 6:3
29 : நீதிமானும் உத்தமனும் தேவனோடு சஞ்சரித்தவனுமாகிய ஒருவர் யார்??
நோவா ஆதி 6:9
30: பேழைக்குள் சென்ற நபர்கள் எத்தனை ??
எட்டு ஆதி 6:18
31 : இந்த சந்ததியில் யாரை தேவன் நீதிமானாகக் கண்டார்??
நோவாவை ஆதி 7:1
32: ஜலப்பிரளயம் பூமியின் மீது உண்டானபோது நோவாவின் வயது எத்தனை??
அறுநூறு ஆதி 7:6
33: நோவாவின் பேழையின் கதவை அடைத்தவர் யார்??
கர்த்தர் ஆதி 7: 16
34: மூடப்பட்ட மலைகளுக்கு மேலாக ஜலம் எத்தனை முழம் உயர்ந்தது??
பதினைந்து முழம் ஆதி 7:20
35: பேழை தங்கிய மலையின் பெயர் என்ன??
அரராத் ஆதி 8:35
36: எந்த நாளிலே பேழை அரராத் மலையில் தங்கியது??
ஏழாம் மாதம் பதினேழாம் தேதியில் ஆதி 8:4
37: நோவாவின் பேழைக்கு போக்கும்வரத்துமாயிருந்த பறவை எது??
காகம் ஆதி 8:7
38: நோவாவிடம் திரும்பி வந்த பறவை எது ??
புறா ஆதி 8:9
39: பேழையிலிருந்து இறங்கி வந்த நோவா என்ன செய்தார்??
பலிபீடம் கட்டி பலி செலுத்தினார் ஆதி 8:20
40: தேவனாகிய கர்த்தர் நோவாவோடு செய்த உடன்படிக்கை எது??
இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியை சபிப்பதில்லை ஆதி 8:21
41 : மாம்சத்தை எதோடு புசிக்கலாகாது??
இரத்தத்தோடு ஆதி 9:4
42: மனுஷனுடைய இரத்தத்தைச் சிந்துகிறவனுக்கு கிடைக்கும் தண்டனை எது??
அவனுடைய இரத்தம் சிந்தப்படல் ஆதி 9:6
43: உடன்படிக்கையின் அடையாளமாக தேவன் எதை மேகத்தில் வைத்தார்??
தன் வில்லை ஆதி 9:13
44: வானவில் எப்போது தோன்றும்??
பூமிக்கு மேலாக மேகத்தை வைக்கும் போது ஆதி 9:14
45: நோவாவின் மகன் காம் எத்தேசத்துக்கு தகப்பன்??
கானான் தேசத்துக்கு ஆதி 9: 18
46: திராட்சை ரசத்தைக் குடித்து வெறிகொண்டு கூடாரத்தில் படுத்திருந்தவன் யார்??
நோவா ஆதி 9:21
47 : ஜலப்பிரளயத்துக்குப் பின்பு நோவா எவளவு காலம் வாழ்ந்தார்??
முன்னூற்று ஐம்பது வருஷம் ஆதி 9:28
48: நோவா வாழ்ந்த நாட்கள் எத்தனை??
ஆதி 9:29
49: நோவாவின் குமாரருக்கு எப்போது பிள்ளைகள் பிறந்தனர்??
ஜலப்பிரளயத்துக்குப் பின்பு ஆதி 10:1
50: பாபேல் எந்த தேசத்தில் உள்ளது??
சிநேயார் தேசத்தில் ஆதி 10:10
51: நினிவேயைக் கட்டினவன் யார்??
அசூர் ஆதி 10:11
52: நினிவேக்கும் காலாகுக்கும் நடுவில் இருக்கும் பட்டணம் எது??
ரேசேன் ஆதி 10:12
53: பாஷையை தாறுமாறாக்க யார் இறங்கி வந்தார்??
கர்த்தர் ஆதி 11:7
54: ஊர் என்பது யாருடைய பட்டணம்??
கல்தேயருடை ஆதி 11: 31
55: பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் யாருக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார்??
ஆபிரகாமுக்குள் ஆதி 12:3
55: கர்த்தர் சொன்னபடியே அவருக்கு பின் சென்றவர் யார்??
ஆபிராம் ஆதி 12:4
56: ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்ட போது அவருக்கு வயது என்ன??
எழுபத்தைந்து ஆதி 12:4
58: ஆபிராமுடன் சென்றவன் யார்??
லோத்து ஆதி 12:4
59: ஆபிராம் சுற்றி திரிந்து எந்த சமபூமி மட்டும் வந்தார்??
மோரே ஆதி 12:6
60: மோரே என்னும் சமபூமியில் வசித்து வந்தவர்கள் யார்??
கானானியர் ஆதி 12:6
61: தேசத்தில் பஞ்சம் உண்டானபடியால் ஆபிராம் எங்கு தங்கும்படிச் சென்றார்??
எகிப்து தேசத்துக்கு ஆதி 12:10
62: சாராய் யாருக்கு முன்பாக புகழப்பட்டாள்.
பார்வோனுக்கு முன்பாக ஆதி 12:15
63: லோத்தும் ஆபிராமும் ஒருமித்து வாழ ஏதுவில்லாமல் போகக் காரணம் என்ன??
இருவருக்கும் ஆஸ்தி மிகுதியாய் இருந்த படியால் ஆதி 13:6
64: லோத்து எந்த தேசத்தைத் தெரிந்தெடுத்தார்??
யோர்தானுக்கு எதிரான சமபூமி முழுவதும் ஆதி 13:10
65: ஆபிராம் எங்கு குடியிருந்தார்??
கானான் தேசத்தில் ஆதி 13:11
66: எந்த நாட்டு மக்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா
பாவிகளுமாயிருந்தனர்??
சோதோமின் ஜனங்கள் ஆதி 13:13
67: ஆபிராமின் சந்ததியை எப்படி பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார்??
பூமியின் தூளைப்போல ஆதி 13:16
68: நிலக்கீல் உண்டாகும் கேணிகள் எந்த பள்ளத்தாக்கில் இருந்தன??
சித்தீம் பள்ளத்தாக்கில் ஆதி 14: 10
69: ஆபிராமின் சகோதரனை மீட்க ஆபிராம் எத்தனை நபர்களுடன் யுத்தத்திற்குச் சென்றார்??
முன்னூற்றுப் பதினெட்டு ஆதி 14: 14
70: லோத்தின் பொருட்களை மீட்டுக்கொண்டு வந்து கொண்டிருக்கையில் ஆபிராமை ஆசீர்வதித்தவன் யார்??
மெல்கிசதேக்கு ஆதி : 14:18
71: மெல்கிசதேக்குக்கு ஆபிராம் எதை கொடுத்து வந்தார்??
தசமபாகம் ஆதி 14:20
72: ஆபிராமின் வீட்டுவிசாரணைக்காரன் பெயர் என்ன??
எலியேசர் ஆதி 15:2
73: கர்த்தர் எதை ஆபிராமின் வாழ்வில் நீதியாக எண்ணினார்??
ஆபிராமின் விசுவாசத்தை ஆதி 15:6
74: ஆபிராமுக்கு தேசத்தை சுதந்திரமாக் கொடுக்கும்படி அவனை எந்த பட்டணத்திலிருந்து அழைத்து வந்தார்??
ஊர் என்கிற கல்தேயருடை பட்டணத்திலிருந்து ஆதி 15:7
75: ஆபிராமின் சந்ததியார் எத்தனை ஆண்டுகள் அன்னிய தேசத்தாரை சேவித்து உபத்திரவப் படுவார்கள்??
நானூறு ஆண்டுகள் ஆதி 15:13
76: யாருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை??
எமோரியருடைய ஆதி 15:16
77: ஆபிராம் எத்தனை ஆண்டுகள் கானான் தேசத்தில் குடியிருந்தபின்பு சாராய் ஆபிராமுக்கு ஆகாரை கொடுத்தாள்??
பத்து ஆண்டுகள் ஆதி 16:3
78: ஆகார் சாராயை விட்டு ஓடிப்போக காரணம் என்ன??
சாராய் ஆகாரைக் கடினமாய் நடத்தினாள் ஆதி 16:6
79: வீட்டை விட்டு ஓடிப்போன ஆகாரை தேவதூதன் எங்கு கண்டுபிடித்தான்??
சூருக்குப் போகிற வழியருகே இருக்கிற ஊற்றண்டையில் ஆதி 16:7
80: யார் துஷ்ட மனிதனாய் இருப்பான் என்று ஆகாரிடம் தூதன் சொன்னான்??
இஸ்மவேல் ஆதி 16:12
81: காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கும் தண்ணீர் துரவின் பெயர் என்ன??
லகாய்ரோயீ ஆதி 16:14
82: ஆகார் இஸ்மவேலைப் பெற்ற போது ஆபிராமுக்கு வயது எத்தனை??
எண்பத்தாறு ஆதி 16:16
83: ஆபிராகாமின் ஆண் சந்ததி எல்லாம் என்ன செய்யப்பட வேண்டும்??
விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும் ஆதி 17: 10
84: எந்த நாளில் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும் ?
பிறந்த எட்டாம் நாளில் ஆதி 17:12
85: விருத்தசேதனம் பண்ணப்படாத ஆண்பிள்ளை எதை மீறினவன்??
உடன்படிக்கையை ஆதி 17: 14
86: சாராய் என்ற பெயருக்கு தேவன் கொடுத்த புதுப்பெயர் என்ன??
சாராள் ஆதி 17:15
87: சாராள் என்பதன் பொருள் என்ன??
ஜாதிகளுக்குத் தாயானவள் ஆதி 17:16
88: தொன்னூற்று ஒன்பது வயதில் பெற்ற உடன்படிக்கை வார்த்தைகளை கேட்ட ஆபிரகாம் என்ன செய்தார்??
முகம் குப்புற விழுந்து நகைத்தார் ஆதி 17:17
89: இஸ்மவேல் எத்தனை பிரபுக்களைப் பெறுவான் என தேவன் சொன்னார்??
பன்னிரண்டு ஆதி 17:20
90: ஆபிரகாம் விருத்தசேதனம் பண்ணப்படுகையில் அவன் வயது என்ன??
தொன்னூற்று ஒன்பது ஆதி 17:24
91: தேவன் ஆபிரகாமுக்கு எங்கு தரிசனமானார்??
மம்ரேயின் சம பூமியில் ஆதி 18: 1
92: சோதோமின் பாவத்துக்காக கர்த்தர் என்ன செய்தார்??
இறங்கிப் போனார் ஆதி 18:21
93: சோதோமுக்கு எத்தனை தூதர்கள் வந்தார்கள்??
இரண்டு தூதர்கள் ஆதி 19:1
94: அப்பாலே போ பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுவது என்று கூறியவர் யார்??
சோதோமின் மக்கள் ஆதி 19 :9
95: லோத்தை வீட்டுக்குள் இழுத்து பூட்டிய பின்னர் தெருவாசலிலிருந்த சோதோமியருக்கு தூதர்கள் என்ன செய்தனர்??
குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள் ஆதி 19:11
96: யாருடைய கூக்குரல் தேவ சமூகத்தில் பெரிதாயிருந்தது??
சோதோம் பட்டணத்தாருடைய ஆதி 19:13
97: லோத்து விரும்பி ஓடிப்போக சம்மதித்த ஊரின் பெயர் என்ன??
சோவார் ஆதி 19:22
98: பின்னிட்டுப் பார்த்த லோத்தின் மனைவிக்கு என்ன நேர்ந்தது??
உப்புத் தூணாக மாறினாள் ஆதி 19:26
99: சோதோம் கொமோராவிலிருந்து எழும்பிய புகை எவ்வாறு இருந்தது??
சூளையின் புகைபோலிருந்தது ஆதி 19: 28
100: சோவாரிலே குடியிருக்கப் பயந்த லோத்து தன் குமாரத்திகளுடன் எங்கே குடியிருந்தார்??
மலையிலே ஒரு கெபியிலே ஆதி 19:30
101: அபிமெலேக்கு எந்த ஊர் ராஜாவாயிருந்தான்??
கேராரின் ராஜா ஆதி 20:2
102: ஆண்டவரே நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ என கேட்டவர் யார்??
அபிமெலேக்கு ஆதி 20:4
103 : அபிமெலேக் பிழைக்கும்படி யார் அவனுக்காக ஜெபம் செய்வான் என்று அபிமலேக்கிடம் கர்த்தர் சொன்னார்??
ஆபிரகாம் ஆதி 20:7
104: தன் மனைவியினிமித்தம் தன்னை கொன்று போடுவார்கள் என்று பயந்தவன் யார்??
ஆபிரகாம் ஆதி 20: 11
105: தன் தகப்பன் வீட்டை விட்டு தேசாந்தரியாய்த் திரிந்தவன் யார்??
ஆபிரகாம் ஆதி 20: 13
106 : சாராளின் முகத்துக்கு முக்காட்டுக்காக அபிமலேக்கு ஆபிரகாமிடம் எத்தனை வெள்ளிக்காசு கொடுத்தான்??
ஆயிரம் ஆதி 20:16
107: யார் நிமித்தமாக அபிமலேக்கின் வீட்டாரின் கர்ப்பங்கள் அடைக்கப்பட்டன??
சாராளினிமித்தமாக ஆதி 20: 17
108: எப்போது ஆபிரகாமுக்கு சாராள் ஒரு குமாரனைப் பெற்றாள்??
தேவன் குறித்திருந்த காலத்திலே ஆதி 21:2
109: ஆபிரகாம் ஈசாக்குக்கு எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்ய காரணம் என்ன??
தேவன் கட்டளையிட்டபடியினால் ஆதி 21:4
110 : ஈசாக்கு பிறந்தபொழுது ஆபிரகாமுக்கு வயது என்ன??
நூறு ஆதி 21:5
111 : தேவன் என்னை நகைக்கப்பண்ணினார் என்று சொன்னது யார்??
சாராள் ஆதி 21: 6
112: யாரிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று தேவன் சொன்னார்??
ஈசாக்கினிடத்தில் ஆதி 21:12
113: பெயர்செபா வனாந்திரத்தில் அலைந்து திரிந்தவள் யார்??
ஆகார் ஆதி 21:14
114: இஸ்மவேல் எந்த வனாந்திரத்தில் இருந்த போது விவாகம் பண்ணினான்??
பாரான் வனாந்திரம் ஆதி 21:21
115: ஆபிரகாமிடம் தயவு கேட்டு வந்தவன் யார்??
அபிமெலேக்கு ஆதி 21:23
116: அபிமலேக்கும் ஆபிரகாமும் உடன்படிக்கை பண்ணுகையில் ஆபிரகாம் எதை அடையாளமாக கொடுத்தார்??
ஆடு மாடுகளை ஆதி 21:27
117: அபிமலேக்கும் ஆபிரகாமும் ஆணையிட்டுக் கொண்ட இடத்தின் பெயர் என்ன??
பெயர்செபா ஆதி 21:31
118: ஆபிரகாம் பெயர்செபாவிலே எதை உண்டாக்கி கர்த்தருடைய நாமத்தை த் தொழுது கொண்டார்??
தோப்பு ஆதி 21: 33
119: எதற்காக தேவன் ஆபிரகாமே என அழைத்தார்??
அவரை சோதிப்பதற்காக ஆதி 22:1
120: ஆபிரகாம் எத்தனை நாள் பயணத்துக்குப் பின் ஈசாக்கை பலியிடும் மலையைக் கண்டார்??
மூன்று நாள் பயணத்துக்குப் பின் ஆதி 22:4
121: ஆபிரகாம் தேவனுக்குப் பயப்படுகிறவர் என்பதை எதினால் கர்த்தர் அறிந்தார்??
ஏக சுதன் என்று பாராமல் கர்த்தருக்கு ஈசாக்கை ஒப்புக்கொடுத்ததினால் ஆதி 22:12
122: ஆபிரகாம் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிந்ததினால் ஜனங்களுக்கு என்ன நடக்கும்??
பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆபிரகாமின் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் ஆதி 22:18
123: ஈசாக்கை பலியிடச் சென்ற பின்பு ஆபிரகாம் எங்கே குடியிருந்தார்??
பெயர்செபாவில் ஆதி 22:19
124: சாராள் எத்தனை வருடம் உயிரோடிருந்தார்??
நூற்றி இருபத்தி ஏழு வருடம் ஆதி 23:1
125: சாராள் எங்கே மரித்தாள்??
கானான் தேசத்திலுள்ள கீரியாத் அர்பாவில் ஆதி 23:2
126: சாராளை அடக்கம் செய்ய தன் குகையை கொடுத்தவர் யார்??
எப்ரோன் ஆதி 23:16
127: சாராளை அடக்கம்செய்ய வாங்கிய நிலத்திற்கு எத்தனை சேக்கல் வெள்ளியை ஆபிரகாம் நிறுத்து கொடுத்தார்??
நானூறு சேக்கல் ஆதி 23:16
128: சாராளை அடக்கம் செய்த குகையின் பெயர் என்ன??
மக்பேலா ஆதி 23:19
129: ஆபிரகாம் ஈசாக்குக்கு எங்கே பெண் கொள்ள வேண்டாம் எனக் கூறினார்??
கானானியருடை குமாரத்திகளில் ஆதி 24:3
130 : ஆபிரகாமின் ஊழியக்காரன் ஈசாக்குக்குப் பெண் பார்க்க எந்த ஊரில் வந்து சேர்ந்தார்??
மெசபத்தோமியாவிலுள்ள நாகோருடைய ஊரில் ஆதி 24:3
131: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உள்ளே வாரும் நீர் வெளியே நிற்பானேன் என்று சொன்னவர் யார்??
லாபான் ஆதி 24:31
132: ஆபிரகாமின் ஊழியக்காரனுடன் செல்ல ஆயத்தப்பட்ட ரேபேக்காளை சகோதரனும் வீட்டு மக்களும் என்ன சொல்லி வாழ்த்தினர்??
நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக உன் பிள்ளைகள் பகைஞரின் வாசல்களை சதந்தரித்துக் கொள்வார்களாக ஆதி 24: 60
133: ஈசாக்கு எந்த துரவின் வழியாய்ப் புறப்பட்டு வந்தார்??
லாகாய் ரோயி ஆதி 24:62
134: ஈசாக்கு சாயங்கால வேளையில் எதற்காக வெளியே சென்றார்??
தியானம் பண்ண ஆதி 24:63
135: ஆபிரகாமின் இரண்டாவது மனைவியின் பெயர் என்ன??
கேத்தூராள் ஆதி 25:1
136: ஆபிரகாம் எத்தனை ஆண்டுகள் உயிரோடிருந்தார்??
நூற்று எழுபத்தைந்து ஆதி 25:7
137: மக்பேலா குகையில் யாரை எல்லாம் அடக்கம் பண்ணினர்??
சாராளையும் ஆபிரகாமையும் ஆதி 25:10
138: இஸ்மவேல் எத்தனை வருடம் வாழ்ந்தார்??
நூற்றி முப்பத்து ஏழு ஆதி 25:17
139: ஈசாக்கு ரெபேக்காளை விவாகம் பண்ணினபோது அவனுக்கு வயது என்ன??
நாற்பது ஆதி 25:20
140: ரெபேக்காள் மலடியாயிருந்தபோது ஈசாக்கு என்ன செய்தார்??
கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தார் ஆதி 25:21
141: ஈசாக்குக்கு பிள்ளைகள் பிறந்தபோது அவனுக்கு வயது எத்தனை??
அறுபது ஆதி 25:26
142: யாக்கோபு எப்படிப்பட்டவனாயிருந்தார்??
குணசாலியும் கூடாரவாசியுமாயிருந்தார் ஆதி 25:27
143: தன் சேஷ்டபுத்திர பாகத்தை அலட்சியம் பண்ணியவர் யார்??
ஏசா ஆதி 25:34
144: அபிமலேக்கு எந்த நாட்டின் ராஜா??
பெலிஸ்தருடைய ஆதி 26:1
145: ஈசாக்கிடத்தில் எகிப்துக்கு போக வேண்டாம் என்று சொன்னது யார்??
கர்த்தர் ஆதி 26:2
146: ஈசாக்கு வர வர ஐசுவரியவனாகி வருவதைக் கண்டு பொறாமை கொண்டவர்கள் யார்??
பெலிஸ்தியர்கள் ஆதி 26: 14
147: ஈசாக்கின் மேய்ப்பர்களுக்கும் கேராரூர் மேய்ப்பராகளுக்கும் துரவினிமித்தம் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அந்த துரவுக்கு என்ன பெயர் வைத்தான்??
ஏசேக்கு ஆதி 26:20
148: ஈசாக்குவின் மூன்றாவது துரவினால் வாக்குவாதம் வரவில்லை ஆகவே அந்த துரவுக்கு என்ன பெயர் வைத்தான் ??
ரெகொபோத் ஆதி 26:22
149: ரெகொபோத் என்றால் பொருள் என்ன??
கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் ஆதி 26:22
150: ஈசாக்கின் வேலைக்காரர் கடைசியாக வெட்டிய துரவின் பெயர் என்ன??
சேபா ஆதி 26: 33
151: தன் சொல்லை மாத்திரம் கேட்கும்படி தன் மகனை வற்புறுத்திய தாய் யார்??
ரெபேக்காள் ஆதி 27: 13
152: தந்திரமாய் எழுந்து சகோதரன் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்ட ஈசாக்கின் மகன் யார்??
யாக்கோபு ஆதி 27:35
153: உன்னை காத்து இந்த தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன் நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்று யாரிடம் கர்த்தர் சொன்னார்??
யாக்கோபிடம் ஆதி 28:15
154: யாக்கோபு கல்தூணை நிறுத்தி எண்ணெய் வார்த்து அவ்விடத்துக்கு என்ன பெயரிட்டார்??
பெத்தேல் ஆதி 28:19
155: பெத்தேலுக்கு முற்காலத்தில் இருந்த பெயர் என்ன??
லூஸ் ஆதி 28:19
156: லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுக்கப்பட்டவள் யார்??
சில்பாள் ஆதி 29:24
157: யாக்கோபு யாரை அதிகமாய் நேசித்தான்??
ராகேலை ஆதி 29: 30
158: கடைசியாக பெற்ற மகனுக்கு லேயாள் இப்பொழுது கர்த்தரை துதிப்பேன் என்று கூறி அவனுக்கு என்ன பெயரிட்டான்??
யூதா ஆதி 29:35
159: பிள்ளை இல்லாவிட்டால் நான் சாகிறேன் எனக் கூறியவள் யார்??
ராகேல் ஆதி 30: 1
160: கோதுமை அறுப்பு காலத்தில் வயல்வெளிகளில் போய் ரூபன் எதை கண்டு எடுத்து கொண்டு தாயிடம் கொடுத்தான்??
தூதாயீம் கனிகள் ஆதி 30:14
161: லேயாள் பெற்ற மகளின் பெயர் என்ன??
தீனாள் ஆதி 30:21
162: ராகேலுக்கு கொடுக்கப்பட்ட மகனின் பெயர் என்ன??
யோசேப்பு ஆதி 30: 24
163: லாபான் யாக்கோபின் சம்பளத்தை எத்தனை முறை மாற்றினான் ??
பத்து முறை ஆதி 31:7
164: லாபான் உனக்குச் செய்கிற யாவையும் நான் கண்டேன் என்று கூறியது யார்?
தேவதூதன் ஆதி 31:12
165: தன் தகப்பனுடைய சொரூபங்களைத் திருடியவள் யார்??
ராகேல் ஆதி 31:22
166: யாக்கோபு தனக்கு உண்டானவற்றைச் சேர்த்துக்கொண்டு ஆற்றை கடந்து எந்த மலையை நோக்கிப் போனார்??
கீலேயாத் மலையை நோக்கி ஆதி 31: 21
167: யாக்கோபு லாபான் வீட்டிலிருந்து வெளியேறிய செய்தி லாபானுக்கு எந்த நாளிலே அறிவிக்கப்பட்டது??
மூன்றாம் நாளில் ஆதி 31:22
168: ராத்திரியிலே தேவன் லாபானிடத்தில் என்ன சொன்னார்??
நீ யாக்கோபோடே நன்மையை அன்றி தீமை ஒன்றும் பேசாதபடி எச்சரிக்கையாயிரு ஆதி 31:24
169: யாக்கோபு எத்தனை ஆண்டுகள் லாபானிடத்தில் இருந்தார்??
இருபது ஆண்டுகள் ஆதி 31: 38
170: எத்தனை ஆண்டுகள் லாபானின் குமாரத்திகளுக்காக யாக்கோபு வேலை செய்தான்??
பதினான்கு ஆண்டுகள் ஆதி 31: 41
171: லாபானும் யாக்கோபும் கல்லை நிறுத்தி உடன்படிக்கை செய்த ஸ்தலம் எது என்று அழைக்கப்படுகிறது??
ஜெகர்சகதூதா ஆதி 31:47
172: இந்த கற்குவியல் எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியால் அது என்ன பெயருடன் அழைக்கப்படுகிறது??
கலயத் ஆதி 31: 48
173: லாபான் யாக்கோபிடம் நம்முடனே ஒருவரும் இல்லை பார் தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால் அது என்ன பெயர் பெற்றது??
மிஸ்பா ஆதி 31:50
174: லாபானும் யாக்கோபும் மீண்டும் யுத்தத்துக்கு வராமல் இருக்க சாட்சியாக நிறுத்தப்பட்டது எது??
கற்குவியலும் கற்தூணும் ஆதி 31:52
175: யாக்கோபு பிரயாணம் பண்ணுகையில் அவரை சந்தித்தவர்கள் யார்??
தேவ தூதர்கள் ஆதி 32:1
176: தேவனுடைய சேனையை சந்தித்த இடத்துக்கு யாக்கோபு என்ன பெயரிட்டான்??
மக்னாயீம் ஆதி 32: 2
177: ஏசா எத்தனை பேருடன் யாக்கோபை சந்திக்க ஆயத்தப்பட்டான்??
நானூறு ஆதி 32: 6
178: ஏசாவை கண்டு பயந்த யாக்கோபு இராமுழுதும் என்ன செய்தான்??
தேவனோடு போராடி ஜெபித்தான் ஆதி 32:12
179: ஏசாவை மகிழ்ச்சியாக்க யாக்கோபு என்ன திட்டம் தீட்டினான்??
ஏசாவுக்கு வெகுமதிகளை அனுப்பி மகிழ்ச்சியாக்க முனைந்தான் ஆதி 32: 15
180 : தன் இரு மனைவிகளையும் பதினொரு பிள்ளைகளையும் பணிவிடைகாரர்களையும் யாக்கோபு கூட்டிக்கொண்டு எந்த ஆற்றை கடந்தான்??
யாப்பேக்கு ஆற்றை ஆதி 32:22
181: யாக்கோபுக்கு கொடுக்கப்பட்டப் புதுப் பெயர் என்ன??
இஸ்ரவேல் ஆதி 32:28
182: யாக்கோபு தேவனை முகமுகமாய் கண்ட இடத்திற்கு என்ன பெயர் வைத்தார்??
பெனியேல் ஆதி 32:30
183: பெனியேல் என்றால் பொருள் என்ன??
தேவனை முகமுகமாய் கண்டேன் ஆதி 32:30
184: இஸ்ரவேலர் இந்நாள் வரைக்கும் தொடைச்சந்து நரம்பை புசியாததற்கு காரணம் என்ன??
யாக்கோபுடைய தொடைச்சந்து நரம்பைக் கர்த்தர் தொட்டபடியால் ஆதி 32:32
185: எத்தனை விசை யாக்கோபு ஏசாவுக்கு முன்பாக தரை மட்டும் குனிந்து வணங்கி ஏசாவின் கிட்ட சேர்ந்தார்??
ஏழு விசை ஆதி 33:3
186: யாக்கோபு எங்கே தனக்கு ஒரு வீடு கட்டினார்??
சுக்கோத் ஆதி 33:17
187 : யாக்கோபு கூடாரம் போட்ட நிலம் ஏமோரின் கையிலே எத்தனை வெள்ளிக் காசுக்கு வாங்கப்பட்டது??
நூறு வெள்ளிக்காசு ஆதி 33:19
188: ஏமோரின் கையில் விலைக்கு வாங்கிய நிலத்தில் யாக்கோபு கட்டிய பலிபீடத்தின் பெயர் என்ன??
ஏல் எல்லோகே ஆதி 33:20
189: தேசத்துப் பெண்களைப் பார்க்க சென்ற யாக்கோபின் குமாரத்தி யார்??
தீனாள் ஆதி 34:1
190: சீகேம் யாருடைய மகன்??
ஏமோரின் மகன் ஆதி 34: 2
நூறு வெள்ளிக்காசு ஆதி 33:19
191: ஏமோரியரைப் பட்டயக்கருக்கால் வெட்டிய தீனாளின் சகோதரர்கள் யார்??
சிமியோனும் லேவியும் ஆதி 34:25
192: சீகேமிலிருந்து யாக்கோபும் அவர் ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள எந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர்??
பெத்தேல் என்னும் லூசுக்கு ஆதி 35:6
193: யாக்கோபு பெத்தேலில் கட்டிய பலிபீடத்திற்கு என்ன பெயர் வைத்தார்??
ஏல் பெத்தேல் ஆதி 35:7
194: ரெபேக்காளின் தாதியின் பெயர் என்ன??
தெபொராள் ஆதி 35:8
195: தெபொராளை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு என்ன பெயர் வந்தது??
அல்லோன் பாகூத் ஆதி 35:8
196: தேவன் தன்னோடு பேசின இடத்திற்கு யாக்கோபு என்ன பெயர் வைத்தார்??
பெத்தேல் ஆதி 35:15
197: மரணகாலத்தில் யாருடைய ஆத்துமா பிரியும்போது அவள் தன் குமாரனுக்கு பெனொனி எனப் பெயரிட்டாள்??
ராகேலின் ஆத்துமா ஆதி 35: 18
198: பெனொனி என்பதை தகப்பன் எவ்விதம் மாற்றினார் ??
பென்யமீன் ஆதி 35: 18
199: ராகேல் மரித்து எங்கே அடக்கம் பண்ணப்பட்டாள் ??
பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகும் வழியில் ஆதி 35: 19
200: ஈசாக்கு எந்த வயதில் மரித்தார்??
நூற்று எண்பது ஆதி 35: 28
201 : ஏதோமியரின் தகப்பன் யார்??
ஏசா ஆதி 36:1
202: ஏசாவுக்கு எத்தனை மனைவிகள்??
மூன்று ஆதி 36: 2
203: ஏசாவின் மனைவிகள் பெயர் என்ன??
ஆதாள் ஆகோலிபாமாள் பஸ்மாத் ஆதி 36:2
204: பஸ்மாத் யாருடைய குமாரத்தி ??
இஸ்மவேல் ஆதி 36:3
205: அவர்கள் மந்தையினிமித்தம் தாங்கள் தங்கியிருந்த பூமி தாங்க கூடாததாய் இருந்ததால் ஒருவரை ஒருவர் பிரிந்து சென்றவர்கள் யார்??
ஏசாவும் யாக்கோபும் ஆதி 36:7
206: ஏசா எந்த மலையில் குடியேறினார்??
சேயீர் மலையில் ஆதி 36: 8
207: ஏசாவுக்கு கொடுக்கப்பட்ட இன்னொரு பெயர் என்ன??
ஏதோம் ஆதி 36: 8
208: யாக்கோபு எங்கே தங்கியிருந்தார்??
கானான் தேசத்தில் ஆதி 37: 1
209: யோசேப்பு எத்தனை வயதில் ஆடுகளை மேய்த்து வந்தார்??
பதினெழு ஆதி 37:2
210: தன் சகோதரரின் துன்மார்க்கத்தைத் தகப்பனுக்கு எடுத்துக்கூறியவர் யார்??
யோசேப்பு ஆதி 37:2
211: யாக்கோபு யோசேப்பை அதிகமாக நேசிக்க காரணம் என்ன??
யாக்கோபின் முதிர்வயதில் யோசேப்பு பிறந்ததினால் ஆதி 37:3
212: யோசேப்பின் இரண்டாவது சொப்பனம் எது??
சூரியனும் சந்திரனும் பதினொரு நட்ச்சத்திரங்களும் யோசேப்பை வணங்கியது ஆதி 37: 9
213: யோசேப்பு சொன்ன சொப்பனத்தை மனதில் வைத்துக் கொண்டது யார்??
யோசேப்பின் தகப்பன் யாக்கோபு ஆதி 37: 11
214: யோசேப்பின் சகோதரர்கள் எங்கே ஆடுகளை மேய்க்கப் போனார்கள்??
சீகேமிலே ஆதி 37:12
215: யோசேப்பை தப்புவிக்க முயற்சி செய்தவன் யார்??
சகோதரனாகிய ரூபன் ஆதி 37:21
216: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன என சகோதரரிடம் சொன்னவர் யார்??
யூதா ஆதி 37: 26
217: யோசேப்பை எத்தனை வெள்ளிக்காசுக்கு விற்றுப் போட்டார்கள்??
இருபது வெள்ளிக்காசு ஆதி 37:28
218 :வஸ்திரங்களைக் கிழித்து அரையில் இரட்டைக்கட்டிக் கொண்டு தன் மகனுக்காக அனேக நாள் துக்கம் கொண்டாடினவர் யார்??
யாக்கோபு ஆதி 37:34
219: யூதா தன் சகோதரரை விட்டு யாரிடம் சேர்ந்தான் ??
ஈரா என்னும் மனிதனுடன் ஆதி 38: 1
220: யூதா யாரை விவாகம் பண்ணினான்??
சூவா என்னும் பெயருள்ள ஒரு கானானியருடைய குமாரத்தி ஆதி 38: 2
221 : யூதா பெற்ற குமாரர்களின் பெயர் என்ன??
ஏர்
ஓனான்
சேலா ஆதி 38: 3 to 5
222: யார் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால் கர்த்தர் அவனை அழித்துப் போட்டார் ??
ஏர் ஆதி 38:7
223: யார் செய்தது கர்த்தரின் பார்வைக்கு பொல்லாததாயிருந்ததினால் அவனையும் அவர் அழித்துப் போட்டார்??
ஓனான் ஆதி 38: 10
224: என்னிலும் அவள் நீதியுள்ளவள் என்று யார் யாரைக் குறித்து சொன்னது ??
யூதா தன் மருமகள் தாமாரை குறித்து ஆதி 38: 26
225: மீறுதலினால் பிறந்தவனுக்கு என்ன பெயர் இட்டாள்??
பாரேஸ் ஆதி 38: 29
226: சிவப்பு நூல் கட்டப்பட்டவன் பிறந்த போது அவனுக்கு என்ன பெயரிடப்பட்டது??
சேரா ஆதி 28: 30
227: கர்த்தர் யோசேப்போடே கூட இருந்தபடியால் அவன் எப்படிப்பட்டவனான்??
காரிய சித்தி உள்ளவனானான் ஆதி 39: 2
228: தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்று சொன்னவர் யார்??
யோசேப்பு ஆதி 39:9
229: எகிப்தின் ராஜாவுக்கு குற்றம் செய்தவர்கள் யாவர்??
பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் ஆதி 40:1
230: எது தேவனுக்குரியதல்லவா என்று யோசேப்பு சொன்னார்??
சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் ஆதி 40:8
231: எகிப்து தேசத்தின் செழிப்பும் பஞ்சமும் யாரால் நிச்சயப்பட்டிருக்கிறது??
தேவனால் ஆதி 41:32
232: நல்ல விளைச்சல் உண்டாகும் காலத்தில் எத்தனை பகுதியை ராஜாவின் களஞ்சியத்தில் சேர்க்க யோசேப்பு ஆலோசனை சொன்னான்??
ஐந்தில் ஒரு பகுதி ஆதி 41:34
233: பார்வோன் யோசேப்புக்கு இட்ட பெயர் என்ன??
சாப்நாத் பன்னேயா ஆதி 41: 45
234: யோசேப்புக்கு பார்வோன் யாரை மனைவியாகக் கொடுத்தான்??
ஆஸ்நாத் ஆதி 41: 45
235: ஆஸ்நாத் யாருடைய மகள்??
ஆசாரியனாகிய போத்திப்பிராவின் மகள் ஆதி 41:45
236: போத்திபிரா எந்த பட்டணந்து ஆசாரியன்??
ஓன் பட்டணத்து ஆசாரியன் ஆதி 41:45
237:யோசேப்பு எகிப்தின் பார்வோனுக்கு முன்பாக நிற்கும் போது அவனுக்கு வயது எத்தனை??
முப்பது ஆதி 41:46
238: என் வருத்தம் யாவையும் என் குடும்பம் அனைத்தையும் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி யோசேப்பு மூத்தவனுக்கு என்ன பெயர் சூட்டினான்??
மனாசே ஆதி 41:51
239: நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பெருகப் பண்ணினார் என்று சொல்லி யோசேப்பு இளையகுமாரனுக்கு என்ன பெயர் சூட்டினான்??
எப்பிராயீம் ஆதி 41:53
240: சகல தேசத்திலும் பஞ்சம் ஏற்பட்டதும் எந்த தேசத்தில் ஆகாரம் இருந்தது??
எகிப்து தேசம் ஆதி 41:54
241: எகிப்து தேசத்தில் வர வர எது கொடிதாயிற்று??
பஞ்சம் ஆதி 41:56
242: யோசேப்பின் சகோதரர் எத்தனை பேர் தானியங்கொள்ள எகிப்துக்கு போனார்கள்??
பத்து பேர் ஆதி 42:3
243: யோசேப்பு தன் சகோதரர்களை எத்தனை நாள் காவலில் வைத்தான்??
மூன்று நாட்கள் ஆதி 42:17
244: யோசேப்பு தன் சகோதரர்களிடம் எதைக்கொண்டு பேசினான்??
துபாசியைக் கொண்டு ஆதி 42:23
245: யோசேப்பு யாரைப் பிடித்து கட்டுவித்தான்??
சிமியோனை ஆதி 42:24
246: எதைக்கண்டு யாக்கோபும் யோசேப்பின் சகோதரர்களும் பயந்தார்கள்??
சாகாகுகளில் இருந்த பணமுடிப்பை கண்டு ஆதி 42:35
248: பென்யமீனுக்காக உத்திரவாதம் பண்ண முன் வந்தவன் யார்??
யூதா ஆதி 43:9
249: தன் சகோதரனை மகனே என்றழைத்தது யார்??
யோசேப்பு ஆதி 43:29
250: எகிப்தியர் யாரோடு சாப்பிட மாட்டார்கள்??
எபிரேயரோடு ஆதி 43:32
251: பென்யமீனுடைய சாக்கிலே எது கண்டுபிடிக்கப்பட்டது??
வெள்ளிப்பாத்திரம் ஆதி 44:12
252 : தேவன் எதை விளங்கப்பண்ணினார் என்று யோசேப்பின் சகோதரர்கள் சொன்னார்கள்??
அக்கிரமத்தை ஆதி 44:16
153: நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர் என்று யோசேப்பை பார்த்து சொன்னவர் யார்??
யூதா ஆதி 44:18
154: என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படி காண்பேன் என்றது யார்??
யூதா ஆதி 44:34
155: யோசேப்பு தன்னுடைய சகோதரரிடத்தில் தேவன் தன்னை எதற்கு எகிப்துக்கு
அனுப்பினார்??
ஜீவரட்சணை செய்யும் படி ஆதி 45: 5
251: பென்யமீனுடைய சாக்கிலே எது கண்டு பிடிக்கப்பட்டது??
வெள்ளிப் பாத்திரம் ஆதி 44:12
252: எதை தேவன் விளங்கப்பண்ணினார் என்று யோசேப்பின் சகோதரர்கள் சொன்னார்கள் ??
அக்கிரமத்தை ஆதி 44: 16
253: நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர் என்று சொன்னது யார்??
யூதா ஆதி 44: 18
254: என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படி காண்பேன் என்றது யார்??
யூதா ஆதி 44:34
255: யோசேப்பு தன் சகோதரரிடத்தில் எதற்கு தேவன் தன்னை எகிப்திற்கு அனுப்பினார் என்றான்??
ஜீவரட்சணை செய்யும்படி ஆதி 45: 5
256: யோசேப்பு தன்னை யாருக்கு தகப்பனாக தேவன் வைத்தார் என்றான்??
பார்வோனுக்கு ஆதி 45: 8
257: எந்த சமாசாரம் பார்வோனின் அரன்மனையில் பிரசித்தமாயிற்று??
யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள் என்ற சமாசாரம் ஆதி 45: 16
258: யோசேப்பு பென்யமீனுக்கு எத்தனை வெள்ளிக்காசை கொடுத்தார்??
முன்னூறு வெள்ளிக்காசு ஆதி 45:22
259: யாருடைய ஆவி உயிர்த்தது??
யாக்கோபுடை ஆதி 45: 27
260: தேவன் யாக்கோபிடத்தில் எங்கு போகப் பயப்படவேண்டாம் என்றார்??
எகிப்து தேசத்துக்கு ஆதி 46:3
261: நான் உன்னுடனே கூட எங்கு வருவேன் என்று தேவன் யாக்கோபுக்கு சொன்னார்??
எகிப்துக்கு ஆதி 46:4
262: கானானிய ஸ்தீரியின் குமாரன் யார்??
சவுல் ஆதி 46:10
263: எவர்கள் கானான் தேசத்தில் இறந்தார்கள்??
ஏர்
ஓனான் ஆதி 46:12
264: ஆசோருடைய மகள் யார்??
செராக்கு ஆதி 46:17
265: பெரீயாவின் குமார் யார் யார்??
ஏபேர்
மல்கியேல் ஆதி 46:17
266: தாணுடைய குமாரன் யார்??
உசீம் ஆதி 46:23
267: எகிப்துக்கு போன யாக்கோபின் குடும்பத்தார் எத்தனை பேர்??
எழுபது ஆதி 46: 7
268: யாக்கோபு தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல யாரை அனுப்பினான்??
யூதாவை ஆதி 46: 28
269: எவர்கள் எகிப்தியற்கு அருவருப்பானவர்கள்??
மேய்ப்பர்கள் ஆதி 46:34
270: எகிப்து தேசத்தின் நல்ல நாடு எது??
ராமசேஸ் ஆதி 47:11
271: பார்வோனின் கட்டளைப்படி யோசேப்பு தன் தகப்பனையும் சகோதரர்களையும் எந்த பட்டணத்தில் குடியேற்றினான்??
ராமசேஸ் பட்டணத்தில் ஆதி 47:11
272: பஞ்சத்தினால் மெலிந்து போன தேசங்கள் எது??
எகிப்து தேசமும் கானான் தேசமும் ஆதி 47:13
273: ஆசாரியரின் நிலம் விற்கப்படாததன் காரணம் என்ன??
அது மானியமாக கொடுக்கப்பட்டது ஆதி 47:22
274: பார்வோனுக்குச் சேராமலிருந்த நிலம் எது??
ஆசாரியனுடைய நிலம் மட்டும் ஆதி 47: 26
275: யாக்கோபு எகிப்து தேசத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான்??
பதினேழு ஆண்டுகள் ஆதி 47: 28
276: கட்டிலில் சாய்ந்து தொழுது கொண்டவன் யார்??
யாக்கோபு ஆதி 47:31
277: கானான் தேசத்திலுள்ள எந்த இடத்தில் தேவன் யாக்கோபுக்குத் தரிசனமாகி ஆசீர்வதித்தார்??
லூஸ் என்னுமிடத்தில் ஆதி 48: 3
278: ராகேல் எங்கு அடக்கம் பண்ணப்பட்டாள்??
எப்பிராத்தாவுக்கு போகும் வழியில் ஆதி 48: 7
279: இஸ்ரவேல் தன் வலது கையினால் யாரை ஆசீர்வதித்தார்??
இளையமகன் எப்பிராயீமை ஆதி 48: 14
280: இஸ்ரவேல் தன் இடது கையினால் யாரை ஆசீர்வதித்தார்??
மூத்த மகன் மனாசேயை ஆதி 48:14
281: யாக்கோபின் குமாரரில் ஏக சகோதரர்கள் யார்??
சிமியோனும் லேவியும் ஆதி 49: 5
282: சகோதரரால் புகழப்படுபவன் யார்??
யூதா ஆதி 49: 8
283: யார் வருமளவும் செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதில்லை??
சமாதான கர்த்தர் வருமளவும் ஆதி 49: 10
284: கடல்துறை அருகே குடியிருப்பவன் யார்??
செபுலோன் ஆதி 49: 13
285: இரண்டு பொதிகளின் நடுவே படுத்திருக்கும் பலத்த கழுதை யார்??
இசக்கார் ஆதி 49: 14
286: இஸ்ரவேலின் ஒரு கோத்திரமாகி தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பவன் யார்??
தாண் ஆதி 49: 16
287: யார் மேல் ராணுவக் கூட்டம் பாய்ந்து விழும்??
காத் ஆதி 49: 19
288: ஆகாரம் கொழுமையானதும் ராஜாக்களுக்கு வேண்டிய ருசி வர்க்கங்களை தருபவன் யார்??
ஆசோர் ஆதி 49: 20
289: விடுதலை பெற்ற பெண்மான் யார்??
நப்தலி ஆதி 49: 21
290: கனிதரும் செடி யார்??
யோசேப்பு ஆதி 49: 22
291 : மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவன் யார்??
யோசேப்பு ஆதி 49:24
292: பீறுகிற ஓநாய் யார்??
பென்யமீன் ஆதி 49: 27
293: இஸ்ரவேலின் உடலுக்கு சுகந்த வர்க்கமிட்டவர்கள் யார்??
வைத்தியர் ஆதி 50: 2
294: சுகந்தவர்க்கம் இட எத்தனை நாட்கள் ஆகும்??
நாற்பது நாட்கள் ஆதி 50: 3
295: இஸ்ரவேலுக்காக எகிப்தியர் எத்தனை நாட்கள் துக்கம் அனுசரித்தனர்??
எழுபது நாட்கள் ஆதி 50: 3
296: ஆத்தாத்தின் போர்களம் எங்குள்ளது??
யோர்தானுக்கு அக்கரையில் ஆதி 50: 11
297: இஸ்ரவேலுக்காக மிகுந்த துக்கம் கொண்டாடினபடியால் அந்த இடத்துக்கு என்ன பெயர் வந்தது??
ஆபேல்மிஸ்ராயீம் ஆதி 50: 11
298: யோசேப்பு எத்தனை வருடம் உயிரோடு இருந்தான்??
நூற்றி பத்து வருடம் ஆதி 50:22
299: யோசேப்பு ஏப்பீராயீமுக்கு பிறந்த எத்தனை தலைமுறை பிள்ளைகளைக் கண்டான்??
மூன்று தலைமுறை பிள்ளைகள் ஆதி 50: 23
300: மரித்துப்போன யோசேப்பை சுகந்த வர்க்கமிட்டு எங்கு வைத்தார்கள்??
எகிப்தில் ஒரு பெட்டியில் வைத்தார்கள் ஆதி 50: 26
301: எகிப்து தேசம் யாரால் நிறைந்திருந்தது??
இஸ்ரவேல் புத்திரரால் யாத் 1:7
302: எகிப்தின் புதிய ராஜன் யாரை அறியாதவனாய் இருந்தான்??
யோசேப்பை யாத்1:8
303: எந்த பண்டசாலை பட்டணங்களை இஸ்ரவேலர் பார்வோனுக்காக கட்டினர்??
பித்தோம்
ராமசேஸ் யாத் 1:11
304: சாந்தும் செங்கல் செய்யும் வேலைகளையும் கடினப்பாடுடன் செய்து வந்த இஸ்ரவேலருக்கு எது கசப்பாயிற்று??
ஜீவன் யாத் 1:14
305: எபிரேய மருத்துவச்சிகள் பெயர் என்ன??
சிப்பிராள்
பூவாள் யாத் 1: 15
306: பிறக்கும் ஆண் பிள்ளையானால் அதை என்ன செய்ய எகிப்தின் ராஜா சொன்னான்??
கொன்று போடச் சொன்னான் யாத் 1: 16
307: பிறக்கும் பெண் பிள்ளைகளை என்ன செய்ய எகிப்தின் ராஜா சொன்னான்??
உயிரோடே காப்பாற்றச் சொன்னான் யாத் 1: 16
308: மருத்துவச்சிகள் ராஜாவின் கட்டளைப்படி செய்யாமல் ஆண் பிள்ளைகளையும் காப்பாற்றக் காரணம் என்ன??
அவர்கள் தேவனுக்குப் பயந்தவர்கள் ஆனதால் யாத் 1: 17
309: மருத்துவச்சிகளுக்கு தேவன் என்ன செய்தார்??
நன்மை செய்தார் யாத் 1: 20
310: மருத்துவச்சிகளின் குடும்பங்களை தேவன் தழைக்கச் செய்ய காரணம் என்ன??
தேவனுக்கு பயந்ததினால் யாத் 1:21
311: லேவியின் குமாரத்தி பெற்ற பிள்ளை என்ன பிள்ளை??
ஆண்பிள்ளை யாத் 2:2
312: லேவியின் குமாரத்தி பெற்ற பிள்ளையை எத்தனை மாதம் அவள் ஒளித்து வைத்தாள் ??
மூன்று மாதங்கள் யாத் 2:2
313: மூன்று மாதம் ராஜாவின் கட்டளையை மறுத்து குழந்தையை உயிரோடே வைக்க காரணம் என்ன??
குழந்தை அழகுள்ளதாய் இருந்தது என்று கண்டு யாத் 2: 2
314: லேவியின் குமாரத்தி பிள்ளையை ஒளித்து வைக்க கூடாமல் என்ன பெட்டியில் வைத்தாள்??
நாணற் பெட்டியில் யாத் 2:3
315: நாணற் பெட்டியில் என்ன வஸ்துக்களை லேவியின் குமாரத்தி பூசினாள் ??
பிசினும் கீலும் யாத் 2:3
316: நாணற் பெட்டியில் இருந்த பிள்ளைக்கு நேரிடுவதைப் பார்க்க பிள்ளையின் தாய் யாரை அங்கு நிறுத்தினாள்??
பிள்ளையின் தமக்கையை யாத் 2: 4
317: நதியில் ஸ்நானம் பண்ண வந்த ஸ்தீரி யார்??
பார்வோனின் குமாரத்தி யாத்2:5
318: நாணலுக்குள்ளே இருக்கும் பெட்டியைக் கண்டவள் யார்??
பார்வோனின் குமாரத்தி யாத் 2:5
319: பிள்ளையின் சகோதரி யாரைப் பார்வோனின் குமாரத்தியிடம் அழைத்து வந்தாள்??
பிள்ளையின் தாயை யாத் 2:8
320: தனக்கு குமாரனான பிள்ளைக்கு பார்வோன் குமாரத்தி என்ன பெயர் சூட்டினாள்??
மோசே யாத் 2:10
321: எதனால் மோசே என்ற பெயர் வைக்கப்பட்டது??
ஜலத்திலிருந்து எடுக்கப்பட்டவனானதால் யாத் 2:10
322: பார்வோனிடத்திலிருந்து தப்பி ஓடிய மோசே எங்கு போய் தங்கினான்??
மீதியான் தேசத்தில் யாத் 2:15
323: மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு எத்தனை குமாரத்திகள்??
ஏழு யாத் 2:16
324: மீதியான் தேசத்து ஆசாரியனின் பெயர் என்ன??
ரெகுவேல் யாத் 2: 18
325: ரெகுவேல் தன்னிடத்தில் தங்கியிருந்த மோசேக்கு தன் குமாரத்திகளில் யாரை கொடுத்தான்??
சிப்போராள் யாத் 2: 21
326: மோசேக்கு சிப்போராள் பெற்ற குமாரனுக்கு என்ன பெயர் வைத்தான்??
கெர்சோம் யாத் 3:22
327: கெர்சோம் என்பதன் பொருள் என்ன??
அன்னிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் யாத் 2:22
328: எகிப்தின் ராஜா மரித்தபின் இஸ்ரவேல் ஜனங்கள் எதினால் தவித்து கொண்டிருந்தனர்??
அடிமைத்தனத்தினால் யாத் 2:23
329: இஸ்ரவேலரின் முறையிடுதல் எங்கு வந்து எட்டியது??
தேவசந்திதியில் யாத் 2:23
330: தேவன் இஸ்ரவேல் ஜனங்களின் எதைக் கேட்டார்??
பெருமூச்சை யாத் 2:24
331: தேவன் பெரு மூச்சைக் கேட்டு எதை நினைவு கூர்ந்தார்??
உடன்படிக்கையை யாத் 2:24
332: தேவன் யாரோடு செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்??
ஆபிரகாம்; ஈசாக்கு; யாக்கோபு என்பவர்களோடு செய்த உடன்படிக்கையை யாத் 2:24
333: மீதியான் தேசத்து ஆசாரியனும் மோசேயின் மாமனுமானவனுடைய பெயர் என்ன??
எத்திரோ யாத் 3:1
334: மோசே யாருடைய ஆடுகளை மேய்த்து வந்தான்??
எத்திரோவின் ஆடுகளை யாத் 3: 1
335: மோசே ஆடுகளை பின்புறத்தில் ஓட்டி எந்த பர்வதம் மட்டும் வந்து சேர்ந்தான் ??
தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான் யாத் 3: 1
336: ஓரேப் பர்வதத்தில் கர்த்தருடைய தூதனானவன் மோசேக்கு எங்கிருந்து தரிசனமானார்??
முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்னி ஜுவாலையிலே நின்று யாத் 3:2
337: மோசே கண்ட முட்செடியின் நடுவில் எது உண்டாயிருந்தது ??
அக்கினி ஜுவாலை யாத் 3:2
338: அக்கினி ஜுவாலித்து எரிந்தும் எது வெந்து போகாமலிருந்தது??
முட்செடி யாத் 3: 2
339: அக்கினி ஜுவாலித்து எரிந்தும் முட்செடி வெந்து போகாமல் இருந்ததை கண்ட மோசே அதனை எந்த காட்ச்சியாகக் கண்டான்??
அற்புத காட்சியாகக் கண்டான் யாத் 3:3
340: முட்செடியின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டவர் யார்??
தேவன் யாத்3:4
341: தேவன் ஏன் மோசேயிடம் பாதரட்சையைக் கழற்றிப்போடச் சொன்னார்??
மோசே நிற்கிற இடம் பரிசுத்த பூமி யாத் 3: 6
342: தேவன் தன்னை மோசேக்கு எவ்விதம் வெளிப்படுத்தினார்??
தான் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவரின் தேவன் என வெளிப்படுத்தினார் யாத் 3: 6
343: மோசே தேவனை நோக்கிப்பார்க்க பயந்ததினால் என்ன செய்தான்??
முகத்தை மூடிக்கொண்டான் யாத் 3: 6
344 : இஸ்ரவேல் மக்களை விடுவிக்க இறங்கிவந்தவர் யார்??
கர்த்தர் யாத் 3: 8
345: இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் எங்கு வந்து எட்டியது??
தேவ சந்நிதியில் யாத் 3: 9
346: இஸ்ரவேல் புத்திரராகிய தேவ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வர யாரை பார்வோனிடத்தில் அனுப்ப தேவன் அழைத்தார்??
மோசேயை யாத் 3: 10
347: தேவன் தன்னுடைய நாமத்தை எவ்வாறு வெளிப்படுத்தினார்??
இருக்கிறவராகவே இருக்கிறேன் யாத் 3: 14
348: என்றென்றைக்கும் இருக்கும் தேவனுடைய நாமம் எது??
இருக்கிறவராகவே இருக்கிறேன் யாத் 3: 15
349: கானானியர் ஏத்தியர் எபூசியர் ஏமோரியர் பெர்சியர் ஏவியர் வாழும் தேசம் எது??
கானான் தேசம் யாத் 3:17
350: எத்தனை நாள் பயணம் சென்று தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும்படி கர்த்தர் சொன்னார் ??
மூன்று நாட்கள் பயணம் யாத் 3: 18
351: எகிப்தின் ராஜா எதைக் கண்டாலொழிய ஜனங்களைப் போகவிடமாட்டான் என்று தேவன் அறிவார்??
கர்த்தரின் கை வல்லமையை யாத் 3: 19
352: மோசே எதற்கு விலகி ஓடினான்??
சர்ப்பத்தைக் கண்டு யாத் 4: 3
353: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவரின் தெய்வம் மோசேக்கு தரிசனமானதற்கு அடையாளம் எது??
மோசேயின் கோல் யாத் 4:5
354: நான் திக்கு வாயும் மந்த நாவும் உள்ளவன் என்று கர்த்தரிடம் சொன்னவன் யார்??
மோசே யாத் 4:10
355: எதைக் கையில் பிடித்துக்கொண்டு போக மோசேயிடம் கர்த்தர் சொன்னார்??
கோல் யாத் 4:17
356: மோசேயின் கோலினால் மோசே என்ன செய்வதாக கர்த்தர் சொன்னார்??
அடையாளங்கள் யாத் 4:17
357: கர்த்தர் மோசேயை எந்த இடத்தில் சந்தித்து எகிப்துக்கு திரும்பி போக சொன்னார் ??
மீதியானிலே யாத் 4:19
358: எகிப்துக்கு போகும் போது மோசே தன் கையில் எதைப்பிடித்துக் கொண்டிருந்தான்??
தேவனுடைய கோல் யாத் 4: 20
359: கர்த்தர் யாரைப் பார்த்து நீ வனாந்திரத்தில் மோசேக்கு எதிர்கொண்டு போ என்று சொன்னார் ??
ஆரோனைப் பார்த்து யாத் 4: 27
360: ஆரோன் மோசேயை எங்கு சந்தித்தான்??
தேவபர்வதத்தில் யாத் 4: 27
361: யேகோவா என்பதன் பொருள் என்ன??
சர்வ வல்லமையுள்ள தேவன் யாத் 6:2&3
362: இஸ்ரவேல் ஜனங்கள் பரதேசியாய்த் தங்கின தேசம் எது??
கானான் தேசம் யாத் 6:4
363: மோசே தேவனின் வார்த்தையை ஜனங்களுக்குச் சொன்ன போது ஏன் மோசேக்கு செவி கொடாமல் போனார்கள்??
மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் யாத் 6:9
364: கர்த்தர் மோசேயைப் பார்த்து உன்னைப் பார்வோனுக்கு மேலாக யாராக ஆக்கினேன் என்றார்??
தேவனாக மாற்றினேன் யாத் 7:1
365: இஸ்ரவேல் புத்திரரைத் தேசத்திலிருந்து அனுப்பி விடும்படி பார்வோனிடத்தில் யார் பேசவேண்டும் என்று கர்த்தர் சொன்னார்??
சகோதரனாகிய ஆரோன் யாத் 7:2
366: கர்த்தர் மோசேயினிடத்தில் பார்வோனின் இருதயத்தை எதற்காக கடினப்படுத்துவேன் என்றார்??
தம்முடைய அற்புதத்தையும் அடையாளத்தையும் எகிப்து தேசத்தில் நடப்பிப்பதற்கு யாத் 7:3
367: எகிப்தின் மீது கையை நீட்டி இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப்பண்ணும் போது எகிப்தியர் எதை அறிந்து கொள்வார்கள்??
நானே கர்த்தர் என அறிவார்கள் யாத் 7:5
368: மோசே பார்வோனோடு பேசும் போது அவனுக்கு வயது என்ன??
எண்பது யாத் 7: 7
369: ஆரோன் பார்வோனோடு பேசும் போது அவனுக்கு வயது என்ன??
எண்பத்து மூன்று யாத் 7: 7
370: பார்வோனுக்கு முன்பாகவும் அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் கோலைப் போட்ட போது என்ன நடந்தது??
கோல் சர்ப்பமாயிற்று யாத் 7: 10
371: தங்கள் மந்திர வித்தைகளால் கோலை சர்ப்பங்களாக மாற்றினவர்கள் யார்??
மந்திரவாதிகள் யாத் 7:11
372: மந்திரவாதிகளுடைய கோல்களை யாருடைய கோல் விழுங்கிற்று??
ஆரோனின் கோல் யாத் 7:12
373: முதலாம் வாதை எது??
நதியின் தண்ணீர் இரத்தமாக மாறியது யாத் 7:20
374: கர்த்தர் நதியை அடித்து எத்தனை நாளாயிற்று??
ஏழு நாட்கள் யாத் 7: 25
375: இரண்டாவது வாதை எது??
தவளைகள் யாத் 8: 6
376: எகிப்து தேசத்தை எவைகள் மூடிக்கொண்டது??
தவளைகள் யாத் 8: 6
377: எதை குவியல் குவியலாக சேர்த்தார்கள்??
தவளைகளை யாத்8:14
378: மூன்றாவது வாதை எது??
பேன்கள் யாத் 8:17
379: மந்திரவாதிகளால் எதை செய்ய கூடாமற் போயிற்று??
பேன்களை வரப்பண்ண யாத் 8:18
380: இது தேவனுடைய விரல் என்று எவர்கள் சொன்னார்கள்??
மந்திரவாதிகள் - யாத் 8: 19
381: நான்காவது வாதை எது??
வண்டுகள் யாத் 8:24
382: பார்வோன் எங்கு கர்த்தருக்குப் பலியிடச் சொன்னான்??
எகிப்து தேசத்தில் யாத் 8: 25
383: ஐந்தாவது வாதை எது??
மிருக ஜீவன்களுக்கு கொள்ளை நோய் யாத் 9:6
384: கர்த்தர் யாருடைய தேவன் என்று சொல்லுகிறார்??
ஏபிரேயரின் தேவன் யாத் 9:19
385: ஆறாவது வாதை எது??
மனிதர்களுக்கும் மிருகஜீவன்களுக்கும் கொப்புளங்கள் யாத் 9:10
386: எதற்காக பார்வோனை நிலைநிறுத்தினேன் என்று கர்த்தர் சொன்னார்??
என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாயகவும் என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன் யாத் 9:16
386: ஏழாவது வாதை எது??
கல்மழை யாத் 9:25
387: பார்வோன் கர்த்தர் எது உள்ளவர் என்றான்??
நீதியுள்ளவர் யாத் 9:27
388: எட்டாவது வாதை எது??
வெட்டுக்கிளி யாத் 10:13
389: எவைகள் பூமியின் முகம் முழுவதையும் மூடிற்று??
வெட்டுக்கிளிகள் யாத் 10:15
390: ஒன்பதாவது வாதை எது??
காரிருள் யாத் 10:22
391: எத்தனை நாட்கள் காரிருள் இருந்தது??
மூன்று நாட்கள் யாத் 10:23
392: இனி என் முகத்தை காணும் நாளில் சாவாய் என்று யார் யாரிடம் சொன்னது??
பார்வோன் மோசேயிடம் யாத் 10:28
393: பார்வோனின் ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் யார் மிகவும் பெரியவனாயிருந்தது??
மோசே யாத் 11:3
394: எகிப்து தேசத்தில் பெரிய அற்புதங்கள் நடைபெறுவதற்கு காரணம் என்ன??
பார்வோன் மோசேக்கு செவிகொடாததே யாத்11:9
395: பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தை விட்டு விடாததற்கு காரணம் என்ன??
பார்வோனின் இருதயத்தை கர்த்தர் கடினப்படுத்தினதினால் யாத் 11:10
396: வருஷத்தின் எந்த மாதம் பிரதான மாதம்??
முதலாம் மாதம் யாத் 12:2
397: தெரிந்து கொள்ளப்பட வேண்டிய பஸ்கா ஆட்டுக்குட்டி எப்படி இருக்க வேண்டும்??
பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும் யாத் 12:5
398: எகிப்து தேசத்தை கர்த்தர் அழிக்க கடந்து போகும் போது இஸ்ரவேல் ஜனங்களின் வீடு என்று அடையாளம் காட்டுவது எது??
வாசல் நிலைகளில் இருக்கும் இரத்தம் யாத் 12:13
399: பஸ்கா அனுசரிக்கும் நாள் எந்த நாளாய் இருக்கும்??
நினைவு கூருதலின் நாளாயிருக்கும் யாத் 12:14
400: புளிப்பில்லாத அப்பம் எத்தனை நாட்கள் புசிக்க வேண்டும்??
ஏழுநாட்கள் யாத் 12: 15
401: எந்த நாட்களில் பரிசுத்த சபை கூட வேண்டும்??
முதலாம் நாளிலும் ஏழாம் நாளிலும் யாத் 12:16
402: புளிப்பில்லாத அப்பப் பண்டிகை தலைமுறை தலைமுறை தோறும் ஆசரிக்கப்படக் காரணம் என்ன??
எகிப்திலிருந்து இஸ்ரவேலர் புறப்பட்ட நாள் யாத் 12:17
403: எந்த மாதம் எந்த நாள் துவக்கி எந்த நாள் மட்டும் புளிப்பில்லா அப்பம் புசிக்க வேண்டும்??
முதல் மாதம் பதிநாலாம் தேதி முதல் இருபத்து ஒன்றாம் நாள் வரை யாத் 12:18
404: பஸ்கா பண்டிகையான ஏழு நாளளவும் எது இஸ்ரவேலரின் வீடுகளில் இருக்கலாகாது??
புளித்தமா யாத் 12:19
405: புளிப்புள்ளதைப் புசித்தால் அவன் என்ன செய்யப்படவேண்டும்??
இஸ்ரவேலிலிருந்து அறுப்புண்டு போக வேண்டும் யாத் 12:19
406: புளிப்பில்லாத அப்பப் பண்டிகை ஆராதனை எங்கு சென்று அனுசரிக்க வேண்டும்??
கர்த்தர் கொடுக்கும் தேசத்தில் யாத் 12:25
407: பஸ்காவின் கருத்தை பிள்ளைகளுக்குச் சொல்லி எதை நினைவு கூர வேண்டும்??
எகிப்தில் சங்காரதூதன் கடந்து போன விதத்தை யாத் 12:27
408: எப்போது கர்த்தர் சொன்னபடி தலைப்பிள்ளை சங்காரம் நடந்தது??
நடுராத்திரியில் யாத் 12:29
409: பிசைந்த மாவை புளிக்குமுன் எதிலே கட்டி சுமந்து கொண்டு போனார்கள்??
வஸ்திரத்தில் யாத்12: 34
410: எகிப்திலிருந்து புறப்பட்ட யாக்கோபின் சந்ததியார் பிள்ளைகள் தவிர எத்தனை லட்சம் பேர்??
ஆறுலட்சம் யாத் 12:37
411: இஸ்ரவேலர் ராம்சேசை விட்டு கால்நடையாய் நடந்து எங்கே வந்து சேர்ந்தனர்??
சுக்கோத்துக்கு யாத் 12:37
412: இஸ்ரவேலர் எகிப்தில் குடியிருந்த காலம் எத்தனை ஆண்டுகள் ??
நானூற்றி முப்பது வருடம் யாத் 12: 40
413: எந்த நாளில் இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வெளியேறினர்??
நானூற்று முப்பது வருடம் முடியும் நாளில் யாத் 12:41
414: பஸ்கா விருந்தை பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமை எப்போது புசிக்கலாம்??
அவன் விருத்தசேதனம் பண்ணப்பட்டபின் யாத் 12:44
415: இஸ்ரவேல் புத்திரரை கர்த்தர் எவ்விதம் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்??
அணி அணியாய் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார் யாத் 12:51
416: இஸ்ரவேல் ஜனங்கள் எந்த மாதத்தில் எகிப்தை விட்டு புறப்பட்டார்கள்??
ஆபிப் மாதம் யாத் 13:4
417: எந்த நாளில் பண்டிகை ஆசரிக்க வேண்டும்??
ஏழாம் நாளில் யாத் 13:6
418: புளித்தமா எங்கு காணப்படக்கூடாது??
இஸ்ரவேலின் எல்லைக்குள் எங்கும் யாத் 13:7
419: நியாயப் பிரமாணம் எங்கு இருக்க வேண்டும்??
வாயில் யாத் 13:9
420: வருஷம் தோறும் அனுசரிக்க வேண்டிய நியமம் எது??
பஸ்கா பண்டிகை யாத் 13: 10
421: முதற்பேற்றை கர்த்தருக்குக் கொடுக்க காரணம் என்ன??
தலையீற்றைக் கொலை செய்து இஸ்ரவேலை விடுவித்ததற்காக யாத் 13:15
422: பெலிஸ்தரின் பாளையம் வழி செல்லாமல் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எந்த வழியாய் நடத்தினார்??
சிவந்த சமுத்திரத்தின் வனாந்திர வழியாய் யாத் 13:18
423: எகிப்தைவிட்டுப்போன மோசே தன்னுடன் எதை எடுத்துக்கொண்டு போனான்??
யோசேப்பின் எலும்புகளை யாத் 13:19
424: சுக்கோத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர் எங்கு பாளயமிறங்கினர்??
ஏத்தாமிலே யாத் 13:20
425: இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து விலகாமல் தங்கி இருந்தது எது??
மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும் யாத் 13:22
426: பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற பள்ளத்தாக்கின் பெயர் என்ன??
ஈரோத் யாத் 14:2
427: இஸ்ரவேலைத் துரத்திப் பிடிக்க எத்தனை பிரதான இரதங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டது??
அறுநூறு யாத் 14:7
428: இஸ்ரவேலின் சேனையையும் எகிப்தின் சேனையையும் ஒன்றோடு ஒன்று சேராதபடி இவர்கள் நடுவே நின்றது எது??
மேகஸ்தம்பமும் தேவதூதனும் யாத் 14:20
429: மேகஸ்தம்பம் எகிப்தியருக்கு எதாக இருந்தது??
மேகமும் அந்தகாரமுமாய் யாத் 14:20
430: இஸ்ரவேலருக்கு எது வலதுபுறமும் இடதுபுறமும் மதிலாக இருந்தது??
ஜலம் யாத் 14:22
431: எப்போது எகிப்திய சேனையை கர்த்தர் கலங்கடித்தார்??
கிழக்கு வெளுத்து வரும் ஜாமத்தில் யாத் 14:24
432: எகிப்தியருடைய இரதங்களை கர்த்தர் எவ்விதம் நடத்தினார்??
வருத்தத்தோடே யாத் 14:25
433: எகிப்தியருக்குச் செய்ததைக் கண்ட இஸ்ரவேலர் கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் என்ன வைத்தார்கள்??
விசுவாசம் யாத் 14:31
434: கர்த்தருடைய வலதுகரம் எதினால் மகத்துவம் சிறந்திருக்கிறது??
பலத்தினால் யாத் 15:6
435: கர்த்தர் தமது கோபாக்கினையை அனுப்பிய போது அது எகிப்தியர்களை எதைப்போல பட்சித்தது??
தாளடியைப்போல யாத்15:7
436: ஜலம் குவியலாகவும் குவிந்தும் உறைந்தும் போக செய்தது எது??
கர்த்தருடைய நாசியின் சுவாசம் யாத் 15:8
437: எகிப்தியர் திரளான தண்ணீரில் எதுபோல் அமிழ்ந்து போனார்கள்??
ஈயம்போல யாத் 15:10
438: கர்த்தர் மீட்டுக்கொண்ட ஜனங்களை எதினால் அழைத்து வந்தார்??
கிருபையினாலே யாத் 15:13
439: பெலிஸ்தியாவின் குடிகளை எது பிடிக்கும் ??
திகில் யாத் 15:14
440: மோவாபின் பராக்கிரம சாலிகளை எது பிடிக்கும் ??
நடுக்கம் யாத் 15:15
441: ஆரோனின் சகோதரியின் பெயர் என்ன??
மிரியாம் யாத் 15:20
442: செங்கடலைக் கடந்த இஸ்ரவேலர் எங்கு புறப்பட்டனர்??
சூர் வனாந்தரத்திற்கு யாத் 15:22
443: சூர் வனாந்திரத்தில் தண்ணீர் இல்லாமல் எத்தனை நாள் நடந்தனர்??
மூன்று நாட்கள் யாத் 15: 22
444: தண்ணீர் கசப்பாய் இருந்ததால் அந்த இடத்திற்கு என்ன பெயர் வைக்கப்பட்டது??
மாரா யாத் 15:23
445: மரத்தின் கிளைகளை தண்ணீரில் போட்ட போது கசந்த தண்ணீர் என்ன ஆனது??
மதுரமானது யாத் 15:25
446: கர்த்தர் ஒரு நியமத்தையும் நியாயத்தையும் இஸ்ரவேலருக்கு எங்கு வைத்து கட்டளையிட்டார்??
மாராவில் யாத் 15: 25
447: மாராவிலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எங்கு வந்தார்கள்??
ஏலிமுக்கு யாத் 15:27
448: ஏலீமில் எத்தனை பேரீச்சை மரங்களும் எத்தனை நீர் ஊற்றுகளும் இருந்தன??
எழுபது பேரீச்சை மரங்களும் பன்னிரண்டு நீர் ஊற்றுகளும் இருந்தன யாத் 15:27
449: சீன் வனாந்திரம் எங்கு இருக்கிறது??
ஏலீமுக்கும் சீனாய்க்கும் இடையில் யாத் 16:1
450: எந்த வனாந்திரத்தில் இஸ்ரவேல் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்??
சீன் வனாந்திரத்தில் யாத் 16:2
451: சபை தேவசந்திதியில் கூடியிருக்கையில் ஆரோன் பேசிக்கொண்டிருக்க சபையார் வனாந்திர திசையாக பார்த்த போது எதைக் கண்டார்கள்??
தேவ மகிமையை கண்டார்கள் யாத் 16:10
452: பாளயத்தை சாயங்காலம் எது மூடிக்கொண்டது??
காடைகள் யாத் 16: 13
453: விடியற்காலத்தில் பாளயத்தை சுற்றி எது பெய்தது??
பனி யாத் 16: 13
454: என் கட்டளைகளையும் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்த மட்டும் மனதில்லாதிருப்பீர்கள் என்று ஏன் கர்த்தர் சொன்னார்??
ஓய்வு நாள் பிரமாணத்தை மீறினதால் யாத் 16:28
455: கொத்தமல்லி அளவாயும் வெண்ணிறமாயும் தேனிட்ட பணியாரத்துக்குத் தக்க ருசி உடையதுமான அப்பத்தின் பெயர் என்ன??
மன்னா யாத் 16:31
456: இஸ்ரவேல் புத்திரர் எத்தனை வருஷங்கள் மன்னாவைப் புசித்தார்கள்??
நாற்பது வருஷங்கள் யாத் 16:35
457: சீன் வனாந்திரத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எங்கு வந்து பாளயமிறங்கினார்??
ரெவிதீமில் யாத் 17:1
458: எங்கே ஜனங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாதிருந்தது??
ரெவிதீமிலே யாத் 17:1
459: கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரை பரீட்சை பார்த்ததினிமித்தம் அந்த ஸ்தலத்திற்கு என்ன பெயர் வந்தது??
மாசா என்றும் மேரிபா என்றும் யாத் 17: 7
460: ரெவிதீமில் இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ண வந்தவர் யார்??
அமலேக்கியர் யாத் 17:8
461: அமலேக்கியரோடு யுத்தம் செய்ய மோசே யாருக்குக் கட்டளை இட்டான்??
யோசுவாவுக்கு யாத் 17:9
462: யோசுவா யுத்தம் பண்ணியபோது யார் எல்லாம் மலை உச்சிக்குச் சென்றார்கள்??
மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் யாத் 17:10
463: ரெவிதீமிலே மோசே கட்டிய பலிபீடத்துக்கு என்ன பெயரிட்டான்??
யேகோவா நிசி யாத் 17:15
464: கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாக இருந்த கை யாருடையது??
அமலேக்குடையது யாத் 17:16
465: தலைமுறை தலைமுறை தோறும் கர்த்தரின் கை யாருக்கு விரோதமாய் இருக்கும்??
அமலேக்கிற்கு யாத் 17:16
466: தேவன் மோசேக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் செய்த யாவையும் எகிப்திலிருந்து இஸ்ரவேல் புறப்பட்டதையும் யார் கேள்விப்பட்டார்??
மோசேயின் மாமன் எத்திரோ யாத் 18:1
467: மோசேயின் மனைவியின் பெயர் என்ன??
சிப்போராள் யாத் 18:2
468: மாமன் சொன்னதைக் கேட்டு அப்படியே செய்தவன் யார்??
மோசே யாத் 18:24
469: கர்த்தர் சீனாய் மலையில் பிரத்தியச்சமாய் இறங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் ஜனங்கள் என்ன செய்யப்பட்டிருக்க வேண்டும்??
பரிசுத்தம் பண்ணப்பட்டிருக்க வேண்டும் யாத் 19:10
470: பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் எத்தனை தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறார்??
மூன்றாம் நான்காம் யாத் 20:5
471: கர்த்தரின் கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களுக்கு எத்தனை தலைமுறை மட்டும் இரக்கம் செய்கிறார்??
ஆயிரம் தலைமுறை மட்டும் யாத் 20:6
472: யாரை தேவன் தண்டியாமல் விடார்??
கர்த்தருடைய நாமத்தை வீணில் வழங்குகிறவர்களை யாத் 20:7
473: ஓய்வு நாளை எப்படி ஆசரிக்க வேண்டும்??
பரிசுத்தமாய் யாத் 20:8
474: ஏழாம் நாளில் எதைச் செய்யக்கூடாது ??
யாதொரு வேலையும் யாத் 20:10
475: கர்த்தர் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து அதை என்ன செய்தார்??
பரிசுத்தப்படுத்தினார் யாத் 20:11
476: பலிபீடம் எதினால் உண்டாக்கப்பட வேண்டும்??
மண்ணினால் யாத் 20:24
477: பலிபீடத்தைக் கல்லினால் கட்டினால் அந்த கல்லில் எது படலாகாது??
உளி யாத் 20:25
478: யாரை உயிரோடு வைக்க வேண்டாம்??
சூனியக்காரியை யாத் 22:18
479: கர்த்தர் ஒருவருக்கே தவிர வேறு தேவர்களுக்குப் பலியிடுகிறவன் என்ன செய்யப்பட வேண்டும்??
சங்கரிக்கப்பட வேண்டும் யாத் 22: 20
480: அன்னியனையும் விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் என்ன செய்க் கூடாது??
சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருக்க வேண்டும் யாத் 22:21
481: குமாரரில் முதற்பேறானவனை யாருக்குக் கொடுக்க வேண்டும்??
கர்த்தருக்கு யாத் 22:29
482: வியாச்சியத்திலே யாருடைய முகத்தை பார்க்கக்கூடாது ??
தரித்திரனுடைய யாத் 23:3
483: எதற்குத் தூரமாய் இருக்க வேண்டும்??
கள்ளக் காரியத்துக்கு. யாத் 23:7
484: யாரை நீதிமான் என்று தீர்க்கக்கூடாது??
துன்மார்க்கனை யாத் 23:7
485: பார்வையுள்ளவர்களை குருடாக்கி நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டுவது எது??
பரிதானம் யாத் 23:8
48 6: யாரை ஒடுக்கக்கூடாது??
அன்னியனை யாத் 23:9
487: எத்தனை ஆண்டுகள் நிலத்தில் பயிரிட்டு அதின் பலனை சேர்க்கலாம்??
ஆறு வருடங்கள் யாத் 23:10
488: எந்த ஆண்டில் நிலம் சும்மா கிடக்கவேண்டும்??
ஏழாம் வருஷம் யாத் 23:11
489: எந்த மாதத்தில் குறித்த காலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிக்க வேண்டும்??
ஆபிப் மாதத்தில் யாத் 23:15
490: முதற் பலனை செலுத்துகிற பண்டிகையின் பெயர் என்ன??
அறுப்புகாலப் பண்டிகை. யாத் 23:16
491: பலனைச் சேர்த்து தீர்ந்தபோது கொண்டாட வேண்டிய பண்டிகை எது??
சேர்ப்பின் பண்டிகை. யாத் 23:16
492: வருடத்தில் எத்தனை முறை ஆண்மக்கள் கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரவேண்டும்??
மூன்று முறை யாத் 23:17
493: நிலத்தின் முதல் விளைச்சல்களில் முதற்கனியை எங்கு கொண்டு வரவேண்டும்??
கர்த்தருடைய ஆலயத்துக்கு யாத் 23:19
494: எதை தன் தாயின் பாலிலே சமைக்கக்கூடாது??
வெள்ளாட்டுக்குட்டியை யாத் 23:19
495: மோசே கட்டிய பலிபீடத்தில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளாக காளைகளையும் பலியிட்டவர்கள் யார்??
இஸ்ரவேல் புத்திரரின் வாலிபர் யாத் 24:5
496: உடன்படிக்கையை உறுதிபடுத்த மோசே என்ன செய்தான்??
இரத்தத்தை எடுத்து ஜனங்களின் மேல் தெளித்தான் யாத் 24:8
497: இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தபோது எங்கே நீலக் கல்லிளைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்ததைக் கண்டார்கள்??
தேவனுடைய பாதத்தின்கீழ் யாத் 24:10
498: சீனாய் மலையின் மேல் எது தங்கி இருந்தது??
கர்த்தருடைய மகிமை யாத் 24:16
499: எந்த நாளில் தேவன் மேகத்திலிருந்து மோசேயை கூப்பிட்டார்??
ஏழாம் நாளில் யாத் 24:16
500: மலையின் கொடுமுடியில் கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேலருடைய கண்களுக்கு எப்படி தோன்றியது??
பட்சிக்கிற அக்கினி போன்று யாத் 24:17
501: மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து மலையின் மேல் ஏறி எத்தனை இரவும் எத்தனை பகலும் தங்கியிருந்தான்??
நாற்பது நாள் இரவும் பகலும் யாத் 24:18
502: காணிக்கை யாரிடமிருந்து வாங்க வேண்டும்??
மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுக்கிறவனிடத்திலிருந்து யாத் 25:2
503: ஆண்டவர் எங்கு வாசம் பண்ணும்படி ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்க மோசேயிடம் சொன்னார்??
இஸ்ரவேல் மக்கள் நடுவே யாத் 25:8
504: கர்த்தர் வாசம் பண்ணக்கூடிய ஸ்தலத்தின் பெயர் என்ன??
பரிசுத்த ஸ்தலம் யாத் 25:8
505: பரிசுத்த ஸ்தலத்தில் செய்யப்பட வேண்டிய பெட்டி எந்த மரத்தினால் செய்யப்பட வேண்டும்??
சீத்திம் மரம் யாத் 25:10
506: கர்த்தருடைய பெட்டியில் எதை வைக்க வேண்டும்??
சாட்சிப் பிரமாணம் யாத் 25:16
507: கர்த்தருடைய பெட்டியைத் தொடர்ந்து செய்ய வேண்டியது என்ன??
கிருபாசனம் யாத் 25:17
508: கிருபாசனம் எதினால் செய்யப்பட வேண்டும்??
பொன்னினால் யாத் 25:17
509: கிருபாசனத்தின் நீளமும் அகலமும் எவ்வளவு??
நீளம் இரண்டரை முழம் அகலம் ஒன்றரை முழம் யாத் 25: 17
510: எதினால் கேருபீன்கள் செய்ய வேண்டும்??
பொன்னினால் யாத் 25:18
511: கேரூபீன்களை எங்கு வைக்க வேண்டும்??
கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் யாத் 25:19
512: கேரூபீன்கள் எவ்வித அமைப்புடன் இருக்க வேண்டும்??
செட்டைகளை உயர விரிக்கிறதாயும் கிருபாசனத்தை மூடுகிறதாயும் யாத் 25:20
513: கிருபாசனத்திலிருந்து கர்த்தர் யாரை சந்திப்பார்??
மோசேயை யாத் 25:22
514: இஸ்ரவேல் புந்திரருக்காகக் கற்பிக்கப் போகிற யாவற்றையும் கர்த்தர் எங்கு இருந்து மோசேக்குப் போதிப்பார்??
இரண்டு கேரூபீன்களின் நடுவிலிருந்து யாத் 25:22
515: கர்த்தர் வாசம் பண்ணும் ஸ்தலத்தின் மாதிரி எங்கு வைத்து மோசேக்கு காண்பிக்கப்பட்டது??
மலையில் யாத் 25:40
516: பரிசுத்த ஸ்தலத்துக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்துக்கும் இடையில் பிரிவை உண்டாக்குவது எது??
திரைச்சீலை யாத் 26:33
517: மகா பரிசுத்த ஸ்தலத்தில் சாட்சிப் பெட்டியின் மீது எதை வைக்க வேண்டும்??
கிருபாசனத்தை யாத் 26:34
518: வாசஸ்தலத்தில் எப்போதும் எரிந்து கொண்டு இருக்க வேண்டியது எது??
குத்துவிளக்கு யாத் 27:20
519: ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு யாரை இஸ்ரவேல் புத்திரரிடமிருந்து பிரித்து எடுக்க வேண்டும்??
ஆரோனையும் அவன் குமாரரையும் யாத் 28:1
520: ஆரோனுக்கு மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும்படி எவ்வித வஸ்திரங்களை உண்டு பண்ண வேண்டும்??
பரிசுத்த வஸ்திரங்களை யாத் 28:2
521: ஆரோனுக்கு உண்டாக்க வேண்டிய வஸ்திரங்களின் விவரம் யாவை??
மார்பதக்கம் ஏபோத் அங்கி உள்சட்டை பாகையும் இடைக் கச்சையுமாகும் யாத் 28:4
522: இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை எந்த கற்களில் வெட்ட வேண்டும்??
கோமேதகக் கல்லுகளில் யாத் 28:9
523: எத்தனை நாமங்கள் ஒரு கல்லில் இருக்க வேண்டும்??
ஆறு நாமங்கள் யாத் 28:10
524: ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது எதை ஞாபகக்குறியாக கொண்டு போக வேண்டும்??
இஸ்ரவேல் புத்திரரின் நாமங்கள் அடங்கிய நியாயவிதி மார்பதக்கங்களைக் கொண்டு போக வேண்டும் யாத் 28:30
525: ஆரோனின் அங்கியின் தொங்கலில் தொங்க வேண்டிய பொருட்கள் யாவை??
நூலால் செய்யப்பட்ட மாதளம் பழங்களும் பொன் மணிகளும் யாத் 28:33
526: பொன்மணிகளின் சத்தம் எதை குறிப்பிடுகிறது??
ஆரோன் ஜீவனோடு இருப்பதைத் தெரிவிக்கிறது யாத் 28:35
527: ஆரோனின் பாகையில் இருக்கும் பட்டத்தில் என்ன வார்த்தைகள் எழுதப்பட வேண்டும்??
கர்த்தருக்கு பரிசுத்தம் யாத் 28:36
528: கர்த்தர் இஸ்ரவேலரை சந்திக்கும் இடம் எது??
ஆசரிப்பு கூடாரத்தின் வாசலாகிய கர்த்தருடைய சந்நிதி யாத் 29:42
529: ஆசரிப்பு கூடாரத்தின் வாசலாகிய கர்த்தருடைய சந்நிதி எதினால் பரிசுத்தமாக்கப்படும்??
தேவமகிமையால் யாத் 29:43
530: எது மகா பரிசுத்தமாயிருக்கும்??
பலிபீடம் யாத் 29:37
531: தூபம் காட்டுகிறதற்கு எதை உண்டாக்க வேண்டும்??
தூபபீடம் யாத் 30:1
532: தூபபீடம் எந்த மரத்தால் செய்யப்பட வேண்டும்??
சீத்திம் மரத்தால் யாத் 30:1
533: தூபபீடம் எங்கே வைக்கப்பட வேண்டும்??
கிருபாசனத்துக்கு முன்பாக யாத் 30:6
534: காணிக்கை செலுத்துகிறவன் ஐசுவரியவான் என்றும் தரித்திரவான் என்றும் வித்தியாசமின்றி எவ்வளவு கொடுக்க வேண்டும்??
அரைசேக்கல் யாத் 30:13
535: ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கும் போதும் கர்த்தருக்கு தகனத்தைக் கொழுத்தவும் பலிபீடத்தில் ஆராதனை செய்ய சேரும்போதும் ஏன் தங்களைக் கழுவ வேண்டும்??
அவர்கள் சாகாதபடிக்கு யாத் 30:20
536: பரிசுத்த அபிஷேக தைலம் செய்ய தேவையான பொருட்கள் யாவை??
வெள்ளைப்போளம்
சுகந்த கருவாப்பட்டை
சுகந்த வசம்பு
இலவங்கப்பட்டை
ஒலிவ எண்ணெய்
யாத் 30: 23-25
537: பெசலெயேலின் தகப்பன் யார்??
ஊரி யாத் 31:2
538: பெசலெயேல் எந்த கோத்திரத்தான்??
யூதா யாத்31:2
539: பொன் வெள்ளி வெண்கலம் மரம் ஆகியவற்றில் சித்திர வேலை செய்ய ஞானம் உடையவனாக கர்த்தர் யாரை ஆயத்தம் பண்ணினார்??
பெசலெயேலை யாத் 31:5
540: பெசலெயேலுக்கு துணையாக கர்த்தர் யாரை ஏற்படுத்தினார்??
அகோலியா யாத் 31:6
541: தேவன் மோசேயோடு எந்த மலையிலிருந்து பேசினார்??
சீனாய் மலையிலிருந்து. யாத் 31:18
542: தேவன் மோசேயிடம் எதைக் கொண்டு எழுதிய கற்பலகைகளைக் கொடுத்தார்??
தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட யாத் 31:18
543: தங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை உண்டு பண்ண ஜனங்கள் யாரிடம் சொன்னார்கள்??
ஆரோனிடம் யாத் 32:1
544: கர்த்தர் மோசேயை இறங்கிப்போகச் சொல்லக் காரணம் என்ன??
ஜனங்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டதால் யாத் 32:7
545: கானான் தேசத்துக்குப் போகச் சொன்ன ஆண்டவர் ஏன் ஜனங்களோடே வரமாட்டேன் என்கிறார்??
ஜனங்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள் யாத் 33:3
546: இஸ்ரவேல் ஜனங்கள் எந்த மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்??
ஓரேப் மலையருகே யாத் 33:6
547: தூரத்திலே போடப்பட்ட கூடாரத்துக்கு மோசே என்ன பெயரிட்டான்??
ஆசரிப்புக் கூடாரம் யாத் 33:7
548: ஜனங்கள் கூடாரவாசலில் எதைக் கண்டார்கள்??
மேகஸ்தம்பம் கூடார வாசலில் நிற்கிறதை - யாத் 33:10
549: யாரிடம் பேசுவது போல கர்த்தர் மோசேயோடு பேசினார்??
ஒருவன் தன் சினேகிதனோடு பேசுகிறது போல யாத் 33:11
550: ஆசரிப்புக் கூடாரத்தைவிட்டு பிரியாதிருந்தவர் யார்??
நூனின் குமாரன் யோசுவா யாத் 33:11
551: உம்முடைய மகிமையை எனக்கு காண்பியும் என்று கேட்ட மோசேக்குக் கர்த்தர் என்ன சொன்னார்??
நீ என் முகத்தைக் காணமாட்டாய் ஒரு மனுஷனும் என்னைக் கண்டு
உயிரோடிருக்கமாட்டான்- யாத் 33: 18-20
552: கர்த்தர் தம் மகிமையை மோசேக்கு காண்பிக்க அவனை எங்கே நிற்கச் சொன்னார்??
கன்மலையில் யாத் 33:21
553: மலையில் மோசேக்கு அருகில் எங்கு கர்த்தர் இறங்கி நின்றார்??
ஒரு மேகத்தில் யாத் 34:5
554: எப்போது கர்த்தர் இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் மகா தயையும் சத்தியமும் உள்ள தேவன் என்று கூறினார்??
கர்த்தர் மோசேக்கு முன்பாக கடந்துபோகிறபோது யாத் 34:6
555: ஏன் ஆபிப் மாதத்தில் புளிப்பில்லா அப்பம் புசிக்க வேண்டும்??
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட மாதம் - யாத் 34:18
556: வெறுங்கையோடே எங்கு வரக்கூடாது??
தேவ சந்நிதியில்- யாத் 34:20
557: கர்த்தருக்கு இடும் பலியின் இரத்தத்தை எந்த மாவுடன் செலுத்த வேண்டாம்??
புளித்த மாவுடன்
யாத் 34:25
558: மோசே ஜனங்களோடு பேசி முடியுமட்டும் தன் முகத்தில் என்ன போட்டிருந்தான்??
முக்காடு யாத் 34:33
559: எவ்வித ஸ்தீரிகள் தங்கள் கைகளினால் நூற்ற இளநீல நூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்பு நூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் கொண்டு வந்தார்கள்??
ஞான இருதயமுள்ள ஸ்தீரிகள் யாத் 35:25
560: கிருபாசனத்தை உண்டு பண்ணினவன் யார்??
பெசலெயேல் யாத் 37:6
561: பரிசுத்த அபிஷேக தைலத்தையும் சுத்தமான சுகந்தங்களின் தூபவர்க்கத்தையும் யாருடைய வேலைக்கு ஒப்பாக செய்யப்பட்டது??
தைலக்காரன் வேலைக்கு யாத் 37:29
562: அகோலியாப் எந்த கோத்திரத்தான்??
தாண்கோத்திரத்தான் - யாத்:38:23
563: அகோலியாவின் தகப்பன் பெயர் என்ன??
அகிசாமின் யாத் 38:23
564: பரிசுத்த ஸ்தலத்திற்காகச் செய்யப்பட்டு செலவான பொன்னின் அளவு என்ன??
இருபத்து ஒன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது சேக்கலும் -யாத் 38:24
565: ஆசரிப்பு கூடார மறைவின் பாதங்கள் எதினால் செய்யப்பட்டது??
வெண்கலத்தால் யாத் 38:30
566: ஏப்போத்து செய்வதற்கு எவைகள் பயன்படுத்தப்பட்டன??
பொன் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்பு நூல் திரித்த மெல்லிய பஞ்சு நூல் யாத் 39:2
567: ஆரோனின் கிரீடத்தில் முத்திரை வெட்டாக வைக்கப்பட்டிருக்கும் வாசகம் என்ன??
கர்த்தருக்குப் பரிசுத்தம் - யாத் 39:30
568: ஆசரிப்பு கூடாரத்தை என்று ஸ்தாபனம் பண்ண கர்த்தர் மோசேயிடம் சொன்னார்??
முதல் மாதமான ஆபிப் மாதத்தின் முதல் தேதியில் யாத் 40:2
569: ஆசரிப்பு கூடாரத்தில் எதை வைக்க வேண்டும்??
சாட்சிப் பெட்டியை யாத் 40:3
570: பொன் தூபபீடம் எதற்கு முன்னே வைக்ப்பட வேண்டும்??
சாட்சிப் பெட்டிக்கு முன்னே யாத் 40:5
571: வாசஸ்தலத்து வாசலின் தொங்கு திரையை எப்படி வைக்க வேண்டும்??
தூக்கி வைக்க வேண்டும் யாத் 40:5
572: தகனபலி பீடத்தை எங்கு வைக்க வேண்டும்??
வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக. யாத் 40:6
573: வெண்கலத்தொட்டியை எங்கு வைக்க வேண்டும்??
ஆசரிப்புக் கூடாரத்துக்கும். பலிபீடத்துக்கும் நடுவில் யாத் 40:7
574: வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் என்ன செய்ய வேண்டும்??
அபிஷேகம் செய்ய வேண்டும் யாத் 40:9
575: ஆரோனுக்கு எவ்வித வஸ்திரம் உடுத்த வேண்டும்??
பரிசுத்த வஸ்திரம் யாத் 40:13
576: குத்து விளக்கு வாசஸ்தலத்தில் எந்த பகுதியில் வைக்கப்பட்டது??
வாசஸ்தலத்தில் தென்புறத்தில் யாத் 40:24
577: எப்போது மேகம் ஆசரிப்பு கூடாரத்தை மூடினது??
மோசே தனக்கு நியமித்த வேலையை முடித்த போது யாத் 40:34
578: கர்த்தருடைய வாசஸ்தலத்தை எது நிரப்பிற்று??
கர்த்தருடைய மகிமை யாத் 40:34
579: இஸ்ரவேலரின் பயணத்தின் போது பகலின் வெயிலில் எது அவர்களை பாதுகாத்தது??
மேகம் யாத் 40:38
580: இஸ்ரவேலருடைய பயணத்தின் போது இரவில் அவர்களுக்கு வெளிச்சமாயிருந்தது எது??
அக்கினி யாத் 40:38
581: கர்த்தர் மோசேயை எங்ககேயிருந்து கூப்பிட்டார்??
ஆசரிப்பு கூடாரம். லேவி 1:1
582: பலிபீடத்தின்மேல் அக்கினியைப் போட வேண்டியவன் யார்??
ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன். லேவி 1:7
583 : சர்வாங்க தகனபலிக்கான இரத்தத்தை எங்கே தெளிக்க வேண்டும்??
பலிபீடத்தின் மேல் சுற்றிலும்
லேவி1:11
584: சர்வாங்க தகனபலி கர்த்தருக்கு எப்படிப்பட்டது??
சுகந்த வாசனையான தகனபலி லேவி 1:13
585: போஜன பலியாக கர்த்தருக்கு எதைச் செலுத்த வேண்டும்??
மெல்லிய மாவை. லேவி 2:1
586 : போஜன பலியை ஆசாரியன் எதற்காக தகனிக்க வேண்டும்??
ஞாபக்குறியாக. லேவி 2:2
587: கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் மகா பரிசுத்தமானது எது??
போஜனபலி லேவி 2:3
588: எந்த போஜன பலியும் எதனால் செய்யப்படக் கூடாது??
புளித்த மாவினால். லேவி 2:11
589: போஜனபலியில் எதை குறையவிடக்கூடாது??
தேவனுடைய உடன்படிக்கையின் உப்பு லேவி 2: 13
590: படைப்பது எல்லாவற்றோடும் எதையும் படைக்க வேண்டும்??
உப்பு லேவி 2:13
591: சமாதான பலியாக எதை செலுத்த வேண்டும்??
பழுதற்ற காளை அல்லது பசுவை. லேவி 3:1
592: பலிகளில் கொழுப்பு முழுவதும் யாருடையது??
கர்த்தருடையது. லேவி 3:16
593: தலைமுறை தோறும் வாசஸ்தலங்களில் நித்திய கட்டளையாயிருப்பது எது??
கொழுப்பையும் இரத்தத்தையும் புசிக்காதிருப்பது. லேவி 3:17
594: பாவநிவாரண பலி காளையின் இரத்தத்தை எத்தனை தரம் கர்த்தருடைய சந்நிதியில் தெளிக்க வேண்டும்??
ஏழு லேவி 4:6
595: சபையார் எல்லாரும் அறியாமையினாலே பாவம் செய்தால் எதை பாவநிவாரண பலியாகச் செலுத்த வேண்டும்??
ஒரு இளங்காளை. லேவி. 4:13&14
596: சாதாரண ஜனங்களில் ஒருவன் பாவம் செய்தால் அவன் எதை பலியாகக் கொண்டு வர வேண்டும்??
வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டி லேவி 4:27;28
597: தன் மனம் அறியாமல் என்ன செய்தவன் குற்றமுள்ளவன்??
உதடுகளினால் பதறி ஆணையிடுகிறவன். லேவி 5:4
598: எதன் இரத்தத்தை பலிபீடத்தின் அடியில் வடியவிட வேண்டும்??
பாவநிவாரண பலியாகிய புறா. லேவி 5:9
599: குற்றம் செய்தவன் தன் குற்றம் மன்னிக்கப்படும்படி செலுத்த வேண்டிய பலி எது??
குற்ற நிவாரண பலி. லேவி 5: 18;19
600: குற்றம் செய்தவன் தன் பாவம் மன்னிக்கப்படும்படி செலுத்த வேண்டிய பலி எது??
பாவநிவாரண பலி. லேவி 5:19
601: இராமுழுவதும் விடியற்காலம் மட்டும் பலிபீடத்தின் மேல் எரிய வேண்டிய பலி எது??
சர்வாங்க தகனபலி. லேவி. 6:9
602: பலிபீடத்தின் மேலிருக்கிற எது அவியாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும்??
அக்கினி லேவி 6:9
603: போஜனபலியை யார் படைக்க வேண்டும்??
ஆரோனின் குமாரர். லேவி. 6: 14
604: முழுவதும் தகனிக்கப்பட வேண்டிய பலி எது??
ஆசாரியனுக்காக இடப்படும் போஜனபலி. லேவி 6:22
605: எது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்பட வேண்டும்??
பாவநிவாரண பலி. லேவி 6:28
606: எந்த இரண்டு பலிகளுக்கும் உள்ள பிரமாணம் ஒன்றாகும்??
பாவநிவாரண பலி
குற்றநிவாரண பலி. லேவி 7:7
607: வகைக்கு ஒன்றாக செலுத்த வேண்டிய பலி எது??
ஸோத்திரத்துக்காக படைக்கும் பலிகள். லேவி. 7:14
608: பொருத்தனை மற்றும் உற்சாகபலிகளின் மாம்சத்தில் மீதியானது எப்பொழுது சுட்டெரிக்கப்பட வேண்டும்??
மூன்றாம் நாளில். லேவி 7: 17
609: சமாதான பலியின் மீதியான மாம்சம் மூன்றாம் நாளில் புசிக்கப்பட்டால் சம்பவிப்பவை எவை??
பலி அங்கிகரிக்கப்படாது,அதை செலுத்தினவனுக்கு அது பலிக்காது,அது அருவருப்பாயிருக்கும்,அதை புசிக்கிறவன் தன் அக்கிரமத்தை சுமப்பான்
610: தீட்டான வஸ்துவில் பட்ட மாம்சம் என்ன செய்யப்பட வேண்டும்??
அக்கினியில் சுட்டெரிக்கப்பட வேண்டும் லேவி 7:19
611: எவைகளின் கொழுப்பை பலவித வேலைகளுக்கு வழங்கலாம்??
தானாய் செத்ததும் பீறுண்டதுமான மிருகங்களின். லேவி. 7:24
612: படைப்பவனின் கைகளே கொண்டு வர வேண்டிய பலி எது??
தகனபலி லேவி 7:30
613: தகனபலியின் எந்த பாகம் ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்??
மார்க்கண்டம் லேவி 7:31
614: கர்த்தர் இஸ்ரவேலரின் சமாதான பலிகளில் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் எதைக் கொடுத்தார்??
அசைவாட்டும் மார்க்கண்டம், ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடை. லேவி. 7:34
615: இஸ்ரவேல் புத்திரர் பலிகளைச் செலுத்த வேண்டிய விதத்தைக் குறித்து கர்த்தர் யாருக்குக் கட்டளையிட்டார்??
மோசேக்கு லேவி 7: 38
616: மோசே அபிஷேகதைலத்தை பலிபீடத்தின் மேல் எத்தனை தரம் தெளித்து அபிஷேகம் பண்ணினான்??
ஏழு தரம் லேவி 8:11
617: ஆரோனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம் பண்ணியவன் யார்??
மோசே லேவி 8:12
618: மோசே காளையின் எவைகளை பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரித்தான்??
தோல். மாம்சம் சாணி. லேவி 8:17
619: பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவில் மோசேயின் பங்கு எது??
மார்க்கண்டம் லேவி 8:29
620: ஆரோனும் அவன் குமாரரும் எத்தனை நாள் கர்த்தருடைய காவலைக் காக்க வேண்டும்??
ஏழு நாட்கள் லேவி 8:33
621: மோசே இஸ்ரவேலரிடம் பாவநிவாரண பலியாக எதைக் கொண்டுவரச் சொன்னான்??
பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடா. லேவி. 9:3
622: இஸ்ரவேலர் சர்வாங்க தகனபலியாக எவைகளை பலியிட வேண்டும்??
ஒரு வயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டி, ஒரு ஆட்டுக்குட்டி. லேவி 9:3
623: இஸ்ரவேலர் சமாதான பலியாக எவைகளைக் கொண்டு வர வேண்டும்??
ஒரு காளை, ஒரு ஆட்டுக்கடா. லேவி 9:4
624: ஆரோன் தனக்காக என்னென்ன பலிகளைச் செலுத்தினான்??
பாவநிவாரண பலி, சர்வாங்க தகனபலி. லேவி 9:7
625: ஆரோன் ஜனங்களுக்காக என்னென்ன பலிகளைச் செலுத்தினான்??
பாவநிவாரண பலி
சர்வாங்க தகனபலி
போஜனபலி
சமாதானபலிகள்
லேவி 9: 15-18
626: யார் யார் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்தார்கள்??
மோசே ஆரோன். லேவி 9:23
627: மோசேயும் ஆரோனும் ஜனங்களை ஆசீர்வதித்தபோது காணப்பட்டது எது??
கர்த்தருடைய மகிமை. லேவி 9:23
628: சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்தது எது??
கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்ட அக்னி. லேவி 9:24
629: கர்த்தர் தங்களுக்கு க் கட்டளையிடாத அந்நிய அக்கினியை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வந்தவர்கள் யார்??
நாதாப் ஆபியூ. லேவி 10:1
630: நாதாபையும் அபியூவையும் பட்சித்துக் கொன்றது எது??
கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்ட அக்கினி
லேவி 10:2
631: தம்மிடத்தில் சேருகிறவர்களால் கர்த்தர் என்ன பண்ணப்படுவார்??
பரிசுத்தம் லேவி 10:3
632: நாதாப் அபியூவின் உடல்களை பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுக்கும்படி மோசே யாரிடம் கூறினான்??
மீசாவேல் எல்சாபான். லேவி. 10:4
633: மீசாவேல் மற்றும் எல்சாபான் என்பவர்கள் யார்??
ஆரோனின் சிறியதகப்பனாகிய ஊசியேலின் குமாரர். லேவி 10:4
634: கர்த்தர் கொழுத்தின அக்கினிக்காக புலம்புவர்கள் யார்??
இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும். லேவி. 10:6
635: ஆரோனும் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கும்போது எவைகளைக் குடிக்கக்கூடாது??
திராட்சைரசம் மது .லேவி. 10:9
636: எவைகளிடையே வித்தியாசம் பண்ணப்படும்படிக்கு கர்த்தர் மோசேயைக் கொண்டு இஸ்ரவேலருக்குப் போதித்தார்??
பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும். லேவி. 10:10
637: தகனபலியின் மீதியான போஜனபலி யை ஆரோனும் அவன் குமாரரும் எங்கே புசிக்க வேண்டும்??
பலிபீடத்தண்டையில். லேவி. 10:12
638: எது தகனிக்கப்பட்டிருந்ததால் மோசே கோபம் கொண்டான்??
வெள்ளாட்டுக்கடா. லேவி 10:16
639: எதை சுமந்து தீர்ப்பதற்கு பாவநிவாரண பலியை கர்த்தர் ஆரோன் மற்றும் அவன் குமாரருக்குக் கொடுத்தார்??
சபையின் அக்கிரமத்தை. லேவி 10:17
640: பாவநிவாரண பலியை இன்று நான் புசித்தேனானால் அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்று கேட்டவன் யார்??
ஆரோன் லேவி 10:19
பூமியிலிருக்கிற மிருகங்களில் புசிக்கத்தக்கவை எவை??
விரிகுளம்புள்ளதும்,குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும்,அசைபோடுகிறதுமானவைகள்.லேவி 11: 2-3
642: அசைபோடுகிற மிருகங்களில் அசுத்தமாயிருப்பவை எவை??
ஒட்டகம் குழிமுசல் முயல் லேவி 11:4-6
643: ஒட்டகம் குழிமுசல் முயல் இவை ஏன் அசுத்தமாயிருக்கும்??
விரிகுளம்பில்லாததால். லேவி 11:4-6
644: குளம்பு விரிகுளம்பும் இரண்டாக பிரிந்ததுமாயிருந்து அசை போடாதது எது??
பன்றி லேவி 11:7
645: பன்றி ஏன் அசுத்தமாயிருக்கும்??
அசை போடாததினால். லேவி 11:7
646: எந்த மிருகங்களின் மாம்சத்தைப் புசிக்கவும் உடல்களைத் தொடவும் கூடாது??
ஒட்டகம் குழிமுசல் முயல் பன்றி. லேவி 11:4-8
647: கடல்களிலும் ஆறுகளிலுமுள்ள எவைகளைப் புசிக்கலாம்??
சிறகும் செதிளும் உள்ளவைகள். லேவி 11:9
648: பறவைகளில் அருவருப்பாயிருக்கிறவை எவை??
நாலுகாலால் நடமாடுகிற ஊரும் பிராணிகள். லேவி 11:20
649: அசுத்தமான ஊரும் பிராணியின் உடல் எதில் விழுந்தால் அதை உடைத்துப் போட வேண்டும்??
மண்பாண்டம் . லேவி 11:33
650: ஊரும் பிராணிகளில் எவைகள் அருவருப்பாயிருக்கும்??
வயிற்றினால் நகருகிறவைகள்
நாலுகாலால் நடமாடுகிறவைகள்
அநேகங் கால்களுள்ளவைகள்
லேவி. 11:42
651: எதனால் நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக என்று கர்த்தர் கூறுகிறார்??
நான் பரிசுத்தர் ஆகையால் லேவி 11:45
652: பிறந்த ஆண்பிள்ளை எட்டாம் நாளில் என்ன பண்ண வேண்டும்??
விருத்தசேதனம். லேவி 12:3
653: பிள்ளையைப் பெற்றவள் சர்வாங்க தகனபலியாக எதைக் கொண்டு வர வேண்டும்??
ஒரு வயதான ஆட்டுக்குட்டி லேவி 12:6
654: ஆட்டுக்குட்டியைக் கொண்டு வர சக்தியில்லாத ஸ்தீரி எதைக் கொண்டு வர வேண்டும்??
இரண்டு காட்டுப்புறா அல்லது இரண்டு புறாக்குஞ்சு. லேவி 12:8
655: குஷ்டரோகம் உள்ளவனை ஆசாரியன் எப்படித் தீர்க்க வேண்டும்??
தீட்டுள்ளவனென்று. லேவி 13:3
656: எது தீட்டுள்ளது அது குஷ்டம்??
இரணமாம்சம். லேவி 13:15
657: சரீரத்தில் எவைகள் இருந்தால் அது வெள்ளைத் தேமல்??
மங்கின வெள்ளைப்புள்ளிகள். லேவி 13:38
658: யார் தீட்டு தீட்டு என்று சத்தமிட வேண்டும்??
தலையில் குஷ்டரோகம் இருக்கிறவன். லேவி 13:44-45
659: வீட்டிற்கு தோஷங்கழிக்க எவைகளைக் கொண்டு வரவேண்டும்??
இரண்டு குருவிகள் கேதுருகட்டை சிவப்பு நூல், ஈசோப்பு லேவி 14 :49
660: எவைகளை தோஷங்கழிக்கிற வீட்டின் மேல் தெளிக்க வேண்டும்??
தோய்த்த இரத்தம் மற்றும் ஊற்றுநீர். லேவி 14:52
661: இஸ்ரவேல் புத்திரர் எதை தீட்டுப்படுத்தாதபடிக்கு தீட்டுள்ளவர்களை விலக்கி வைக்க வேண்டும்??
தேவனுடைய வாசஸ்தலம். லேவி 15:3
662: எங்கே நான் காணப்படுவேன் என்று கர்த்தர் மோசேக்கு சொன்னார்??
கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில். லேவி 16:2
663: ஆரோன் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும் போது எவைகளை பலிசெலுத்த வேண்டும்??
ஒரு காளை பாவநிவாரண பலி
ஒரு ஆட்டுக்கடா சர்வாங்க தகனபலி
லேவி 16:2
664: ஆரோன் சபையிடம் என்னென்ன பலிகளை வாங்க வேண்டும்??
பாவநிவாரண பலி, சர்வாங்க தகனபலி, லேவி 16:5
665: ஆரோன் சபையிடம் பாவநிவாரண பலிக்காக எவைகளை வாங்க வேண்டும்??
இரண்டு வெள்ளாட்டுக்கடாக்கள். லேவி 16:5
666: ஆரோன் சர்வாங்க தகனபலிக்காக சபையிடம் எவைகளை வாங்க வேண்டும்??
ஒரு ஆட்டுக்கடா. லேவி 16:5
667: இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் குறித்து என்ன போட வேண்டும்??
இரண்டு சீட்டுகள். லேவி 16:8
668: எவைகளுக்காக வெள்ளாட்டுக்கடாக்களை குறித்து சீட்டுப்போட வேண்டும்??
கர்த்தருக்கென்று ஒன்று போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒன்று. லேவி 16:8
669: கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை என்ன செய்ய வேண்டும்??
பாவநிவாரண பலியாக பலியிட வேண்டும். லேவி 16:9
670: ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியில் எதைப்போட வேண்டும்??
தூபவர்க்கத்தை. லேவி 16:13
671: ஆரோன் இரத்தத்தினால் எவைகளுக்காக பிராயச்சித்தம் செய்ய வேண்டும்??
பரிசுத்த ஸ்தலம்
ஆசரிப்புக் கூடாரம்
பலிபீடம் - லேவி 16:20
672: மீறுதல்களும் அக்கிரமங்களும் சுமத்தப்பட்ட ஆட்டுக்கடா வை எங்கே அனுப்பிவிட வேண்டும்??
வனாந்தரத்துக்கு. லேவி 16:21
673: விசேஷித்த ஓய்வு நாள் என்பது எது??
ஏழாம் மாதம் பத்தாம் தேதி. லேவி16:29
674: வருஷத்தில் ஒருதரம் எவர்களுக்காக பாவநிவிர்த்தி செய்யப்பட வேண்டும்??
ஆசாரியனுக்காகவும் சபையின் ஜனங்களுக்காகவும். லேவி 16:33
675: இஸ்ரவேலர் இனி எவைகளுக்கு பலியிடக்கூடாது என்று கர்த்தர் கூறினார்??
தாங்கள் சோரமார்க்கமாய் பின்பற்றுகிற பேய்களுக்கு. லேவி 17:7
676: ஆத்துமாவிற்காக பாவநிவிர்த்தி செய்கிறது எது??
இரத்தம் லேவி 17:11
677: இரத்தம் எதற்குச் சமானம்??
ஜீவன். லேவி 17:14
678 : எவைகளைக் கைக்கொண்டு அவைகளின் படி செய்கிறவன் அவைகளால் பிழைப்பான்??
கர்த்தருடைய கட்டளைகள் நியாயங்கள். லேவி 18:4
679: சந்ததியில் யாரையாகிலும் எதற்கு தீக்கடக்கும்படி இடங்கொடுக்கக் கூடாது??
மோளேகுக்கென்று. லேவி 18:21
680: எதை பரிசுத்த குலைச்சலாக்கக் கூடாது??
தேவனுடைய நாமத்தை. லேவி 18:21
681: தீட்டுப்பட்டிருக்கிற தேசம் எவைகளை கக்கி ப் போடும்??
தன் குடிகளை. லேவி 18:25
682: ஒவ்வொருவரும் யாருக்குப் பயந்திருக்க வேண்டும்??
தன் தகப்பனுக்கும் தாய்க்கும். லேவி 19:3
683: எவைகளை ஆசரிக்க வேண்டும்??
கர்த்தருடைய ஓய்வுநாட்களை. லேவி 19:3
684: எவைகளை உண்டாக்கக் கூடாது??
வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை. லேவி 19:4
685: பயிரை அறுக்கும் போது எதை தீர அறுக்க க்கூடாது??
வயலின் ஓரத்திலிருக்கிறதை. லேவி 19:9
686: திராட்சத்தோட்டத்தின் பலனை அறுக்கும் போது எதைப் பொறுக்கக் கூடாது??
சிந்திகிடக்கிற பழங்களை லேவி 19:10
687: தீர அறுக்காமலும் பொறுக்காமலும் இருக்கிறவைகளை யாருக்கு விட்டு விட வேண்டும்??
எளியவனுக்கும் பரதேசிக்கும்
688: ஒருவருக்கொருவர் என்ன சொல்லக்கூடாது??
பொய் லேவி 19:11
689: எதினால் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கக் கூடாது??
கர்த்தரின் நாமத்தைக் கொண்டு பொய்யாணையிடுகிறதினால். லேவி 19:12
690: பிறனை என்னென்ன செய்யக்கூடாது??
ஒடுக்கவும் கொள்ளையிடவும். லேவி 19:13
691: விடியற்காலம் மட்டும் கையில் இருக்க கூடாதது எது??
கூலிக்காரனுடைய கூலி லேவி 19:13
692: யாரை நிந்தியாமல் தேவனுக்கு ப் பயந்திருக்க வேண்டும்??
செவிடனை லேவி 19:14
693: குருடனுக்கு முன்னே எதை வைக்கக் கூடாது??
தடுக்கல்லை லேவி 19:14
694: எதில் அநியாயம் செய்யக்கூடாது??
நியாயவிசாரணையில். லேவி 19:15
695: நியாயவிசாரணையில் யாருக்கு முகதாட்சண்யம் செய்யக்கூடாது??
சிறியவனுக்கு. லேவி 19:15
696: நியாயவிசாரணையில் யாருடைய முகத்துக்கு அஞ்சக்கூடாது??
பெரியவனுடைய. லேவி 19:15
697: யாரை உள்ளத்தில் பகைக்கக்கூடாது??
சகோதரனை. லேவி 19:17
698: பிறனிடத்தில் எது வாங்கக்கூடாது??
பழிக்குப்பழி. லேவி 19:18
699: தன் ஜனபுத்திரன் மேல் எதைக் கொள்ளக் கூடாது??
பொறாமை லேவி 19:18
700: எவைகள் கலந்த வஸ்திரத்தை உடுத்தக்கூடாது??
சணல்நூலும், கம்பளிநூலும். லேவி 19:19
701: தேசத்தில் புசிக்கத்தக்க கனியுள்ள மரங்களை நாட்டினபின்பு அவைகளை எப்படி எண்ண வேண்டும்??
விருத்தசேதனமில்லாதவைகளென்று. லேவி 19:23
702: கனியுள்ள மரங்களை எத்தனை வருஷம் விருத்தசேதனமில்லாததாய் எண்ண வேண்டும்??
மூன்று வருஷம். லேவி 19:23
703: எந்த வருஷத்தில் கனிகளைப் புசிக்கலாம்??
ஐந்தாம் வருஷத்தில். லேவி 19:25
704: எதை கேளாமல் இருக்க வேண்டும்??
குறி. லேவி 19:26
705: எதை பாராமல் இருக்க வேண்டும்??
நாள். லேவி 19:26
706: யாருக்காக சரீரங்களை கீறிக் கொள்ளக்கூடாது??
செத்தவனுக்காக. லேவி 19:28
707: எவைகளை உடல் மேல் குத்திக் கொள்ளக் கூடாது??
அடையாளமான எழுத்துக்களை. லேவி 19:28
708: எதைக் குறித்துப் பயபக்தியாயிருக்க வேண்டும்??
பரிசுத்த ஸ்தலம். லேவி 19:30
709: யாரை நாடி அவர்களால் தீட்டுப்படக்கூடாது??
அஞ்சனம்பார்க்கிறவர்கள். லேவி 19:31
710: யாருக்கு முன்பாக எழுந்திருக்க வேண்டும்??
நரைத்தவன். லேவி 19:32
711: யாருடைய முகத்தை கனம் பண்ண வேண்டும்??
முதிர்வயதுள்ளவன். லேவி 19:32
712: யார் தேசத்தில் தங்கினால் அவனை சிறுமைப்படுத்தக்
கூடாது??
அந்நியன். லேவி 19:33
713: எவைகளில் அநியாயஞ்செய்யக் கூடாது??
நியாயவிசாரணையில், அளவில், நிறையில் மற்றும் படியில். லேவி 19:35
714: யாரைப் பின்தொடர்ந்து சோரம் போக நாடுகிற ஆத்துமாவை கர்த்தர் அறுப்புண்டு போகப்பண்ணுவார்??
அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறி சொல்லுகிறவர்களையும். லேவி 20:6
715: எவர்களை சபிக்கிறவன் எவனும் கொலைசெய்யப்பட வேண்டும்??
தன் தகப்பனையும் தன் தாயையும். லேவி 20:9
716: கர்த்தர் இஸ்ரவேலரை கொண்டு போகிற தேசம் அவர்களை கக்கிப்போடாதபடிக்கு அவர்கள் செய்ய வேண்டியது என்ன??
கர்த்தரின் கட்டளைகள், நியாயங்களை கைக்கொள்ள வேண்டும். லேவி 20:22
717: யாருடைய வழிபாடுகளில் இஸ்ரவேலர் நடக்கக்கூடாது??
கர்த்தர் அவர்களுக்கு முன்பாகத் துரத்தி விடுகிற ஜனத்தின். லேவி 20:23
718: கர்த்தர் இஸ்ரவேலரை எப்படிபட்டவர்களாயிருக்கும்படி பிரித்தெடுத்தார்??
பரிசுத்தவான்களாய். லேவி 20:26
719: ஆசாரியர்கள் ஏன் பரிசுத்தராயிருக்க வேண்டும்??
கர்த்தரின் தகனபலியையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாகையினால். லேவி 21:6
720: தேவனுடைய அப்பத்தை செலுத்துகிறவன் யார்??
ஆசாரியன். லேவி 21:8
721: பிரதான ஆசாரியன் மேல் இருக்கிறது என்ன??
தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம்
லேவி 21:12
722: ஆரோனின் சந்ததியில் யார் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது??
அங்கவீனமுள்ளவன். லேவி 21:17
723: கர்த்தருக்கு எவைகளைச் செலுத்தக்கூடாது??
பழுதுள்ள ஒன்றையும். லேவி 22:20
724: கர்த்தருக்கு ஸோத்திரபலியை எப்படி செலுத்த வேண்டும்??
மனப்பூர்வமாய். லேவி 22:29
725: இஸ்ரவேல் புத்திரர் நடுவே கர்த்தர் எப்படி மதிக்கப்படுவார்??
பரிசுத்தராய். லேவி 22:32
726: ஏழாம் நாள் என்ன நாள்??
பரிசுத்த சபைகூடுதலான ஓய்வு நாள். லேவி 23:3
727: பஸ்கா பண்டிகையை எந்நாளில் கொண்டாட வேண்டும்??
முதல் மாதம் பதினாலாந்தேதி. லேவி 23:5
728: பஸ்கா பண்டிகையை எந்த வேளையில் கொண்டாட வேண்டும்??
அந்திநேரமாகிற வேளையில். லேவி 23:5
729: இஸ்ரவேலர் வெள்ளாண்மையை அறுக்கும் போது செய்ய வேண்டியது என்ன??
முதற்பலனாகிய ஒரு கதிர்கட்டை ஆசாரியனிடம் கொண்டு வர வேண்டும். லேவி 23:10
730: கதிர்கட்டை அசைவாட்டும் நாளில் பானபலியாக எதைச் செலுத்த வேண்டும்??
திராட்சப்பழரசத்தில் காற்படி. லேவி 23:13
731: தலைமுறைதோறும் உள்ள நித்திய கட்டளை எது??
சபைகூடும் பரிசுத்த நாளில் வேலை செய்யக்கூடாது. லேவி 23:21
732: பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபை கூடும் பரிசுத்த நாளும் எப்பொழுது??
ஏழாம் மாதம் பத்தாம் தேதி லேவி 23:27
733: பாவநிவிர்த்தி செய்யும் நாளில் ஜனங்கள் செய்ய வேண்டியது என்ன??
ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்த வேண்டும். லேவி 23:27
734: பாவநிவிர்த்தி செய்யும் நாளில் கர்த்தருக்கு எதைச் செலுத்த வேண்டும்??
தகனபலி லேவி 23:27
735: கூடாரப்பண்டிகையை எத்தனை நாள் ஆசரிக்க வேண்டும்??
ஏழு நாள். லேவி 23:34
736: கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினபோது எங்கே குடியிருக்கப்பண்ணினார்??
கூடாரங்களில். லேவி 23:42
737: எது எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும்??
குத்துவிளக்கு. லேவி 24:2
738: குத்துவிளக்கை யார் ஏற்ற வேண்டும்??
ஆரோன். லேவி 24:3
739: குத்துவிளக்கு எங்கே ஏற்றப்பட வேண்டும்??
ஆசரிப்புக் கூடாரத்தில். லேவி 24:3
740: மோசேயிடம் எத்தனை அப்பங்கள் சுட கர்த்தர் கூறினார்??
பன்னிரண்டு. லேவி 24:5
741: கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தது யார்??
இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீயின் மகன்.லேவி 24: 11
742: கர்த்தரை நிந்தித்தவனின் தாயின் பெயர் என்ன??
செலோமித். லேவி 24:11
743: கர்த்தர் தம்மைத் தூஷித்தவனை என்ன செய்ய சொன்னார்??
கல்லெறியும்படி
லேவி 24:14
744: தன் தேவனை தூஷிக்கிறவன் எதைச் சுமப்பான்??
தன் பாவத்தை. லேவி 24:15
745: கர்த்தருடைய நாமத்தைத் நிந்திக்கிறவன் என்ன செய்யப்பட வேண்டும்??
கொலை லேவி 24:16
746: எவர்களுக்கு ஒரே நியாயம் இருக்க வேண்டும்??
பரதேசிக்கும் சுதேசிக்கும். லேவி 24:22
747: எந்த வருஷத்தை பரிசுத்தமாக்க வேண்டும்??
ஐம்பதாம் வருஷம். லேவி 25:10
748: ஐம்பதாம் வருஷம் என்ன வருஷம் என்று கூறப்பட்டுள்ளது??
யூபிலி. லேவி 25:11
749: தேசத்தில் சுகமாய் குடியிருக்க என்ன செய்ய வேண்டும்??
கர்த்தரின் கட்டளைப்படி செய்து நியாயங்களை க் கைக்கொள்ள வேண்டும். லேவி 25:18
750: நிலங்களை எப்படி விற்கக்கூடாது??
அறுதியாய். லேவி 25:23
751: யார் தரித்திரப்பட்டு கையிளைத்தால் அவனை ஆதரிக்க வேண்டும்??
சகோதரன். லேவி 25:34
752: தரித்திரப்பட்ட சகோதரனிடம் எவைகளை வாங்கக்கூடாது??
வட்டி பொலிசை. லேவி 25:36
753: எவைகளை உண்டாக்கக் கூடாது என்று கர்த்தர் கூறினார்??
விக்கிரகங்கள், சுரூபங்கள். லேவி 26:1
754: தேசத்தில் எவைகளை நிறுத்தக் கூடாது??
சிலை. லேவி 26:1
755: எதை தேசத்தில் வைக்கக்கூடாது??
சிந்திரந்தீர்ந்த கல். லேவி 26:1
756: எதை குறித்து பயபக்தியாயிருக்க வேண்டும்??
பரிசுத்த ஸ்தலத்தை. லேவி 26:2
757: ஏற்ற காலத்தில் மழை பெய்ய என்ன செய்ய வேண்டும்??
கர்த்தரின் கட்டளையையும் கற்பனைகளையும் கைக்கொள்ள வேண்டும். லேவி 26:3
758: கர்த்தரின் கட்டளை கற்பனைகளைக் கைக்கொண்டால் பூமி எதை தரும்??
தன் பலனை. லேவி 26:4
759: இஸ்ரவேலர் எகிப்தியருக்கு அடிமையாயிராதபடி கர்த்தர் என்னென்ன செய்தார்??
அவர்கள் தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்,நுகத்தடிகளை முறித்தார், நிமிர்ந்து நடக்கப்பண்ணினார். லேவி 26:13
760: உடன்படிக்கையை மீறினால் கர்த்தர் எதை துயரப்படுத்துவார்??
இருதயம். லேவி 26:16
761: ஆதரவு கோல் என்று குறிப்பிடப்படுவது எது??
அப்பம். லேவி 26:26
762: கர்த்தர் எவைகளை நிர்த்தூளியாக்குவார்??
விக்கிரகச் சிலைகளை. லேவி 26:30
763: எவைகளின் சத்தமும் மீதியாயிருக்கிறவர்களை ஓட்டும்??
அசைகிற இலைகள். லேவி 26:36
764: கர்த்தர் எப்பொழுது ஜனங்களை கைவிடவும் வெறுக்கவும் மாட்டார்??
அக்கிரமங்களை அறிக்கையிட்டு தண்டனையை ஒத்துக் கொள்ளும் போது. லேவி 26:44
765: ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயலின் மதிப்பு என்ன??
50 வெள்ளிச் சேக்கல். லேவி 27:16
766: ஒரு சேக்கல் எவ்வளவு கேரா??
இருபது. லேவி 27:26
767: லேவியராகமத்தின் கருப்பொருள் என்ன??
பரிசுத்தம்.
768: பரிசுத்தம் என்ற சொல் எத்தனை முறை கூறப்பட்டுள்ளது??
87 முறை
769: மோளேகு என்பது என்ன??
அம்மோனிய விக்கிரகம்
770: லேவியராகமத்தில் தேவன் மோசேயோடு பேசினார் என்று எத்தனை முறை வருகின்றது??
38முறை
771: மோசே ஜனங்களை எந்த வனாந்தரத்தில் எண்ணிப்பார்த்தான்??
சீனாய். எண்ணா 1:19
772: சாட்சியின் வாசஸ்தலத்தில் ஊழியம் செய்பவர்கள் யார்??
லேவியர். எண்ணா 1:50
773: சாட்சியின் வாசஸ்தலத்துக்கு அருகில் வரும் யார் கொலை செய்யப்பட வேண்டும்??
அந்நியன். எண்ணா 1:51
774: லேவியர்களுடைய தலைவர்களுக்குத் தலைவன் யார்??
எலெயாசர். எண்ணா 3:32
775: ஆசரிப்புக் கூடாரத்திலே யாருடைய ணிவிடை மகாபரிசுத்தமானவைகளுக்குரியது??
கோகாத் புத்திரர். எண்ணா 4:4
776: பலிபீடத்தின்மேல் எதை விரிக்க வேண்டும்??
இரத்தாம்பர துப்பட்டி. எண்ணா 4:13
777: பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும் சுமக்க வேண்டியது யார்??
கோகாத் புத்திரர். எண்ணா 4:15
778: லேவியருக்குள்ளே எந்த வம்சத்தார் அழிந்து போகக்கூடாது??
கோகாத். எண்ணா 4:18
779: கர்த்தருடைய கட்டளையை மீறி பாவம் செய்வோர் என்ன செய்ய வேண்டும்??
பாவத்தை அறிக்கையிட வேண்டும். எண்ணா 5:7
779: கர்த்தருக்கென்று விரதம் காப்பவன் எப்படியிருக்க வேண்டும்??
பரிசுத்தமாய். எண்ணா 6:5
780: ஆரோனும் அவன் குமாரரும் இஸ்ரவேல் புத்திரரை எவ்விதம் ஆசீர்வதிக்க வேண்டும்??
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து உன்னைக் காக்கக்கடவர், கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர், கர்த்தர் தம்முடைய முகத்தை உன் மேல் பிரசன்னமாக்கி உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர். எண்ணா 6:23-27
781: பரிசுத்த ஸ்தலத்தில் கோகாத் புத்திரரின் வேலை என்ன??
தோள்மேல் சுமப்பது. எண்ணா 7:9
782: தேவன் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் எங்கிருந்து மோசேயோடே பேசுவார்??
இரண்டு கேருபீன்களின் நடுவில். எண்ணா 7:89
783: சாட்சி பெட்டியின் மேலுள்ள கிருபாசனம் என்று கூறப்பட்டுள்ளது எது??
இரண்டு கேருபீன்கள். எண்ணா 7:89
784: கர்த்தருடையவர்களாயிருப்பவர்கள் யார்??
லேவியர். எண்ணா 8:14
785 : திருப்பணி சேனையை விட்டு விட வேண்டிய லேவியரின் வயது என்ன??
ஐம்பது. எண்ணா 8:25
786: குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் எதை ஆசரிக்கக்கடவர்கள்??
பஸ்கா. எண்ணா 9:2
787: பஸ்காவை எவைகளோடு புசிக்க வேண்டும்??
புளிப்பில்லாத அப்பங்கள் கசப்பான கீரைகள்
எண்ணா 9:11
788: வாசஸ்தலம் ஸ்தாபனம் செய்யப்பட்ட நாளில் வாசஸ்தலத்தின் மீது உண்டானது எது??
அக்கினிமயமான ஒரு தோற்றம். எண்ணா 9;15
789: வாசஸ்தலத்தை பகலில் மூடிக்கொண்டது எது??
மேகம் எண்ணா 9:17
790: இஸ்ரவேல் புத்திரர் எங்கு பாளயமிறங்குவார்கள்?
மேகம் தங்குமிடத்தில். எண்ணா 9:17
791: சீனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்ட மேகம் எங்கே தங்கிற்று??
பாரான் வனாந்திரத்தில். எண்ணா 10:12
792: எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய் என்று மோசே யாரிடம் கூறினார்??
ஓபாவிடம். எண்ணா 10:31
793: கர்த்தருடைய அக்னி பற்றியெரிந்ததினால் அவ்விடத்துக்கு என்ன பெயரிடப்பட்டது??
தபேரா. எண்ணா 11:3
794: கொத்துமல்லி விதையளவாயிருந்தது எது??
மன்னா. எண்ணா 11:7
795: மன்னாவின் ருசி எதைப்போலிருந்தது??
புது ஒலிவ எண்ணெயின் ருசி. எண்ணா 11:8
796: இஸ்ரவேல் ஜனங்கள் எது வேண்டுமென்று மோசேயைப் பார்த்து அழுதார்கள்??
இறைச்சி. எண்ணா 11:13
797: கர்த்தர் எத்தனை மூப்பர்களை ஆசரிப்புக் கூடாரத்தில் மோசேயோடு வந்து நிற்கும் படி கூறினார்??
70 மூப்பர்கள். எண்ணா 11:16
798: கூடாரத்துக்கு போகாமல் பாளயத்தில் இருந்தவர்களின் பெயரென்ன??
எல்நாத் மேதாத். எண்ணா 11:26
799: காற்று எவைகளை அடித்துக்கொண்டு வந்து பாளயத்தில் போட்டது??
காடைகளை. எண்ணா 11:31
800 : கிப்ரோத் அத்தாவா என்று பெயர் வரக் காரணமென்ன??
இச்சித்த ஜனங்களை அடக்கம் பண்ணினதினால். எண்ணா 11:35
801: மோசேக்கு விரோதமாய் பேசினது யார்??
மிரியாமும் ஆரோனும். எண்ணா 12:1
802: மோசே பூமியிலுள்ள சகலமனிதரிலும் எப்படிப்பட்டவனாயிருந்தான்??
சாந்த குணமுள்ளவனாய். எண்ணா 12:3
803: கர்த்தர் யாருக்கு தம்மை தரிசனத்தில் வெளிப்படுத்தி சொப்பனத்தில் அவனோடு பேசுவார்??
தீர்க்கதரிசி. எண்ணா 12:6
804: மோசே கர்த்தரின் வீட்டில் எங்கும் எப்படிப்பட்டவராயிருந்தார்??
உண்மையுள்ளவன். எண்ணா 12:7
805: கர்த்தர் மோசேயோடே எப்படிப் பேசினார்??
முகமுகமாகவும், பிரத்தியட்சமாகவும். எண்ணா 12:8
806: கர்த்தரின் சாயலைக் கண்டவர் யார்??
மோசே எண்ணா 12:8
807: மோசே யாருக்கு யோசுவா என்று பெயரிட்டார்??
ஓசேயா. எண்ணா 13:16
808: எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழு வருடத்துக்கு முன்னே கட்டப்பட்டிருந்தது எது??
எபிரோன். எண்ணா 13:22
808: தேசத்தைச் சுற்றிப்பார்க்கப் போனவர்கள் எத்தனை நாள் சென்ற பின்பு திரும்பி வந்தார்கள்??
40 நாள். எண்ணா 13:25
809: ஏனாக்கின் குமாரர்கள் எப்படிப்பட்டவர்கள் ??
இராட்சதர். எண்ணா 13:33
810: தாங்கள் சுற்றிப் பார்த்து சோதித்த தேசம் எப்படிப்பட்டதென்று யோசுவாவும் காலேபும் கூறினார்கள்??
மகா நல்ல தேசம். எண்ணா 14:7
811: கானான் தேசத்தாரை காத்த எது அவர்களை விட்டு விலகிப் போயிற்று??
நிழல். எண்ணா 14:9
812: கர்த்தர் எகிப்தியர் நடுவிலிருந்து இஸ்ரவேலரை எதினாலே கொண்டு வந்தார்??
தம்முடைய வல்லமையினால். எண்ணா 14:13
813: பூமியெல்லாம் எதினால் நிறைந்திருக்கும்??
கர்த்தருடைய மகிமையினால். எண்ணா 14:21
814: ஜனங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல் எத்தனை முறை பரீட்சித்தார்கள்??
பத்து முறை. எண்ணா 14:22
815: இவன் வேறு ஆவி உடையவனாயிருக்கிறான் யாரை குறித்து கூறப்பட்டது??
காலேப். எண்ணா 14:24
816: கர்த்தர் ஏன் ஜனங்களோடே இருக்கமாட்டாரென்று மோசே கூறினார்??
அவர்கள் கர்த்தரை விட்டு பின் வாங்கினபடியால். எண்ணா 14:43
817: இஸ்ரவேல் புத்திரர் ஓய்வு நாளில் என்ன செய்த மனிதனைக் கண்டு பிடித்தனர்??
விறகுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தவனை. எண்ணா 15:32
818: இஸ்ரவேல் புத்திரர் வஸ்திர ஓரத்தின் தொங்கல்களிலே எதைக் கட்ட வேண்டும்??
இளநீல நாடாவை. எண்ணா 15:38
829: மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங் கூடியது யார் ??
கோராகு. எண்ணா 16:1
820: கோராகின் கூட்டத்தில் இருந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்??
254 பேர். எண்ணா16:1&2
821: கர்த்தரால் தெரிந்து கொள்ளப்படுகிறவன் எப்படியிருப்பான்??
பரிசுத்தவானாய். எண்ணா 16:7
822: தம்மண்டை சேரும் படி இஸ்ரவேல் சபையிலிருந்து தேவனால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் யார்??
லேவியின் புத்திரர். எண்ணா 16:9
823: தங்களுக்குண்டான எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினவர்கள் யார்??
கோராகுக்குரிய எல்லா மனிதரும் எண்ணா 16:32
824: செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்று ஜனங்களுக்காக பாவநிவிர்த்தி செய்தது யார்??
ஆரோன். எண்ணா 16:48
825: யாருடைய கோல் துளிர்த்திருந்தது??
ஆரோனுடைய கோல். எண்ணா 17:8
826: காதேசிலே மரணமடைந்து அங்கே அடக்கம் பண்ணப்பட்டது யார்??
மிரியாம். எண்ணா 20:1
827: ஆசரிப்புக் கூடார வாசலிலே மோசேக்கும் ஆரோனுக்கும் காணப்பட்டது என்ன??
கர்த்தருடைய மகிமை. எண்ணா 20:6
828: கர்த்தர் மோசேயிடம் ஜனங்களுக்கு முன்பாக என்ன செய்யும்படிக் கூறினார்??
கன்மலையைப் பார்த்து பேசும்படி. எண்ணா 20:8
829 :மோசே கன்மலையைப் பார்த்து செய்தது என்ன??
தன் கோலினால் இரண்டு தரம் அடித்தான். எண்ணா 20:11
830 : மோசேயும் ஆரோனும் விசுவாசியாததினால் அவர்கள் ஜனங்களை எங்கே கொண்டு போவதில்லை என கர்த்தர் கூறினார்??
இஸ்ரவேலருக்குக் கர்த்தர் கொடுக்கும் தேசத்துக்குள். எண்ணா 20:12.
831: மேரிபாவின் தண்ணீர் எனப் பெயர் வர காரணமென்ன??
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்கு வாதம் பண்ணினது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே கர்த்தருடைய பரிசுத்தம் விளங்கினது. எண்ணா 20:13
832: வெகு ஜனங்களோடும் பலத்த கைகளோடும் இஸ்ரவேலரை எதிர்க்கப் புறப்பட்டது யார்??
ஏதோம். எண்ணா 20:20
833: ஓர் என்னும் மலை உச்சியில் மரித்தது யார்??
ஆரோன். எண்ணா 20:28
844: இஸ்ரவேலர் கானானியரின் பட்டணங்களை சங்காரம் பண்ணி அவ்விடத்திற்கு என்ன பெயரிட்டனர்??
ஓர்மா. எண்ணா 21:3
835: எதன் உருவத்தைச் செய்ய கர்த்தர் மோசேயிடம் கூறினார்??
கொள்ளிவாய்ச் சர்ப்பம். எண்ணா 21:8
836: கொள்ளிவாய்ச் சர்ப்பம் கடித்தவர்கள் எதை நோக்கிப் பார்த்து பிளைத்தார்கள்??
வெண்கலச்சர்ப்பத்தை. எண்ணா 21:9
837: வனாந்திரத்தில் ஓடுகிற ஆறு எது??
அர்னோன் ஆறு. எண்ணா 21:13
838: ஜனங்களைக் கூடிவரச்செய் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் சொன்ன ஊற்று இருக்கிற இடம் எது??
பேயேர். எண்ணா 21:16
839: ஏமோரியரின் ராஜா யார்??
சீகோன். எண்ணா 21:23
840: மோசே எந்த பட்டணத்திற்கு வேவு பார்க்கிறவர்களை அனுப்பினான்??
யாசேர். எண்ணா 21:32
841: எரிகோ எதற்குக் கிட்டே இருந்தது??
யோர்தான். எண்ணா 22:1
842: மோவாபியருக்கு ராஜாவாயிருந்தது யார்??
பாலாக். எண்ணா 22:4
843: பிலேயாமின் தகப்பன் யார்??
பேயோர். எண்ணா 22:5
844: எனக்காக அந்த ஜனத்தை சபிக்க வேண்டும் கூறியது யார்??
பாலாக். எண்ணா 22:6
845: அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் யாரைக் குறித்து தேவன் கூறினார்??
இஸ்ரவேல் ஜனங்கள். எண்ணா 22:12
846: ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பான் யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது??
இஸ்ரவேல் ஜனங்கள். எண்ணா 23:9
847: நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக கூறியது யார்??
பிலேயாம். எண்ணா 23:10
848: தேவன் யாக்கோபிலே எதைக் காண்கிறதில்லை??
அக்கிரமம். எண்ணா 23:21
849: இஸ்ரவேலருக்குள்ளே இருக்கிறது எது??
ராஜாவின் ஜெயகெம்பீரம். எண்ணா 23:21
850: இஸ்ரவேலர்களுக்கு எதற்கொத்த பெலன் உண்டு என்று பிலேயாம் கூறினான்??
காண்டாமிருகம். எண்ணா 23:22
851: பிலேயாம் கண்ட கர்த்தருக்குப் பிரியமான செயல் எது??
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பது. எண்ணா 24:1
852: இஸ்ரவேலின் ராஜா யாரைப் பார்க்கிலும் உயருவான்??
ஆகாக், எண்ணா 24:7
853: உன் இடத்துக்கு ஓடிப்போ யார் யாரிடம் கூறியது??
பாலாக் பிலேயாமிடம். எண்ணா 24:11
854: யாக்கோபிலிருந்து உதிப்பது எது??
ஒரு நட்சத்திரம். எண்ணா 24:17
855: இஸ்ரவேலிலிருந்து எழும்புவது எது??
ஒரு செங்கோல். எண்ணா 24:17
856: எங்கிருந்து தோன்றுகிற ஒருவர் ஆளுகை செய்வார்??
யாக்கோபு. எண்ணா 24:19
857: இவன் முந்தி எழும்பினவன் ஆனால் முடிவில் முற்றிலும் நாசமாவான் இவன் யார்??
அமலேக். எண்ணா 24:20
858: தன் வாசஸ்தலத்தை கன்மலையில் கட்டியது யார்??
கேனியன். எண்ணா 24:21
859: எங்கிருந்து கப்பல்கள் வந்து ஆசூரை சிறுமைப்படுத்தும்??
சித்தீமின் கரைதுறை. எண்ணா 24:24
860: பினெகாஸ் யாருடைய குமாரன்??
எலெயாசர். எண்ணா 25:7
861: செத்து ஒரு அடையாளமானவர்கள் யார்??
கோராகின் கூட்டத்தார். எண்ணா 26:9
863: கானான் தேசத்தில் இறந்து போன யூதாவின் குமாரர் யார்??
ஏர் மற்றும் ஓனான். எண்ணா 26:19
863: எப்படி தேசத்தை பங்கிடவேண்டும்??
சீட்டுப் போட்டு. எண்ணா 26:55
864: அம்ராமுடைய மனைவி பெயரென்ன??
யோகெபேத். எண்ணா 26:59
865: அம்ராமுடைய பிள்ளைகள் பெயரென்ன??
ஆரோன் மோசே மற்றும் மிரியாம். எண்ணா 26:59
866: சீனாய் வனாந்திரத்தில் முதல் முறை இஸ்ரவேலரை எண்ணியவர்கள் யார்??
மோசேயும் ஆரோனும். எண்ணா 26:64
867: சீனாய் வனாந்திரத்தில் எண்ணப்பட்டவர்களில் உயிரோடிருந்தவர்கள் யார்??
காலேப் மற்றும் யோசுவா. எண்ணா 26:65
868: செலோப்பியாத்தின் குமாரத்திகளின் பெயர்கள் என்ன??
மக்லாள் நோவாள் ஒக்லாள் மில்காள் மற்றும் திர்சாள். எண்ணா 27:1
869: செலோப்பியாத் எதனாலே மரித்தான்??
தன் பாவத்தினால். எண்ணா 27:3
870: செலோப்பியாத்தின் குமாரத்திகள் தங்களுக்கு எவைகள் கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள்??
தகப்பனின் சகோதரருக்குள்ளே காணியாட்சி. எண்ணா 27:4.
871: கர்த்தர் மோசேயிடம் எந்த மலையில் ஏறி இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுத்த தேசத்தை பார்க்கச் சொன்னார்??
அபாரீம் மலை. எண்ணா 27:12
872: கர்த்தர் யாரை தெரிந்து கொள்ள மோசேயிடம் கூறினார்??
யோசுவா. எண்ணா 27:18
873: இஸ்ரவேல் புத்திரர் யோசுவாவுக்கு கீழ்ப்படியும்படி யோசுவாவுக்கு எதைக் கொடுக்க வேண்டும்??
மோசேயின் கனத்தில் கொஞ்சம். எண்ணா 27:20
874: நித்திய சர்வாங்க தகனபலியாக நாடோறும் எதைச் செலுத்த வேண்டும்??
ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகள். எண்ணா 26:3
875: ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி எது??
காற்படி திராட்சை ரசம். எண்ணா 28:7
876: பாவநிவாரண பலியாக நித்தமும் எதைச் செலுத்த வேண்டும்??
ஒரு வெள்ளாட்டுக்கடா. எண்ணா 28:15
877: கர்த்தருக்குச் செலுத்துகிறவைகள் எப்படி இருக்க வேண்டும்??
பழுதற்றவைகளாய். எண்ணா 28:31
878: தன் சொல் தவறாமல் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியே செய்ய வேண்டியவன் யார்??
பொருத்தனைப் பண்ணினவன் அல்லது ஆணையிட்டு தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தியவன். எண்ணா 30:2
879: இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் யாரிடத்தில் பழிவாங்க கர்த்தர் கூறினார்??
மீதியானியர். எண்ணா 31:2
880: ஒவ்வொரு கோத்திரத்திலும் எத்தனை பேரை யுத்தத்திற்கு அனுப்ப மோசே கூறினான்??
ஆயிரம். எண்ணா 31:4.
881: இஸ்ரவேலரில் யுத்த சன்னத்தராய் நிறுத்தப்பட்டவர்கள் எத்தனை பேர்??
பன்னிரெண்டாயிரம். எண்ணா 31:5
882: மீதியானியரின் ஐந்து ராஜாக்களின் பெயர்கள் என்ன??
ஏவி; ரேக்கேம்; சூர்; ஊர் மற்றும் ரேபா. எண்ணா 31:8
883: கர்த்தர் இஸ்ரவேலரை எத்தனை வருஷம் வனாந்திரத்தில் அலையப்பண்ணினார்?
நாற்பது வருஷம். எண்ணா 32:13
884: யார் நிர்மூலமாகுமட்டும் கர்த்தர் இஸ்ரவேலரை வனாந்திரத்தில் அலையப்பண்ணினார்?
கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்பு செய்த சந்ததி. எண்ணா 32:13
885: எந்த தேசத்தை காத் ரூபன் புத்திரருக்கு சுதந்திரமாகக் கொடுக்க மோசே கட்டளையிட்டார்??
கீலேயாத். எண்ணா 32:29
886: மோசே கர்த்தரின் கட்டளைப்படி எதை எழுதினான்??
இஸ்ரவேலருடைய பிரமாணங்களை. எண்ணா 33:1
887: இஸ்ரவேலர் எதற்கு மறு நாளில் எகிப்திலிருந்து புறப்பட்டார்கள்??
பஸ்கா. எண்ணா 33:3
888: கர்த்தர் யார் பேரில் நீதி செலுத்தினார்??
எகிப்தின் தேவர்கள். எண்ணா 33:4
889: ஏலீமில் எவைகள் இருந்தன??
பன்னிரண்டு நீருற்றுகள் எழுபது பேரீச்ச மரங்கள். எண்ணா 33:9
890: ஆரோன் எத்தனை வயதில் மரணமடைந்தான்??
123 வயது. எண்ணா 33:39.
891: கானானை எத்தனை கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டார்??
ஒன்பதரை. எண்ணா 34:13
892: இஸ்ரவேலருக்கு தேசத்தை பங்கிட்டுக் கொடுப்பவர்கள் யார்??
ஆசாரியனாகிய எலெயாசர் மற்றும் யோசுவா. எண்ணா 34:17
893: லேவியருக்கு மொத்தம் எத்தனை பட்டணங்களை பிரித்து கொடுக்க வேண்டும்??
48 பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களும். எண்ணா 35:7
894: யார் ஓடிப்போய் இருக்கத்தக்கதாக அடைக்கலபட்டணங்களை குறிக்க வேண்டும்??
கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன். எண்ணா 35:11
895: யோர்தானுக்கு இப்புறத்தில் எத்தனை அடைக்கலப்பட்டணங்கள் இருக்க வேண்டும்??
மூன்று. எண்ணா 35:14
896: கானான் தேசத்தில் எத்தனை அடைக்கலப் பட்டணங்கள் இருக்க வேண்டும்??
மூன்று. எண்ணா 35:14
897: தேசத்தை தீட்டுப்படுத்துவது எது??
இரத்தம். எண்ணா 35:33
898: தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காக பாவநிவிர்த்தி செய்வது எது??
இரத்தம் சிந்தினவனுடைய இரத்தம். எண்ணா 35:33
899: ஒரு கோத்திரத்தை விட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக்கூடாதது எது??
சுதந்தரம். எண்ணா 36:9
890: எண்ணாகமத்தின் சட்டதிட்டங்கள் எவ்விடத்தில் கர்த்தரால் மோசேக்குக் கொடுக்கப்பட்டது??
மோவாபின் சமனான வெளிகளில். எண்ணா 36:13.
891: கர்த்தர் விதித்த யாவையும் மோசே எந்த வருஷம் இஸ்ரவேலரிடம் கூறினார்??
நாற்பதாம் வருஷம். உபாகமம் 1:4
892: நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும் என்று கர்த்தர் கூறிய இடம் எது??
ஓரேப். உபாக 1:6
893: யாரை திடப்படுத்தும்படி கர்த்தர் மோசேயிடம் கூறினார்??
யோசுவா. உபாக 1:38
894: தேனீக்களைத் துரத்துவதுபோல மலையின்மேல் ஏறினவர்களைத் துரத்தியவர்கள் யார்??
ஏமோரியர். உபாக 2:4
895: இஸ்ரவேலரின் சகோதரர் என்று கர்த்தர் யாரைக் குறிப்பிட்டார்??
ஏசாவின் புத்திரர். உபாக 2:4
896: கர்த்தர் ஏசாவுக்கு சுதந்திரமாகக் கொடுத்த நாடு எது??
சேயீர் மலை நாடு. உபாக 2:5
897: ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்கள் யார்??
ஏமியர் . உபாக 2:10
898: சேயீரிலிருந்து யாரைத் துரத்தி விட்டு ஏசாவின் புத்திரர் அங்கே குடியிருந்தார்கள்??
ஓரியர் . உபாக 2:12
899: இஸ்ரவேலர் காதேஸ்பர்னேயாவிலிருந்து புறப்பட்டது முதல் சேரேத் ஆற்றைக் கடக்கும்வரை சென்ற காலம் எவ்வளவு??
முப்பத்தெட்டு வருஷம். உபாக 2:14
900 : ஆர் பட்டணத்தில் குடியிருந்தவர்கள் யார்??
மோவாபியர் . உபாக 2:28
9001 : தன் தேசத்தைக் கடந்து போகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடாதவன் யார்??
எஸ்போனின் ராஜாவாகிய சீகோன்.உபாக 2:30
9002: ஒருவரும் மீதியாயிராமற் போகுமட்டும் இஸ்ரவேலர் யாரை முறியடித்தார்கள்
ஓகை. உபாக 3:3
9003: ஓகின் ராஜ்யமான அரணான பட்டணங்கள் எத்தனை??
60 உபாக 3:4
9004: ஓகின் ராஜ்யத்தின் பெயர் என்ன??
அர்கோப் தேசம். உபாக 3:4
9005: தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுக்கிற தேசம் எதற்கு அப்புறத்தில் இருந்தது??
யோர்தான். உபாக 3:20
9006: எதின் கொடுமுடியில் ஏறும்படி கர்த்தர் மோசேயிடம் கூறினார்??
பிஸ்காவின். உபாக 3:27
9007: யோர்தானை நீ கடந்து போவதில்லையென்று கர்த்தர் யாரிடம் கூறினார்??
மோசே. உபாக 3:27
9008: இஸ்ரவேலருக்கு முன்பாக யோர்தானை கடந்து போகிறவன் யார்??
யோசுவா. உபாக 3:28
9009: எதை ஜாக்கிரதை யாய் காத்துக் கொள்ள வேண்டும்??
ஆத்துமாவை. உபாக 4:10
9010: கர்த்தர் எவ்விடத்தில் வைத்து அக்கினியின் நடுவிலிருந்து இஸ்ரவேலரோடு பேசினார்??
ஓரேப். உபாக 4:15.
9011: எவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்??
சந்திர சூரிய, நட்சத்திரங்கள். உபா 4:19
9012: இருப்புக்களவாய் என்று கூறப்பட்டுள்ள தேசம் எது??
எகிப்து. உபா 4:20
9013: மோசே ஜனங்களுக்கு விரோத மாய் சாட்சியாக எவைகளை வைத்தார்??
வானத்தையும் பூமியையும். உபா 4:26
9014: தேவனாகிய கர்த்தரை எவ்விதம் தேடும்போது கண்டடைவோம்??
முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும். உபா 4:29
9015: தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ளவராயிருக்கிறபடியால் யாரை கைவிடமாட்டார்??
தம்முடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறவர்களை. உபா 4:30;31
9016: கர்த்தருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நடுவாக நின்றவர் யார்??
மோசே. உபா 5:5
9017: அடிமைத்தன வீடு எது??
எகிப்து. உபா 5:6
918: தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கு அவர் செய்கிறது என்ன??
இரக்கம். உபா 5:10
9019: கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலுமிருந்து ஜனங்களிடம் கூறியது என்ன??
10 கற்பனைகள். உபா 5:5-22
9020: கர்த்தர் விதிக்கிற கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்கிறதினால் நீடித்திருப்பது எது??
வாழ்நாட்கள். உபா 6:1
9021: கர்த்தரின் வார்த்தைகளை வீட்டில் எங்கெங்கே எழுதி வைக்க வேண்டும்??
நிலைகளிலும் வாசல்களிலும். உபா 6:9
9022: கர்த்தருக்குப் பயந்து அவருக்குச் செய்ய வேண்டியது என்ன??
ஆராதனை. உபா 6:13
9024: கர்த்தர் துரத்தும் ஏழு ஜாதிகளின் பெயர்களென்ன??
ஏத்தியர், கிர்காசியர் ஏமோரியர் கானானியர் பெரிசியர் ஏவியர் மற்றும் ஏபூசியர். உபா 7:1
9025: தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்த ஜனமாயிருப்பது எது??
இஸ்ரவேல். உபா 7:6
9026: கர்த்தர் யாருக்கு ஆயிரம் தலைமுறை மட்டும் உடன்படிக்கையையையும் தயவையும் காக்கிறவர்??
தம்மில் அன்புகூர்ந்து தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு. உபா 7:9
9027: எவைகளை சீ என்று முற்றிலும் அருவருக்க வேண்டும்??
விக்கிரகங்கள். உபா 7:26
9028: கர்த்தர் எதை அறியும்படிக்கு இஸ்ரவேலரை நாற்பது வருஷம் வனாந்தரத்தி்லே நடத்தி வந்தார்??
அவர்களுடைய இருதயத்திலுள்ளதை. உபா 8:2
9029: இஸ்ரவேலருக்கு நாற்பது வருஷமளவும் பழையதாய் போகாதிருந்தது எது??
அவர்கள் மீதிருந்த வஸ்திரங்கள். உபா 8:4
9030: கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கொடுத்த தேசத்தில் எது இரும்பாயிருக்கும்??
கல்லுகள். உபா 8:9
9031: கர்த்தர் இஸ்ரவேலரை எப்படிப்பட்ட வழியாய் நடத்தி வந்தார்??
பயங்கரமான பெரிய வனாந்திர வழி. உபா 8:15
9032: எவைகள் இந்த ஐஸ்வர்யத்தைச் சம்பாதித்தன என்று இஸ்ரவேலர் சொல்லக்கூடாது??
அவர்கள் சமார்த்தியமும் கைப்பெலனும். உபா 8:17
9033: கர்த்தர் ஜாதிகளை அவர்களுடைய எதினிமித்தம் துரத்தினார்??
ஆகாமியம். உபா 9:4
9034: இஸ்ரவேலர் எவைகளினிமித்தம் தேசத்தைச் சுதந்தரிப்பதில்லை என்று கர்த்தர் கூறினார்??
தங்கள் நீதி உத்தமம். உபா 9:5
9035: வணங்கா கழுத்துள்ள ஜனம் யாரைக் குறித்து கூறப்பட்டது??
இஸ்ரவேல். உபா 9:6
9036: எவ்விடத்திலே கர்த்தர் கடுங்கோபத்தினால் இஸ்ரவேலை அழிக்கத்தக்கதான உக்கிரங்கொண்டார்??
ஓரேப். உபா 9:8
9037: கற்பலகைகள் எதினால் எழுதப்பட்டிருந்தன??
தேவனுடைய விரலினால். உபா 9:10
9038: மோசே எவைகள் நிமித்தம் நாற்பது நாள் கர்த்தருக்கு முன்பாக விழுந்து கிடந்தார்??
இஸ்ரவேலருடைய சகல பாவங்கள். உபா 9:18
9039: கர்த்தர் யார் மீதும் மிகுந்த கோபம் கொண்டு அவனை அழிக்க வேண்டுமென்றிருந்தார்??
ஆரோன். உபா 9:20
9040: இஸ்ரவேலர் எவ்விடங்களிலெல்லாம் கர்த்தருக்குக் கடும் கோபம் உண்டாக்கினார்கள்??
தபேரா மாசா கிப்ரோத் மற்றும் அத்தாவா. உபா 9:22
பயங்கரமான பெரிய வனாந்திர வழி. உபா 8:15
9041: ஆரோன் எங்கே மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்?
மோசெராவில். உபா 10:6
9042: ஆரோனின் ஸ்தானத்தில் ஆசாரியனானவன் யார்??
எலெயாசார் உபா 10:6
9043: ஆறுகளுள்ள நாடு எது??
யோத்பாத். உபா 10:7
9044: எதை விருத்தசேதனம்பண்ண மோசே ஜனங்களிடம் கூறினார்??
இருதயத்தின் நுனித்தோல். உபா 10:16
9045: எகிப்திலிருந்து இஸ்ரவேலரைப் பின் தொடர்ந்து வந்தவை எவை??
எகிப்தின் சேனை, குதிரைகள் மற்றும், இரதங்கள். உபா 11:4
9046: எலியாப் என்பவனின் இன்னொரு பெயரென்ன??
ரூபன். உபா 11:6
9047: பூமி தன் வாயை திறந்து யாரை விழுங்கி போட்டது??
தாத்தான் மற்றும் அபிராம். உபா 11:6
9048: வருஷத்தின் துவக்க முதல் முடிவு மட்டும் தேசத்தின் மீது வைக்கப்பட்டிருப்பது எது??
தேவனாகிய கர்த்தரின் கண்கள். உபா 11:12
9049: யாரைச் சேவித்தால் கர்த்தர் வானத்தை அடைத்துப் போடுவார்??
அந்நிய தேவர்களை. உபா 11:16;17
9050: கர்த்தரின் வார்த்தைகளை எங்கெங்கே பதிக்க வேண்டும்??
இருதயத்திலும் ஆத்துமாவிலும். உபா 11:19
9051: எந்த மலையின்மேல் ஆசீர்வாதத்தை கூற வேண்டும்??
கெரிசீம். உபா 11:29
9052: ஏபால் மலையின் மேல் எதைக் கூற வேண்டும்??
சாபம். உபா 11:29
9053: கெரிசீம் மற்றும் ஏபால் மலைகள் எதின் அருகே இருந்தன??
மோரே என்னும் சமபூமி. உபா 11:29-30
9054: தண்ணீரைப்போல தரையிலே ஊற்றப்படவேண்டியது எது??
இரத்தம். உபா 12:16
9055: யாருக்காக கீறிக் கொள்ளக்கூடாது??
செத்தவனுக்காக. உபா 14:1
9056: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் எதைக் கொடுப்பார்கள்??
கடன். உபா 15:6
9057: இஸ்ரவேலர் எவைகளை நினைவு கூர வேண்டும்??
அடிமையாயிருந்ததையும் கர்த்தர் அவர்களை மீட்டுக் கொண்டதையும். உபா 15:15
9058: நீதிமான்களின் நியாயங்களை தாறுமாறாக்குவது எது??
பரிதானம். உபா 16:19
9059: இஸ்ரவேலர் யாருக்குச் செவிகொடுக்க வேண்டும்??
கர்த்தர் எழும்பப்பண்ணும் தீர்க்கதரிசிக்கு. உபா 18:25
9060: யாரைப்போல ஒரு தீர்க்கதரிசியை கர்த்தர் எழும்பப்பண்ணுவார்??
மோசே. உபா 18-15.
9061: மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள் எவை??
வெளியின் விருட்சங்கள். உபா 20:19
9062: முதற்பிறந்தவனுக்குரியது எது??
சேஷ்டபுத்திர சுதந்திரம். உபா 21:17
9063: தேவனால் சபிக்கப்பட்டவன் யார்??
மரத்திலே தூக்கிப்போடபட்டவன். உபா 21:23
9064: எவைகளைப் பிணைத்து உழக்கூடாது??
மாட்டையும் கழுதையை யும். உபா 22:10
9065: இஸ்ரவேலில் கன்னியை அவதூறு பண்ணினவனிடம் எவற்றை அபராதமாக வாங்க வேண்டும்??
100 வெள்ளிக்காசு. உபா 22:19
பொருத்தனையைச் செலுத்தாமலிருப்பது எப்படியிருக்கும்??
பாவமாய். உபா 23:21
9067: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிற வழியில் கர்த்தர் யாருக்குச் செய்ததை நினைத்துக்கொள்ள வேண்டும்??
மிரியாம். உபா 24:9
9067: தேசத்தில் நாட்கள் நீடிதிருக்கும்படி குறையற்ற எவைகளை வைத்திருக்க வேண்டும்??
சுமுத்திரையான நிறைகல்லும் படியும். உபா 25:15
9068: கர்த்தர் இஸ்ரவேலரை இளைப்பாறப்பண்ணும்போது எதை வானத்தின் கீழ் இராமல் அழியப்பண்ணவேண்டும்??
அமலேக்கின் பேரை. உபா 25:19
9069: தசமபாகம் செலுத்தும் வருஷம் எது??
மூன்றாம் வருஷம். உபா 26:12
9070: முழுக்கற்களாலே கட்டப்படவேண்டியது எது??
பலிபீடம். உபா 27:6.
9071: தமது வழிகளில் நடப்பவர்களை கர்த்தர் எப்படி நிலைப்படுத்துவார்??
பரிசுத்த ஜனமாக. உபா 28:9
9072: கர்த்தருடைய வழிகளில் நடக்கும் போது எது திறக்கப்படும்??
நல்ல பொக்கிஷ சாலையாகிய வானம். உபா 28:13
9073: கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமலிருக்கும்போது வந்து பலிப்பது என்ன??
சாபங்கள். உபா 28:15
9074: கர்த்தருக்கு கீழ்ப்படியாதவர்களுக்கு வானம் எப்படடி இருக்கும்??
வெண்கலமாய். உபா 28:23
9075: கர்த்தருக்கு கீழ்ப்படியாதவர்களுக்கு எது இரும்பாயிருக்கும்??
பூமி. உபா 28:23
9076: கர்த்தருக்கு கீழ்ப்படியாதவர்கள் சகல நாளும் எப்படி இருப்பார்கள்??
ஒடுக்கப்பட்டும், நொறுக்கப்பட்டும். உபா 28:33
9077: இஸ்ரவேலர் வனாந்திரத்தில் எதை சாப்பிடவில்லை??
அப்பம். உபா 29:6
9078: கர்த்தர் விதிக்கிற கட்டளைகள் எப்படிப்பட்டவைகளல்ல??
மறைபொருளும், தூரமானதும். உபா 30:11
9079: எவைகளை இஸ்ரவேலருக்கு முன் வைத்ததாக கர்த்தர் கூறினார்??
ஜீவன் மரணம் ஆசீர்வாதம் மற்றும் சாபம். உபா 30:19
9080: இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக்கூடாது கூறியவர் யார்??
மோசே. உபா 31:2
9081: கர்த்தரின் வழியைவிட்டு விலகுகிறவர்களுக்கு கடைசி நாளில் நேரிடுவது என்ன??
தீங்கு. உபா 31:29
9082:கர்த்தருடைய சுதந்தர வீதம் யார்??
யாக்கோபு. உபா 32:9
9083: கொழுத்துப்போய் உதைத்தவன் யார்??
யெஷீரன். உபா 32:15
9084: வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமாயிருப்பது எது??
சத்துருக்களின் திராட்சரசம். உபா 32:33
9085: மோசே எவ்விடத்திலே தன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவார்??
அபாரீம் என்னும் மலை. உபா 32:49-51
9086: கர்த்தர் இஸ்ரவேலருக்கு எந்த மலையிலே பிரசன்னமானார்??
பாரான். உபா 33:2
9087: யாருடைய ஜனம் கொஞ்சமாயிராமல் பிழைக்கக்கடவது??
ரூபன். உபா 33:6
9088: லேவியின் பரிசுத்த புருஷன் வசமாய் இருப்பவைகள் எவை??
தும்மீம் ஊரீம். உபா 33:8
9089: கர்த்தருக்கு பிரியமானவன் யார்??
பென்யமீன். உபா 33:13
9090: ஜனங்களை தேசத்தின் கடையாந்திரங்கள் மட்டும் முட்டித் துரத்துபவன் யார்??
யோசேப்பு. உபா 33:17
9091: கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருள்களையும் அனுபவிப்பவர்கள் யார்??
செபுலோன் இசக்கார் உபா 33:19
9092: சிங்கத்தைப்போல் தங்கியிருந்து புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுபவன் யார்??
காத். உபா 33:20
9093: இவன் ஒரு பாலசிங்கம் பாசானிலிருந்து பாய்வான் அவன் யார்??
தாண். உபா 33:22
9094: கர்த்தருடைய தயவினாலே திருப்தியடைந்து அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பவன் யார்??
நப்தலி. உபா 33:23
9095: தன்சகோதரருக்கு பிரியமாயிருந்து தன் காலை எண்ணெயிலேத் தோய்ப்பான் அவன் யார்??
ஆசோர். உபா 33:24
9096: தானியமும் திராட்சைரசமுமுள்ள தேசத்திலே இருப்பது எது??
யாக்கோபின் ஊற்று. உபா33:28
9097: கர்த்தரின் தாசனாகிய மோசே எந்த தேசத்தில் மரித்தார்??
மோவாப். உபா 34:5
9098: கர்த்தர் மோசேயை எங்கே அடக்கம் பண்ணினார்??
பெத்பேயருக்கு எதிரான பள்ளத்தாக்கு. உபா 34:6
9099: இந்நாள் வரைக்கும் ஒருவனும் யாருடைய பிரேதக்குழியை அறியவில்லை
மோசே . உபா 34:6
1000: இஸ்ரவேல் புத்திரர் மோசேக்காக எத்தனை நாள் அழுதுகொண்டிருந்தார்கள்??
முப்பது. உபா 34:8
1001: யோசுவா யாருடைய குமாரன்??
நூன் யோசுவா 1:1
1002: பலங்கொண்டு திடமனதாயிருக்கும்படி கர்த்தர் யாரிடம் கூறினார்??
யோசுவா. யோசு 1:6
1003: யோசுவா எவ்விடத்திலிருந்து வேவுகாரரை அனுப்பினான்??
சித்தீம். யோசு 2:1
1004: எவைகளை வேவுபார்க்கும்படி யோசுவா வேவுகாரரை அனுப்பினான்??
தேசத்தையும் எரிகோவையும். யோசு 2:1
1005: வேவுகாரர் யாருடைய வீட்டில் தங்கினார்கள்??
ராகாப். யோசு 2:1
1006: ராகாப் வேவுகாரரை எதற்குள் ஒளித்து வைத்தாள்??
சணல்தட்டைகள். யோசு 2:6
1007: இஸ்ரவேலர் சங்காரம் பண்ணின எமோரியரின் ராஜாக்களின் பெயர்கள் என்ன??
சீகோன் ஓக். யோசு 2:10
1008: இஸ்ரவேலரால் யாருடைய தைரியம் அற்றுப்போனது??
எரிகோவின் குடிகள். யோசு 2:11
1009: அலங்கத்தில் குடியிருந்தவள் யார்??
ராகாப். யோசு 2:15
1010: ராகாபுக்கு அடையாளமாக கொடுக்கப்பட்டது என்ன??
சிகப்பு நூல் கயிறு. யோசு 2:17
1011: இஸ்ரவேலர் எத்தனை நாள் யோர்தானின் கரையில் இருந்தார்கள்??
மூன்று. யோசு 3:2
1012: உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்தவர்கள் யார்??
ஆசாரியர்கள். யோசு 3:3
1013: உடன்படிக்கைப் பெட்டிக்கும் ஜனங்களுக்கும் இடையிலே எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்??
இரண்டாயிரம் முழம் தூரம். யோசு 3:4
1014: யோசுவா ஜனங்களை என்ன செய்து கொள்ளக் கட்டளையிட்டான்??
பரிசுத்தம்பண்ண. யோசு 3:5
1015: உன்னை மேன்மைப்படுத்துவேன் என்று கர்த்தர் யாரிடம் கூறினார்??
யோசுவா. யோசு 3:7
1016: அறுப்பு காலம் முழுவதும் கரைபுரண்டு போவது எது??
யோர்தான். யோசு 3:15
1017: யாருடைய கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே யோர்தானின் தண்ணீர் குவியலாக நின்றது??
ஆசாரியர்கள். யோசு 3:15&16
1018: யோர்தானின் தண்ணீர் எதுவரைக்கும் குவியலாக நின்றது??
ஆதாம் ஊர். யோசு 3:16
1019: ஆதாம் ஊர் எதற்கடுத்ததாக இருந்தது??
சார்தான். யோசு 3:16
1020: எந்த கடலுக்கு வருகிற தண்ணீர் பிரிந்து ஓடியது??
உப்புக்கடல். யோசு 3:16
1021: சமனான வெளியின் கடல் என்று கூறப்பட்டுள்ளது எது??
உப்புக்கடல். யோசு 3:16
1022: இஸ்ரவேலர் உலர்ந்த தரை வழியாய் எதைக் கடந்து போனார்கள்??
யோர்தான். யோசு 3:17
1023: உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக பிரிந்து போனது எது??
யோர்தானின் தண்ணீர். யோசு 4:7
1024: இஸ்ரவேலர் மோசேக்குப் பயந்திருந்ததுபோல யாருக்குப் பயந்திருந்தார்கள்??
யோசுவா. யோசு 4:14
1025: யோர்தானுக்கு மேல் கரையில் குடியிருந்தவர்கள் யார்??
ஏமோரியர். யோசு 5:1
1026: யோசுவா இஸ்ரவேல் புத்திரரை எவ்விடத்தில் வைத்து விருத்தசேதனம் பண்ணினான்??
ஆர்லோத் மேடு. யோசு 5:3
1027: எதனுடைய நிந்தையை கர்த்தர் புரட்டிப்போட்டார்??
எகிப்து. யோசு 5:9
1028: எகிப்தின் நிந்தையை கர்த்தர் புரட்டிப்போட்டப்படியால் அந்த இடம் என்னப்படுகிறது??
கில்கால். யோசு 5:9
1029: இஸ்ரவேலர் எதின் சமனான வெளிகளில் பஸ்காவை ஆசரித்தார்கள்??
எரிகோ. யோசு 5:10
2030: இஸ்ரவேலர் எதைப் புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது??
தேசத்தின் தானியம். யோசு 5:12
1031: கர்த்தருடைய சேனையின் அதிபதியின் கையில் இருந்தது என்ன??
உருவினபட்டயம். யோசு 5:13
1032: நீர் எங்களைச் சேர்ந்தவரோ எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று யோசுவா யாரிடம் கேட்டான்??
கர்த்தருடைய சேனையின் அதிபதி
1033: இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது எது??
எரிகோ. யோசு 6:1
1034: எப்பொழுது யோசுவா ஜனங்களிடம் ஆர்ப்பரியுங்கள் என்று கூறினான்??
ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில். யோசு 6:16
1035: எரிகோவை கட்டும்படி எழும்புபவன் அஸ்திபாரம் போடும்பொழுது யாரை சாகக் கொடுப்பான்??
மூத்த குமாரன். யோசு6:26
1036: எரிகோவை கட்டுகிறவன் வாசல்களை வைக்கும் போது யாரை சாகக் கொடுப்பான்??
இளையகுமாரன். யோசு 6:26
1037: யாருடைய கீர்த்தி உலகமெங்கும் பரம்பிற்று??
யோசுவா. யோசு 6:27
1038: சாபத்தீடானதை எடுத்துக் கொண்டவன் யார்??
ஆகான். யோசு 7:1
1039: ஆயிபட்டணம் எதற்குச் சமீபத்திலிருந்தது??
பெத்தாவோன். யோசு 7:2
1040: ஆயின் மனுஷர் எத்தனை பேரை வெட்டி போட்டார்கள்??
36 யோசு 7:5
1041: எதை நிக்கிரகம் பண்ணாவிட்டால் நான் உங்களோடு இரேன் என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்??
சாபத்தீடானதை. யோசு 7:12
1042: நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக பாவஞ்செய்தேன் கூறியவன் யார்??
ஆகான். யோசு 7:20
1043: ஆகான் எடுத்த வெள்ளியின் அளவு என்ன??
200 சேக்கல். யோசு 7:21
1044: ஆகான் எடுத்த பொன்பாளத்தின் நிறை என்ன??
ஐம்பது சேக்கல். யோசு 7:21
1044: ஆகானையும் அவனுக்குரியவைகளெல்லாவற்றையும் எந்த பள்ளத்தாக்கிலே சுட்டெரித்தார்கள்??
ஆகோர். யோசு 7:24&25
1045: யாரை உயிரோடு பிடித்து யோசுவாவிடம் கொண்டு வந்தார்கள்??
ஆயின் ராஜா. யோசு 8:23
1046: ஆயின் குடிகளைச் சங்கரித்துத் தீருமட்டும் யோசுவா தன் கையில் எதை நீட்டிக் கொண்டிருந்தான்??
ஈட்டி. யோசு 8:26
1047: எந்த பர்வதத்தில் யோசுவா கர்த்தருக்குப் பலிபீடம் கட்டினான்??
ஏபால். யோசு 8:30
1048: பலிபீடம் கட்டுவதற்கு பயன்படுத்தின கற்கள் எது படாததாயிருந்தது??
இருப்பாயுதம். யோசு 8:32
1049: தந்திரமான யோசனை பண்ணினவர்கள் யார்??
கிபியோனின் குடிகள். யோசு 9:3&4
1050: இப்போதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள் யார் யாரிடம் கூறியது??
யோசுவா கிபியோனின் குடிகளிடம். யோசு 9:23
1051: ராஜதானி பட்டணங்களில் ஒன்றை ப்போல் பெரிய பட்டணம் எது??
கிபியோன். யோசு 10:2
1052: கர்த்தர் வானத்திலிருந்து ஏமோரியர்கள்மேல் எவைகளை விழப்பண்ணினார்??
கற்கள். யோசு 10:11
1053: சூரியனையும் சந்திரனையும் தரித்து நிற்கும் படி கட்டளையிட்டவன் யார்??
யோசுவா. யோசு 10:13
1054: சூரியன் எங்கே தரித்து நின்றது??
கிபியோன் மேல். யோசு 10:12
1055: சந்திரன் எங்கே தரித்து நின்றது??
ஆயலோன் பள்ளத்தாக்கின்மேல். யோசு 10:12
1056: சூரியனும் சந்திரனும் தரித்து நின்ற சம்பவம் எங்கே எழுதியிருக்கிறது??
யாசேரின் புத்தகம். யோசு 10:13
1957:சூரியன் வானத்தில் எப்பகுதியில் தரித்து நின்றது??
நடுவானம். யோசு 10:13
1058: ராஜாக்கள் ஒளித்திருந்த கெபி எவ்விடத்தில் இருந்தது??
மக்கெதா. யோசு 10:16
1059: யோசுவா எத்தேசம் அனைத்தையும் அழித்தான்??
கோசேன். யோசு 10:41
1060: எர்மோன் மலையடிவாரத்தில் அமைந்திருந்தது எது??
மிஸ்பா சீமை. யோசு 11:3
1061: மிஸ்பா சீமையிலே குடியிருந்தவர்கள் யார்??
ஏவியர். யோசு 11:3
1062: ராஜாக்களெல்லாரும் கூடி இஸ்ரவேல் ஜனங்களோடு யுத்தம் பண்ண எந்த ஏரியண்டையிலே பாளயமிறங்கியிருந்தார்கள்??
மோரோம். யோசு 11:5
1063: யுத்த ஜனங்களின் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்தவன் யார்??
யோசுவா. யோசு 11:9
1064: ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையாக இருந்த பட்டணம் எது??
ஆத்சோர். யோசு :11:10
1065: எர்மோன் மலை எந்த பள்ளத்தாக்கில் இருந்தது??
லீபனோன். யோசு 11:16
1066: இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம் பண்ணின ஒரே ஒரு பட்டணத்தின் பெயர் என்ன??
கிபியோன். யோசு 11:19
1067: சூரியன் உதயமாகிற திசையில் இருந்த ஆற்றின் பெயர் என்ன??
அர்னோன். யோசு 12:1
1068: எஸ்போனில் குடியிருந்தவர்கள் யார்??
எமோரியர்கள். யோசு 12:2
1069: ஆரோவேர் எந்த ஆற்றங்கரையில் இருந்தது??
அர்னோன். யோசு 12:2
1070: அம்மோன் புத்திரருக்கு எல்லையாக இருந்த ஆற்றின் பெயர் என்ன??
யாபோக்கு/ யோசு 12:2
1071: யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறியடித்த ராஜாக்களின் எண்ணிக்கை எவ்வளவு??
31. யோசு 12:9-24
1072: எகிப்திற்கு எதிராக இருந்த ஆறு எது??
சீகோர். யோசு 13:2
1073: சீதோனியருக்கடுத்து இருந்த நாட்டின் பெயர் என்ன??
மெயாரா. யோசு 13:4
1074: பாகால்காத் எந்த மலையடிவாரத்தில் இருந்தது??
எர்மோன். யோசு 13:5
1075: தேசத்தை எப்படிப் பங்கிட கர்த்தர் கூறினார்??
சீட்டுப்போட்டு. யோசு 13:6
1076: எத்தனை கோத்திரங்களுக்கு தேசத்தைப் பங்கிட கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்??
9 கோத்திரங்களுக்கும் மனாசேயின் பாதி கோத்திரத்துக்கும். யோசு 13:7
1077: யோர்தானுக்கு அப்புறத்தில் சுதந்திரம் பெற்ற கோத்திரத்தார் யார்??
ரூபானியர், காத்தியர், மனாசேயின் பாதி கோத்திரத்தார். யோசு 13:8
1078: மோசே முறியடித்த ராட்சதரில் மீதியாயிருந்த ராஜா யார்??
ஓகு. யோசு 13:12
1079: இஸ்ரவேல் புத்திரர் யாரை இஸ்ரவேலிலிருந்து துரத்தவில்லை??
கெசூரியர், மகாத்தியர். யோசு 13:13
1080: ,பள்ளத்தாக்கின் மலையில் இருந்தது எது??
செரேத்சகார். யோசு 13:19
1081: யோசுவாவின் தகப்பன் பெயர் என்ன??
நூன். யோசு 14:1
1082: கானான் தேசத்தை எத்தனை கோத்திரங்களுக்குப் பங்கிட்டார்கள்??
9 ½. யோசு 14:1&2
1083: கானானில் இஸ்ரவேலர் சதந்தரித்துக் கொண்ட தேசங்களை அவர்களுக்குப் பங்கிட்டவர்கள் யார்??
எலெயாசர் யோசுவா மற்றும் கோத்திரப்பிதாக்கள். யோசு 14:1
1084: யாருடைய புத்திரர் தனித்தனி கோத்திரங்களானார்கள்??
யோசேப்பு. யோசு 14:4
1085: காலேபின் தந்தை யின் பெயர் என்ன??
எப்புன்னே. யோசு 14:6
1086: மோசே எவ்விடத்திலிருந்து காலேபை வேவுபார்க்க அனுப்பினான்??
காதேஸ்பர்னெயா. யோசு 14:7
1087: நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன் கூறியவன் யார்??
காலேப். யோசு 14:9
1088: காலேபுக்கு யோசுவா எப்பட்டணத்தைச் சுதந்தரமாகக் கொடுத்தான்??
எபிரோன். யோசு 14:13
1089: எப்பட்டணத்துக்கு கீரியாத் அர்பா என்ற பெயர் இருந்தது??
எபிரோன். யோசு 14:15
1090: ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தவன் யார்??
அர்பா. யோசு 14:15
1091: கில்கால் எதற்கு முன்பாக இருந்தது??
அதும்மீமின் மேடு. யோசு 15:7
1092: யூதாவின் கீழ்ப்புறமான எல்லைக்குள் அடங்கியுள்ள கிணற்றின் பெயர் என்ன??
ரொகேல். யோசு 15:7
1093: அர்பாவின் பட்டணம் எது??
எபிரோன். யோசு 15:13
1094: காலேப் துரத்திவிட்ட ஏனாக்கின் குமாரரின் பெயர்கள் என்ன??
சேசாய், அகீமான் மற்றும் தல்மாய். யோசு 15:14
1095: தெபீரின் முற்காலத்திலுள்ள பெயர் என்ன??
கீரியாத்செப்பேர். யோசு 15:15
1096: காலேபின் குமாரத்தியின் பெயர் என்ன??
அக்சாள். யோசு 15:16
1097: காலேப் தன் குமாரத்தியை யாருக்கு விவாகம் பண்ணி கொடுத்தான்??
ஒத்னியேலுக்கு. யோசு 15:17
1098: அக்சாள் தனக்கு எப்படிப்பட்ட நிலத்தையும் தரவேண்டுமென்று காலேபிடம் கேட்டாள்??
நீர்ப்பாய்ச்சலான நிலம். யோசு 15:19
1099: எஸ்ரோனின் இன்னொரு பெயர் என்ன??
ஆத்சோர். யோசு 15:25
1200: தெபீரின் இன்னொரு பெயர் என்ன??
கீரியாத்சன்னா. யோசு 15:49
1101: கானானியர் எங்கே குடியிருந்தார்கள்??
காசேர். யோசு 16:10
1102: யுத்த மனுஷனாயிருந்தவன் யார்??
மாகீர். யோசு17:1
1103: தனக்கு குமாரர் இல்லாதிருந்தவன் யார்??
செலொப்பியாத். யோசு 17:3
1104: செலொப்பியாத்துக்கு எத்தனை குமாரத்திகள் இருந்தார்கள்??
5. யோசு 17:3
1105: இஸ்ரவேல் பலத்த போது யாரை முற்றிலும் துரத்தி விடவில்லை??
கானானியரை. யோசு 17:13
1106: உங்களுக்கு மகா பராக்கிரமம் உண்டு யார் யாரிடம் கூறியது??
யோசுவா எப்பிராயீம் மற்றும் மனாசேயிடம். யோசு 17:18
1106: இஸ்ரவேல் புத்திரர் சீலோவாவில் எதை நிறுத்தினார்கள்??
ஆசரிப்பு கூடாரம். யோசு 18:1
1107: யோசுவா எவ்விடத்தில் வைத்து சீட்டு போட்டான்??
சீலோ. யோசு 18:10
1108: பெத்தேலுக்கு இன்னொரு பெயர் என்ன??
லூஸ். யோசு 18:13
1109: தீரு எப்படிப்பட்ட பட்டணமாயிருந்தது??
அரணிப்பான. யோசு 19:29
1110: இஸ்ரவேல் புத்திரர் யோசுவாவுக்கு க் கொடுத்த பட்டணத்தின் பெயர் என்ன??
திம்னாத்சேரா. யோசு 19:50
1111:திம்னாத்சேரா எங்கே உள்ளது??
எப்பிராயீமின் மலைத்தேசத்தில். யோசு 19:50
1112: கர்த்தருடைய வாக்கின்படி பட்டணத்தை பெற்றவன் யார்??
யோசுவா. யோசு 19:50
1113: நப்தலியின் மலைத்தேசம் எது??
கலிலேயா. யோசு 20:7
1114: சமபூமியின் வனாந்திரத்தில் இருந்தது எது??
பேசேர். யோசு 20:8
1115: ராமோத் எங்கே இருந்தது??
கீலேயாத். யோசு 20:8
1116: கோலான் எங்கே இருந்தது??
பாசான். யோசு 20:8
1117: தங்கள் சகோதரரை கைவிடாமல் இருந்தவர்கள் யார் என்று யோசுவா கூறினான்??
ரூபானியர், காத்தியர் மற்றும் மனாசேயின் பாதி கோத்திரத்தார். யோசு 22:1-3
1119: பாசானில் மோசே யாருக்குச் சதந்திரம் கொடுத்தான்??
மனாசேயின் பாதி கோத்திரத்துக்கு. யோசு 22:7&8
1120: சீலோ எந்த தேசத்தில் இருந்தது??
கானான். யோசு21:9
1121: கர்த்தரே தேவன் என்பதற்கு அந்தப்பீடம் நமக்குள்ளே சாட்சியாயிருக்கும் என்று சொல்லி ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் அதற்கு என்ன பெயரிட்டார்கள்??
ஏத். யோசு 22:34
1122: எதைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருக்க யோசவா இஸ்ரவேலரிடம் கூறினான்??
ஆத்துமாக்களை. யோசு 23:11
1123: யாரைப் பணிந்து கொள்ளுகிறவர்கள் சீக்கிரமாய் அழிந்து போவார்கள்??
அந்நிய தேவர்கள். யோசு 23:15-16
1124: தேராகு நதிக்கு அப்புறத்தில் இருந்த போது யாரைச் சேவித்தான்??
வேறே தேவர்களை. யோசு 24:2
1125: கர்த்தர் யாரை கானான் தேசமெங்கும் சஞ்சரிக்கப்பண்ணினார்??
ஆபிரகாமை. யோசு 24:3
1126: தனது பிள்ளைகளுடன் எகிப்துக்குப் போனவன் யார்??
யாக்கோபு. யோசு24:4
1127: யாருக்கு செவிகொடுக்க கர்த்தருக்கு சித்தமில்லாதிருந்தது??
பிலேயாம். யோசு 24:10
1127: நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் கூறியவன் யார்??
யோசுவா. யோசு 24:15
1128: யோசுவா மரணமடையும்போது எத்தனை வயதுள்ளவனாயிருந்தான் ??
110. யோசு 24:29
1129: யோசுவாவை எங்கே அடக்கம் பண்ணினார்கள்??
திம்னாத்சேரா. யோசு 24:30
1130: இஸ்ரவேல் புத்திரர் யாருடைய எலும்புகளை எகிப்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள்??
யோசேப்பு. யோசு 24:32
1131: கானானியரை எதிர்த்து யுத்தம் பண்ண யார் முதலில் புறப்பட கர்த்தர் கூறினார்??
யூதா. நியா 1:2
1132: யாருடைய பெருவிரல்களை யூத புத்திரர் தறித்துப் போட்டார்கள்??
அதோனிபேசேக். நியா 1:6
1133: நான் எப்படி செய்தேனோ அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார்??
அதோனிபேசேக். நியா 1:7
1134: கேனியன் யாருடைய மாமா??
மோசே. நியா 1:16
1135: யூதா புத்திரர் சேப்பாத் பட்டணத்துக்கு என்ன பெயரிட்டார்கள்??
ஓர்மா. நியா 1:17
1136: ஏனாக்கின் குமாரரை எபிரோனிலிருந்துத் துரத்தியவன் யார்??
காலேப். நியா 1:20
1137: ஏபூசியர் யாரோடேக் குடியிருந்தார்கள்??
பென்யமீன் புத்திரர். நியா 1:21
1138: பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனவர்கள் யார்??
யோசேப்பின் குடும்பத்தார். நியா 1:22
1139: இஸ்ரவேல் பலத்த போது யாரை முற்றிலும் துரத்தி விடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள்?
கானானியர். நியா 1:28
1140: தாண்புத்திரரை மலை தேசத்துக்கு போகும்படி நெருக்கியவர்கள் யார்??
ஏமோரியர். நியா 1:34
1141: கில்காலிலிருந்து போகீமுக்கு இஸ்ரவேலரிடம் வந்தவர் யார்??
கர்த்தருடைய தூதன். நியா 2:1
1142: கர்த்தருடைய தூதன் தங்களிடம் பேசின இடத்துக்கு இஸ்ரவேலர் என்ன பெயரிட்டார்கள்??
போகீம். நியா 2:5
1143: காயாஸ் மலை எங்கே இருக்கிறது??
எப்பிராயீமின் மலை தேசத்தில். நியா 2:9
1144: எவற்றை அறியாத ஒரு சந்ததி இஸ்ரவேலில் எழும்பியது??
கர்த்தரையும் அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையும்
நியா 2:10
1145: இஸ்ரவேலர் கர்த்தரை விட்டு எவைகளை சேவித்தார்கள்??
பாகாலையும் அஸ்தரோத்தையும். நியா 2:13
1146: இஸ்ரவேலை சோதிப்பதற்காகவும் அவர்களை யுத்தத்திற்கு பழக்குவிப்பதற்காகவும் கர்த்தர் விட்டு வைத்த ஜாதிகள் யார் யார்??
பெலிஸ்தரின் 5 அதிபதிகள் சகல கானானியர் சீதோனியர் மற்றும் ஏவியர். நியா 3:3
1147: மெசொப்பொத்தாமியாவின் ராஜாவின் பெயர் என்ன??
கூசான்ரிஷதாயீம். நியா 3:8
1148: கர்த்தர் கூசான்ரிஷதாயீமை யார் கையில் ஒப்புக்கொடுத்தார்??
ஒத்னியேல். நியா 3:10
1148: மோவாபின் ராஜா யார்??
எக்லோன். நியா 3:12
1149: பேரீச்சமரங்களின் பட்டணத்தை பிடித்தவன் யார்??
மோவாபின் ராஜா
நியா 3:13
1150: இடதுகை பழக்கமுள்ளவன் யார்??
ஏகூத்
நியா 3:15
1151: மிகவும் ஸ்தூலித்த மனுஷனாயிருந்தவன் யார்??
எக்லோன். நியா 3:17
1152: ஒரு தாற்றுக்கோலால் 600 பெலிஸ்தரை முறியடித்தவன் யார்??
சம்கார். நியா 3:31
1153: யாபீன் யாருடைய ராஜாவாயிருந்தான்??
கானானியர். நியா 4:2
1154: யாபீனுடைய சேனாபதியின் பெயர் என்ன??
சிசெரா. நியா 4:2
1155: அரோசேத் என்பது யாருடைய பட்டணம்??
புறஜாதிகள். நியா 4:2
1156: சிசெராவுக்கு எத்தனை இருப்புரதங்கள் இருந்தன??
900 நியா 4:3
1157: லபிதோத்தின் மனைவி பெயர் என்ன??
தெபொராள். நியா 4:4
1158: தெபொராள் எதின் கீழ் குடியிருந்தாள்??
தெபொராளின் பேரீச்சமரம். நியா 4:5
1159: ஓபாப் யாருடைய மாமா??
மோசே. நியா 4:11
1160: ரதத்தை விட்டிறங்கி கால்நடையாய் ஓடிப்போனவன் யார்??
சிசெரா. நியா 4:15
1161: கூடார ஆணியினால் சிசெராவை நெற்றியில் அடித்து கொன்றவள் யார்??
யாகேல். நியா 4:21
1162: இஸ்ரவேலர் நூதன தேவர்களைத் தெரிந்து கொண்டபொழுது வாசல்வரையும் வந்தது எது??
யுத்தம். நியா 5:8
1163: யாருடைய பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதியாயிருந்தது??
ரூபன். நியா 5:15
1164: எந்த மனுஷர் கப்பல்களில் தங்கியிருந்தார்கள்??
தாண். நியா 5:17
1165: கடற்கரையில் தங்கி தங்கள் குடாக்களில் தாபரித்தவர்கள் யார்??
ஆசேர் மனுஷர். நியா 5:17
1166: போர்களத்து முனையில் தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றவர்கள் யார்??
செபுலோன், நப்தலி. நியா 5:18
1167: எவை தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணின??
நட்சத்திரங்கள். நியா 5:20
1168: பூர்வநதியாகிய நதி எது??
கீசோன் நதி. நியா 5:21
1169: கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீ களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவளே என்று யாரைக் குறித்து கூறப்பட்டுள்ளது??
யாகேல். நியா 5:24
1170: தண்ணீரைக்கேட்டவனுக்குப் பாலைக் கொடுத்தவள் யார்??
யாகேல். நியா 5:26
1171: இஸ்ரவேலர் யாராலே மிகவும் சிறுமைப்பட்டார்கள்??
மீதியானியர். நியா 6:6
1172: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் யார் யாரிடம் கூறியது??
கர்த்தருடைய தூதன் கிதியோனிடம். நியா 6:12
1173: கிதியோன் தன்னோடே பேசுகிறவர் தேவரீர் என்பதற்கு என்ன காட்ட வேண்டும் என்று கேட்டான்??
ஒரு அடையாளம். நியா 6:17
1174: கிதியோன் கட்டின பலிபீடத்துக்கு என்ன பேரிட்டான்??
யெகோவா ஷாலோம். நியா 6:24
1175: கிதியோன் கட்டின பலிபீடம் எங்கே இருந்தது??
ஒப்ராவில். நியா 6:24
1176: பாகாலுக்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலே தானே சாகக்கடவன் கூறியவன் யார்??
யோவாஸ். நியா 6:31
1177 : கிதியோனுக்கு என்ன பெயரிடப்பட்டது??
யெருபாகால். நியா 6:32
1178: பயமும் திகிலும் உள்ளவர்களை திரும்பிப் போகச் சொன்னபோது திரும்பி ப் போனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு??
22000. நியா 7:3
1178: கர்த்தர் யாராலே இஸ்ரவேலை இரட்சிப்பேன் என்று கூறினார்??
தண்ணீரை நக்கிக்குடித்த 300 பேர். நியா 7:7
1179: கிதியோனின் வேலைக்காரனின் பெயர் என்ன??
பூரா. நியா 7:11
1180: எக்காளங்களை ஊதும் போது கர்த்தர் பட்டயங்களை எப்படி ஓங்கப்பண்ணினார்??
ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய். நியா 7:22
1181: மீதியானியரின் இரண்டு அதிபதிகளின் பெயர் என்ன??
ஓரேப் , சேப். நியா 7:25
1182: சேபா மற்றும் சல்முனா என்பவர்கள் யார்??
மீதியானியரின் ராஜாக்கள் . நியா 8:5
1183: பெனூவேலின் கோபுரத்தை இடித்து போட்டவன் யார்??
கிதியோன். நியா 8:17
1184: கிதியோனின் மூத்த குமாரன் பெயர் என்ன??
யெத்தேர். நியா 8:20
1185: பொன்கடுக்கன்களினால் கிதியோன் எதை உண்டாக்கினான்??
ஒரு ஏபோத்து. நியா 8:27
1186: கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிருந்தது எது??
கிதியோன் உண்டு பண்ணின ஏபோத்து. நியா 8:27
1187: கிதியோனின் குமாரர் எத்தனை பேர்??
70 பேர். நியா 8:30
1188: கிதியோனுக்கு சீகேமிலிருந்த மறுமனையாட்டியின் குமாரனின் பெயர் என்ன??
அபிமலேக்கு. நியா 8:31
1189: கிதியோன் மரித்தபின் இஸ்ரவேலர் எதை தங்களுக்கு தேவனாக வைத்து கொண்டார்கள்??
பாகால்பேரீத். நியா 8:33
1180: கிதியோனை எங்கே அடக்கம் பண்ணினார்கள்??
ஒப்ராவில். நியா 8:32
1181: அபிமெலேக்கு யாருடைய குமாரன்??
கிதியோன். நியா 9:1
1182: அபிமெலேக்கு எத்தனை பேரை ஒரே கல்லின்மேல் கொலை செய்தான்??
70. நியா 9:5
1183: யெருபாகாலின் குமாரரில் சாகாமல் தப்பியவனின் பெயர் என்ன??
யோதாம். நியா 9:5
1184: கர்வாலி மரத்தண்டையில் ராஜாவாக்கப்பட்டவன் யார்??
அபிமெலேக்கு. நியா 9:6
1185: யோதாம் சீகேமியரோடே பேசும்படிக்கு எந்த மலையின் உச்சியில் ஏறினான்??
கெரிசீம். நியா 9:7
1186: எவர்களுக்கு இடையே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவி வந்தது??
அபிமெலேக்குக்கும் சீகேமின்மனுஷருக்கும். நியா 9:23
1187: அபிமெலேக்கு சீகேம் பட்டணத்தை இடித்து விட்டு அதிலே என்ன விதைத்தான்??
உப்பு. நியா 9:45
1188: தேபேசு பட்டணத்தின் நடுவே இருந்தது என்ன??
பலத்த துருக்கம். நியா 9:51
1189: அபிமெலேக்கின் தலையின்மேல் எந்திரக்கல்லின் துண்டைப் போட்டவள் யார்??
ஒரு ஸ்திரீ. நியா 9:53
1190: அபிமெலேக்குக்குப் பிறகு இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பியவன் யார்??
தோலா. நியா 10:1
1191: யாவீர் என்பவன் யார்??
கீலேயாத்தியன். நியா 10:3
1192: முப்பது கழுதைக்குட்டிகள் மேல் ஏறும் முப்பது குமாரர் யாருக்கு இருந்தார்கள்??
யாவீருக்கு. நியா 10:4
1193: பெலிஸ்தரும் அம்மோன் புத்திரரும் இஸ்ரவேலை எத்தனை வருஷம் நெருக்கினார்கள்??
18 வருஷம். நியா 10:8
1194: கீலேயாத்தியனான யெப்தா யார்??
பலத்த பராக்கிரமசாலி. நியா 11:1
1195: யெப்தா தன் சகோதரரை விட்டு ஓடிப்போய் எங்கே குடியிருந்தான்??
தோப் தேசத்தில். நியா 11:3
1196: யாகாசிலே பாளயமிறங்கி இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணியவன் யார்??
சீகோன். நியா 11:20
1197: யெப்தா கர்த்தருக்கு முன்பாக என்ன பண்ணினான்??
பொருத்தனை. நியா 11:30
1198: என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய் யார் யாரிடம் கூறியது??
யெப்தா தன் மகளிடம். நியா 11:35
1199: தான் பண்ணியிருந்த பொருத்தனையின்படி தன் மகளுக்கு செய்தவன் யார்??
யெப்தா. நியா 11:39
1200: இஸ்ரவேலின் குமாரத்திகள் ஒவ்வொரு வருஷமும் எத்தனை நாள் யெப்தாவின் குமாரத்திக்காக புலம்புவர்கள்??
4 நாள். நியா 11:40
1201: கீலேயாத்தியர் தப்பிப்போகிற எப்பிராயீமரிடம் எந்த வார்த்தையை உச்சரிக்கும்படி கூறினார்கள்??
ஷிபோலேத். நியா12:5&6
1202: யெப்தாவுக்குப் பிறகு இஸ்ரவேலை நியாயம் விசாரித்தவன் யார்??
இப்சான். நியா 12:8
1203: இப்சான் எந்த ஊரைச் சேர்ந்தவன்??
பெத்லெகேம். நியா12:8
1204: 30 குமாரர்30 குமாரத்திகள் யாருக்கு இருந்தார்கள்??
இப்சான். நியா 12:9
1205: இப்சானுக்குப் பின் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தவன் யார்??
ஏலோன். நியா12:11
1206: ஏலோன் என்பவன் யார்??
செபுலோனியன். நியா 12:11
1207: ஆயலோன் ஊர் எந்த தேசத்தில் இருந்தது??
செபுலோன் தேசம். நியா 12:12
1208: ஏலோனுக்குப் பிறகு இஸ்ரவேலை நியாயம் விசாரித்தவன் யார்??
அப்தோன். நியா 12:13
1209: பிரத்தோனியன் யார்??
அப்தோன். நியா 12:13
1210 : பிரத்தோன் எந்த தேசத்தில் இருந்தது??
எப்பிராயீம். நியா 12:15
1211: யாருடைய மனைவி மலடியாயிருந்தாள்??
மனோவா. நியா 13:2
1212: மனோவா எந்த ஊரைச் சேர்ந்தவன்??
சோரா. நியா 13:2
1213: மனோவாவுக்கு பிறக்கப்போகிற குமாரனின் தலையின்மேல் எது படக்கூடாது??
சவரகன் கத்தி. நியா 13:5
1214: உம்முடைய நாமம் என்ன யார் யாரிடம் கேட்டது??
மனோவா கர்த்தருடைய தூதனிடம். நியா 13:17
1215: கர்த்தருடைய தூதன் தமது நாமத்தை என்ன என்று கூறினார்??
அது அதிசயம். நியா 13:18
1216: நாம் தேவனைக் கண்டோம் சாகவே சாவோம் கூறியவன் யார்??
மனோவா. நியா 13:22
1216: மனோவாவின் குமாரன் பெயர் என்ன??
சிம்சோன். நியா 13:24
1217: திம்னாத்துக்கு போனவன் யார்??
சிம்சோன். நியா 14:1
1218: சிம்சோன் திம்னாத்துக்குப் போகும் போது அவனுக்கு எதிராக வந்தது எது??
கெர்ச்சிக்கிற பால சிங்கம். நியா 14:5
1218: விருந்து நாட்களில் சிம்சோனோடு எத்தனை தோழர்கள் இருந்தார்கள்??
30. நியா 14:11
1219: சிம்சோன் கூறிய விடுகதை என்ன??
பட்ச்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும் பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது. நியா 14:14
1220: சிம்சோனின்விடுகதையின் விடை என்ன??
தேனைப் பார்க்கிலும் மதுரமானது என்ன சிங்கத்தைப் பார்க்கிலும் பலமானது என்ன. நியா 14:18
1221: சிம்சோன் எத்தனை நரிகளைப் பிடித்து வாலோடே வால் சேர்த்துக்கட்டினான்??
300. நியா 15:4
1222: சிம்சோன் கழுதையின் தாடை எலும்பினால் எத்தனை பேரைக் கொன்றான்??
1000. நியா 15:15
1223: சிம்சோன் லேகிக்கு என்ன பெயரிட்டான்??
ராமாத்லேகி. நியா 15:17
1224: தேவன் எதிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்??
லேகி. நியா 15:19
1225: சிம்சோன் லேகியிலுள்ள பள்ளத்துக்கு என்ன பெயரிட்டான்??
எந்நக்கோரி. நியா 15:19
1226: சிம்சோன் சிநேகமாயிருந்த ஸ்திரீயின் பெயர் என்ன??
தெலீலாள். நியா 16:4
1227: தெலீலாள் எங்கே குடியிருந்தாள்??
சோரேக் ஆற்றங்கரையில். நியா 16:4
1228: என் தலை சிரைக்கப்பட்டால் என் பலம் என்னை விட்டுப்போம் யார் யாரிடம் கூறியது??
சிம்சோன் தெலீலாளிடம். நியா 16:17
1229: சிம்சோனின் பலம் எதினால் அவனைவிட்டு நீங்கினது??
அவன் தலைமயிர் சிரைக்கப்பட்டதினால். நியா 16:19
1230: சிம்சோனுக்கு எத்தனை வெண்கல விலங்குகள் அணிவித்தார்கள்??
2 நியா 16:21
1231: இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும் யார் யாரிடம் கூறியது??
சிம்சோன் கர்த்தரிடம். நியா 16:28
1232: யார் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைவிட அவன் சாகும்போது கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்??
சிம்சோன். நியா 16:30
1233: மீகாவின் தாயிடமிருந்து எத்தனை வெள்ளிக்காசுகள் காணாமல் போனது??
1100 நியா 17:2
1234: யாருக்கு இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை??
தாண் கோத்திரத்தாருக்கு. நியா 18:1
1235: பூமியிலுள்ள சகலவஸ்துவும் குறைவில்லாமலிருக்கிற இடம் எது??
லாயீசு. நியா 18:10
1236: மக்னிதான் என்பது எதன் பெயர்??
கீரியாத்யாரீம். நியா 18:12
1237: வேறே மனுஷரோடே சம்பந்தமில்லாமலிருந்தவர்கள் யார்??
லாயீசின் மனுஷர். நியா 18:28
1238: லாயீஸ் பட்டணம் எதற்குச் சமீபமான பள்ளத்தாக்கில் இருந்தது??
பெத்ரேகோபு. நியா 18:28
1239: தன் மறுமனையாட்டியை அழைத்து வர அவள் தகப்பன் வீட்டுக்குப் போனவன் யார்??
லேவியன். நியா 19:3
1240: லேவியன் இராத்தங்கும்படி எந்த பட்டணத்துக்கு போனான்??
கிபியா. நியா 19:13-15
1241: கிபியாவில் குடியிருந்தவர்கள் எந்தக் கோத்திரத்தார்??
பென்யமீன். நியா 19:16
1242: வீதியிலே மாத்திரம் இராத்தங்க வேண்டாம் யார் யாரிடம் கூறியது??
கிழவன் லேவியனிடம். நியா 19:20
1243: கிபியா எந்த நாட்டில் இருந்தது??
பென்யமீன் நாட்டில். நியா 20;4
1245: சீட்டுப்போட்டு எதற்கு விரோதமாகப் போவோம் என்று இஸ்ரவேலர் கூறினார் கள்??
கிபியா. நியா20:9
1245: லேவிய வாலிபனின் மறுமனையாட்டியை அவமானப்படுத்தியவர்கள் யார்??
கிபியா பட்டணத்தார். நியா 20:5
1246: கிபியா ஜனங்களில் இடதுகை வாக்குள்ளவர்கள் எத்தனை பேர்??
700 நியா 20:15
1247: இஸ்ரவேலர் பென்யமீனரோடு யுத்தம் பண்ணின நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் நின்றவன் யார்??
பினெகாஸ். நியா 20:28
1248: இஸ்ரவேல் புத்திரர் யாரை நினைத்து மனஸ்தாபப்பட்டார்கள்?
பென்யமீன். நியா 21:6
1249: யாரில் ஒருவரும் மிஸ்பாவுக்கு வரவில்லை??
யாபேசின் குடிகளில். நியா 21:8
1250: எங்கே வருஷம் தோறும் கர்த்தருக்கு பண்டிகை கொண்டாடப்படும்??
சீலோவில். நியா 21:19
1251: நியாதிபதிகளின் காலத்தில் தேசத்தில் உண்டானது என்ன??
பஞ்சம். ரூத் 1:1
1252: மோவாபுக்குப் போய் குடியிருந்த பெத்லகேம் ஊரானின் பெயர் என்ன??
எலிமெலேக்கு. ரூத் 1:2
1253: எலிமலேக்கின் மனைவியின் பெயர் என்ன??
நகோமி. ரூத்1:2
1254: எலிமலேக்கின் குமாரர் பெயர் என்ன??
மக்லோன் கிலியோன். ரூத் 1:2
1255: எலிமலேக்கின் குமாரர் எங்கே பெண் கொண்டார்கள்??
மோவாபில். ரூத் 1:4
1256: எலிமலேக்கின் மருமக்கள் பெயர்கள் என்ன??
ஓர்பாள் ரூத்
1257: ஓர்பாள் ரூத் என்பவர்கள் எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள்??
மோவாப். ரூத் 1:4
1258: எலிமலேக்கின் குடும்பத்தார் எத்தனை வருஷம் மோபாவில் வாசம் பண்ணினார்கள்??
10 வருஷம். ரூத் 1:4
1359: தன் குமாரரையும் புருஷனையும் இழந்து தனித்தவளானவள் யார்??
நகோமி. ரூத் 1:5
1260: நாகோமி தன் மருமக்களுடன் எங்கே திரும்பி வரும்படி புறப்பட்டாள்??
யூதா தேசத்துக்கு. ரூத் 1:6&7
1261: கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதென்று கூறியவள் யார்??
நகோமி. ரூத் 1:13
1262 : தன் மாமியை முத்தமிட்டுத் திரும்பிப் போனவள் யார்??
ஓர்பாள். ரூத் 1:14
1263: உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம் உம்முடைய தேவன் என்னுடைய தேவன் யார் யாரிடம் கூறியது??
ரூத் நகோமியிடம். ரூத் 1:16
1264: தன்னை எப்படி சொல்லும்படி நகோமி பெத்லகேம் ஊராரிடம் கூறினாள்??
மாராள். ரூத் 1:20
1265: நகோமி பெத்லகேமுக்கு திரும்பி வருகையில் எது அறுப்பின் துவக்க காலமாயிருந்தது??
வாற்கோதுமை. ரூத் 1:22
1266: போவாஸ் யாருடைய உறவு முறையாயிருந்தான்??
எலிமலேக்கின். ரூத் 2:1
1267: போவாஸ் எப்படிப்பட்டவனாயிருந்தான்??
மிகுந்த ஆஸ்தியுள்ளவன். ரூத் 2:1
1268: இந்த பெண்பிள்ளை யாருடையவள் யார் யாரிடம் கேட்டது??
போவாஸ் வேலைக்காரனிடம். ரூத் 2:5
1269: ரூத்துக்கு கர்த்தராலே எப்படிப்பட்ட பலன் கிடைக்குமென்று போவாஸ் கூறினான்??
நிறைவான. ரூத் 2:12
1270: ரூத் யார் என்பதை ஊராரெல்லாரும் அறிவார்கள் என்று போவாஸ் கூறினான்??
குணசாலி. ரூத் 3:11
1271: போவாஸ் ரூத்திற்குக் கொடுத்த வாற்கோதுமையின் அளவு என்ன??
ஆறுபடி. ரூத் 3:15
1272: அந்த மனுஷன் இன்றைக்கு இந்த காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் யாரைக் குறித்து கூறப்பட்டது??
போவாஸ். ரூத் 3:18
1273: எதைக் கழற்றிப்போடுவது இஸ்ரவேலில் வழங்கப்பட்ட உறுதிப்பாடாயிருந்தது?
பாதரட்சையை. ரூத் 4:7
1274: கர்த்தரால் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டு பேர் யார்??
ராகேல் லேயாள். ரூத் 4:11
1275: போவாஸ் எங்கே பாக்யவானாயிருப்பான் என்று கூறப்பட்டது??
எப்பிராத்தா. ரூத் 4:11
1276: போவாசின் வீடு யாருடைய வீட்டைப்போல் ஆகக்கடவது என்று கூறினார்கள்??
பேரேஸ். ரூத்4:12
1277: போவாஸ் யாரை விவாகம் பண்ணினான்??
ரூத் 4:13
1278: போவாசின் குமாரனை வளர்க்கிற தாயானவள் யார்??
நகோமி. ரூத் 4:16
1279: போவாசின் பிள்ளைக்கு என்ன பேரிடப்பட்டது??
ஓபேத். ரூத் 4:17
1280: தாவீதின் தாத்தா யார்??
ஓபேத் . ரூத் 4:17
1281: ராமதாயீம் ஊரின் இன்னொரு பெயர் என்ன??
சோப்பீம். 1சாமு 1:1
1282: ராமதாயீம் எத்தேசத்தில் இருந்தது??
எப்பிராயீம் மலைத்தேசம். 1 சாமு1:1
1283: எல்க்கானா எந்த ஊரைச் சேர்ந்தவன்??
ராமதாயீம். 1 சாமு 1:1
1284: எல்க்கானா யாருடைய குமாரன்??
எரோகாம். 1 சாமு 1:1
1285: ஏலி என்பவன் யாராயிருந்தான்??
கர்த்தரின் ஆசாரியன். 1 சாமு 1:3
1286: கர்த்தருடைய சந்நிதியில் இருதயத்தை ஊற்றிய பின் துக்கமுகமாயிராதவள் யார்??
அன்னாள். 1 சாமு 1:18
1287: கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கப்பட்டவன் யார்??
சாமுவேல். 1 சாமு 1:28
1288: பூமியின் அஸ்திபாரங்கள் மேல் கர்த்தர் எதை வைத்தார்??
பூச்சக்கரம். 1 சாமு 2:8
1289: கர்த்தர் யாருடைய பாதங்களை க் காப்பார்??
தமது பரிசுத்தவான்கள். 1 சாமு 2:9
1290: யாருடைய குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்??
ஏலியின் குமாரர். 1சாமு 2:12
1291: ஏலியின் குமாரர் யார்??
ஓப்னி பினெகாஸ். 1சாமு 1:3
1292: யாருடைய பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது??
ஏலியின் குமாரர். 1 சாமு 2:17
1293: அன்னாளுக்கு எத்தனை குமாரத்திகள் பிறந்தார்கள்??
இரண்டு. 1 சாமு 2:21
1294: அன்னாளுக்கு மொத்தம் எத்தனை பிள்ளைகள்??
6 1 சாமு 2:21
1295: கர்த்தர் யாரைச் சங்கரிக்க சித்தமாயிருந்தார்??
ஏலியின் குமாரரை. 1சாமு 2:25
1296: ஏலியின் நாட்களில் ஆபூர்வமாயிருந்தது எது??
கர்த்தருடைய வசனம். 1 சாமு 3:1
1396: கர்த்தர் எதை தரையிலே விழுந்து போகவிடவில்லை??
தமது வார்த்தைகளில் ஒன்றாகிலும். 1 சாமு: 3:19
1297: எது பாளயத்தில் வரும் போது இஸ்ரவேலர் மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள்??
கர்த்தருடைய உடன்படிக்கைபெட்டி. 1 சாமு 4:5
1298: பிடரி முறிந்து செத்துப்போனவன் யார்??
ஏலி. 1 சாமு 4:18
1299: பினெகாசின் மனைவி என்ன சொல்லி தன் குமாரனுக்கு இக்கபோத் என்று பெயரிட்டாள்??
மகிமை இஸ்ரவேலை விட்டுப்போயிற்று. 1 சாமு 4:21
1300: பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியை எங்கே கொண்டு போனார்கள்??
அஸ்தோத்திற்கு. 1 சாமு 5:1
1301: பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியை எங்கே வைத்தார்கள்??
தாகோனின் கோவிலில். 1 சாமு 5:2
1302: தேவனுடைய பெட்டியை எந்த பட்டணமட்டும் சுற்றிக்கொண்டு போக பெலிஸ்தரின் அதிபதிகள் கூறினார்கள்??
காத். 1 சாமு 5:8
1303: கர்த்தர் காத் பட்டணத்தில் சிறியோர் முதல் பெரியோர் வரை எதினால் வாதித்தார்??
மூலவியாதி. 1 சாமு 5:9
1304: எந்த பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது??
எக்ரோன். 1 சாமு 5:11
1305: கர்த்தருடைய பெட்டியைப்பார்த்து சந்தோஷப்பட்டவர்கள் யார்??
பெத்ஷிமேசின் மனுஷர். 1 சாமு 6:13
1306: வண்டில் பெத்ஷிமேசில் யாருடைய வயலில் நின்றது??
யோசுவாவின். 1 சாமு 6:14
1307: கர்த்தர் ஏன் பெத்ஷிமேசின் ஜனங்களை அடித்தார்??
கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால். 1 சாமு 6:19
1309: கர்த்தருடைய பெட்டியை யாருடைய வீட்டில் வைத்தார்கள்??
அபினதாப். 1 சாமு 7:1
1310: கர்த்தருடைய பெட்டி கீரியாத்யாரீமில் எவ்வளவு நாள் இருந்தது??
20 வருஷம். 1 சாமு 7:2
1311: சாமுவேல் மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவே நிறுத்தின கல்லுக்கு என்ன பெயரிட்டான்??
எபெனேசர். 1 சாமு 7:12
1312: எபெனேசர் என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன??
இம்மட்டும் கர்த்தர் உதவி செய்தார். 1 சாமு7:12
1313: சாமுவேலின் மூத்த குமாரன் பெயர் என்ன??
யோவேல். 1சாமு8:2
1314: சாமுவேலின் இளைய மகன் பெயர் என்ன??
அபியா 1: சாமு 8:2
1315: நியாயத்தை புரட்டினவர்கள் யார்??
சாமுவேலின் குமாரர். 1 சாமு 8:4
1316: சவுல் யாருடைய குமாரன்??
கீஸ் 1 சாமு 9:2
1317: இஸ்ரவேல் புத்திரரில் யாரைப்பார்க்கிலும் சவுந்தர்யவான் இல்லை??
சவுல் 1 சாமு 9:2
1318: தீர்க்கதரிசி என்னும் வார்த்தைக்கு முற்காலத்தில் இருந்த பெயர் என்ன??
ஞானதிஷ்டிக்காரன். 1 சாமு 9:9
1319: இஸ்ரவேல் கோத்திரங்களில் சிறியதான கோத்திரம் எது??
பென்யமீன் 1 சாமு 9:21
1320: ராகேலின் கல்லறை எங்கே இருந்தது??
செல்சாகில். 1 சாமு 10:2
1321: யாபேசை முற்றிக்கைப் போட்டவன் யார்??
நாகாஸ் 1 சாமு 11:1
1322: யாபேஸ் ஊர் எங்கே இருந்தது??
கீலேயாத்தில். 1 சாமு 11:1
1323: சவுலின் ஊர் எது??
கிபியா. 1 சாமு 11:4
1324: ஜனங்கள் கில்காலில் யாரை ராஜாவாக ஏற்படுத்தினார்கள்??
சவுலை 1 சாமு 11:15
1325: ஆத்சோரின் சேனாபதி யார்??
சிசெரா. 1 சாமு 12:9
1326: கர்த்தர் எவர்களை அனுப்பி இஸ்ரவேலரை அவர்களின் சத்துருக்கள் கைக்கு நீங்கலாக்கி ரட்சித்தார்??
எருபாகால் பேதான் யெப்தா மற்றும் சாமுவேல். 1: சாமு 12:11
1327: நானும் ஜனங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன் என்று சொன்னவர் யார்??
சாமுவேல். 1 சாமு 12:23
1328: கேபாவில் தாணயம் இருந்த பெலிஸ்தரை முறிய அடித்தவன் யார்??
யோனத்தான். 1 சாமு 13:3
1329: சாமுவேல் குறித்த நாளில் வராததைக்கண்டு துணிந்து சர்வாங்க தகனபலியைச் செலுத்தியவன் யார்??
சவுல். 1 சாமு 13:9
1330 : கிபியாவின் கடைசி முனை எது??
மிக்ரோன். 1 சாமு 14:2
1331: மிக்ரோனில் மாதுளமரத்தின் கீழ் இருந்தவன் யார்??
சவுல். 1 சாமு 14:2
1332: போசேஸ் சேனே என்பது எவைகளின் பெயர்??
செங்குத்தான பாறைகள். 1 சாமு 14:4
1333: இஸ்ரவேலர் காட்டிலே வந்த போது ஒழுகிக் கொண்டிருந்தது எது??
தேன் 1சாமு 14:26
1334: சவுலின் குமாரத்திகள் யார்??
மேராப், மீகாள் 1 சாமு 14:49
1335: சவுலின் மனைவியின் பெயர் என்ன??
அகினோவாம். 1 சாமு 14:50
1336: சவுலின் மாமனார் பெயர் என்ன??
அகிமாஸ். 1 சாமு 14:50
1337: சவுலின் சேனாபதியின் பெயர் என்ன??
அப்னேர் 1 சாமு 14:50
1338: இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்த போது அவர்களுக்கு வழிமறித்தவன் யார்??
அமலேக்கு. 1 சாமு 15:2
1339: அமலேக்கியரின் ராஜாவின் பெயர் என்ன??
ஆகாக் 1 சாமு 15:8
1340: கர்மேலில் தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டினவன் யார்??
சவுல் 1 சாமு 15:12
1341: பலியைப்பார்க்கிலும் உத்தமமானது எது??
கீழ்ப்படிதல். 1 சாமு 15:22
1342: எது பில்லிசூனிய பாவத்திற்குச் சரியாய் இருக்கிறது??
இரண்டகம் பண்ணுதல். 1 சாமு 15:23
1343: அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருப்பது எது??
முரட்டாட்டம்பண்ணுதல். 1 சாமு 15:23
1344: ராஜாவாயிராதபடிக்கு கர்த்தரால் புறக்கணிக்கப்பட்டவன் யார்??
சவுல். 1 சாமு 15:23
1345: மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்று கூறினவன் யார்??
ஆகாக். 1 சாமு 15:32
1346: ஈசாய் எந்த ஊரைச் சேர்ந்தவன்??
பெத்லெகேம். 1 சாமு 16:1
1347: நான் இவனைப் புறக்கணித்தேன் கர்த்தர் யாரைக்குறித்து கூறினார்??
எலியாப். 1 சாமு 16:7
1348: தாவீது ஈசாயின் எத்தனையாவது குமாரன்??
8 ஆவது. 1 சாமு 16:11
1349: கோலியாத்தின் உயரம் எவ்வளவு??
ஆறுமுழம் ஒரு ஜாண். 1 சாமு 17:4
1350: சவுலின் நாட்களில் வயது சென்ற கிழவனாய் மதிக்கப்பட்டவன் யார்??
ஈசாய் 1 ,சாமு 17:12
1351 : தன் குமாரருக்கு அப்பங்களும் பயிறும் கொடுத்து அனுப்பியவன் யார்??
ஈசாய். 1 சாமு 17:17
1352: நான் வந்ததற்கு முகாந்திரம் இல்லையா? ,கூறியவன் யார்??
தாவீது. 1 சாமு 17:32
1353: தாவீது ஆற்றிலிருந்து எத்தனை கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்தான்??
5 1 சாமு 17: 40
1354: நான் நாயா கேட்டவன் யார்??
கோலியாத். 1 சாமு 17:43
1355: தாவீது பெலிஸ்தனை எதினால் மடங்கடித்து அவனைக் கொன்று போட்டான்??
ஒரு கவண் ஒரு கல். 1 சாமு 17:50
1355: தாவீதை நேசித்த சவுலின் குமாரத்தி யார்??
மீகாள். 1 சாமு 18:20
1356: என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால் நீரே என்னைக் கொன்று போடும் யார் யாரிடம் கூறியது??
தாவீது யோனத்தானிடம். 1 சாமு 20:8
1357: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே யார் யாரைப் பார்த்து கூறியது??
சவுல் யோனத்தானை. 1 சாமு 20:30
1358 : தாவீது நோபில் இருந்த யாரிடத்துக்குப் போனான்??
அகிமலேக்கு. 1 சாமு 21:1
1359: கோலியாத்தின் பட்டயம் எதிலே சுருட்டி வைக்கப்படாடிருந்தது??
புடவையில். 1 சாமு 21:9
1360: காத்தின் ராஜாவின் பெயர் என்ன??
ஆகீஸ். 1 சாமு21:10
1361: ஆகீஸ் மற்றும் அவன் ஊழியக்காரரிடத்தில் தாவீது தன்னை யாரைப்போல காண்பித்தான்??
பித்தம்கொண்டவனைப்போல. 1 சாமு 21:13
1362: ஒடுக்கப்பட்டவர்கள் கடன்பட்டவர்கள் முறுமுறுக்கிறவர்களுக்குத் தலைவனானவன் யார்??
தாவீது. 1 சாமு 22:2
1363: தாவீதை அகிமலேக்கிடத்தில் வரக்கண்டேன் என்று சவுலிடம் கூறியவன் யார்??
தோவேக்கு. 1 சாமு 22:9
1364: தோவேக்கு எத்தனை ஆசாரியர்களை கொன்றான்??
85 1 சாமு 22:18
1365: கொல்லப்படாமல் தப்பின ஒரு ஆசாரியன் யார்??
அபியத்தார். 1 சாமு 22:20
1366: நீ என் ஆதரவில் இரு என்று தாவீது யாரிடம் கூறினான்??
அபியத்தார். 1 சாமு 22: 23
1367: தாவீது எந்த வனாந்திரத்தின் காட்டில் தனித்திருந்தான்??
சீப் 1 சாமு 23:14
1368: தாவீதை மகா தந்திரவாதி என்று கூறியவன் யார்??
சவுல் 1: சாமு 23:22
1369: சவுல் தாவீதை பின் தொடருகிறதை விட்டு திரும்பிப்போன இடத்துக்கு என்ன பேரிடப்பட்டது??
சேலா அம்மாலிகோத். 1 சாமு 23:28
1370: ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும் என்பது எது??
முதியோர் மொழி. 1 சாமு 24:13
371: மகாபாரிக் குடித்தனக்காரனாய் இருந்தவன் யார்??
நாபால். 1 சாமு 25:2
1372: நாபாலின் மனைவியின் பெயர் என்ன??
அபிகாயில். 1 சாமு 25:3
1373: முரடனும் தூராகிருதனுமாயிருந்தவன் யார்??
நாபால். 1சாமு 25:3
1374: நாபால் இறந்தபின் அபிகாயில் யாருக்கு மனைவியானாள்??
தாவீது. 1 சாமு 25:42
1375: யெஸ்ரயேல் ஊரில் தாவீது விவாகம்பண்ணியிருந்த பெண்ணின் பெயர் என்ன??
அகினோவாம். 1 சாமு 25:43
1376: சவுல் தாவீதின் மனைவியாகிய மீகாளை யாருக்கு கொடுத்தான்??
பல்த்தி. 1 சாமு 25:44
1377: ராஜாவுக்கு நேராக கூக்குரலிடுகிற நீ யார்? யார் யாரிடம் கேட்டது??
அப்னேர் தாவீதிடம். 1 சாமு 26:14
1378: இஸ்ரவேலின் ராஜா எதை தேட வந்தாரோ என்று தாவீது கூறினான்??
ஒரு தெள்ளுப்பூச்சியை. 1 சாமு 26:20
1378: ஆகிஸ் தாவீதுக்குக் கொடுத்த ஊரின் பெயர் என்ன??
சிக்லாக். 1 சாமு 27:6
1379: யார் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது அவர் அவனுக்கு மறு உத்தரவு அருளவில்லை??
சவுல். 1 சாமு 28:6
1380: தேவனும் என்னைக் கைவிட்டார் கூறியவன் யார்??
சவுல். 1 சாமு 28:15
1381: ஆகீசின் பார்வைக்கு தேவனுடைய தூதனைப்போல பிரியமானவன் யார்??
தாவீது. 1 சாமு 29:9
1382: சிக்லாகை கொள்ளையடித்து அக்கினியால் சுட்டெரித்தவர்கள் யார்??
அமலேக்கியர். 1 சாமு 30:1
1383: அமலேக்கியரை முறிய அடித்தவன் யார்??
தாவீது. 1 சாமு 30:17
1384: இஸ்ரவேலர் எந்த மலையில் வெட்டுண்டு விழுந்தார்கள்??
கில்போவா. 1 சாமு 31:2
1385: சவுலின் குமாரரில் எத்தனை பேரை பெலிஸ்தர் வெட்டிப்போட்டார்கள்??
3 1 சாமு 31:3
1386: சவுலை குத்திப்போட பயந்து மறுத்தவன் யார்??
சவுலின் ஆயுததாரி. 1 சாமு 31:4
1387: சவுல் எதை நட்டு அதின் மேல் விழுந்தான்??
பட்டயம். 1 சாமு 31:4
1388: சவுலின் ஆயுதங்களை பெலிஸ்தர் எங்கே வைத்தார்கள்??
அஸ்தரோத்தின் கோவிலில். 1 சாமு 31:10
1389: பெலிஸ்தர் சவுலின் உடலை எங்கே தூக்கிப்போட்டார்கள்??
பெத்சானின் அலங்கத்தில். 1 சாமு 31:10
1390: சவுல் மற்றும் அவன் குமாரரின் எலும்புகளை எங்கே உள்ள தோப்பில் அடக்கம் பண்ணினார்கள்??
யாபேஸ். 1 சாமு 31: 13
1391: சவுலைக் கொன்றவன் யார்??
வாலிபனான அமலேக்கியன். 2: சாமு 1:10
1392: எந்த மலையைப் பார்த்து பனியும் மழையும் பெய்யாமல் இருக்க வேண்டும் எனத் தாவீது புலம்பல் பாடினான்??
கில்போவா மலைகளில். 2 சாமு 1:21
1393: கொலையுண்டவர்களின் இரத்தத்தை குடியாமல் யாருடைய வில் பின்வாங்கினதில்லை??
யோனத்தானின் வில். 2 சாமு 1:22
1394: மரணத்திலும் பிரிந்து போகாதவர்கள்யார்??
சவுலும் யோனத்தானும். 2 சாமு 1:23
1395: தாவீதுக்கு வெகு இன்பமாயிருந்தவன் யார்??
யோனத்தான். 2 சாமு 1:26
1396: எப்ரோனிலே தாவீது யாருக்கு ராஜாவாயிருந்தார்??
யூதாவின் மனுஷருக்கு. 2 சாமு 2:4
1397: சவுலை அடக்கம் பண்ணினவர் யார்??
யாபேசின் மனுஷர்கள். 2 சாமு 2:4
1398: சவுல் மரித்தபின்பு எந்த வம்சத்தார் தாவீதை ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள்??
யூதா வம்சத்தார். 2 சாமு 2:7
1399: சவுலின் படைத்தலைவன் பெயர் என்ன??
அப்னேர். 2 :சாமு 2:8
1400: இஸ்போசேத் யாருடைய மகன்??
சவுல். 2 சாமு 2:8
1401 : எல்காத் அசூரிம் எந்த இடத்தில் இருக்கிறது??
கிபியோனில். 2 சாமு 2:16
1402: எல்காத் அசூரிம் என்ற பெயர் வரக் காரணம் என்ன??
சேவர்கள் ஒருமித்து விழுந்ததினால். 2 சாமு 2:16
1403: கலைமானைப் போல ஓடக்கூடியவன் யார் ??
ஆசகேல். 2 சாமு 2:18
1404: கீயாவு எந்த வனாந்திரத்தில் உள்ளது??
கிபியோன் வனாந்திரத்தில். 2 சாமு 2:24
1405: பட்டயத்தால் முடிவிலே எது உண்டாகும்??
கசப்பு உண்டாகும். 2 சாமு 2:26
1406: தன் தகப்பன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டவன் யார்??
ஆசகேல். 2 சாமு 2: 32
1407: வர வர பெலத்தவன் யார்??
தாவீது. 2 சாமு 3:1
1408: யார் வர வர பெலவீனப்பட்டனர்??
சவுலின் குடும்பத்தார். 2 சாமு 3:1
1409: கீலேயாபின் தாயின் பெயர் என்ன??
அபிகாயில். 2 சாமு 3:3
1410 : தாவீதின் மூன்றாம் குமாரன் பெயர் என்ன??
தல்மாய். 2 சாமு 3:3
1411:அபிகாயிலின் குமாரத்தியின் பெயர் என்ன??
மாக்காள். 2 சாமு 3:3
1412 : தாவீதின் இரண்டாம் மகன் பெயர் என்ன??
கீலேயாப். 2 சாமு 3:3
1413: தாவீதின் நாட்களில் அவனுக்கு எப்ரோனில் பிறந்த குமாரர்கள் எத்தனை??
ஆறு. 2 சாமு 3:5
1414: சவுலின் மறுமனையாட்டியின் பெயர் என்ன??
ரிஸ்பாள். 2 சாமு 3:7
1415: பெலிஸ்தரின் நூறு நுனித்தோலை பரிசாக கொடுத்து யாரை தாவீது விவாகம் பண்ணியிருந்தான்??
மீகாளை. 2 சாமு 3:14
1416: சவுலின் குமாரனுக்கு இருந்த படைத்தலைவரின் பெயர் என்ன??
பானா ரேகாப். 2 சாமு 4:2
1417: அவசரத்தில் ஓடிப் போய் விழுந்து இரு கால்களும் முடவனான யோனத்தானின் மகன் பெயர் என்ன??
மேவிபோசேத். 2 சாமு 4:4
1418: தாவீது ராஜாவாகும் போது அவனுக்கு வயது என்ன??
முப்பது. 2 சாமு 5: 4
1419: தாவீது எப்ரோனிலே யூதாவின் மேல் எத்தனை வருஷம் ராஜாவாக அரசாண்டான்??
ஏழுவருஷமும் ஆறுமாதமும். 2 சாமு 5:5
1420: தாவீது சமஸ்த இஸ்ரவேலின் மேல் எருசலேமில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்??
முப்பத்து மூன்று வருஷங்கள். 2 சாமு 5:5
1421: தாவீது பிடித்த சீயோன் கோட்டை எதாக மாறியது??
தாவீதின் நகரமாக மாறியது. 2 சாமு 5:7
1422: தாவீது நாளுக்கு நாள் விருத்தியடையக் காரணம் என்ன??
சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடிருந்தார். 2சாமு 5:10
1423 : ஈராம் எந்த நாட்டின் ராஜா ??
தீருவின் ராஜா. 2 சாமு 5:11
1424: யார் நிமித்தம் தாவீதின் ராஜ்யத்தை கர்த்தர் உயர்த்தினார் என்று தாவீது நம்பினான்??
கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம். 2 சாமு 5:12
1425: தாவீதின் சத்துருக்கள் தாவீதுக்கு முன்பாக உடைந்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி அந்த இடத்துக்குத் தாவீது என்ன பெயர் வைத்தான்??
பாகால் பிராசீம். 2 சாமு 5:20
1426: தேவனுடைய பெட்டி யாருடைய வீட்டில் இருந்தது??
அபினதாபின் வீட்டில். 2 சாமு 6:3
1427: தேவனுடைய பெட்டியைசுமந்து வரும் புது ரதத்தை நடத்தினவர்கள் யார்??
ஊசாவும் அகியோவும். 2 சாமு 6: 3
1428: மாடுகள் மிரண்டு பெட்டி அசைந்ததால் பெட்டியை தன் கையை நீட்டிப் பிடித்தவன் யார்??
ஊசா. 2 சாமு 6:6
1429: ஊசாவை கர்த்தர் எதற்காக அடித்தார்??
துணிவுடன் பெட்டியை தொட்டதால். 2 சாமு 6:7
1430: ஊசாவை கர்த்தர் அடித்ததினால் விசனமடைந்து தாவீது ஊசா மரித்த இடத்திற்கு என்ன பேரிட்டான்??
பேரேஸ் ஊசா. 2 சாமு 6:8
1431: கர்த்தருடைய பெட்டியை தாவீதின் நகரத்தில் கொண்டு வர மனதில்லாத தாவீது அதை எங்கு வைத்தான்??
கித்தியனாகிய ஓபேத் ஏதேமின் வீட்டில். 2 சாமு 6:10
1432: கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்தில் பிரவேசிக்கிற போது பலகணிவழியாய் அதை பார்த்தது யார்??
சவுலின் குமாரத்தி மீகாள். 2 சாமு 6:16
1433: கர்த்தருக்கு முன்பாக தாவீது குதித்து நடனம் பண்ணினதைக் கண்ட மீகாள் தாவீதை என்ன செய்தாள்??
தன் இருதயத்தில் அவனை அவமதித்தாள். 2 ,சாமு 6:16
1434: தான் மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லாதிருந்தவள் யார்??
மீகாள். 2 சாமு 6:22
1435: மீகாள் பிள்ளை இல்லாதிருக்க காரணம் என்ன??
தாவீதை குறைவாய் பேசினதால். 2 சாமு 6:23
1436: எது திரைகளின் நடுவே வாசமாயிருந்தது??
தேவனுடைய பெட்டி. 2 சாமு 7:2
1437: கர்த்தர் யாருக்கு ஒரு வீட்டைக் கட்டுவதாக வாக்குப்பண்ணினார்??
தாவீதுக்கு 2 சாமு 7:11
1438: தாவீது யாரைத் தரைமட்டும் பணியப்பண்ணினார்??
மோபாவியரை. 2 சாமு 8:2
1439: ஆமாத்தின் ராஜா யார்??
தோயி 2 சாமு 8:9
1440: சேபாவின் ராஜா என அழைக்கப்பட்ட ராஜா யார்??
ஆதாதேசர். 2 சாமு 8:12
1441:யோவாப் யாருடைய இராணுவத்தலைவன்??
தாவீது. 2 சாமு 8:16
1442: தாவீதின் மந்திரியின் பெயர் என்ன??
யோசபாத். 2 சாமு8:16
1443: தாவீதின் ஆசாரியர்கள் யார்??
சாதோக்கும் அகிமெலேக்கும். 2 சாமு 8:17
1444: யார் நிமித்தம் சவுலின் வீட்டாருக்கு தயவு தாவீதினால் பிறந்தது??
யோனத்தான் நிமித்தம். 2 சாமு 9:1
1445: சவுலின் வீட்டு வேலைக்காரனின் பெயர் என்ன??
சீபா. 2 ,சாமு 9:2
1446: செத்த நாய் போல் இருக்கிறேன் என்று தன்னை எண்ணிக் கொண்டவன் யார்??
மேவிபோசேத். 2 சாமு 9:8
1447: அம்மோன் புத்திரருக்கு உதவி செய்யச் சீரியர் பயப்பட காரணம் என்ன??
இஸ்ரவேலரின் சேனையின் வல்லமையினால். 2 சாமு 10:19
1448: பத்சேபாள் யாருடைய மனைவி??
ஏத்தியனாகிய உரியாவின் மனைவி. 2 சாமு 11:3
1449: நீ உன் வீட்டிற்கு போய் பாத சுத்தி செய்து கொள் எனத் தாவீது யாரிடம் சொன்னான்??
உரியாவிடம். 2 சாமு 11:8
1450: யாருடைய வீட்டை விட்டு பட்டயம் விலகாதிருக்கும் என நாத்தான் கூறினான்??
தாவீதின் வீட்டிலிருந்து. 2: சாமு 12:10
1451: கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்கும்படியான காரியத்தை இஸ்ரவேலிலே நடப்பித்தவன் யார்??
தாவீது. 2 சாமு 12:14
1452: தன் பிள்ளைக்காக இரா முழுதும் தரையிலே கிடந்த ராஜா யார்??
தாவீது. 2 சாமு 12:16
1453: பத்சேபாள் தாவீதுக்குப் பெற்ற இரண்டாம் குமாரன் பெயர் என்ன??
சாலொமோன். 2 சாமு 12:24
1454: சாலொமோனுக்கு நாத்தான் என்ன பெயரிட்டான்??
யெதிதியா. 2 சாமு 12:25
1455: ரப்பா யாருடைய பட்டணமாயிருந்தது??
அம்மோன் புத்திரரின். 2 சாமு 12:26
1456: ரப்பாவின் ராஜ கிரீடம் யாருடைய தலைமீது வைக்கப்பட்டது??
தாவீதின் 2 சாமு 12:30
1456: மகா தந்திரவாதி யாகிய அம்னோனின் சிநேகிதன் யார்??
யோனதாப். 2:சாமு 13:3
1457: ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் எவ்வித சால்வையைத் தரித்துக் கொள்வார்கள்??
பலவர்ணமான சால்வை. 2 சாமு 13:18
1458: பாலாத் சோர் என்ற இடம் எதற்கு சமீபமாயிருந்தது??
எபிராயீமுக்கு. 2 சாமு 13:23
1459: மனிதனுக்கு எது நிச்சயம் என்று ராஜாவிடம் தெக்கோவா ஊர் விதவை சொன்னாள்??
மரிப்பது. 2 சாமு 14:14
1460: திரும்ப சேர்க்கக் கூடாதபடிக்கு தரையிலே சுவருகிறது எது??
தண்ணீர். 2 சாமு 14:14
1461: உள்ளம் கால் தொடங்கி உச்சம் தலைமட்டும் ஒரு பழுதும் இல்லாதவன் யார்??
அப்சலோம். 2 சாமு 14:25
1462: அப்சலோமுக்கு பாரமாய் இருப்பது எது??
அவன் தலை மயிர். 2 சாமு 14:26
1463: அப்சலோம் தன் தலைமயிரை சிரைக்கும்போது அவன் தலை மயிர் எத்தனை சேக்கல் நிறையாயிருக்கும்??
இருநூறு. 2 சாமு 14:26
1464: அப்சலோமின் குமாரத்தியின் பெயர் என்ன??
தாமார். 2 சாமு 14:27
1465: மனுஷரின் இருதயத்தைக் கவர்ந்து கொண்ட தாவீது ராஜாவின் மகன் யார்??
அப்சலோம். 2 சாமு 15:6
1466: கேசூர் எந்த தேசத்தில் இருக்கிறது??
சீரியா தேசத்தில். 2 சாமு 15:8
1467: தாவீதுக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்??
அகித்தோப்பேல். 2 சாமு 15:12
1468: சகல ஜனங்களுடன் புறப்பட்ட ராஜா எந்த ஆற்றைக் கடந்து போனான்??
கீதரோன் ஆற்றை. 2 சாமு 15:23
1469: தாவீதை தூஷித்து கொண்டு வந்தவன் யார்??
சிமேயி. 2 சாமு 16:5
1470: செத்த நாய் என்று அபிசாய் யாரைக் குறித்து சொன்னான்??
சிமேயிமைக் குறித்து. 2 சாமு 16:9
1471: தாவீதின் சினேகிதன் யார்??
அற்கியனாகிய ஊசா. 2 சாமு 16:16
1472: இன்றோகேல் அண்டை நின்று கொண்டிருந்தவர்கள் யார்??
அகிமாசும் யோனத்தானும். 2 சாமு 17:17
1473: தன் வீட்டு காரியங்களை ஒழுங்கு படுத்திவிட்டு நான்று கொண்டு செத்தவன் யார்??
அகித்தோப்பேல். 2 சாமு 17:23
1474: தாவீது மக்னாயீமில் சேர்ந்த போது அவனுக்கும் அவனோடிருந்தவர்களுக்கும் உணவு பொருட்களைக் கொண்டு வந்தவர்கள் யார்??
சொபி மாகீர் பர்சிலா. 2 சாமு 17:28
1474: எப்பிராயீம் காட்டில் நடந்த யுத்தத்தில் பட்டயம் பட்சித்ததை விட எது பட்ச்சித்தது அதிகமாயிருந்தது??
காடு பட்ச்சித்தது. 2 சாமு 18:8
1475: தலை கர்வாலி மரத்தில் மாட்டிக்கொண்டு வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினவன் யார்??
அப்சலோம். 2 சாமு 18:9
1476: ராஜாவுக்கு முன்பாக தான் பாவம் செய்தேன் என்று பாவ அறிக்கை செய்தவன் யார்?
சீமேயி. 2 சாமு 19:20
1477: மகா பெரிய மனுஷனாயிருந்தவன் யார்??
பர்சிலா. 2 சாமு 19:32
1478: பர்சிலா எத்தனை வயதுள்ளவனாயிருந்தான்??
எண்பது. 2 சாமு 19:32
1479: யோவாப் யாருடைய குடல்கள் தரையிலே சரிந்து போகத்தக்கதாய் குத்தினான்??
அமாசாவின் குடல்
2 சாமு 20:10
1480: ஆபேலில் விசாரித்தால் வழக்கு தீரும் என்று யார் சொல்லுவார்கள்??
பூர்வ காலத்து ஜனங்கள். 2 ,சாமு 20:18
1481: யாருடைய தலையை மதிலின் மேலிருந்து யோபாவிடம் போடப்பட்டது??
பிக்கிரியின் குமாரன் சேபாவின் தலை. 2 சாமு 20:22
1482: பகுதி வாங்குகிறவனாக இஸ்ரவேலில் இருந்தவன் யார்??
அதோராம். 2 சாமு 20:24
1483: தாவீதுக்குப் பிரதானியாயிருந்தவன் யார்??
யயீரியனாகிய ஈரா. 2 சாமு 20:26
1484: , தாவீதின் அரமனையில் ஆசாரியராயிருந்தவர்கள் யார்??
சாதோக்கும் அபியத்தாரும். 2 சாமு 20:25
1484: தாவீதின் நாட்களில் எத்தனை வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது??
மூன்று வருஷம். 2 சாமு 21:1
1485: இரட்டு புடவையை எடுத்துக் கொண்டு பாறையின் மேல் விரித்தவள் யார்??
ரிஸ்பாள். 2 சாமு 21:10
1486: சவுலின் உடலை எங்கு தூக்கிப் போட்டனர்??
பெத்சானின் வீதியில். 2 சாமு 21:12
1487: தாவீதை வெட்ட வேண்டுமென்றிருந்த இராட்சத புத்திரன் யார்??
இஸ்பிபெனோப். 2 சாமு 21:16
1488: தண்ணீர் எங்கு கூடியிருக்கும்??
ஆகாயத்து மேகங்கள் மேல். 2 சாமு 22:12
1489: ஆகாயத்து மேகங்கள் மேல் கூடிய தண்ணீரில் எது இருக்கும்??
காரிருள். 2 சாமு2212
1490: புடமிடப்பட்டது எது??
கர்த்தருடைய வசனம். 2 சாமு 22:31
1491: தேவரீருடைய எது நம்மைப் பெரியவனாக்கும்??
தேவரீருடைய காருண்யம். 2 சாமு 22:36
1492: இச்சகம் பேசி அடங்குகிறவர்கள் யார்??
அன்னியர். 2 சாமு 22:4
1493: முள்ளுக்கு சமமானவர்கள் யார்??
பேலியாளின் மக்கள். 2 சாமு 23:6
1494: எண்ணூறு பேர்கள் மேல் விழுந்து ஒருமிக்கவெட்டிப்போட்டவன் யார்??
யோசேப்பாசெபெத். 2 சாமு 23:8
1495: சிறுபயறு நிறைந்த வயலிலிருந்த இடத்திலே பெலிஸ்தரைக் கண்டு ஜனங்கள் ஓடுகிற போது அதை காப்பாற்றியவன் யார்??
சம்மா என்னும் ஆராரியன். 2 சாமு 23:11
1496: செய்கையில் வல்லவனாயிருந்த யோய்தாவின் குமாரன் யார்??
பெனாயா. 2 சாமு 23: 20
1497: மூன்று சிங்கங்களை கொன்று போட்டவன் யார்??
பெனாயா. 2 சாமு 23:20
1498: யாரை இலக்கம் பார்க்க தாவீது ஏவப்பட்டான்??
இஸ்ரவேல் யூதா என்பவர்களை. 2 சாமு 24:1
1499: தாவீது ஜனங்களை தொகையிட யாரை நியமித்தான்??
யோவாபை. 2 சாமு 24:2
1500: தாவீதின் ஞான திருஷ்டிக்காரனின் பெயர் என்ன??
காத். 2 சாமு 24:11
1501: தாவீது தன் மெய்க்காப்பாளனாக யாரை வைத்தான்??
பெனாயாவை. 2 சாமு 23:23
1502 : உரியா எந்த ஊரைச் சார்ந்தவன்??
ஏத்தியன். 2 சாமு 23:39
1503: ஏத்தியனாகிய உரியாவுடன் தாவீதின் பராக்கிரமசாலிகள் மொத்தம் எத்தனை பேர்??
முப்பத்து ஏழு பேர். 2 சாமு 23:39
1504: தாவீது செய்த தவறுக்காக வழங்கப்பட்ட தண்டனை கள் எவை??
1: நாட்டில் ஏழு வருடப் பஞ்சம்
2: மூன்று மாதம் சத்துருக்கள் பின் தொடர்தல்
3: மூன்று நாட்கள் கொள்ளை நோய்
1505: கொள்ளை நோயினால் செத்துப் போனவர்கள் எத்தனை பேர்??
எழுபதினாயிரம் பேர். 2 சாமு 24:15
1506: தேவதூதன் எதை அழிக்க தன் கையை நீட்டினான்??
எருசலேமை. 2 சாமு 24:16
1507: இதோ நான் தான் பாவம் செய்தேன் நான் தான் அக்கிரமம் பண்ணினேன் இந்த ஆடுகள் என்ன செய்தது என்று கர்த்தரிடம் சொன்னவன் யார்??
தாவீது. 2 சாமு 24: 17
1508: யாருடைய களத்தில் பலிபீடம் உண்டாக்கும்படி காத் தீர்க்கதரிசி தாவீதுக்கு கூறினார்??
அர்வானாவின் களத்தில் 2சாமு 24:18
1509: அர்வானாவின் களத்தையும் அவன் மாடுகளையும் தாவீது தேவனாகிய கர்த்தருக்குப் பலிசெலுத்த விலைக்கிரயமாக கொடுத்தது எவ்வளவு??
ஐம்பது சேக்கல் நிறை வெள்ளி. 2 சாமு 24:24
1510: எப்பொழுது தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கர்த்தர் கேட்டருளினார்??
தாவீது அர்வானாவின் களத்தில் கர்த்தருக்கு பலிபீடத்தைக் கட்டி சர்வாங்க தகனபலிகளையும் சமாதனபலிகளையும் செலுத்தினபோது
1511: தாவீதுக்கு உதவியாயிருந்து அவனுக்குப் பணிவிடை செய்தவள் யார்??
அபிஷாக். 1 இரா 1:4
1512: நான் ராஜா ஆவேன் என்று சொல்லி தன்னை உயர்த்தினவன் யார்??
அதோனியா. 1 இராஜ 1:5
1513: மிகவும் அழகுள்ளவன் யார்??
அதோனியா. 1 இரா 1:6
1514: சோகெலாத் என்னும் எதற்கு சமீபமாயிருக்கிறது??
இன்ரோகேலுக்கு சமீபம். 1 இரா 1:9
1515: சாலோமோனை ராஜாவாக அபிஷேகம் பண்ணினவன் யார்??
ஆசாரியனாகிய சாதேக்கு. 1 இராஜ 1:39
1516: சாலொமோனுக்கு பயந்து போய் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்து கொண்டவன் யார்??
அதோனியா. 1 இராஜ 1:50
1517: சமாதான காலத்தில் யுத்த கால இரத்தத்தை சிந்தினவன் யார்??
யோவாப். 1 இராஜ 2:5
1518: தாவீது எங்கு அடக்கம் பண்ணப்பட்டான்??
தாவீதின் நகரத்தில். 1 இரா 2:11
1519: தன் தாயைக் கண்டு எழுந்திருந்து அவளுக்கு எதிர் கொண்டு வந்து அவளை வணங்கிய அரசன் யார்??
சாலொமோன். 1 இராஜ 2:19
1520:அதோனியாவின் மேல் விழுந்து அவனைக் கொன்று போட்டவன் யார்??
பெனாயா. 1 இராஜ 2:25
1521: தாவீது அனுபவித்த உபத்திரவத்திலெல்லாம் பங்கு கொண்ட ஆசாரியன் யார்??
அபியத்தார். 1 இரா 2:26
1522: யோவாபைப் பார்க்கிலும் நீதியும் நற்குணமும் உள்ள இருவர் யார்??
அப்னேர் அமாசா. 1 இரா 2:32
1523: எருசலேமிலே ஒரு வீட்டைக்கட்டி அங்கே குடியிருக்க சாலொமோன் யாரிடம் சொன்னான்??
,சீமேயி. 1 இரா 2:36
1524: வனாந்திரத்திலிருக்கிற அவனுடைய வீட்டில் அடக்கம் பண்ணப்பட்டவன் யார்??
,யோவாப். 1 இரா 2:34
1425: கிபியோனிலுள்ள பெரிய மேடையில் சாலொமோன் எத்தனை பலிகள் செலுத்தினான்??
ஆயிரம் பலிகள். 1 இராஜ 3:4
1526: எதற்காக சாலொமோன் ஞானமுள்ள இருதயத்தைக் கடவுளிடம் கேட்டான்??
ஜனங்களை நியாயம் விசாரிக்கவும் நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கவும். 1 இரா 3:9
1527: சாலொமோனின் பிரதான மந்திரி யார்??
அசரியா 1 இராஜ 4:2
1528: தாபாத் யாருடைய குமாரத்தி??
சாலொமோனின் குமாரத்தி. 1 இராஜ4;11
1529: சாலொமோனைச் சுற்றி எங்கும் எது இருந்தது??
சமாதானம். 1 இராஜ 4:24
1530: யாருடைய நாளெல்லாம் யூதாவும் இஸ்ரவேலும் சுகமாய் குடியிருந்தனர்??
சாலொமோன். 1 இராஜ 4:25
1531: கீலேயாத் தேசத்தில் அதிபதியாயிருந்தவன் யார்??
கேபேர். 1 இராஜ 4:19
1532: சாலோமோன் சொன்ன நீதிமொழிகள் எத்தனை??
மூவாயிரம். 1 இராஜ 4:32
1533: சாலோமோனின் பாட்டுகள் எத்தனை??
ஆயிரத்து ஐந்து. 1 இராஜ 4:32
1534: கேதுரு மரங்கள் இருக்கும் இடம் எது??
லீபனோன். 1இராஜ 4:33
1535: ஈசோப்பு பூண்டு எங்கு முளைக்கும்??
சுவரில். 1 இராஜ 4:33
1536: ஈராம் எந்த நாட்டு ராஜா??
தீருவின் ராஜா. 1 இரா 5:1
1537: மரம் வெட்டும் வேலையை நன்றாய் அறிந்தவர்கள் யார்??
சீதோனியர். 1 இராஜ 5:6
1538: ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட எவ்வித கல் கொண்டு வரப்பட்டது??
வெட்டினகல்லாய். 1 இராஜ 5:17
1539: ஆலயத்தைக் கட்ட சிற்பாசிரியர்களுடன் இணைந்து எந்த ஊரார் மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்??
கிபிலி ஊரார். 1 இராஜ 5:18
1540: சாலொமோன் ராஜாவான எந்த வருஷத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டினான்??
நாலாம் வருஷம். 1 இராஜ 6:1
1541: சாலொமோன் ராஜா கர்த்தருக்கு கட்டின ஆலயம் எத்தனை முழம் நீளம் எத்தனை முழம் அகலம் எத்தனை முழம் உயரமாயிருந்தது??
நீளம் அறுபது முழம்
அகலம் இருபது முழம்
உயரம் முப்பது முழம்
1 இராஜ 6:2
1542: தேவாலயத்தின் உட்புறச் சுவர்கள் எவ்வித பலகையினால் மூடப்பட்டது??
கேதுரு மரப்பலகையினால். 1 இராஜ 6:15
1543: எந்த மாதத்தில் எருசலேம் தேவாலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்டது ??
சீப் மாதம். 1 ,இராஜ 6:37
1544: சாலொமோன் கர்த்தருக்கு ஆலயம் கட்டி முடிக்க எத்தனை வருஷங்கள் சென்றது??
ஏழு வருஷங்கள். 1 இராஜ 6:38
1545: சாலொமோன் என்ன பெயருள்ள மாளிகையையும் கட்டினான்??
லீபனோன் வனம் என்னும் மாளிகை. 1 இராஜ 7:2
1546: நப்தலி கோத்திரத்தை சார்ந்த ஈராம் யாருடைய மகன்??
ஒரு கைம்பெண்ணின் மகன். 1 இராஜ 7:14
1547: சகலவித வெண்கல வேலையும் செய்யக்கூடிய யுக்தியும் புத்தியும் அறிவுமுடையவன் யார்??
கன்னானாகிய ஈராம். 1 இராஜ 7:14
1548: தேவாலய வாசல் மண்டபத்தில் தூண்களில் வலது புறத்தில் உள்ள தூணுக்கும் இடது புறத்தில் உள்ள தூணுக்கும் என்ன பெயரிடப்பட்டது??
வலதுபுற தூண். யாகீன்.
இடதுபுற தூண்
போவாஸ்
1 இராஜ 7:21
1549: தேவாலய பணிமூட்டுகளை ஈராம் எந்த இடத்தில் செய்தான்??
யோர்தானுக்கு முதற் சமனான பூமியில். 1 இராஜ 7:46
1550: எந்த மாதத்து பண்டிகையிலே இஸ்ரவேல் மனுஷரெல்லாரும் சாலொமோனிடம் கூடி வந்தார்கள்??
ஏத்தானீம் மாதத்துப் பண்டிகையிலே. 1 இராஜ 8:2
1551: மகா பரிசுத்த ஸ்தானத்திலே எதன் கீழ் உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டது??
கேருபீன்களின் செட்டைகளின் கீழ். 1 இராஜ 8:6
1552: தேவனாகிய கர்த்தர் தம் ஜனமாகிய இஸ்ரவேலின் மேல் அதிகாரியாயிருக்கும்படி யாரைத் தெரிந்து கொண்டேன் என்றார்??
தாவீதை. 1 இராஜ 8:16
1553: நீதிமானுக்கு எதற்குத் தக்கதாய் நியாயம் தீர்க்கப்படும்??
நீதிக்குத்தக்கதாய். 1 இராஜ 8:32
1554: எதினால் வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்??
பாவம் செய்ததினால். 1 இராஜ 8:35
1555: எவ்வித மனுஷன் உலகில் இல்லை??
பாவம் செய்யாத மனுஷன். 1 இராஜ 8:46
1556: கர்த்தர் தமது ஜனங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே யாரைக் கொண்டு பேசினார்??
மோசேயைக் கொண்டு. 1 இராஜ 8;53
1556: சாலொமோன் கட்டின ஆலயத்தில் கர்த்தருடைய நாமம் என்றென்றைக்கும் விளங்கத்தக்கதாக அவர் அதை என்ன செய்தார்??
பரிசுத்தமாக்கினார். 1 இராஜ 9:3
1557: சாலொமோன் ஈராமுக்குக் கொடுத்த இருபது பட்டணங்களைப் பார்த்து பிரியப்படாத ஈராம் இந்த பட்டணங்களுக்கு என்ன பெயர் வைத்தான்??
காபூல் நாடு என்ற பெயர். 1 இராஜ 9:13
1558: கப்பல் கட்டும் தொழிற்சாலை எங்கு இருந்தது??
எசியோன்கேபேரில் இருந்தது. 1 இரா 9:26
1559: சாலொமோனுக்கு கொண்டு வரப்பட்ட ஒப்பீரின் பொன்னின் நிறை எவ்வளவு??
நானூற்று இருபது தாலந்து. 1 இராஜ 9:18
1560: சாலொமோனை விடுகதைகளினால் சோதிக்க விரும்பியவள் யார்??
சேபாவின் ராஜஸ்திரீ. 1 இராஜ 9:18
1561: சாலொமோனின் நாட்களில் எது ஒரு பொருளாக எண்ணப்படவில்லை ??
வெள்ளி. 1 இராஜ 10:21
1562: எகிப்திலிருந்து சாலொமோனிடம் வந்த ஒவ்வொரு இரதமும்
என்ன விலை??
அறுநூறு வெள்ளிக்காசுகள். 1 இராஜ 10:29
1563: அந்நிய ராஜ்யத்தைச் சார்ந்த அனேகம் ஸ்தீரிகள் மீது ஆசை வைத்த அரசன் யார்??
சாலொமோன். 1 இராஜ 11:1
1564: சாலொமோன் யாருடைய தேவியைப் பின்பற்றினான்??
சீதோனியரின் தேவியை. 1 இரா 11:5
1565: சீதோனியரின் தேவியின் பெயர் என்ன??
அஸ்தரோத். 1 இராஜ 11:5
1566: அம்மோனியரின் அருவருப்பு எது ??
மில்கோம். 1 இராஜ 11:5
1567 : மோபாபியரின் அருவருப்பு எது??
காமோசு. 1 இரா 11:7
1568: தேவனாகிய கர்த்தர் சாலோமோனுக்கு விரோதியாக
எழுப்பினவனின் பெயர் என்ன??
ஆதாத். 1 இரா 11:14
1569: கர்த்தர் சாலொமோனுக்கு விரோதமாக எழுப்பிய வேறொருவன் யார்??
ரேசோன். 1 இரா 11:23
1570: இஸ்ரவேல் ஜனங்கள் எந்த தேவர்களை வழிப்பட்டதால் கர்த்தர் கோபங்கொண்டார்??
அஸ்தரோத்தையும் காமோசையும் மில்கோமையும் வழிபட்டதால்
1571: கர்த்தருடைய நாமம் விளங்கும்படியாக அவர் தெரிந்து கொண்ட நகரம் எது??
எருசலேம். 1 இராஜ 11:36
1572: எந்நாளும் சிறுமைப்பட்டு போகாத சந்ததி எது??
தாவீதின் சந்ததி. 1 இரா 11:39
1573: சாலொமோனுக்குப் பயந்து எகிப்துக்கு ஓடி போனவன் யார்??
யெரொபெயாம். 1 இரா 11:40
1574: சாலொமோனுக்குப்பின் அவன் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்??
ரெகொபெயாம். 1 இரா 11:43
1574: கர்த்தரின் வார்த்தையை யெரொபெயாமுக்குச் சொன்னவன் யார்??
அகியா. 1 இரா 12:15
1575: தாவீதின் வம்சத்தை பின்பற்றிய கோத்திரம் எது??
யூதா கோத்திரம் மட்டும். 1 இரா 12:20
1576: யொரொபெயாம் உண்டு பண்ணின பொன் கன்றுக்குட்டிகள் எங்கு வைக்கப்பட்டன??
பெத்தேலிலும், தாணிலும். 1 இரா 12:29
1577: யெரொபெயாம் தூபம் காட்டப்பலிபீடத்தண்டையிலே நிற்கையில் வந்தவன் யார்??
தேவனுடைய மனுஷன். 1 இரா 13:1
1578: மேடைகளில் பலியிடுகிற ஆசாரியர்களை அதன்மேல் பலியிடுகிறதற்குப் பிறக்கப் போகிறவர் யார்??
யோசியா. 1 இரா 13:2
1579: பலிபீடத்தின் மேல் தேவனுடைய மனுஷனுக்கு விரோதமாக நீட்டப்பட்ட யொரொபெயாமின் கை என்ன் ஆயிற்று??
மரத்துப் போயிற்று. 1 இரா 13:4
1580: கிழவனான தீர்க்கதரிசி ஒருவன் எங்கே குடியிருந்தான்??
பெத்தேலிலே. 1 இராஜ 13:11
1581: கிழவன் தீர்க்கதரிசியின் பொய் வார்த்தையை நம்பி அவனோடு சென்றவன் யார்??
தேவனுடைய மனுஷன். 1 இராஜ 13:19
1582: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனை எது கொன்று போட்டது??
சிங்கம். 1 இரா 13:24
1583: வழியிலே கிடந்த பிரேதத்தண்டையில் எவை நின்று கொண்டிருந்தன??
கழுதையும் சிங்கமும். 1 இரா 13:24
1584: வியாதியில் விழுந்த யெரொபெயாமின் குமாரன் யார்??
அபியா. 1 இராஜ 14:1
1585: இந்த ஜனத்தின் மேல் யெரொபெயாம் அரசனாவான் என்று அவனுக்கு சொன்ன தீர்க்கதரிசி யார்??
அகியா. 1 இரா 14:2
1586: யொரொபெயாமின் தாயின் பெயர் என்ன??
நாமாள் 1 இரா 14:21
1587: ரெகொபெயாமின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்??
அபியாம். 1 இரா 14:31
1588: தாவீது கர்த்தரின் பார்வையில் செய்த ஒரே ஒரு தவறு எது??
உரியாவின் சங்கதி9 ஒன்று மட்டும். 1 இரா 15:5
1589 : அபியாமின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்??
ஆசா. 1 இரா 15:8
1590: தன் தாயை ராஜாத்தியாய் இராதபடிக்கு விலக்கி விட்ட ராஜா யார்??
ஆசா 1 இரா 15:13
1591: யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினவன் யார்??
இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா. 1 இரா 15:17
1592: தன் முதிர்வயதான காலத்தில் கால்களில் வியாதி கண்டிருந்த ராஜா யார்??
ஆசா. 1 இரா 15:23
1593: ஆசாவின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்??
ஆசாவின் குமாரனாகிய யோசபாத். 1 இரா 15:24
1594 : பாஷா எங்கு ராஜ்யபாரம் பண்ணினான்??
திர்ஷா. 1 இரா 15:33
1595: அர்சா என்பவன் யார்??
திர்சாவிலே அவ்விடத்து அரமனை உக்கிராணக்காரன். 1 இரா 16:9
1596: ஏழு நாட்கள் திர்சாவிலே ராஜாவாயிருந்தவன் யார்??
சிம்ரி. 1 இரா 16:15
1597: இரண்டு தாலந்து வெள்ளிக்கு விலைவாங்கிய மலை எது??
சமாரியா மலை. 1 இரா 16:24
1598: உம்ரி சமாரியா மலையை யார் கையிலிருந்து விலைக்கு வாங்கினான்??
சேமேரின் கையிலிருந்து. 1 இரா 16:24
1599: உம்ரியின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் மகன் யார்??
ஆகாப். 1 இரா 16:28
1600: ஆகாபின் மனைவியின் பெயர் என்ன??
யேசபேல் 1 இரா 16:31
1601: ஆகாபின் நாட்களில் எரிகோவை கட்டினவன் யார்??
ஈயேல். 1 இரா 16:34
1602: ஈயேல் அஸ்திபாரத்தை போட்ட போது மரித்த அவன் மூத்த குமாரன் யார்??
அபிராம். 1 இரா 16:34
1603: எரிகோவின் வாசல்களை வைக்கும் போது மரித்த ஈயேலின் இளைய குமாரன் யார்??
செகூப். 1 இரா 16:34
1604: ஈயேலின் இருகுமாரர்களின் சாவுகுறித்து முன்னதாகவே யாருடைய வார்த்தை சொல்லப்பட்டிருந்தது??
நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு. 1 இரா 16:34
1605: எலியா எந்த ஊரைச் சார்ந்தவன்??
திஸ்பி ஊரான். 1 இரா 17:1
1606: எலியாவிடத்திலே தேவனாகிய கர்த்தர் எங்கு போய் ஒளித்துக்
கொண்டிருக்கச் சொன்னார்??
கேரீத் ஆற்றண்டையில். 1 இரா 17:3
1607: கேரீத் ஆறு எங்கே இருக்கிறது??
யோர்தானுக்கு எதிராக. 1: இரா 17:3
1608: எலியாவை பராமரிக்க யாருக்கு கட்டளையிட்டதாக தேவனாகிய கர்த்தர் சொன்னார்??
ஒரு விதவைக்கு. 1 இரா 17:9
1609: நான் சிறு வயது முதல் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவன் என்று எலியாவிடம் கூறினவன் யார்??
ஒபதியா 1 இரா 18:12
1610: தன் பிராணனைக் காக்க பெயர்செபாவுக்குப் புறப்பட்டுப் போனவன் யார்??
எலியா 1 இரா 19:3
1611: எலியா செப்பனிட்ட பலிபீடத்துக்கு என்ன பெயர் சூட்டினான்??
இஸ்ரவேல். 1 இராஜ 18:31
1612: எலியா புசித்து குடித்து பெலனடைந்து எத்தனை நாட்கள் நடந்து போனான்??
நாற்பது நாள் இரவும் பகலும். 1 இரா 19:8
1613: பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும் அவனை முத்தம் செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய எத்தனை பேரை இஸ்ரவேலிலே கர்த்தர் மீதியாக வைத்திருந்தார்??
ஏழாயிரம் பேரை. 1 இரா 19:18
1614: பெனதாத் எந்த தேசத்து ராஜா ??
சீரியா 1 இரா 20:1
1615: பெனதாத்தோடு எத்தனை ராஜாக்கள் இருந்தனர்??
முப்பத்திரண்டு. 1 இரா 20:1
1616: தங்களுடைய கூடாரங்களில் குடித்து வெறித்துக் கொண்டிருந்தவர்கள் யார்??
பெனதாத்தும் அவனுக்கு உதவியாய் வந்த முப்பத்து இரண்டு ராஜாக்களும்
1 இரா 20:16
1617: நாபோத் எந்த ஊரைச் சார்ந்தவன் ??
யெஸ்ரேல் 1 இரா 21:1
1618: தன்னுடைய மனைவியின் தூண்டுதலின்படி கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யத் தன்னை விற்றுப்போட்டவன் யார்??
ஆகாப் 1 இரா 21:25
1619: இஸ்ரவேலின் ராஜா எத்தனை தீர்க்கதரிசிகளைக் கூட்டி வரச் செய்து ராமோத்தின் மேல் யுத்தம் பண்ணப் போகலாமா என்று கேடாடான்??
நானூறு தீர்க்கதரிசிகள். 1 இரா 22:6
1620:சமாரியாவின் குளத்திலே ஆகாபின் இரத்தத்தை கழுவிய போது கர்த்தர் சொல்லியிருந்தபடி அவன் இரத்தத்தை எது நக்கிற்று??
நாயகள். 1 இரா 22: 38
1621: ஆகாப் மரணமடைந்தபின் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினவர்கள் யார்??
மோவாபியர். 2 இரா 1:1
1622: எக்ரோனின் தேவன் யார்??
பாகால்சேபூ. 2 இரா 1:2
1623: ஏறினகட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவய் என்று கர்த்தர் எலியாவைக் கொண்டு யாருக்கு உரைத்தார்??
அகசியா ராஜாவுக்கு. 2 இரா 1:16
1623: கர்த்தர் எலியாவை பரலோகத்திற்கு எதிலே எடுத்துக் கொள்ள சித்தமானார்??
சுழல் காற்றிலே. 2 இரா 2:1
1624: எலியாவும் எலிசாவும் பேசிக்கொண்டு நடந்து போகையில் அவர்கள் நடுவாக வந்து அவர்களை இரண்டாகப் பிரித்தது எது??
அக்கினி ரதமும் அக்கினி குதிரைகளும். 2 இரா 2:1
1625: நீருற்றண்டைக்குப் போய் உப்பை அதிலே போட்டு தண்ணீரை ஆரோக்கியமாக்கினது யார்??
எலிசா. 2 இரா 2:21
1626: காட்டிலிருந்து இரண்டு கரடிகள் வந்து எத்தனை பிள்ளைகளை பீறிப்போட்டது??
நாற்பத்திரண்டு . 2 இரா 2: 24
1627: மேசா எந்த தேசத்தின் ராஜா ??
மோவாப் 2 இரா 3:4
1628: ஆடு மாடுகள் பெருத்தவானாயிருந்தவன் யார்??
மேசா 2 இரா 3:4
1629: கவண்காரர் சுற்றி க் கொண்டு இடித்துப் போட்ட மதில்கள் யாவை??
கிராரேசேத்திலுள்ள மதில்கள் 2 இரா 3:25
1630:சூனேம் ஊரில் எலிசாவை போஜனம் பண்ண அழைத்தவர் யார்??
ஒரு கனம் பொருந்திய ஸ்திரீ 2 இரா 4:8
1631: எலிசாவின் வேலைக்காரன் யார்??
கேயாசி. 2 இரா 4:12
1632: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்று சொன்னவள் யார்??
சூனேமியாள். 2 இரா 4:13
1633: தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் அப்பங்களை எங்கிருந்து ஒரு மனுஷன் கொண்டு வந்தான்??
பாகால் சலீஷாவிலிருந்து. 2 இரா 4:42
1634: சீரியா ராஜாவின் படைத்தலைவனின் பெயர் என்ன??
நாகமான் 2 இரா 5:1
1635: தமஸ்குவின் நதிகள் யாவை??
ஆப்னா, பர்பார். 2 இரா 5:12
1636: ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி வீழ்த்துகையில் எது தண்ணீரில் விழுந்தது??
கோடரி. 2 இரா 6:5
1637: தேவனுடைய மனுஷன் தண்ணீரில் விழுந்த கோடரியை எவ்விதம் மிதக்கச் செய்தான்??
ஒரு கொம்பை எறிந்து இரும்பை மிதக்கப் பண்ணினான். 2 இரா 6:6
1638: அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்று கேயாசிடம் சொன்னவன் யார்??
எலிசா. 2 இரா 6:16
1639: இந்த நாள் எவ்விதமான நாள் என்று குஷ்டரோகிகள் சொன்னார்கள்??
நற்செய்தி அறிவிக்கும் நாள் என்று. 2 இரா 7:9
1640: சீரியாவின் ராஜாவின் பெயர் என்ன??
பெனாதாத் 2 இரா 8:7
1641: தண்ணீரில் தோய்த்த சமுக்காளத்தை முகத்தின் மேல் விரித்ததினால் செத்து போனவன் யார்??
பெனதாத் 2 இரா 8:15
1642: உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்கு கட்டளையிடுவேன் என்று கர்த்தர் யாருக்கு கட்டளையிட்டிருந்தார்??
தாவீதுக்கு. 2 இரா 8: 19
1643: , யோராம் யாருடைய குமாரன்??
ஆகாபின் குமாரன். 2 இரா 8:16
1644: யோசபாதாதின் குமாரன் யேராமுக்கு மனைவியாயிருந்தவள் யார்??
ஆகாபின் குமாரத்தி. 2 இரா 8:18
1645: யோராமிற்கு பதிலாக யார் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்??
யோராமின் குமாரனாகிய அகசியா. 2 இரா 8:24
1646: ஒரு வருஷம் மட்டும் எருசலேமில் அரசாண்ட ராஜா யார்??
அகசியா. 2 இரா 8:26
1647: அகசியாவின் தாயின் பெயர் என்ன??
அத்தாலியாள். 2 இரா 8:26
1648: ஆகாபின் குடும்பத்தை அழித்து விட யாருக்குச் சொல்லப்பட்டது??
யெகூவிடம். 2 இரா 9:7
1649: யேசபேலை யாருடைய நிலத்தில் நாய்கள் தின்று விடும்??
யெஸ்ரயேலின் நிலத்தில். 2 இரா 9:20
1650 : இப்லேயாம் கிட்ட இருக்கிற மலை எது??
கூர் மலை. 2 இரா 9:27
1651: தன் கண்களுக்கு மையிட்டுக் கொண்டு தலையை சிங்காரித்துக் கொண்டு ஜன்னல் வழியாய் எட்டிப் பார்த்தவள் யார்??
யேசபேல். 2 இரா 9:30
1652: ஆகாபுக்கு சமாரியாவில் எத்தனை குமாரர்கள்??
எழுபது குமாரர். 2 இரா 10:1
1653: யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்திலும் மீதியாயிருந்த யாவரையும் கொன்று போட்டவன் யார்??
யெகூ. 2 இரா 10:11
1654: யாரை அழிக்கும் படி யெகூ தந்திரமாய் அழைப்பு விடுத்தான்??
பாகாலை சேவிக்கிறவர்களை அழிக்கும்படி. 2 இரா 10:19
1655: கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை நன்றாய்ச் செய்து கர்த்தருடைய இருதயத்திலிருந்தபடி யெல்லாம் ஆகாபின் குடும்பத்தாருக்குச் செய்தவன் யார்??
யெகூ. 2 இரா 10:3
1656: யாருடைய நாட்கள் முதல் கர்த்தர் இஸ்ரவேலை குறைந்து போகப் பண்ணினார்
யெகூவுடைய நாட்களில். 2 இரா 10:32
1657: யெகூவின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்??
யோவாகாஸ். 2 ,இரா 10:35
1658: தன் குமாரன் இறந்து போனதைக்கண்டு ராஜ வம்சத்தார் யாவரையும் சங்காரம் பண்ணினவள் யார்??
அத்தாலியாள். 2 இரா 11:1
1659: கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருந்து அகசியாவின் குமாரன் யோவாசைக் களவாய் எடுத்தவள் யார்??
யோசேபாள். 2: இரா 11:2
1660: ஆறு வருஷங்கள் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தவன் யார்??
யோவாஸ். 2 இரா 11:3
1661: யோவாசுக்கு போதகனாயிருந்த ஆசாரியன் யார்??
யோய்தா. 2 இரா 12:2
1662: யோவாசை எந்த வீட்டில் கொன்று போட்டார்கள்??
மில்லோ வீட்டில். 2 இரா 12:20
1663: யோவாசின் குமாரன் யார்??
அமத்சியா. 2 இரா 12:21
1664: இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப் பண்ணினவன் யார்??
யெரொபெயாம். 2 இரா 13:6
1666: எலிசா மரணத்துக்கேதுவான வியாதியாயிருக்கையில் அவனைப் பார்க்கப் போனவன் யார்??
யோவாஸ். 2 இரா 13:14
1667: யோவாகாசின் நாட்களில் இஸ்ரவேலை ஒடுக்கிய சீரிய ராஜா யார்??
ஆசகேல். 2 இரா 13:20
1668: தேவனாகிய கர்த்தர் யாரோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் இஸ்ரவேலை அழிக்கச் சித்தமாயிருக்கவில்லை??
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு 2 இரா 13:33
1669: ஆசகேலின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்??
அவன் குமாரனாகிய பெனதாத். 2 இரா 13:24
1670: சேலாவுக்கு தற்போது என்ன பெயர் வழங்கப்பட்டு வருகிறது??
யொக்தியேல். 2 இரா 14:7
1671: யோனாவின் தகப்பன் பெயர் என்ன??
அமித்தாய். 2 இரா 14:25
1672: அமித்தாய் எந்த ஊரைச் சார்ந்தவன்??
காத்தேப்பேர் . 2 இரா 14:25
1673: யோனாவின் தீர்க்கதரிசனத்தின்படியே எவை நிறைவேறின??
இஸ்ரவேலின் எல்லைகள் திரும்பச் சேர்த்துக்கொள்ளப்பட்டன 2 இரா 14: 25
1674 : தன் மரணநாள் வரை குஷ்டரோகத்தினால் வாதிக்கப்பட்ட ராஜா யார்??
அசரியா. 2 இரா 15:5
1675: குஷ்டரோகியாகிய அசரியாவின் மகன் பெயர் என்ன??
யோதாம். 2 இரா 15:5
1676: உன் குமாரர் நாலாம் தலைமுறை மட்டும் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தில் மேல் வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் யாரோடு சொன்னார்??
யெகூவோடே. 2 இரா 15:12
1677: யெகூவின் நாலாம் தலைமுறையானவன் யார்??
சகரியா. 2 இரா 15:12
1678: திகிலாத்பிலேசர் எந்த தேசத்து ராஜா ??
அசீரியா தேசத்து ராஜா. 2 இரா 15:29
1679: கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினவன் யார்??
யோதாம். 2 இரா 15:35
1680: தன் குமாரனைத் தீக்கடக்கப் பண்ணின இஸ்ரவேலின் ராஜா யார்??
ஆகாஸ். 2 இராஜ 16:3
1681: தமஸ்குவின் குடிகளை திகிலாத்பிலேசர் எங்கு சிறை வைத்தான்??
கீர் பட்டணத்தில். 2 இரா 16:9
1682: தமஸ்குவிலுள்ள பலிபீடத்தின் சாயலையும் அதனுடைய சகல வேலைப்பாடுகளாகிய அதின் மாதிரியின் படியும் செய்ய ஆகாஸ் ராஜா கட்டளைப்படி செய்தவன் யார்??
ஆசாரியனாகிய உரியா. 2 இரா 16:11
1683: கர்த்தர் சொன்ன வார்த்தைகளுக்கு செவிகொடாமலும் தங்கள் தேவனாகிய கர்த்தர் மேல் விசுவாசம் வைக்காமலும் இருந்தவர்கள் யார்??
இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும். 2 இரா 17:14
1684: இஸ்ரவேலர் எந்த வம்சத்தை விட்டுப் பிரிந்தார்கள்??
தாவீதின் வம்சத்தை. 2 இரா 17:21
1685: சமாரியாவில் குடியிருந்தவர்கள் கர்த்தருக்குப் பயப்படாததினால் கர்த்தர் அவர்களுக்குள்ளே எதை அனுப்பினார்??
சிங்கங்களை. 2 இரா 17:25
1686: கர்த்தர் தமது ஜனத்தை எவைகளினால் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினா
மகாவல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும். 2 இரா 17:36
1687: எசேக்கியா யாருடைய குமாரன் ??
ஆகாசின் குமாரன். 2 இரா 18:1
1688: எசேக்கியா வெண்கல சர்ப்பத்திற்கு என்ன பெயரிட்டான்??
நிகுஸ்தான். 2 இரா 18:4
1689: கர்த்தரை விட்டுப் பின் வாங்காமல் அவரைச் சார்ந்திருந்த யூதாவின் ராஜா யார்??
எசேக்கியா. 2 இரா 18:6
1690: ஆலாகும் ஆபோரும் எந்த நதியோரமான நகரம்??
கோசான் நதி ஓரமான நகரம். 2 இரா 18:11
1691: எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிறவர்களுக்கு எப்படி இருப்பான்??
நெரிந்த நாணல் கோலைப் போலிருப்பான். 2 இரா 18:21
1692: எசேக்கியா உங்களை வஞ்சியாதபடிப் பாருங்கள் என்று உரைத்தவன் யார்??
ரப்சாக்கே 2 இரா 18:27&29
1693: எத்தியோப்பியா ராஜாவின் பெயர் என்ன??
தீராக்கா. 2 இரா 19:9
1694: தெலாசரில் இருந்த புத்திரர்கள் யார்??
ஏதேனின் புத்திரர்கள். 2 இரா 19:12
1695: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எங்கு வாசம் பண்ணுகிறார்??
கேரூபீன்கள் மத்தியில். 2 இரா 19:15
1696: அவன் இதன் மேல் அம்பு எய்வதில்லை என்று யாரைக் குறித்துச் சொல்லுகிறார்??
அசீரியா ராஜாவைக் குறித்து. 2 இரா 19:32
1697: கர்த்தருடைய தூதன் போய் அசீரியரின் பாளயத்தில் எத்தனை பேரைச் சங்கரித்தான்??
ஒரு லட்சத்தெண்பதாயிரம் பேரை. 2 இரா 19:35
1698: அசீரியாவின் ராஜாவாகிய சனகரீப்பை வெட்டிப்போட்ட அவன் குமாரர்கள் யார்??
அத்ரமலேக்கும் சரேத்சேரும். 2 இரா 19:37
1699:எசேக்கியா வியாதிப்பட்டு எதற்கேதுவாயிருந்தான்??
மரணத்துக்கேதுவாயிருந்தான் 2 இரா 20:1
1700: என் ஜனத்தின் அதிபதி என்று கர்த்தர் யாரைக் குறிப்பிடுகின்றார்??
எசேக்கியாவை. 2 இரா 20:5
1701: எசேக்கியாவின் பிளவையின் மேல் எதைக் கொண்டு வந்து போட்டார்கள்??
அத்திப்பழ அடையை. 2 இரா 20:7
1702: யாருடைய சூரிய கடிகாரத்தில் பாகைக்கு பாகை முன்போன சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பியது??
ஆகாசுடைய சூரிய கடிகாரத்தில். 2 இரா 20:11
1703: எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேள்விப்பட்டு அவனுக்கு நிருபங்களையும் வெகுமதிகளையும் அனுப்பினவன் யார்??
பெரோதாக்பலாதன். 2 இரா 20:11
1704: எசேக்கியாவின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்??
மனாசே 2: இரா 20:21
1705: கர்த்தரின் ஆலயத்தில் மனாசே செய்த எதைக் கொண்டு வைத்தான்??
தோப்பு விக்ரகத்தை. 2 இரா 21:7
1706: எருசலேமில் மேல் கர்த்தர் எந்த நூலைப் பிடிப்பார்??
சமாரியாவின் மட்ட நூலைப்பிடிப்பார். 2 இரா 21:13
1707: ஆகாப் வீட்டின் எந்த நூலை கர்த்தர் பிடிப்பார்??
தூக்கு நூலை. 2 இரா 21:13
1708: ஒருவன் ஒரு தாலந்தைத் துடைத்து கவிழ்த்து வைக்கிறது போல எருசலேமைக் கர்த்தர் என்ன செய்வார்??
துடைப்பார். 2 இரா 21:13
1709: மனாசேயின் ஸ்தானத்தில் யார் ராஜாவானான்??
அவன் குமாரன் ஆமோன் 2 இரா 21:18
1710: தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில் வலது இடது புறம் விலகாமல் நடந்தவன் யார்??
யோசியா. 2 இரா 22:2
1711: யோசியா ராஜாவாகிறபோது எத்தனை வயதாயிருந்தான்??
எட்டு வயது. 2 இரா 22:1
1712: யோசியாவின் காலத்தில் கர்த்தருடைய ஆலயத்தில் பிரதான ஆசாரியனாயிருந்தவன் யார்??
இல்க்கியா. 2 இரா 22:4
1713: கர்த்தரின் ஆலயத்தில் நியாப்பிரமாண புத்தகத்தைக் கண்டு பிடித்தவன் யார்??
ஆசாரியனாகிய இல்க்கியா. 2 இரா 22:8
1714: நியாயப்பிரமாண புத்தகத்தை வாசித்தவன் யார்??
சாப்பான். 2 இரா 22:8
1715: நியாயப் பிரமாணத்தில் எழுதப்பட்டவைகளை விசாரிக்கும்படி ராஜாவாகிய யோசியாவால் அனுப்பப்பட்டவர்கள் யாரிடம் வந்தார்கள்??
உல்தாள் என்னும் தீர்க்கதரிசியிடம் - 2 இரா 22:14
1716: நீ சமாதானத்தோடே கல்லறையில் சேர்வாய் என்று யாருக்கு பதில் சொல்லப்பட்டது??
யோசியாவுக்கு. 2 இரா 22:20
1717: எருசலேமுக்கு எதிராக இருக்கிற மலை எது??
நாசமலை. 2 இரா 23:13
1718: கர்த்தரிடத்தில் தன் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் தன் முழுபலத்தோடும் நியாயப்பிரமாணத்துக்கேற்றபடி எல்லாம் செய்த யாரைப் போல் ஒருவரும் அவனுக்கு முன்னும் பின்னும் இருந்ததில்லை??
யோசியாவைப் போல். 2 இரா 24:25
1719:கர்த்தருக்கு கோபம் உண்டாக்கின ராஜா யார்??
மனாசே 2 இரா 23:26
1720: யோசியாவுக்கு பின்பு அவன் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்??
யோவாசின் குமாரன் யோவாகாஸ். 2 இரா 23:30
1721: மூன்று மாதம் எருசலேமை அரசாண்ட ராஜா யார்??
யோவகாஸ். 2 இரா 23:31
1722:எகிப்தின் பார்வோன் நேகோ யோவகாசை எங்கே பிடித்து கட்டினான்??
ஆமாத் தேசமான ரிப்லாவில். 2 இரா 23:33
1723: எலியாக்கீம் என்ற பெயரை யோயாக்கீம் என்று மாற்றியவன் யார்??
எகிப்தின் பார்வோன் நேகோ. 2 இரா 23:34
1724: கர்த்தர் யூதாவுக்கு விரோதமாகத் தண்டுகளை ஏன் வரவிட்டார்??
தீர்க்கதரிசிகள் வழியாகத் தாம் சொன்ன வார்த்தையை நிறைவேற்ற 2 இரா 24:2
1725: எருசலேம் நகரம் முழுவதையும் முற்றுகை போட்டவன் யார்??
நேபுகாத்நேச்சார். 2 இரா 24:11
1726: மத்தனியாவுக்குப் பாபிலோன் ராஜா என்ன பெயர் சூட்டினான்??
சிதேக்கியா. 2 இரா 24:17
1727: எருசலேம் நகரின் மதிலில் எது காணப்பட்டது??
திறப்பு 2 இரா 25:3
1728: கண்கள் குருடாக்கப்பட்டு இரண்டு வெண்கல விலங்குகள் போடப்பட்ட வனாக பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டவன் யார்??
சிதேக்கியா 2 இரா 25:7
1729: யூதரின் ராஜாவாகிய யோயாக்கீனின் தலையை உயர்த்தினவன் யார்??
ஏவில்மெரொதாக் என்னும் பாபிலோனின் ராஜா. 2 இரா 25:27
1730: ஏவில்மெரொதாக் கின் தகப்பன் பெயர் என்ன??
நேபுகாத் நேச்சார். 2 இரா 25:30
1731: பூமியிலே பராக்கிரமசாலியானவன் யார்??
நிம்ரோத். 1 நாள 1:10
1732: யாருடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது??
பேலேகு 1 நாள 1: 19
1733: பேலாவின் பட்டணத்தின் பெயர் என்ன??
தின்காபா. 1 நாள 1:43
1734: கர்த்தரின் பார்வைக்கு பொல்லாதவன் யார்??
ஏர் 1 நாள 2:3
1735: யாருக்கு கீலேயாத் தேசத்தில் இருபத்துமூன்று ஊர்கள் இருந்தன??
யாவீர். 1 நாள 2:22
1736: குமாரத்திகளேயன்றி குமாரர் இல்லாதிருந்தவன் யார்??
சேசான். 1 நாள 2:34
1737: தாவீதின் மூத்த குமாரன் யார்??
அம்னோன். 1 நாள 3:1
1738: பெத்லெகேமுக்கு மூப்பன் யார்??
எப்ராத்தா. 1 நாள 4:4
1739: தன் சகோதரரைப் பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தவன் யார்??
யாபேஸ். 1 நாள 4:9
1740: துக்கத்தோடே பெறப்பட்டவன் என்று தாயினால் பெயரிடப்பட்டவன் யார்??
யாபேஸ். 1 நாள 4:9
1741: காலேபின் தகப்பன் பெயர் என்ன??
எப்புன்னே. 1 நாள 4:15
1742: காலேபின் குமாரரின் பெயர்கள் என்ன??
ஈரு ஏலா மற்றும் நாகாம் 1 நாள 4:15
1743: கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பன் யார்??
யோவாப். 1 நாள 4:14
1744: மெல்லிய புடவை நெய்தவர்கள் யார்??
அஸ்பெயா வீட்டு வம்சங்கள். 1 நாள 2:21
1745: முதற்பிறந்தவனாக எண்ணப்படாதவன் யார்??
ரூபன். 1 நாள 5:1
1746: தன் சகோதரரில் பலத்தவன் யார்??
யூதா 1 நாள 5: 2
1747: ராஜாதிபத்தியம் யாருடைய சந்ததியில் உண்டானது??
யூதாவின் சந்ததியில். 1 நாள 5:2
1748: அம்ராமின் பிள்ளைகளின் பெயர்கள் என்ன??
ஆரோன் மோசே மிரியாம். 1 நாள 6:3
1749: சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்தில் ஆசாரிய பணிவிடைச் செய்தவன் யார்??
அசரியா. 1 நாள 6:10
1750: ஆசரிப்புக் கூடார வாசலுக்கு முன்பாக பாடகனாய் பணிவிடை செய்தவன் யார்??
ஏமான். 1 நாள 6:33
1751: மகா பரிசுத்த ஸ்தலத்தின் எல்லா வேலைக்கும் வைக்கப்பட்டிருந்தவர்கள் யார்??
ஆரோனும் அவன் குமாரரும். 1 நாள 6:49
1752: ஆரோனின் புத்திரர் எந்த வம்சமானவர்கள்??
கோகாத்தியர். 1 நாள 6:54
1753: அராமிய ஸ்திரீ யார்??
மாகீரின் அம்மா . 1 நாள 7:14
1754: தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால் எப்பிராயீமின் குமாரனுக்கு இட்ட பெயர் என்ன??
பெரீயா. 1 நாள 7:23
1755: கீழ்ப்புறமும் மேல்புறமுமான பெத்தோரோனையும் உசேன் சேராவையும் கட்டியவள் யார்??
சேராள். 1 நாள 7:24
1756: பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தவர்கள் யார்??
ஊலாமின் குமாரர். 1 நாள 8:40
1757: பாபிலோனுக்கு சிறைபிடித்துக் கொண்டு போகப்படாடவராகள் யார்??
யூதா கோத்திரத்தார். 1 நாள 9:1
1758: யூதா கோத்திரத்தார் எதினிமித்தம் சிறைபிடிக்கப்பட்டார்கள்??
தங்கள் துரோகம். 1 நாள 9:1
1759: தேவாலயத்து விசாரணைக்கர்த்தன் யார்??
அசரியா. 1 நாள 9:11
1760: யாருக்கு பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்புவித்திருந்தது??
மத்தித்தியா. 1 நாள 9:31
1761: கிபியோனின் மூப்பனின் பெயர் என்ன??
யெகியேல். 1 நாள 9:35
1762: இஸ்ரவேலர் எங்கே வெட்டுண்டு விழுந்தார்கள்??
கில்போவா மலையில். 1 நாள 10:1
1763: பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தவன் யார்??
சவுல். 1 நாள 10:4
1764: பெலிஸ்தர் சவுலின் தலையை எங்கே தூக்கி வைத்தார்கள்??
தாகோன் கோவிலில். 1 நாள 10:10
1765: யாபேஸ் பட்டணம் எத்தேசத்தில் இருந்தது??
கீலேயாத். 1 நாள 10:11
1766: எருசலேமின் இன்னொரு பெயர் என்ன??
எபூசு 1 நாள 11:4
1767: சீயோன் கோட்டையின் இன்னொரு பெயர் என்ன??
தாவீதின் நகரம். 1 நாள 11:5
1768: நாளுக்கு நாள் விருத்தியடைந்தவன் யார்??
தாவீது 1 நாள 11:9
1769: ஈட்டியை ஓங்கி முந்நூறு பேரை மடங்கடித்தவன் யார்??
அபிசாய். 1 நாள 11:20
1770: செய்கையில் வல்லவனாயிருந்தவன் யார்??
பெனாயா 1 நாள 11:22
1771: உறைந்த மழை பெய்த நாளில் கெபிக்குள் இறங்கி சிங்கத்தை கொன்றவன் யார்??
பெனாயா. 1 நாள 11:22
1772: காகாஸ் நீரோடை தேசத்தான் யார்??
ஊராயி. 1 நாள 11:32
1773: யோர்தான் கரைபுரண்டு போயிருந்த போது அதைக் கடந்து போனவர்கள் யார்??
யுத்த சேவகரான 11 காத் புத்திரர். 1 நாள 12:15
1774: தேவசேனையை ப் போல மகா சேனையானவர்கள் யார்??
தாவீதுக்கு உதவி செய்யும் மனுஷர். 1 நாள 12:22
1775: யாருடைய நாட்களில் தேவனுடைய பெட்டியை தேடாதேப்போனோம் என்று தாவீது கூறினான்??
சவுல் 1 நாள 13:3
1776: சீகோர் நதி எத்தேசத்தைச் சேர்ந்தது??
எகிப்து 1 நாள 13:5
1777: தேவனுடைய பெட்டி இருந்த ரதத்தை நடத்தினவர்கள் யார்??
ஊசாவும் அகியோவும். 1 நாள 13:7
1778: தேவ சமூகத்தில் செத்தவன் யார்??
ஊசா. 1 நாள 13:10
1779: கர்த்தர் ஊசாவை அடித்த ஸ்தலத்துக்கு தாவீது என்ன பெயரிட்டான்??
பேரேஸ் ஊசா. 1 நாள 13:11
1780: தேவனுடைய பெட்டி தன்னுடைய வீட்டில் இருக்கையில் ஆசீர்வதிக்கப்பட்டவன் யார்??
ஓபேத் ஏதோம். 1 நாள 13:14
1781: தாவீது தன் சத்தருக்களை முறியடித்த ஸ்தலத்துக்கு என்ன பேரிட்டான்??
பாகால்பிராசீம்.1 நாள 14:11
1782: தேவனுடைய பெட்டிக்கு ஒரு கூடாரத்தை போட்டவன் யார்??
தாவீது. 1 நாள 15:1
1783: சங்கீத தலைவனாயிருந்தவன் யார்??
கெனானியா. 1 நாள 15:22
1784: கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக சேவிக்க நியமிக்கப்பட்ட தலைவன் யார்??
ஆசாப் 1 நாள 16:5
1785: எதைக் குறித்து மேன்மை பாராட்டவேண்டும்??
கர்த்தருடைய பரிசுத்த நாமம். 1 நாள 16:20
1786: கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் எங்கே விளங்கும்??
பூமியெங்கும்.1 நாள 16:14
1787: நாளுக்கு நாள் எதை சுவிசேஷமாய் அறிவிக்க வேண்டும்??
கர்த்தருடைய இரட்சிப்பை. 1 நாள 16:23
1788: கிபியோனிலுள்ள மேட்டின்மேல் இருந்தது என்ன??
கர்த்தருடைய வாசஸ்தலம் 1 நாள 16:39
1789: யாரை விட்டு தமது கிருபையை விலகப்பண்ணமாட்டேன் என்று கர்த்தர் கூறினார்??
தாவீதின் புத்திரன். 1 நாள 17:13
1790: கர்த்தர் தாவீதை எப்படிப்பட்ட சந்ததியின் மனுஷனாகப் பார்த்தார்??
மகா மேன்மையான சந்ததி1 நாள 17:17
1791: சோபாவின் ராஜாவின் பெயர் என்ன??
ஆதாரேசர்.1 நாள 18:4
1792: தான் போன இடத்திலெல்லாம் கர்த்தரால் காப்பாற்றப்பட்டவன் யார்??
தாவீது 1 நாள 18:6
1793: தாவீது தன்னுடைய ஜனத்திற்கெல்லாம் எதை செய்தான்??
நியாமும் நீதியும். 1 நாள 18:14
1794: தாவீதுக்கு தயவு செய்த ராஜா யார்??
நாகாஸ். 1 நாள 19:2
1795: சிபெக்காய் கொன்று போட்ட இராட்சத புத்திரரின் பெயர் என்ன??
சிப்பாயி. 1 நாள 20:4
1796: கோலியாத்தின் சகோதரன் யார்??
லாகேமி 1 நாள 20:5
1797: இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது எது??
சாத்தான். 1 நாள 21:1
1798: எருசலேமை அழிக்க தேவன் யாரை அனுப்பினார்??
ஒரு தூதனை. 1 நாள 21:15
1799: கர்த்தருக்கு கட்டப்படும் ஆலயத்திற்காக தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவுதரித்தவன் யார்??
தாவீது 1 நாள 22:5
1800: திரளான இரத்தத்தைச் சிந்தி பெரிய யுத்தங்களைப் பண்ணியவன் யார்??
தாவீது 1 நாள 22:8
1801: கர்த்தருடைய ஆலயத்துகாகாக தாவீது சவதரித்த பொன் எவ்வளவு??
ஒரு லட்சம் தாலந்து.1 நாள 22:14
1802: யார் மரிக்கிறபோது அவனுக்கு குமாரர் இல்லாதிருந்தார்கள்??
மகேலியின் குமாரனாகிய எலெயாசர்.1 நாள 23:21&22
1803: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்றென்றைக்கும் எங்கே வாசம் பண்ணுவார் என்று தாவீது கூறினான்??
எருசலேமில். 1 நாள 23:25
1804: ஆசாரிய ஊழியம் செய்த ஆரோனின் குமாரர் யார்??
எலெயாசார் இத்தாமார்.1 நாள 23:2
1805: சீட்டு போட்டு வகுக்கப்பட வேண்டிய வர்களின் நாமங்களை எழுதியவன் யார்??
செமாயா 1 நாள 24:6
1806: கர்த்தரை போற்றி துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் யார்??
எதுத்தூன். 1 நாள 25:3
1807: கர்த்தரை பாடும் பாட்டுக்களை கற்றுக்கொண்டு நிபுணரானவர்கள் எத்தனை பேர்??
288 1 நாள 25:7
1808: விவேகமுள்ள யோசனைக்காரன் யார்??
சகரியா 1 நாள 26:4
1809: பெனாயாவின் இன்னொரு பெயர் என்ன??
பிரத்தோனியன். 1 நாள 27:14
1810: பொக்கிஷ பிரதானியாயிருந்தவன் யார்??
செபுவேல். 1 நாள 26:24
1811: புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் யார்??
தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான். 1 நாளா 27:32
1812: கர்த்தரின் சபை எது??
இஸ்ரவேல்.1 நாள 28:8
1813: வாகனம் என்று எது குறிக்கப்பட்டுள்ளது??
பொன் கேருபீன்கள்.1 நாள 28:18
1814: ஐஸ்வரியமும் கனமும் யாராலே வருகிறது என்று தாவீது சொல்லுகிறான்??
கர்த்தராலே . 1நாள 27:12
1815: பூமியின் மேல் எங்கள் நாட்கள் எதைப்போலிருக்கிறது என்று தாவீது சொல்கிறார்??
நிழலைப்போல். 1 நாள 27:15
1816: கர்த்தர் எப்படிப்பட்ட குணத்தில் பிரியமாயிருக்கிறார்??
உத்தம குணத்தில். 1 நாள 27:17
1817: இரண்டு முறை ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டவன் யார்??
சாலொமோன். 1 நாள 27:23
1818: இஸ்ரவேலர் எல்லாரும் யாருக்கு கீழ்ப்படிந்திருந்தார்கள்??
சாலொமோனுக்கு. 1 நாள 27:24
1819: கர்த்தர் இஸ்ரவேலின் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மத்துவத்தை யாருக்கு கட்டளையிட்டார்??
சாலொமோனுக்கு. 1 நாள 27:25
1820: தாவீது இஸ்ரவேலை அரசாண்ட வருஷங்கள் எத்தனை??
நாற்பது வருஷம். 1 நாள 27:27
1821: தன் ராஜ்யத்திலே பலப்பட்டவன் யார்??
சாலொமோன். 2 நாள 1:1
1822: சாலொமோனுக்கு இருந்த இரதங்கள் எத்தனை??
ஆயிரத்து நானூறு. 2 நாள 1:14
1823: கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால் உம்மை அவர்கள் மேல் ராஜாவாக வைத்தார் என்று யார் யாருக்கு சொன்னது??
தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்கு. 2 நாள 2:11
1824: சாலொமோன் எந்த மலையில் கர்த்தருடைய ஆலயத்தை கட்டினான்??
மோரியா மலை. 2நாள 3:1
1825: சாலொமோன் உண்டு பண்ணின வெண்கல பலிபீடத்தின் நீளம் அகலம் உயரம் என்ன??
நீளம் 20 முழம்
அகலம் 20 முழம்
உயரம் 10 முழம். 2 நாள 4:1
1826: இஸ்ரவேலின் மேல் அதிபதியாயிருக்க கர்த்தர் யாரைத் தெரிந்து கொண்டார்??
தாவீதை. 2 நாள 6:6
1827: கர்த்தரின் வாசஸ்தலம் எது??
பரலோகம் 2 நாள 6:39
1828: எப்பொழுது அக்கினி வானத்திலிருந்து இறங்கி சர்வாங்க தகனபலியையும் மற்ற பலிகளையும் பட்சித்தது??
சாலொமோன் ஜெபம் பண்ணி முடித்த போது.2 நாள 7:1
1829: எந்த நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாய்க் கொண்டாடினார்கள்??
எட்டாம் நாளை. 2 நாள 7:9
1830: எதனால் சாலொமோன் தன் மனைவி தாவீதின் அரண்மனையில் வாசம்பண்ணலாகாது என்று சொன்னான்??
கர்த்தருடைய பெட்டி வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது.2 நாள 8:11
1831: சாலொமோனுக்கு ஒவ்வொரு வருஷத்திலும் வந்த பொன் எத்தனை தாலந்து நிறையாயிருந்தது??
அறுநூற்று அறுபத்தாறு. 2 நாள 9:13
1831: பூமியின் ராஜாக்கள் எல்லாரும் எதற்காக சாலொமோனின் முகதரிசனத்தைத் தேடினார்கள்??
சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தை கேட்பதற்கு. 2 நாள 9:23
1833: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும் என்று சொன்னவன் யார்??
ரெகொபெயாம். 2 நாள 10:10
1834: ரெகொபெயாம் யாரை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்??
அபியாவை. 2 நாள 11:22
1835: எப்பிராயீம் மலைதேசத்திலுள்ள மலை எது??
செமராயீம். 2 நாள 13:4
1836: கர்த்தர் யாரை அடித்ததினால் அவன் மரணமடைந்தான்??
யெரொபெயாம். 2 நாள 13:20
1837: எந்த ராஜா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்?
ஆசா 2 நாள 14:2
1838: யாரை ராஜாத்தியாய் இராதபடிக்கு ஆசா விலக்கிப் போட்டான்??
தன் தாயான மாகாளை. 2 நாள 15:16
1839: கர்த்தருடைய கண்கள் எதற்காக பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது??
தம்மைபற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி. 2 நாள 16:9
1840: தன் கால்களில் வியாதி கண்டு மரித்த ராஜா யார்??
ஆசா 2 நாள 16:12
1841: யாருடைய இருதயம் கர்த்தருடைய வழிகளில் உற்சாகங்கொண்டது??
யோசபாத். 2 நாள 17:6
1842: யாருக்கு மிகுந்த ஐஸ்வரியமும் கனமும் உண்டாயிருந்தது??
யோசபாத்துக்கு. 2 நாள 18:1
1843: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று சொன்ன தீர்க்கதரிசி யார்??
மிகாயா. 2 நாள 18:13
1844: கர்த்தர் யாருக்கு துணை??
உத்தமனுக்கு. 2 நாள 19:1
1845: எங்கேதியாவின் மறுபெயர் என்ன??
ஆசாசோன்தாமார். 2 நாள 20:2
1846: எங்கே கர்த்தருக்கு ஸோத்திரம் செலுத்தினார்கள்??
பெராக்காவில். 2 நாள 20:26
1847: ஆகாபின் குமாரத்தி யாருக்கு மனைவியாயிருந்தாள்??
யோராமுக்கு. 2 நாள 21:6
1848: குடல்களில் உண்டான தீராத நோயினால் செத்துப்போன ராஜா யார்??
யோராம். 2 நாள 21:18
1849: ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்ட ராஜா யார்??
அகசியா. 2 நாள 22:2
1850: ஆறு வருஷமாய் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ராஜா யார்??
யோவாஸ். 2 நாள 24:12
1851: தன் வஸ்த்திரங்களைக் கிழித்துக்கொண்டு துரோகம் துரோகம் என்று கூவினவள் யார்??
அத்தாலியாள். 2 நாள 23:13
1852: குதிரை வாசலில் வைத்து கொன்று போடப்பட்டது யார்??
அத்தாலியாள். 2 நாள 23:15
1853: பாகாலின் பூஜாசாரி யார்??
மாத்தான். 2 நாள 23:17
1854: பொல்லாத ஸ்திரீ யார்??
அத்தாலியாள். 2 நாள 24:7
1855: சாகும் போது கர்த்தர் அதைப்பார்ப்பார் அதை கேட்பார் என்று சொன்னவன் யார்??
யோய்தாவின் குமாரன் சகரியா. 2 நாள 24:22
1856: நம்முடைய கைசாமர்த்தியத்தைப் பார்ப்போம் என்று அமத்சியா யாருக்கு சொல்லி அனுப்பினான்??
யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு. 2 நாள 25:17
1857: யார் கர்த்தரை தேடினநாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்??
உசியா ராஜா. 2 நாள 26:5
1858: வெள்ளாண்மைப் பிரியன் யார்??
,உசியா ராஜா. 2 நாள 26:10
1859: நெற்றியில் குஷ்டரோகம் யாருக்கு தோன்றிற்று??
உசியா ராஜாவுக்கு. 2 நாள 26:19
1860: கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினவன் யார்??
யோதாம். 2 நாள 27:3
1861: பேரீச்சை மரங்களின் பட்டணம் எது??
எரிகோ. 2 நாள 27:15
1862: தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் துரோகம் பண்ணிக்கொண்டிருந்த ராஜா யார்??
ஆகாஸ். 2 நாள 27:22
1863: சர்வாங்க தகனபலிகளுக்கு தன் ஆஸ்த்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கை கொடுத்த ராஜா யார்??
எசேக்கியா ராஜா, 2 நாள 30:3
1864: இந்த காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டு வர தொடங்கினது முதல் நாங்கள் சாப்பிட்டுத் திர்ப்தியடைந்தோம் என்று சொன்னது யார்??
அசரியா என்னும் பிரதான ஆசாரியன். 2 நாள 32:13
1865: பிரார்த்தித்து வானத்தை நோக்கி அபயமிட்டவர்கள் யார்??
எசேக்கியா ராஜாவும் ஏசாயா தீர்க்கதரிசியும், 2 நாள 32: 20
1866: செத்தமுகமாய் தன் தேசத்திற்குத் திரும்பி போனவன் யார்??
அசீரிய ராஜாவாகிய சனகெரிப். 2 நாள 33:21
1867: கீயோன் ஆற்றில் அணைகட்டிய ராஜா யார்??
எசேக்கியா ராஜா. 2 நாள 33:30
1868: முட்செடிகளில் பிடித்து இரண்டு வெண்கலச் சங்கிலியால் கட்டி பாபிலோனுக்கு கொண்டு போகப்பட்டவன் யார்??
மனாசே. 2 நாள 33:11
1869: தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில் வலது இடது புறமாக விலகாமல் நடந்த ராஜா யா??
யோசியா. 2 நாள 34: 2
1870: கர்த்தருடைய நியாப்பிரமாண புஸ்தகத்தை கண்டெடுத்தவன் யார்??
இலக்கியா. 2 நாள 34:14
1871: எருசலேமில் இரண்டாம் வகுப்பில் குடியிருந்தவள் யார்??
உல்தாள். 2 நாள 34:22
1872: எவர்கள் கர்த்தருக்கு பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்??
லேவியர். 2 நாள 35:3
1873: கர்கேமிஸ் பட்டணம் எங்குள்ளது??
ஐபிராத் நதியோரம். 2 நாள 35:20
1874: நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல என்னோடே யுத்தம் பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன் என்று யார் யாருக்கு சொன்னது??
எகிப்தின் ராஜா நேகோ யூதாவின் ராஜாவாகிய யோசியாவுக்கு. 2 நாள 35: 21
1875: யோசியாவின் மேல் புலம்பல் பாடினவர் யார்??
ஏரேமியா தீர்க்கதரிசி. 2 நாள 35:25
1876: யாருடைய பெயர் யோயாக்கீம் என்று மாற்றப்பட்டது??
எலியாக்கீம். 2 நாள 36:4
1877: மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்ட ராஜா யார்??
யோயாக்கீன். 2 நாள 36:9
1878: எரோமியா தீர்க்கதரிசிக்கு முன்பாக தன்னை தாழ்த்தாதவன் யார்??
சிதேக்கியா. 2 நாள 36: 12
1879: பெர்சியாவின் ராஜா யார்??
கோரேஸ். 2 நாள 36: 22
1870: யூதாவிலுள்ள எருசலேமில் தமக்கு ஆலயத்தை கட்டும்படி தேவன் யாருடைய ஆவியை ஏவினார்??
பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை. 2 நாள 36:22
1871: பொக்கிஷக்காரன் யார்??
மித்திரேதாத் எஸ்றா 1:8
1872: பாடகர்களானவர்கள் எத்தனை பேர்??
ஆசாபின் புத்திரர் 128 பேர். எஸ்றா 2:41
1873: எது பகுத்தறியக்கூடாதிருந்தது??
சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும் ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்று பகுத்தறியக்கூடாதிருந்தது. எஸ்றா 3:13
1874: பெரியவரும் பேர் பெற்றவருமானவர் யார்??
அஸ்னாப்பார். எஸ்றா 4:10
1875: எருசலேமிலுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னவர்கள் யார்??
ஆகாய் தீர்க்கதரிசி இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசி. எஸ்றா 5:1
1876: எவர்கள் எருசலேமிலுள்ள ஆலயத்தைக் கட்டதொடங்கினார்கள்??
செருபாபேலும் யெசுவாவும். எஸ்றா 5:2
1877: ஆலயத்தின் அஸ்திபாரத்தை போட்டவன் யார்??
செஸ்பாத்சார். எஸ்றா 5:16
1878: மேதிய சீமையிலிருக்கிற பட்டணம் எது??
அக்மேதா பட்டணம். எஸ்றா 6:2
1879: எஸ்றாவின் தகப்பன் பெயர் என்ன??
செராயா. எஸ்றா 7:1
1880: மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தேறின வேதபாரகன் யார்??
எஸ்றா. 7:6
1881: கசிப்பியாவின் தலைவன் யார்??
இத்தோ. எஸ்றா 8:17
1882: எஸ்றா எந்த நதியண்டையில் உபவாசத்தை கூறினார்??
அகாவா நதியண்டையில். எஸ்றா 8:21
1883: தேவனுடைய கரம் எவர்களுக்கு நன்மையாயிருக்கிறது??
தம்மை தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாயிருக்கிறது. எஸ்றா 8:22
1884: தேவனுடைய ஆலயத்தின் ஆசாரியன் யார்??
உரியா. எஸ்றா 8:30
1885: எது தேசத்தின் ஜனங்களோடே கலந்து போயிற்று??
பரிசுத்த வித்து. எஸ்றா 9:2
1886: அந்திப்பலி செலுத்தபடுமட்டும் திகைத்தவனாய் உட்கார்ந்து கொண்டிருந்தவன் யார்??
எஸ்றா 9:4
1887: சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்து கொண்டிருந்தவன் யார்??
யோகனான். எஸ்றா 10: 6
1888: நெகேமியாவின் தகப்பன் யார்??
அகலியா. நெகேமியா1:1
1889: ராஜாவுக்கு பானபாத்திரக்காரனாயிருந்தவன் யார்??
நெகேமியா1:11
1890: ராஜாவின் வனத்துகாவலாளன் யார்??
ஆசாப். எஸ்றா 2:8
1891: இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை ஒருவன் விசாரிக்க வந்தான் என்பது எவர்களுக்கு விசனமாயிருந்தது??
சன்பல்லாத் தொபியா. நெகேமியா 2:10
1892: நெகேமியா எதை ஒருவருக்கும் அறிவிக்கவில்லை??
எருசலேமுக்காகச் செய்யும்படி தேவன் நெகேமியாவின் மனதிலே வைத்ததை. நெகேமியா 2:12
1893: எந்த ஊர் பிரபுக்கள் தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை??
தெக்கோவா ஊர். நெகேமியா 3:5
1894: ஓபேலில் குடியிருக்கிறவர்கள் யார்??
நிதனீமியர். நெகேமியா 3:26
1895: தட்டானின் குமாரன் யார்??
மல்கியா மிப்காத். நெகேமியா 3:31
1896: ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல் மதில் இடிந்து போகும் என்று சொன்னவன் யார்??
தொபியா. நெகேமியா 4:3
1896: யார் தன் வீட்டில் அடைக்கப்பட்டிருந்தான்??
செமயா. நெகேமியா 6:10
1897: அலங்கமானது எத்தனை நாளைக்குள் கட்டப்பட்டது??
52 நாளைக்குள். நெகேமியா 6:15
1898: அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவன் தேவனுக்கு பயந்தவன் யார்??
அனனியா. நேகேமியா 7:2
1899: பாடகரான ஆசாபின் புத்திரர் எத்தனை பேர்??
148 பேர். நெகேமியா 7: 44
1900: நெகேமியா ஜனங்களிடத்தில் எது உங்களுடைய பெலன் என்றான்??
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே. நெகேமியா 8:10
1901: எந்த நாள் விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது??
எட்டாம் நாள். நெகேமியா 8:18
1902: எது ஒரு ஜாமம் மட்டும் விசிக்கப்பட்டது??
கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகம். நெகேமியா 9:3
1903: கர்த்தர் யாருடைய இருதயத்தை அவருக்கு முன்பாக உண்மையுள்ளதாகக் கண்டார்??
ஆபிரகாம். நெகேமியா 9:8
1904: பரிசுத்த நகரம் எது??
எருசலேம். நெகேமியா 11:1
1905: எவர்களை ஜனங்கள் வாழ்த்தினார்கள்??
எருசலேமிலே குடியிருக்க சம்மதித்தவர்களை . நெகேமியா 11:2
1906: தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக் கர்த்தன் யார்??
செராயா. நெகேமியா 11:11
1907 : ஜெபத்தில் ஸோத்திரப்பாட்டைத் துவக்குகிறவன் யார்??
மத்தனியா. நெகேமியா 11:17
1908: யார் தொபியாவுக்கு தேவனுடைய ஆலயத்தில் ஒரு அறையை ஆயத்தம்
பண்ணியிருந்தான்??
ஆசாரியனாகிய எலியாசிப் . நெகேமியா 13:5
1909: எது தூரத்திலே கேட்கப்பட்டது??
எருசலேமின் களிப்பு. நெகேமியா 12:43
1910: யார் தன் தேவனால் சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்??
சாலொமோன். நெகேமியா 13:26
1911: நூற்றிருபத்தேழு நாடுகளை அரசாண்ட ராஜா யார்??
ஆகாஸ்வேரு ராஜா. எஸ்தர் 1:1
1912: மகாரூபவதியாயிருந்த ராஜஸ்திரீ யார்??
வஸ்தி. எஸ்தர் 1:10
1913: ஸ்திரீகளை காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானி யார்??
யேகாய். எஸ்தர் 2:3
1914: எஸ்தரின் மறுபெயர் என்ன??
அத்சாள். எஸ்தர் 2:7
1915: அபிமான ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானி யார்??
சாஸ்காஸ். எஸ்தர் 2:14
1916: எஸ்தரின் தகப்பன் பெயர் என்ன??
அபியாயேல். எஸ்தர் 2:15
1917: ராஜாவாகிய ஆகாஸ்வேருவின் மேல் கைபோட வகை தேடிய பிரதானிகள் இருவர் யார்??
பிக்தான், தேரேஸ். எஸ்தர் 2:21
1918: ஆகாஸ்வேரு ராஜா யாரை மேன்மைபடுத்தி அவன் ஆசனத்தை உயர்த்தி வைத்தான்??
ஆமானை. எஸ்தர் 3:1
1919: ஆகாகியன் யார்??
ஆமான் . எஸ்தர் 3:1
1920: யூதரை அழிக்க ராஜாவின் கஜனாவுக்கு செலுத்த எத்தனை தாலந்து வெள்ளியை எண்ணிக் கொடுப்பேன் என்று ஆமான் கூறினான்??
பதினாயிரம் தாலந்து வெள்ளி. எஸ்தர் 3:9
1921: யார் யார் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்??
ஆகாஸ்வேரு ராஜாவும் ஆமானும். எஸ்தர் 3:15
1922: எந்த நகரம் கலங்கிற்று??
சூசான் நகரம். எஸ்தர் 3:15
1923: நீ இந்த காலத்தில் மவுனமாயிருந்தால் யூதருக்கு சகாயமும் இரட்சிப்பும் வெறொரு இடத்திலிருந்து எழும்பும் யார் யாருக்கு சொன்னது??
மொர்தெகாய் எஸ்தருக்கு சொன்னது. எஸ்தர் 4:14
1924: ஆமானின் மனைவியின் பெயர் என்ன??
சிரேஷ். எஸ்தர் 5:10
1925: ஆமான் மொர்தெகாயிக்கு உண்டு பண்ணின தூக்குமரத்தின் உயரம் என்ன??
ஐம்பது முழ உயரம். எஸ்தர் 5:14
1926: சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப் போனவன் யார்??
ஆமான். எஸ்தர் 6:12
1927: யார் தன் பிராணுக்காக விண்ணப்பம் பண்ண எழுந்து நின்றான்??
ஆமான். எஸ்தர் 7:7
1928: யார் மென்மேலும் பெரியவனானான்??
மொர்தெகாய் எஸ்தர் 9:4
1929: யூதர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும் ஆமான் போடுவித்த சீட்டு எது??
பூர். எஸ்தர் 9:24
1930: யூதர் சூசான் அரமனையில் எத்தனை பேரை கொன்று நிர்மூலமாக்கினார்கள்??
500 பேர். எஸ்தர் 9:6
1931: யோபுவின் தேசம் எது??
ஊத்ஸ். யோபு 1:1
1932: கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தவன் யார்??
யோபு 1:3
1933: தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்ற போது அவர்கள் நடுவில் வந்து நின்றது யார்??
சாத்தான். யோபு 1:6
1933: யோபுவின் மூன்று சிநேகிதர்கள் யார் யார்??
எலிப்பாஸ் பில்தாத் சோப்பார். யோபு 2:11
1934: யோபுவின் சிநேகிதர்கள் எத்தனை நாள் அவனோடு ஒன்றும் பேசாமல் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்??
ஏழுநாள். யோபு 2:13
1935: தேவன் எவர்களிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை??
தம்முடைய பணிவிடை க்காரரிடத்தில். யோபு 4:18
1936: நிர்மூடனைக் கொல்லுவது எது??
கோபம். யோபு 5:2
1937: எது மண்ணிலிருந்து முளைக்கிறதில்லை??
வருத்தம். யோபு 5:6
1938: எதை அனுபவிக்க மனுஷன் பிறந்திருக்கிறான்??
வருத்தம். யோபு 3:7
1939: எது தன் வாயை மூடும் ??
தீமை. யோபு 5:16
1940: எது தனக்கு முன்பாக அணி அணியாய் நிற்கிறது என்று யோபு சொல்கிறார்??
தேவனால் உண்டாகும் பயங்கரங்கள். யோபு 6:4
1941: யார் இனி ஏறிவரான்??
பாதாளத்தில் இறங்குகிறவன். யோபு 7:9
1942: மற்ற எந்தப் புல்லைப்பார்க்கிலும் சீக்கிரமாய் வாடிப்போவது எது??
கோரைப்புல். யோபு 8:12
1943: தேவன் எவர்களை வெறுக்கிறதில்லை??
உத்தமனை. யோபு 8:20
1944: தேவன் எவைகளை மறைத்துப் போடுகிறார்??
நட்சத்திரங்களை. யோபு 9:7
1945: உலகம் யாருடைய கையில் விடப்பட்டிருக்கிறது??
துன்மார்க்கர். யோபு 9:24
1946: யாருடைய கூடாரங்களில் செல்வமுண்டு??
கள்ளருடைய. யோபு 12:6
1947: தேவன் எவர்களை மதிமயக்குகிறார்??
நியாதிபதிகளை. யோபு 12:17
1948: யார் கர்த்தருடைய சந்நிதியில் சேரான்??
மாயக்காரன். யோபு 13:16
1949: எவர்களையும் தேவன் நம்புவதில்லை??
தம்முடைய பரிசுத்தவான்களை. யோபு 15:15
1950: யாருடைய கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்??
பரிதானம் வாங்கினவர்களின். யோபு 15:34
1951: யார் தன் வழியை உறுதியாய் பிடிப்பான்??
நீதிமான். யோபு 17:9
1952: யாருடைய விளக்கு அணைந்து போகும்??
துன்மார்க்கனுடைய. யோபு 18:5
1953: துன்மார்க்கனுடைய வாசஸ்தலத்தின் மேல் எது தெளிக்கப்படும்??
கந்தகம். யோபு 18:15
1954: தேவன் எதை தன் மேல் வீசினார் என்று யோபு சொல்கிறார்??
வலையை. யோபு 19:6
1955: பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணுவது எது??
மூர்க்கம் . யோபு 19:29
1956: யார் ஆபத்து நாளுக்கென்றுவைக்கப்படுகிறான்??
துன்மார்க்கன். யோபு 21:30
1957: யோபு எதை தனக்கு வேண்டிய ஆகாரத்தை பார்க்கிலும் அதிகமாய்க் காத்து கொண்டேன் என்கிறார்??
தேவனுடைய வாயின் வார்த்தைகளை. யோபு 23:12
1958: பாவிகளை எது பட்சிக்கும்??
பாதாளம். யோபு 24:19
1959: எவைகள் தேவனுடைய பார்வைக்கு சுத்தமானவைகளல்ல??
நட்சத்திரங்கள். யோபு 25:5
1960: தன் ஆவிபிரியுமட்டும் எதை தன்னை விட்டு விலக்கேன் என்று யோபு சொல்கிறார்??
உத்தமத்தை. யோபு 27:5
1961: மண்ணிலிருந்து எடுக்கப்படுவது எது??
இரும்பு. யோபு 28:2
1962: எது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை??
ஞானம். யோபு 28:12&13
1963: எது தன் கூடாரத்தின் மேல் இருந்ததாக யோபு சொல்கிறார்??
தேவனுடைய இரகசியச் செயல். யோபு 29:4
1965: யோபுவுக்கு உடுப்பாயிருந்தது எது??
நீதி. யோபு 29:14
1966: எது மேகத்தைப் போல் கடந்து போயிற்றென்று யோபு சொல்கிறார்??
தன் சுகவாழ்வு. யோபு 30:15
1967: சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரம் எது??
மரணம். யோபு 30:23
1968: யோபு எதற்கு சகோதரனும் எதற்கு தோழனுமானேன் என்கிறார்??
மலைப்பாம்புகளுக்கு சகோதரனும் கோட்டான்களுக்கு தோழன்
1969: தேவன் எதை இரண்டாவது விசை திருத்துகிறவரல்ல??
ஒரு விசை சொல்லியிருக்கிற காரியத்தை. யோபு 33:14
1970: ஆயிரத்தில் ஒருவர் யார்??
சாமாசி பண்ணுகிற தூதனானவர். யோபு 33:23.
1971: எது மெய்யே??
தேவன் அநியாயஞ் செய்யாமலும் சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே. யோபு 34:12
1972: தேவன் எதற்கு செவிகொடார்??
வீண்வார்த்தைகளுக்கு. யோபு 35:13
1973: எவர்கள் குரோதத்தைக் குவித்துக் கொள்ளுகிறார்கள்??
மாயமுள்ள இருதயத்தார். யோபு 36:13
1974: தேவன் செய்ய நினைக்கிறதையும் மந்தாரம் எழும்பப் போகிறதையும் எவைகள் அறியப்படுத்தும்??
ஆடுமாடுகள். யோபு 36:33
1975: தேவன் தம்முடைய சுவாசத்தினால் எதைக் கொடுக்கிறார்??
குளிரைக் கொடுக்கிறார். யோபு 37:10
1976: தேவன் எவர்களை மதிக்கமாட்டார்??
தங்கள் எண்ணத்தில் ஞானியாயிருக்கிற எவர்களையும். யோபு 37:24
1977: எது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம் பண்ணும்??
காட்டுக்கழுதை. யோபு 39:5-7
1978: எதற்கு தேவன் புத்தியைக் கொடாமல் ஞானத்தை விலக்கி வைத்தார்??
தீக்குருவி. யோபு 39:17
1979: எது ஆயுதங்களைத் தரித்தவருக்கு எதிராக புறப்படும் ??
குதிரை. யோபு 39: 19-21
1980: கன்மலையிலும் கன்மலையின் அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம் பண்ணுவது எது??
கழுகு. யோபு 39:27&29
1981: தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை எது??
பிகெமோத். யோபு 40:15-19
1982: தும்முகையில் ஒளி வீசுவது எது??
லிவியாதான். யோபு 41:18
1983: அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது எது??
லிவியாதான். யோபு 41:34
1984: கர்த்தர் எங்கிருந்து யோபுவுக்கு உத்தரவு அருளினார்??
பெருங்காற்றிலிருந்து. யோபு 40:6
1985: எது எழும்பும் போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்??
லிவியாதான் . யோபு 41:25
1996: நதி புரண்டு வந்தாலும் பயந்து ஓடாதது எது??
பிகெமோத். யோபு 40:23
1997: யாருடைய முகத்தை பார்த்து உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத் தக்கதாக நடத்தாதிருப்பேன் என்று கர்த்தர் கூறினார்??
யோபின் முகத்தை. யோபு 42:8
1998 : கர்த்தரை குறித்து நிதானமாய்ப் பேசின மனிதன் யார்??
யோபு. யோபு 42:8
1999: எப்பொழுது கர்த்தர் யோபுவின் சிறையிருப்பை மாற்றினார்??
யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்த போது. யோபு 42:10
2000: யோபுவின் மகள்கள் பெயர் என்ன??
மூத்தவள் எமீமாள், இரண்டாவது கெத்சீயாள் , மூன்றாம் மகள் கேரேனாப். யோபு 42:14
2001: எப்பொழுது நாம் கர்த்தருடைய வேதத்தை தியானம் பண்ண வேண்டும்??
இரவும் பகலும் தியானம் பண்ண வேண்டும். சங் 1:2
2002: காற்று பறக்கடிக்கும் பதரைப்போல் இருப்பவர் யார்??
துன்மார்க்கர். சங் 1:5
2003: சங்கீதக்காரனின் பரிசுத்த பர்வதம் எனப்படுவது எது??
சீயோன். சங் 2:6
2004: கர்த்தரை எவ்விதமாய்ச் சேவிக்க வேண்டும்??
பயத்துடன் சேவிக்க வேண்டும். சங் 2:11
2005: குமாரன் கோபம் கொள்ளாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்??
அவரை முத்தம் செய்ய வேண்டும். சங் 2:12
2006: இரட்சிப்பு யாருடையது??
கர்த்தருடையது. சங் 3:8
2007: கர்த்தர் தமக்காக எவர்களை தெரிந்து கொண்டார்??
பக்தியுள்ளவர்களை. சங் 4:3
2008: கோபம் கொண்டாலும் எதைச் செய்யக்கூடாது??
பாவம் செய்யக்கூடாது. சங் 4:4
2009: நாம் எவ்வித பலிகளைச் செலுத்த வேண்டும்??
நீதியின் பலிகளை. சங் 4:5
2010: கர்த்தர் எதில் பிரியப்படுகிறவர் அல்ல??
துன்மார்க்கத்தில். சங் 5:4
2011: எது கர்த்தரிடத்தில் சேருவதில்லை??
தீமை. சங் 5:4
2012: கர்த்தர் நீதிமானை ஆசீர்வதித்து எதனால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவார்??
காருண்யம் என்னும் கேடகத்தினால். சங் 5:11
2013: எதில் கர்த்தரை நினைவு கூருவதில்லை??
மரணத்தில். சங் 6:5
2014: சத்துரு எதைப்போல் தாவீதின் ஆத்துமாவை பிடித்துக்கொண்டு போகிறான்??
சிங்கத்தைப் போல். சங் 7:2
2015: நீதியுள்ள நியாதிபதி நாள் தோறும் பாவியின் மேல் என்ன செய்கிறார்??
சினம்கொள்ளுகிறார். சங் 7:11
2016: கர்த்தருடைய நாமம் பூமி எங்கும் எப்படி இருக்கிறது??
மேன்மையுள்ளதாக. சங் 8:1
2017: மனுஷனை யாரைவிடச் சற்று சிறியவனாக்கினார்??
தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினார். சங் 8:5
2018: கர்த்தருடைய சிங்காசனத்தைக் அவர் எதற்காக ஆயத்தம் பண்ணினார்??
நியாயத்தீர்ப்புக்காக. சங் 9:7
2019: துன்மார்க்கன் எங்கே தள்ளப்படுவான்??
நரகத்திலே. சங் 9:17
2020: துன்மார்க்கன் தன் கர்வத்தினால் யாரைத் தேடான்??
கர்த்தரைத் தேடான். சங் 10:4
2021: தேவனை அசட்டை பண்ணுகிறவன் யார்??
துன்மார்க்கன். சங் 10:13
2022: மண்ணானவன் யார்??
மனுஷன். சங் 10:18
2023: கர்த்தருடைய இமைகள் யாரைச் சோதித்து அறிகிறது??
மனுபுத்திரரைச் சோதித்தறிகிறது. சங் 11:4
2024: கர்த்தர் யாரைச் சோதித்தறிகிறார்??
நீதிமானை. சங் 11:5
2025: கர்த்தருடைய முகம் யாரை நோக்கி இருக்கும்??
செம்மையானவனை. சங் 11:7
2026: யார் அற்றுப் போகிறான்??
பக்தியுள்ளவன். சங் 12:1
2027: மனுபுத்திரரில் எவர்கள் குறைந்திருக்கிறார்கள்?
உண்மையுள்ளவர்கள். சங் 12:1
2028: கர்த்தருடைய சொற்கள் எதில் உருக்கிப் புடமிடப்பட்டவை??
மண்குகையில். சங் 12:6
2029: மனுபுத்திரரில் யார் உயர்ந்திருப்பார்கள்??
சண்டாளர். சங் 12:8
2030: தாவீது எதன் மேல் நம்பிக்கையாயிருக்கிறார்??
கிருபையின் மேல். சங் 13:5
2031: தேவன் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறவன் யார்??
மதி கெட்டவன். சங் 14:1
2032 : எதற்காகக் கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்??
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க சங் 14:2
2033: தேவன் யாருடைய சந்ததியோடே இருக்கிறார்??
நீதிமானின் சந்ததியோடே. சங் 14:5
2034: கர்த்தருடைய வீட்டில் தங்கி அவருடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுகிறவன் எதை நடப்பிக்க வேண்டும்??
நீதியை நடப்பிக்க வேண்டும். சங் 15:2
2035: அந்நிய தேவனை நாடிப் பின் பற்றுகிறவர்களுக்கு எது பெருகும்??
வேதனை பெருகும். சங் 16:4
2036: தாவீது எதைப் போல தன்னை காத்தருள சொல்லுகிறார்??
கண்மணியைப் போல. சங் 17:8
2037: பீறுகிறதற்கு ஆவலுள்ள மிருகம் எது??
சிங்கம். சங் 17:12
2038: தேவன் எதன் மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்??
கேருபீன்கள் மேல். சங் 18:10
2039: தேவன் எதைத் தனக்கு மறைவிடமாக்கினார்??
இருளை. சங் 18:11
2040: கர்த்தர் எங்கே குமுறினார்??
வானங்களிலே குமுறினார். சங் 18:13
2041: உத்தமமான வழி யாருடையது??
தேவனுடைய வழி. சங் 18:30
2042: கர்த்தர் தாவீதின் கைகளை எதற்குப் பழக்குகிறார்??
யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். சங் 18:34
2043: கர்த்தர் ஜீவனுள்ளவர் என்று அறிக்கையிட்டவ யார்??
தாவீது. சங் 18: 46
2044: எவைகள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றது?
வானங்கள். சங் 19:1
2045: பராக்கிரமசாலியைப் போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருந்தது எது??
சூரியன். சங் 19:5
2046 : குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது எது??
கர்த்தருடைய வேதம். சங் 19:7
2047: சத்தியமும் பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது எது??
கர்த்தருடைய சாட்சி. சங் 19:7
2048: சுத்தமும் என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது எது??
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம். சங் 19:9
2049: உண்மையும் நீதியுமாயிருக்கிறது எது??
கர்த்தருடைய நியாயங்கள். சங் 19:9
2050: எதினால் நாம் மகிழ்ச்சியடைவோம்??
இரட்சிப்பினால். சங் 20:5
2051: கர்த்தருடைய கை யாரை எட்டிப்பிடிக்கும்??
கர்த்தருடைய சத்துருக்களெல்லாரையும். சங் 21:8
2052: கர்த்தர் தமது வல்லமையில் எழுந்தருளும் போது ஜனங்கள் எதைப்பாடிக் கீர்த்தனம் பண்ணுவார்கள்??
கர்த்தருடைய வல்லமையை. சங் 21:13
2053: இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவன் யார்??
பரிசுத்தர். சங் 22:3
2054: கர்த்தரை நம்பினவர்கள் என்ன செய்து போகவில்லை??
வெட்கப்பட்டுப் போகவில்லை. சங் 22:5
2055: நானோ ஒரு புழு என்று தன்னைத் தாழ்த்துகிறவன் யார்??
தாவீது. சங் 22:6
2056: எந்த தேசத்தில் பலத்த எருதுகள் இருந்தன??
பாசானின் தேசத்தில். சங் 22:12
2057: கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள் அவரை என்ன செய்ய வேண்டும்??
துதிக்க வேண்டும். சங் 22:23
2058: புசித்து திருப்தியடைகிறவர்கள் யார்??
சாந்தகுணமுள்ளவர்கள். சங் 22:26
2059: ராஜ்யம் யாருடையது??
கர்த்தருடையது. சங் 22:28
2060: பூமியைக் கர்த்தர் எதன் மேல் அஸ்திபாரப் படுத்தினார் ??
கடல்களின் மேல். சங் 24:2
2061: கர்த்தரை தேடி விசாரித்து அவருடைய சமூகத்தை நாடுகிற சந்ததியின் பெயர் என்ன??
யாக்கோபு என்னும் சந்ததி. சங் 24:6
2062: கர்த்தருடைய இரக்கங்களும் அவருடைய காருண்யங்களும் எது முதல் இருக்கிறது??
அநாதி காலமுதல் இருக்கிறது. சங் 25:6
2063: சாந்தகுணமுள்ளவர்களுக்குக் கர்த்தர் எதை போதிக்கிறார்??
தமது வழியை. சங் 25:9
2064: கர்த்தருடைய இரகசியம் யாரிடத்தில் இருக்கிறது??
கர்த்தருக்குப் பயந்தவர்களிடத்தில். சங் 25:14
2065: தாவீது எதிலே தன் கைகளைக் கழுவினான்??
குற்றமில்லாமையில். சங் 26:7
2066: தாவீதின் இருதயம் கர்த்தரை நம்பியிருந்தபடியால் அவன் எதைப் பெற்றான்??
சகாயம். சங் 28:7
2067: எப்படி கர்த்தரை தொழுது கொள்ள வேண்டும்??
பரிசுத்த அலங்காரத்துடன். சங் 29:3
2068: கர்த்தரின் சத்தம் எந்த மரங்களை முறிக்கிறது??
கேதுரு மரங்களை. சங் 29:5
2069: கர்த்தர் எந்த வனாந்திரத்தை அதிரப்பண்ணுகிறார்??
காதேஸ் வனாந்திரத்தை. சங் 29:8
2070: கர்த்தர் தமது ஜனத்துக்கு எதைக் கொடுப்பார்??
பெலன் கொடுப்பார். சங் 29:11
2071: கர்த்தர் தமது ஜனத்துக்கு எதை அருளிச் செய்வார்??
சமாதானத்தை. சங் 29:11
2072: கர்த்தருடைய பரிசுத்தத்தினை நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டியவர்கள் யார்??
கர்த்தருடைய பரிசுத்த வான்கள் சங் 30:4
2073: கர்த்தருடைய தயவு எவ்வளவு காலம்??
நீடியவாழ்வு. சங் 30:5
2074: களிப்பு எப்பொழுது உண்டாகும்??
விடியற்காலத்தில். சங் 30:5
2075: தாவீதை மீட்டுக் கொண்ட கர்த்தருக்கு அவன் என்ன பெயரிட்டு அழைக்கிறான்??
சத்தியபரனாகிய கர்த்தர் என்று
சங் 31:5
2076: யாரைப்போல தாவீது எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டான்??
செத்தவனைப்போல. சங் 31:13
2077: துன்மார்க்கர் வெட்கப்பட்டு எங்கு மவுனமாயிருக்கட்டும்??
பாதாளத்தில். சங் 31:17
2078: நாவுகளின் சண்டைக்குக் கர்த்தர் யாரை விலக்கி காக்கிறார்??
கர்த்தருக்கு பயந்தவர்களை. சங் 31:20
2079: யாரை கர்த்தர் தற்காக்கிறார்??
உண்மையானவனை. சங் 31:23
2080: வாரினாலும் கடிவாளத்தினாலும் எது கட்டப்படும்??
குதிரையின் வாய். சங் 32:9
2081: அநேக வேதனைகள் யாருக்கு உண்டு??
துன்மார்க்கனுக்கு. சங் 32:10
2082: துதி செய்வது யாருக்கு தகும்??
செம்மையானவர்களுக்குத் தகும். சங் 33:1
2083: யாருடைய வார்த்தை உத்தமமானது??
கர்த்தருடைய வார்த்தை. சங் 33:4
2084: வானங்கள் எதனால் உண்டாக்கப்பட்டது??
கர்த்தருடைய வார்த்தையினால். சங் 33:6
2085: சவுரியவான் எதன் மிகுதியினால் தப்பான்??
பலத்தின் மிகுதியினால். சங் 33:16
2086: இரட்சிப்பதற்கு எது விருதா??
குதிரை விருதா. சங் 33:17
2087: தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாதது எது??
குதிரை. சங் 33:17
2088: கர்த்தருக்குப் பயந்து அவரது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் என்ன செய்கிறார்??
மரணத்திற்கு விலக்கி விடுவிக்கிறார். சங் 33:18
2089: தாவீது யாருக்கு முன்பாக வேஷம் மாறினான்??
அபிமெலேக்குக்கு முன்பாக.
2090: கர்த்தரை நோக்கி பார்த்தவர்களின் முகங்கள் என்ன செய்யவில்லை??
வெட்கப்படவில்லை. சங் 34:5
2091: கர்த்தரை தேடுகிறவர்களுக்கு எது குறைவுபடாது??
ஒரு நன்மையும் குறைவுபடாது. சங் 34:10
2092: நன்மையைக் காணும்படி எதை விரும்ப வேண்டும்??
ஜீவனை விரும்ப வேண்டும். சங் 34:12
2093: கர்த்தருடைய முகம் யாருக்கு விரோதமாக இருக்கிறது??
தீமை செய்கிறவர்களுக்கு விரோதமாக. சங் 34:16
2094: எது துன்மார்க்கனை கொல்லும்??
தீமை. சங் 34:21
2095: அப்பத்திற்காக இச்சகம் பேசுகிறவர்கள் யார்??
பரியாசக்காரர்கள். சங் 35:16
2096: தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிறவர் யார்??
கர்த்தர். சங் 35:27
2097: யாருடைய கண்களுக்கு முன்பாக தெய்வ பயம் இல்லை??
துன்மார்க்கன். சங் 36;1
2098: மகத்தான பர்வதங்கள்போல் இருப்பது எது??
கர்த்தருடைய நீதி. சங் 36:6
2099: கர்த்தருடைய எந்த நதியினால் ஜனங்களின் தாகத்தை கர்த்தர் தீர்க்கிறார்??
கர்த்தருடைய பேரின்பநதியினால் சங் 36:8
2100 யாருடைய கால் தன் மேல் வராமல் இருக்க தாவீது கர்த்தரை வேண்டுகிறான்??
பெருமைக்காரரின் கால். சங் 36:11
2101: புல்லைப்போல் சீக்கிரம் அறுப்புண்டு போகிறவர்கள் யார்??
பொல்லாதவர்கள். சங் 37:2
2102: யார் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்??
கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள். சங் 37:9
2103: யாருடைய சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதைக் காணவில்லை?
நீதிமானுடைய சந்ததி. சங் 37 :25
2104: கர்த்தர் எதை விரும்புகிறார்??
நியாயத்தை. சங் 37:28
2105: நீதிமான்கள் எதை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்??
பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள். சங் 37:29
2106: நீதிமானுடைய இருதயத்தில் எது இருக்கிறது??
தேவன் அருளிய வேதம். சங் 37:31
2107: செம்மையான மனுஷனுடைய முடிவு எம்படிப்பட்டது??
சமாதானம். சங் 37:37
2108: தன் பாவத்தின் நிமித்தம் விசாரப்படுகிறவன் யார்??
தாவீது. சங் 38:18
2109: தாவீது பாவஞ்செய்யாதப்படிக்கு தன் வாயை எதனால் அடக்கி வைப்பேன் என்று சொல்லுகிறான்??
கடிவாளத்தினால். சங் 39:1
2110: தாவீதின் நாட்கள் எத்தனை விரற்கடையளவாயிருந்தது??
நாலு விரற்கடையளவாயிருந்தது. சங் 39:5
2111: எந்த மனுஷனும் எப்படிப்பட்டவன் என்பது நிச்சயம்??
மாயையே என்பது நிச்சயம். சங் 39:5
2112: மகா சபையிலே தாவீது எதைப் பிரசங்கித்தான்??
நீதியை. சங் 40:9
2113: தாவீதின் பிராண சிநேகிதன் தாவீதின் மேல் எதைத் தூக்கினான்??
குதிகாலைத் தூக்கினான். சங் 41:9
2114: தன் வில்லை நம்பாதவன் யார்??
தாவீது. சங் 44:6
2115: இருதயத்தின் எதைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்??
அந்தரங்கங்களை. சங் 44:21
2116: விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி எது??
நாவு. சங் 45:1
2117: ராஜாவின் கீழே விழுகிறவைகள் எவை??
ஜனசதளங்கள். சங் 45:5
2118: தீரு குமாரத்தி எதைக் கொண்டு வருவாள்??
காணிக்கை கொண்டு வருவாள். சங் 45:13
2119: நிலைமாறுவது எது??
பூமி. சங் 46:2
2120: உன்னதமானவர் வாசம் பண்ணும் ஸ்தலம் எப்படிப்பட்டது??
பரிசுத்தமானது
சங் 46:4
2121: உன்னதமானவர் வாசம் பண்ணும் ஸ்தலம் எப்படிப்பட்டது??
பரிசுத்தமானது. சங் 46:4
2122: பூமி அனைத்துக்கும் ராஜா யார்??
தேவன். சங் 47: 7
2123: சீயோன் பர்வதம் எந்த திசையில் உள்ளது??
வடதிசையிலுள்ளது. சங் 48:2
2124: மகா ராஜாவின் நகரம் என்று அழைக்கப்படுவது எது??
சீயோன் பர்வதம். சங் 48:2
2125: கர்த்தர் எதினால் தர்ஷீசின் கப்பல்களை உடைக்கிறார்??
கீழ்க்காற்றினால். சங் 48:7
2126: கர்த்தருடைய வாய் எதைப் பேசும்??
ஞானத்தைப் பேசும். சங் 49:3
2127: மறைபொருளை எதன் மேல் வெளிப்படுத்துவேன் என்று சங்கீதக்காரன் சொல்லுகின்றான்??
சுரமண்டலத்தின் மேல். சங் 49:4
2128: ஆத்தும மீட்பு எப்படி இருக்கிறது??
அருமையாயிருக்கிறது. சங் 49:9
2129: ஞானிகளையும் அஞ்ஞானிகளையும் எது மேய்ந்து போடும்??
மரணம். சங் 49:14
2130: ஒருவன் மரிக்கும்போது எது அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை??
அவன் மகிமை. சங் 49:17.
2131: பூரண வடிவுள்ள நகரம் எது??
சீயோன். சங் 50:2
2132: வானங்கள் தேவனாகிய கர்த்தருடைய எதை அறிவிக்கும்??
நீதியை அறிவிக்கும். சங் 50:6
2134: சிட்ச்சையை என்ன செய்கிறார்கள்??
பகைக்கிறார்கள். சங் 50:17
2135: நாவு எதைப் பிணைக்கிறது??
சர்ப்பனையைப் பிணைக்கிறது. சங் 50:19
2136: தாவீதுக்கு அவன் பாவத்தை உணர்த்திய தீர்க்கதரிசி யார்??
நாத்தான்
2137: கர்த்தர் நியாயம் தீர்க்கும் போது எது விளங்கும்??
கர்த்தருடைய பரிசுத்தம். சங் 51:4
2138: தாவீது தன்னை எதனால் சுத்திகரிக்கும் படி வேண்டுகிறான்??
ஈசோப்பினால். சங் 51:7
2139: கபடமுள்ள நாவு எதை விரும்புகிறது??
சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும். சங் 52:4
2140: தாவீது எதை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறான்??
தேவனுடைய கிருபையை. சங் 52:8
2141: எதைச் செய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை??
நன்மை செய்கிறவன். சங் 53:3
2142: தாவீது தங்களிடத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான் என்று சவுலுக்குச் சொன்னவர்கள் எந்த ஊரைச் சார்ந்தவர்கள்??
சீப்பூரைச் சார்ந்தவர்கள். சங் 54
2143: தாவீது எந்த வேளைகளில் தியானம் பண்ணி முறையிடுவான்??
அந்தி சந்தி மத்தியான வேளைகளில். சங் 55:17
2144: தங்கள் ஆயுளின் நாட்களில் பாதி வரையாகிலும் பிழைத்திருக்க மாட்டாதவர்கள் யார்??
இரத்தபிரியரும் சூதுள்ள மனுஷரும். சங் 55:23
2145: பெலிஸ்தர் தாவீதை எங்கு பிடித்தனர்??
காத்தூரில் பிடித்தனர். சங் 56
2146: கர்த்தருடைய கிருபை எது பரியந்தம் எட்டுகிறது??
வானபரியந்தம். சங் 57:10
2147: வினோதமாய் ஊதுகிறவர்கள் யார்??
பாம்பாட்டிகள். சங் 58:5
2148: கர்த்தருடைய தலையின் பெலன் எது??
எப்பிராயீம். சங் 60:7
2149: கர்த்தருடைய நியாயப்பிரமாணிகன் யார்??
யூதா. சங் 60:7
2150: எதன் மேல் கர்த்தர் தமது பாதரட்சையை எறிந்து போடுவார்??
ஏதோமின் மேல். சங் 60:8
2151: எந்த மக்கள் மாயையானவர்கள்??
கீழ்மக்கள். சங் 62:9
2152: ஜீவனைப் பார்க்கிலும் எது நல்லது??
கிருபை நல்லது. சங் 63:3
2153:பொய் பேசுகிறவர்களின் வாய் என்ன செய்யும்??
அடைக்கப்படும். சங் 63:11
2154: துதியானது தேவனுக்காக எங்கு அமைந்து காத்திருக்கிறது??
சீயோனில். சங் 65:1
2155: தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு என்ன செய்கிறார்??
நீர் பாய்ச்சுகிறார். சங் 65:9
2156: கர்த்தர் வருஷத்தை எதனால் முடிசூட்டுகின்றார் ??
நன்மையினால். சங் 65:11
2157: பள்ளத்தாக்குகள் எதால் மூடியிருக்கிறது??
தானியத்தால். சங் 65:13
2158: நம்மைக் கர்த்தர் எதில் அகப்படுத்தினார்??
வலையில் அகப்படுத்தினார். சங் 66:11
2159: கர்த்தர் தமது ஜனங்களை எவ்வாறு நியாயந்தீர்ப்பார்??
நிதானமாய். சங் 67:4
2160: வனாந்திரங்களில் ஏறி வருகிறவருடைய நாமம் என்ன??
யேகோவா. சங் 68:4
2161: தேவன் தனிமையானவர்களுக்கு எதை ஏற்படுத்துகின்றார்??
வீடு வாசல் ஏற்படுத்துகின்றார். சங் 68:6
2162: தேவனுடைய இரதங்களின் எண்ணி க்கை எத்தனை??
பதினாயிரங்களும் ஆயிரமாயிரமுமாயிருக்கிறது. சங் 68:17
2163: பரிசுத்த ஸ்தலம் எது??
சீனாய். சங் 68:17
2164: உயர்ந்த சிகரங்கள் உள்ள பர்வதம் எது??
பாசான் பர்வதம். சங் 68:15
2165: மிருகக் கூட்டங்கள் எங்கு உள்ளன??
நாணலில். சங் 68:30
2166: எது தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும்??
எத்தியோப்பியா. சங் 68:31
2167: இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்கு எதை அருளுவார்??
பெலனையும் சத்துவத்தையும். சங் 68:35
2168: காளை எருது ஆகியவைகளைப் பார்க்கிலும் கர்த்தருக்குப் பிரியமான பலி எது??
ஸ்தோத்திரப் பலி. சங் 69:31
2169: தாவீதின் வாய் நாள்தோறும் எவற்றால் நிறைந்திருக்கிறது??
துதியினாலும் மகத்துவத்தினாலும். சங் 71:7
2170: தாவீது தன் குமாரர்களில் யாரைப் பற்றி சங்கீதம் பாடினான்??
சாலொமோனைப் பற்றிப் பாடினான். சங் 72
2171: பர்வதங்கள் ஜனத்திற்கு எதைத் தரும்??
சமாதானத்தை தரும். சங் 72:3
2172: கர்த்தருடைய நாட்களில் செழிப்பவன் யார்??
நீதிமான். சங் 72:7
2173: துன்மார்க்கரை சரப்பணியைப் போல் சுற்றிக் கொள்வது எது??
பெருமை. சங் 73:6
2174: கர்த்தரை விட்டு தூரமாய்ப் போகிறவர்கள் என்ன ஆவார்கள்??
நாசமடைவார்கள். சங்73:27
2175: கர்த்தர் பூமியின் எல்லைகளையெல்லாம் என்ன செய்தார்??
திட்டம் பண்ணினார். சங் 74:17
2176: கர்த்தர் நியமிக்கப்பட்ட காலத்தில் எப்படி நியாயம் தீர்ப்பார்??
யதார்த்தமாய். சங் 75:2
2177: தேவனுடைய கூடாரம் எங்கு இருக்கிறது??
சாலேமில். சங் 76:2
2178: கர்த்தர் தமது சாட்ச்சியை எங்கு ஏற்படுத்தினார்??
யாக்கோபிலே. சங் 78:5
2179: எகிப்து தேசத்தில் எந்த வெளியிலே கர்த்தர் பிதாக்களுக்கு முன்பாக அதிசயமானவைகளைச் செய்தார்??
சோவான் வெளியிலே. சங் 78:12
2180: கர்த்தருடைய செயல்களை மறந்தவர்கள் யார்??
எப்பிராயீம் புத்திரர். சங் 78:11
2181: கர்த்தர் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரம் எங்கு இருந்தது??
சீலோவிலே இருந்தது. சங் 78:60
2182: கர்த்தர் எந்த கோத்திரத்தைத் தெரிந்து கொள்ளவில்லை??
எப்பிராயீம் கோத்திரத்தை. சங் 78:67
2183: கர்த்தருடைய ஜனம் தலைமுறை தலைமுறையாக எதை சொல்லி வரும்??
கர்த்தருடைய துதியைச் சொல்லி வரும். சங் 79:13
2184: கர்த்தர் எங்கிருந்து ஒரு திராட்சக் கொடியைக் கொண்டு வந்தார்??
எகிப்திலிருந்து. சங் 80:8
2185: இஸ்ரவேலர் அறியாத பாஷையை எந்த தேசத்தில் கேட்டார்கள்??
எகிப்து தேசத்தில். சங் 81:5
2186: தேவனே எழுந்தருளும் பூமிக்கு நியாயத்தீர்ப்பு செய்யும் என்று விண்ணப்பித்தவன் யார்??
ஆசாப். சங் 82:8
2187: அசீரியர் கர்த்தருடைய சத்துருவோடு கலந்து யாருக்கு புயபலமானார்கள்??
லோத்தின் புத்திரருக்கு. சங் 83:8
2188: கீசோன் என்னும் ஆற்றண்டையில் எந்த இடத்தில் சிசெரா நிலத்துக்கு எருவானான்??
எத்தோரில் எருவானான். சங் 83:9
2189: நிலத்துக்கு எருவாய்ப்போன இருவர் யார்??
சிசெரா, யாபீன். சங் 83:10
2190: ஆயிரம் நாளைப் பார்க்கிலும் எந்த ஒரே நாள் நல்லது??
கர்த்தருடைய பிரகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது. சங் 84:10
2191: எவைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும்??
கிருபையும் சத்தியமும். சங் 85:20
2192: சத்தியம் எங்கிருந்து முளைக்கும்??
பூமியிலிருந்து. சங் 85:11
2193: எது வானத்திலிருந்து தாழப்பார்க்கும்??
நீதி. சங் 85:11
2194: கர்த்தரை நோக்கி கூப்பிடுகிற யாவர் மேலும் அவர் எது மிகுந்தவராயிருக்கிறார்??
கிருபை. சங் 86:5
2195: கர்த்தருடைய அஸ்திபாரம் எங்கு இருக்கிறது??
பரிசுத்த பர்வதங்களில். சங் 87:1
2196: இரவும் பகலும் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தரைக் கூப்பிடுகிறவன் யார்??
எஸ்ராகியனாகிய ஏமான். சங் 88:1
2197: எண்பத்து ஒன்பதாம் சங்கீதத்தின் ஆசிரியர் யார்??
எஸ்ராகியனாகிய ஏத்தான்
2198: கர்த்தருடைய உண்மை எங்கே ஸ்தாபிக்கப்படும்??
வானங்களில். சங் 89:2
2199: கர்த்தருக்கு முன்பாக நடப்பவை எது??
கிருபையும் சத்தியமும். சங் 89:14
2200: கர்த்தர் தமது தாசனாகிய யாரைக் கண்டுபிடித்தார்??
தாவீதை. சங் 89:20
2201: கர்த்தர் எதில் பிசகாமலிருப்பார்??
தமது உண்மையில். சங் 89:33
2202: யாருக்கு கர்த்தர் பொய் சொல்வதில்லை??
தாவீதுக்கு. சங் 89:35
2203: தொண்ணூறாம் சங்கீதம் யாருடைய ஜெபமாக அமைந்துள்ளது??
மோசேயின் ஜெபம்
2204:எது சீக்கிரமாய் கடந்து போகிறது??
ஆயுசு நாட்கள். சங் 90:20
2205: நாம் அவர் செட்டைகளின் கீழ் எதைப் பெறுவோம்??
அடைக்கலம். சங் 91:4
2206: கர்த்தருடைய நாமத்தை அறிந்திருக்கிறவனைக் கர்த்தர் எங்கு வைப்பார்??
உயர்ந்த அடைக்கலத்தில். சங் 91:14
2207: நீதிமான் பனையைப் போல் செழித்து எதைப்போல் வளருவான்??
லீபனோனைப் போல். சங் 92:12
2208: கர்த்தர் எதை அணிந்து கொண்டிருக்கிறார்??
மகத்துவத்தை. சங் 93:1
2209: கர்த்தருடைய ஆலயத்தின் அலங்காரம் எது??
பரிசுத்தமானது. சங் 93:5
2210: நியாயம் எதினிடமாகத் திரும்பும்??
நீதியினிடமாய்த் திரும்பும். சங் 94:15
2211: கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாக எப்படி வரவேண்டும்??
துதித்தலுடனே வர வேண்டும். சங் 95:2
2212: கர்த்தரை எப்படி தொழுது கொள்ள வேண்டும்??
பரிசுத்த அலங்காரத்துடனே. சங் 96:9
2213: கர்த்தர் பூமியை என்ன செய்ய வருகிறார்??
நியாயம் தீர்க்க வருகிறார். சங் 96:13
2214: கர்த்தரின் சிங்காசனத்தின் ஆதாரங்கள் எவைகள்??
நீதியும் நியாயமும். சங் 97:2
2215: நீதிமானுக்காக எது விதைக்கப்பட்டிருக்கிறது??
வெளிச்சம். சங் 97:11
2216: கர்த்தருக்கு முன்பாக எவைகள் கைகொட்டும்??
ஆறுகள். சங் 98:8
2217: கர்த்தர் எதன் மத்தியில் வீற்றிருக்கிறார்??
கேருபீன்கள். சங் 99:1
2218: கர்த்தருடைய ஆசாரியர்கள் யார்??
மோசேயும் ஆரோனும். சங் 99:6
2219: எப்படி கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும்??
மகிழ்ச்சியோடே ஆராதனை செய்ய வேண்டும். சங் 100:1
2220: யார் தன்னோடு வாசம்பண்ணும்படித் தாவீது விரும்புகிறான்??
தேசத்தில் உண்மையானவர்கள். சங் 101:5
2221: வானத்தையும் பூமியையும் கர்த்தர் எதைப் போல் மாற்றுவார்??
ஒரு சால்வையைப் போல். சங் 102:26
2222: கர்த்தர் தமது வழிகளை யாருக்குத் தெரியப் பண்ணினார்??
மோசேக்கு. சங் 103:7
2223: நம்மைக் கர்த்தர் எது என்று நினைவு கூறுகிறார்??
மண்ணென்று. சங் 103:14
2224: கர்த்தர் எங்கு தமது சிங்காசனத்தை ஸ்தாபிக்கிறார்??
வானங்களில். சங் 103:19
2225: தேவனாகிய கர்த்தர் எவற்றை அணிந்து கொண்டிருக்கிறார் ??
மகிமையையும் மகத்துவத்தையும். சங் 104:1
2226: மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்குவது எது??
திராட்ச ரசம். சங் 104:25
2227: கொக்குகளின் குடியிருப்பு எது??
தேவதாரு விருட்சங்கள். சங்104:27
2228: காலக்குறிப்புகளுக்காக கர்த்தர் எதைப் படைத்தார்??
,சந்திரனைப் படைத்தார். சங் 104:19
2229: தன் அஸ்தமனத்தை அறிவது எது??
சூரியன். சங் 104:19
2230: கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்னதாக அனுப்பிய புருஷன் யார்??
யோசேப்பு. சங் 105:17
2231: கர்த்தருடைய பரிசுத்தன் யார்??
ஆரோன். சங் 106:16
2232: எந்த தேசத்திலே கர்த்தர் அதிசயங்களை செய்தார்??
காமின் தேசத்திலே. சங் 106:21
2233 : தேவனாகிய கர்த்தருடைய உக்கிரத்தை ஆற்றும்படி மோசே எங்கே நின்றான்??
திறப்பின் வாசலில். சங் 106:23
2234: கர்த்தருடைய ஜனம் தங்கள் கிரியைகளினால் கோபமூட்டினதால் அவர்களுக்குள் வாதை புகுந்த போது யார் எழும்பி அவர்களுக்கு நியாயம் செய்தான்??
பினெகாஸ். சங் 106:30
2235: தங்கள் பாதக மார்க்கத்தால் ஒடுங்கிப் போனவர்கள் யார்??
நிர்மூடர். சங் 107:17
2236: கர்த்தர் எதை அனுப்பித் தமது ஜனத்தைக் குணமாக்குகிறார்??
வசனத்தை. சங் 107:20
2237: சாபம் மனிதனின் உள்ளத்தில் எதைப் போல் பாயும்??
தண்ணீர் போல் பாயும். சங் 109:18
2238: கர்த்தருக்குப் பயப்படுதல் எதன் ஆரம்பம்??
ஞானத்தின் ஆரம்பம். சங் 111:10
2239: கர்த்தருக்கு பயப்படுகிறவனின் சந்ததி எப்படி இருக்கும்??
பலத்திருக்கும். சங் 112:2
2240: கர்த்தருடைய ராஜ்யமாயிருக்கிறது எது??
இஸ்ரவேல். சங் 114:2
2241: யார் கர்த்தரை துதியார்கள்??
மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும். சங் 115:17
2242: எது கர்த்தருடைய பார்வைக்கு அருமையானதாயிருக்கும்??
பரிசுத்தவான்களின் மரணம். சங் 116:5
2243: கர்த்தரின் வாசலுக்குள் பிரவேசிப்பவர்கள் யார்??
நீதிமான்கள். சங் 118:20
2244: கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிறவர்கள் என்ன செய்வதில்லை??
அநியாயம். சங் 119:3
2245: பூமியிலே மனிதன் எப்படி இருக்கிறான்??
பரதேசியாய். சங் 119:19
2246: எதை தன் வாயினின்று முற்றிலும் நீங்க விடாதேயும் என்று தாவீது விண்ணப்பிக்கிறான்??
சத்திய வசனத்தை. சங் 119:43
2247: மிகவும் புடமிடப்பட்டது எது??
கர்த்தருடைய வார்த்தை. சங் 119:140
2248: எது துன்மார்க்கருக்கு தூரமாய் இருக்கிறது??
இரட்சிப்பு. சங் 119:155
2249: கர்த்தருடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு எது உண்டு??
மிகுந்த சமாதானம். சங் 119:165
2250: வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கர்த்தரிடத்திலிருந்து வருவது எது??
ஒத்தாசை. சங் 121:2
2252: எருசலேமுக்கு ஜனங்கள் எதற்காகப் போவார்கள்??
கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்தரிப்பதற்கு. சங் 122:4
2253: என்றென்றைக்கும் அசையாமல் நிற்கும் பர்வதம் எது??
சீயோன் பர்வதம். சங் 125:1
2254: கர்த்தரால் வரும் சுதந்திரம் எது??
பிள்ளைகள். சங் 127:4
2255: கர்த்தருடைய நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று யார் சொல்லுவதுமில்லை??
வழிப்போக்கர். சங் 129:8
2256: கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டது எது??
உன் குமாரர் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள். சங் 132:12
2257: சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எப்படியிருக்கும்??
நன்மையும் இன்பமுமானதாயிருக்கும். சங் 133:1
2258:கர்த்தர் காற்றை எங்கிருந்து புறப்படப் பண்ணுகிறார்??
தன் பண்டசாலையிலிருந்து. சங் 135:7
2259: பூமி எதன்மேல் பரப்பப்பட்டுள்ளது??
தண்ணீர்களின் மேல். சங் 135:6
2260: எந்த ஆறுகள் அருகே உட்கார்ந்து இஸ்ரவேல் ஜனங்கள் அழுதார்கள்??
பாபிலோன் ஆறுகள் அருகே. சங் 137:1
2261:இஸ்ரவேல் ஜனங்களை சிறைப்படுத்தினவர்கள் யார்??
பாபிலோனியர். சங் 137: 3
2262: கர்த்தருடைய பாட்டை எந்த தேசத்தில் இஸ்ரவேலர் பாட விரும்பவில்லை??
அந்நிய தேசத்தில். சங் 137:4
2263: பாளாய்ப் போகிறவள் யார்??
பாபிலோன் குமாரத்தி. சங் 137:8
2264: பொல்லாதவர்களின் நாவின் கீழ் எதன் விஷம் இருக்கிறது??
விரியன் பாம்பின் விஷம். சங் 140:3
2265: மரத்தை வெட்டிப் பிளக்கிறது போல எவைகள் பாதாளத்துக்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது??
எலும்புகள். சங் 141:7
2266: மனுஷன் எதற்கு ஒப்பாயிருக்கிறான்??
மாயைக்கு. சங் 144:4
2267: அல்லேலூயா என்பதன் பொருள் என்ன??
கர்த்தரை துதி என்பதாகும். சங் 146:1
2268: கர்த்தருடைய சொல் எப்படிச் செல்லுகிறது??
தீவிரமாய்ச் செல்லுகிறது. சங் 147:15
2269: ஆகாயமண்டலத்தின் மேல் எது இருக்கிறது??
தண்ணீர் இருக்கிறது. சங் 148:4
2270: எது கர்த்தரின் சொற்படிச் செய்யும்??
பெருங்காற்று. சங் 148:8
2271: கர்த்தர் தம்முடைய பரிசுத்த வான்களுக்குக் கொண்டாட்டமாக எதை உயர்த்தினார்??
ஒரு கொம்பை. சங் 148:14
2272: யாருடைய சபையில் கர்த்தரின் துதி விளங்குவதாக??
பரிசுத்தவான்களின் சபையில். சங் 149:1
2273: பரிசுத்தவான்களின் வாயில் எது இருக்கும்??
கர்த்தரை உயர்த்தும் துதி இருக்கும். சங் 149:8
2274: பரிசுத்த வான்களின் கையில் எது இருக்கும்??
இருபுறமும் கருக்குள்ள பட்டயம். சங் 149:8
2275: தேவனை எந்த ஸ்தலத்தில் துதிக்க வேண்டும்??
கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தில். சஙா 150:1
2276: நீதிமொழிகள் மூலம் எவைகளை உணர்ந்து கொள்ளலாம்??
புத்திமதிகள். நீதி 1:2
2277: ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபணாணுகிறவர்கள் யார்??
மூடர். நீதி 1:7
2278: தன்னையுடையவர்களின் உயிரை வாங்குவது எது??
பொருளாசையுடையவர்களின் வழி. நீதி 1:19
2279: கர்த்தருடைய வாயினின்று வருபவை எவை??
அறிவு புத்தி. நீதி 2:6
2280: ஆத்துமாவுக்கு இன்பமாயிருப்பது எது??
அறிவு. நீதி 2:10
2281: எவைகள் நம்மை விட்டு விலகாதிருக்க வேண்டும்??
கிருபை சத்தியம். நீதி 3:3
2282: நாபிக்கு ஆரோக்கியமும் எலும்புகளுக்கு ஊனுமாயும் இருப்பது எது??
தீமையை விட்டு விலகுவது. நீதி 3:8
2283: எல்லா காவலோடும் எதைக் காத்துக் கொள்ள வேண்டும்??
இருதயத்தை. நீதி 4:23
2284: தன் பாவக்கயிறுகளினால் கட்டப்படுபவன் யார்??
துன்மார்க்கன். நீதி 5:22
2285: தன் கால்களினால் பேசி விரல்களினால் போதனை செய்பவன் யார்??
பேலியாளின் மனுஷன். நீதி 6:12&13
2286: தன் பசியை ஆற்றத் திருடினால் இகழப்படாதவன் யார்??
திருடன். நீதி 6:30
2287: மரண அறைக்குள் கொண்டு போய் விடுவது எது??
தந்திரமனமுள்ள ஸ்தீரி யின் வீடு. நீதி 7:27
2288: எதை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படுகிற பயமாகும்??
தீமை. நீதி 8:13
2289: யாரைக் கண்டிக்கிறவன் தன்னை கறைப்படுத்திக் கொள்ளுகிறான்??
துன்மார்க்கன். நீதி 9:7
2290: சுறுசுறுப்புள்ளவன் உள்ளவன் கை எதை உண்டாக்கும்??
செல்வத்தை. நீதி 10 :4
2291: விரோதங்களை எழுப்புவது எது??
பகை நீதி 10:12
2292: சகல பாவங்களையும் மூடுவது எது??
அன்பு. நீதி 10:12
2293: ஏழைகளை கலங்கப்பண்ணுவது எது??
வறுமை. நீதி 10: 15
2294: எவைகளின் மிகுதியினால் பாவம் இல்லாமற் போகாது??
சொற்களின் மிகுதியினால். நீதி 10:19
2295: கோபாக்கினை நாளில் உலவாதது எது??
ஐசுவரியம். நீதி 11:4
2296: தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுப்பவன் யார்??
மாயக்காரன். நீதி 11:9
2297: எது இல்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்??
ஆலோசனை. நீதி 11:14
2298:எவைகளை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்??
ஆத்துமாக்களை. நீதி 11:30
2299: நல்லவன் கர்த்தரிடத்தில் எதை பெறுவான்??
தயை. நீதி 12:2
2300: மனுஷன் எதற்குத் தக்கதாக புகழப்படுவான்??
தன் புத்தி. நீதி 12:8
2301: ஒரு நிமிஷம் மாத்திரம் இருப்பது எது??
பொய் நாவு. நீதி 12:19
2302: யாருக்கு ஒரு கேடும் வராது??
நீதிமானுக்கு. நீதி 12 21
2303: நீதியின் பாதையில் உள்ளது எது??
ஜீவன். நீதி 12:28
2304: உத்தமர்களை தற்காப்பது எது??
நீதி. நீதி 13:6
2305: எதை அவமதிக்கிறவன் நாசமடைவான்??
திருவசனத்தை.நீதி 13:13
2306: எருதுகளில்லாத இடத்தில் வெறுமையாயிருப்பது எது??
களஞ்சியம். நீதி 14:4
2307: மூடர் எதைக் குறித்து பரியாசம் பண்ணுகிறார்கள்??
பாவம். நீதி 14:9
2308: மனிதனுக்கு செம்மையாய்த் தோன்றுகிற வழியின் முடிவு என்ன??
மரண வழிகள். நீதி 14:12
2309: கர்த்தருக்கு பயப்படுவதினால் எவைகளுக்குத் தப்பலாம்??
மரணக்கண்ணிகள். நீதி 14:27
2310: எலும்புருக்கியாயிருப்பது எது??
பொறாமை. நீதி 14:30
2311: கோபத்தை எழுப்புவது எது??
கடுஞ்சொற்கள். நீதி 15:1
2312: நித்திய விருந்து எது??
மனரம்மியம். நீதி 15:15
2313: எவைகளை வெறுக்கிறவன் பிழைப்பான்??
பரிதானங்கள்.நீதி15:27
2314: கர்த்தருக்கு பயப்படுகிறதினால் மனுஷர் எதை விட்டு விலகுவார்கள்??
தீமை. நீதி 16:6
2315: கல்வியைப் பெருகப்பண்ணுவது எது??
உதடுகளின் மதுரம். நீதி 16:21
2316: துஷ்டனுக்கு விரோதமாக அனுப்பப்படுவது யார்??
குரூரதூதன். நீதி 17:11
2317: குளிர்ந்த மனமுள்ளவன் யார்??
விவேகி. நீதி 17:27
2318: ஞானத்தின் ஊற்று எதைப் போல இருக்கும்??
பாய்கிற ஆறு. நீதி 18:4
2319: பலவான்கள் நடுவே சிக்கறுக்கிறது எது??
சீட்டுப் போடுதல். நீதி 18:18
2320: நாவின் அதிகாரத்திலிருப்பவை எவை??
மரணமும் ஜீவனும். நீதி 18:21
2321: அநேக சிநேகிதரைச் சேர்ப்பது எது??
செல்வம். நீதி 19:4
2322: எது கர்த்தர் அருளும் ஈவு??
புத்தியுள்ள மனைவி. நீதி 19:14
2323: அமளிப் பண்ணுவது எது??
மதுபானம். நீதி 20:1
2324: ஆழமான தண்ணீர் போலிருப்பது எது??
மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை. நீதி 20:5
2325: எதை விரும்புகிறவர்கள் தரித்திரர் ஆவார்கள்??
தூக்கத்தை. நீதி 20:13
2326: வாலிபரின் அலங்காரம் எது??
அவர்கள் பராக்கிரமம். நீதி 20:29
2327: பலியிடுவதைப்பார்க்கிலும் கர்த்தருக்குப் பிரியமானது எது??
நீதியும் நியாயமும் செய்வது. நீதி 21:3
2328: சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம் போலிருப்பது எது??
பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது. நீதி 21:6
2329: பொன் வெள்ளியைப் பார்க்கிலும் நலமானது எது??
தயை. நீதி 22:1
2330: தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் என்ன??
ஐஸ்வர்யம், மகிமை மற்றும் ஜீவன். நீதி 22:4
2331: யாரை துரத்திவிட வேண்டும்??
பரியாசக்காரனை. நீதி 22:10
2332: வெளியிலே சிங்கம் என்று சொல்லுகிறவன் யார்??
சோம்பேறி. நீதி 22:13
2333: யார் தன் தொண்டையில் கத்தியை வைக்க வேண்டும்??
போஜனப்பிரியன். நீதி 23:1
2334: எதைச் சாரக்கூடாது??
சுயபுத்தி. நீதி 23:4
2335: கந்தைகளை உடுத்துவிப்பது எது??
தூக்கம். நீதி 23:21
2336: எதை வாங்கு அதை விற்காதே??
சத்தியத்தை. நீதி 23:23
2337: இடுக்கமான கிணறு யார்??
பரஸ்திரீ. நீதி 23:27
2338: இரத்த வருணமாயிருந்து பாத்திரத்தில் பளபளப்பாய் தோன்றுவது எது??
மதுபானம். நீதி 23:31
2339: ஏழு தரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பவன் யார்??
நீதிமான். நீதி 24:16
2340: நியாயத்திலே எது நல்லதல்ல??
முகதாட்சண்யம். நீதி 24:23
2341: எலும்பையும் நொறுக்குவது எது??
இனிய நாவு. நீதி 25:15
2342: கூர்மையான அம்புக்கு ஒப்பானவன் யார்??
பொய்சாட்சி சொல்லுகிறவன். நீதி 25:17
2343: தன் ஆவியை அடக்காத மனுஷன் எதைப் போல இருக்கிறான்??
மதிலிடிந்த பாழான பட்டணம். நீதி 25:28
2344: மூடனுக்கு கனத்தைக் கொடுக்கிறவன் யாரைப் போலிருப்பான்??
கவணிலே கல்லைக்கட்டுகிறவன்.நீதி 26:8
2345: அனைவரையும் நோகப்பண்ணுகிறவன் யார்??
பெலத்தவன். நீதி 26:10
2346: திருப்தியடைந்தவன் எதை மிதிப்பான்??
தேன்கூட்டை. நீதி 27:7
2347: ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறவன் யார்??
விவேகி. நீதி 27:12
2348: திருப்தியாகாதவை எவை??
பாதாளமும் அழிவும். நீதி 27:20
2349: சிங்கத்தைப் போல தைரியமாயிருப்பவர்கள் யார்??
நீதிமான்கள். நீதி 28:1
2350: யாருடைய ஜெபம் அருவருப்பானது??
வேதத்தை கேளாதபடி தன் செவியை விலக்குகிறவன். நீதி 28:9
2351: எவைகளை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்??
தன் பாவங்களை. நீதி 28:13
2352: பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுகிறவன் யார்??
உண்மையுள்ளவன். நீதி 28:20
2353: தேசத்தைக் கவிழ்க்கிறவன் யார்??
பரிதானப்பிரியன். நீதி 29:4
2354: யார் பெருகினால் பாவம் பெருகும்??
துன்மார்க்கர். நீதி 29:16
2355: எதைக் காக்கிறவன் பாக்யவான்??
வேதம். நீதி 29:18
2356: மனுஷனைத் தாழ்த்துவது எது??
அவன் அகந்தை. நீதி 29:23
2357: மனுஷரெல்லாரிலும் நான் மூடன் என்று கூறியவர் யார்??
ஆகூர். நீதி 30:1
2358: ஆகூர் எதைத் தான் அறிந்து கொள்ளவில்லை என்று கூறுகிறார்??
பரிசுத்தரின் அறிவு. நீதி 30;3
2359: எவைகளோடு ஒன்றையும் கூட்டக்கூடாது??
தேவனுடைய வசனங்களோடு. நீதி 30:6
2360: தன் படியை அளந்து தன்னைப் போஷிக்கும்படி தேவனிடம் வேண்டிக் கொண்டவர் யார்??
ஆகூர். நீதி 30:9
2361: போதுமென்று சொல்லாத நான்கு என்று கூறப்பட்டுள்ளவை எவை??
பாதாளம், மலட்டு கர்ப்பம், தண்ணீரால் திருப்தியடையாத நிலம், போதுமென்று சொல்லாத அக்கினி. நீதி 30:15-16
2362 : சிறியவைகளாயிருந்தும் மகா ஞானமுள்ளவைகள் எவை??
எறும்பு, குழிமுசல்கள், வெட்டுகிளிகள்,சிலந்திப் பூச்சி. நீதி 30:27
2363: ராஜா இல்லாதிருந்தும் பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகின்றவை எவை??
வெட்டுக்கிளிகள். நீதி 30:27
2364: ஒன்றுக்கும் பின்னிடையாத மிருகம் எது??
சிங்கம். நீதி 30:30
2365: லேமுவேலுக்கு உபதேசங்களைப் போதித்தவள் யார்??
அவன் தாய். நீதி 31:1
2366: மனம்கசந்தவர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டும்??
திராட்சரசம். நீதி 31:6
2367: குணசாலியான ஸ்தீரியின் விலை எதைப்பார்க்கிலும் உயர்ந்தது??
முத்துக்கள். நீதி 31:10
2368: குணசாலியான ஸ்திரீ எவைகளைப்போல இருக்கிறாள்??
வியாபாரக் கப்பல்கள். நீதி 31:10-14
2369: எது வஞ்சனையுள்ளது??
செளந்தரியம். நீதி 31:30
2370: எது வீண்??
அழகும். நீதி 31:30
2371: என்றைக்கும் நிலைத்திருக்கிறது எது??
பூமி. பிரச 1:4
2372: தான் சுற்றின இடத்திற்கே திரும்பவும் வருவது எது??
காற்று. பிரச1: 6
2373: உற்பத்தியான இடத்திற்கே மறுபடியும் திரும்புவது எது??
நதிகள். பிரச 1:7
2374: அதிக ஞானத்திலே அதிகமாக உள்ளது எது??
சலிப்பு. பிரச 1:18
2375: யாருடைய கண்கள் அவன் முகத்தில் இருக்கிறது??
ஞானி. பிரச 2:14
2376: தமது பார்வைக்கு நல்லவனாய் இருக்கிறவனுக்கு தேவன் எவைகளை அளிக்கிறார்??
ஞானம் அறிவு இன்பம். பிரச 2:26
2377: ஜீவன்களுக்கெல்லாம் ஒன்றானது எது??
சுவாசம். நீதி 3:19
2378: மனுஷன் படும் பிரயாசமும் கிரியையும் யாருடைய பொறாமை க்கு ஏதுவாயிருக்கும்??
அயலான். பிரச 4:4
2379:எது சீக்கிரமாய் அறாது??
முப்புரி நூல். பிரச 4:12
2380: எங்கே பிறந்து ஏழையாவாருமுண்டு??
ராஜாங்கத்தில். பிரச 4:14
2381: எங்கே துணிகரமாய் பேசாமலிருக்க வேண்டும்??
தேவசமூகம். பிரச 5:2
2382: தொல்லையின் திரட்ச்சியினால் பிறப்பது எது??
சொப்பனம். பிரச 5:3
2383: தேவனுக்குப் பண்ணின எதைச் செலுத்த தாமதிக்க கூடாது??
பொருத்தனை. பிரச 5:4
2384: இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருந்தாலும் எவன் ஒரு நன்மையைக் காண்பதில்லை??
நூறு பிள்ளைகளைப் பெற்றவன். பிரச 6:6
2385: எது அலைந்து தேடுகிறதைப்பார்க்கிலும் கண் கண்டதே நலம்??
ஆசை. பிரச 6:9
2386: பரிமளத்தைலத்தைப் பார்க்கிலும் நல்லது எது??
நற்கீர்த்தி. பிரச 7:1
2387: பானையின் கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப் போலிருப் எது??
மூடரின் நகைப்பு. பிரச 7:6
2388: இருதயத்தைக் கெடுப்பது எது??
பரிதானம். பிரச 7:7
2389: தேவன் எவைகளை ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார்??
வாழ்வு காலம், தாழ்வு காலம். பிரச 7:14
2390: எல்லாவற்றினின்றும் காக்கப்படுபவன் யார்??
தேவனுக்குப் பயப்படுகிறவன். பிரச 7:18
2391: அநேக உபாய தந்திரங்களை யார் தேடிக்கொண்டார்கள்??
மனுஷர்கள். பிரச 7:29
2392: மனுஷனுடைய ஞானத்தால் மாறுவது எது??
முகத்தின் மூர்க்கம். பிரச 8:1
2393: எதில் பிடிவாதமாய் நிற்கக்கூடாது??
பொல்லாத காரியத்தில். பிரச 8:3
2394: மனுஷன் எந்த போருக்கு நீங்கிப் போவதுமில்லை??
மரண நாள். பிரச 8:8
2395: பிரசங்கி எதைப் புகழ்ந்தார்??
களிப்பை. பிரச 8:15
2396: ஞானத்தை அறிய தன் மனதை செலுத்தியவன் யார்??
பிரசங்கியாகிய சாலொமோன். பிரச 8:16
2397: ஒன்றும் அறியாதவர்கள் யார்??
மரித்தவர்கள். பிரச 9:5
2398: தேவன் நியமித்திருக்கிற நாட்கள் எப்படிப்பட்டவைகள் என்று பிரசங்கி கூறினார்??
மாயையான நாட்கள். பிரச 9:9
2399: செய்கையும் வித்தையும் எங்கேயில்லை??
பாதாளத்தில் இல்லை. பிரச 9:10
2400: தயவு அடைகிறதற்குப் போதாதது எது??
வித்துவான்களின் அறிவு. பிரச 9:11
2401: மிகுந்த நன்மையை கெடுப்பவன் யார்??
பாவியான ஒருவன். பிரச 9:18
2402: தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப் போகப்பண்ணுவது எது??
செத்த ஈக்கள். பிரச 10:1
2403: பெரிய குற்றங்களை அமர்த்திப் போடுவது எது??
இணங்குதல். பிரச 10:4
2404: ஒரு காரியத்தை செவ்வையாய் செய்வதற்கு பிரதானம் எது??
ஞானம். பிரச 10:10
2405: மிகுதியாய் பேசுகிறவன் யார்??
மூடன். பிரச 10:14
2406: ஜீவனுள்ளோரை களிப்பாக்குவது எது??
திராட்சரசம். பிரச 10:19
2407: எல்லாவற்றிற்கும் உதவுவது எது??
பணம். பிரச 10:19
2408: விழுந்த இடத்திலே கிடப்பது எது??
மரம். பிரச 11:3
2409: எந்த நாட்கள் வராததற்கு முன் சிருஷ்டிகரை நினைக்க வேண்டும்??
தீங்கு நாட்கள். பிரச 12:1
2410: தாற்றுக்கோல்கள் போல இருப்பவை எவை??
ஞானிகளின் வாக்கியங்கள். பிரச 12:11
2411: உன்னதப்பாட்டை பாடியவர் யார்??
சாலொமோன். உன்னத 1:1
2412: ஊற்றுண்ட பரிமளத்தைலமாயிருப்பது எது??
அவரது நாமம். உன்னத 1:3
2413: கேதாரின் கூடாரங்களும் சாலொமோனின் திரைகளும் எப்படிப்பட்ட நிறமாயிருந்தது??
கறுப்பு. உன்னத 1:5
2414: சாரோனின் ரோஜா யார்??
எருசலேமின் குமாரத்தி. உன்னத2:1
2415: எருசலேம் குமாரத்தியின் மேல் பறந்த கொடி எது??
நேசருடைய நேசம். உன்னத 2:4
2416: எதன் சத்தம் தேசத்தில் கேட்கப்படுகிறது??
காட்டுப்புறா. உன்னத 2:12
2417: திராட்சை தோட்டங்களைக் கெடுக்கிறவைகள் எவை??
குழிநரிகள் சிறுநரிகள். உன்னத 2:15
2418: வனாந்தரத்திலிருந்து வந்தவர் யார்??
சாலொமோன். உன்னத 3:7
2419: சாலொமோனுடைய மஞ்சத்தை சுற்றி நிற்பவர்கள் யார்??
இஸ்ரவேலின் சவுரியவான்கள். உன்னத 3:7
2420: சாலொமோனுக்கு முடிசூட்டியவர் யார்??
அவனுடைய தாயார். உன்னத 3:11
2421: ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்டது எது??
தாவீதின் கோபுரம். உன்னத 4:4
2422: பழுதொன்றும் இல்லாதவள் யார்??
ரூபவதி. உன்னத4:7
2423: நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்றவள் யார்??
மணவாளி. உன்னத 5:8
2424: ரூபவதி எதைப் போல் செளந்தரியமானவள்??
திர்சா. உன்னத 6:4
2425: எத்தனை ராஜஸ்திரீகள் நேசருக்கு உண்டு??
அறுபது பேர். உன்னத 6:8
2426: எத்தனை மறுமனையாட்டிகள் நேசருக்கு உண்டு??
எண்பது பேர். உன்னத 6:8
2427: நேசருக்கு தொகையில்லாத எவர்கள் உண்டு??
கன்னியர். உன்னத 6:8
2428: நேசரின் ஆத்துமா நேசரை எதற்கு ஒப்பாக்கிற்று??
அம்மினதாபின் இரதங்களுக்கு. உன்னத 6:12
2429: இரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள் யார்??
சூலமித்தி. உன்னத 6:13
2430: எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருப்பது எது??
குளங்கள். உன்னத 7:4
2431 : தமஸ்குவின் திசையை நோக்குவது எது??
லீபனோனின் கோபுரம். உன்னத 7:4
2432: உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறது எது??
நல்ல திராட்சரசம். உன்னத 7:9
2433: வாசனை வீசும் பழம் எது??
தூதாயீம். உன்னத 7:13
2434: மரணத்தைப் போல் வலிது எது??
நேசம். உன்னத 8:6
2435: எவைகள் நேசத்தை அவிக்கமாட்டாது??
திரளான தண்ணீர்கள். உன்னத 8:7
2436: சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் எங்கே உண்டாயிருந்தது??
பாகால் ஆமோனிலே. உன்னத 8:11
2437: சாலொமோன் தன் திராட்சத்தோட்டத்தை யார் வசத்திலே விட்டான்??
காவலாளிகள். உன்னத 8:11
2438: கடும் ஜீவாலையுமாயிருக்கிறது எது??
நேசத்தின் ஜீவாலை. உன்னத 8:6
2439: கர்மேல் மலையைப் போலிருக்கிறது எது??
ராஜகுமாரத்தியின் சிரசு. உன்னத 7:5
2440: காவலாளிகள் ஒவ்வொருவரும் தோட்டத்திற்காக எத்தனை காசு கொண்டு வரும்படி சாலொமோன் கட்டளையிட்டான்??
ஆயிரம் வெள்ளிக்காசு. உன்னத 8:11
2441: ஆமோத்சின் குமாரன் யார்??
ஏசாயா. ஏசாயா 1:1
2442: அறிவில்லாமலும் உணர்வில்லாமலும் இருக்கிறது எது என கர்த்தர் கூறினார்??
இஸ்ரவேல். ஏசாயா 1:3
2433: திராட்சை தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோல மீந்திருப்பவள் யார்??
சீயோன் குமாரத்தி. ஏசாயா 1:8
2434: இனி எவைகளை கொண்டு வர வேண்டாம் என்று கர்த்தர் கூறினார்??
வீண் காணிக்கைகள். ஏசாயா 1:13
2435: வேசியாய்ப்போன நகரம் எது??
உண்மையுள்ள நகரம். ஏசாயா 1:21
2436: நீதிபுரம் என்று பெயர் பெறுவது எது??
எருசலேம். ஏசாயா 1:26
2437: சத்திய நகரம் என்று பெயர் பெறுவது எது??
எருசலேம். ஏசாயா 1:26
2438: சணற்கூளமாய் இருப்பவன் யார்??
பராக்கிரமசாலி. ஏசாயா 1:31
2439: கடைசி நாட்களில் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்படுவது எது??
கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம். ஏசாயா 2:2
2440: சீயோனிலிருந்து வெளிப்படுவது எது??
வேதம். ஏசாயா 2:3
2441: பெருமையும் மேட்டிமையுமான எல்லாவற்றின் மேலும் வருவது எது??
கர்த்தரின் நாள். ஏசாயா 2:12
2442: யாரை நம்புவதை விட்டு விட வேண்டும்??
நாசியில் சுவாசமுள்ள மனுஷன். ஏசாயா 2:22
2443: விழுந்து போனது எது??
யூதா. ஏசாயா 3:8
2444: கழுத்தை நெறித்து நடந்தவர்கள் யார்??
சீயோன் குமாரத்திகள். ஏசாயா 3:16
2445: சீயோனில் மீதியாயிருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவன் எப்படி சொல்லப்படுவான்??
பரிசுத்தன். ஏசாயா 4:4
2446: நேசரிடத்தில் பாடும் பாட்டு எதைக் குறித்தது??
ஒரு திராட்சை தோட்டம். ஏசாயா 5:1
2447: சேனைகளின் கர்த்தருடைய திராட்சத் தோட்டம் யார்??
இஸ்ரவேலின் வம்சம். ஏசாயா 5:7
2448: தன்னை விரிவாக்கியது எது??
பாதாளம். ஏசாயா 5:14
2449: வண்டியில் வடங்களால் எதை இழுத்து வருகிறவர்களுக்கு ஐயோ??
பாவத்தை. ஏசாயா 5:18
2450 : பரிதானத்திற்காக குற்றவாளியை எப்படி தீர்க்கிறவர்களுக்கு ஐயோ??
நீதிமானாக. ஏசாயா 5:23
2451: ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்க கண்டவர் யார்??
ஏசாயா. ஏசாயா 6:1
2452: ஆண்டவருடைய வஸ்திரத்தொங்கலால் நிறைந்திருந்தது எது??
தேவாலயம். ஏசாயா 6:1
2453: ஐயோ அதமானேன் கூறியவன் யார்??
ஏசாயா. ஏசாயா 6:3
2454: தான் யார் நடுவில் வாசமாயிருப்பதாக ஏசாயா கூறினார்??
அசுத்த உதடுகளுள்ள ஜனங்கள். ஏசாயா 6:5
2455: இஸ்ரவேல் தேசத்தின் அடிமரம் எப்படியிருக்கும்??
பரிசுத்த வித்தாய். ஏசாயா 6:13
2456: காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறது போல அசைந்தது எது??
தாவீதின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும். ஏசாயா 7:2
2457: சேயார் யாசூபு யாருடைய மகன்??
ஏசாயா. ஏசாயா 7:3
2458: புகைகிற கொள்ளிக்கட்டைகள் யாரை குறித்து கூறப்பட்டது??
ரேத்சீனும் ரெமலியாவின் மகனும். ஏசாயா 7:6
2459: எத்தனை வருஷங்களில் எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொறுங்குண்டுபோம்??
65. ஏசாயா 7:8
2460: ஒரு பெரிய பாத்திரத்தை எடுக்கும் படி கர்த்தர் யாரிடம் கூறினார்??
ஏசாயாவிடம். ஏசாயா 8:1
2461: வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப் போன்றவன் யார்??
அசீரியாவின் ராஜா. ஏசாயா 8:7
2462: சீஷர்களுக்குள்ளே எதை முத்திரையிட கர்த்தர் ஏசாயாவிடம் கூறினார்??
வேதத்தை. ஏசாயா 8:16
2463: முணுமுணென்று ஓதுகிறவர்கள் யார்??
குறிகாரர். ஏசாயா 8:19
2464: முந்தின காலத்தில் இடுக்கமாய் ஈனப்படுத்தியிருந்தது எது??
செபுலோன் நப்தலி நாடுகள். ஏசாயா 9:1
2465: கர்த்தர் இஸ்ரவேலில் எவைகளை ஒரே நாளில் வெட்டிப் போடுவார்??
தலை வால் கிளை மற்றும் நாணல். ஏசாயா 8:14
2466: எப்படிப்பட்ட கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கு ஐயோ??
கொடுமையான. ஏசாயா 10:2
2467: கர்த்தருடைய கோபத்தின் கோல் யார்??
அசீரியன். ஏசாயா 10:5
2468: கல்னோ பட்டணம் எதைப் போலானது என்று அசீரியன் கூறினான்??
கர்கேமிஸ். ஏசாயா 10:9
2469: நான் புத்திமான் என்று கூறியவன் யார்??
அசீரிய ராஜா. ஏசாயா 10:13
2470: நிறைந்த நீதியோடே புறண்டு வருவது எது ??
தீர்மானிக்கப்பட்ட அழிவு. ஏசாயா 10:22
2471: ஓரேப் கன்மலையண்டையில் வெட்டுண்டவர்கள் யார்??
மீதியானியர். ஏசாயா 10:26
2472: சத்தமிட்டு கூப்பிடவேண்டியது எது??
ஏழை ஆனதோத். ஏசாயா 10:30
2473: வலசை வாங்கிப் போவது எது??
மத்மேனா. ஏசாயா 10:31
2475: மகத்துவமானவராலே விழுவது எது??
லீபனோன். ஏசாயா 10:34
2476: கூடி மேய்பவை எவை??
பசுவும் கரடியும். ஏசாயா 11:7
2477: யூதாவின் மேல் பொறாமையாயிராதவன் யார்??
எப்பிராயீம். ஏசாயா 11:13
2478: எப்பிராயீமைத் துன்பபடுத்தாதவன் யார்??
யூதா. ஏசாயா 11:13
2479: எகிப்தின் நதியை கர்த்தர் எப்படி பிரிப்பார்??
ஏழாறுகளாக. ஏசாயா 11:15
2480: சேனைகளின் கர்த்தர் எதை இலக்கம் பார்க்கிறார்??
யுத்த ராணுவத்தை. ஏசாயா 13:4
2481: கடூரமும் மூர்க்கமும் உக்கிரகோபமுமாய் வருவது எது??
கர்த்தருடைய நாள். ஏசாயா 13:9
2482: பாவத்தினிமித்தம் கர்த்தர் எதைத் தண்டிப்பார்??
உலகத்தை. ஏசாயா 13:11
2483: ராஜ்யங்களுக்குள் அலங்காரமானது எது??
பாபிலோன். ஏசாயா 13:19
2484: அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி யார்??
பாபிலோன் ராஜா. ஏசாயா 14:12
2485: யாருடைய சந்ததி ஒருபோதும் பேர் பெறுவதில்லை??
தீமை செய்கிறவர்கள். ஏசாயா 14:20
2486: ஆர் என்னும் பட்டணம் எங்கே இருந்தது??
மோவாப். ஏசாயா 15:1
2487: சங்காரமான மோபாவிலுள்ள பட்டணங்கள் எவை??
ஆர் கீர். ஏசாயா 15:1
2488: யாருடைய நீர்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம்??
நிம்ரீ. ஏசாயா 15:6
2489: கிருபையினாலே ஸ்தாபிக்கப்படுவது எது??
சிங்காசனம். ஏசாயா 16:5
2490: மெத்தப் பெருமைக்காரன் யார்??
மோவாப். ஏசாயா 16:6
2491: எவைகளுக்கு தம் கண்ணீரைப் பாய்ச்சுவேன் என்று கர்த்தர் கூறுகிறார்??
எஸ்போன் எலெயாலே. ஏசாயா 16:9
2492: ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த வருஷங்கள் எத்தனை??
மூன்று. ஏசாயா 16:14
2493: பாழான மண்மேடாவது எது??
தமஸ்கு. ஏசாயா 17:1
2494: ஏகமாய் மலைகளின் பட்சிகளுக்கு விடப்படுவது எது??
திராட்சச் செடிகள். ஏசாயா 18:5&6
2495: சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலம் எது??
சீயோன் மலை. ஏசாயா 18:7
2496: கர்த்தருக்கு முன்பாக குலுங்குவது எது??
எகிப்தின் விக்கிரகங்கள். ஏசாயா 19:1
2497: எதின் பிரபுக்கள் மோசம் போனார்கள்?? நோப்
ஏசாயா 19:13
2498: கர்த்தர் யாரை அடித்து குணமாக்குவார்??
எகிப்தியர். ஏசாயா 19:22
2499: கர்த்தர் யாரை தம் சுதந்தரம் என்று கூறினார்??
இஸ்ரவேலர். ஏசாயா 19:25
2500: வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தவர் யார்??
ஏசாயா. ஏசாயா 20:2
2501: வனாந்தரத்தின் பாரம் எது??
கடல். ஏசாயா 21:1
2502: அரபியாவின் காடுகளில் இராத்தங்குகிறவர்கள் யார்??
நிதானியராகிய பயணக்கூட்டங்கள். ஏசாயா 21:13
2503: ஒரே வருஷத்திலே யாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போம்??
கேதாரு. ஏசாயா 21:16
2504: இரதங்களோடும் கலாட்களோடும் குதிரை வீரரோடும் வருகிறவன் யார்??
ஏலாமியன். ஏசாயா 22:6
2505 : கேடகத்தை வெளிப்படுத்துவது எது??
கீர். ஏசாயா 22:6
2506: தன் நிலையை விட்டுத் துரத்தி விடப்படுபவன் யார்??
செப்னா. ஏசாயா 22:19
2507: ஜாதிகளின் சந்தையாயிருந்தது எது??
தீரு. ஏசாயா 23:3
2508: வெட்கப்பட வேண்டியது எது??
சீதோன். ஏசாயா 23:4
2509: ஒடுங்குண்ட கன்னி யார்??
சீதோன் குமாரத்தி. ஏசாயா 23:12
2510: 70 வருஷம் மறக்கப்பட்டிருப்பது எது??
தீரு. ஏசாயா 23:15
2511: புலம்பி வாடும் தேசம் எது??
தீரு தேசம். ஏசாயா 24:4
2512: சேனைகளின் கர்த்தரின் ஆளுகையினால் நாணமடைவது எது??
சூரியன். ஏசாயா 24:23
2513: வறட்சியான இடத்தின் காங்கை எதினால் தணியும்??
மேகம். ஏசாயா 25:5
2514: பெலனான நகரத்துக்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவது எது??
இரட்சிப்பு. ஏசாயா 26:1
2515: யாருடைய பாதை செம்மையாயிருக்கிறது??
நீதிமான். ஏசாயா 26:7
2516: துன்மார்க்கன் எதை கவனியாதே போகிறான்??
கர்த்தருடைய மகத்துவத்தை. ஏசாயா 26:10
2517: நீண்ட பாம்பு என்பது எது??
லிவியாதான். ஏசாயா 27:1
2518: யாருடைய அக்கிரமம் நிக்கிரகம் பண்ணப்படும்??
யாக்கோபு. ஏசாயா 27:9
2519: ஆசாரியனும் தீர்க்கதரிசியும் எதினால் மதிமயங்குகிறார்கள்??
மதுபானம். ஏசாயா 28:7
2520: கர்த்தர் எதை தூக்கு நூலாக வைப்பார்??
நீதியை. ஏசாயா 28:17
2521: கால்நீட்ட எதில் நீளம் போதாது??
படுக்கை. ஏசாயா 28:20
2522: தூலத்தாலே போரடிக்கப்படாதது எது??
உளுந்து. ஏசாயா 28:27
2523: மிலாற்றினால் அடிக்கப்படுவது எது??
சீரகம். ஏசாயா 28:27
2524: தாவீது வாசம்பண்ணின நகரம் எது??
அரியேல். ஏசாயா 29:1
2525: இன்னும் கொஞ்ச காலத்தில் செழிப்பான வயல் வெளியாக மாறுவது எது??
லீபனோன். ஏசாயா 29:17
2526: இனி யார் வெட்கப்படுவதில்லையென்று கர்த்தர் கூறினார்??
யாக்கோபு. ஏசாயா 29:22
2257: முறுமுறுக்கிறவர்கள் எதை கற்றுக்கொள்வார்கள்??
உபதேசம். ஏசாயா 29:24
2258: எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருப்பது எது??
கர்த்தருடைய கோபம். ஏசாயா 30:27
2259: சேனைகளின் கர்த்தர் எவைகளைப்போல எருசலேமின்மேல் ஆதரவாயிருப்பார்??
பறந்து காக்கிற பட்சிகள். ஏசாயா 31:15
2260: பதற்றமுள்ளவர்களின் இருதயம் எதை உணர்ந்து கொள்ளும்??
அறிவு. ஏசாயா 32:4
2261: இனி உதாரன் என்று சொல்லப்படாதவன் யார்??
லோபி. ஏசாயா 32:5
2262: மாயம் பண்ணுகிறவன் யார்??
மூடன். ஏசாயா 32:6
2263:ஒரு வருஷமும் சில நாட்களும் தத்தளிப்பவர்கள் யார்??
நிர்விசாரிகள். ஏசாயா 32:10
2264: வனாந்தரத்திலே வாசமாயிருப்பது எது??
நியாயம். ஏசாயா 32:16
2265: நீதியின் கிரியை எது??
சமாதானம். ஏசாயா 32:17
2266:எருசலேமின் பொக்கிஷம் எது??
கர்த்தருக்கு பயப்படுதல். ஏசாயா 33:6
2267: வெட்கி வாடுகிறது எது??
லீபனோன். ஏசாயா 33;9
2268: எப்படி நடக்கிறவன் உயர்ந்த இடங்களில் வாசம் பண்ணுவான்??
நீதியாய். ஏசாயா 33:15&16
2269: பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரம் எது??
சீயோன். ஏசாயா 33:20
2270: புஸ்தகச் சுருளைப்போல் சுருட்டப்படுவது எது??
வானங்கள். ஏசாயா 34:4
2271: வானங்களில் வெறிகொண்டது எது??
கர்த்தருடைய பட்டயம். ஏசாயா 34:5
2272: சகல ஜாதிகளுக்கும் கர்த்தர் நியமித்தவை வரும் நாள் எது??
கர்த்தர் பழிவாங்கும் நாள். ஏசாயா 34:8
2273: எதில் தேடி வாசிக்க வேண்டும்??
கர்த்தருடைய புஸ்தகம். ஏசாயா 34:16
2274: எவைகளை பலப்படுத்த வேண்டும்??
தள்ளாடுகிற முழங்கால்கள். ஏசாயா 35:3
2275: பரிசுத்த வழி என்னப்படுவது எது??
பெரும்பாதையான வழி. ஏசாயா 35:8
2276:பரிசுத்த வழியில் நடப்பவர்கள் யார்??
மீட்கப்பட்டவர்கள். ஏசாயா 35:9
2277: கர்த்தரால் மீட்கப்பட்டவர்களின் தலையின் மேலிருப்பது எது??
நித்திய மகிழ்ச்சி. ஏசாயா 35:10
2278: அசீரிய ராஜா நெரிந்த நாணல் கோல் என்று எதை கூறினான்??
எகிப்து. ஏசாயா 36:5
2279: எசேக்கியாவுக்கு எத்தனை குதிரைகளைக் கொடுப்பேன் என்று ரப்சாக்கே கூறினான்??
2000. ஏசாயா 36:8
2280: சனகெரிப் எதின் மேல் ராஜாவாயிருந்தான்??
அசீரியா. ஏசாயா 36:1
2281: வஸ்திரங்களை கிழித்து இரட்டு உடுத்திக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்தவன் யார்??
எசேக்கியா. ஏசாயா 37:1
2282: எத்தியோப்பியா வின் மேல் ராஜாவாயிருந்தவன் யார்??
திராக்கா. ஏசாயா 37:9
2283: மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனி கொடுப்பவர்கள் யார்??
யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள். ஏசாயா 37:30
2284: அசீரிய பாளயத்தில் 1;85;000 பேரைச் சங்கரித்தவன் யார்??
கர்த்தருடைய தூதன். ஏசாயா 37:36
2285: சனகெரிப் எங்கே பணிந்து கொள்ளுகிறபோது கொல்லப்பட்டான்??
நிஸ்ரோகின் கோவிலில். ஏசாயா 37:38
2286: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும் யார் யாரிடம் கூறியது??
ஏசாயா எசேக்கியாவிடம். ஏசாயா 38:1
2287: கர்த்தருக்கு முன்பாக உண்மையும் மன உத்தமுமாய் நடந்தவன் யார்??
எசேக்கியா. ஏசாயா 38:3
2288: கர்த்தரால் எசேக்கியாவுக்கு அடையாளமாயிருப்பது எது??
சாயையை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்புவது. ஏசாயா 38:7-8
2289: நமுட்டைப்போலும் தகைவிலான் குருவியைப் போலும் கூவினவர் யார்??
எசேக்கியா. ஏசாயா 38:14
2290: தேவனை துதியாதது எது போற்றாதது எது??
பாதாளம் துதியாது, மரணம் போற்றாது. ஏசாயா 38:18
2291: மெரோதாக்பலாதான் எதின் மேல் ராஜாவாயிருந்தான்??
பாபிலோன். ஏசாயா 39:1
2292: எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டவன் யார்??
மெரோதாக்பலாதான். ஏசாயா 39:1
2293: என்றென்றைக்கும் நிற்பது எது??
நமது தேவனுடைய வசனம். ஏசாயா 40:8
2294: கர்த்தராகிய ஆண்டவரோடே கூட வருவது எது??
அவர் அளிக்கும் பலன். ஏசாயா 40:10
2295: கர்த்தர் மலைகளை எதினால் நிறுத்தார்??
தராசு. ஏசாயா 40: 12
2296: கர்த்தர் பூமியின் மண்ணை எதில் அடக்கினார்??
மரக்காலில். ஏசாயா 40:12
2297: ஓடினாலும் இளைப்படையாதவர்கள் யார்??
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள். ஏசாயா 40:31
2298: கர்த்தர் நீதிமானை எங்கே வரவழைத்தார்??
தமது பாதபடியிலே. ஏசாயா 41:2
2299: கர்த்தருடைய சிநேகிதன் யார்??
ஆபிரகாம். ஏசாயா 41:8
2300: உயர்ந்த மேடுகளில் கர்த்தர் எதை உண்டாக்குவார்??
ஆறுகள். ஏசாயா 41…
2301: கர்த்தர் எருசலேமுக்கு யாரை கொடுத்தார்??
சுவிசேஷகரை. ஏசாயா 41:27
2302: கர்த்தராகிய தேவன் பூமியிலிருக்கிற ஜனத்துக்கு எதை கொடுத்தார்??
சுவாசம். ஏசாயா 42:5
2304: கர்த்தர் தம் துதியை எவைகளுக்கு க் கொடார்??
விக்கிரகங்கள். ஏசாயா 42:8
2305: கர்த்தர் எதை முக்கியப்படுத்தி மகிமையுள்ளதாக்கு வார்??
தமது வேதத்தை. ஏசாயா 42:21
2306: இஸ்ரவேலை மீட்கும் பொருளாக கர்த்தர் எதைக் கொடுத்தார்??
எகிப்து. ஏசாயா 43:3
2307: கர்த்தரின் பார்வைக்கு அருமையானது எது??
இஸ்ரவேல். ஏசாயா 43:3
2308: ஒன்றுக்கும் உதவாத தெய்வம் எது??
விக்கிரகம். ஏசாயா 44:10
2309: கர்த்தர் யாருடைய வார்த்தையை நிலைப்படுத்துவார்??
தம் ஊழியக்காரர். ஏசாயா 44:26
2310: கர்த்தர் யாரைக் குறித்து அவன் என் மேய்ப்பன் என்று சொல்லுவார்??
கோரேஸ். ஏசாயா 44:28
2311: கர்த்தர் யாருக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்கப்பண்ணுவார்??
கோரேஸ். ஏசாயா 45:1
2312: கர்த்தர் பூமியை எப்படியிருக்க சிருஷ்டிக்கவில்லை??
வெறுமையாய். ஏசாயா 45:18
2313: எது பணியும் எது குனியும்??
பேல் பணியும், நேபோ குனியும். ஏசாயா 46:1
2314: தேவன் எவைகளை ஆதிமுதற்கொண்டு அறிவிக்கிறார்??
அந்தத்திலுள்ளவைகள். ஏசாயா 46:10
2315: யாக்கோபின் வம்சத்தாரின் பிடரி நரம்பு எப்படிப்பட்டது??
இரும்பு. ஏசாயா 48:4
2316: சேராதே போனது எது??
இஸ்ரவேல். ஏசாயா 49:5
2317: கர்த்தர் தமது கண்டிதத்தினால் எதனை வற்றப்பண்ணுகிறார்??
கடல். ஏசாயா 50:2
2318: கர்த்தர் வானங்களுக்கு எதை உடுத்துகிறார்??
காரிருள். ஏசாயா 50:3
2319: கர்த்தர் சீயோனின் வனாந்தரத்தை எதைப்போலாக்குவார்??
ஏதேன். ஏசாயா 51:3
2320: என்றென்றைக்கும் இருப்பது எது??
கர்த்தரின் இரட்சிப்பு. ஏசாயா 51:16.
2321: பரிசுத்த நகரம் என்று கூறப்பட்டுள்ளது எது??
எருசலேம். ஏசாயா 52:1
2322: முகாந்திரமில்லாமல் கர்த்தருடைய ஜனங்களை ஒடுக்கினவன் யார்??
அசீரியன். ஏசாயா 52:4
2323: மலைகள் விலகினாலும் விலகாதது எது??
கர்த்தருடைய கிருபை. ஏசாயா 54:10
2324: கர்த்தர் எதை நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவார்??
தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை. ஏசாயா 55:3
2325: ஜனக்கூட்டங்களுக்கு சாட்சியாக ஏற்படுத்தப்பட்டவர் யார்??
தாவீது. ஏசாயா 55:4
2326: கர்த்தர் யாரை தம் பரிசுத்தப்பர்வதத்துக்குக் கொண்டு வருவார்??
அந்நிய புத்திரன். ஏசாயா 56:6&7
2327: இஸ்ரவேலர் எதை அகலமாக்கினார்கள்??
தங்கள் மஞ்சத்தை. ஏசாயா 57:8
2328: கர்த்தர் எதினிமித்தம் இஸ்ரவேலரின் மேல் கடுங்கோபமானார்??
பொருளாசையென்னும் அக்கிரமம். ஏசாயா 57:17
2329: கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறவர்கள் யார்??
துன்மார்க்கர். ஏசாயா 57:20
2330: எந்த நாளிலே உன் வழிகளின்படி நடக்கக்கூடாது??
பரிசுத்த நாளகிய ஓய்வு நாளில். ஏசாயா 58:13
2331: கர்த்தருக்கு உகந்த உபவாசம் செய்யும் போது நம் முன்னாலே செல்வது எது ??
நீதி. ஏசாயா 58:8
2332: திறப்பானதை அடைக்கிறவன் என்று பெயர் பெறுகிறவன் யார்??
யாக்கோபின் வம்சத்தார். ஏசாயா 58:12
2333: எவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்??
கட்டுவிரியன். ஏசாயா 59:5
2334: யார் இல்லையென்று கர்த்தர் ஆச்சரியப்பட்டார்??
விண்ணப்பம் பண்ணுகிறவன். ஏசாயா 59:16
2335: கர்த்தர் எதினால் இடப்பட்ட தகனபலியை வெறுக்கிறார்??
கொள்ளைப்பொருளினால். ஏசாயா 61:8
2336: இஸ்ரவேலின் தேசம் இனி எப்படி சொல்லப்படும்??
பியூலா. ஏசாயா 62:4
2337: யார் அமரிக்கையாயிருக்கலாகாது??
கர்த்தரை பிரஸ்த்தாபம் பண்ணுகிறவர்கள். ஏசாயா 62:6
2338: இஸ்ரவேலர் கலகம்பண்ணி யாரை விசனப்படுத்தினார்கள்??
கர்த்தருடைய பரிசுத்த ஆவியை. ஏசாயா 63:10
2339: தேவனுடைய வாசஸ்தலம் எப்படிப்பட்டது??
பரிசுத்தமும் மகிமையுமுள்ளது. ஏசாயா 63:15.
2340: கர்த்தருடைய சந்நிதியில் எவைகள் உருகிப்போயின??
பர்வதங்கள். ஏசாயா 64:3
2341: கர்த்தர் எதை களிகூருதலாக சிருஷ்டித்தார்??
எருசலேமை. ஏசாயா 65:18
2342: விருட்சத்தின் நாட்களைப்போலிருப்பது எது??
கர்த்தருடைய ஜனத்தின் நாட்கள். ஏசாயா 65:22
2343:எதற்கு நடுங்குகிறவனை கர்த்தர் நோக்கிப்பார்க்கிறார்??
தம் வசனத்துக்கு. ஏசாயா 66:2
2344: கர்த்தர் சமாதானத்தை எதைப் போல பாயும் படி செய்வார்??
ஒரு நதி. ஏசாயா 66:12
2345: கர்த்தருடைய சத்துருக்களிடத்தில் அறியப்படுவது எது??
அவருடைய சினம். ஏசாயா 66:14
2346: வில்வீரர் இருக்கிற இடங்கள் எவை??
பூல் லூது தூபால் மற்றும் யாவான். ஏசாயா 66:19
2347: கர்த்தருடைய கீர்த்தியைக் கேளாமலிருக்கிற ஜாதிகளின் தேசம் எது??
தர்ஷுஸ். ஏசாயா 66:19
2348: கர்த்தர் படைக்கப் போகிற எவைகள் அவருக்கு முன்பாக நிற்கும்??
புதிய வானமும் புதிய பூமியும். ஏசாயா 66:22
2349: ,யாருடைய பூச்சி சாகமலிருக்கும்??
கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்த மனுஷர். ஏசாயா 66:24
2350: எருசலேமை நேசித்தவர்களையும் எருசலேமினிமித்தம் துக்கித்தவர்களையும் கர்த்தர் எபபடி தேற்றுவார்??
ஒரு தாய் தேற்றுவது போல. ஏசாயா 66:13.
2351: ஆனதோத் ஊர் எத்தேசத்திலிருந்தது??
பென்யமீன். எரேமியா 1:1
2352: எரேமியாவின் தகப்பன் யார்??
இல்க்கியா. எரேமியா 1:1
2353: எரேமியா புஸ்தகத்தில் யாருடைய வசனங்கள் கூறப்பட்டுள்ளது??
எரேமியாவின். எரேமியா 1:1
2354: கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே பரிசுத்தம் பண்ணப்பட்டவர் யார்??
எரேமியா. எரேமியா 1:5
2355: சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்று கூறியவர் யார்??
எரேமியா. எரேமியா 1:6
2356: எதை தீவிரமாக நிறைவேற்றுவேன் என்று கர்த்தர் கூறினார்??
தம்வார்த்தையை. எரேமியா 1:12
2357: கர்த்தருக்கு பரிசுத்தமாயிருந்தது எது??
இஸ்ரவேல். எரேமியா 2:3
2358: வறட்சியும் மரண இருளுமுள்ள தேசம் எது??
வனாந்திரம். எரேமியா 2:5
2359: இஸ்ரவேலர் எதை அருவருப்பாக்கினார்கள்??
கர்த்தருடைய சுதந்தரத்தை. எரேமியா 2:7
2360: தாறுமாறாக ஓடுகிற பெண்ணொட்டகம் யார்??
இஸ்ரவேல். எரேமியா 2:23
2361:இஸ்ரவேல் என்ன சொல்லுகிறதினிமித்தம் கர்த்தர் அதனோடே வழக்காடுவார்??
நான் பாவஞ்செய்யவில்லையென்று. எரேமியா 2:35
2362: வனாந்தரத்திலே காத்து கொண்டிருந்தது யார்??
அரபியன். எரேமியா 3:2
2363: பட்டயம் பிராணன் மட்டும் எட்டுகிறதே என்றவர் யார்??
எரேமியா. எரே 4:10
2364: கர்த்தருடைய ஜனமாகிய குமாரத்திக்கு நேராக அடிப்பது எது??
தீக்காற்று. எரேமியா 4:11
2365: கர்த்தருடைய கண்கள் எதை நோக்குகின்றது??
சத்தியத்தை. எரே 5:3
2366: யார் காற்றாய்ப் போவார்கள் என்று இஸ்ரவேலர் கூறினார்கள்??
தீர்க்கதரிசிகள். எரே 5:13
2367: சமுத்திரம் கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக இருப்பது எது??
சமுத்திரத்தின் மணல். எரே 5:22
2368: இஸ்ரவேலருக்கு நன்மையை வரவொட்டாதிருப்பது எது??
அவர்கள் பாவங்கள். எரே 5:25
2369: விசாரிக்கப்படவேண்டிய நகரம் எது??
எருசலேம். எரே 6:6
2370: இஸ்ரவேலருக்கு நிந்தையாயிருந்தது எது??
கர்த்தருடைய வசனம். எரே 6:10
2371: கர்த்தர் முந்தி தம் நாமம் விளங்கப்பண்ணின ஸ்தலம் எது??
சீலோ. எரே 7:12
2372: கர்த்தர் கற்பிக்கும் எல்லா வழியிலும் நடந்தால் உண்டாவது என்ன??
நன்மை. எரே 7:23
2373: தோப்பேத் எங்கே இருந்தது??
இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கில். எரே 7:31
2374: எது சங்காரப்பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும்??
தோப்பேத். எரே 7:32
2375: துஷ்டவம்சம் என்று கர்த்தர் எதை கூறினார்??
யூதா வம்சம். எரே 8:3
2376: என் தலை தண்ணீரானால் நலமாயிருக்கும் என்று கூறியவர் யார்??
எரேமியா. எரே 9:1
2377: கர்த்தர் எதை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவார்??
எருசலேம். எரே 9:11
2378: சீயோனின் பலகணிகளிலேறி அரமனைகளில் பிரவேசித்தது எது??
சாவு. எரே 9:21
2379: தகடாக்கப்பட்ட வெள்ளி எங்கேயிருந்து கொண்டுவரப்படுகிறது??
தர்ஷீஸ். எரே 10:9
2380: தகடாக்கப்பட்ட பொன் எங்கேயிருந்து கொண்டு வரப்படுகிறது??
உப்பாசி. எரே 10:9
2381: கர்த்தர் பூச்சக்கரத்தை எதினால் படைத்தார்??
தம்முடைய ஞானம். எரேமியா 10:12
2382: மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப் போடுவோமென்று கூறியவர்கள் யார்??
ஆனதோத்தின் மனுஷர். எரே 11:19-21
2383: எரேமியாவின் பிராணனை வாங்கத்தேடியவர்கள் யார்??
ஆனதோத்தின் மனுஷர். எரே 11:21
2384: ஒரு சணல்கச்சையை தனக்கு வாங்கிக்கொள்ள யாரிடம் கூறப்பட்டது??
எரேமியாவிடம். எரே 13:1
2385: மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருப்பது எது??
கச்சை. எரே 13:11
2386: எத்தியோப்பியன் எதை மாற்ற முடியாது??
தன் தோலை. ஏரே 13:23
2387: எத்தனை பிள்ளைகளை பெற்றவள் களைத்து போகிறாள்??
ஏழு. எரே 15:9
2388: சீயென்று அருவருக்கப்படத்தக்கது எது??
நாற்றமான விக்கிரகங்கள். எரே 16:18
2389: மனுஷன் தனக்கு யாரை உண்டுப்பண்ணலாகாது??
தேவர்களை. எரே 16:20
2390:புறஜாதிகள் கர்த்தருடைய நாமம் எது என்று அறிந்து கொள்வார்கள்??
யேகோவா. எரே 16:21
2391: இரும்பெழுத்தாணியினாலும் வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டிருந்தது எது??
யூதாவின் பாவம். எரே 17:1
2392: திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது எது??
இருதயம். எரே 17:9
2393: ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனமாயிருந்தது எது??
பரிசுத்த ஸ்தானம். எரே 17:12
2394: கர்த்தரை விட்டு அகன்று போகிறவர்களின் பெயர் எங்கே எழுதப்படும்??
புழுதியில். எரே 17:14
2395: எது பறக்கடிப்பதுபோல கர்த்தர் இஸ்ரவேலரைப் பறக்கடிப்பார்??
கொண்டல் காற்று. ஏரே 18:17
2396: ஆசாரியரிடத்தில் ஒழிந்து போகாதது எது??
வேதம். எரே 18:18
2397: கர்த்தர் எதை தோப்பேத்துக்குச் சரியாக்குவார்??
இன்னோமின் குமாரனுடைய பள்ளத்தாக்கு. எரே 19:12
2398: எரேமியா தீர்க்கதரிசியை அடித்தவன் யார்??
பஸ்கூர். எரே 20:2
2399: கர்த்தர் பஸ்கூரை எப்படி அழைத்தார்??
மாகோர் மீசாபீப். எரே 20:3
2400: எது சபிக்கப்படுவதாக என்று எரேமியா கூறினார்??
தான் பிறந்த நாள். எரே 20:14
2401: கர்த்தர் யூதா ஜனங்களுக்கு முன்பாக எவைகளை வைத்தார்??
ஜீவவழி, மரணவழி. எரே 21:8
2402: கர்த்தருக்குக் கீலேயாத்தைப்போல இருப்பது எது??
யூதா ராஜாவின் அரமனை. எரே 22:6
2403: யாருக்காக அழவேண்டாம் என்று கர்த்தர் கூறினார்??
மரித்தவனுக்காக. எரே 22:10
2404: கர்த்தரை அறிகிற அறிவு எது??
சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாத்தை விசாரித்தறிவது. எரே 22:16
2405: ஒரு கழுதை புதைக்கப்படுகிற வண்ணமாய் புதைக்கப்படுபவன் யார்??
யோயாக்கீம். எரே 22:19
2406: அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையைப் போன்றவன் யார்??
கோனியா. எரே 22:28
2407: சந்தானமற்றவன் என்று யாரைக் குறித்து எழுதப்பட்டது??
கோனியா. எரே 22:30
2408: எவர்கள் எல்லாம் மாயக்காரராயிருக்கிறார்கள்??
தீர்க்கதரிசியும், ஆசாரியனும். எரே 23:1
2409: எத்தனை வருஷமாக எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானது??
23 வருஷம். எரே 25:3
2410: கர்த்தர் யாரை தம் ஊழியக்காரன் என்று கூறினார்??
நேபுகாத் நேச்சார். எரே 25:9
2411: இகழ்ச்சி குறி என்பது என்ன??
ஈசல் போடுதல். எரே 25:9
2412: யூதா ஜனங்களும் எருசலேமின் குடிகளும் எவ்வளவு நாள் பாபிலோன் ராஜாவை சேவிப்பார்கள்??
70 வருஷம். எரே 25:11
2413: உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தில் குடிப்பவன் யார்??
சேசாக்கு என்கிற ராஜா. எரே 25:26
2414:தீங்கை கட்டளையிட கர்த்தர் எங்கே துவங்குவார்??
தம் நாமம் தரிக்கப்பட்ட நகரம். எரே 25:29
2415: எசேக்கியா ராஜாவின் நாட்களில் தீர்க்கதரிசனம் சொன்னவன் யார்??
மீகா. எரே 26:18
2416: எது வயல்வழியாக உழப்படும்??
சீயோன். எரே 26:18
2417: கர்த்தர் பூமியையும் மனுஷனையும் பூமியின் மேலுள்ள மிருகஜீவன்களையும் எவைகளினால் உருவாக்கினார்??
தம் மகா பலத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும். எரே 27:5
2418: எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்து போட்டவன் யார்??
அனனியா. எரே 28:10
2419: சிறையிருக்கும்படி ஜனங்களுக்கு பொய்யான தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள் யார்??
ஆகாப் சிதேக்கியா. ஏரே 29:21
2420: தன் மண்மேட்டின் மேல் கட்டப்படுவது எது??
எருசலேம் நகரம். எரே 30:18.
2421: கர்த்தருடைய பெருங்காற்று என்று கூறப்பட்டுள்ளது எது ??
கோராவாரிக் காற்று. எரே 30:23
2422: கர்த்தர் யாரை மறுபடியும் கட்டுவிப்பார்??
இஸ்ரவேல் என்னும் கன்னிகையை. எரே 31:4
2423: கர்த்தரின் சேஷ்டபுத்திரனாயிருப்பவன் யார்??
எப்பிராயீம். எரே 31:9
2424: ரமாவில் தன் பிள்ளைகளுக்காக அழுதவள் யார்??
ராகேல். எரே 31:15
2425: கர்த்தருடைய உள்ளம் யாருக்காக கொதித்தது??
எப்பிராயீம். எரே 31:20
2426: அவனவன் எதினிமித்தமே சாவான்??
தன் தன் அக்கிரமம். எரே 31:30
2427: எரேமியாவின் பெரிய தகப்பன் யார்??
சல்லூம். எரே 32:7
2428: ஆனதோத்திலிருக்கிற தன் நிலத்தை வாங்கிக்கொள்ள எரேமியாவிடம் கூறியவன் யார்??
அனாமெயேல். எரே 32:7
2429: ஆனதோத்தூர் எந்த நாட்டில் இருந்தது??
பென்யமீன். எரே 32:8
2430: எண்ணப்படாததாய் இருக்கிறது எது??
வானத்து நட்சத்திரங்கள். எரே 33:22
2431: சமாதானத்தோடே சாவாய் என்று யார் யாரிடம் கூறியது??
கர்த்தர் சிதேக்கியாவிடம். எரே 34:5
2432: நாங்கள் திராட்சை ரசம் குடிக்கிறதில்லை கூறியவர்கள் யார்??
ரேகாபியர். எரே 35:6
2433: நான் அடைக்கப்பட்டவன் கூறியவன் யார்??
எரேமியா. எரே 36:5
2434: சுருளைச் சுட்டெரித்த ராஜா யார்??
யோயாக்கீம். எரே 36:28
2435: யோயாக்கீமை யூதா தேசத்தில் ராஜாவாக நியமித்தவன் யார்??
நேபுகாத் நேச்சார். எரே 37:1
2436: கோனியா யாருடைய குமாரன்??
யோயாக்கீம். எரே 37:1
2437: காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்தவர் யார்??
எரேமியா. எரே 37:16
2438: தன்னை எங்கே அனுப்ப வேண்டாம் என்று எரேமியா சிதேக்கியாவிடம் வேண்டினார்??
யோனத்தானுடைய வீட்டிற்கு. எரே 37:20
2439: எரிகோவின் சம பூமியில் பிடிக்கப்பட்டவன் யார்??
சிதேக்கியா. எரே 39:5
2440: ரிப்லா எதின் ஊராமிருந்தது??
ஆமாத் தேசம். எரே 39:5
2441: கண்களை கெடுத்து இரண்டு வெண்கல விலங்குகள் போட்டு பாபிலோனுக்கு கொண்டு செல்லப்பட்டவன் யார்??
சிதேக்கியா ராஜா. எரே 39:7
2442: காவற்சேனாதிபதியாய் இருந்தவன் யார்??
நேபுசராதான். எரே 39:9
2443: யாருக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாதிருக்க நேபுகாத்நேச்சார் நேபுசராதானுக்கு கட்டளை கொடுத்தார்??
எரேமியா. எரே 39:12
2444: எரேமியாவின் கைகளிலிடப்பட்ட விலங்குகளை நீக்கிப்போட்டவன் யார்??
நெபுசராதான். எரே 40:4
2445: யூதா பட்டணங்களின் மேல் அதிகாரியாக வைக்கப்பட்டவன் யார்??
கெதலியா. எரே 40:5
2446: பாஷாவினிமித்தம் பள்ளத்தை உண்டு பண்ணினவன் யார்??
ஆசா. எரே 41:9
2447: கிம்காமின் பேட்டை எதற்கு அருகிலிருந்தது??
பெத்லகேமூர். எரே 41:18
2448: தக்பானேஸ் எங்கே இருந்தது??
எகிப்து. எரே 43:7
2449: யார் வந்து எகிப்து தேசத்தை அளிப்பான்??
நேபுகாத் நேச்சார். எரே 43:11.
2450: கர்த்தர்வெறுக்கிற அருவருப்பான காரியம் எது??
அந்நிய தேவர்களுக்கு தூபம் காட்டி ஆராதனை செய்தது. எரே 44:3-4
2451பார்வோன் ஒப்பிரா எதின் மேல் ராஜாவாயிருந்தான்??
எகிப்து. எரே 44:30
2452: நீ உனக்கு பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ யார் யாரிடம் கேட்டது??
கர்த்தர் பாருக்கிடம். ஏசாயா 45:5
2453: கர்கேமிஸ் எந்த நதியண்டையில் இருந்தது??
ஐப்பிராத்து. எரே 46:2
2454: யார் ஓடிப்போக வேண்டாம் என்று கர்த்தர் கூறினார்??
வேகமாய் ஓடுகிறவன். எரே 46:6
2455: யார் தப்பிப்போக வேண்டாம் என்று கர்த்தர் கூறினார்??
பராக்கிரமசாலி. எரே 46:6
2456: ஆயத்தப்பட்டு நில் எதைக் குறித்து கூறப்படாடது??
எகிப்து. எரே 46:14
2457: குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டு கிடப்பது எது??
நோப். எரே 46:19
2458: மகா நேர்த்தியான கடாரி எது??
எகிப்து. எரே 46:20
2459: பாம்பை போல் சீறுகிறவன் யார்??
நேபுகாத்நேச்சார். எரே 46:22
2460: திரும்பி வந்து அமைதியோடும் சாங்கோபங்கத்தோடும் இருப்பவன் யார்??
யாக்கோபு. எரே 46:27
2461: மொட்டையடிக்கப்படுவது எது??
காத்சா. எரே 47:5
2462: தன் உறைக்குள் திரும்பி வந்து ஓய்ந்திருக்கும்படி எதனிடத்தில் கூறப்பட்டது??
கர்த்தரின் பட்டயம். எரே 47:6
2463: வெட்கப்பட்டு பிடிக்கப்பட்டுப் போனது எது??
கீரியாத்தாயீம். எரே 48:1
2464: தன் சிறுவயது முதல் சுகமாய் வாழ்ந்தது எது??
மோவாப். எரே 48:11
2465: பெலனான தடி என்பது எது??
மோவாப். எரே 48:17
2466: மெத்த பெருமைக்காரன் யார்??
மோவாப். எரே 48:29
2467: அவன் இனி இரான் என்று கர்த்தர் யாரைக் குறித்து கூறினார்??
ஏசா. எரே 49:10
2468: ஜாதிகளுக்குள்ளே சிறியதாக்கப்படுவது எது??
போஸ்றா. எரே 49:15
2469: வலு சர்ப்பங்களின் தாபரமாவது எது??
ஆத்சோர். எரே 49:33
2470: தெறிபட்டு போன ஆடு எது??
இஸ்ரவேல். எரே 50:17
2471: குடியற்றதும் பெரும்பாழுமாயிருப்பது எது??
கல்தேயா. எரே 50:13
2472: யார் இடறி விழுவான்??
இடும்புள்ளவன். எரே 50:32
2473: விக்கிரக தேசம் என்று எதைப் பற்றி கூறப்பட்டுள்ளது??
பாபிலோன். எரே 50:39
2474: கர்த்தருடைய கையிலுள்ள பொற்பாத்திரம் எது??
பாபிலோன். எரே 51:7
2475: கர்த்தர் பூச்சக்கரத்தை எதினால் படைத்தார்??
தமது ஞானம். எரே 51:15
2476: பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதம் எது??
பாபிலோன். எரே 51: 25
2477: சாந்தகுணமுள்ள பிரபு யார்??
செராயா. எரே 51:60
2478: மரணமடையும் நாள் மட்டும் காவல் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டவன் யார்??
சிதேக்கியா. எரே 52:11
2479: ஏவில்மெரொதாக் எதினுடைய ராஜா??
பாபிலோன். எரே 52:31
2480: யோயாக்கீனுடைய தலையை உயர்த்தினவன் யார்??
ஏவில்மெரொதாக். எரே 52:31
2481: தன் ஜனமாகிய குமாரத்தியின் நொறுக்குதலினிமித்தம்யாருடைய கண்கள் கண்ணீர் சொரிந்தன??
எரேமியா. புலம்பல் 2:11
2482: ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் யார் கொலைசெய்யப்பட்டார்கள்??
ஆசாரியனும் தீர்க்கதரிசியும். புலம்பல் 2:20
2483: கர்த்தர் எதை நாணேற்றினார்??
தமது வில்லை. புலம்பல் 3:12
2484: நாம் நிர்மூலமாகாதிருக்கிறது எதினால்??
கர்த்தருடைய கிருபையினால். புலம்பல் 3:22
2485: எதற்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது??
கர்த்தருடைய இரட்சிப்பு. புலம்பல்3:26
2486: எது உட்பிரவேசிக்காதபடி தேவன் மேகத்தால் மூடிக்கொண்டார்??
ஜெபம். புலம்பல்3:44
2487: ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்டது எது??
சோதோம். புலம்பல் 4:6
2488: ஏதோம் குமாரத்தி எந்த தேசவாசியாயிருந்தாள்??
ஊத்ஸ். புலம்பல் 4:21
2489: எந்த மலையில் நரிகள் ஓடி திரிந்தன??
சீயோன் மலையில். புலம்பல் 5:18
2490: யாருடைய முகங்கள் மதிக்கப்படவில்லை??
இஸ்ரவேலருடைய முதியவர். புலம்பல் 5: 12
2491: கேபார் நதி எந்த தேசத்தில் இருந்தது??
கல்தேயர். எசேக்கியேல் 1:3
2492: எசேக்கேயலின் தகப்பன் பெயர் என்ன??
பூசி. எசேக் 1:3
2493: சக்கரங்கள் எப்படிப்பட்ட வருணமாயிருந்தது??
படிகப்பச்சை. எசேக்கி 1:15
2494: எசேக்கியேலுக்குள் வந்து அவரை காலூன்றி நிற்கும்படி செய்தது எது??
ஆவி. எசேக் 2:2
2495: எதில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்தது??
புஸ்தகச்சுருளில். எசே 2:10
2496: எதை வயிற்றிலே உட்கொள்ள எசேக்கியேலிடம் கூறப்பட்டது??
சுருளை. எசே 3:3
2497: தெலாபீப் எங்கே இருந்தது??
கேபார் நதியண்டையில். எசே 3:15
2498: ஒருக்களித்துப் படுத்திருக்கும் நாளில் எசேக்கியேல் சாப்பிடும் போஜனத்தின் நிறை என்ன??
20 சேக்கல். எசேக் 4:10
2499: எவைகள் இஸ்ரவேலில் சுற்றி திரியும்??
கொள்ளை நோய், இரத்தம் சிந்துதல். எசேக் 5:17
2500: இஸ்ரவேலை தப்பவிடாதது எது??
கர்த்தரின் கண். எசேக் 7:4
2501: எதில் வாழுகிற எவனும் தன்னை திடப்படுத்த மாட்டான்??
தன் அக்கிரமத்தில். எசேக் 7:13
2502: இஸ்ரவேலருக்கு இடறலாயிருந்தது எது??
அவர்கள் அக்கிரமம். எசேக் 7:19
2503: எசேக்கியேல் பிரகாரத்தின் வாசல் சுவரில் கண்டது என்ன??
ஒரு துவாரம். எசேக் 8:7
2504: இஸ்ரவேல் மூப்பரில் எத்தனை பேர் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு சித்திரங்களுக்கு முன்பாக நின்றார்கள்??
70 பேர். எசேக் 8:11
2505: எழுபது மூப்பர்களின் நடுவில் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு நின்றவன் யார்??
யசனியா. எசேக் 8:11
2506: எத்தனை புருஷர்கள் சூரியனை நமஸ்கரித்தார்கள் ??
ஏறக்குறைய 25. எசே 8:16
2507: திராட்சை கிளையை தங்கள் நாசிக்கு நேராய் பிடித்தவர்கள் யார்??
யூதா வம்சத்தார். எசே 8:17
2508: இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை எங்கேயிருந்து எழும்பினது??
கேருபீன் மேலிருந்து. எசேக் 9:3
2509: எசேக்கியேல் தீர்க்கதரிசனம் சொல்லுகையில் செத்தவன் யார்??
பெலத்தியா. எசேக் 11:13
2510: இஸ்ரவேலருக்கு அடையாளமாயிருப்பவர் யார்??
எசேக்கியேல். எசேக் 12:11.
2511: இஸ்ரவேல் தேசத்தில் வழங்கும் பழமொழி என்ன??
நாட்கள் நீடிக்கும் தரிசனம் எல்லாம் அவமாகும். எசேக் 12:22
2512: எருசலேமுக்கு விரோதமாகக் கர்த்தர் அனுப்பும் கொடிய தண்டனைகள் எவை??
பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளை நோய். எசேக் 4:21
2513: வேகாதிருக்கும் போதே ஒரு வேலைக்கு ம் உதவாதது எது??
திராட்சை செடி. எசேக் 15:5
2514: எருசலேமின் உற்பத்திக்கும் பிறப்புக்கும் இடம் எது என்று கர்த்தர் கூறினார்??
கானான் தேசம். எசே 16:3
2515: எருசலேமின் பகையாளிகள் என்று யாரை கூறப்பட்டுள்ளது??
பெலிஸ்தர். எசேக் 16:27
2516: எருசலேமின் தமக்கை என்று எதை கூறப்பட்டுள்ளது??
சமாரியா. எசேக் 16:46
2517: எருசலேமின் தங்கை என்று எதை கூறப்பட்டுள்ளது??
சோதோம். எசேக் 16:46
2518: எருசலேமை வெறுத்தது எது??
சீரியா. எசேக் 16:56
2519: லீபனோனில் வந்து கேதுருவின் நுனிக்கிளையை பிடித்தது எது??
ஒரு பெரிய கழுகு. எசேக் 17:3
2520: நீங்கள் போகிற அந்த மேடு என்னவென்று கர்த்தராகிய ஆண்டவர் கேட்டதினால் அதின் பெயர் என்ன??
பாமா. எசேக் 20:29
2521: தமது பரிசுத்த மலை என்று கர்த்தர் எதை கூறியுள்ளார்??
இஸ்ரவேலின் உயர்ந்த மலை. எசேக் 20:40
2522: ஓலமிட்டு அலறும் படி யாரிடம் கூறப்பட்டது??
எசேக்கியேல். எசேக் 21:12
2523: மூன்று தரம் இரட்டித்து வருவது எது??
பட்டயம். எசேக் 21:14
2524: ஜென்ம தேசத்தில் நியாயந்தீர்க்கப்படுபவர்கள் யார்??
அம்மோன் புத்திரர். எசேக் 21:30
2525: கர்த்தர் தேசத்தை அழிக்காதபடிக்கு எவைகளுக்காக ஒரு மனுஷனைத் தேடினார்??
திறப்பில் நிற்கவும் சுவரை அடைக்கவும். எசேக் 22:30
2526: அகோலாள் என்பதற்கு அர்த்தம் என்ன??
சமாரியா. எசேக் 23:4
2527: அகோலிபாள் என்பதற்கு அர்த்தம் என்ன??
எருசலேம். எசேக் 23:4
2528: பார்வைக்கு ராஜகுமாரர்களாயிருந்தவர்கள் யார்??
கல்தேயர். எசேக் 23:15
2529: வனாந்திரத்திலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் யார்??
சபேயர். எசேக் 23:42
2530: அகோலாளையும் அகோலிபாளையும் நியாயந்தீர்த்தவர்கள் யார்??
நீதிமான்கள். எசேக் 23:45
2531: தன் கண்களுக்கு விருப்பமானவளைக் கர்த்தர் எடுத்துக்கொள்ளும் போது புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருக்கவேண்டியவர் யார்??
எசேக்கியேல். எசேக் 24:16
2532: எசேக்கியேல் விடியற்காலத்தில் ஜனங்களோடே பேசியபின்பு சாயங்காலத்தில் செத்து ப்போனவள் யார்??
அவன் மனைவி. எசேக் 24:18
2533: கர்த்தர் எதை ஒட்டகங்களின் கொட்டகையாக்குவார் ??
ரப்பா. எசேக் 25:15
2534: வலைகளை விரிக்கிற இடமாகச் சமுத்திரத்தின் நடுவிலே இருப்பது எது??
தீரு. எசேக் 26:5
2535: கடலரசர்களின் உடையாவது எது??
நடுக்கம். எசேக் 26:16
2536: இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று யாரிடம் கூறப்பட்டது??
தீரு. எசேக் 27:36
2537:தீருவின் அதிபதி யாரைப்பார்க்கிலும் ஞானவான்??
தானியேல். எசேக் 28:3
2538: விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம் யார்??
தீருவின் ராஜா. எசேக் 28:12
2539: பெரிய முதலையே என்று யாரைப் பற்றி கூறப்பட்டுள்ளது??
பார்வோன். எசேக் 29:3
2540: செவெனே எதிலுள்ள எல்லையிலிருந்தது ??
எத்தியோப்பியா. எசேக் 29:10



2541: எகிப்தியரின் ஜநந தேசம் எது??
பத்ரோஸ். எசேக் 29:14
2542: எகிப்தின் பெலன் என்று கூறப்பட்டுள்ளது எது??
சீன். எசேக் 30:15
2543: தேவனுடைய வனம் எது??
ஏதேன். எசேக் 31:9
2544:கர்த்தர் யாருடைய மரணத்தை விரும்புவதில்லை??
துன்மார்க்கன். எசேக் 33:11
2545:கர்த்தர் தம் ஆடுகளை மேய்க்கும்படி யாரை ஏற்படுத்துவார்??
தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை. எசேக் 34:24
2546: தன் வாயினால் கர்த்தருக்கு விரோதமாக பெருமைபாராட்டியது எது??
சேயீர் மலை. எசேக் 35:13
2547: கர்த்தர் எசேக்கியேலை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டு போய் எதின் நடுவே நிறுத்தினார்??
எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கு. எசேக் 37:1
2548: மேசேக் தூபால் ஜாதிகளின் தலைமையான அதிபதி யார்??
கோகு. எசேக் 38:2
2549: ஆமோன் கோகுடைய பள்ளத்தாக்கு என்ன என்று பெயரிடப்படும்??
ஆமோனா. எசேக் 39:16
2550: தேவதரிசனங்களில் இஸ்ரவேல் தேசத்துக்கு க் கொண்டு போகப்பட்டவன் யார்??
எசைக்கியேல். எசேக் 40:2
2551: வெட்டினகல்லாயிருந்தவை எவை??
தகனபலிக்குரிய நாலு பீடங்கள். எசேக் 40:42
2552: எத்தனை நாள் வரைக்கும் தினம் தினம் பாவநிவாரணபலியைச் செலுத்த வேண்டும்??
ஏழு நாள். எசேக் 43:25
2553: கலகக்காரர் என்று கர்த்தர் யாரை கூறினார்??
இஸ்ரவேல் வம்சத்தார். எசேக் 44:6
2554: சேக்கலானது எத்தனை கேரா??
இருபது. எசேக் 45:12
2555: சுற்றுக்கட்டுகளின் சுற்றிலும் போடப்பட்டிருந்தது என்ன??
அடுப்புகள். எசேக் 46:23
2556: நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் இருந்தது என்ன??
ஆரோக்கியம். எசேக் 47:8
2557: தேசத்தை எதின்படி பங்கிட்டுக்கொள்ளும்படி கர்த்தர் கூறினார்??
கோத்திரங்களின்படி. எசேக் 47:21
2558: யூதாவின் பங்கின் நடுவே இருப்பது எது??
பரிசுத்த ஸ்தலம். எசேக் 48:8
2559: இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறுவது எது??
நகரத்தின் வாசல்கள். எசேக் 48:31
2560: இஸ்ரவேல் தேசத்தின் நகரம் என்ன என்று பெயர் பெறும்??
யேகோவா ஷம்மா. எசேக் 48:35
2561: நேபுகாத் நேச்சாரின் தேவனுடைய ஆலயம் எந்த தேசத்தில் இருந்தது??
சினேயார் தேசத்தில். தானியேல் 1:2
2562: தானியேல் அனனியா மீஷாவேல் அசரியா ஆகியோரின் மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்டிருந்தவன் யார்??
மேல்ஷார். தானியேல் 1:12
2563: சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக தேவன் யாரை ஏற்படுத்தினார்??
தானியேலை. தானியேல் 1:17
2564: ராஜாவின் தலையாரிகளுக்கு அதிபதியானவன் யார்??
ஆரியோகு. தானியேல் 2:14
2565: எக்காலத்தில் தானியேலுக்கு மறைபொருள் வெளிப்பட்டது??
இராக்காலத்தில். தானியேல் 2:19
2566: சர்வவல்லமையுள்ள தேவன் எவற்றை மாற்றுகிறவர்??
காலங்களையும் சமயங்களையும். தானியேல் 2:20
2567: சர்வவல்லவரிடத்தில் தங்குவது எது??
வெளிச்சம். தானியேல் 2:22
2568: நேபுகாத் நேச்சார் பண்ணின பொற்சிலையை அவன் எந்த இடத்தில் நிறுத்தினான்??
தூரா என்னும் சமபூமியில். தானியேல் 3:1
2569: தன் வீட்டிலே சவுக்கியமுள்ளவனாயிருந்து தன் அரமனையிலே வாழ்ந்து கொண்டிருந்தவன் யார்??
நேபுகாத் நேச்சார். தானியேல் 4:4
2570: சாஸ்திரிகளின் அதிபதி யார்??
பெல்தெஷாத்சார். தானியேல் 4:9
2571: பெல்ஷாத்சார் பிரபுக்களில் எத்தனை பேருக்கு ஒரு விருந்து செய்தான்??
ஆயிரம் பேருக்கு. தானியேல் 5:1
2572: பெல்ஷாத்சார் யாருடைய குமாரன்??
நேபுகாத்நேச்சாரின் குமாரன். தானியேல் 5:22
2573: கர்த்தரால் அனுப்பப்பட்ட கை உறுப்பு எழுதிய எழுத்துக்கள் யாவை??
மெனே மெனே தெக்கேல் உப்பார்சின். தானியேல் 5:25
2574: ராத்திரியிலே கொலைசெய்யப்பட்ட ராஜா யார்??
கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார். தானியேல் 5:30
2575: தரியு எந்த குலத்தை சார்ந்தவன்??
மேதிய குலத்தை. தானியேல் 5:31
2576: தானியேலுக்குள் எவ்விதமான ஆவி இருந்தது??
விசேஷித்த ஆவி. தானியேல் 6:3
2577: தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரத்தை தேடியும் அவர்கள் கண்டுபிடிக்க கூடாதிருந்தது ஏன்??
அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால். தானியேல் 6:4
2578: தானியேல் எங்கு சென்று ஜெபிப்பது வழக்கம்??
மேல்வீட்டறையில். தானியேல் 6:10
2579: தானியேலின் தரிசனத்தில் கண்ட சிங்காசனத்தில் வீற்றிருந்தவர் யார்??
நீண்ட ஆயுசுள்ளவர். தானியேல் 7:9
2580: சிங்காசனத்தில் வீற்றிருந்தவருடைய சந்நிதியிலிருந்து எது புறப்பட்டு ஓடினது??
அக்கினி நதி. தானியேல் 7:10
2581: சூசான் அரமனை எந்த தேசத்தில் உள்ளது??
ஏலாம் தேசத்தில். தானியேல் 8:2
2582: வெள்ளாட்டுக்கடா எதை குறிக்கிறது??
கிரேக்கு தேசத்தின் ராஜா. தானியேல் 8:21
2583: தரியு ராஜா யாருடைய குமாரன்??
ஆகாஸ்வேருவின் குமாரன். தானியேல் 9:1
2584: எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபது வருஷம் ஆகும் என்று கர்த்தர் யாரிடம் சொல்லியிருந்தார்??
எரேமியாவிடம். தானியேல் 9:2
2585: கர்த்தருடைய ஜனத்துக்கும் கர்த்தருடைய நகரத்துக்கும் எது தரிப்பிக்கப்பட்டிருந்தது??
கர்த்தருடைய நாமம். தானியேல் 9:19
2586: தானியேல் வேண்டிக்கொண்ட போதே கட்டளை பிறக்க காரணம் என்ன??
தானியேல் தேவனுக்கு மிகவும் பிரியமானவன். தானியேல் 9:23
2587: தூதன் தானியேலிடம் எதற்கு வந்தான்??
கடைசி நாட்களில் தானியேலின் ஜனங்களுக்கு சம்பவிப்பதை தெரிவிக்கும்படி. தானியேல் 10:14
2588 : தானியேல் எந்த அரசனுக்கு துணை நின்றான்??
தரியு மன்னனுக்கு. தானியேல் 11:1
2589: ஜனத்தின் புத்திரருக்காக நிற்கும் பெரிய அதிபதி யார்??
மிகாவேல். தானியேல் 12:1
2590: ஆகாயமண்டலத்து ஒளியைப் போலிருப்பவர்கள் யார்??
ஞானவான்கள். தானியேல் 12:3
2591: பெருகிப் போவது எது??
அறிவு. தானியேல் 12:4
2592: தன்னை உணர்ந்து கொள்ளாதவன் யார்??
துன்மார்க்கன். தானியேல் 12:10
2593:எத்தனை நாள் மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்யவான்??
ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள் மட்டும். தானியேல் 12:12
2594: ஓசியா யாருடைய குமாரன்?? பேயேரியின் குமாரன்
ஓசியா 1:1
2595: ஓசியாவின் மனைவியின் பெயர் என்ன??
கோமேர். ஓசியா 1:3
2596: கோமேரின் தகப்பன் பெயர் என்ன??
திப்லாயிம். ஓசியா 1:3
2597: எந்த பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை கர்த்தர் முறிப்பார்??
யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கில். ஓசியா 1:5
2598: யாருடைய நாள் பெரிதாயிருக்கும்??
யெஸ்ரயேலின் நாள். ஓசியா 1:11
2599: நம்பிக்கையின் வாசல் எது??
ஆகோரின் பள்ளத்தாக்கு. ஓசியா 2:15
2600: கர்த்தர் நித்திய விவாகத்திற்கென்று யாரை நியமித்துக்கொள்வார்??
இஸ்ரவேலை. தானியேல் 2:19
2601: ஓசியா விபச்சாரியான ஸ்தீரியை எத்தனை வெள்ளிக்காசுக்கு வாங்கினான்??
பதினைந்து வெள்ளிக்காசுக்கு. ஓசியா 3:2
2602: கர்த்தருடைய ஜனங்கள் எது இல்லாமையினால் சங்காரமாகின்றார்கள்??
அறிவில்லாமையினால். ஓசியா 4:6
2603: அடங்காத கிடாரியைப் போல் அடங்காதிருக்கிறது எது??
இஸ்ரவேல். ஓசியா 4:16
2604: யார் மிகுதியும் வதை செய்கிறார்கள்??
நெறிதவறினவர்கள். ஓசியா 5:2
2605: கர்த்தருடைய புறப்படுதல் எதைப்போல ஆயத்தமாயிருக்கிறது??
அருணோதயம் போல. ஓசியா 6:3
2606: இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கும் பட்டணம் எது??
கிலேயாத். ஓசியா 6:8
2607: எதற்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது??
யூதா. ஓசியா 6:11
2608: யார் வஞ்சனை செய்கிறான்??
எப்பிராயீம். ஓசியா 7:1
2609: திருப்பிப் போடாத அப்பம் யார்??
எப்பிராயீம். ஓசியா 7:8
2610: எந்த பட்டணம் எப்பிராயீமரை அடக்கம் பண்ணும்??
மோப் பட்டணம். ஓசியா 9:6
2611: இஸ்ரவேலின் பாவமாகிய மேடைகள் எது??
ஆபேனின் மேடைகள். ஓசியா 10:8
2612: யுத்த நாளில் பெத்தார்பேலை அழித்தவன் யார்??
சல்மான். ஓசியா 10:14
2613: கர்த்தர் எந்த இடத்தில் யாக்கோபை சந்தித்தார்??
பெத்தேலிலே. ஓசியா 12:4
2614: சேனைகளின் தேவனுடைய நாமசங்கீர்த்தனம் என்ன??
யேகோவா. ஓசியா 12:5
2615: பேறுகாலம் மட்டும் நிற்காத விவேகமில்லாத பிள்ளை யார்??
எப்பிராயீம். ஓசியா 13:13
2616: இஸ்ரவேல் எதினால் விழுந்தது??
அக்கிரமத்தினால். ஓசியா 14:1
2617: இஸ்ரவேலின் அலங்காரம் எந்த மரத்தின் அலங்காரத்தைப்போலிருக்கும்??
ஒலிவமரத்தின் அலங்காரத்தைப்போல். ஓசியா 14:6
2618: கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதைப்போலிருப்பார்??
பனியைப் போலிருப்பார். ஓசியா 14 5
2619: மகாவறட்சியான தேசம் எது??
வனாந்திரம். ஓசியா 13:5
2620: இஸ்ரவேல் தனக்கு கேடுண்டாக்கிக் கொண்டாலும் கர்த்தரிடத்தில் அவனுக்கு எது உண்டு??
சகாயம் உண்டு. ஓசியா 13:9
2621: யோவேல் யாருடைய குமாரன்??
பெத்துவேல். யோவேல் 1:1
2622: கர்த்தருடைய ஆலயத்தைவிட்டு அகன்று போன பலிகள் யாவை??
போஜன பலியும் பானபலியும். யோவேல் 1:9
2623: எங்கே எக்காளம் ஊத வேண்டும்??
சீயோனில். யோவேல் 2:1
2624: விடியற்கால வெளுப்பு எதன்மேல் பரவும்??
பர்வதங்களின் மேல். யோவேல் 2:2
2625: கர்த்தரிடத்தில் எப்படிதிரும்ப வேண்டும்??
உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும். யோவேல் 2:12
2626: தேவனாகிய கர்த்தர் எதற்காக மனஸ்தாபப்படுகிறார்??
தீங்குக்கு. யோவேல் 2:13
2627: கர்த்தர் சகலஜாதிகளையும் எங்கே இறங்கப்பண்ணுவார்??
யோசபாத்தின் பள்ளத்தாக்கில். யோவேல் 3:2
2628: கர்த்தரின் பரிசுத்த பர்வதம் எது??
சீயோன். யோவேல் 3:17
2629: ஒரு ஊற்று எங்கிருந்து புறப்பட்டு வரும்??
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து. யோவேல் 3:18
2630: கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டு வரும் ஊற்று எந்த பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும்??
சித்தீம் பள்ளத்தாக்கை. யோவேல் 3:18



2631: ஆமோஸ் எந்த ஊரைச் சார்ந்தவன்??
தெக்கோவா. ஆமோஸ் 1:1.
2632: ஆமோஸ் யூதாவின் ராஜாவாகிய யாருடைய நாட்களில் தீர்க்கதரிசனம் உரைத்தான்??
உசியாவின் நாட்களில். ஆமோஸ் 1:1
2633: ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்த நாட்களில் இருந்த இஸ்ரவேலின் ராஜா யார்??
எரோபெயாம். ஆமோஸ் 1:1
2634: யாருடைய வீட்டை கர்த்தர் தீக்கொளுத்துவார்??
ஆசகேலின். ஆமோஸ் 1:4
2635: தன் மூர்க்கத்தை நித்திய காலம் வைத்திருந்தவன் யார்??
ஏதோம். ஆமோஸ் 1:11
2636: எக்காள சத்தத்தோடு சாகிறவர்கள் யார்??
மோவாபியர். ஆமோஸ் 2:2
2637: கேதுரு மரங்களை ப்போல உயரமாய் இருந்தவன் யார்??
எமோரியன். ஆமோஸ் 2:9
2638: கோதுமை கட்டுகள் நிறைபாரமாய் எதை இருத்துகிறது??
வண்டியை இருத்துகிறது. ஆமோஸ் 2:13
2639: யார் ஓடியும் புகலிடமில்லை??
வேகமானவன் . ஆமோஸ் 2:15
2640: கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் எது உண்டாகாது??
தீங்கு. ஆமோஸ் 3:6
2641: எதற்கு தரையிலே சுருக்குப் போடப்பட்டுள்ளது??
குருவிக்கு. ஆமோஸ் 3:5
2642: பாசான் எந்த நாட்டில் உள்ளது??
சமாரியா நாட்டில். ஆமோஸ் 4:1
2643: மூன்றாம் வருஷத்தில் கர்த்தருக்கு ஏதை செலுத்த வேண்டும்??
தசமபாகங்களை. ஆமோஸ் 4:4
2644: பாழான ஸ்தலமாகப் போவது எது??
பெத்தேல். ஆமோஸ் 5:5
2645: பயிரிடுகிறவர்களை எதற்கு அழைப்பார்கள்??
துக்கம் கொண்டாடுவதற்கு. ஆமோஸ் 5:16
2646: இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் கர்த்தர் எதை உண்டாக்கினார்??
வெட்டுக்கிளிகளை. ஆமோஸ் 7:1
2647: சிறுத்துப் போனவன் யார்??
யாக்கோபு. ஆமோஸ் 7:2
2648: எது அலறுதலாக மாறும்??
தேவாலயப் பாட்டுகள். ஆமோஸ் 8:3
2649: கர்த்தர் தேசத்தின் மேல் எதை அனுப்பும் நாட்கள் வரும்??
பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும். ஆமோஸ் 8:11
2650: தீங்கு எங்களை அணுகுவதில்லை என்று சொல்லுகிறவர்கள் யார்??
பாவிகள். ஆமோஸ் 9:10
2651: ஒபதியாவின் புஸ்தகத்தில் கர்த்தர் எந்த தேசத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்??
ஏதோம் தேசத்தை குறித்து. ஒபதியா 1
2652: உயரமான இடங்களில் பறக்கிற பறவை எது??
கழுகு. ஒபதியா 4
2653: யாருடையவைகள் தேடிப்பார்க்கபார்க்கப்பட்டது??
ஏசாவுடையவைகள். ஒபதியா 6
2654: ,எருசலேமின் பெயரில் எதைப் போட்டனர்??
சீட்டுப்போட்டனர். ஒபதியா11
2655: கர்த்தருடைய நாள் எல்லா ஜாதிகளுக்கும் எப்படிப்பட்ட நாள்??
விரோதமான நாள். ஒபதியா 15
2656: அக்கினியாயிருக்கும் வம்சத்தார் யார்??
யாக்கோபு வம்சத்தார். ஒபதியா 18
2657: அக்கினி ஜீவாலையாய் இருக்கும் வம்சம் எது??
யோசேப்பு வம்சத்தார். ஓபதியா 18
2658: வைக்கோல் துரும்பாயிருப்பவர்கள் யார்??
ஏசா வம்சத்தார். ஒபதியா 18
2659: எதன் பராக்கிரமசாலிகள் கலங்குவார்கள்??
தேமானின். ஒபதியா 9
2660 : ஏசாவின் பர்வதத்தை நியாயம் தீர்ப்பதற்காக சீயோன் பர்வதத்தில் வந்தேறுபவர்கள் யார்??
இரட்சகர்கள். ஒபதியா 20
2661: யோனா யாருடைய குமாரன்??
அமித்தாயின் குமாரன். யோனா 1:1
2662: யோனா எங்கு செல்லக் கர்த்தர் அவனிடம் பேசினார்??
நினிவேக்குப் போக. யோனா 1:2
2663: நினிவே எவ்விதமான நகரம்??
மகாநகரம். யோனா 1:2
2664: யோனாவின் தலையை சுற்றிக்கோண்டது எது??
கடற்பாசி. யோனா 2:5
2665: எவர்கள் தங்களுக்கு வரும் கிருபையை போக்கடிக்கிறார்கள்??
பொய்யான மாயையைப்பற்றிக் கொள்ளுகிறவர்கள். யோனா 2:8
2666: நினிவே பட்டணம் எத்தனை நாள் பயணவிஸ்தாரமான நகரமாயிருந்தது??
மூன்று நாள் பயண விஸ்தாரமானது. யோனா 3:3
2667: நினிவே ஜனங்கள் எதைவிட்டு திரும்பினார்கள்??
பொல்லாத வழியைவிட்டு. யோனா 3:10
2668: வெயில் தன் தலையின் மேல் பட்டதினால் சோர்ந்து போன யோனா எதை விரும்பினான்??
சாவை விரும்பினான். யோனா 4:8
2669: யோனா பிரயாசப்படாததும் வளர்க்காததுமானது எது??
ஆமணக்குச் செடி. யோனா 4:10
2670: வலது கைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் தெரியாத நினிவே ஜனங்கள் எத்தனை பேர்??
இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கு அதிகமானோர். யோனா 4:11
2671: சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்தவன் யார்??
மீகா1:1
2672: மீகாவின் ஊர் எது??
மொரேசா ஊர். மீகா 1:1
2673: மீகா தீர்க்கதரிசனம் உரைத்த காலத்தில் எருசலேமை ஆண்ட அரசர்கள் யார்??
யோதாம் ஆகாஸ் எசேக்கியா. மீகா 1:1
2674: யாக்கோபின் மீறுதலுக்கு காரணம் எது??
சமாரியா. மீகா 1:5
2675:ஓரிகளைப் போல ஊளையிடுவேன் என்று சொல்லுகிறவன் யார்??
மீகா. மீகா 1:8
2676: ஜனத்தின் வாசல் என்று எது அழைக்கப்படுகிறது??
எருசலேம். மீகா 1:9
2677: இஸ்ரவேலின் மகிமை எது??
அதுல்லாம். மீகா 1:15
2678: தீர்க்கதரிசனம் சொல்லா விட்டால் எது நீங்காது??
நிந்தை. மீகா 2:6
2679: யாருக்கு கர்த்தருடைய வார்த்தை நன்மை செய்யும்??
சேம்மையானவர்களுக்கு. மீகா2:7
2680: கடைசி நாட்களில் கர்த்தர் யாரை சேர்த்து கொள்ளுவார்??
நொண்டியானவளை. மீகா 4:6
2681: சேனைகளுடைய நகரம் எது??
சீயோன். மீகா 5:1
2682: எப்பிராத்தா எனப்பட்டது எது??
பெத்லகேம். மீகா 5:2
2683: மனுஷனுக்கு காத்திராமலும் மனுபுத்திரருக்குத் தாமதியாமலும் வருவது எது??
பூண்டுகள் மேல் வருகிற மழை. மீகா 5:7
2684: கர்த்தருக்கு யாரோடே வழக்கு இருக்கிறது??
அவர் ஜனத்தோடே. மீகா 6:2
2685: இஸ்ரவேலுக்கு முன்பாக அனுப்பப்பட்டவர்கள் யார்??
மோசே
ஆரோன்
மிரியாம். மீகா 6:4
2686: நகரத்தை நோக்கி கூப்பிடுகிறது எது??
கர்த்தருடைய சத்தம். மீகா 6:9
2687: தேசத்தில் யார் அற்றுப் போனான்??
பக்தியுள்ளவன். மீகா 7:2
2688: வெகுதூரம் பரவிப்போவது எது??
பிரமாணம். மீகா 7:11
2689: கர்த்தருடைய ஜனம் எதின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிறது??
கர்மேல். மீகா 7:14
2690: கர்த்தர் எவைகளை சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விடுவார்??
நம்முடைய பாவங்களை. மீகா 7:19
2691: நினிவேயின் பாரத்தை கூறியவர் யார்??
நாகூம் 1:1
2692: நாகூமின் ஊர் எது??
எல்கோசா. நாகூம் 1:1
நினிவேயின் பாரத்தை கூறும் தரிசனப்புத்தகம் எது??
நாகூம் 1:1
2694: கர்த்தர் யாருக்காக கோபத்தை வைத்து வைக்கிறார்??
தம்முடைய பகைஞருக்காக. நாகூம் 1:2
2695: பெருங்காற்றிலும் சுழல் காற்றிலும் இருக்கிறது எது??
கர்த்தருடைய வழி. நாகூம் 1:3
2696: கர்த்தருடைய பாதத்தூழாயிருக்கிறது எது??
மேகங்கள். நாகூம் 1:3
2697: எதின் செழிப்பு வாடிப்போகும்??
லீபனோன். நாகூம் 1:4
2698: தங்கள் மார்பிலே அடித்துக்கொள்பவர்கள் யார்??
நினிவேயின் தாதிமார்கள். நாகூம் 2:7
2699: இரத்தப்பழிகளின் நகரம் எது??
நினிவே. நாகூம் 3:1
2700: நதிகள் மத்தியிலிருந்தது எது??
நோ அம்மோன். நாகூம் 3:8
2701: வெட்டுக்கிளிகளுக்கு சமானமானவர்கள் யார்??
மகுடவர்த்தனர். நாகூம் 3:17
2702: பெருங்கிளிகளுக்கு சமானமானவர்கள் யார்??
தளகர்த்தர். நாகூம் 3:17
2703: குளிர்ச்சியான நாளில் வேலிகளில் பாளயமிறங்குவது எது??
வெட்டுக்கிளிகள்
பெருங்கிளிகள்
நாகூம் 3:17
2704:ஆபகூக் புஸ்தகம் யார் தீர்க்கதரிசனமாக கண்ட பாரம்??
ஆபகூக்1:1
2705: கொடிதும் வேகமுமான ஜாதியார் யார்??
கல்தேயர். ஆபகூக் 1:6
2706: கர்த்தர் எதை நோக்கிக் கொண்டிருக்கமாட்டார்??
அநியாயம். ஆபகூக் 1:13
2707: நீர் மவுனமாயிருக்கிறதென்ன என்று கர்த்தரிடம் கேட்டவர் யார்??
ஆபகூக்1:13
2708: கர்த்தர் எதை எழுத ஆபகூக்கிடம் கூறினார்??
தரிசனம். ஆபகூக் 2:2
2709: முடிவிலே விளங்குவது எது ??
தரிசனம். ஆபகூக் 2:4
2710: வீட்டிலே தரியாமலிருக்கிறவன் யார்??
அகங்காரி. ஆபகூக் 2:5
2711: சுவரிலிருந்லு கூப்பிடுவது எது??
கல். ஆபகூக் 2:11
2713: மச்சிலிருந்து சாட்ச்சியிடுவது எது??
உத்திரம். ஆபகூக் 2:11
2714: பூமி எதை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்??
கர்த்தருடைய மகிமையை. ஆபகூக் 2:14
2715: வார்க்கப்பட்டதும் பொய்ப்போதகம் பண்ணுகிறதும் எது??
விக்கிரகம். ஆபகூக் 2:18
2716: ஊமையான கல்லுக்குள்ளே இல்லாதது எது??
சுவாசம். ஆபகூக் 2:19
2717: சிகாயோனில் பாடியவர் யார்??
ஆபகூக் 3:2
2718: ஆபகூக் எவைகள் வருத்தத்தில் அகப்பட்டிருப்பதாக கண்டார்??
கூஷானின் கூடாரங்கள். ஆபகூக் 3:7
2719: கர்த்தர் பூமியை பிளந்து எவைகளை உண்டாக்கினார்??
ஆறுகளை. ஆபகூக் 3:9
2720: கர்த்தரைக் கண்டு தன் மண்டலத்தில் நின்றவை எவை??
சந்திரன், சூரியன். ஆபகூக் 3:11
2721: ஆபகூக்கின் எலும்புகளில் உண்டானது எது??
உக்கல். ஆபகூக் 3:16
2722: நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் கூறியவர் யார்??
ஆபகூக் 3:18
2723: ஆபகூக் 3 ஆம் அதிகாரம் எந்த வாத்தியத்தில் வாசிக்கப்பட்டது??
நெகிநோத். ஆபகூக் 3:19
2724: ஆகாயத்து பறவைகளை கர்த்தர் யாரோடே கூட வாரிக்கொள்வார்??
துன்மார்க்கர். செப்பனியா1:3
2725: ஆசாரியர்களோடே கூட எவர்களின் பேரையும் கர்த்தர் சங்காரம் பண்ணுவார்??
கேம்மரீம். செப்பனியா 1:4
2726: எதின் குடிகள் அலற வேண்டும்??
மக்தேஷ். செப்பனியா 1:11
2727: கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்கும் யார் முதலாய் மனங்கசந்து அலறுவான்??
பராக்கிரமசாலி. செப்பனியா 1:14
2728: பட்டப்பகலிலே பறக்கடிக்கப்படுவது எது??
அஸ்தோத். செப்பனியா 2:4
2729: வேரோடு பிடுங்கப்படுவது எது??
எக்ரோன். செப்பனியா 2:4
2730: சமுத்திரைக்கரை குடிகள் யார்??
கிரேத்தியர். செப்பனியா2:5
2731: மோவாப் எதைப் போலாகும்??
சோதோம். செப்பனியா 2:9
2732: உப்புப்பள்ளமாவது எது??
மோவாப் அம்மோன் தேசம். செப்பனியா 2:9
2733: கர்த்தர் எவர்களை மெலிந்து போகப்பண்ணுவார்??
பூமியிலுள்ள தேவர்களை. செப்பனியா 2:11
2734: கர்த்தருடைய பட்டயத்தினால் கொலைசெய்யப்படுபவர்கள் யார்??
எத்தியோப்பியர். செப்பனியா 2:12
2735: நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் எது??
நினிவே. செப்பனியா 2:15
2736: ஆசாரியர்கள் எதற்கு அநியாயம் செய்தார்கள்??
வேதத்துக்கு. செப்பனியா 3:4
2737:யார் வெட்கமறியாதவன்??
அநியாயக்காரன். செப்பனியா 3 :5
2738: இஸ்ரவேல் இனி எதைக் காணாதிருக்கும்??
தீங்கை. செப்பனியா 3:15
2739: கர்த்தர் யாரை இரட்சித்துக் கொள்வார்??
நொண்டியானவனை. செப்பனியா 3:19
2740: கர்த்தரின் சினம் எது??
உக்கிரகோபம். செப்பனியா 3:8
2741: யார் அரசாண்ட போது கர்த்தருடைய வார்த்தை ஆகாய் தீர்க்கதரிசிக்கு உண்டானது??
தரியு ராஜா. ஆகாய் 1:1
2742: யோசுவா என்பவன் யார்??
பிரதான ஆசாரியன்.ஆகாய் 1:1
2743: ஆலயத்தினால் விளங்குவது எது??
கர்த்தருடைய மகிமை. ஆகாய் 1:8
2744: கர்த்தருடைய தூதன் என்றழைக்கப்பட்டவன் யார்??
ஆகாய் 1:13
2745: இன்னும் ஒருதரம் கர்த்தர் கொஞ்சகாலத்துக்குள்ளே எதை அசையப்பண்ணுவார்??
வானத்தை. ஆகாய் 2:6
2746: பிந்தின ஆலயத்திலே கர்த்தர் எதைக்கட்டளையிடுவார்??
சமாதானத்தை. ஆகாய் 2:9
2747: ஆசாரியரிடத்தில் எதைப்பற்றி கேட்க கர்த்தர் கூறினார்??
வேதநியாயத்தை. ஆகாய் 2:11
2748: என் ஊழியக்காரன் என்று கர்த்தர் யாரை அழைத்தார்??
செருபாபேல். ஆகாய் 2:23
2749: கர்த்தர் எவைகளை கவிழ்ப்பார்??
ராஜ்யங்களின் சிங்காசனம். ஆகாய் 2:22
2750: கர்த்தர் யாரை முத்திரை மோதிரமாக வைப்பார்??
செருபாபேல். ஆகாய் 2:23
2751: பெரகியாவின் குமாரன் பெயர் என்ன??
சகரியா 1:1
2752: கர்த்தருடைய ஊழியக்காரர் யார்??
தீர்க்கதரிசிகள். சகரியா 1:6
2753: பதினொராம் மாதத்தின் பெயர் என்ன??
சேபாத்.சகரியா 1:7
2754: எருசலேமின் மேலும் யூத பட்டணங்களின் மேலும் கர்த்தர் எத்தனை வருடம் கோபம் கொண்டிருந்தார்??
70 வருடம். சகரியா 1:12
2755: எதின் மேல் அளவு நூல் பிடிக்கப்படும்??
எருசலேம். சகரியா 1:16
2756: கர்த்தர் எங்கிருந்து எழுந்தருளினார்??
தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து. சகரியா 2:13
2757: அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி யார்??
யோசுவா. சகரியா 3:2
2758: ஒரே கல்லின் மேல் எவைகள் வைக்கப்பட்டிருக்கிறது?
ஏழு கண்கள். சகரியா 3:9
2759: பெரிய பர்வதம் யாருக்கு முன்பாக சமபூமியாகும்??
செருபாபேல். சகரியா 4:7
2760: ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டது எது??
செருபாபேலின் கைகள். சகரியா 4:9
2761: பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகள் எவை??
கர்த்தருடைய ஏழு கண்கள். சகரியா 4:10
2762: இரண்டு ஒலிவமரங்கள் யார்??
அபிஷேகம் பெற்றவர்கள். சகரியா 4:14
2763: பூமியின் மீதெங்கும் புறப்பட்டுபோகிற சாபம் எது??
பறக்கிற ஒரு புஸ்தகசுருள்.சகரியா 5:3
2764: பூமியெங்கும் ஜனங்களுடைய கண்ணோக்கம் எது??
மரக்கால். சகரியா5:6
2765: மரக்காலுக்கு வீடுகட்டும்படி கொண்டு போகப்பட்டது எங்கே??
சிநெயார் தேசத்தில். சகரியா5:11
2766: இஸ்ரவேலின் ஒன்பதாம் மாதத்தின் பெயர் என்ன??
கிஸ்லே. சகரியா 7:1
2767: சத்திய நகரம் என்று அழைக்கப்படுவது எது??
எருசலேம். சகரியா 8:3
2768: எவர்கள் கர்த்தருக்கு உண்மையும் நீதியுமான ஜனங்களாயிருப்பார்கள்??
கர்த்தரால் இரட்சிக்கப்பட்டு அழைக்கப்பட்டவர்கள்
2769: வாசல்களில் எவைகளுக்கு ஏற்க நியாயந்தீர்க்கவேண்டும்??
சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும். சகரியா 8:16 ,சகரியா 8:8
2770: எதின் மேல் பிரியப்படாமல் இருக்க வேண்டும்??
பொய்யாணை. சகரியா 8:17
2771: எவைகளை சிநேகிக்க வேண்டும்??
சத்தியம், சமாதானம். சகரியா 8:19
2772: ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்து கொள்பவர்கள் எத்தனை பேர்??
10 மனுஷர். சகரியா 8:23
2773: மிகவும் ஞானமுள்ள இடம் எது??
தீரு. சகரியா 9:2
2774: தீருவுக்கு நிகழ்ந்ததைக் கண்டு பயப்படுவது எது??
அஸ்கலோன். சகரியா 9:5
2775: எருசலேமில் இல்லாமற் போவது எது??
யுத்த வில். சகரியா 9:10
2776: கன்னிகைகளை வளர்ப்பது எது??
புதுதிராட்சை ரசம். சகரியா 9:17
2777:அபத்தமானதை சொல்லியது எது??
சுரூபங்கள். சகரியா 10:2
2778: புலம்ப வேண்டிய விருட்சங்கள் எவை??
தேவதாரு. சகரியா 11:2
2779: கர்த்தர் இரண்டு கோல்களை எடுத்து என்ன பெயரிட்டார்??
அநுக்கிரகம், நிக்கிரகம். சகரியா 11:7
2780: என் கூலியைத் தாருங்கள் கேட்டது யார்??
சகரியா 11:12
2781: சகோதரக்கட்டை அற்றுப் போகப்பண்ண முறிக்கப்பட்டது எது??
நிக்கிரகம் என்னப்பட்ட கோல். சகரியா 11:14
2782: கர்த்தர் எதை பாரமான கல்லாக்குவார்??
எருசலேம். சகரியா 12:3
2783: திரும்பவும் தன் ஸ்தானத்திலே குடியேற்றப்படுவது எது??
எருசலேம். சகரியா 12:6
2784:எருசலேமிலே தள்ளாடினவன் யாரைப்போலிருப்பான்??
தாவீதைப் போல. சகரியா 12:8
2785: தாவீது குடும்பத்தாரின் மேல் ஊற்றப்படுவது எது??
கிருபையின் ஆவி, விண்ணப்பங்களின் ஆவி. சகரியா 12:10
2786: மெகிதோன் பட்டணத்து பள்ளத்தாக்கின் ஊர் எது??
ஆதாத் ரிம்மோன். சகரியா 12:11
2787: திறக்கப்பட்ட ஒரு ஊற்று எதை நீக்கும்??
பாவத்தையும் அழுக்கையும். சகரியா 13:1
2788: தரிசனம் சொல்லுகிறவன் பொய்சொல்லும்படிக்கு இனி எதைப் போர்த்துக் கொள்வதில்லை??
மயிர் போர்வையை. சகரியா 13:4
2789: கர்த்தர் தம் கரத்தை எவர்கள் மேல் வைப்பார்??
சிறுவர்கள். சகரியா 13:7
2790: எருசலேமுக்கு எதிரே இருப்பது எது??
ஒலிவமலை. சகரியா 14:4
2791: கர்த்தருடைய பாதங்கள் எந்த மலையின் மேல் நிற்கும்??
ஒலிவமலை. சகரியா 14:4
2792: தேவரீரோடே கூட வருகிறவர்கள் யார்??
எல்லா பரிசுத்தவான்கள். சகரியா 14:5
2793: ஒரு வேளைப் பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருப்பது எது??
கர்த்தருடைய நாள். சகரியா 14:6
2794: உயர்ந்ததாகி தன் ஸ்தானத்திலே குடியேற்றப்பட்டிருப்பது எது??
எருசலேம். சகரியா 14:10
2795: மழை வருஷிக்காத வம்சம் எது??
எகிப்து. சகரியா14:18
2796: குதிரைகளின் மணிகளிலே எழுதியிருப்பது எது??
கர்த்தருக்குப் பரிசுத்தம். சகரியா 14:20
2797: சேனைகளின் கர்த்தருடைய ஆவயத்திலே யார் இருப்பதில்லை??
கானானியர். சகரியா 14:21
2798:கர்த்தர் எதை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவாக்கினார்??
ஏசாவின் சுதந்திரம். மல்கியா 1:3
2799: துன்மார்க்கத்தின் எல்லையென்று சொல்லப்படுபவர்கள் யார்??
ஏதோமியர். மல்கியா 1:4
2800: கர்த்தருடைய நாமத்தை அசட்டைப்பண்ணினவர்கள் யார்??
ஆசாரியர்கள். மல்கியா1: 6
2801: ஆசாரியர்கள் எண்ணமற்று போயிற்றென்று கூறியது எது??
கர்த்தருடைய பந்தி. மல்கியா 1:7
2802: கர்த்தருடைய நாமத்துக்கு எல்லா இடங்களிலும் செலுத்தப்படுவது எது??
2803: ஆசாரியர்கள் எதை பரிசுத்தகுலைச்சலாக்கினார்கள்??
கர்த்தருடைய நாமத்தை. மல்கியா1:12
2804: ஆசாரியர்கள் முகங்களில் கர்த்தர் எதை இறைப்பார்??
பண்டிகைகளின் சாணியை. மல்கியா 2:3
2805: யாருடைய உதடுகள் அறிவை காக்க வேண்டும்??
ஆசாரியர்கள். மல்கியா2:7
2806: சேனைகளுடைய கர்த்தரின் தூதன் யார்??
ஆசாரியன். மல்கியா2:7
2807: ஆசாரியர்கள் அநேகரை எதைக் குறித்து இடறப்பண்ணினார்கள்??
வேதம். மல்கியா2:8
2808: ஆசாரியர்கள் எதைக்குறித்து பட்சபாதம் பண்ணினார்கள்??
வேதம். மல்கியா 2:9
2809: யூத ஜனங்கள் எதைப் பரிசுத்தகுலைச்சலாக்கினார்கள்??
கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை. மல்கியா 2:12
2810: கர்த்தர் இனி எதை மதியார்??
யூதா ஜனங்களின் காணிக்கையை. மல்கியா 2:13
2811: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வெறுப்பது என்ன??
தள்ளிவிடுதலை. மல்கியா 2:16
2812: கர்த்தர் மாறாதவரானபடியால் நிர்மூலமாகதவர்கள் யார்??
யாக்கோபின் புத்திரர். மல்கியா 3:6
2813: மனுஷர் எவைகளினால் தேவனை வஞ்சித்தார்கள்??
தசமபாகத்திலும் காணிக்கைகளிலும். மல்கியா 3:8
2814: யார் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்??
கர்த்தருக்குப் பயந்தவர்கள். மல்கியா 3:16
2815: கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காக அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது என்ன??
ஞாபகப் புஸ்தகம். மல்கியா 3:16
2816: எதைப் போல எரிகிற நாள் வரும்??
சூளை. மல்கியா 4:1
2817: நியாயப்பிரமாணம் எவைகள் அடங்கியது??
கட்டளைகள், நியாயங்கள். மல்கியா 4:4
2818: கர்த்தருடைய நாள் வருகிறதற்கு முன்னே அனுப்பப்படுகிறவர் யார்??
எலியா. மல்கியா 4:5
2819: மோசேக்கு நியாயப்பிரமாணம் எங்கே கொடுக்கப்பட்டது??
ஓரேப். மல்கியா 4:4
2820: பிதாக்களுடைய இருதயத்தைப் பிதாக்களிடத்திற்குத் திருப்புகிறவன் யார்??
எலியா. மல்கியா 4:6
2821: இரட்டை குழந்தைகளை யூதாவுக்குப் பெற்றெடுத்தவள் யார்??
தாமார். மத்தேயு 1:3
2822: ராகாப் பெற்றெடுத்த மகன் பெயர் என்ன??
போவாஸ். மத்தேயு 1:5
2823: மரியாளின் புருஷனாகிய யோசேப்பின் தந்தை யார்??
யாக்கோபு. மத்தேயு 1:16
2824: தாவீது முதல் பாபிலோன் சிறையிருப்பு வரை உள்ள தலைமுறைகள் எத்தனை??
14 . மத்தேயு 1:17
2825: பெத்லகேம் எந்த நாட்டில் உள்ளது??
யூதேயா. மத்தேயு 2:1
2826: ஏரோது யாரை இரகசியமாய் அழைத்து விசாரித்தான்??
சாஸ்த்திரிகள். மத்தேயு 2:10
2827: சாஸ்த்திரிகளுக்கு வழிகாட்டி சென்றது எது??
நட்சத்திரம். மத்தேயு 2:7
2828: புலம்பலும் அழுகையும் எங்கே கேட்கப்பட்டது??
ராமாவில். மத்தேயு 2:17
2829: தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்தது யார்??
அர்கெலாயு. மத்தேயு 2:22
2830: வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் யாருடையது??
யோவான்ஸ்நானன். மத்தேயு 3:3
2831: எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது இயேசு யாரிடம் கூறினார்??
யோவான்ஸ்நானன். மத்தேயு 3:25
2832: இயேசுவை வனாந்திரத்திற்கு கொண்டு சென்றவர் யார்??
ஆவியானவர். மத்தேயு 4:1
2833:பிசாசானவன் இயேசுவை விட்டு விலகியவுடன் அவருக்குப்பணிவிடை செய்தவர்கள் யார்??
தேவதூதர்கள். மத்தேயு 4:11
2835: மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று கூறிய தீர்க்கதரிசி யார்??
ஏசாயா மத்தேயு 4:15&16
2836: செபெதேயுவின் குமாரர் இருவர் பெயர் என்ன??
யோவான், யாக்கோபு . மத்தேயு 4:21
2837: எவர்களுடைய நீதியைக்காட்டிலும் நம்முடைய நீதி அதிகமாயிருக்க வேண்டும்??
வேதபாரகர், பரிசேயர். மத்தேயு 5:20
2838: மகாராஜாவினுடைய நகரம் எது??
எருசலேம். மத்தேயு 5:35
2839: தங்களை சிநேகிக்கிறவர்களை மட்டுமே சிநேகிக்கிறவர்கள் யார்??
ஆயக்காரர். மத்தேயு 5:46
2840: சரீரத்தின் விளக்காயிருப்பது எது??
கண். மத்தேயு 6:22
2841: ஆகாரத்தைப் பார்க்கிலும் விசேஷித்தது எது??
ஜீவன். மத்தேயு 6:25
2842:முதலாவது எதைத் தேட வேண்டும்??
தேவனுடைய ராஜ்யம், அவருடைய நீதி. மத்தேயு 6:33
2843: பரிசுத்தமானதை எதற்குக் கொடுக்க கூடாது??
நாய்களுக்கு. மத்தேயு 7:6
2844: முத்துக்களை எதன் முன் போடக்கூடாது??
பன்றிகளின் முன். மத்தேயு 7: 6
2845: எதற்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது??
ஜீவனுக்கு. மத்தேயு 7:14
2846: ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு நம்மிடம் வருபவர்கள் யார்??
கள்ளத்தீர்க்கதரிசிகள். மத்தேயு 7:15
2847: பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பவன் யார்??
பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன். மத்தேயு 7:21
2848: இயேசு மலையிலிருந்து இறங்கினபோது வந்து அவரைப் பணிந்து கொண்டவன் யார்??
குஷ்டரோகி. மத்தேயு 8:2
2849: தன் வேலைக்காரன் குணமடைய இயேசுவை வேண்டினவன் யார்??
நூற்றுக்கு அதிபதி. மத்தேயு 8:5-6
2850: புறம்பான இருளிலே தள்ளப்படுபவன் யார்??
ராஜ்யத்தின் புத்திரர். மத்தேயு 8: 12
2851: இயேசு தொட்டவுடன் ஜுரம் நீங்கி குணமடைந்தாள் யார்??
பேதுருவின் மாமி. மத்தேயு 8:15
2852: அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய நோய்களை சுமந்தார் என்று கூறிய தீர்க்கதரிசி யார்??
ஏசாயா. மத்தேயு 8:17
2853: நீர் எங்கே போனாலும் உம்மைப் பின் பற்றி வருவேன் என்று இயேசுவிடம் கூறியவன் யார்??
வேதபாரகன். மத்தேயு 8:19
2854: எந்த பட்டணத்தார் இயேசுவைத் தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும் படி வேண்டிக்கொண்டார்கள்??
கெர்கெசேனர். மத்தேயு 8:34
2855: தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து சென்றவன் யார்??
திமிர்வாதக்காரன். மத்தேயு 9:6
2856: ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த எந்த மனிதனை இயேசு தம்மைப் பின்பற்றும்படி அழைத்தார்??
மத்தேயு 9:9
2857: யார் தன் ஆகாரத்திற்குப் பாத்திரனாயிருக்கிறான்??
வேலையாள். மத்தேயு 10:10
2858: எது எண்ணப்பட்டிருக்கிறது??
தலையிலுள்ள மயிர்கள்
மத்தேயு 10:30
2859: காவலில் இருக்கும் போது கிறிஸ்துவின் கிரியைகளைக் கேட்டவன் யார்??
யோவான்ஸ்நானன். மத்தேயு 11:2
2860: தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவன் யார்??
யோவான்ஸ்நானன். மத்தேயு 11:9
2861: வருகிறவனாகிய எலியா இயேசு யாரை குறிப்பிட்டார்??
யோவான்ஸ்நானன். மத்தேயு 11:14
2862: தன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படுவது எது??
ஞானம். மத்தேயு 11: 19
2863: வானபரியந்தம் உயர்த்தப்பட்ட நகரம் எது??
கப்பர்நகூம். மத்தேயு 11:23
2864: ஓய்வு நாளில் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து தேவசமுகத்து அப்பங்களை புசித்தவன் யார்??
தாவீது. மத்தேயு 12:3&4
2865: இயேசு வாக்குவாதம் செய்யமாட்டார் என்று முன்னுரைத்த தீர்க்கதரிசி யார்??
ஏசாயா. மத்தேயு 12:17-19
2866: பிசாசுகளின் தலைவன் பெயர் என்ன??
பெயல்செபூல். மத்தேயு 12:24
2867: யாருக்கு விரோதமான தூஷணம் மன்னிக்கப்படுவதில்லை
பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்ப் பேசுதல். மத்தேயு 12:31
2868:இருதயத்தின் நிறைவினால் பேசுவது எது??
வாய். மத்தேயு 12:34
2869: வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் யாருடைய அடையாளம் கொடுக்கப்படும் என்று இயேசு கூறினார்??
யோனா. மத்தேயு 12:39
2870:விதை என்பது எதைக் குறிக்கிறது??
ராஜ்யத்தின் வசனம். மத்தேயு 13:19
2871: ஆகாயத்துப் பறவைகள் தன் கிளைகளில் வந்தடையத்தக்க பூண்டு எது??
கடுகு. மத்தேயு 13:32
2872: நிலம் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது??
உலகம். மத்தேயு 13:38
2873: அறுப்பு என்பது எதைக் குறிக்கிறது??
உலகத்தின் முடிவு. மத்தேயு 13:39
2874: தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போல பிரகாசிப்பவர்கள் யார்??
நீதிமான்கள். மத்தேயு 13:43
2875: இயேசுவின் கீர்த்தியை கேள்விப்பட்ட காற்பங்கு தேசாதிபதி யார்??
ஏரோது. மத்தேயு 14:1
2876: ஏரோது இயேசுவை யாரென்று கூறினான்??
யோவான்ஸ்நானன். மத்தேயு 14:2
2877 :காணாமற் போன ஆடுகள் என்று இயேசு யாரைக் குறிப்பிட்டார்??
இஸ்ரவேல் வீட்டார். மத்தேயு 15 :24
2878: ஸ்திரீயே உன் விசுவாசம் பெரிது இயேசு யாரிடம் கூறினார்??
கானானிய ஸ்திரீ. மத்தேயு 15:28
2879: இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன் யார் யாரிடம் கூறியது??
இயேசு பேதுருவிடம். மத்தேயு 16:18
2880: பரலோகத்தின் திறவுகோல் யாருக்கு கொடுக்கப்படும் என இயேசு கூறினார்??
பேதுரு. மத்தேயு 16:19
2881: இயேசு தம் பாடுமரணங்களைக்குறித்து யாரிடம் கூறினார்??
சீஷர்கள். மத்தேயு 16:20
2882:எனக்கு பின்னாகப் போ சாத்தானே என்று இயேசு யாரைப் பார்த்து கூறினார்??
பேதுரு. மத்தேயு 16:23
2883:இயேசு யாருக்கு முன்பாக மறுரூபமானார்
பேதுரு, யாக்கோபு, யோவான். மத்தேயு 17:2
2884: மறுரூபமான இயேசுவோடு பேசுகிறவர்களாகக் காணப்பட்டவர்கள் யார்??
மோசே, எலியா. மத்தேயு 17:3
2885:எந்த தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கட்டளையிட்டார்??
மறுரூபமலை தரிசனம். மத்தேயு 17:9
2886:யாரை இயேசுவின் சீஷர்களால் குணமாக்கக் கூடாமற் போயிற்று??
சந்திரரோகியை. மத்தேயு 17:15-16
2887: எதன் வாயிலிருந்து வரிப்பணம் எடுத்துக் கொடுக்க இயேசு பேதுருவிடம் கூறினார்??
மீன். மத்தேயு 17:27
2888: நியாயம் விசாரிக்க எத்தனை சாட்சிகள் வேண்டும்??
2-3. மத்தேயு 18:16
2889: தள்ளுதற் சீட்டை கொடுத்து தள்ளி விடலாமென்று கட்டளையிட்டவர் யார்??
மோசே. லேவியராகமம்19:7
2900: இயேசுவிடம் வந்து உம்மிடம் ஒரு விண்ணப்பம் பண்ண வேண்டும் என்றவள் யார்??
செபுதேயுவின் குமாரருடைய தாய். மத்தேயு 20:20.
2901: இயேசு எங்கே இராத்தங்கினார்??
பெத்தானியா. மத்தேயு 21:17
2902: ஜெபத்திலே கேட்பதெல்லாம் பெறுவதற்கு அடிப்படை எது??
விசுவாசம். மத்தேயு 21:22
2903: போகிறேன் என்று சொல்லியும் திராட்சை தோட்டத்திற்கு போகாதவன் யார்??
இளையவன். மத்தேயு 21:30
2904: நீதிமார்க்கமாய் மக்களிடம் வந்தவன் யார்??
யோவான்ஸ்நானன். மத்தேயு21:32
2905: ஜனங்கள் இயேசுவை யார் என்று எண்ணினார்கள்??
தீர்க்கதரிசி. மத்தேயு 21:46
2906: நல்லவர் பொல்லாதவர்களால் நிறையப்பட்டிருந்தது எது??
கலியாண சாலை. மத்தேயு 22:10
2907: உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார்??
சதுசேயர் மத்தேயு 22:23
2908: இயேசுவை சோதிக்கும்படியாக வந்தவன் யார்??
நியாயசாஸ்திரி. மத்தேயு 22:35
2909: நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் எத்தனை கற்ப்பனைகளில் அடங்கியிருக்கிறது??
இரண்டு. மத்தேயு 22:40
2910: பரிசுத்த ஆவியினாலே இயேசுவை ஆண்டவர் என்று கூறியது யார்??
தாவீது. மத்தேயு 22:45
2911: தங்கள் கிரியைகளை மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறவர்கள் யார்??
வேதபாரகர், பரிசேயர். மத்தேயு 23:5
2912: வேதபாரகரையும் பரிசேயரையும் தேவன் எப்படி அழைத்தார்??
மாயக்காரர். மத்தேயு 23:13
2913: நீதிமான்களின் சமாதிகளை சிங்கரிக்கிறவர்கள் யார்??
வேதபாரகர், பரிசேயர். மத்தேயு 23:29
2914: தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே கொலை செய்யப்பட்டவன் யார்??
சகரியா. மத்தேயு 23:35
2915: எந்த செய்திகளைக் கேள்விப்படும்போது கலங்காதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று இயேசு கூறினார்??
யுத்தங்கள். மத்தேயு 24:6
2916: அக்கிரமம் மிகுதியாவதினால் தணிந்து போவது எது??
அன்பு. மத்தேயு 24:12
2917: யார் இரட்சிக்கப்படுவான்??
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே. மத்தேயு 24:13
2918:பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து கூறிய தீர்க்கதரிசி யார்??
தானியேல். மத்தேயு 24:15
2919: வாசிக்கிறவன் என்ன செய்யக்கடவன் என்று இயேசு கூறினார்??
சிந்திக்கவேண்டும். மத்தேயு 24:15
2920: யார் நிமித்தம் முடிவு நாட்கள் குறைக்கப்படுகிறது??
தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். மத்தேயு 24:22
2921: பிணம் எங்கேயோ அங்கே வந்து கூடுவது எது??
கழுகுகள். மத்தேயு 24:28
2922: வானமும் பூமியும் ஒழிந்து போகும் ஆனால் ஒழிந்து போகாதது எது??
இயேசுவின் வார்த்தைகள். மத்தேயு 24:35
2923: மணவாளன் வருகிறார் அவருக்கு எதிர் கொண்டு போகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் எப்பொழுது உண்டாயிற்று??
நடுராத்திரி. மத்தேயு 25:6
2924: மணவாளனோடு கலியாண வீட்டில் பிரவேசித்தவர்கள் யார்??
ஆயத்தமாயிருந்தவர்கள். மத்தேயு 25:10
2925: உண்மையும் உத்தமும்மான ஊழியக்காரர்கள் என்று பாராட்டப்பட்டவர்கள் யார்??
5: 2தாலந்து வாங்கியவர்கள். மத்தேயு 25: 20-23
2926: பரிமள தைலம் தன் மேல் ஊற்றப்பட்டது எதற்கு அடையாளமானது என்று இயேசு கூறினார்??
தன்னை அடக்கம் பண்ணுவதற்கு. மத்தேயு 26:12
2927: பாவமன்னிப்பு உண்டாகும் படி அநேகருக்காக சிந்தப்படுவது எது??
இயேசுவின் இரத்தம். மத்தேயு 26:28
2928: உயிர்த்தெழுந்தபின் இயேசு எங்கே போவதாகக் கூறினார்??
கலிலேயா. மத்தேயு 26:32
2929: எது உற்சாகமுள்ளது என்று இயேசு கூறினார்??
ஆவி. மத்தேயு 26:43
2930: எத்தனை முறை இயேசு உம்சித்தம் ஆகக்கடவது என்று கெத்சமனேயில் ஜெபம்பண்ணினார்??
3 . மத்தேயு 26:45
2931: இயேசு எதைச் சொன்னதாகப் பிரதான ஆசாரியன் கூறினான்??
தேவதூஷணம். மத்தேயு 26:65
2932: இயேசுவின் வார்த்தைகளை நினைத்து மனங்கசந்து அழுதவன் யார்??
பேதுரு. மத்தேயு 26:75
2933: யூதாசின் காசினால் யாருடைய நிலம் வாங்கப்பட்டது??
குயவன். மத்தேயு 27:7
2934: குயவனுடைய நிலத்தை வாங்குவார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசி யார்??
எரேமியா. மத்தேயு 27:10
2935: காவல்பண்ணப்பட்டவர்களில் பேர் போனவனாயிருந்தவன் யார்??
பரபாஸ். மத்தேயு 27:16
2936:பிராதான ஆசாரியர் இயேசுவை எதினாலே ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து கொண்டான்??
பொறாமை. மத்தேயு 27:17
2937: இயேசுவினிமித்தம் சொப்பனத்தில் வெகுபாடுபட்டவள் யார்??
பிலாத்துவின் மனைவி. மத்தேயு 27:19
2938:பிலாத்து இயேசுவை யாரென்று ஜனங்களுக்கு முன்பாக கூறினான்??
நீதிமான். மத்தேயு 27:24
2939: இயேசுவின் வலது கையில் கொடுக்கப்பட்டது என்ன??
கோல். மத்தேயு 27:29
2940: கொல்கொதா என்பதன் இன்னொரு பெயர் என்ன??
கபாலஸ்தலம். மத்தேயு 27:33
2941: ஆறாம் மணிமுதல் ஒன்பதாம் மணிவரை பூமியெங்கும் உண்டானது எது??
அந்தகாரம். மத்தேயு 27:45
2942: ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு எப்படி சத்தமிட்டுக் கூப்பிட்டார்??
ஏலி ஏலி லாமா சபக்தானி. மத்தேயு 27:45
2943: இயேசு தம்முடைய ஆவியை விட்டபோது கல்லறைத் திறந்து யாருடைய சரீரங்கள் எழுந்திருந்தன??
பரிசுத்தவான்கள். மத்தேயு 27:52
2944: சம்பவித்த காரியங்களை கண்டு மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்று கூறியவன் யார்??
நூற்றுக்கதிபதி. மத்தேயு 27:54
2945:வாரத்தின் முதல் நாள் கல்லறையைப் பார்க்க வந்தவர்கள் யார்??
மகதலேனா மரியாள் மற்ற மரியாள். மத்தேயு 28:1
2946:கர்த்தருடைய தூதனின் ரூபம் எதைப் போல இருந்தது??
மின்னல். மத்தேயு 28:3
2947: உயிர்த்தெழுந்த இயேசு எங்கே போவதாக தூதன் கூறினான்??
கலிலேயா. மத்தேயு 28:7
2948: இயேசுவை களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லும்படி காவல்சேவகருக்கு பணம் கொடுத்தவர்கள் யார்??
பிரதான ஆசாரியர். மத்தேயு 28:12-13
2949: ஸ்திரீகளுக்கு எதிர்ப்பட்டு இயேசு அவர்களிடம் முதலில் என்னக் கூறினார்??
வாழ்க. மத்தேயு 28:9
2950: ஸ்திரீகளை நோக்கி பயப்படாதிருங்கள் என்று கூறியவர் யார்??
கர்த்தருடைய தூதன். மத்தேயு 28:5
2951: வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருந்தவன் யார்??
யோவான்ஸ்நானன். மாற்கு 1:3
2952: நாசரேத்தூர் எத்தேசத்தில் இருந்தது??
கலிலேயா. மாற்கு 1:9
2953: இயேசுவை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவியவர் யார்??
ஆவியானவர். மாற்கு 1:12
2954: இயேசு வனாந்தரத்தில் எவைகளின் நடுவே சஞ்சரித்துக் கொண்டிருந்தார்??
காட்டுமிருகங்கள். மாற்கு 1:13
2955: மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்று இயேசு யாரிடம் கூறினார்??
சீமோன், அந்திரேயா. மாற்கு 1:18
2956: யார் யார் படவிலே வலைகளைப் பழுது பார்த்து கொண்டிருந்த போது இயேசு அவர்களைக் கண்டு அழைத்தார்??
யாக்கோபு அவன் சகோதரன் யோவானும். மாற்கு 1:19
2957: இயேசு கிறிஸ்துவின் கீர்த்தி எந்த நாடெங்கும் பிரசித்தமாயிற்று??
கலிலேயா. மாற்கு 1:28
2958: இயேசுவை அறிந்திருந்தவை எவை??
பிசாசுகள். மாற்கு 1:34
2959: இயேசு எந்த இடங்களில் தங்கியிருந்தார்??
வனாந்திரம். மாற்கு 1:45
2960: நாலுபேர் யாரை சுமந்து கொண்டு இயேசுவிடம் வந்தார்கள்??
திமிர்வாதக்காரன். மாற்கு 2:3
2961:இயேசு எதைக் கண்டு திமிர்வாதக்காரனுக்கு சுகம் கொடுத்தார்??
அவனைச் சுமந்தவர்களின் விசுவாசம். மாற்கு 2:5
2962: ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தவன் யார்??
லேவி. மாற்கு 2:14
2963: தாவீது தெய்வசமுகத்து அப்பங்களை புசித்த போது இருந்த பிரதான ஆசாரியன் யார்??
அபியத்தார். மாற்கு 2:26
2964: பரிசேயர் இயேசுவை கொலை செய்ய யாரோடே ஆலோசனைப் பண்ணினார்கள்??
ஏரோது. மாற்கு 3:6
2965: யாக்கோபு யோவானுக்கு இயேசு என்ன பெயரிட்டார்??
பொவனெர்கேஸ். மாற்கு 3:17
2966: பொவெனர்கேஸ் என்பதன் அர்த்தம் என்ன??
இடிமுழக்க மக்கள். மாற்கு 3:17
2967: இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனங்களை எடுத்துப்போடுகிறவன் யார்??
சாத்தான். மாற்கு 4:15
2968: தண்டின் மேல் வைக்கப்பட வேண்டியது எது??
விளக்கு. மாற்கு 4:21
2969: கடலுக்கு அக்கரையிலுள்ள நாடு யாருடையது??
கதரேனர். மாற்கு 5:1
2970: கதரேனர் நாட்டில் இயேசுவுக்கு எதிராக வந்தவன் யார்??
அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன். மாற்கு 5:2
2971: மலையருகே மேய்ந்து கொண்டிருந்த பன்றிகளின் எண்ணிக்கை எவ்வளவு??
ஏறக்குறைய இரண்டாயிரம். மாற்கு 5:13
2972: இயேசுவோடே கூட இருக்கும்படி தனக்கு உத்தரவு கொடுக்க வேண்டிக்கொண்டவன் யார்??
பிசாசுகள் பிடித்திருந்தவன். மாற்கு 5:18
2973: இயேசுவைக் கண்டவுடன் அவர் பாதத்தில் விழுந்தவன் யார்??
யவீரு. மாற்கு 5:22
2974: இயேசுவுக்கு முன்பாக விழுந்து உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னவள் யார்??
12 வருஷமாய் பெரும்பாடுள்ள ஸ்திரீ. மாற்கு 5:33
2975: பிள்ளையின் கையைப்பிடித்து இயேசு சொன்னது என்ன??
தலீத்தாகூமி. மாற்கு 5:42
2976: யவீருவின் குமாரத்தியின் வயது என்ன??
பன்னிரண்டு. மாற்கு 5:42
2977: தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலும் கனவீனமடைபவன் யார்??
தீர்க்கதரிசி. மாற்கு 6:4
2978: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்ததாக இயேசுவைக் குறித்து கூறியவன் யார்??
ஏரோது ராஜா. மாற்கு 6:24
2979: தன் ஜென்ம நாளில் விருந்து பண்ணியவன் யார்??
ஏரோது. மாற்கு 6:21
2980: மனுஷருடைய கற்பனைகளை உமதேசங்களாகப் போதித்து வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று சொல்லிய தீர்க்கதரிசி யார்??
ஏசாயா. மாற்கு 7:7
2981: தகப்பனுக்கும் தாய்க்கும் செய்ய வேண்டிய உதவியை எதைக் கொடுப்பதின் மூலம் முடிந்தது என்று எண்ணினார்கள்??
கொர்பான் என்னும் காணிக்கை. மாற்கு 7:11
2982: எப்பத்தா என்பதன் அர்த்தம் என்ன??
திறக்கப்படுவாயாக. மாற்கு 7:34
2983: பெத்சாயிதா ஊரில் இயேசுவிடம் கொண்டு வரப்பட்டவன் யார்??
குருடன். மாற்கு 8:22
2984: எனக்குப் பின்னாகப் போ சாத்தானே யார் யாரிடம் கூறியது??
இயேசு பேதுருவிடம். மாற்கு 8:33
2985: யாரைக் குறித்து எழுதியிருக்கிறபிரகாரம் அவனுக்கு செய்தார்கள்??
எலியா. மாற்கு 9:13
2986: யாருக்கு எல்லாம் கூடும் என்று இயேசு கூறினார்??
விசுவாசிக்கிறவன். மாற்கு 9:24
2987: இயேசு யாரை எடுத்து சீஷர்கள் நடுவிலே நிறுத்தினார்??
ஒரு சிறு பிள்ளை. மாற்கு 9:36
2988: எந்த பலியும் எதினால் உப்பிடப்படும்??
உப்பினால். மாற்கு 9:49
2989: எந்த மனுஷனும் எதினால் உப்பிடப்படுவான்??
அக்கினி. மாற்கு 9:49
2990: ஒருவரோடொருவர் எது உள்ளவர்களாயிருக்க வேண்டும்??
சமாதானம். மாற்கு 9:50
2991: யாரை இயேசு தொடும்படிக்கு அவரிடம் கொண்டு வந்தார்கள்??
சிறுபிள்ளைகள். மாற்கு 10:13
2992: தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டவர்களுக்குரியது??
சிறுபிள்ளைகளைப் போலானவர்கள். மாற்கு 10:15
2993: யார் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதாயிருக்கும்??
ஐஸ்வரியமுள்ளவர்கள். மாற்கு 20:23
2994: பர்திமேயு யாருடைய குமாரன்??
திமேயு. மாற்கு 10:46
2995: இயேசுவே தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் கூப்பிட்டவன் யார்??
பர்திமேயு. மாற்கு 10:47
2996: இருவழிச்சந்தியில் கட்டப்பட்டிருந்தது எது??
கழுதைக்குட்டி. மாற்கு 11:4
2997: இயேசு அத்திமரத்தை சபித்ததை நினைவு கூர்ந்தவர் யார்??
பேதுரு. மாற்கு 11:21
2998: எல்லாரும் யாரை மெய்யான தீர்க்கதரிசி என்று எண்ணினார்கள்??
யோவான்ஸ்நானன். மாற்கு 11:32
2999:இயேசுவை பேச்சில் ஆகப்படுத்தும்படி அவரிடத்தில் அனுப்பப்பட்டவர்கள் யார்??
பரிசேயரிலும் ஏரோதியரிலும் சிலர். மாற்கு 12:13
3000: தன் வறுமையிலிருந்து காணிக்கை போட்டவள் யார்??
ஏழை விதவை. மாற்கு 12:44.
3001:யுத்தங்களும் யுத்தங்களின் செய்திகளும் சம்பவிக்கும் ஆனால் உடனே வராதது எது??
முடிவு. மாற்கு 13:7
3002: சகல ஜாதிகளுக்கும் முந்தி பிரசங்கிக்கப்பட வேண்டியது என்ன??
சுவிசேஷம். மாற்கு 13:10
3003: இரட்சிக்கப்படுபவன் யார் என்று இயேசு கூறினார்??
முடிவுபரியந்தம் நிலை நிற்பவன். மாற்கு 13:13
3004: அந்த நாளையும் நாழிகையையும் அறிந்திருக்கிறவர் யார்??
பிதா. மாற்கு 13:32
3005: இயேசு பெத்தானியாவில் யார் வீட்டில் போஜனபந்தியிருந்தார்??
குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில். மாற்கு 14:3
3006:இயேசு சீமோன் வீட்டில் பந்தியிருக்கையில் ஒரு ஸ்திரீ கொண்டு வந்தது என்ன??
வெள்ளைக்கல் பரணி. மாற்கு 14:3
3007: யார் உங்களிடத்தில் எப்போதும் இருக்கிறார்கள் என்று இயேசு கூறினார்??
தரித்திரர். மாற்கு 14:7
3008:எது தம்மை விட்டு நீங்கிப்போகக் கூடுமானால் நீங்கட்டும் என்று இயேசு கூறினார்??
அந்த வேளை. மாற்கு 14:35
3009: எதற்கு உட்படாதபடி விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும்??
சோதனை. மாற்கு 14:38
3010: எது நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்று இயேசு கூறினார்??
வேதவாக்கியம். மாற்கு 14:49
3011: தூரத்தில் இயேசுவுக்கு பின் சென்றவன் யார்??
பேதுரு. மாற்கு 14:54
3012: இயேசுவின் சிலுவையை சுமக்கும் படி பலவந்தம் பண்ணப்பட்டவன் யார்??
சீமோன். மாற்கு 15:20
3013: சீமோன் எந்த ஊரைச் சேர்ந்தவன் ??
சிரேனே ஊர். மாற்கு 15:21
3014: சீமோனின் குமாரர் பெயர்கள் என்ன??
அலெக்சந்தர், ரூப். மாற்கு 15:21
3015: இயேசுவை சிலுவையில் அறைந்தது எத்தனை மணி வேளையாயிருந்தது??
மூன்றாம் மணி. மாற்கு 15:25
3016: இயேசு யாரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் நிறைவேறினது??
அக்கிரமக்காரர். மாற்கு 15:29
3017: கனம்பொருந்திய ஆலோசனைக்காரன் யார்??
அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு. மாற்கு 15:43
3018: யோசேப்பு எதுவரக்காத்திருந்தான்??
தேவனுடைய ராஜ்யம். மாற்கு 15:43
3019: இயேசு எழுந்திருந்த பின் முதல் முதல் யாருக்கு தரிசனமானார்??
மகதலேனா மரியாள். மாற்கு 16:9
3020: எதை விசுவாசியாதவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்??
சுவிசேஷத்தை. மாற்கு 16:16.
3021: லூக்கா சுவிசேஷம் யாருக்கு எழுதப்பட்டது??
தெயோப்பிலுவுக்கு. லூக்கா 1:1
3022: அபியா என்னும் ஆசரிய வகுப்பிலிருந்த ஆசாரியன் யார்??
சகரியா. லூக்கா 1:5
3023: சகரியாவின் மனைவி பெயர் என்ன??
எலிசபெத். லூக்கா 1:5
3024: எலிசபெத் யாருடைய குமாரத்திகளில் ஒருத்தியாயிருந்தாள்??
ஆரோன். லூக்கா 1:5
3025: கற்பனைகள் நியமங்களின்படி குற்றமற்றவர்களாய் நடந்தவர்கள் யார்??
சகரியா எலிசபெத். லூக்கா 1:5;6
3026: யார் மலடியாயிருந்ததினால் பிள்ளையில்லாதிருந்தது??
எலிசபெத். லூக்கா 1:7
3027: கர்த்தருக்கு முன்பாக பெரியவனாயிருப்பவன் யார்??
யோவான். லூக்கா 1:15
3028: யோவான் யாருடைய ஆவியும் பலமும் உடையவனாயிருப்பான்??
எலியா. லூக்கா 1:18
3029: சகரியாவுக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பப்பட்ட தூதன் யார்??
காபிரியேல். லூக்கா 1:19
3030: ஸ்திரீகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் யார்??
மரியாள். லூக்கா 1:28
3031: தன் முதிர்வயதில் ஒரு புத்திரனை கர்ப்பம் தரித்தவள் யார்??
எலிசபெத். லூக்கா 1:36
3032: தேவனின் இரக்கம் யாருக்கு தலைமுறை தலைமுறைக்குமுள்ளது??
அவருக்குப் பயந்தவர்களுக்கு. லூக்கா 1:50
3033: எலிசபெத்தின் பிள்ளைக்கு என்ன பெயரிடப்போனார்கள்??
சகரியா. லூக்கா 1:59
3034: கர்த்தருடைய கரம் யாரோடு இருந்தது??
யோவான். லூக்கா 1:66
3035: சீரியாவில் யார் தேசாதிபதியாயிருந்த போது முதலாம் குடிமதிப்பு உண்டானது??
சிரேனியு. லூக்கா 2:2
3036: பெத்லகேமின் இன்னொரு பெயர் என்ன??
தாவீதின் ஊர். லூக்கா 2:5
3037: இஸ்ரவேலில் ஆறுதல் வரக்காத்திருந்தவன் யார்??
சிமியோன். லூக்கா 2:25
3038: மரியாளின் ஆத்துமாவை எது உருவிப்போகும்??
ஒரு பட்டயம். லூக்கா 2:35
3039: ஏழு வருஷம் புருஷனோடு வாழ்ந்து விதவையானவள் யார்??
அன்னாள். லூக்கா 2:36
3040: அன்னாள் எது உண்டாகக் காத்திருந்தவர்களுக்கு இயேசுவைக் குறித்து பேசினாள்??
எருசலேமின் மீட்பு உண்டாக. லூக்கா 2:38
3041: இயேசுவுக்கு எத்தனை வயதாகும் போது எருசலேமுக்குப் போனார்கள்??
12. லூக்கா 2:42
3042: திபேரியுராயனின் 15 ஆம் வருஷத்தில் யூதேயாவின் தேசாதிபதி யார்??
பொந்தியுபிலாத்து. லூக்கா 3:1
3043: காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதி யார்??
ஏரோது. லூக்கா 3:1
3044: வனாந்திரத்தில் யோவானுக்கு உண்டானது எது??
தேவனுடைய வார்த்தை. லூக்கா 3:2
3045: வனாந்திரத்தில் கூப்பிடுகிற சத்தத்தை பற்றி எழுதியிருப்பவர் யார்??
ஏசாயா. லூக்கா 3:5
3046: பரிசுத்த ஆவியானவர் எதைப் போல இறங்கினார்??
புறா. லூக்கா 3:22
3047: இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது அவர் வயது என்ன??
ஏறக்குறைய 30. லூக்கா 3:23
3048: யோசேப்பின் தகப்பன் யார்??
ஏலி. லூக்கா 3:23
3049: தேவனால் உண்டானவன் யார்??
ஆதாம். லூக்கா 3:38
3050: இயேசு யாராலே வனாந்தரத்துக்கு கொண்டு போகப்பட்டார்??
ஆவியானவரால். லூக்கா 4:1
3051: தேவனுடைய குமாரன் என்ற வார்த்தையில் பிசாசு இயேசுவுக்கு எத்தனை சோதனைகளைக் கொடுத்தான்??
இரண்டு. லூக்கா 4:1-12
3052: எலியாவின் நாட்களில் எவ்வளவு நாள் வானம் அடைபட்டது??
3 வருஷம் 6 மாதம். லூக்கா 4:25
3053:இஸ்ரவேல் குஷ்டரோகிகளில் சுகமாக்கப்பட்ட ஒருவன் யார்??
நாகமான். லூக்கா 4:27
3054: இயேசு கட்டளையிட்டவுடன் நீங்கியது எது??
ஜுரம். லூக்கா 4:39
3055: இயேசுவை கிறிஸ்து என்று அறிந்திருந்தவை எவை??
பிசாசுகள். லூக்கா 4:41
3056: நான் பாவியான மனுஷன் கூறியவன் யார்??
பேதுரு. லூக்கா 5:8
3057: இயேசு எதைச் சொல்லுகிறதாக வேதபாரகரும் பரிசேயரும் கூறினார்கள்??
தேவதூஷணம். லூக்கா 5:21
3058: இயேசுவுக்கு வீட்டில் பெரிய விருந்து பண்ணியவன் யார்??
லேவி. லூக்கா 5:29
3059: நீ எழுந்து நடுவே நில் யாரிடம் கூறப்பட்டுள்ளது??
சூம்பினகையுடையவனிடம். லூக்கா 6:8
3060: இயேசு தயை செய்ய பாத்திரனாயிருப்பவன் யார்??
நூற்றுக்கதிபதி. லூக்கா 7:4
3061: எந்த ஊரில் மரித்துப்போனவனை அடக்கம் பண்ண கொண்டு வந்தார்கள்??
நாயீனூர். லூக்கா 7:11-12
3062: யோவான் எத்தனை சீஷரை இயேசுவிடம் அனுப்பினான்??
இரண்டு. லூக்கா 7: 18-19
3063: யோவான் யாரை ப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்??
தீர்க்கதரிசி. லூக்கா 7: 26
3064: பாவியான ஸ்திரீ யை இரட்சித்தது எது??
அவள் விசுவாசம். லூக்கா 7:50
3065: இயேசுவின் பாதத்தில் விழுந்த ஜெப ஆலயத்தலைவன் யார்??
யவீரு. லூக்கா 8:41
3066: 5 அப்பம் 2 மீனின் அற்புதம் எந்த பட்டணத்தின் வனாந்தரத்தில் நடந்தது??
பெத்சாயிதா. லூக்கா 9:10-17
3066: மகிமையோடு காணப்பட்டு இயேசுவின் மரணத்தை குறித்து பேசிக்கொண்டிருந்தவர்கள் யார்??
மோசே, எலியா. லூக்கா 9: 39-31
3067: பட்சத்திலிருக்கிறவன் யார் என்று இயேசு கூறினார்??
விரோதியாயிராதவன். லூக்கா 9:50
3068: இயேசுவின் பாதத்தருகே வசனங்களைக் கேட்டு கொண்டிருந்தவள் யார்??
மரியாள். லூக்கா 10: 39
3069: பற்பல வேலைகளைச் செய்வதில் வருத்தமடைந்தவள் யார்??
மார்த்தாள். லூக்கா 10:40
3070: மரியாள் எதைத் தெரிந்து கொண்டாள்??
தன்னைவிட்டெடுபடாத நல்ல பங்கு. லூக்கா 10:42
3071: பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு எதைக் கொடுப்பது அதிக நிச்சயம்??
பரிசுத்த ஆவி. லூக்கா 11:13
3072: யாருடைய அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் கொடுக்கப்படாது??
யோனா தீர்க்கதரிசி. லூக்கா 11:29
3073: இவர்களிலும் பெரியவர் இங்கே இருக்கிறார் இவர்கள் யார்??
சாலொமோன், யோனா. லூக்கா 11:31-32
3074: அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டவர்கள் யார்??
நியாயசாஸ்திரிகள். லூக்கா 11:52
3075: ஐந்து அடைக்கலான் குருவிகளின் விலை என்ன??
2 காசு. லூக்கா 12:6
3076: நாம் பேசவேண்டியவைகளை நமக்குப் போதிப்பவர் யார்??
பரிசுத்த ஆவியானவர். லூக்கா 12:12
3077: பிதா நமக்கு எதைத் தர பிரியமாயிருக்கிறார்??
ராஜ்யம். லூக்கா 12:32
3078: பிலாத்து எதை கலிலேயருடைய பலிகளோடே கலந்திருந்தான்??
அவர்களுடைய இரத்தம். லூக்கா 13:1
3079: சீலோவாமில் கோபுரம் விழுந்து எத்தனை பேரைக் கொன்றது??
18. லூக்கா 13:4
3080: இது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது அது என்ன??
சாரமற்ற உப்பு. லூக்கா14:35
3081: வசனங்களை கேட்கும் படி இயேசுவிடம் வந்தவர்கள் யார்??
ஆயக்காரர் பாவிகள். லூக்கா 15:1
3082: யார் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும்??
மனந்திரும்புகிற ஒரு பாவி. லூக்கா 15:7
3083: ஸ்திரீ விளக்கைக் கொளுத்தி வீட்டைப் பெருக்கி எதை தேடினாள்??
காணமற்போன வெள்ளிக்காசு. லூக்கா 15:8
3084: மரித்து திரும்பவும் உயிர்த்தவன் யார்??
இளையகுமாரன். லூக்கா 15:32
3085: இந்த பிரபஞ்சத்தின் பிள்ளைகள் எப்படியிருக்கிறார்கள்??
அதிக புத்திமான்களாய். லூக்கா 16:8
3086: யாருக்கெல்லாம் ஊழியஞ்செய்ய ஒருவனால் கூடாது??
தேவன், உலகப்பொருள். லூக்கா 16:13
3087: தேவராஜ்யத்துக்கும் பாதாளத்துக்கும் இடையே உள்ளது எது??
பெரும் பிளப்பு. லூக்கா 16:26
3088: எவைகள் வராமல் போவது கூடாத காரியம்??
இடறல்கள். லூக்கா 17:1
3089:அப்போஸ்தலர் எதை வர்த்திக்கப்பண்ண இயேசுவிடம் கேட்டனர்??
விசுவாசம். லூக்கா 17:5
3090: இயேசுவின் பாதத்தருகே வந்து ஸ்தோத்திரஞ் செலுத்தியவன் யார்??
சமாரியன். லூக்கா 17:16
3091: நமக்குள் இருப்பது எது??
தேவனுடைய ராஜ்யம். லூக்கா 17:21
3092: யாருடைய நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனின் நாட்களில் நடக்கும்??
நோவா, லோத்து. லூக்கா 17:26-29
3093: யாரை நினைத்துக்கொள்ள வேண்டும்??
லோத்தின் மனைவி. லூக்கா 17:32
3094:பிணம் உள்ள இடத்தில் வந்து கூடுவது எது??
கழுகு. லூக்கா 17:37
3095: பெருமையான ஜெபத்தை ஏறெடுத்தவன் யார்??
பரிசேயன். லூக்கா 18:11-12
3096: நீதிமானாக்கப்பட்டவனாய் வீட்டுக்கு போனவன் யார்??
ஆயக்காரன். லூக்கா 18:14
3097: இயேசு தலைவனிடம் எத்தனை கற்பனைகளைக் கூறினார்??
ஐந்து. லூக்கா 18:20
3098: எரிகோவின் வழியருகே பிச்சைக்கேட்டு கொண்டிருந்தவன் யார்??
குருடன். லூக்கா 18:35
3099: இயேசு எப்படிப்பட்டவரோ என்று பார்க்க வகைதேடினவன் யார்??
சகேயு. லூக்கா 19:1
3100: இயேசு சகேயுவை சந்தித்த ஊர் எது??
எரிகோ. லூக்கா 19:1
3101:பெத்பகே பெத்தானியா ஊர்கள் எந்த மலையருகே இருந்தன??
ஒலிவமலை. லூக்கா 19:29
3102: உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிறவர்கள் யார்??
சதுசேயர். லூக்கா 20:27
3103: கர்த்தர் யாருக்கு தேவனாயிருக்கிறார்??
ஜீவனுள்ளோருக்கு. லூக்கா 20:38
3104: முன்னதாக சம்பவிக்க வேண்டியவை எவை??
யுத்தங்கள், கலகங்கள். லூக்கா 21:9
3105: எது உடனே வராது??
முடிவு. லூக்கா 21:9
3106: விரோதிக்கிறவர்கள் என்ன செய்யக்கூடாத வாக்கை இயேசு தருவார்??
எதிர் பேசவும், எதிர் நிற்கவும். லூக்கா 21:15
3107: பொறுமையினால் எதைக் காத்துக் கொள்ள வேண்டும்??
ஆத்துமாக்களை. லூக்கா 21:19
3108: சமுத்திரமும் அலைகளும் எப்படியிருக்கும்??
முழக்கமாய். லூக்கா 21:25
3109: பூமியில் வரும் ஆபத்துகளுக்கு பயந்து எதிர்பார்த்திருப்பதால் சோர்ந்து போவது எது??
மனுஷருடைய இருதயம். லூக்கா 21:26
3110: இயேசு இராக்காலங்களில் எங்கே தங்கிவந்தார்??
ஒலிவமலை. லூக்கா 21:37
3111: சாத்தான் யாருக்குள்ளே புகுந்தான்??
யூதாஸ். லூக்கா 22:3
3112: இயேசு பாடுபடுமுன்னே சீஷரிடம் என்ன செய்ய ஆயத்தமாமிருந்தார்??
பஸ்காவைப் புசிக்க. லூக்கா 22:15
3113: பேதுருவிடம் எது ஒழிந்து போகாதபடி இயேசு வேண்டிக்கொண்டார்??
விசுவாசம். லூக்கா 22:32
3114: எந்த இடத்தில் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்??
கபாலஸ்தலம். லூக்கா23:33
3115:ஸ்திரீகளின் பேச்சு சீஷர்களுக்கு எப்படியிருந்தது??
வீண் பேச்சாய். லூக்கா 24:11
3116: கல்லறைக்கு ஓடி சம்பவித்ததைப் பார்த்த சீஷன் யார்??
பேதுரு. லூக்கா 24:12
3117: சீஷர்களில் இரண்டு பேர் எங்கே போனார்கள்??
எம்மாவு கிராமம். லூக்கா 24 13
3118: நீர் அந்நியராயிருக்கிறீரோ யார் யாரிடம் கேட்டது??
கிலெயோப்பா இயேசுவிடம். லூக்கா 24:18
3119:கர்த்தர் உயிர்த்தெழுந்து யாருக்கு தரிசனமானார்??
சீமோன். லூக்கா 24:34
3120: தம்மை குறித்து எழுதியிருப்பதாகக் கூறி இயேசு சீஷர்களை நினைவுபடுத்தினவை எத்தனை காரியங்கள்??
3. லூக்கா 24:45
3121: ஆதியிலே இருந்தது எது??
வார்த்தை. யோவான் 1:1
3122: ஆதியிலே இருந்தவருக்குள் இருந்தது எது??
ஜீவன். யோவான் 1:4
3123: தேவனால் அனுப்பப்பட்ட மனுஷன் யார்??
யோவான். யோவான் 1:6
3124: மாம்சம் ஆனது எது??
வார்த்தை. யோவான் 1:14
3125: மாம்சமான வார்த்தை எவைகளினால் நிறைந்தது??
கிருபை, சத்தியம். யோவான் 1:14
3126: இயேசுவைக் குறித்து சாட்சி கொடுத்தவர் யார்??
யோவான். யோவான் 1:15
3127: யோவான் ஞானஸ்நானம் கொடுத்த இடம் எது??
பெத்தாபரா. யோவான் 1:28
3128: யோனாவின் மகன் யார்??
சீமோன். யோவான் 1:42
3129: கேபா என்பதற்கு அர்த்தம் என்ன??
பேதுரு. யோவான் 1:42
3130: நீ எனக்கு பின் சென்று வா இயேசு யாரை அழைத்தார்??
பிலிப்புவை. யோவான் 1:42
3131: பிலிப்பு எந்த பட்டணத்தை சேர்ந்தவன்??
பெத்சாயிதா. யோவான் 1:44
3132: வந்து பார் என்று யார் யாரிடம் கூறியது??
பிலிப்பு நாத்தான்வேலிடம். யோவான் 1:46
3133: அத்திமரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தவன் யார்??
நாத்தான்வேல். யோவான் 1:48
3134: கபடற்ற உத்தம இஸ்ரவேலன் யார்??
நாத்தான்வேல். யோவான் 1:47
3135: பெரிதானவைகளைக் காண்பாய் யார் யாரிடம் கூறியது??
இயேசு நாத்தான்வேலிடம். யோவான் 1:50
3135: கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் யார்??
இயேசுவும் அவருடைய சீஷர்களும். யோவான் 2:2
3136: கலியாண வீட்டில் என்ன குறைவுபட்டது??
திராட்சரசம். யோவான் 2:3
3137: எத்தனை கற்சாடிகள் கலியாண வீட்டில் வைக்கப்பட்டிருந்தது??
6. யோவான் 2:6
3138: இயேசு தம் மகிமையை வெளிப்படுத்தின முதல் அற்புதம் எங்கே நடந்தது??
கானா ஊர் கலியாணத்தில். யோவான் 2:11
3139: யூதருக்குள்ளே அதிகாரியான பரிசேயன் யார்??
நிக்கொதேமு. யோவான் 3:1
3140: நிக்கொதேமு இயேசுவிடம் எப்பொழுது வந்தான்??
இராக்காலத்தில். யோவான் 3:2
3141: எவைகளினால் பிறவாதவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்??
ஜலம், ஆவி. யோவான் 3:5
3142:மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது எது??
சர்ப்பம். யோவான் 3:14
3143: மனுஷகுமாரனை விசுவாசிக்கிறவன் அடைவது என்ன??
நித்தியஜீவன். யோவான் 3:16
3144: தேவன் தாம் உலகத்தை நேசித்ததை எவ்விதம் வெளிப்படுத்தினார்??
தம் ஒரே குமாரனைத் தந்தருளி. யோவான் 3:16
3145: தேவன் தம்முடைய குமாரனை உலகத்துக்கு அனுப்பினது எதற்காக??
உலகம் இரட்சிக்கப்பட. யோவான் 3:17
3146: சாலீம் ஊருக்கு சமீபமான ஊர் எது??
அயினோன். யோவான் 3:23
3147: நான் சிறுக வேண்டும் என்று கூறியவன் யார்??
யோவான். யோவ 3:30
3148: இயேசு எந்த நாட்டின் வழியாக கலிலேயாவுக்கு போனார்??
சமாரியா. யோவான் 4:4
3149: சீகார் என்பது எவ்விடத்திலுள்ள ஊர்??
சமாரியா. யோவான் 4:5
3150: யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகே இருந்த ஊர் எது??
சீகார். யோவான் 4:5
3151: சீகார் ஊரிலே யாருடைய கிணறு இருந்தது??
யாக்கோபு. யோவான் 4:10
3152: இயேசு யாக்கோபின் கிணற்றருகே உட்கார்ந்த நேரம் என்ன??
ஏறக்குறைய ஆறாம் மணி. யோவான் 4:6
3153: தண்ணீர் மொள்ள வந்த ஸ்திரீ யார்??
சமாரியா ஸ்திரீ. யோவான் 4:8
3154: தாகத்துக்கு தா யார் யாரிடம் கேட்டது??
இயேசு சமாரியா ஸ்திரீயிடம். யோவான் 4:8
3155: யூதர்கள் யாருடனே சம்பந்தம் கலவாதவர்கள்??
சமாரியர். யோவான் 4:9
3156: சமாரியா ஸ்திரீக்கு எத்தனை புருஷர் இருந்ததாக இயேசு கூறினார்??
5. யோவான் 4:18
3157: சமாரியா ஸ்திரீ இயேசுவை முதலாவது எப்படி அழைத்தாள்??
ஆண்டவர். யோவான் 4:19
3158: இரண்டாவதாக சமாரியா ஸ்திரீ இயேசுவை யாராகக் கண்டு கொண்டாள்??
தீர்க்கதரிசி. யோவான் 4:19
3159: இரட்சிப்பு யார் வழியாய் வருகிறது??
யூதர்கள். யோவான் 4:22
3160: சமாரியா ஸ்திரீ இயேசுவை மூன்றாவதாக யாராகக் கண்டாள்??
மேசியா. யோவான் 4:25
3161: யாருடைய வார்த்தையினிமித்தம் சமாரியாவில் அநேகம்பேர் இயேசுவின் மேல் விசுவாசம் வைத்தார்கள்??
சமாரியா ஸ்திரீ. யோவான் 4:39
3162: ராஜாவின் மனுஷனுடைய குமாரன் உயர் பிழைத்த நேரம் என்ன??
7 ஆம் மணி. யோவான் 4:52
3163: இயேசு கலிலேயாவில் செய்த இரண்டாம் அற்புதம் எது??
ராஜாவின் மனுஷனுடைய குமாரனை சுகமாக்கியது. யோவான் 4:54
3164: எருசலேமில் ஆட்டு வாசலருகே இருந்தது எது??
பெதஸ்தா குளம். யோவான் 5:2
3165: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று இயேசு யாரிடம் கேட்டார்??
38 வருட வியாதியஸ்தனிடம். யோவான் 5:6
3166: மரித்தோர் யாருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்??
தேவகுமாரன். யோவான் 5;25
3167: சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தவன் யார்??
யோவான். யோவ 5:33
3168: ,எதை ஆராய்ந்து பார்க்கும்படி இயேசு கூறினார்??
வேதவாக்கியங்கள். யோவான் 5:39
3169: வேதவாக்கியங்களால் நமக்கு கிடைப்பது என்ன??
நித்திய ஜீவன். யோவான் 5:41
3170: இயேசுவைக் குறித்து எழுதியிருக்கிறவர் யார்??
மோசே. யோவான் 5:46
3171: கலிலேயாக் கடலின் மறுபெயர் என்ன??
திபோரியாக்கடல். யோவான் 6:1
3172: சீமோன் பேதுருவின் சகோதரன் யார்??
அந்திரேயா. யோவான் 6:8
3173: இங்கே ஒரு பையன் இருக்கிறான் என்று கூறியவன் யார்??
அந்திரேயா. யோவான் 6:9
3174: சீஷர்கள் எவ்வளவு தூரம் தண்டுவலித்தபோது இயேசு கடலின் மேல் நடந்து வந்தார்??
ஏறக்குறைய மூன்று நாலுமைல். யோவான் 6:19
3175: தேவனுக்கேற்ற கிரியை எது??
தேவன் அனுப்பினவரை விசுவாசிப்பது. யோவான் 6:28-29
3176: குமாரனிடத்தில் விசுவாசம் வைக்கிறவன் எதை அடைவான்??
நித்திய ஜீவன். யோவான் 6:40
3177: எதைப் புசிக்கிறவனை இயேசு கடைசி நாளில் எழுப்புவார்??
தம்முடைய மாம்சம். யோவான் 6:54
3178: மெய்யான போஜனம் எது??
இயேசுவின் மாம்சம். யோவான் 6:55
3179: மெய்யான பானம் எது??
இயேசுவின் இரத்தம். யோவான் 6:55
3180: உயிர்ப்பிக்கிறது எது??
ஆவி. யோவான் 6:63
3181: யூதருடைய எந்த பண்டிகை சமீபமாயிருந்தது??
கூடாரப்பண்டிகை. யோவான் 7:2
3182: உண்மையுள்ளவனிடத்தில் எது இல்லை??
அநீதி. யோவான் 7:18
3183: எது உங்களை விடுதலையாக்கும் என்று இயேசு கூறினார்??
சத்தியம். யோவான் 8:32
3184: தாங்கள் யாருடைய சந்ததியாய் இருக்கிறோம் என்று யூதர்கள் கூறினார்கள்??
ஆபிரகாம். யோவான் 8:33
3185: யார் தங்களுக்கு பிதா என்று யூதர்கள் கூறினார்கள்??
ஆபிரகாம். யோவான் 8:39
3186: இயேசுவின் நாளைக் காண ஆசையாயிருந்து கண்டு களிகூர்ந்தவன் யார்??
ஆபிரகாம். யோவான் 8:56
3187: மனுஷ கொலைபாதகனும் பொய்யனும் பொய்க்கு பிதாவும் யார்??
பிசாசு. யோவான் 8:44
3188: இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்கிறவர் யார்??
பிதா. யோவான் 8:18
3189: யார் உண்டாவதற்கு முன்னமே இயேசு இருந்தார் ??
ஆபிரகாம். யோவான் 8:58
3190: வேதபாரகரும் பரிசேயரும் யாரை இயேசுவிடம் கொண்டு வந்தனர்??
விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஸ்திரீ. யோவான் 8:3
3191:ஒருவனும் கிரியை செய்யக்கூடாத காலம் எது??
இராக்காலம். யோவான் 9:4
3192: சீலோவாம் என்பதன் அர்த்தம்??
அனுப்பப்பட்டவன். யோவான் 9:7
3193: தேவன் யாருக்கு செவிகொடுக்கிறதில்லை??
பாவிகள். யோவான் 9:31
3194: இயேசு உலாவிக்கொண்டிருந்த மண்டபம் எது??
சாலொமோனுடைய மண்டபம். யோவான் 10 :22
3195: யார் ஒரு அற்புதத்தையும் செய்ய வில்லை??
யோவான் ஸ்நானகன். யோவான் 10:41
3196: இயேசு எவர்களிடத்தில் அன்பாயிருந்தார்??
மார்த்தாள், மரியாள், லாசரு. யோவான் 11:5
3196: யார் நித்திரையடைந்திருக்கிறான் என்று இயேசு சொன்னார்??
லாசரு. யோவான் 11:11
3197: எருசலேமுக்கு சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்தில் உள்ள ஊர் எது??
பெத்தானியா. யோவான் 11:18
3198: நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசித்தவள் யார்??
மார்த்தாள். யோவான் 11:27
3199: இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று பிலிப்புவினிடத்தில் கேட்டவர்கள் யார்??
கிரேக்கர். யோவான் 12:20-21
3200: யார் புறம்பாக தள்ளப்படுவான்??
இந்த உலகத்தின் அதிபதி. யோவான் 12:31
3201: பிசாசானவன் யாருடைய இருதயத்தை தூண்டினான்??
யூதாஸ்காரியோத்து. யோவான் 13:2
3202: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்கு ப் பங்கில்லை என்று இயேசு யாரிடம் கூறினார்??
பேதுருவிடம். யோவான் 13:8
3203: இயேசு ஆவியிலே கலங்கி சொன்னது என்ன??
உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான். யோவான் 13:21
3204: நீ செய்கிறதைச் சீக்கிரமாய் செய் யார் யாரிடம் கூறியது??
இயேசு யூதாசிடம். யோவான் 13:27
3205 : பிதாவின் வீட்டில் எவைகள் உள்ளன என்று இயேசு கூறினார்??
அநேக வாசஸ்தலங்கள். யோவான் 14:2
3206: ஆண்டவரே நீர் போகிற இடத்தை அறியோமே என்று கூறியவன் யார்??
தோமா. யோவான் 14:5
3207: பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று இயேசுவிடம் கேட்டவன் யார்??
பிலிப்பு. யோவான்14:8
3208: நம்முடன் இருக்கும்படிக்கு பிதா யாரைத் தந்தருளுவார்??
சத்திய ஆவியை. யோவான் 14:16
3209: இயேசு எதை வைத்துப்போகிறேன் என்று கூறினார்??
சமாதானத்தை. யோவான்14:27
3210: கனி கொடுக்கிற கொடியை பிதா எதற்காக சுத்தம் பண்ணுகிறார்??
அதிக கனிகளைக் கொடுக்கும்படி. யோவான் 15:2
3211: இயேசு கிறிஸ்துவின் கற்பனை எது??
ஒருவரிலொருவர் அன்பாயிருப்பது. யோவான்15:12
3212: பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவர் யார்??
சத்திய ஆவியாகிய தேற்றரவாளன். யோவான் 15:26
3213: தேற்றரவாளன் வரும் போது எவைகளைக் குறித்து கண்டித்து உணர்த்துவார்??
பாவம், நீதி, மற்றும் நியாயத்தீர்ப்பு. யோவான் 16:8
3214: உலகம் உண்டாகிறதற்கு முன்னே பிதாவினிடத்தில் இயேசுவுக்கு இருந்தது என்ன??
மகிமை. யோவான்17:5
3215: வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக கெட்டுப் போகிறவன் யார்??
கேட்டின் மகன். யோவான் 17:12
3216: சத்தியம் என்பது எது??
வசனம். யோவான் 17:17
3217: இயேசு சீஷருடனே கூட எந்த ஆற்றுக்கு அப்புறம் போனார்??
கெதரோன். யோவான் 18:1
3218: இயேசு போயிருந்த தோட்டத்தை அறிந்திருந்தவன் யார்??
யூதாஸ். யோவான் 18:2
3219: இயேசு எவற்றையெல்லாம் அறிந்திருந்தார்??
தமக்கு நேரிடப்போகிறவைகள். யோவான் 18:4
3220: தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவியவன் யார்??
சீமோன் பேதுரு. யோவான் 18:10
3221: இயேசுவைப் பிடித்து முதலாவது யாரிடத்தில் கொண்டு போனார்கள்??
அன்னாவிடம். யோவான் 18:13
3222: காய்பாவின் மாமா யார்??
அன்னா. யோவான் 18:13
3223: எது நலமாயிருக்கும் என்று காய்பா யூதருக்கு ஆலோசனை கூறினான்??
ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது. யோவான்18:14
3224: இயேசுவை பிடித்துக்கொண்டு போனது எந்த காலமாயிருந்தது??
குளிர் காலம். யோவான் 18:18
3225: நீ யூதருடைய ராஜாவா இயேசுவிடம் கேட்டவன் யார்??
பிலாத்து. யோவான்18:33
3226: போர்ச்சேவகர் இயேசுவுக்கு எதை உடுத்தினர்??
சிவப்பான ஒரு அங்கி. யோவான் 19:2
3227: தளவரிசைப்படுத்தின மேடையின் எபிரேயு பாஷை எது??
கபத்தா. யோவான் 19:13
3228: நான் எழுதினது எழுதினதே கூறியவன் யார்??
பிலாத்து. யோவான் 19:22
3229: முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது எது??
இயேசுவின் அங்கி. யோவான் 19:23
3230: இயேசுவின் சிலுவையினருகே நின்றவர்கள் யார்??
மரியாள், கிலெயோப்பா மரியாள் மற்றும் மகதலேனா மரியாள். யோவான் 19 :25
3231: இயேசுவின் தாயாரின் சகோதரி பெயர் என்ன??
கிலெயோப்பா மரியாள். யோவான் 19:25
3232: வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக இயேசு கூறியது என்ன??
தாகமாயிருக்கிறேன். யோவான் 19:28
3233: இயேசு தலையை சாய்த்து எதை ஒப்புக்கொடுத்தார்??
ஆவியை. யோவான் 19:30
3234: இயேசு ஆவியை ஒப்புக்கொடுத்த நாள் எந்த நாள்??
பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாள். யோவான் 19:31
3235: வெள்ளைப் போளமும் கரியபோளமும் கொண்டு வந்தவன் யார்??
நிக்கொதேமு. யோவான் 19:39
3236: வாரத்தின் முதல்நாள் காலையில் கல்லறையினிடத்திற்கு வந்தவள் யார்??
மகதேலானா மரியாள். யோவான் 20:1
3237: துரிதமாய் ஓடி முந்தி கல்லறையினிடத்துக்குவந்தவன் யார்??
இயேசுவுக்கு அன்பான சீஷன். யோவான் 20:5
3238: கல்லறைக்குள் பிரவேசித்த சீஷன் யார்??
பேதுரு. யோவான் 20:6
3239: கல்லறையினருகே நின்று அழுது கொண்டிருந்தவள் யார்??
மகதலேனா மரியாள். யோவான் 20:11
3240: ரபூனி என்று அழைத்தவள் யார்??
மகதலேனா மரியாள். யோவான் 20:16
3241: இயேசு சீஷர்கள் மேல் ஊதி எதைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்??
பரிசுத்த ஆவியை. யோவான் 20:22
3242: இயேசு வந்திருந்த போது சீஷர்களுடனே இல்லாதவன் யார்??
தோமா. யோவான் 20:24
3243: எத்தனை நாளுக்குப்பின் இயேசு சீஷர்களுக்கு காட்சி தந்தார்??
எட்டு. யோவான் 20:26
3244: தன் மேற்சட்டையை கட்டிக்கொண்டு கடலில் குதித்தவன் யார்??
சீமோன் பேதுரு. யோவான் 21:7
3245: மற்ற சீஷர்கள் கரைக்கு எத்தனை முழ தூரத்தில் இருந்தார்கள்??
200. யோவான் 21:8
3246: சீமோன் பேதுரு படவில் ஏறி எத்தனை மீன்களுள்ள வலையை இழுத்தான்??
153 பெரிய மீன்கள். யோவான் 21:11
3247: நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று இயேசு எத்தனை தரம் பேதுருவிடம் கேட்டார்??
மூன்று தரம். யோவான் 21:17
3248: யோனாவின் குமாரன் யார்??
சீமோன். யோவான் 21:15
3249: யார் மரிப்பதில்லை என்ற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பினது??
இயேசுவுக்கு அன்பான சீஷன். யோவான் 21:23
3250: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று இயேசு யாரிடம் கூறினார் ??
சீமோன் பேதுரு. யோவான் 21:16;17
3251: அப்போஸ்தலர் நடபடிகள் யாருக்கு எழுதப்பட்டது??
தெயோப்பிலுவுக்கு. அப் 1:1
3252: இயேசு அப்போஸ்தலருக்கு எத்தனை நாள் தரிசனமானார்??
40 நாள். அப் 1:3
3253: இயேசு அப்போஸ்தலருக்கு தரிசனமாகி எவைகளை அவர்களுடனே பேசினார்??
தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகள். அப் 1:3
3254: சீஷர்கள் எதினாலே ஞானஸ்நானம் பெறப்போவதாக இயேசு கூறினார்??
பரிசுத்த ஆவி. அப் 1:4
3255:பிதாவின் வாக்குதத்தம் நிறைவேறும் இடம் எது??
எருசலேம். அப் 1:5
3256: இயேசுவை உயர எடுத்துக் கொண்டது எது??
மேகம். அப் 1:9
3257: சீஷர்களில் ஏறக்குறைய எத்தனை பேர் கூடியிருந்தார்கள்??
120. அப் 1:15
3258: 120பேர் நடுவில் எழுந்து பேசியவன் யார்??
பேதுரு. அப் 1:15
3259:யூதாசைக்குறித்து பரிசுத்த ஆவி யாருடைய வாக்கினால் முன்னமே சொல்லியிருந்தார்??
தாவீது. அப் 1:16
3260: வயிறு வெடித்து செத்துப்போனவன் யார்??
யூதாஸ். அப் 1:18
3261: யூதாசைக் குறித்து எப்புஸ்தகத்தில் கூறியிருப்பதாக பேதுரு கூறினார்??
சங்கீதம். அப் 1:20
3262 : யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா யார்??
யோசேப்பு. அப் 1:23
3263: பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக் கொள்ளப்பட்டவன் யார்??
மத்தியா. அப் 1:26
3264: சீஷர்கள் ஒருமனப்பட்டு கூடி வந்த நாள் எது??
பெந்தெகோஸ்தே. அப் 2:1
3265: சீஷர்கள் ஒவ்வோருவர் மேலும் வந்து அமர்ந்தது எது??
அக்கினிமயமான நாவுகள். அப் 2:3
3266: எந்த நாள் வருமுன் சூரியன் இருளாகவும் சந்திரன் இரத்தமாகவும் மாறும்??
கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள். அப் 2:20
3267: யார் இரட்சிக்கப்படுவான் ??
கர்த்தருடைய நாமத்தை தொழுதுகொள்ளுகிறவன். அப் 2:21
3268: ஒன்பதாம் மணிநேரம் எதைக் குறிக்கின்றது??
ஜெபநேரம். அப் 3:1
3269:அலங்கார வாசலில் பிச்சைக்கேட்டுக் கொண்டிருந்தவன் யார்??
சப்பாணி. அப் 3:2
3270: பேதுருவால் அற்புதம் பெற்று தேவனைத் துதித்தவன் யார்??
சப்பாணி. அப் 3:8
3271: கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று யாரால் முன்னறிவிக்கப்பட்டது??
தீர்க்கதரிசிகள். அப் 3:19
3272: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப்பண்ணுவார் என்று கூறியவர் யார்??
மோசே. அப் 3:22
3273: யாருடைய சந்ததியினால் பூமியிலுள்ள வம்சங்கள் ஆசீர்வதிக்கப்படும்??
ஆபிரகாம். அப் 3:25
3274: இயேசுவாலேயன்றி வேறொருவராலும் எது இல்லை??
இரட்சிப்பு. அப் 4:11
3275: சீஷர்கள் கூடியிருந்த இடம் எதினால் அசைந்தது ??
ஜெபம். அப் 4:26
3276: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து பலமாய்ச் சாட்சி கொடுத்தவர்கள் யார்??
அப்போஸ்தலர். அப் 4:33
3277: யோசேயின் மறுபெயர் என்ன??
பர்னபா. அப் 4:36
3278:தன் காணியாட்சியின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்தவன் யார்??
அனனியா. அப் 5:2
3279: தேவனிடத்தில் பொய் சொன்னவன் யார்??
அனனியா. அப் 5:4
3280: கர்த்தருடைய ஆவியை சோதிக்கிறதற்கு ஒருமனப்பட்டவள் யார்??
சப்பீராள். அப் 5:9
3281: இஸ்ரவேலுக்கு எவைகளை அருளும் படியாக தேவன் இயேசுவை உயர்த்தினார்??
மனம்திரும்புதல், பாவமன்னிப்பு. அப் 5:31
3282: தேவன் தமக்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு எதைத் தருகிறார்??
பரிசுத்த ஆவி. அப் 5:32
3283: சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரி யார்??
கமாலியேல். அப் 5:34
3284: தன்னை பெரியவனாகப் பாராட்டியவன் யார்??
தெயுதாஸ். அப் 5:36
3285: தெயுதாசைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்??
400. அப் 5:36
3286: ஆலோசனைச் சங்கத்தார் யாருடைய யோசனைக்கு உடன்பட்டார்கள்??
கமாலியேல். அப் 5:40
3287: எபிரேயருக்கு விரோதமாக முறுமுறுத்தவர்கள் யார்??
கிரேக்கர். அப் 6:1
3288: பந்திவிசாரணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்??
ஏழு. அப் 6:3
3289: விருத்தியடைந்தது எது??
தேவவசனம். அப் 6:7
3290: பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தவன் யார்??
ஸ்தேவான். அப் 6:8
3291: ஸ்தேவான் எவைகளினால் நிறைந்திருந்தான்??
விசுவாசம், வல்லமை. அப் 6:8
3292: ஆபிரகாம் எவ்வூரில் இருக்கும் போது தேவன் அவனுக்கு தரிசனமானார்??
மெசொப்பொத்தாமியா. அப் 7:2
3293: ஆபிரகாமின் சந்ததியார் எத்தனை வருஷம் துன்பப்படுவார்கள் என்று தேவன் கூறியிருந்தார்??
400 வருஷம். அப் 7:6
3294: கோத்திரப்பிதாக்கள் யாரை விற்றுப்போட்டார்கள்??
யோசேப்பு. அப் 7:9
3295: கோத்திரப்பிதாக்கள் எதினிமித்தம் யோசேப்பை விற்று போட்டார்கள்??
பொறாமை. அப் 7:9
3296: மோசே எகிப்திலிருந்து எங்கே ஓடிப் போனான்??
மீதியான் தேசம். அப் 7:29
3297: இஸ்ரவேலர் சுமந்த நட்சத்திர சொருபத்தின் பெயர் என்ன??
ரெம்பான். அப் 7:43
3298: தேவனிடத்தில் தயவு பெற்ற மனிதன் யார்??
தாவீது. அப் 7:45-46
3299: தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசுவைக் கண்டவன் யார்??
ஸ்தேவான். அப் 7:55
3300: சவுல் எதைப் பாழாக்கிக் கொண்டிருந்தான்??
சபையை. அப் 8:3
3301: சமாரியாவிற்கு சென்று பிரசங்கித்தவன் யார்??
பிலிப்பு. அப் 8 5
3302: சமாரியாவில் இருந்த மாயவித்தைக்காரன் யார்??
சீமோன். அப் 8:9
3303: சமாரியா ஜனங்களை பிரமிக்கப்பண்ணிக் கொண்டிருந்தவன் யார்??
சீமோன். அப் 8:9
3304: சமாரியரிடத்திற்கு வந்த அப்போஸ்தலர் யார்??
பேதுரு, யோவான். அப் 8:14
3305: உன் பணம் உன்னோடே கூட நாசமாய்ப்போகக்கடவது என்று சீமோனிடம் கூறினவன் யார்??
பேதுரு. அப் 8:20
3306:கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டவன் யார்??
சீமோன். அப் 8:23
3307: கர்த்தருடைய தூதன் பிலிப்புவை எப்பட்டணம் போகக் கூறினார்??
காசா. அப் 8:26
3308: எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயின் பெயர் என்ன??
கந்தாகே. அப் 8:27
3309: நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்கு தடையென்ன கேட்டவன் யார்??
எத்தியோப்பியா மந்திரி. அப் 8:36
3310: எத்தியோப்பியா மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்தவன் யார்??
பிலிப்பு. அப் 8:38
3311: கர்த்தருடைய சீஷரை கொலை செய்ய புறப்பட்டவன் யார்??
சவுல். அப் 9:1
3312: ஆண்டவரே நீர் யார் கேட்டவன் யார்??
சவுல். அப் 9:5
3313: சவுல் எத்தனை நாள் பார்வையில்லாமல் இருந்தான்??
மூன்று நாள். அப் 9:9
3314: தமஸ்குவிலே இருந்த சீஷன் பெயர் என்ன??
அனனியா. அப் 9:10
3315: சவுல் பார்வையடைந்தவுடன் பெற்றுக் கொண்டது என்ன??
ஞானஸ்நானம். அப் 9:18
3316: கூடையில் வைத்து மதில் வழியாய் தப்பவிடப்பட்டவன் யார்??
சவுல். அப் 9:25
3317: சவுலை தன்னோடு சேர்த்துக்கொண்டவன் யார்??
பர்னபா. அப் 9:27
3318: எட்டு வருஷமாய் திமிர்வாதக்காரனாயிருந்தவன் யார்??
ஐனேயா. அப் 9:33
3319: ஐனேயாவை குணமாக்கிய அப்போஸ்தலன் யார்??
பேதுரு. அப் 9:34
3320: யோப்பா பட்டணத்தில் இருந்த சீஷியின் பெயர் என்ன??
தபீத்தாள். அப் 9:36
321: தபீத்தாளுக்கு கிரேக்கு பாஷையில் என்ன பெயர்??
தொற்காள். அப் 9:36
3322: யோப்பா பட்டணத்தில் இருந்த சீஷியின் பெயர் என்ன??
தபீத்தாள். அப் 9:36
3323: தபீத்தாளை உயிருள்ளவளாக நிறுத்தியவன் யார்??
பேதுரு. அப் 9:41
3324: இத்தாலிய பட்டாளத்தில் இருந்த நூற்றுக்கு அதிபதியின் பெயர் என்ன??
கொர்நேலியு. அப் 10:1
3325:கொர்நேலியு எந்த பட்டணத்தில் இருந்தான்??
செசரியா. அப் 10:1
3326: ஒன்பதாம் மணி நேரத்தில் தூதன் யாருக்கு தரிசனமானார்??
கொர்நேலியு. அப் 10:3
3327: ஆறாம் மணி நேரத்தில் ஜெபம் பண்ணச் சென்றவன் யார்??
பேதுரு. அப் 10:9
3328:பசியாயிருந்த வேளையில் ஞானதிருஷ்டி அடைந்தவன் யார்??
பேதுரு. அப் 10:10
3329: தன் சிநேகிதர் மற்றும் உறவின்முறையாருடன் பேதுருவுக்காக காத்திருந்தவன் யார்??
கொர்நேலியு. அப் 10:24
3330: இயேசுவை விசுவாசிக்கிறவன் அவருடைய நாமத்தினால் பெறுவது என்ன??
பாவமன்னிப்பு. அப் 10:43
3331: பேதுருவோடு கூட செசரியாவுக்குச் சென்றவர்கள் எத்தனை பேர்??
ஆறு. அப் 11:12
3332: எருசலேமின் சபையார் யாரை அந்தியோகியாவுக்கு அனுப்பினார்கள்??
பர்னபா. அப் 11: 22
3333: நல்லவனும் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனும் யார்??
பர்னபா. அப் 11:24
3334: யாருடைய நாட்களில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது??
கிலாவுதியு ராயன். அப் 11:28
3335: ஏரோது ராஜாவால் கொல்லப்பட்டவன் யார்??
யாக்கோபு. அப் 12:2
3336: சபையார் யாருக்காக ஊக்கமாக ஜெபம் பண்ணினார்கள்??
பேதுரு. அப் 12:5
3337: சிறையிலிருந்து பேதுரு யார் வீட்டிற்கு வந்தார்??
மரியாள். அப் 12:12
3338: பேதுரு வாசலுக்கு முன் நிற்கிறார் என்று கூறியவள் யார்??
ரோதை. அப் 12:13
3339:நீ பிதற்றுகிறாய் என்று யாரிடம் கூறப்பட்டது??
ரோதை. அப் 12:15
3340: தீரியர் பேரிலும் சீதோனியர் பேரிலும் கோபமாயிருந்தவன் யார்??
ஏரோது. அப் 12:20
3341: தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதவன் யார்??
ஏரோது. அப் 12:23
3342: புழுபுழுத்து இறந்தவன் யார்??
ஏரோது. அப் 12:23
3343: எவர்களை ஊழியத்துக்காக பிரித்து விடும்படி ஆவியானவர் கூறினார்??
பர்னபா, சவுல். அப் 13:2
3344: மாயவித்தைக்காரனும் கள்ளத்தீர்க்கதரிசியுமானவன் யார்??
பர்யேசு. அப் 13:6
3345: பர்யேசு எந்த பட்டணத்தில் இருந்தான்??
பாப்போ பட்டணம். அப் 13:6
3346: பர்னபா மற்றும் சவுலிடம் வசனம் கேட்க ஆசையாயிருந்தவன் யார்??
செர்கியுபவுல். அப் 13:7
3347: செர்கியுபவுலை விசுவாசத்தினின்று திரும்பும் படி வகை தேடியவன் யார்??
எலிமா. அப் 13:8
3348: எல்லாக் கபடமும் பொல்லாங்கும் நிறைந்தவன் யார்??
எலிமா. அப் 13:10
3349: சில காலம் சூரியனைக் காணாமல் குருடனாயிருப்பவன் யார்??
எலிமா. அப் 13:11
3350: கர்த்தருடைய உபதேசத்தை குறித்து அதிசயப்பட்டு விசுவாசித்தவன் யார்??
செர்கியுபவுல். அப் 13:12
3351: இஸ்ரவேலருக்காக கானானில் எத்தனை ஜாதிகள் அழிக்கப்பட்டன??
7. அப் 13:19
3352: தேவனின் இருதயத்திற்கு ஏற்றவனாகக் காணப்பட்டவன் யார்??
தாவீது. அப் 13:22
3353: எதற்கு நியமிக்கப்பட்டவர்கள் தேவவசனத்தை விசுவாசித்தார்கள்??
நித்திய ஜீவன். அப் 13:48
3354: தங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போட்டவர்கள் யார்??
பவுல், பர்னபா. அப் 13:51
3355: இக்கோனியா பட்டணத்திற்கு சென்ற அப்போஸ்தலர் யார்??
பவுல், பர்னபா. அப் 14:1
3356: எதன் வழியாக நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் என்று பவுலும் பர்னபாவும் பிரசங்கித்தார்கள்??
அநேக உபத்திரவங்கள். அப் 14:22
3357: கர்த்தர் எதை மறுபடியும் எடுப்பிப்பார் என்று சொல்லியிருந்தார்??
விழுந்து போன தாவீதின் கூடாரம். அப் 15:17
3358 : ஓய்வு நாள் தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்படுவது எது??
மோசேயின் ஆகமம். அப் 15:21
3359: பவுல் பர்னபா வோடு அந்தியோகியாவிற்கு சென்றவர்கள் யார்??
யூதா, சீலா. அப் 15:22
3360: யூதாவின் மறுபெயர் என்ன??
பர்சபா. அப் 15:22
3361: லீஸ்திராவிலிருந்த சீஷன் பெயர் என்ன??
தீமத்தேயு. அப் 16:1
3362: பவுல் யாருக்கு விருத்தசேதனம் பண்ணினார்??
தீமத்தேயு. அப் 16:4
3363: பவுல் போகக் கூடாதபடிக்கு ஆவியானவரால் தடைப்பண்ணப்பட்ட நாடு எது??
பித்தினியா. அப் 16:7
3364: பவுலின் தரிசனத்தில் காட்சியளித்தவன் யார்??
மக்கெதோனியன். அப் 16:9
3365: தேவனை வணங்குகிற தியத்தீரா ஊர் ஸ்திரீ யார்??
லீதியாள். அப் 16:14
3366: லீதியாள் எதை விற்கும் தொழில் செய்து வந்தாள்??
இரத்தாம்பரம். அப் 16:14
3367: பவுலிடம் தன் வீட்டில் வந்து தங்குமாறு கேட்டுக் கொண்டவள் யார்??
லீதியாள். அப் 16:15
3368: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர் சத்தமிட்டவள் யார்??
குறி சொல்லும் பெண். அப் 16:17
3369: நடுராத்திரியிலே சிறைச்சாலையில் தேவனைத் துதித்துப் பாடியவர்கள் யார்??
பவுல், சீலா. அப் 16:25
3370: தன் வீட்டாரோடு ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டவன் யார்??
சிறைச்சாலைகாரன். அப் 16:33
3371: தெசலேனிக்கியாவில் பவுல் யாருடைய வீட்டில் தங்கினான்??
யாசோன். அப் 17:15
3372: ஜாமீன் வாங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் யார்??
யாசோனும் சகோதரர்களும். அப் 17:9
3373: மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்ட பட்டணத்தார் யார்??
பெரோயா. அப் 17:10
3374: தெசலோனிக்கியாவில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாய் இருந்த பட்டணத்தார் யார்??
பெரோயா. அப் 17:11
3375: எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கரும் பவுலை எப்படி அழைத்தார்கள்??
வாயாடி. அப் 17:18
3376: அத்தேனே பட்டணத்து பலிபீடத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் என்ன??
அறியப்படாத தேவனுக்கு. அப் 17:23
3377: பவுலைப் பின்பற்றிய மார்ஸ் மேடையின் நியாதிபதி யார்??
தியொனீசியு. அப் 17:34
3378: பவுலைப் பின் பற்றிய மார்ஸ் மேடையின் ஸ்திரீ யார்??
தாமரி. அப் 17:34
3379: பவுல் அத்தேனே பட்டணத்திலிருந்து எப்பட்டணத்திற்குச் சென்றார்??
கொரிந்து. அப் 18:1
3380: ஆக்கில்லா எத்தேசத்தைச் சேர்ந்தான்??
பொந்து. அப் 18:2
3381: கொரிந்து தேசத்தில் பவுல் யாருடைய வீட்டில் தங்கினார்??
ஆக்கில்லா. அப் 18:2
3382: ஆக்கில்லாவின் மனைவியின் பெயர் என்ன??
பிரிஸ்கில்லாள். அப் 18:2
3383: ஆக்கில்லாள் பிரிஸ்கில்லாள் என்பவர்களின் தொழில் என்ன??
கூடாரம் பண்ணுதல். அப் 18: 3
3384: பவுலின் தொழில் என்ன??
கூடாரம் பண்ணுதல். அப் 18:3
3385: கொரிந்துவிலுள்ள ஜெப ஆலயத்தலைவன் யார்??
கிறிஸ்பு. அப் 18:8
3386: அகாயா நாட்டிற்கு அதிபதி யார்??
கல்லியோன். அப் 18:12
3387: கிரேக்கரால் அடிக்கப்பட்ட ஜெப ஆலயத்தலைவன் யார்??
சொஸ்தேனே. அப் 18:17
3388:வேதாகமங்களில் வல்லவனான அலெக்சந்திரியா பட்டணத்தான் யார்??
அப்பொல்லோ. அப் 18:25
3389: யோவான் எதற்கு ஏற்ற ஞானஸ்நானம் கொடுத்தான்??
மனந்திரும்புதல். அப் 19:4
3390: பவுலால் எபேசுவில் பரிசுத்த ஆவி பெற்றவர்கள் எத்தனை பேர்??
12. அப் 19:7
3391: எபேசுவில் பவுல் யாருடைய வித்தியாசாலையில் சம்பாஷித்து கொண்டு வந்தார்??
திறன்னு. அப் 19:9
3392: யாருடைய கைகளினால் தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தார்??
பவுல். அப் 19:11
3393: ஸ்கேவா என்பவன் யார்??
பிரதான ஆசாரியன். அப் 19:14
3394: ஸ்கேவாவுக்கு எத்தனை குமாரர்கள் இருந்தார்கள்??
ஏழு. அப் 19:14
3395:யார் தங்கள் புத்தகங்களை விசுவாசிகளின் முன் எரித்தார்கள்??
மாயவித்தைக்காரர். அப் 19:19
3396: மாயவித்தைக்காரர் எரித்த புத்தகங்களின் மதிப்பு என்ன??
50,000. அப் 19:19
3397: பலமாய் விருத்தி யடைந்து மேற்கொண்டது எது??
கர்த்தருடைய வசனம். அப் 19:20
3398: தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்து கொண்டிருந்தவன் யார்??
தெமேத்திரியு. அப் 19:24
3399: எபைசு தொழிலாளிகள் தங்களுக்கு யார் பெரியவன் என்று சத்தமிட்டார்கள்??
தியானாள். அப் 19:28
3400: எப்பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது??
எபேசு. அப் 19:29
3401: அரங்கசாலைக்கு இழுத்துச் செல்லப்பட்டவர்கள் யார்??
காயு, அரிஸ்தர்க்கு. அப் 19:29
3402: ஜன்னலிலிருந்து விழுந்து செத்தவன் யார்??
ஐத்திகு. அப் 20:9
3403: ஐத்திகு எங்கிருந்து விழுந்து மரித்தான்??
மூன்றாம் மெத்தை. அப் 20:9
3404: தேவன் தமது சபையை எதினால் சம்பாதித்தார்??
தம்முடைய சுயரத்தம். அப் 20:28
3405: பவுல் எப்பட்டணத்தாருக்கு மூன்று வருடங்கள் புத்தி கூறனான்??
எபேசு. அப் 20:31
3406: வாங்குகிறதைப் பார்க்கிலும் பாக்யமானது எது??
கொடுக்கிறது. அப் 20:35
3407: சீஷர்கள் செசரியா பட்டணத்தில் யாருடைய வீட்டில் தங்கினார்கள்??
பிலிப்பு. அப் 21:8
3408: பிலிப்பு என்பவன் யார்??
சுவிசேஷகன். அப் 21:8
3409: பிலிப்புவிற்கு எத்தனை குமாரத்திகள் இருந்தனர்??
நான்கு. அப் 21:9
3410: பிலிப்புவின் குமாரத்திகள் எப்படிப்பட்டவர்கள்??
தீர்க்கதரிசனம் சொல்லுகிற கன்னியாஸ்திரீகள். அப் 21:9
3411: யூதேயாவிலிருந்து பவுலிடம் வந்த தீர்க்கதரிசியின் பெயர் என்ன??
அகபு. அப் 21:10
3412: பவுல் எருசலேமுக்கு வந்த போது யாரிடத்திற்குச் சென்றார்??
யாக்கோபு. அப் 21:18
3413: பவுலுடன் தேவாலயத்தில் இருந்த எபேசியன் யார்??
துரோப்பீமு. அப் 21:29
3414: பவுல் யாரை வனாந்தரத்திற்குக் கொண்டு போனார் என்று சேனாபதி கூறினான்??
4000 கொலைபாதகரை. அப் 21:38
3415:தர்சு பட்டணம் எந்த நாட்டில் உள்ளது??
சிலிசியா. அப் 21:39
3416: கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்தவன் யார்??
பவுல். அப் 22:3
3417:வேதப்பிரமாணத்தின்படி பக்தியுள்ளவன் யார்??
அனனியா. அப் 22:12
3418: சகல யூதராலும் நல்லவனென்று சாட்சி பெற்றவன் யார்??
அனனியா. அப் 22: 12
3419: தேவனால் முன்னமே தெரிந்து கொள்ளப்பட்டவன் யார்??
பவுல். அப் 22:14
3420: உன் பாவங்கள் போகக் கழுவப்படு யார் யாரிடம் கூறியது??
அனனியா பவுலிடம். அப் 22:16
3421: பவுல் ஞானதிருஷ்டி அடைந்த இடம் எது??
எருசலேம் தேவாலயம். அப் 22:17
3422: ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது அருகே நின்றவன் யார்??
பவுல். அப் 22:30
3423:யார் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று ஜனங்கள் சத்தமிட்டார்கள்??
பவுல். அப் 22:22
3424: மிகுந்த திரவியத்தினாலே இந்த சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்று கூறியவன் யார்??
சேனாபதி. அப் 22:28
3425: பவுலின் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டவன் யார்??
அனனியா. அப் 23:2
3426: அனனியா என்பவன் யார்??
பிரதான ஆசாரியன். அப் 23:2
3427: வெள்ளை அடிக்கப்பட்ட சுவரே தேவன் உம்மை அடிப்பார் என்று கட்டளையிட்டவன் யார்??
பவுல். அப் 23:3
3428: யாரை தீதுசொல்லாயாக என்று எழுதியிருக்கிறதாக பவுல் கூறினான்??
ஜனத்தின் அதிபதியை. அப் 23:5
3429: உயிர்தெழுதல் ஆவி தேவதூதன் இல்லையென்று கூறுகிறவர்கள் யார்??
சதுசேயர். அப் 23:8
3430: உயிர்த்தெழுதல் ஆவி தேவதூதன் உண்டென்று கூறுகிறவர்கள் யார்??
பரிசேயர். அப் 23:9
3431: பவுல் பீறுண்டு போவானென்று பயந்தவன் யார்??
சேனாபதி. அப் 23:10
3432: பவுலை கொலை செய்ய கட்டுபாடு பண்ணிக்கொண்டவர்கள் எத்தனை பேர்??
40 பேருக்கு அதிகமானோர். அப் 23:13
3433 : சபதம் பண்ணியவர்களின் ஆலோசனையை சேனாபதிக்கு அறிவித்தவன் யார்??
பவுலின் சகோதரியின் மகன். அப் 23:16
3434: சேனாபதி பவுலை எந்த பட்டணத்திற்கு அனுப்பினான்??
செசரியா. அப் 23:23
3435: சேனாபதி பவுலை தேசாதிபதியாகிய யாரிடத்தில் அனுப்பினான்??
பேலிக்ஸ். அப் 23:24
3436: பவுலை தேசாதிபதியிடம் அனுப்பிய சேனாபதியின் பெயர் என்ன??
கிலவுதியு லீசியா. அப் 23:26
3437: பவுலுக்கு விரோதமாக பேலிக்ஸிடம் குற்றம் சாட்டிய நியாயசாதுரியன் யார்??
தெர்த்துல்லு. அப் 24:1
3438: கொள்ளை நோய் என்று தெர்த்துல்லுவால் சித்தரிக்கப்பட்டவன் யார்??
பவுல். அப் 24:1
3439: பவுலை காவல் பண்ணவும் கண்டிப்பில்லாமல் நடத்தவும் கூறியவன் யார்??
பேலிக்ஸ். அப் 24:23
3440: பேலிக்ஸின் மனைவியான யூத ஸ்திரீ யார்??
துருசில்லாள். அப் 24:24
3441: பவுல் எவைகளைப் பற்றி பேசும் போது பேலிக்ஸ் பயமடைந்தான்??
நீதியையும், இச்சையடக்கத்தையும், நியாயத்தீர்ப்பையும். அப் 24:25
3442: பவுலை விடுதலை பண்ணினால் பணம் தருவானென்று நினைத்தவன் யார்??
பேலிக்ஸ். அப் 24:26
3443: பவுல் காவல் பண்ணப்பட்ட இடம் எது??
செசரியா. அப் 24:4
3444: யூதருடைய சகலமுறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவன் யார்??
அகிரிப்பா. அப் 26:3
3445: கர்த்தர் பவுலோடே எந்த பாஷையில் பேசினார்??
எபிரேயு. அப் 26:14
3446: கர்த்தர் தனக்கு கொடுத்த தரிசனத்தை பவுல் எப்படி அழைத்தான்??
பரமதரிசனம். அப் :26:19
3447: பவுலே நீ பிதற்றுகிறாய் கூறியவன் யார்??
பெஸ்து. அப் 26:24
3448: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங் குறைய நீ என்னை சம்மதிக்க பண்ணுகிறாய் என்று பவுலிடம் கூறியவன் யார்??
அகிரிப்பா. அப் 26:28
3449: இத்தாலியாவுக்குப் போகும் போது பவுல் ஒப்படைக்கப்பட்ட நூற்றுக்கு அதிபதியின் பெயர் என்ன??
யூலியு. அப் 27:1
3450: யூலியு என்ற நூற்றுக்கு அதிபதி எப்பட்டாளத்தைச் சார்ந்தவன்??
அகுஸ்து. அப் 27:1
3451: பேனிக்ஸ் எந்த தீவில் இருந்தது??
கிரேத்தா. அப் 27:12
3452: கப்பலில் மோதிய கடுங்காற்றின் பெயர் என்ன??
யூரோக்கிலிதோன். அப் 27:14
3453: கப்பலில் பிரயாணம் பண்ணியவர்கள் எத்தனை நாட்களாய் சாப்பிடவில்லை??
14 . அப் 27:33
3454: பவுலுடன் கப்பலில் பயணம் செய்தவர்கள் எத்தனை பேர்??
276. அப் 27:37
3455: பவுலும் உடன் ஆட்களும் தப்பி கரைசேர்ந்த தீவின் பேர் என்ன??
மெலித்தா. அப் 28:1
3456: பவுலின் கையை கவ்விக்கொண்டது எது??
விரியன் பாம்பு. அப் 28:3
3457: மெலித்தா தீவின் முதலாளி பெயர் என்ன??
புபிலியு. அப் 28:7
3458: மழைக்காலத்திற்கு தங்கியிருந்த அலெக்சந்திரியா கப்பலில் காணப்பட்ட அடையாளம் என்ன??
மிதுனம். அப் 28:11
3459: யாருடைய நம்பிக்கைக்காக தான் சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதாக பவுல் கூறினார்??
இஸ்ரவேல். அப் 28:20
3460: பவுல் எந்த தீர்க்கதரிசியின் வாக்கியங்களை யூதரில் பிரதானமானவர்களுக்கு எடுத்துக் கூறினார்??
ஏசாயா. அப் 28:27
3461: தேவனுடைய சுவிசேஷத்திற்காய்ப் பிரித்தெடுக்கப்பட்டவன் யார்??
பவுல். ரோமர் 1:1
3462: பவுல் எதற்காக அழைக்கப்பட்டார்??
அப்போஸ்தலனாகும்படி. ரோமர் 1:1
3463:தேவன் எவர்கள் மூலமாய் இயேசுவை வாக்குதத்தம் பண்ணினார்??
தம்முடைய தீர்க்கதரிசிகள். ரோமர் 1:4
3464: தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய் எவைகளில் தேவன் இயேசுவை வாக்குதத்தம் பண்ணினார்??
பரிசுத்த வேதாகமங்கள். ரோமர் 1:4
3465: மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே தேவன் யாராயிருக்கிறார்??
தேவகுமாரன். ரோமர் 1:5
3466: பவுலுக்கு அப்போஸ்தல ஊழியத்தோடு கூட அருளப்பட்டது எது??
கிருபை. ரோமர் 1:7
3467: விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு உண்டாவது எது??
இரட்சிப்பு. ரோமர் 1:16
3468: இரட்சிப்பு உண்டாவதற்கு தேவபெலனாயிருக்கிறது எது??
கிறிஸ்துவின் சுவிஷேசம். ரோமர் 1:16
3469: விசுவாசத்தினாலே பிழைப்பவன் யார்??
நீதிமான். ரோமர் 1:17
3470: விசுவாசத்தினால் உண்டாவது எது??
நீதி. ரோமர் 1:17
3471: சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷருக்கு உள்ளது என்ன??
அவபக்தி, அநியாயம். ரோமர் 1:8
3472: அவபக்திக்கும் அநியாயத்திற்கும் விரோதமாய் வானத்திலிருந்து வெளிப்படுவது என்ன??
தேவகோபம். ரோமர் 1:18
3473: தேவனுடையவைகளாயிருந்தும் காணப்படாதவைகளாக இருந்தவை எவை??
நித்திய வல்லமை, தேவத்துவம். ரோமர் 1:20
3474: போக்குச் சொல்ல இடமில்லாதவர்கள் யார்??
சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கி வைக்கிற மனுஷர். ரோமர் 1:20
3475: அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள எதன் ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்??
மனுஷர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள். ரோமர் 1:23
3476: சகலவித அநியாயத்தையும் செய்கிறவர்கள் எதற்கு பாத்திரராயிருக்கிறார்கள்?
மரணத்திற்கு. ரோமர் 1:32
3477: தேவன் தீர்மானித்த தீர்ப்பு எப்படிப்பட்டது??
நீதியான தீர்ப்பு. ரோமர் 1:32
3478:தேவனுடைய நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கிறது??
சத்தியத்தின்படி. ரோமர் 2:2
3479: நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறது எது??
,தேவதயவு. ரோமர் 2:4
3480: எவைகளின் ஐசுவரியத்தை அசட்டைப்பண்ணக்கூடாது??
தேவனுடைய தயவு, போறுமை, நீடியசாந்தம். ரோமர் 2:4
3481: எதற்கு ஏற்றபடி தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும்??
மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும். ரோமர் 2:5
3482: சோர்ந்து போகாமல் எவைகளை செய்ய வேண்டும்??
நற்கிரியைகள். ரோமர் 2:7
3483: அநியாயத்திற்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு வருவது எது??
உக்கிரகோபாக்கினை. ரோமர் 2:8
3484: எவன் நன்மை செய்கிறானோ அவனுக்கு உண்டாவது என்ன??
மகிமையும், கனமும், சமாதானமும். ரோமர் 2:10
3485:தேவனுக்கு முன்பாக நீதிமான்ககளல்லாதவர்கள் யார்??
நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள். ரோமர் 2:13
3486: தேவன் யாரைக்கொண்டு மனுஷரை நியாயந்தீர்ப்பார்??
இயேசு கிறிஸ்துவை. ரோமர் 2:16
3487:எதை மீறி நடந்தால் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாகும்??
நியாயப்பிரமாணம். ரோமர் 2:25
3488: புறம்பாக மாம்சத்தில் செய்யப்படுவது என்ன??
விருத்தசேதனம். ரோமர் 2:28
3489: ஆவியின்படி எங்கே விருத்தசேதனம் உண்டாக வேண்டும்??
இருதயத்தில். ரோமர் 2:29
3490: யூதரிடம் ஒப்புவிக்கப்பட்டது எது??
தேவனுடைய வாக்கியங்கள். ரோமர் 3:2
3491: எந்த மனுஷனும் எப்படிப்பட்டவன்??
பொய்யன். ரோமர் 3:4
3492: எது விசாரிக்கப்படும்போது வெற்றியடையும்??
தேவனுடைய நியாயம். ரோமர் 3:4
3493: நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன் நான் யார் ??
பவுல். ரோமர் 3:5
3494: தகாதவிதமாய் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை எப்படியிருக்கும்??
நீதியாய். ரோமர் 3:8
3495: எதைச் செய்கிறவன் இல்லை??
நன்மை. ரோமர் 3:12
3496: திறக்கப்பட்ட பிரேதக்குழி எது??
தொண்டை. ரோமர் 3:13
3497: எதின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது??
உதடுகள். ரோமர் 3:13
3498: சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருப்பது எது??
வாய். ரோமர் 3:14
3499: இரத்தஞ் சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது எது??
கால்கள். ரோமர் 3:15
3500: கண்களுக்கு முன்பாக எது இல்லை என்று எழுதியிருக்கிறது??
தெய்வ பயம். ரோமர் 3:18
3501: நியாயப்பிரமாணத்தினால் வருகிறது எது??
பாவத்தை அறிகிற அறிவு. ரோமர் 3:20
3502: இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் பலிப்பது எது??
தேவநீதி. ரோமர் 3:21
3503: இலவசமாய் அருளப்படுவது எது??
தேவனுடைய கிருபை. ரோமர் 3:24
3504: மனுஷன் எதினால் நீதிமானாக்கப்படுகிறான்??
விசுவாசம். ரோமர் 3:28
3505: ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் என்று சொல்லுவது எது??
வேதவாக்கியம். ரோமர் 4:3
3506: கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி எப்படி எண்ணப்படுவதில்லை?
கிருபை. ரோமர் 4:4
3507: யாரிடத்தில் விசுவாசம் வைக்க வேண்டும்??
பாவியை நீதிமானாக்குகிறவனிடத்தில். ரோமர் 4:5
3508: ஆபிரகாமுக்கு விசுவாசம் எப்பொழுது நீதியாக எண்ணப்பட்டது??
விருத்தசேதனமில்லாத வனாயிருந்த போது. ரோமர் 4:9-10
3509: நியாயப்பிரமாணம் எதை உண்டாக்குகிறது??
கோபாக்கினை. ரோமர் 4:15
3510: விசுவாசத்தினாலே வருகிறது எது??
சுதந்தரம். ரோமர் 4:16
3511: அநேக ஜாதிகளுக்கு தகப்பன் யார்??
ஆபிரகாம். ரோமர் 4:17
3512: ஆபிரகாம் எதிலே பலவீனமாயிருக்கவில்லை??
விசுவாசம். ரோமர் 4:19
3513: ஆபிரகாம் எதைக் குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படவில்லை??
தேவனுடைய வாக்குதத்தம். ரோமர் 4:20
3514: விசுவாசத்தில் வல்லவனானவன் யார்??
ஆபிரகாம். ரோமர் 4:21
3515: உபத்திரவம் எதை உண்டாக்குகிறது??
பொறுமை. ரோமர் 5:3
3516: நமக்கு அருளப்பட்டிருக்கிற ஆவி எது??
பரிசுத்த ஆவி. ரோமர் 5:5
3517: பரிசுத்த ஆவியினாலே நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருப்பது எது??
தேவ அன்பு. ரோமர் 5:5
3518: கிறிஸ்து யாருக்காக மரித்தார்??
அக்கிரமக்காரருக்காக. ரோமர் 5:6
3519: நாம் எப்படிப்பட்டவர்களாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்தார்??
பாவிகளாயிருக்கையில். ரோமர் 5:8
3520:ஒரே மனுஷனாலே உலகத்தில் பிரவேசித்தது என்ன??
பாவம். ரோமர் 5:12
3521: எல்லா மனுஷரும் எதைச் செய்தனர்??
பாவம். ரோமர் 5:12
3522 : நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் உலகிலிருந்தது எது??
பாவம். ரோமர் 5:13
3523: பாவஞ்செய்யாதவர்களையும் ஆட்கொண்டது எது??
மரணம். ரோமர் 5:14
3524: யாருடைய மீறுதலுக்கொப்பாய் பாவஞ்செய்யாதவர்களையும் மரணம் ஆட்கொண்டது??
ஆதாம். ரோமர் 5:14
3525: பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன் யார் ??
ஆதாம். ரோமர் 5:14
3526: நீதி விளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது எது??
கிருபை வரம். ரோமர் 5:16
3527: மீறுதல் பெருகும் படிக்கு வந்தது எது??
நியாயப்பிரமாணம். ரோமர் 5:20
3528: இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்குள்ளாக எதைப் பெற்றிருக்கிறோம்??
ஞானஸ்நானம். ரோமர் 6:3
3529: நாம் கிறிஸ்துவுடனே கூட எதினாலே அடக்கம் பண்ணப்பட்டோம்??
ஞானஸ்நானத்தினாலே. ரோமர் 6:4
3530: நாம் இனி எதற்கு ஊழியஞ்செய்யக்கூடாது??
பாவத்துக்கு. ரோமர் 6:6
3531: பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருப்பவன் யார்??
மரித்தவன். ரோமர் 6:7
3532: கிறிஸ்து எதற்கென்று ஒரே தரம் மரித்தார்??
பாவத்திற்கென்று. ரோமர் 6:10
3533: சாவுக்கேதுவான சரீரங்களில் எது ஆளக்கூடாது??
பாவம். ரோமர் 6:12
3534: நாம் எதற்கு கீழ்ப்பட்டவர்கள் அல்ல??
நியாயப்பிரமாணம். ரோமர் 6:14
3535: நாம் எதற்கு கீழ்ப்பட்டவர்கள்??
கிருபை. ரோமர் 6:14
3536: மரணத்துக்கேதுவானது எது??
பாவம். ரோமர் 6:16
3537: நீதிக்கேதுவானது எது ??
கீழ்ப்படிதல். ரோமர் 6:16
3538: எதை நடப்பிக்கும்படி நம் அவயவங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும்??
பரிசுத்தமானதை. ரோமர் 6:19
3539: வெட்கமாக தோன்றுகிற காரியங்களின் முடிவு என்ன??
மரணம். ரோமர் 6:21
3540: தேவனுக்கு அடிமைகளானதால் கிடைக்கும் பலன் என்ன??
பரிசுத்தமாகுதல். ரோமர் 6:22
3541: பரிசுத்தமாகுதலின் முடிவு என்ன??
நித்திய ஜீவன். ரோமர் 6:23
3542: பாவத்தின் சம்பளம் எது ??
மரணம். ரோமர் 6:23
3543: தேவனுடைய கிருபை வரம் எது??
நித்திய ஜீவன். ரோமர் 6:23
3544: ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் அவனை ஆளுகிறது எது??
நியாயப்பிரமாணம். ரோமர் 7:1
3545: இச்சை பாவம் என்று சொல்லித்தருகிறது எது??
நியாயப்பிரமாணம். ரோமர் 7:7
3546: நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் எது செத்ததாயிருக்கும்??
பாவம். ரோமர் 7:8
3547: கற்பனை வந்த போது உயிர் கொண்டது எது??
பாவம். ரோமர் 7:9
3548: பவுல் தன்னை வஞ்சித்து கொன்றது எது என கூறினார்??
பாவம். ரோமர் 7:11
3459: நியாயப்பிரமாணம் எப்படிப்பட்டது??
பரிசுத்தமுள்ளது. ரோமர் 7:12
3550: நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை நான் யார்??
பவுல். ரோமர் 7:15
3551: நான் விரும்புகிறதைச் செய்யாமல் வெறுக்கிறதையேச் செய்கிறேன் என்று கூறியவர் யார்??
பவுல். ரோமர் 7:15
3552: எது தன்னிடத்திலில்லை என்று பவுல் கூறுகிறார்??
நன்மை செய்வது. ரோமர் 7:18
3553: எதின் படி நடவாதவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை??
மாம்சத்தின் படி. ரோமர் 8:1
3554: எது செய்யக்கூடாததை தேவன் செய்தார்??
நியாயப்பிரமாணம். ரோமர் 8:3
3555: தேவன் தம்முடைய குமாரனை எதற்காக அனுப்பினார்??
பாவத்தை போக்கும் பலியாக. ரோமர் 8:3
3556: ஆவியின் சிந்தை எப்படிப்பட்டது??
ஜீவன், சமாதானம். ரோமர் 8:6
3557: தேவனுக்கு விரோதமான பகை எது ??
மாம்சசிந்தை. ரோமர் 8:7
3558: எது நம்மில் வாசமாயிருந்தால் மாம்சத்துக்குட்பட்டவர்களாய் இருப்பதில்லை??
தேவனுடைய ஆவி. ரோமர் 8:9
3559: ஆவிக்குட்பட்டவர்கள் யார்??
தேவனுடைய ஆவி வாசமாயிருப்பவர்கள். ரோமர் 8:9
3560: பாவத்தினிமித்தம் மரித்ததாயிருக்க வேண்டியது எது??
சரீரம். ரோமர் 8:10
3561: எதின்படி பிழைத்தால் சாவோம்??
மாம்சத்தின்படி. ரோமர் 8:13
3562:தேவனுடைய புத்திரராயிருக்கிறவர்கள் யார்??
தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள். ரோமர் 8:14
3563: நாம் எந்த ஆவியைப் பெற்றிருக்கிறோம் ??
புத்திரசுவிகாரத்தின் ஆவி. ரோமர் 8:15
3564: மிகுந்த ஆவலோடேக் காத்து கொண்டிருப்பது எது??
சிருஷ்டி. ரோமர் 8:19
3565: புத்திர சுவிகாரம் என்பது என்ன??
சரீரமீட்பு. ரோமர் 8:23
3566:நம்முடைய பெலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறவர் யார்??
ஆவியானவர். ரோமர் 8:26
3567: அநேக சகோதரருக்குள்ளே முதற்பேரானவர் யார்??
தேவனுடைய குமாரன். ரோமர் 8:29
3568: தேவன் அழைத்தவர்களை எப்படி மாற்றியிருக்கிறார்??
நீதிமான்களாக. ரோமர் 8:30
3569: தேவன் தெரிந்து கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்??
நீதிமான்கள். ரோமர் 8:33
3570: எது அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது??
தேவ வசனம். ரோமர் 9:6
3571: தேவனுடைய பிள்ளைகளெனப்படுபவர்கள் யார்??
வாக்குதத்தின்படி பிள்ளைகளானவர்கள். ரோமர் 9:8
3572: தேவனுடைய வல்லமையை காண்பிக்கும்படி நிலைநிறுத்தப்பட்டவன் யார்??
பார்வோன். ரோமர் 9:17
3573: அழிவுக்கு எத்தனமாக்கப்பட்டவைகள் எவை??
கோபாக்கினைப் பாத்திரங்கள். ரோமர் 9:23
3574: கர்த்தர் பூமியிலே சீக்கிரமாய் காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்று கூறிய தீர்க்கதரிசி யார்??
ஏசாயா. ரோமர் 9:28
3575: மீதியாக ஒரு சந்ததியை வைக்காதே போனால் இஸ்ரவேலர் யாரைப் போலாகியிருப்பார்கள்??
சோதோம். ரோமர் 9:29
3576: நீதியைத் தேடாத யார் நீதியை அடைந்தார்கள்??
புறஜாதியார். ரோமர் 9:30
3577: இடறுதற்கான கல் எங்கே வைக்கப்பட்டுள்ளது??
சீயோனில். ரோமர் 9:33
3578: யார் வெட்கப்படுவதில்லை??
தேவனிடத்தில் விசுவாசமாயிருப்பவன். ரோமர் 9:33
3579: நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறவர் யார்??.
கிறிஸ்து. ரோமர் 10:4
3580: விசுவாசிக்கிற எவனுக்கும் உண்டாவது எது??
நீதி. ரோமர் 10:4
3581: நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக் குறித்து கூறியவர் யார்??
மோசே. ரோமர் 10:5
3582: விசுவாசம் எங்கே உண்டாக வேண்டும்??
இருதயத்தில். ரோமர் 10:9
3583: யார் இல்லாவிட்டால் கர்த்தரைக் குறித்து கேள்விப்படமாட்டார்கள்??
பிரசங்கிக்கிறவன். ரோமர் 10:4
3584: எதைக் கூறி சுவிஷேசம் அறிவிக்கிறவர்குளுடைய பாதங்கள் அழகானவைகள்??
சமாதானம். ரோமர் 10:15
3585: எதற்கு எல்லோரும் கீழ்ப்படியவில்லை??
சுவிசேஷத்துக்கு. ரோமர் 10:16
3586: விசுவாசம் எதினாலே வரும்??
கேள்வியினால். ரோமர் 10:17
3587: கேள்வி எதினாலே வரும்??
தேவனுடைய வசனம். ரோமர் 10:17
3588: தேவனுடைய வசனத்தின் சத்தம் எங்கே செல்லுகிறது??
பூமியெங்கும். ரோமர் 10:18
3589: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன் என்று தீர்க்கதரிசனம் கூறியவன் யார்??
ஏசாயா. ரோமர் 10:20
3590: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களும் யார்??
இஸ்ரவேலர். ரோமர் 10:21
3591: பவுல் யாருடைய சந்ததியில் பிறந்தவர்??
ஆபிரகாம். ரோமர் 11:1
3592: பவுல் யாருடைய கோத்திரத்தில் பிறந்தவர்??
பென்யமீன். ரோமர் 11:!
3593: நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன் என்றவன் யார்??
எலியா. ரோமர் 11:3
3594: எலியா விண்ணப்பம் பண்ணியபோது அவனுக்கு உண்டானது என்ன??
தேவ உத்தரவு. ரோமர் 11:4
3595: பாகாலுக்கு முழங்காற்படியிடாத எத்தனை பேர் மீதியாக வைக்கப்பட்டனர்??
7000 பேர். ரோமர் 11:4
3596: இஸ்ரவேலருக்கு எப்படிப்பட்ட ஆவியை தேவன் கொடுத்தார்??
கனநித்திரையின் ஆவி. ரோமர் 11:8
3597: இஸ்ரவேலருடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று சொல்லியிருக்கிறவன் யார்??
தாவீது. ரோமர் 11:10
3598: ஒலிவமரத்தின் கிளைகள் இருந்த இடத்தில் ஒட்ட வைக்கப்பட்டது எது??
காட்டொலிவ மரம். ரோமர் 11:17
3599: ஒலிவமரம் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்??
இஸ்ரவேலர். ரோமர் 11:13-18
3600:புறஜாதியாரிடம் தேவன் எதைக் காண்பித்தார்??
தயவை. ரோமர் 11:22
3601: தேவனுடைய வழிகள் எப்படிப்பட்டவைகள்??
ஆராயப்படாதவைகள். ரோமர் 11:33
3602: நாம் நம் சரீரங்களை எப்படிப்பட்ட ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்??
பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான. ரோமர் 12:1
3602: நம் சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுப்பது என்பது எது??
புத்தியுள்ள ஆராதனை. ரோமர் 12:1
3603: புதிதாக வேண்டியது எது??
மனம். ரோமர் 12:2
3604: அவனவனுக்கு தேவன் பகிர்ந்தது எது??
விசுவாச அளவு. ரோமர் 12:3
3605: பகிர்ந்து கொடுக்கிறவன் எப்படிக் கொடுக்கக்கடவன்??
வஞ்சனையில்லாமல். ரோமர் 12:8
3606: இரக்கஞ்செய்கிறவன் எப்படி செய்யக்கடவன்??
உற்சாகத்துடனே. ரோமர் 12:8
3607: மாயமற்றதாயிருக்க வேண்டியது எது??
அன்பு. ரோமர் 12:9
3608: எதிலே அனலாயிருக்க வேண்டும்??
ஆவியிலே. ரோமர் 12:11
3609: எதிலே சந்தோஷமாயிருக்க வேண்டும்??
நம்பிக்கையில். ரோமர் 12:12
3610: எதிலே உறுதியாய் தரித்திருக்க வேண்டும்??
ஜெபத்திலே. ரோமர் 12:12
3611: எவர்களுடைய குறைவிலே அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும்??
பரிசுத்தவான்கள். ரோமர் 12:13
3612: நம்மை யார் என்று எண்ணக்கூடாது??
புத்திமான்கள். ரோமர் 12:16
3613: எல்லா மனுஷரோடும் எப்படி இருக்க வேண்டும்??
சமாதானமாய். ரோமர் 12:18
3614: எதற்கு இடம் கொடுக்க கூடாது??
கோபாக்கினைக்கு. ரோமர் 12:20
3615: தீமையை எதினால் வெல்ல வேண்டும்??
நன்மையினால். ரோமர் 12:21
3616: நன்மை செய்வதால் உண்டாவது என்ன??
புகழ்ச்சி. ரோமர் 13:3
3617: ஒருவரிடத்திலொருவர் எந்த கடனேயல்லாமல் மற்றொன்றிலும் கடன் படக் கூடாது??
அன்புகூருகிற கடன். ரோமர் 13:8
3618: பிறனுக்கு பொல்லாங்குச் செய்யாதது எது??
அன்பு. ரோமர் 13:10
3619: எதை விட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்று??
நித்திரை. ரோமர் 13:11
3620: எதின் கிரியைகளை தள்ளி விட வேண்டும்??
அந்தகாரத்தின். ரோமர் 13:12
3621: நாட்களை விசேஷித்துக் கொள்ளுகிறவன் யாருக்கென்று விசேஷித்துக் கொள்கிறான்??
கர்த்தருக்கென்று. ரோமர் 14:6
3622:சகோதரனை யாரென்று தீர்க்கக்கூடாது??
குற்றவாளி. ரோமர் 14:10
3623: ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாக எவைகளைப் போடக்கூடாது??
தடுக்கல்லையும் இடறலையும். ரோமர் 14:13
3624: தேவனுடைய ராஜ்யம் எப்படிப்பட்டதல்ல??
புசிப்பும் குடிப்பும். ரோமர் 14:17
3625: எதற்கு அடுத்தவைகளை நாடக்கடவோம் ??
சமாதானம். ரோமர் 14:19
3626: விசுவாசத்தினால் வராத யாவும் எது??
பாவம். ரோமர் 14:23
3627: பொறுமையும் ஆறுதலும் எதினால் உண்டாகிறது??
தேவவசனம். ரோமர் 15:4
3628: புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவர் யார்??
ஈசாயின் வேர். ரோமர் 15:12
3629: பரிசுத்த ஆவியின் பெலத்தினால் பெருகுவது எது??
நம்பிக்கை. ரோமர் 15:13
3630: பவுல் எது துவக்கி எதுவரைக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்??
எருசலேம் துவக்கி இல்லிரிக்கம் வரை. ரோமர் 15:19
3631: கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரி யார்??
பெபேயாள். ரோமர் 16:1
3632: பவுலின் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள் யார்??
பிரிஸ்கில்லாள், ஆக்கில்லா. ரோமர் 16:3
3633: அகாயாவில் கிறிஸ்துவுக்கு முதற்பலன் யார்??
எப்பனெத். ரோமர் 16:5
3634: அப்போஸ்தலருக்குள் பெயர் பெற்றவர்கள் யாரென்று பவுல் கூறினார்??
அன்றோனீக், யூனியா. ரோமர் 16:7
3635: கர்த்தருக்குள் பவுலுக்கு மிகவும் பிரியமானவன் யார்??
அம்பிலியா. ரோமர் 16:8
3636: கிறிஸ்துவுக்குள் உத்தமன் யார் என்று பவுல் கூறினார்??
அப்பெல்லே. ரோமர் 16:10
3637: கர்த்தருக்குள் பிரயாசப்படுகிறவர்கள் என்று பவுல் யாரைக் குறிப்பிட்டார்??
திரிபேனாள், திரிபோசாள். ரோமர் 16:12
3638: கர்த்தருக்குள் தெரிந்து கொள்ளப்பட்ட யாரை வாழ்த்த பவுல் கூறினார்??
ரூபை. ரோமர் 16:13
3639: பவுலையும் சபையனைத்தையும் உபசரித்து வந்தவன் யார்??
காயு. ரோமர் 16:23
3640: பட்டணத்து உக்கிராணக்காரன் என்று பவுல் யாரைக் கூறுகிறார்??
எரஸ்து. ரோமர் 16:23
3641: பவுல் கொரிந்தியருக்கு நிருபம் எழுதும் போது உடன் இருந்தவன் யார்??
சொஸ்தெனே. 1 கொரி 1:1
3642: பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்ட தேவனுடைய சபை எது??
கொரிந்து. 1 கொரி 1:2
3643: கொரிந்து சபை எவைகளில் சம்பூர்ணமுள்ளவர்களாக்கப்பட்டவர்கள் ??
உபதேசம், அறிவு. 1 கொரி 1:5
3644:கொரிந்து சகோதரருக்குள் உண்டாயிருந்தது எது??
வாக்குவாதங்கள். 1: கொரி 1:11
3645: கொரிந்து சகோதரரின் வாக்குவாதங்களைப்பற்றி பவுலுக்கு அறிவித்தவர்கள் யார்??
குலோவேயாளின் வீட்டார். 1: கொரி 1:11
3646: கிறிஸ்புவுக்கும் காயுவுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தவர் யார்??
பவுல். 1 கொரி 1:15
3647: பவுல் யாருடைய வீட்டாருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்??
ஸ்தேவான். 1 கொரி 1:16
3648: சிலுவையைப்பற்றிய உபதேசம் யாருக்கு தேவபெலனாயிருக்கிறது??
இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு. 1 கொரி 1:18
3649: தேவன் எதை பையித்தியமாக்கினார்??
இவ்வுலகத்தின் ஞானம். 1 கொரி 1:20
3650: அடையாளத்தை தேடுகிறவர்கள் யார்??
யூதர். 1 கொரி 1:22
3651: மேன்மைப்பாராட்டுகிறவன் யாரைக் குறித்து மேன்மை பாராட்டக்கடவன்??
கர்த்தரை. 1 கொரி 1:30
3652: மனுஷருடைய ஞானத்தில் நிற்கக்கூடாதது எது??
விசுவாசம். 1 கொரி 2:4
3653: தேவன் தம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினது எது??
தேவஞானம். 1 கொரி 2:7
3654: தேவஞானம் எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது??
உலகத்தோற்றத்திற்கு முன்னே. 1 கொரி 2:7
3655: மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியம் எது??
தேவஞானம். 1:கொரி 2:7
3656: தேவன் யாருக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை??
தம்மில் அன்புகூறுகிறவர்களுக்கு. 1 கொரி 2:9
3657: தேவனுடைய ஆழங்களை ஆராய்ந்திருக்கிறவர் யார்??
ஆவியானவர். 1: கொரி 2:20
3658: தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளாதவன் யார்??
ஜென்மசுபாவமான மனுஷன். 1 கொரி 2:14
3659: மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படாதவன் யார்??
ஆவிக்குரியவன். 1 கொரி 2:15
3660: பவுல் தங்களுக்குள் உண்டாயிருக்கிறதாகக் கூறியது எது??
கிறிஸ்துவின் சிந்தை. 1 கொரி 2:16
3661: கொரிந்திய சகோதரருக்குள் இருந்தது என்ன??
பொறாமை, வாக்குவாதம். பேதகங்கள். 1 கொரி 3:3
3662: பவுல் யாரைப்போல அஸ்திபாரம் போட்டார்??
புத்தியுள்ள சிற்பாசாரி. 1 கொரி 3:10
3663: தேவன் ஞானிகளை எதினாலே பிடிக்கிறார்??
அவர்களின் தந்திரத்தினாலே. 1 கொரி 3:19
3664: என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே கூறியவர் யார்??
பவுல். 1கொரி 4:4
3665: பவுல் யாரை திருஷ்டாந்தமாக வைத்து கொரிந்து சகோதரருக்கு கடிதம் எழுதினார்??
அப்பொல்லோ. 1கொரி 4:6
3666: தங்கள் கைகளினால் வேலை செய்து பாடுபட்டவர்கள் யார்??
பவுல், அப்பல்லோ. 1 கொரி 4:12
3667: பவுலுக்கு பிரியமான குமாரன் யார்??
தீமோத்தேயு. 1 கொரி 4:17
3668: தேவனுடைய ராஜ்யம் எதினாலே உண்டாயிருக்கிறது??
பெலத்தினாலே. 1கொரி 4:20
3669: நம்முடைய பஸ்கா யார்??
கிறிஸ்து. 1 கொரி 5:7
3670: புளித்த மா என்று பவுல் எதைக் குறிப்பிட்டார்??
துர்குணம், பொல்லாப்பு. 1 கொரி 5:8
3671:யாரோடே கலந்திருக்கக் கூடாது??
விபச்சாரக்காரர். 1கொரி 5:9
3672: உலகத்தை நியாயந்தீர்ப்பவர்கள் யார்??
பரிசுத்தவான்கள். 1 கொரி 6:2
3673: பரிசுத்தவான்கள் எவர்களையும் நியாயந்தீர்ப்பார்கள்??
தேவதூதர்கள். 1 கொரி 6:3
3674: எவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை??
அநியாயக்காரர். 1 கொரி 6:9
3675: கர்த்தருடனே ஒரே ஆவியாயிருக்கிறவன் யார்??
கர்த்தரோடிசைந்திருக்கிறவன். 1 கொரி 6:17
3676: பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறது எது??
சரீரம். 1 கொரி 6:19
3677: நாம் எதற்காக கொள்ளப்பட்டவர்கள்??
கிரயத்துக்கு. 1 கொரி 6:20
3678: எதற்கு தடையிராதபடி புருஷனும் மனைவியும் சிலகாலம் பிரிந்திருக்க சம்மதிக்கலாம்??
உபவாசத்திற்கும், ஜெபத்திற்கும். 1 கொரி 7:5
3679: எவர்கள் தன்னை போல் இருந்து விட்டால் நலம் என பவுல் கூறினார்??
விவாகமில்லாதவன், கைம்பெண். 1 கொரி 7:8
3680: வேகிறதைப் பார்க்கிலும் நல்லது எது??
விவாகம் பண்ணுகிறது. 1 கொரி 7:9
3681:தேவன் நம்மை எதற்கு அழைத்திருக்கிறார்??
சமாதானமாயிருக்கும்படிக்கு. 1 கொரி 7:15
3682: எதைக் கைக்கொள்கிறதே காரியம்??
தேவனுடைய கற்பனைகள். 1கொரி 7:19
3683: எவர்களைக் குறித்து கர்த்தரால் தனக்கு கட்டளை இல்லை என பவுல் கூறினார்??
கன்னிகைகள். 1 கொரி 7:25
3684: இனி வரும் காலம் எப்படிப்பட்டது என பவுல் கூறினார்??
குறுகினது. 1 கொரி 7:29
3685: இவ்வுலகத்தின் எது கடந்து போகிறது??
வேஷம். 1 கொரி 7:31
3686: கர்த்தருக்குரியவைகளுக்காக கவலைப்படுபவன் யார்??
விவாகமில்லாதவன். 1 கொரி 7:32
3687: உலகத்திற்குரியவைகளுக்காக கவலைப்படுபவன் யார்??
விவாகம் பண்ணினவன். 1 கொரி 7:33
3688: அறிவு எதை உண்டாக்கும்??
இறுமாப்பை. 1 கொரி 8:1
3689: பக்திவிருத்தியை உண்டாக்குவது எது??
அன்பு. 1 கொரி 8:1
3690: தேவனால் அறியப்பட்டிருக்கிறவன் யார்??
தேவனில் அன்புகூருகிறவன். 1 கொரி 8:3
3691: உலகத்திலே ஒன்றுமில்லாதது எது??
விக்கிரகம். 1 கொரி 8:4
3692: சகலமும் யார் மூலமாய் உண்டாயிருக்கிறது??
இயேசு கிறிஸ்து. 1 கொரி 8:6
3693: எதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை??
புசிப்பதினால். 1 கொரி 8:8
3694: எதை வாய்கட்டக் கூடாது??
போரடிக்கிற மாட்டை. 1 கொரி 9:9
3695: தேவாலயத்துக்குரியவைகளில் புசிக்கிறவர்கள் யார்??
ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள். 1 கொரி 9:13
3696: சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்கு எதினால் பிழைப்பு உண்டாக வேண்டும்??
சுவிசேஷத்தினால். 1 கொரி 9:14
3697: கடமையை எப்படிச் செய்தால் பலன் உண்டு??
உற்சாகமாய். 1 கொரி 9:17
3698: பவுல் ஏன் எல்லாருக்கும் எல்லாமுமானார்??
சிலரை இரட்சிக்கும்படிக்கு. 1 கொரி 9:22
3699: நாம் எதைப் பெறும்படிக்கு இச்சையடக்கமாயிருக்கிறோம்??
அழிவில்லாத கிரீடம். 1 கொரி 9:25
3700: யார் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க கடவன்??
தன்னை நிற்கிறவன் என்றெண்ணுகிறவன். 1 கொரி 10:12
3701: எதை தாங்கத்தக்கதாக தேவன் வழி உண்டாக்குகிறார்??
சோதனை. 1கொரி 10:13
3702: தேவனுக்குப் பலியிடாதவர்கள் யார்??
அஞ்ஞானிகள். 1கொரி 10 20
3703: ஒவ்வொருவனும் எதைமட்டும் தேடக்கூடாது??
சுயப்பிரயோஜனத்தை. 1 கொரி 10:24
3704: தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறவன் யார்??
புருஷனானவன். 1 கொரி 11:7
3705: புருஷனுடையமகிமையாயிருக்கிறவள் யார்??
ஸ்திரீயானவள். 1 கொரி 11:7
3706: ஸ்திரீக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருப்பது எது??
தலைமயிர். 1 கொரி 11:15
3707: இயேசு அப்பத்தை எடுத்து பண்ணியது என்ன??
ஸ்தோத்திரம். 1 கொரி 11:24
3708: அபாத்திரமாய் போஜனபானம் பண்ணியபடியால் அநேகர் அடைந்தது என்ன??
நித்திரை. 1 கொரி 11:30
3709: ஊழியங்களிலேயும் எவைகள் உண்டு??
வித்தியாசங்கள். 1 கொரி 12:5
3710: வரங்களைப் பகிர்ந்து கொடுக்கிறவர் யார்??
ஆவியானவர். 1 கொரி 12:11
3711: அவயவங்களில் அதிக அலங்காரம் பெறுவது எது??
இலட்சணமில்லாதவைகள். 1 கொரி 12:23
3712: தேவனானவர் சபையிலே முதலாவது யாரை ஏற்படுத்தினார்??
அப்போஸ்தலர். 1 கொரி 12:28
3713: நான் எவைகளை அறிந்தாலும் அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை??
சகல இரகசியங்கள், சகல அறிவு. 1 கொரி 13:2
3714: அயோக்கியமானதை செய்யாதது எது??
அன்பு. 1 கொரி 13:6
3715: சகலத்தையும் தாங்குவது எது??
அன்பு. 1 கொரி 13:7
3716: இப்பொழுது நிலைத்திருக்கும் மூன்று எவை??
விசுவாசம், நம்பிக்கை, அன்பு. 1 கொரி 13:13
3717: விசேஷமாய் எந்த வரத்தை விரும்ப வேண்டும்??
தீர்க்கதரிசன வரம். 1 கொரி 14:1
3718: ஆவியினாலே இரகசியங்களைப் பேசுகிறவன் யார்??
அந்நியபாஷையில் பேசுகிறவன். 1 கொரி 14:2
3719: மனுஷருக்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறவன் யார்??
தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன். 1 கொரி 14:3
3720: எல்லோரும் எதைப் பேசும்படி பவுல் விரும்பினார்??
அந்நிய பாஷைகள். 1 கொரி 14:5
3721: எதிலே குழந்தைகளாய் இருக்க வேண்டும்??
துர்குணத்தில். 1 கொரி 14:20
3722: இரண்டு பேர் அல்லது மூன்று பேர்மட்டில் அடங்கவேண்டியது என்ன??
அந்நியபாஷையில் பேசுகிறது. 1 கொரி 14:27
3723: ஒவ்வொருவராய் பேசவேண்டியது என்ன??
அந்நியபாஷை. 1 கொரி 14:37
3724: தேவன் எதற்குத் தேவனல்ல??
கலகம். 1 கொரி 14:33
3725: தேவன் எதற்குத் தேவனாயிருக்கிறார்??
சமாதானம். 1கொரி 14:33
3726: எவர்களுக்கு சபைகளில் பேச உத்தரவில்லை??
ஸ்திரீகளுக்கு. 1 கொரி 14:34
3727: எவைகளைப் பேசுகிறதற்கு தடைபண்ணக்கூடாது??
அந்நியபாஷைகள். 1 கொரி 14:39
3728: சகலமும் எப்படி செய்யப்படக்கடவது??
நல்லொழுக்கமாகவும், கிரமமாயும். 1 கொரி 14:40
3729: கிறிஸ்துவானவர் எதற்காக மரித்தார்??
நமது பாவங்களுக்காக. 1 கொரி 15:3
3730: பவுல் தான் எதைப் போன்றவர் என்று தன்னை அழைத்தார்??
அகாலப்பிறவி. 1 கொரி 15:8
731: பவுல் அதிகமாய் பிரயாசப்பட அவருடன் இருந்தது எது??
தேவகிருபை. 1 கொரி 15:10
3732: கிறிஸ்து எழுந்திராவிட்டால் எது வீணாயிருக்கும்??
விசுவாசம். 1 கொரி 15:17
3733: கிறிஸ்துவுடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுமாபோது உண்டாவது என்ன??
முடிவு. 1 கொரி 15:24
3734: பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு எது??
மரணம். 1 கொரி 15:26
3735: பவுல் எங்கே துஷ்டமிருகங்களுடன் போராடினார்??
எபேசுவில். 1 கொரி 15:32
3736: நல்லொழுக்கங்களை கெடுப்பது எது??
ஆகாத சம்பாஷணைகள். 1 கொரி 15:33
3737: எதைச் செய்யாமல் தெளிந்தவர்களாயிருக்க வேண்டும்??
பாவம். 1 கொரி 15:34
3738: எதற்கு ஏற்க விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்க வேண்டும்??
நீதி. 1 கொரி 15:34
3739: மகிமையிலே விசேஷித்தவிதமாய் எதுவும் இருக்கும்??
மரித்தோரின் உயிர்த்தெழுதல். 1 கொரி 15:42
3740: முந்தின மனுஷன் யார்??
ஆதாம். 1 கொரி 15:45
3741: பிந்தின ஆதாம் யார்??
உயிர்ப்பிக்கிற ஆவியானவர். 1 கொரி 15:45
3742: இரண்டாம் மனுஷன் யார்??
கர்த்தர். 1 கொரி 15:47
3743: எவைகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது??
மாம்சமும், இரத்தமும். 1 கொரி 15:50
3744: எது தொனிக்கும் போது நாம் மறுரூபமாக்கப்படுவௌம்??
கடைசி எக்காளம். 1 கொரி 15:51
3745: மரணத்தின் கூர் எது??
பாவம். 1 கொரி 15:56
3746: பாவத்தின் பெலன் எது??
நியாயப்பிரமாணம். 1 கொரி 15:56
3747: பரிசுத்தவான்களுக்காக சேர்க்கப்படுவது எது??
தர்மபணம். 1 கொரி 16:1
3748: பவுல் எந்த நாட்டை கடந்த பின்பு கொரிந்து சகோதரரிடம் வருவதாக கூறினார்??
மக்கெதோனியன். 1 கொரி 16: 5
3749: எப்பண்டிகை வரைக்கும் பவுல் எபேசுவில் இருப்பதாகக் கூறினார்??
பெந்தெகோஸ்தே. 1 கொரி16:8
3750: எபேசுவில் பவுலுக்குத் திறக்கப்பட்டிருந்தது என்ன??
பெரிதும் அநுகூலமுமான கதவு. 1 கொரி 16:9
3751: பவுலைப் போல கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறவன் யார்??
தீமத்தேயு. 1 கொரி 16:10
3752: சகோதரரோடே கொரிந்தியரிடம் வரமனதில்லாதிருந்தவன் யார்??
அப்பொல்லோ. 1 கொரி 16:12
3753: அகாயா நாட்டிலே முதற்பலனானவர்கள் யார்??
ஸ்தேவானுடைய வீட்டார். 1 கொரி 16:15
3754: எதில் நிலைத்திருங்கள் என்று பவுல் கூறினார்??
விசுவாசத்தில். 1 கொரி 16:13
3755: யாருடைய வீட்டார் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்யும் படி தங்களை ஒப்புக்கொடுத்தார்கள்??
ஸ்தேவானுடைய வீட்டார். 1 கொரி 16:15
3756: பவுலின் ஆவிக்கும் கொரிந்து சகோதரர் ஆவிக்கும் ஆறுதல் செய்தவர்கள் யார்??
ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு. 1 கொரி 16:17
3757: எந்த நாட்டிலுள்ள சபையார் கொரிந்தியரை வாழ்த்துகிறார்கள் என பவுல் கூறினார்??
ஆசியா. 1 கொரி 16:19
3758: ஒருவரையொருவர் எப்படி வாழ்த்த பவுல் கூறினார்??
பரிசுத்த முத்தத்தோடு. 1 கொரி 16:20
3759: பவுல் கொரிந்து சபையாரை எதினாலே வாழ்த்தினார்??
தம் கையெழுத்தாலே. 1 கொரி 16:21
3760: எவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் என பவுல் கூறினார்??
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அன்பு கூராதவன். 1 கொரி 16:22
3761: அகாயா நாடெங்குமுள்ள யாருக்கு பவுல் கடிதம் எழுதினார்??
எல்லா பரிசுத்தவான்களுக்கும். 2 கொரி 1:1
3762: தேவனாலே பவுலுக்கும் தீமத்தேயுவுக்கும் அருளப்பட்டது என்ன??
ஆறுதல். 2 கொரி 1:4
3763: பவுல் மற்றும் தீமத்தேயுவிடம் பெருகியது எது??
கிறிஸ்துவினுடைய பாடுகள். 2 கொரி 1:5
3764: எதற்கு ஏற்ற ஞானத்தோடே நடக்கக்கூடாது ??
மாம்சத்திற்கு. 2 கொரி 1:12
3765: பவுல் கொரிந்து வழியாய் எங்கே போக யோசனையாயிருந்தார்??
மக்கெதோனியா. 2 கொரி 1:16
3766: இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமேன் என்றும் இருக்கிறவைகள் எவை??
தேவனுடைய வாக்குதத்தங்கள். 2 கொரி 1:20
3767: தேவன் நம்முடைய இருதயங்களில் எதைக் கொடுத்திருக்கிறார்??
ஆவியென்னும் அச்சாரம். 2 கொரி 1:22
3768: யாரைக் காணாததினாலே பவுலின் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது??
தீத்து. 2 கொரி 2:13
3769: இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே எப்படிப்பட்ட வாசனையாயிருப்பதாக பவுல் கூறினார்??
ஜீவனுக்கேதுவான ஜீவவாசனை. 2 கொரி 2:16
3770: பவுலும் அவரைச் சார்ந்தவர்களும் எதைக் கலப்பாய் பேசவில்லை??
தேவவசனத்தை. 2 கொரி 2:17
3771: பவுலையும் தீமத்தேயுவையும் தேவன் எதற்கு தகுதியுள்ளவராக்கினார்??
புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி. 2 கொரி 3:6
3772: கொல்லுகிறது எது என பவுல் கூறினார்??
எழுத்து. 2 கொரி 3:6
3773: உயிர்ப்பிக்கிறது எது என பவுல் கூறினார்??
ஆவி. 2 கொரி 3:6
3774: எவைகளினால் எழுதப்பட்ட ஊழியத்தை மோசே செய்தார்??
எழுத்துக்கள். 2 கொரி 3:7
3775: மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்தவர் யார்??
மோசே. 2 கொரி 3:7
3776: மோசேயின் ஊழியத்தை பவுல் எதுவெனக்கூறினார்??
ஒழிந்து போகிற மகிமையுடைய ஊழியம். 2 கொரி 3:8
3777: மோசேயின் ஊழியம் எதைக் கொடுத்தது??
ஆக்கினைத் தீர்ப்பு. 2 கொரி 3:9
3778: பவுலின் ஊழியம் எதைக் கொடுத்தது??
நீதி. 2 கொரி 3:9
3779: ஆக்கினைத் தீர்ப்புக் கொடுக்கும் ஊழியத்தை விட மேன்மையுள்ளது எது??
நீதியைக் கொடுக்கும் ஊழியம். 2 கொரி 3:9
3780: மோசே தன் முகத்தின் மேல் போட்டு க்கொண்டது என்ன??
முக்காடு. 2 கொரி 3:13
3781: இந்நாள் வரைக்கும் இஸ்ரவேல் புத்திரரின் இருதயத்தின் மேல் இருப்பது என்ன??
முக்காடு. 2 கொரி 3:15
3782: நாமெல்லாரும் திறந்த முகமாய் எதைக் காண்கிறோம்??
கர்த்தருடைய மகிமையை. 2 கொரி 3:18
3784: பவுலும் தீமத்தேயு வும் எதைப் புரட்டவில்லை??
சத்தியத்தை. 2 கொரி 4:2
3785: எது மறைபொருளாயிருந்தால் கெட்டுப்போகிறவர்களுக்கே மறைபொருளாயிருக்கும்??
சுவிசேஷம். 2 கொரி 4:3
3786: சுவிசேஷம் யாருக்கு மறைபொருளாயிருக்கும்??
கெட்டுப்போகிறவர்களுக்கு. 2 கொரி 4:3
3787: அவிசுவாசிகளின் மனதைக் குருடாக்கினவன் யார்??
இப்பிரபஞ்சத்தின் தேவனானவன். 2 கொரி 4:4
3788:இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ளது எது??
தேவனுடைய மகிமையின் அறிவாகிய ஒளி. 2 கொரி 4:6
3789: தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாக பெருகுவது எது??
கிருபை. 2 கொரி 4:15
3790: கிருபையானது எதினாலே பெருகுகிறது??
அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே. 2 கொரி 4:15
3791: அதிசீக்கிரத்தில் நீங்கிப் போவது எது??
இலேசான நம்முடைய உபத்திரவம். 2 கொரி 4:17
3792: அநித்தியமானவைகள் என்பது எது??
காணப்படுகிறவைகள். 2 கொரி 4:18
3793: நித்தியமானவைகள் என்பது எது??
காணப்படாதவைகள். 2 கொரி4:18
3794: பூமிக்குரிய கூடாரம் எது??
நம்முடைய வீடு. 2 கொரி 5:1
3795: தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாதது எது??
நித்திய வீடு. 2 கொரி 5:1
3796: நாம் எந்த கூடாரத்தி்லே தவிக்கிறோம் ??
பூமிக்குரிய கூடாரம். 2 கொரி 5:2
3797: நாம் எதைத் தரித்துக்கொள்ள வாஞ்சையாயிருக்கிறோம்??
பரமவாசஸ்தலத்தை. 2 கொரி 5:2
3798: மரணமானது எதனாலே விழுங்கப்படுவதற்கு விரும்புகிறோம்??
ஜீவன். 2 கொரி 5:4
3799: தேவன் நமக்கு எதைத் தந்திருக்கிறார்??
ஆவியென்னும் அச்சாரத்தை. 2 கொரி 5:6
3800: நாம் எவ்விதம் நடக்கிறோம்??
விசுவாசித்து. 2 கொரி 5:6
3801: அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது எதில் தக்க பலனை அடைவோம்??
சரீரத்தில். 2 கொரி 5:10
3802: நாமெல்லாரும் தக்கபலனை அடையும் படிக்கு எதற்கு முன்பாக வெளிப்பட வேண்டும்??
கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு. 2 கொரி 5:10
3803:தேவனுக்காக பைத்தியங்கொண்டவர்கள் யார்??
பவுல், தீமத்தேயு. 2 கொரி 5:13
3804: பவுலையும் தீமோத்தேயுவையும் நெருக்கி ஏவியது எது??
கிறிஸ்துவுடைய அன்பு. 2 கொரி 5:14
3805: பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் தேவன் எந்த ஊழியத்தை ஒப்புக்கொடுத்தார்??
ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை. 2 கொரி 5:18
3806: நாம் கிறிஸ்துவுக்குள் எதாகும்படிக்கு பாவம் அறியாத அவர் பாவமாக்கப்பட்டார்??
தேவனுடைய நீதி. 2 கொரி 5:21
3807: அந்நிய நுகத்திலே யாருடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக??
அவிசுவாசிகளுடன். 2 கொரி 6:14
3808: கிறிஸ்துவுக்கும் யாருக்கும் இசைவேது??
பேலியாள். 2 கொரி 6:15
3809: ,தேவனுடைய ஆலயத்துக்கும் எதற்கும் சம்பந்தமேது??
விக்கிரகங்களுக்கும். 2 கொரி 6:16
3810: எவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு பிரிந்து போகவேண்டும்??
அவிசுவாசிகள். 2 கொரி 6:17
3811: எதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்??
அசுத்தமானதை. 2 கொரி 6:17
3812: எவைகளில் உண்டான எல்லா அசுசியும் நீங்க வேண்டும்??
மாம்சத்திலும் ஆவியிலும். 2 கொரி 7:1
3813: நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு எதை பூரணப்படுத்தக்கடவோம்??
பரிசுத்தமாகுதலை. 2 கொரி 7:1
3814:பரிசுத்தமாகுதலை எதனோடே பூரணப்படுத்தக்கடவோம்??
தெய்வபயத்தோடே. 2 கொரி 7:1
3815: தேவன் யாருக்கு ஆறுதல் செய்கிறவர்??
சிறுமைப்பட்டவர்களுக்கு. 2கொரி 7:6
3816: கொரிந்தியர் எதற்காகத் துக்கப்பட்டதற்காக பவுல் சந்தோஷப்பட்டார்??
மனந்திரும்புவதற்கேதுவாக. 2 கொரி 7:9
3817: தேவனுக்கேற்ற துக்கம் பின்பு எதற்கு இடமில்லாமல் செய்கிறது??
மனஸ்தாபப்படுகிறதற்கு. 2 கொரி 7:10
3818: தேவனுக்கேற்ற துக்கம் எதை உண்டாக்குகிறது??
இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை. 2 கொரி7:10
3819: மரணத்தை உண்டாக்குவது எது??
லெளகீக துக்கம். 2 கொரி 7:10
3820: மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்தது எது??
கிருபை. 2 கொரி 8:1
3821: மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தவர்கள் யார்??
மக்கதோனியா நாட்டுச் சபைகள். 2 கொரி 8:1&2
3822: தர்ம ஊழியம் என்பது யாருக்கு செய்யப்படும்??
பரிசுத்தவான்கள். 2 கொரி 8:4
3823: கொரிந்தியர்களிடம் தர்மகாரியத்தைத் தொடங்கினவர் யார்??
தீத்து. 2 கொரி 8:6
3824: விசுவாசத்தில் பெருகியிருந்தவர்கள் யார்??
கொரிந்தியர். 2 கொரி 8:7
3825: யாருக்கு அதிகமானதுமில்லை என்று எழுதியிருக்கிறது??
மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு. 2 கொரி 8:14
3826: பவுலின் கூட்டாளி என்பவர் யார்??
தீத்து. 2 கொரி 8:23
3827: பரிசுத்தவான்களுக்கு செய்ய வேண்டியது எது??
தர்மசகாயம். 2 கொரி 9:1
3828: தேவன் யாரிடத்தில் பிரியமாயிருக்கிறார்??
உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில். 2 கொரி 9:7
3829: வாரியிறைத்து ஏழைகளுக்கு கொடுப்பவனின் எது என்றென்றைக்கும் நிற்கும்??
நீதி. 2 கொரி 9:9
3830: தேவன் எதின் விளைச்சலை வர்த்திக்க செய்வார்??
நீதியின். 2 கொரி 9:10
3831:தர்மசகாயம் என்பது என்ன??
பணிவிடை. 2 கொரி 9:12
3832: சம்பூரண பலனுள்ளதாயும் இருப்பது எது??
தர்மசகாயமாகிய பணிவிடை. 2 கொரி 9:12
3833: தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அனுபவிப்பவர்கள் யார்??
பரிசுத்தவான்கள். 2 கொரி 9:13
3834: கொரிந்தியருக்கு தேவன் அளித்தது எது??
விசேஷித்த கிருபை. 2 கொரி 9:14
3835: பவுல் மற்றும் தீமத்தேயுவின் போராயுதங்கள் எவைகளை நிர்மூலமாக்கும்??
அரண்களை. 2 கொரி 10:4
3836: எல்லா கீழ்ப்படியாமைக்குந் தக்க தண்டனை எது??
நீதியுள்ள தண்டனை. 2 கொரி 10:6
3837: பவுலின் நிருபங்கள் எப்படிப்பட்டவைகள் என்று கூறினார்கள்??
பாரயோசனையும் பலமுமுள்ளவைகள். 2 கொரி10:10
3838: தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளுகிறவர்கள் எப்படிப்பட்டவர்களல்ல??
புத்திமான்கள். 2 கொரி 10:12
3839: உத்தமன் என்பவன் யார்??
கர்த்தரால் புகழப்படுபவன். 2 கொரி 10:18
3840: பவுல் எதை இலவசமாக பிரசங்கித்தார்??
தேவனுடைய சுவிசேஷத்தை. 2 கொரி 11:7
3841: பவுலின் குறைவை நிறைவாக்கினவர்கள் யார்??
மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர். 2 கொரி 11:9
3842: பவுல் தன்னை யாருடைய சந்ததியான் என்று கூறினார்??
ஆபிரகாம். 2 கொரி11:22
3843: பவுல் அநேகந்தரம் எதில் அகப்பட்டார்??
மரண அவதியில். 2 கொரி 11:23
3844: பவுல் யூதர்களால் ஒன்று குறைய எத்தனை அடிப்பட்டார்??
நாற்பது. 2 கொரி 11:24
3845: பவுல் எத்தனை தரம் மிலாறுகளால் அடிப்பட்டார்??
மூன்று தரம். 2 கொரி 11:25
3846: தமஸ்கு பட்டணத்து ராஜாவாயிருந்தவர் யார்??
அரேத்தா. 2 கொரி 11:32
3847: பவுல் தமஸ்குவிலே எதில் வைக்கப்பட்டு தப்பவிடப்பட்டார்??
கூடையில். 2 கொரி 11:33
3848: பவுல் தனக்குதகுதியல்ல என்று கூறியது எது??
மேன்மைபாராட்டுகிறது. 2 கொரி 12:1
3849: பவுல் தன்னை உயர்த்தாதபடிக்கு அவருடைய மாம்சத்திலே கொடுக்கப்பட்டிருந்தது எது??
ஒரு முள். 2 கொரி 12:7
3850: பவுல் எதைக் குறித்து மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவதாகக் கூறினார்??
தன் பலவீனங்கள். 2 கொரி 12:9
3851: கொரிந்தியரை பவுல் எப்படிப் பிடித்தார் என்று கூறினார்கள்??
தந்திரத்தினால். 2 கொரி 12:16
3852: ஒரே ஆவியுடையவர்களாய் ஒரே அடிச்சுவடுகளில் நடந்தவர்கள் யார்??
பவுல், தீத்து. 2 கொரி 12:18
3853: ஊன்றக்கட்ட கர்த்தரிடத்திலிருந்து அதிகாரம் பெற்றவர் யார்??
பவுல். 2 கொரி 13:10
3854: கலாத்தியருக்கு நிரூபம் எழுதியவர் யார்??
அப்போஸ்தலனாகிய பவுல். கலாத்தியர் 1:1
3855: இப்பொழுதிருக்கிற பிரபஞ்சத்தை பவுல் எவ்வாறு கூறினார்??
பொல்லாத பிரபஞ்சம். கலாத்தியர் 1:4
3856: தேவனுடைய சபையைப் பாழாக்கினவர் யார்??
பவுல். கலாத்தியர் 1:13
3857: தேவன் தம்முடைய குமாரனை பவுலுக்கு வெளிப்படுத்தினபோது பவுல் எங்கே புறப்பட்டு போனார்??
அரபி தேசம். கலாத்தியர் 1:17
3858: அப்போஸ்தலரில் பவுல் கண்டிருந்த ஒருவர் யார்??
கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபு. கலாத்தியர் 1:19
3859: பவுல் எருசலேமிலிருந்து எந்த நாடுகளின் புறங்களில் வந்தார்??
சீரியா, சிலிசியா . கலாத்தியர் 1:18-21
3860: எத்தனை வருஷம் சென்றபின்பு பவுல் மறுபடியும் எருசலேமுக்குப் போனார்??
14 . கலாத்தியர் 2:1
3861: பவுல் யாரைக் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு போனார்??
தீத்து. கலாத்தியர் 2:1
3862: பவுல் யாருடனே மறுபடியும் எருசலேமுக்கு போனார்??
பர்னபா. கலாத்தியர் 2:1
3863: பவுலுடனே கூட இருந்த தீத்து யாராயிருந்தான்??
கிரேக்கன். கலாத்தியர் 2:3
3864:விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்கு கட்டாயம் பண்ணப்படாதவன் யார்??
தீத்து . கலாத்தியர் 2:3
3865: கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டானது என்ன??
சுயாதீனம். கலாத்தியர் 2:4
3866: விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருந்தவர் யார்??
பேதுரு. கலாத்தியர் 2:7
3867: தூண்களாக எண்ணப்பட்டவர்கள் யார்??
யாக்கோபு, கேபா, யோவான். கலாத்தியர் 2:9
3868: பேதுருவை முகமுகமாய் எதிர்த்தவர் யார்??
பவுல். கலாத்தியர் 2:11
3869: புறஜாதியாருடனே சாப்பிட்டவர் யார்??
பேதுரு. கலாத்தியர் 2:12
3870: மற்ற யூதருடைய மாயத்தினாலே இழுப்புண்டவன் யார்??
பர்னபா. கலாத்தியர் 2:13
3871: யூதனாயிருந்து புறஜாதியார் முறைமை யாக நடந்தவர் யார்??
பேதுரு. கலாத்தியர் 2:14
3872: எதின் கிரியைகளினால் மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லை??
நியாயப்பிரமாணத்தின். கலாத்தியர் 2:15
3873: எதினால் மனுஷன் நீதிமானாக்கப்படுகிறான்??
கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால். கலாத்தியர் 2:15
3875: கிரியைகள் எதனால் உண்டாகிறது??
நியாயப்பிரமாணம். கலாத்தியர் 3:2
3876: கேள்வி எதனால் உண்டாகிறது??
விசுவாசம். கலாத்தியர் 3:2
3877: தேவனை விசுவாசித்ததால் அது யாருக்கு நீதியாக எண்ணப்பட்டது??
ஆபிரகாமுக்கு. கலாத்தியர் 3:6
3878: ஆபிரகாமின் பிள்ளைகள் என்று அறியப்படுபவர்கள் யார்??
விசுவாசமார்க்கத்தார்கள். கலாத்தியர் 3:7
3879: தேவன் புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறார் என்று கண்டது எது??
வேதம். கலாத்தியர் 3:8
3880: ஆபிரகாமுக்கு சுவிசேஷமாய் முன்னறிவிக்கப்பட்டது எது??
உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும். கலாத்தியர் 3:8
3881: எதினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறது??
விசுவாசத்தினால். கலாத்தியர் 3:11
3882: விசுவாசத்திற்குரியதல்லாதது எது??
நியாயப்பிரமாணம். கலாத்தியர் 3:12
3883: கிறிஸ்து இயேசுவினாலே புறஜாதிகளுக்கு வருவது எது??
ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம். கலாத்தியர் 3:14
3884: உடன்படிக்கைக்கு பின்பு எத்தனை வருடங்கள் கழித்து நியாயப்பிரமாணம் உண்டானது??
430 வருடங்கள். கலாத்தியர் 3:17
3885: நியாயப்பிரமாணமானது எதை வியர்த்தமாக்கமாட்டாது??
வாக்குத்தத்தத்தை. கலாத்தியர் 3:17
3886: கிறிஸ்துவினுடையவர்கள் யாருடைய சந்ததியாயிருக்கிறார்கள்??
ஆபிரகாம். கலாத்தியர் 3:29
3887: நாம் தேவனுடைய புத்திரராயிருக்கிறபடியால் அவரை எப்படி கூப்பிடமுடியும்??
அப்பா பிதாவே. கலாத்தியர் 4:6
3888: இவ்வுலகத்தின் வழிபாடுகள் எப்படிப்பட்டது என பவுல் கூறினார்??
பெலனற்றதும், வெறுமையானதும். கலாத்தியர் 4:9
3889: தேவதூதனைப் போல கலாத்தியர் யாரை ஏற்றுக்கொண்டார்கள்??
பவுலை. கலாத்தியர் 4:14
3890: எதில் வைராக்கியம் பாராட்டுவது நல்லது??
நல்விஷயத்தில். கலாத்தியர் 4:18
3891: ஆபிரகாமின் குமாரரில் ஒருவன் முதலாமவன் யாரிடத்தில் பிறந்தான்??
அடிமையானவள். கலா 4:22
3892: ஆபிரகாமின் குமாரரில் ஒருவன் இரண்டாமவன் யாரிடத்தில் பிறந்தான்??
சுயாதீனமுள்ளவளிடம். கலா 4:22
3893: அடிமையானவளிடத்தில் பிறந்தவன் எதின் படி பிறந்தான்??
மாம்சத்தின் படி. கலா 4:23
3894: சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் எதின் படி பிறந்தான்??
வாக்குதத்தத்தின்படி. கலா 4:23
3895: ஆபிரகாமின் குமாரரைப்பற்றிய பிறப்பு என்ன அர்த்தமுள்ளவை??
ஞான அர்த்தம். கலா 4:24
3896: அடிமையானவள் சுயாதீனமுள்ளவள் என்பது எதைக் குறிக்கிறது??
இரண்டு ஏற்பாடுகள். கலா 4:24
3897: இரண்டு ஏற்பாடுகளில் ஒன்று எந்த மலையில் உண்டானது??
சீனாய் மலை. கலா 4:24
3898: அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளை பெற்றது யார்??
ஆகார். கலா 4:24
3899: தன் பிள்ளைகளோடே அடிமைப்பட்டிருக்கிறவள் யார்??
எருசலேம். கலா 4:25
3900: சுயாதீனமுள்ளவள் யார்??
மேலான எருசலேம். கலா 4:26
3901 : நம்மெல்லாருக்கும் தாயானவள் யார்??
மேலான எருசலேம். கலா 4:26
3902:நாம் யாரைப்போல வாக்குதத்தத்துக்குப் பிள்ளைகளாயிருக்கிறோம்??
ஈசாக்கு. கலா 4:28
3903: நாம் மறுபடியும் எதின் நுகத்துக்கு உட்படக்கூடாது??
அடிமைத்தனம். கலா 5:1
3904: நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறவன் யார்??
விருத்தசேதனம் பண்ணிக்கொள்கிற மனுஷன். கலா 5:3
3905: எதினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்??
அன்பு. கலா 5:6
3906: எதினாலே ஒருவொருக்கொருவர் ஊழியம் செய்ய வேண்டும்??
அன்பினாலே. கலா 5:13
3907:எதற்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்??
ஆவிக்கேற்றபடி. கலா 5:16
3908: ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறவை எவை??
ஆவி, மாம்சம். கலா 5:17
3909: எதின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன??
மாம்சத்தின். கலா 5:19
3910: மாம்சத்தின் கிரியைகளைச் செய்கிறவர்கள் எதைச் சுதந்தரிப்பதில்லை??
தேவனுடைய ராஜ்யம். கலா 5:21
3911: எதற்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை??
ஆவியின் கனி. கலா 5:23
3912: எதை விரும்பக்கூடாது என பவுல் கூறினார்??
வீண்புகழ்ச்சியை. கலா 5:26
3913: ஒருவர் மேல் ஒருவர் என்ன கொள்ள கூடாது??
பெறாமை. கலா 5:26
3914: அவனவன் தன் தன் எதைச் சோதித்து பார்க்கக்கடவன்??
சுயகிரியை. கலா 6:4
3915: மாம்சத்தினால் அழிவை அறுப்பவன் யார்??
மாம்சத்திற்கென்று விதைக்கிறவன். கலா 6:8
3916: எதைச் செய்கிறதில் சோர்ந்து போகாமலிருக்க வேண்டும்??
நன்மை செய்கிறதில். கலா 6:9
3917: நமக்கு கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக யாவருக்கும் எதைச் செய்யக்கடவோம்??
நன்மை. கலா 6:10
3918: விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள கட்டாயம் பண்ணுகிறவர்கள் யார்??
மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்படுகிறவர்கள். கலா 6:12
3919:பவுல் எதைக்குறித்தேயல்லாமல் வெறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டேனாக என்று கூறினார்??
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவை. கலா 6:14
3920: பவுல் எதைத் தன் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறதாக கூறினார்??
கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை. கலா 6:17
3921: கிறிஸ்துவுக்குள் பிதா நம்மை எங்கே ஆசீர்வதித்திருக்கிறார்??
உன்னதங்களிலே. எபேசியர் 1:3
3922: பிதா தமது பிரியமானவருக்குள் நமக்குத் தந்தருளியது என்ன??
கிருபையின் மகிமை. எபேசியர் 1:5
3923: இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே நமக்கு உண்டாயிருக்கிறது எது??
பாவமன்னிப்பாகிய மீட்பு. எபேசியர் 1:7
3924: இரட்சிப்பின் சுவிசேஷம் என்பது எது??
சத்தியவசனம். எபேசியர் 1:13
3925: நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறவர் யார்??
ஆவியானவர். எபேசியர் 1:14
3926: பிதாவானவர் நமக்கு எப்படிப்பட்ட கண்களைக் கொடுக்க வேண்டுமென்று பவுல் வேண்டினார்??
பிரகாசமுள்ள மனக்கண்களை. எபேசியர் 1:19
3927: எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவு எது??
சரீரமான சபை. எபேசியர் 1:23
3928: நாம் எவைகளில் மரித்தவர்களாயிருந்தோம்??
அக்கிரமங்கள், பாவங்கள். எபேசியர் 2:1
3929: முற்காலத்தில் நாம் எதற்கு ஏற்றபடி நடந்து கொண்டோம்??
இவ்வுலக வழக்கத்திற்கு. எபேசியர் 2:2
3930: கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிறவர் யார்??
ஆகாயத்து அதிகாரப் பிரபு. எபேசியர் 2:2
3791: அதிசீக்கிரத்தில் நீங்கிப் போவது எது??
இலேசான நம்முடைய உபத்திரவம். 2 கொரி 4:17
3792: அநித்தியமானவைகள் என்பது எது??
காணப்படுகிறவைகள். 2 கொரி 4:18
3793: நித்தியமானவைகள் என்பது எது??
காணப்படாதவைகள். 2 கொரி4:18
3794: பூமிக்குரிய கூடாரம் எது??
நம்முடைய வீடு. 2 கொரி 5:1
3795: தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாதது எது??
நித்திய வீடு. 2 கொரி 5:1
3796: நாம் எந்த கூடாரத்தி்லே தவிக்கிறோம் ??
பூமிக்குரிய கூடாரம். 2 கொரி 5:2
3797: நாம் எதைத் தரித்துக்கொள்ள வாஞ்சையாயிருக்கிறோம்??
பரமவாசஸ்தலத்தை. 2 கொரி 5:2
3798: மரணமானது எதனாலே விழுங்கப்படுவதற்கு விரும்புகிறோம்??
ஜீவன். 2 கொரி 5:4
3799: தேவன் நமக்கு எதைத் தந்திருக்கிறார்??
ஆவியென்னும் அச்சாரத்தை. 2 கொரி 5:6
3800: நாம் எவ்விதம் நடக்கிறோம்??
விசுவாசித்து. 2 கொரி 5:6
3801: அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது எதில் தக்க பலனை அடைவோம்??
சரீரத்தில். 2 கொரி 5:10
3802: நாமெல்லாரும் தக்கபலனை அடையும் படிக்கு எதற்கு முன்பாக வெளிப்பட வேண்டும்??
கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு. 2 கொரி 5:10
3803:தேவனுக்காக பைத்தியங்கொண்டவர்கள் யார்??
பவுல், தீமத்தேயு. 2 கொரி 5:13
3804: பவுலையும் தீமோத்தேயுவையும் நெருக்கி ஏவியது எது??
கிறிஸ்துவுடைய அன்பு. 2 கொரி 5:14
3805: பவுலுக்கும் தீமோத்தேயுவுக்கும் தேவன் எந்த ஊழியத்தை ஒப்புக்கொடுத்தார்??
ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை. 2 கொரி 5:18
3806: நாம் கிறிஸ்துவுக்குள் எதாகும்படிக்கு பாவம் அறியாத அவர் பாவமாக்கப்பட்டார்??
தேவனுடைய நீதி. 2 கொரி 5:21
3807: அந்நிய நுகத்திலே யாருடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக??
அவிசுவாசிகளுடன். 2 கொரி 6:14
3808: கிறிஸ்துவுக்கும் யாருக்கும் இசைவேது??
பேலியாள். 2 கொரி 6:15
3809: ,தேவனுடைய ஆலயத்துக்கும் எதற்கும் சம்பந்தமேது??
விக்கிரகங்களுக்கும். 2 கொரி 6:16
3810: எவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு பிரிந்து போகவேண்டும்??
அவிசுவாசிகள். 2 கொரி 6:17
3811: எதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்??
அசுத்தமானதை. 2 கொரி 6:17
3812: எவைகளில் உண்டான எல்லா அசுசியும் நீங்க வேண்டும்??
மாம்சத்திலும் ஆவியிலும். 2 கொரி 7:1
3813: நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு எதை பூரணப்படுத்தக்கடவோம்??
பரிசுத்தமாகுதலை. 2 கொரி 7:1
3814:பரிசுத்தமாகுதலை எதனோடே பூரணப்படுத்தக்கடவோம்??
தெய்வபயத்தோடே. 2 கொரி 7:1
3815: தேவன் யாருக்கு ஆறுதல் செய்கிறவர்??
சிறுமைப்பட்டவர்களுக்கு. 2கொரி 7:6
3816: கொரிந்தியர் எதற்காகத் துக்கப்பட்டதற்காக பவுல் சந்தோஷப்பட்டார்??
மனந்திரும்புவதற்கேதுவாக. 2 கொரி 7:9
3817: தேவனுக்கேற்ற துக்கம் பின்பு எதற்கு இடமில்லாமல் செய்கிறது??
மனஸ்தாபப்படுகிறதற்கு. 2 கொரி 7:10
3818: தேவனுக்கேற்ற துக்கம் எதை உண்டாக்குகிறது??
இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை. 2 கொரி7:10
3819: மரணத்தை உண்டாக்குவது எது??
லெளகீக துக்கம். 2 கொரி 7:10
3820: மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்தது எது??
கிருபை. 2 கொரி 8:1
3821: மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தவர்கள் யார்??
மக்கதோனியா நாட்டுச் சபைகள். 2 கொரி 8:1&2
3822: தர்ம ஊழியம் என்பது யாருக்கு செய்யப்படும்??
பரிசுத்தவான்கள். 2 கொரி 8:4
3823: கொரிந்தியர்களிடம் தர்மகாரியத்தைத் தொடங்கினவர் யார்??
தீத்து. 2 கொரி 8:6
3824: விசுவாசத்தில் பெருகியிருந்தவர்கள் யார்??
கொரிந்தியர். 2 கொரி 8:7
3825: யாருக்கு அதிகமானதுமில்லை என்று எழுதியிருக்கிறது??
மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு. 2 கொரி 8:14
3826: பவுலின் கூட்டாளி என்பவர் யார்??
தீத்து. 2 கொரி 8:23
3827: பரிசுத்தவான்களுக்கு செய்ய வேண்டியது எது??
தர்மசகாயம். 2 கொரி 9:1
3828: தேவன் யாரிடத்தில் பிரியமாயிருக்கிறார்??
உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில். 2 கொரி 9:7
3829: வாரியிறைத்து ஏழைகளுக்கு கொடுப்பவனின் எது என்றென்றைக்கும் நிற்கும்??
நீதி. 2 கொரி 9:9
3830: தேவன் எதின் விளைச்சலை வர்த்திக்க செய்வார்??
நீதியின். 2 கொரி 9:10
3831:தர்மசகாயம் என்பது என்ன??
பணிவிடை. 2 கொரி 9:12
3832: சம்பூரண பலனுள்ளதாயும் இருப்பது எது??
தர்மசகாயமாகிய பணிவிடை. 2 கொரி 9:12
3833: தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அனுபவிப்பவர்கள் யார்??
பரிசுத்தவான்கள். 2 கொரி 9:13
3834: கொரிந்தியருக்கு தேவன் அளித்தது எது??
விசேஷித்த கிருபை. 2 கொரி 9:14
3835: பவுல் மற்றும் தீமத்தேயுவின் போராயுதங்கள் எவைகளை நிர்மூலமாக்கும்??
அரண்களை. 2 கொரி 10:4
3836: எல்லா கீழ்ப்படியாமைக்குந் தக்க தண்டனை எது??
நீதியுள்ள தண்டனை. 2 கொரி 10:6
3837: பவுலின் நிருபங்கள் எப்படிப்பட்டவைகள் என்று கூறினார்கள்??
பாரயோசனையும் பலமுமுள்ளவைகள். 2 கொரி10:10
3838: தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளுகிறவர்கள் எப்படிப்பட்டவர்களல்ல??
புத்திமான்கள். 2 கொரி 10:12
3839: உத்தமன் என்பவன் யார்??
கர்த்தரால் புகழப்படுபவன். 2 கொரி 10:18
3840: பவுல் எதை இலவசமாக பிரசங்கித்தார்??
தேவனுடைய சுவிசேஷத்தை. 2 கொரி 11:7
3841: பவுலின் குறைவை நிறைவாக்கினவர்கள் யார்??
மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர். 2 கொரி 11:9
3842: பவுல் தன்னை யாருடைய சந்ததியான் என்று கூறினார்??
ஆபிரகாம். 2 கொரி11:22
3843: பவுல் அநேகந்தரம் எதில் அகப்பட்டார்??
மரண அவதியில். 2 கொரி 11:23
3844: பவுல் யூதர்களால் ஒன்று குறைய எத்தனை அடிப்பட்டார்??
நாற்பது. 2 கொரி 11:24
3845: பவுல் எத்தனை தரம் மிலாறுகளால் அடிப்பட்டார்??
மூன்று தரம். 2 கொரி 11:25
3846: தமஸ்கு பட்டணத்து ராஜாவாயிருந்தவர் யார்??
அரேத்தா. 2 கொரி 11:32
3847: பவுல் தமஸ்குவிலே எதில் வைக்கப்பட்டு தப்பவிடப்பட்டார்??
கூடையில். 2 கொரி 11:33
3848: பவுல் தனக்குதகுதியல்ல என்று கூறியது எது??
மேன்மைபாராட்டுகிறது. 2 கொரி 12:1
3849: பவுல் தன்னை உயர்த்தாதபடிக்கு அவருடைய மாம்சத்திலே கொடுக்கப்பட்டிருந்தது எது??
ஒரு முள். 2 கொரி 12:7
3850: பவுல் எதைக் குறித்து மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவதாகக் கூறினார்??
தன் பலவீனங்கள். 2 கொரி 12:9
3851: கொரிந்தியரை பவுல் எப்படிப் பிடித்தார் என்று கூறினார்கள்??
தந்திரத்தினால். 2 கொரி 12:16
3852: ஒரே ஆவியுடையவர்களாய் ஒரே அடிச்சுவடுகளில் நடந்தவர்கள் யார்??
பவுல், தீத்து. 2 கொரி 12:18
3853: ஊன்றக்கட்ட கர்த்தரிடத்திலிருந்து அதிகாரம் பெற்றவர் யார்??
பவுல். 2 கொரி 13:10
3854: கலாத்தியருக்கு நிரூபம் எழுதியவர் யார்??
அப்போஸ்தலனாகிய பவுல். கலாத்தியர் 1:1
3855: இப்பொழுதிருக்கிற பிரபஞ்சத்தை பவுல் எவ்வாறு கூறினார்??
பொல்லாத பிரபஞ்சம். கலாத்தியர் 1:4
3856: தேவனுடைய சபையைப் பாழாக்கினவர் யார்??
பவுல். கலாத்தியர் 1:13
3857: தேவன் தம்முடைய குமாரனை பவுலுக்கு வெளிப்படுத்தினபோது பவுல் எங்கே புறப்பட்டு போனார்??
அரபி தேசம். கலாத்தியர் 1:17
3858: அப்போஸ்தலரில் பவுல் கண்டிருந்த ஒருவர் யார்??
கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபு. கலாத்தியர் 1:19
3859: பவுல் எருசலேமிலிருந்து எந்த நாடுகளின் புறங்களில் வந்தார்??
சீரியா, சிலிசியா . கலாத்தியர் 1:18-21
3860: எத்தனை வருஷம் சென்றபின்பு பவுல் மறுபடியும் எருசலேமுக்குப் போனார்??
14 . கலாத்தியர் 2:1
3861: பவுல் யாரைக் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு போனார்??
தீத்து. கலாத்தியர் 2:1
3862: பவுல் யாருடனே மறுபடியும் எருசலேமுக்கு போனார்??
பர்னபா. கலாத்தியர் 2:1
3863: பவுலுடனே கூட இருந்த தீத்து யாராயிருந்தான்??
கிரேக்கன். கலாத்தியர் 2:3
3864:விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்கு கட்டாயம் பண்ணப்படாதவன் யார்??
தீத்து . கலாத்தியர் 2:3
3865: கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டானது என்ன??
சுயாதீனம். கலாத்தியர் 2:4
3866: விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருந்தவர் யார்??
பேதுரு. கலாத்தியர் 2:7
3867: தூண்களாக எண்ணப்பட்டவர்கள் யார்??
யாக்கோபு, கேபா, யோவான். கலாத்தியர் 2:9
3868: பேதுருவை முகமுகமாய் எதிர்த்தவர் யார்??
பவுல். கலாத்தியர் 2:11
3869: புறஜாதியாருடனே சாப்பிட்டவர் யார்??
பேதுரு. கலாத்தியர் 2:12
3870: மற்ற யூதருடைய மாயத்தினாலே இழுப்புண்டவன் யார்??
பர்னபா. கலாத்தியர் 2:13
3871: யூதனாயிருந்து புறஜாதியார் முறைமை யாக நடந்தவர் யார்??
பேதுரு. கலாத்தியர் 2:14
3872: எதின் கிரியைகளினால் மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லை??
நியாயப்பிரமாணத்தின். கலாத்தியர் 2:15
3873: எதினால் மனுஷன் நீதிமானாக்கப்படுகிறான்??
கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால். கலாத்தியர் 2:15
3875: கிரியைகள் எதனால் உண்டாகிறது??
நியாயப்பிரமாணம். கலாத்தியர் 3:2
3876: கேள்வி எதனால் உண்டாகிறது??
விசுவாசம். கலாத்தியர் 3:2
3877: தேவனை விசுவாசித்ததால் அது யாருக்கு நீதியாக எண்ணப்பட்டது??
ஆபிரகாமுக்கு. கலாத்தியர் 3:6
3878: ஆபிரகாமின் பிள்ளைகள் என்று அறியப்படுபவர்கள் யார்??
விசுவாசமார்க்கத்தார்கள். கலாத்தியர் 3:7
3879: தேவன் புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறார் என்று கண்டது எது??
வேதம். கலாத்தியர் 3:8
3880: ஆபிரகாமுக்கு சுவிசேஷமாய் முன்னறிவிக்கப்பட்டது எது??
உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும். கலாத்தியர் 3:8
3881: எதினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறது??
விசுவாசத்தினால். கலாத்தியர் 3:11
3882: விசுவாசத்திற்குரியதல்லாதது எது??
நியாயப்பிரமாணம். கலாத்தியர் 3:12
3883: கிறிஸ்து இயேசுவினாலே புறஜாதிகளுக்கு வருவது எது??
ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம். கலாத்தியர் 3:14
3884: உடன்படிக்கைக்கு பின்பு எத்தனை வருடங்கள் கழித்து நியாயப்பிரமாணம் உண்டானது??
430 வருடங்கள். கலாத்தியர் 3:17
3885: நியாயப்பிரமாணமானது எதை வியர்த்தமாக்கமாட்டாது??
வாக்குத்தத்தத்தை. கலாத்தியர் 3:17
3886: கிறிஸ்துவினுடையவர்கள் யாருடைய சந்ததியாயிருக்கிறார்கள்??
ஆபிரகாம். கலாத்தியர் 3:29
3887: நாம் தேவனுடைய புத்திரராயிருக்கிறபடியால் அவரை எப்படி கூப்பிடமுடியும்??
அப்பா பிதாவே. கலாத்தியர் 4:6
3888: இவ்வுலகத்தின் வழிபாடுகள் எப்படிப்பட்டது என பவுல் கூறினார்??
பெலனற்றதும், வெறுமையானதும். கலாத்தியர் 4:9
3889: தேவதூதனைப் போல கலாத்தியர் யாரை ஏற்றுக்கொண்டார்கள்??
பவுலை. கலாத்தியர் 4:14
3890: எதில் வைராக்கியம் பாராட்டுவது நல்லது??
நல்விஷயத்தில். கலாத்தியர் 4:18
3891: ஆபிரகாமின் குமாரரில் ஒருவன் முதலாமவன் யாரிடத்தில் பிறந்தான்??
அடிமையானவள். கலா 4:22
3892: ஆபிரகாமின் குமாரரில் ஒருவன் இரண்டாமவன் யாரிடத்தில் பிறந்தான்??
சுயாதீனமுள்ளவளிடம். கலா 4:22
3893: அடிமையானவளிடத்தில் பிறந்தவன் எதின் படி பிறந்தான்??
மாம்சத்தின் படி. கலா 4:23
3894: சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் எதின் படி பிறந்தான்??
வாக்குதத்தத்தின்படி. கலா 4:23
3895: ஆபிரகாமின் குமாரரைப்பற்றிய பிறப்பு என்ன அர்த்தமுள்ளவை??
ஞான அர்த்தம். கலா 4:24
3896: அடிமையானவள் சுயாதீனமுள்ளவள் என்பது எதைக் குறிக்கிறது??
இரண்டு ஏற்பாடுகள். கலா 4:24
3897: இரண்டு ஏற்பாடுகளில் ஒன்று எந்த மலையில் உண்டானது??
சீனாய் மலை. கலா 4:24
3898: அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளை பெற்றது யார்??
ஆகார். கலா 4:24
3899: தன் பிள்ளைகளோடே அடிமைப்பட்டிருக்கிறவள் யார்??
எருசலேம். கலா 4:25
3900: சுயாதீனமுள்ளவள் யார்??
மேலான எருசலேம். கலா 4:26
3901 : நம்மெல்லாருக்கும் தாயானவள் யார்??
மேலான எருசலேம். கலா 4:26
3902:நாம் யாரைப்போல வாக்குதத்தத்துக்குப் பிள்ளைகளாயிருக்கிறோம்??
ஈசாக்கு. கலா 4:28
3903: நாம் மறுபடியும் எதின் நுகத்துக்கு உட்படக்கூடாது??
அடிமைத்தனம். கலா 5:1
3904: நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறவன் யார்??
விருத்தசேதனம் பண்ணிக்கொள்கிற மனுஷன். கலா 5:3
3905: எதினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்??
அன்பு. கலா 5:6
3906: எதினாலே ஒருவொருக்கொருவர் ஊழியம் செய்ய வேண்டும்??
அன்பினாலே. கலா 5:13
3907:எதற்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்??
ஆவிக்கேற்றபடி. கலா 5:16
3908: ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறவை எவை??
ஆவி, மாம்சம். கலா 5:17
3909: எதின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன??
மாம்சத்தின். கலா 5:19
3910: மாம்சத்தின் கிரியைகளைச் செய்கிறவர்கள் எதைச் சுதந்தரிப்பதில்லை??
தேவனுடைய ராஜ்யம். கலா 5:21
3911: எதற்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை??
ஆவியின் கனி. கலா 5:23
3912: எதை விரும்பக்கூடாது என பவுல் கூறினார்??
வீண்புகழ்ச்சியை. கலா 5:26
3913: ஒருவர் மேல் ஒருவர் என்ன கொள்ள கூடாது??
பெறாமை. கலா 5:26
3914: அவனவன் தன் தன் எதைச் சோதித்து பார்க்கக்கடவன்??
சுயகிரியை. கலா 6:4
3915: மாம்சத்தினால் அழிவை அறுப்பவன் யார்??
மாம்சத்திற்கென்று விதைக்கிறவன். கலா 6:8
3916: எதைச் செய்கிறதில் சோர்ந்து போகாமலிருக்க வேண்டும்??
நன்மை செய்கிறதில். கலா 6:9
3917: நமக்கு கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக யாவருக்கும் எதைச் செய்யக்கடவோம்??
நன்மை. கலா 6:10
3918: விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள கட்டாயம் பண்ணுகிறவர்கள் யார்??
மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்படுகிறவர்கள். கலா 6:12
3919:பவுல் எதைக்குறித்தேயல்லாமல் வெறொன்றையும் குறித்து மேன்மை பாராட்டேனாக என்று கூறினார்??
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவை. கலா 6:14
3920: பவுல் எதைத் தன் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறதாக கூறினார்??
கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை. கலா 6:17
3921: கிறிஸ்துவுக்குள் பிதா நம்மை எங்கே ஆசீர்வதித்திருக்கிறார்??
உன்னதங்களிலே. எபேசியர் 1:3
3922: பிதா தமது பிரியமானவருக்குள் நமக்குத் தந்தருளியது என்ன??
கிருபையின் மகிமை. எபேசியர் 1:5
3923: இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தினாலே நமக்கு உண்டாயிருக்கிறது எது??
பாவமன்னிப்பாகிய மீட்பு. எபேசியர் 1:7
3924: இரட்சிப்பின் சுவிசேஷம் என்பது எது??
சத்தியவசனம். எபேசியர் 1:13
3925: நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறவர் யார்??
ஆவியானவர். எபேசியர் 1:14
3926: பிதாவானவர் நமக்கு எப்படிப்பட்ட கண்களைக் கொடுக்க வேண்டுமென்று பவுல் வேண்டினார்??
பிரகாசமுள்ள மனக்கண்களை. எபேசியர் 1:19
3927: எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவு எது??
சரீரமான சபை. எபேசியர் 1:23
3928: நாம் எவைகளில் மரித்தவர்களாயிருந்தோம்??
அக்கிரமங்கள், பாவங்கள். எபேசியர் 2:1
3929: முற்காலத்தில் நாம் எதற்கு ஏற்றபடி நடந்து கொண்டோம்??
இவ்வுலக வழக்கத்திற்கு. எபேசியர் 2:2
3930: கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியை செய்கிறவர் யார்??
ஆகாயத்து அதிகாரப் பிரபு. எபேசியர் 2:2
3931: முற்காலத்தில் நாம் எவைகள் விரும்பினவைகளைச் செய்தோம்??
மாம்சமும் மனசும். எபேசியர் 2:3
3932: நாம் எதினாலே இரட்சிக்கப்பட்டோம்??
கிருபை. எபேசியர் 2:5
3933: மகா மேன்மையான ஐசுவரியம் எது??
தேவனுடைய கிருபை. எபேசியர் 2:6
3934: கிருபையினாலே எதைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம்??
விசுவாசத்தை. எபேசியர் 2:8
3935:நாம் எவைகளைச் செய்கிறதற்கு கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு தேவனுடைய செய்கைகளாயிருக்கிறோம்??
நற்கிரியைகள். எபேசியர் 2:10
3936: மாம்சத்தின் கையினாலே செய்யப்படுகிறது எது??
விருத்தசேதனம். எபேசியர் 2:11
3937: கிறிஸ்து இயேசுவுக்குள் எதினாலே சமீபமானோம்??
கிறிஸ்துவின் இரத்தத்தினாலே. எபேசியர் 2:13
3938: பகையாக நின்ற நடுச்சுவர் எது??
பிரிவினை. எபேசியர் 2:14
3939: கிறிஸ்து பகையை எதனால் கொன்றார்??
சிலுவையினால். எபேசியர் 2:16
3940: நாம் இனி எவர்களோடே ஒரே நகரத்தாராயிருக்கிறோம்??
பரிசுத்தவான்கள். எபேசியர் 2:20
3941: நாம் இயேசுவின் மேல் எதுவாக கூட்டிக் கட்டப்பட்டு வருகிறோம்??
தேவனுடைய வாசஸ்தலமாக. எபேசியர் 2:22
3942: பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவன் நான் யார்??
பவுல். எபேசியர் 3:8
3943: துரைத்தனங்களும் அதிகாரங்களும் எங்கே உள்ளது??
உன்னதங்கள். எபேசியர் 3:10
3944: கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தால் நமக்கு எவைகள் உண்டாயிருக்கிறது??
தைரியம், திடநம்பிக்கை. எபேசியர் 3:12
3945: இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியினாலே எதில் வல்லமையாய் பலப்பட வேண்டும்??
உள்ளான மனுஷனில். எபேசியர் 3:16
3946: நாம் எதிலே வேரூன்றி நிலைபெற்றவர்களாக வேண்டும்??
அன்பு. எபேசியர் 3:17
3947: கிறிஸ்துவினுடைய அன்பை யாரோடுங்கூட உணர வேண்டும்??
சகல பரிசுத்தவான்கள். எபேசியர் 3:18
3948: எதை அறிந்து கொள்ள வல்லவர்களாக வேண்டும்??
அறிவுக்கெட்டாத கிறிஸ்துவின் அன்பை. எபேசியர் 3:19
3949: எதினால் ஒருவரையொருவர் தாங்க வேண்டும்??
அன்பினால். எபேசியர் 4:2
3950: சமாதானக்கட்டினால் எதைக் காத்துக்கொள்ள வேண்டும்??
ஆவியின் ஒருமையை. எபேசியர் 4:3
3951: நம்மில் அவனவனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்ன??
கிருபை. எபேசியர் 4:7
3952: எவர்கள் சீர்பொருந்த வேண்டும்??
பரிசுத்தவான்கள். எபேசியர் 4:13
3953: கிறிஸ்துவின் சரீரம் என்பது எது??
சபை. எபேசியர் 4:12
3954: கிறிஸ்துவின் சரீரமாகிய சபை எதை அடைய வேண்டும்??
பக்திவிருத்தி. எபேசியர் 4:13
3955: நாம் இனி எப்படிப்பட்டவர்களாயிருக்க கூடாது??
குழந்தைகளாய். எபேசியர் 4:14
3956: மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கும் ஏதுவானது எது??
தந்திரமுள்ள போதகம்
எபேசியர் 4:14
3957: அன்புடன் எதைக் கைக்கொள்ள வேண்டும்??
சத்தியத்தை. எபேசியர் 4:15
3958: சரீரம் முழுவதற்கும் உதவியாயிருக்கிறது எது??
சகல கணுக்கள். எபேசியர் 4:16
3959: புத்தியில் அந்தகாரப்பட்டவர்கள் யார்??
மற்ற புறஜாதிகள். எபேசியர் 4:18
3960: முந்தின நடக்கைக்குரியவைகள் எவை??
மோசம்போக்கும் இச்சைகள். எபேசியர் 4:22
3961: யாரைத் தரித்துக் கொள்ள வேண்டும் என்று பவுல் கூறினார்??
புதிய மனுஷன். எபேசியர் 4:24
3962: நாம் ஒருவருக்கொருவர் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோம்??
அவயவங்கள். எபேசியர் 4:25
3963: அவனவன் பிறனுடன் எதைப் பேசக்கடவன்??
மெய். எபேசியர் 4:25
3964: கோபம் கொண்டாலும் எதைச் செய்யக்கூடாது??
பாவம். எபேசியர் 4:26
3965: எதற்கு இடங்கொடாமல் இருக்க வேண்டும்??
பிசாசு . எபேசியர் 4:27
3966: தன் கைகளினால் நலமான வேலை செய்து பிரயாசப்பட வேண்டியவன் யார்??
திருடுகிறவன். எபேசியர் 4:28
3967: எவைகள் வாயிலிருந்து புறப்படக்கூடாது??
கெட்ட வார்த்தை. எபேசியர் 4:29
3968: கேட்கிறவர்களுக்கு பிரயோஜனமுண்டாக எதை பேச வேண்டும்??
பக்திவிருத்திக்கு ஏதுவான நல்வார்த்தை. எபேசியர் 4:29
3969: மீட்க்கப்படும் நாளுக்கென்று முத்திரையாக நாம் பெற்றுக்கொண்டது என்ன??
தேவனுடைய பரிசுத்த ஆவி. எபேசியர் 4:30
3970: நம்மை விட்டு எவைகள் நீங்கக்கடவது??
எந்த துர்க்குணமும். எபேசியர் 4:31
3971: ஒருவருக்கொருவர் எப்படிப்பட்டவர்களாயிருக்க வேண்டும்??
தயவாயும் மன உருக்கமாயும். எபேசியர் 4:32
3972: கிறிஸ்து தம்மை எப்படிப்பட்ட காணிக்கையாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்??
சுகந்த வாசனையான. எபேசியர் 5:2
3973: தகாதவைகள் எவை??
வம்பு, புத்தியீனமான பேச்சு, பரியாசம். எபேசியர் 5:4
3974: கிறிஸ்துவின் ராஜ்யம் எது??
தேவனுடைய ராஜ்யம். எபேசியர் 5:5
3975: விக்கிரகாராதனைக்காரன் என்பவன் யார்??
பொருளாசைக்காரன். எபேசியர் 5:5
3976: கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் வருவது எது??
தேவகோபாக்கினை. எபேசியர் 5:6
3977: சகல நற்குணத்திலும் விளங்குவது எது??
ஆவியின் கனி. எபேசியர் 5:9
3978: எது இன்னதென்று நீங்கள் சோதித்து பார்க்க வேண்டும்??
கர்த்தருக்கு பிரியமானது. எபேசியர் 5:10
3979: கனியற்ற எவைகளுக்கு உடன்படக்கூடாது??
அந்தகாரக் கிரியை. எபேசியர் 5:11
3980: எவர்களைப் போலக் கவனமாய் நடந்து கொள்ளப் பார்க்க வேண்டும்??
ஞானமுள்ளவர்களை. எபேசியர் 5:15
3981: எவைகள் பொல்லாதவைகளாயிருக்கிறது??
நாட்கள். எபேசியர் 5:16
3982: எது இன்னதென்று உணர்ந்து கொள்ள வேண்டும்??
கர்த்தருடைய சித்தம். எபேசியர் 5:17
3983: துன்மார்க்கத்திற்கு ஏதுவானது எது??
மதுபான வெறி. எபேசியர் 5:18
3984: சபைக்கு தலையாயிருக்கிறவர் யார்??
கிறிஸ்து. எபேசியர் 5:23
3985: கிறிஸ்து சபையை எதைக் கொண்டு சுத்திகரித்தார்??
திருவசனம். எபேசியர் 5:26
3986: சபையில் எவை முதலானவைகள் ஒன்றும் இல்லாதிருக்க வேண்டும்??
கறைதிரைகள். எபேசியர் 5:27
3987: எதை பகைத்தவன் ஒருவனுமில்லை ??
தன் சொந்த மாம்சத்தை. எபேசியர் 5:29
3988: வாக்குதத்தமுள்ள முதலாம் கற்பனை எது??
தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக. எபேசியர் 6: 3
3989: பிதாக்கள் யாரை கோபப்படுத்தக் கூடாது??
பிள்ளைகளை. எபேசியர் 6:4
3990:அவனவன் செய்கிற எதின் படி கர்த்தரிடத்தில் பலனை அடைவான்??
நன்மை. எபேசியர் 6:7
3991: கர்த்தருக்கென்று எப்படி ஊழியம் செய்ய வேண்டும்??
நல்மனதோடே. எபேசியர் 6:8
3992:பரலோகத்தில் இருக்கிற எஜமானிடத்தில் எது இல்லை??
பட்சபாதம். எபேசியர் 6:9
3993: நாம் எதற்கு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாக வேண்டும்??
பிசாசின் தந்திரங்கள். எபேசியர் 6:11
3994: இப்பிரபஞ்சத்தின் எவைகளோடு நமக்கு போராட்டம் உண்டு??
அந்தகாரலோகாதிபதிகளோடு. எபேசியர் 6:12
3995: நம்முடைய அரையில் எதைக் கட்ட வேண்டும்??
சத்தியம் என்னும் கச்சை. எபேசியர் 6:14
3996: அக்கினியஸ்திரங்களை எய்பவன் யார்??
பொல்லாங்கன். எபேசியர் 6:16
3997: ஆவியின் பட்டயம் என்பது எது??
தேவ வசனம். எபேசியர் 6:17
3998: சுவிசேஷத்திற்காக சங்கிலியால் கட்டப்பட்ட ஸ்தானாதிபதி யார்??
பவுல். எபேசியர் 6:19
3999: கர்த்தருக்கு உண்மையுள்ள ஊழியக்காரன் என்று பவுல் யாரைக் குறிப்பிட்டார்??
தீகிக்கு. எபேசியர் 6:21
4000: எந்த மார்க்கவசத்தை தரித்துக்கொள்ள வேண்டும்??
நீதி. எபேசியர் 6:14
4001: நீதியின் கனிகள் யாராலே வருகிறது??
இயேசு கிறிஸ்து. பிலிப்பியர் 1:10
4002: பவுலுக்கு சம்பவித்தவைகள் எதற்கு ஏதுவாயிற்று??
சுவிசேஷம் பிரபலமாகும்படி. பிலிப்பியர் 1:12
4003: எவை இரண்டிலும் பவுல் நெருக்கப்பட்டார்??
ஜீவன், சாவு. பிலிப்பியர்1:21-23
4004:கிறிஸ்துவுடனே கூட இருப்பது பவுலுக்கு எப்படியிருக்கும்??
அதிக நன்மையாய். பிலிப்பியர் 1:23
4005: ஒன்றையும் எவைகளினால் செய்யக்கூடாது??
வாதினாலும், வீண்பெருமையினாலும். பிலிப்பியர் 2:3
4006: ஒருவரையொருவர் எப்படி எண்ணவேண்டும்??
தங்களிலும் மேன்மையானவர்களாக. பிலிப்பியர் 2:3
4007: அவனவன் எவைகளை நோக்குவானாக??
பிறருக்கானவைகளை. பிலிப்பியர் 2:4
4008: யாரில் இருந்த சிந்தை நம்மிடத்தில் இருக்க வேண்டும்??
கிறிஸ்து இயேசு. பிலிப்பியர் 2:6
4009: அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் எது நிறைவேறப் பிரயாசப்பட வேண்டும்??
இரட்சிப்பு. பிலிப்பியர் 2:12
4010: பவுலுடனே கூட ஊழியம் செய்தவன் யார்??
தீமோத்தேயு. பிலிப்பியர் 2:22
4011: பவுலின் சகோதரனும் உடன் வேலையாளும் யார்??
எப்பாப்பிரோதீத்து. பிலிப்பியர் 2:25
4012: வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தவன் யார்??
எப்பாப்பிரோதீத்து. பிலிப்பியர் 2:27
4013: ஊழியத்திலே தன் பிராணனையும் எண்ணாமலிருந்தவன் யார்??
எப்பாப்பிரோதீத்து. பிலிப்பியர் 2:30
4014: எதின் மேல் நம்பிக்கையாயிராதவர்கள் விருத்தசேதனமுள்ளவர்கள்??
மாம்சம். பிலிப்பியர்3:3
4015: பவுல் எந்த வம்சத்தான்??
இஸ்ரவேல். பிலிப்பியர் 3:5
4016: பவுல் எந்த கோத்திரத்தான்??
பென்யமீன். பிலிப்பியர் 3:5
4017: பவுல் எதற்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருந்தார்??
கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக. பிலிப்பியர் 3:8
4018: பவுல் எதினால் வருகிற சுயநீதியை உடையவனாயிருக்கவில்லை??
நியாயப்பிரமாணம். பிலிப்பியர் 3:9
4019:பவுல் எதற்காக இலக்கை நோக்கித் தொடர்ந்தார்??
பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக. பிலிப்பியர் 3:14
4020: வேறுவிதமாய் நடக்கிறவர்கள் எதற்கு பகைஞராயிருந்தார்கள்??
கிறிஸ்துவின் சிலுவை. பிலிப்பியர் 3:18
4021: நம்முடைய குடியிருப்பு எங்கே இருக்கிறது??
பரலோகத்தில். பிலிப்பியர்3:20
4022: ஒரே சிந்தையாயிருக்க பவுல் யாருக்கு புத்தி சொன்னார்??
எயோதியாள், சிந்திகேயாள். பிலிப்பியர்4:2
4023: கர்த்தருக்குள் எப்பொழுதும் எப்படியிருக்க வேண்டும்??
சந்தோஷமாய். பிலிப்பியர் 4:4
4024: விண்ணப்பங்களை எப்படி தேவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும்??
ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும். பிலிப்பியர் 4:6
4025: இருதயங்களையும் சிந்தைகளையும் காத்துக்கொள்வது எது??
எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம். பிலிப்பியர் 4:7
4026: பவுல் எந்த நிலமையிலிருந்தாலும் எப்படியிருக்க கற்றுக்கொண்டார்??
மனரம்மியமாய். பிலிப்பியர் 4:11
4027: சுவிசேஷத்தின் ஆரம்பத்தில் பவுல் எங்கேயிருந்து புறப்பட்டார்??
மக்கெதோனியா. பிலிப்பியர் 4:15
4028: பவுலுக்கு உண்டாயிருந்தது என்ன??
பரிபூரணம். பிலிப்பியர் 4:18
4029: தேவன் எதின்படி குறைவையெல்லாம் நிறைவாக்குவார்??
தம்முடைய ஐஸ்வர்யம். பிலிப்பியர் 4:19
4030: பிலிப்பியருக்கு விசேஷமாக வாழ்த்துதல் சொன்னவர்கள் யார்??
இராயனுடைய அரமனையிலுள்ளவர்கள். பிலிப்பியர்4:22
4031: கொலோசே சபையின் விசுவாசிகள் யாரிடம் அன்பு கொண்டவராய் இருந்தனர்??
பரிசுத்தவான்கள் எல்லார்மேலும். கொலேசியர் 1:3
4032: உலகெங்கும் பரம்பி பலன் தருகிறது எது??
சுவிசேஷம். கொலோசெயர் 1: 6
4033: கொலோசெய சபை விசுவாசிகளின் ஆவிக்குள்ளான அன்பை பவுலுக்கு வெளிப்படுத்தினவன் யார்??
எப்பாப்பிரா. கொலோசெயர் 1:8
4034: பவுல் கொலோசெ திருச்சபையில் எதிர்பார்க்கும் கனி எது??
நற்கிரியையாகிய கனி. கொலோசெயர் 1:10
4035: எதோடு கூடிய பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாக வேண்டும்??
சந்தோஷத்தோடே கூடிய. கொலோசெயர் 1:11
4036: எதினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது??
குமாரனின் இரத்தத்தினாலே. கொலோசெயர் 1:14
4037: அதரிசனமான தேவனுடைய தற்சரூபம் யார்??
இயேசு கிறிஸ்து. கொலோசெயர் 1:15
4038: சர்வசிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் யார்??
குமாரனாகிய கிறிஸ்து. கொலோசெயர் 1:15
4039:எல்லாம் யாருக்குள் நிலைநிற்கிறது??
இயேசு கிறிஸ்துவுக்குள். கொலோசெயர் 1:17
4040: சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர் யார்??
இயேசு கிறிஸ்து. கொலோசெயர் 1: 18
4041: கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளே எது வாசமாயிருக்கும்??
சகலபரிபூரணமும். கொலேசியர் 1:19
4042: சுவிசேஷத்தைக் கேட்பதினால் நமக்கு எது உண்டாகின்றது ??
நம்பிக்கை. கொலேசியர் 1:22
4043: எது வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது??
சுவிசேஷம். கொலோசெயர் 1:23
4044: பவுல் எதில் சந்தோஷப்படுகிறார்??
பாடுகளில். கொலோசெயர் 1:24
4045: ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்தது என்ன??
தேவவசனம். கொலோசெயர் 1:25
4046: மகிமையின் நம்பிக்கையாக இருப்பவர் யார்??
கிறிஸ்துவானவர். கொலோசெயர்1:27
4047: எவ்விதமான பொக்கிஷங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறது??
ஞானம், அறிவு என்பவைகளாகிய பொக்கிஷம். கொலேசியர் 2:3
4048: கிறிஸ்துவானவர் நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த எதைக் குலைத்தார்??
கையெழுத்தை. கொலேசியர் 2:14
4049: சரீரம் முழுவதையும் ஆதரிப்பது எது??
தலை. கொலோசெயர் 2:18
4050: மாம்ச சிந்தையில் இறுமாப்பு கொண்டிருக்கிற எவனும் எதை இழந்து போவான்??
பந்தயப் பொருளை. கொலோசெயர் 2:19
4051: மாயமான தாழ்மையையும் சரீர ஒடுக்குதலும் என்ன பேர் கொண்டிருக்கிறது??
ஞானமென்கிற பேர் கொண்டிருக்கிறது. கொலோசெயர் 2:23
4052: கிறிஸ்து எங்கு வீற்றிருக்கிறார்??
தேவனுடைய வலது பாரிசத்தில். கொலோசெயர் 3:1
4053: கிறிஸ்துவுடனேகூட எழுந்தவர்கள் எதை நாடக்கூடாது??
பூமியிலுள்ளவைகளை. கொலோசெயர் 3:2
4054: கீழ்ப்படியாமையின் பிள்ளைகளின் மேல் எது வரும்??
தேவ கோபாக்கினை. கொலோசெயர் 3:6
4055: ஒருவருக்கொருவர் எது சொல்லாதிருக்க வேண்டும்??
பொய். கொலோசெயர் 3:9
4056:ஒருவர் பேரில் ஒருவருக்கு குறைவு உண்டானால் என்ன செய்ய வேண்டும்??
ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும். கொலோசெயர்3:13
4057: பூரண சற்குணத்தின் கட்டு எது??
அன்பு. கொலோசெயர் 3:14
4058: நம் இருதயத்தை எது ஆள வேண்டும்??
தேவசமாதானம். கொலேசியர் 3:15
4059: மனைவிகள் எவ்விதம் தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிய வேண்டும்??
கர்த்தருக்கேற்றபடி. கொலோசெயர் 3:18
4060: புருஷர்கள் தங்கள் மனைவிகளில் என்ன செய்ய வேண்டும்??
அன்புகூர வேண்டும். கொலோசெயர் 3:19
4061: பிள்ளைகள் எல்லாக் காரியத்திலும் பெற்றோருக்குக் கீழ்ப்படிவது யாருக்கு பிரியமானது??
கர்த்தருக்கு. கொலோசெயர் 3:20
4062: ஊழியக்காரன் எவ்வித இருதயத்தோடே ஊழியம் செய்ய வேண்டும்??
கபடமில்லாத இருதயத்தோடே. கொலோசெயர் 3:23
4063: அநியாயம் செய்கிறவன் எந்த பலனை அடைவான் ??
அநியாயத்திற்குரிய பலனை. கொலோசெயர் 3:25
4064: யாரிடத்தில் பட்சபாதம் இல்லை??
கர்த்தரிடத்தில். கொலோசெயர் 3:25
4065: எவ்விதம் ஜெபம் பண்ணவேண்டும்??
இடைவிடாமல். கொலோசெயர் 4:2
4066: ஜெபத்தில் எப்படி விழித்திருக்க வேண்டும்??
ஸ்தோத்திரத்துடன் விழித்திருக்க வேண்டும். கொலோசெயர் 4:2
4067:உங்கள் வசனம் எப்போழுதும் கிருபை பொருந்தினதாயும் எதினால் சாரமேறினதாயுமிருக்க வேண்டும்??
உப்பால். கொலோசெயர் 4:6
4068: பவுலின் பிரியமான சகோதரன் என்று அவன் யாரைக் குறிப்பிடுகிறார்??
தீகிக்கு. கொலோசெயர் 4:7
4069: பவுலின் பார்வைக்கு தீகிக்கு எப்படிப்பட்டவன்??
உண்மையுள்ள ஊழியக்காரன். கொலோசெயர் 4:7
4070: பவுலின் செய்திகளை யார் தெரிவிப்பதாக பவுல் சொல்கிறார்??
தீகிக்கு. கொலோசெயர் 4:7
4071:செய்திகளை அறியவும் இருதயங்களை தேற்றவும் பவுலால் அனுப்பப்படுகிற இருவர் யார்??
தீகிக்கு, ஒநேசிமு. கொலோசெயர் 4:8-9
4072: உண்மையும் பிரியமுமுள்ள சகோதரன் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகின்றார்??
ஒநேசிமுவை. கொலோசெயர் 4:9
4073: பவுலுடன் காவலில் இருக்கிறவன் யார்??
அரிஸ்தர்க்கு. கொலோசெயர் 4:10
4074: பவுலுடன் வேலையாட்களாயிருந்த விருத்தசேதனமுள்ளவர்கள் யாவர்??
அரிஸ்தர்க்கு, மாற்கு, யுஸ்து எனப்பட்ட இயேசு
4075: தன் ஜெபங்களில் கொலோசெயருக்காக போராடுகிறவன் யார்??
எப்பாப்பிரா. கொலோசெயர் 4:12
4076: கொலோசேயருக்கு வாழ்த்துதல் சொல்லுகிற வைத்தியன் யார்??
லூக்கா. கொலோசெயர் 4:14
4077: யாருடைய வீட்டில் கூடி வந்த சபையை வாழ்த்தும்படி பவுல் சொல்கிறார்??
நிம்பாவின் வீட்டில் கூடிய சபை. கோலோசேயர் 4:15
4078: பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற சபை என்று சொல்லப்பட்ட சபை எது??
தேசலோனிக்கியா சபை. 1 தெசலோனிக்கியர் 1:1
4079: வல்லமையோடும் பரிசுத்த ஆவியோடும் முழுநிச்சயத்தோடும் தெசலோனிக்கேயரிடத்தில் வந்தது எது??
சுவிசேஷம். 1 தெசலோனிக்கியர் 1:5
4080: மிகுந்த உபத்திரவத்திலே பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே திருவசனத்தை ஏற்றுக்கொண்டவர் யார்??
தேசலோனிக்கேயர். 1 தெச 1:6
4081: தெசலோனிக்கியருடைய எது எங்கும் பிரசித்தமாயிற்று??
தேவனைப் பற்றிய விசுவாசம். 1 தெச 1:1
4082: எதை விட்டு தெசலோனிக்கியர் மனம் திரும்பி தேவனிடத்தில் சேர்ந்தார்கள்??
விக்கிரகங்களை விட்டு. 1 தெச 1:9
4083: எதற்காக தெசலோனிக்கியர் விக்கிரகங்களை விட்டு மனந்திரும்பினார்கள்??
ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியம் செய்வதற்காக. 1 தெச 1:9
4084: எந்த பட்டணத்தில் பவுலும் அவர் தோழர்களும் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தனர்??
பிலிப்பி பட்டணத்தில். 1 தெச 2:2
4085: பவுலின் போதகம் எதினால் உண்டாகவில்லை??
வஞ்சகத்தினாலும், தூராசையினாலும். 1 தெச 2:3
4086: யாருக்குப் பிரியமுண்டாக பேசவேண்டும்??
தேவனுக்கே பிரியமுண்டாக. 1 தெச 2:4
4087: எதற்காக பவுல் இரவும் பகலும் வேலை செய்து தேவனுடைய சுவிசேஷத்தை பிரசங்கித்தார்??
ஒருவருக்கும் பாரமியிராதபடிக்கு. 1 தெச 2:9
4088: தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறது போல பவுல் சொன்னவைகள் யாவை??
புத்தியும், தேறுதலும், எச்சரிப்பும். 1 தெச 2:12
4089: தேவ வசனம் விசுவாசிக்கிறவர்களுக்குள்ளே என்ன செய்கிறது??
பெலன் செய்கிறது. 1 தெச2:13
4090: யூதர்கள் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறபடியால் அவர்கள் மேல் எது பூரணமாய் வந்திருக்கிறது??
கோபாக்கினை. 1 தெச2:15
4091: தெசலோனிக்கியரை திடப்படுத்த அனுப்பப்பட்டவன் யார்??
தீமோத்தேயு. 1 தெச 3:2
4092: பவுலுக்கு தீமோத்தேயு எதற்கு உடன் வேலையாளாயிருந்தார்??
கிறிஸ்துவின் சுவிசேஷத்தில். 1 தெச 3:2
4093: நாம் எவைகளை சகிக்க நியமிக்கப்பட்டிருக்கிறோம்??
உபத்திரவங்களை. 1 தெச 3:3
4094: பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வருபவர் யார்??
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. 1 தெச 3:13
4095: தேவனை அறியாதவராகள் யார்??
அஞ்ஞானிகள். 1 தெச 4:3
4096: நாம் எதற்கு உட்படக்கூடாது??
மோக இச்சை. 1 தெச 4:4
4097: எதை பரிசுத்தமாக ஆண்டு கொள்ள வேண்டும்??
தன் தன் சரீரபாண்டத்தை. 1 தெச 4:5
4098:ஒருவனும் யாரை வஞ்சியாமலும் இருக்க வேண்டும்??
தன் சகோதரனை. 1 தெச 4:6
4099: தேவன் நம்மை எதற்கு அழைத்திருக்கிறார்??
பரிசுத்தத்திற்கு. 1 தெச 4:7
4100: எதைக் குறித்து நான் உங்களுக்கு எழுத வேண்டுவதில்லை என்று பவுல் கூறினார்??
சகோதர சிநேகம். 1 தெச 4:9
4101:எது உள்ளவர்களாயிருக்கும்படி நாட வேண்டும்??
அமைதல். 1 தெச 4:12
4102: எவர்களினிமித்தம் நாம் துக்கித்து அறிவில்லாதிருக்கக் கூடாது??
நித்திரையடைந்தவர்கள்1 தெச 4:13
4103: உயிரோடிருக்கும் நாம் எதின் மேல் எடுத்துக் கொள்ளப்படுவோம்??
மேகங்கள் மேல். 1 தெச 4:17
4104: இரவிலே திருடன் வருகிற விதமாய் வருவது எது??
கர்த்தருடைய நாள். 1 தெச 5:2
4105: நாம் எவைகளின் பிள்ளைகளாயிருக்கிறோம்??
வெளிச்சம், பகல். 1 தெச 5:5
4106: நாம் எவைகளுக்கு உள்ளானவர்கள் அல்ல??
இரவு, இருள். 1 தெச 5:5
4107: விழித்துக்கொண்டு எப்படி இருக்க கடவோம்??
தெளிந்தவர்களாய். 1 தெச 5:6
4108: விசுவாசம் என்னும் எதைத் தரித்து கொண்டிருக்க வேண்டும்??
மார்க்கவசம். 1 தெச 5:8
4109:தேவன் நம்மை எதற்கென்று நியமிக்கவில்லை??
கோபாக்கினை. 1 தெச 5:9
4110: தேவன் நம்மை எதற்கென்று நியமித்தார்??
இரட்சிப்படைவதற்கென்று. 1 தெச 5:9
4111 : உங்களுக்கு எதைச் சொல்லுகிறவர்களை மதிக்க வேண்டும்??
புத்தி. 1 தெச 5:12
4112: உங்களுக்குள்ளே எப்படியிருங்கள்??
சமாதானமாய். 1 தெச 5:13
4113: எவர்களுக்கு புத்திச் சொல்ல வேண்டும்??
ஒழுங்கில்லாதவர்களுக்கு. 1 தெச 5:14
4114: எவர்களை தேற்ற வேண்டும்??
திடனற்றவர்களை. 1 தெச 5:14
4115: தீமைக்கு எதைச் செய்யக்கூடாது??
தீமை. 1 தெச 5:15
4116: எப்பொழுதும் எதைச் செய்ய நாட வேண்டும்??
நன்மை. 1 தெச 5:15
4117: இடைவிடாமல் என்ன செய்ய வேண்டும்??
ஜெபம். 1 தெச 5:17
4118: எல்லாவற்றிலேயும் என்ன செய்ய வேண்டும்??
ஸ்தோத்திரம். 1 தெச 5:18
4119: எதை அவித்துப் போடக்கூடாது??
ஆவியை. 1 தெச 5:19
4120: எதை அற்பமாக எண்ணக்கூடாது??
தீர்க்கதரிசனங்களை. 1 தெச 5:20
4121: தெசலோனிக்கேய சபைக்கு நிருபம் எழுதியவர்கள் யார்??
பவுல், சில்வான், தீமத்தேயு. 2 தெச 1:1
4122: தெசலோனிக்கியரிடத்தில் பெருகியது எது??
விசுவாசம். 2 தெச1:3
4123: உபத்திரவப்படுகிறவர்களுக்கு தேவன் ஏதைப் பிரதிபலனாகக் கொடுக்கிறார்??
இளைப்பாறுதல். 2 தெச 1:6
4124: தேவனை அறியாதவர்களுக்கு செலுத்தப்படுவது எது??
நீதியுள்ள ஆக்கினை. 2 தெச 1:7
4125: நித்திய அழிவாகிய தண்டனையை அடைபவர்கள் யார்??
தேவனை அறியாதவர்கள். 2 தெச 1:7-10
4126: எது சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால் சஞ்சலப்படக்கூடாது??
கிறிஸ்துவினுடைய நாள். 2 தெச 2:2
4127: முந்தி நேரிடுவது எது??
விசுவாச துரோகம். 2 தேச 2:3
4128: கேட்டின் மகன் யார்??
பாவமனுஷன். 2 தெச 2:3
4129: யார் வெளிப்பட்டாலொழிய கிறிஸ்துவின் நாள் வராது??
கேட்டின் மகனாகிய பாவ மனுஷன். 2 தெச 2:3
4130: இப்பொழுதே கிரியை செய்கிறது எது??
அக்கிரமத்தின் இரகசியம். 2 தெச 2:7
4131: கர்த்தர் யாரைத் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழிப்பார்??
அக்கிரமக்காரன். 2 தெச 2:8
4132: சாத்தானுடைய செயலின் படி இருப்பது எது??
அக்கிரமக்காரனுடைய வருகை. 2 தெச 2:9
4133: கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே இருப்பது எது??
அநீதி. 2 தெச 2:10
4134: அநீதியில் பிரியப்படுகிற யாவரும் எதை விசுவாசிப்பார்கள்??
பொய்யை. 2 தெச 2:12
4135: பொய்யை விசுவாசிக்கிறவர்களுக்குள்ளே தேவன் எதை அனுப்புவார்??
கொடிய வஞ்சகத்தை. 2 தெச 2:12
4136: தெசலோனிக்கியரிடத்தில் பரம்பி மகிமைப்படுவது எது??
கர்த்தருடைய வசனம். 2 தெச 3:1
4137: எல்லாரிடத்திலும் இல்லாதது எது??
விசுவாசம். 2 தெச 3:2
4138: கர்த்தர் நம் இருதயங்களை எதற்கு நேராய் நடத்துவார்??
தேவனை பற்றும் அன்பு. 2 தெச 3:5
4139: எவர்களை விட்டு விலக வேண்டும்??
ஒழுங்கற்று நடக்கிற எந்த சகோதரனையும். 2 தெச 3:6
4140: இரவும் பகலும் வேலை செய்து சாப்பிட்டவர்கள் யார்??
பவுல். சில்வான், தீமோத்தேயு. 2 தெச 3:8
4141: ஒருவன் எதைச் செய்ய மனதில்லாதிருந்தால் சாப்பிடவும் கூடாது??
வேலை. 2 தெச 3:10
4142: அமைதலோடு வேலை செய்து எதைச் சாப்பிட வேண்டும்??
சொந்த சாப்பாட்டை. 2 தெச 3:12
4143: எதைச் செய்வதில் சோர்ந்து போகாமலிருக்க வேண்டும்??
நன்மை. 2 தெச 3:13
4144: விசுவாசத்தில் உத்தம குமாரன் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்??
தீமோத்தேயுவை. 1 தீமோத்தேயு 1:2
4145: போதிப்பதில் எவ்வித உபதேசங்களை போதிக்கக் கூடாது??
வேற்றுமையான உபதேசங்களை. 1 தீமோத்தேயு 1:3
4146: மனிதனுக்கு தெய்வீக பக்திவிருத்தி எதினால் உண்டாகும்??
விசுவாசத்தினால். 1 தீமோத்தேயு 1:3
4147: கட்டுக்கதைகள் எதற்கு ஏதுவாக இருக்கிறது??
தர்க்கங்களுக்கு. 1 தீமோத்தேயு 1:3
4148: முடிவு இல்லாதது எது என பவுல் குறிப்பிடுகின்றார்??
வம்ச வரலாறு. 1 தீமோத்தேயு 1:3
4149:கற்பனையின் பொருள் என்ன??
சுத்தமான இருதயத்திலும் நல் மனசாட்ச்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பு. 1 தெச 1:5
4150: எப்பொழுது நியாயப்பிரமாணம் நல்லதாயிருக்கிறது??
நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அனுசரிக்கும் போது. 1 தீமோத்தேயு 1:8
4151: நியாயப்பிரமாணம் யாருக்கு விதிக்கப்படவில்லை??
நீதிமானுக்கு. 1 தீமோத்தேயு 1:9
4152: ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிறது எது??
நியாயப்பிரமாணம். 1 தீமோத்தேயு 1:11
4153: பவுலை எவ்வாறு எண்ணி ஊழியத்திற்கு கர்த்தர் ஏற்படுத்தினார்??
உண்மையுள்ளவர் என்றெண்ணி. 1 தீமோத்தேயு 1:12
4154: எந்த வார்த்தை உண்மையானதும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமுமானது??
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்ற வார்த்தை. 1 தீமோத்தேயு 1:15
4154:பவுல் தன்னை கிறிஸ்துவுக்கு முன்பாக நிறுத்துகின்ற போது தன்னை எவ்விதம் காண்கின்றார்??
தான் பாவிகளில் பிரதானமானவன் என்று. 1 தீமோத்தேயு 1:15
4155: இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் வைப்பவர்கள் எதை அடைவார்கள்??
நித்திய ஜீவனை. 1 தீமோத்தேயு 1:16
4156: தீமோத்தேயுவை பவுல் என்ன உறவு முறைப்படி அழைக்கிறார்??
குமாரன் முறைப்படி. 1 தீமோத்தேயு 1:18
4157: நல் மனச்சாட்ச்சியைத் தள்ளி விட்ட சிலர் எதைச் சேதப்படுத்தினார்கள்??
விசுவாசக் கப்பலை. 1 தீமோத்தேயு 1:19
4158: அப்போஸ்தலனாகிய பவுலினால் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட இருவர் யார்??
இமெனேயும், அலக்சந்தரும். 1 தீமோத்தேயு 1:20
4159: பவுல் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தி என்ன??
எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் பண்ணவேண்டும். 1 தீமோத்தேயு 2:1
4160: எவ்வித ஜெபம் பண்ண வேண்டும் எனப் பவுல் போதிக்கிறார்??
பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும். 1 தீமோத்தேயு 2:2
4161: நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக நன்மையும் பிரியமுமாயிருப்பது எது??
ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஏறெடுப்பது. 1 தீமோத்தேயு 2:3
4162: தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தராயிருக்கிறவர் யார்??
இரட்சகராகிய இயேசு கிறிஸ்து. 1 தீமோத்தேயு 2:4
4163: பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மை சொல்லும் அப்போஸ்தலன் யார்??
அப்போஸ்தலனாகிய பவுல். 1 தீமோத்தேயு 2:7
4164: கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி ஜெபிக்க வேண்டியவர் யார்??
புருஷர்கள். 1 தீமோத்தேயு 2:8
4165: ஸ்திரீகள் அணிய வேண்டிய வஸ்திரம் எது??
தகுதியான வஸ்திரம். 1 தீமோத்தேயு 2:10
4166: ஸ்திரீகள் தங்களை எவைகளினால் அலங்கரிக்க வேண்டும்??
நற்கிரியைகளினால். 1 தீமோத்தேயு 2:10
4167: படைப்பின் காலத்தில் வஞ்சிக்கப்பட்டவள் யார்??
ஏவாள். 1 தீமோத்தேயு 2:13
4168: எது உண்மையான வார்த்தை??
கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான் என்பது 1 தீமோத்தேயு 3:1
4169: கண்காணியானவன் எப்படி இருக்க வேண்டும்??
குற்றம்சாட்டப்படாதவனாயிருக்க வேண்டும். 1 தீமோத்தேயு3:2
4170: கண்காணியானவனுக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் யாவை??
பொறுமையுள்ளவனும் சண்டை பண்ணாதவனும் பண ஆசை இல்லாதவனும். 1 தீமோத்தேயு 3:4
4171: சொந்த குடும்பத்தை நடத்த அறியாதவன் யாருடைய குடும்பத்தை விசாரிக்க கூடாது??
தேவனுடைய சபையை. 1 தீமோத்தேயு 3:5
4172: பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழுகிறவன் யார்??
இறுமாப்படைகிறவன். 1 தீமோத்தேயு 3:6
4173: கண்காணியானவன் எந்த விஷயத்தில் விழக்கூடாது??
நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும். 1 தீமோத்தேயு 3:7
4174: யார் இரு நாக்குள்ளவர்களாய் இருக்க கூடாது??
உதவிக்காரர். 1 தீமோத்தேயு 3:8
4175: யார் உதவிக்காரராக ஊழியம் செய்யலாம்??
குற்றஞ்சாட்டப்படாதவர்கள். 1 தீமோத்தேயு 3:10
4176: ஸ்திரீகள் எது பண்ணக்கூடாது??
அவதூறு பண்ணக்கூடாது. 1 தீமோத்தேயு 3:11
4177: சத்தியத்துக்குத் தூதனாயிருப்பது எது??
தேவனுடைய வீடு. 1 தீமோத்தேயு 3:15
4178: எது மகா மேன்மையானது??
தேவபக்த்திக்குரிய இரகசியமானது. 1 தீமோத்தேயு 3:16
4179: தேவன் யாரால் காணப்பட்டார்??
தேவ தூதர்களால். 1 தீமோத்தேயு 3:16
4180: பிசாசுகளின் உபதேசத்துக்குச் செவி கொடுத்தவர்கள் எதை விட்டு விலகிப்போனார்கள்??
விசுவாசத்தை விட்டு. 1 தீமோத்தேயு 4:1
4181: எவ்விதம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தேவன் படைத்தைவைகள் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல??
தேவ வசனத்தினாலும் ஜெபத்தினாலும். 1 தீமோத்தேயு 4:5
4182: அற்ப பிரயோஜனமுள்ளது எது??
சரீர முயற்சி. 1 தீமோத்தேயு 4:8
4183: எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது எது??
தேவ பக்தி. 1 தீமோத்தேயு 4:8
4184: உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமானது எது??
கர்த்தருடைய வார்த்தை. 1 தீமோத்தேயு 4:9
4185: எவற்றில் விசுவாசிகளுக்கு மாதிரியாயிருக்க தீமோத்தேயுவுக்கு பவுல் கட்டளையிடுகிறார்??
வார்த்தையிலும் நடக்கையிலும் ஆவியிலும் விசுவாசத்திலும் கற்பிலும். 1 தீமோத்தேயு 4:12
4186: யாரைக் கடிந்து கொள்ளக்கூடாது??
முதிர்வயதுள்ளவர்களை. 1 தீமோத்தேயு 5:1
4187: இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பவள் யார்??
உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருப்பவள். 1 தீமோத்தேயு 5 :5
4188: யார் உயிரோடே செத்தவள் ??
சுகபோகமாய் வாழ்கிறவள். 1 தீமோத்தேயு 5:6
4189: விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட எத்தனை வயதுக்கு குறையாதவளாயிருக்க வேண்டும்??
அறுபது வயது. 1 தீமோத்தேயு 5:9
4190: சோம்பலுள்ளவர்களாய் வீடுவீடாகத் திரியப் பழகுகிறவர்கள் யார்??
இளம் வயதின் விதவைகள். 1 தீமோத்தேயு 5:13
4191: இளம் வயதின் விதவைகளுக்கு எது தடையில்லை??
விவாகம் பண்ணவும் பிள்ளைகள் பெறவும் வீட்டை நடத்தவும். 1 தீமோத்தேயு 5:14
4192: உத்தம விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டியது யாருடைய கடமை??
சபையாரின் கடமை. 1 தீமோத்தேயு 5:16
4193: இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக யாரை எண்ண வேண்டும்??
நன்றாய் விசாரணை செய்கிற மூப்பரை. 1 தீமோத்தேயு 5:17
4194: எந்த மாட்டின் வாயைக் கட்டக்கூடாது??
போரடிக்கிற மாட்டின். 1 தீமோத்தேயு 5:18
4195: வேலையாள் எதற்குப் பாத்திரன் ??
கூலிக்கு. 1 தீமோத்தேயு 5:18
4196: எதற்கு உடன்படலாகாது??
மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கு. 1 தீமோத்தேயு 5:22
4197: எது மிகுந்த ஆதாயம்??
போதுமென்கிற மனதுடன் கூடிய தேவ பக்தி. 1 தீமோத்தேயு 6:6
4198: எது உண்டானால் அது போதும் என்று இருக்க வேண்டும்??
உண்ணவும் உடுக்கவும் உண்டானால். 1 தீமோத்தேயு 6:8
4199: சோதனையிலும் கண்ணியிலும் விழுகிறவர் யார்??
ஐசுவரியவானாக விரும்புகிறவர்கள். 1 தீமோத்தேயு 6:9
4200: எல்லாத் தீமைக்கும் வேராயிருப்பது எது??
பண ஆசை. 1 தீமோத்தேயு 6:10
4201: தேவனுடைய சந்நிதானத்திலும் பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையை சாட்சியாக அறிவித்தவர் யார்??
கிறிஸ்து இயேசு. 1 தீமோத்தேயு 6:14
4202: எதன் மேல் நம்பிக்கை வைக்கலாகாது??
நிலையற்ற ஐசுவரியத்தின் மேல். 1 தீமோத்தேயு 6:17
4203: எதற்கு விலக வேண்டும்??
சீர்கேடான வீண் பேச்சுகளுக்கு. 1 தீமோத்தேயு 6:19
4204: கிறிஸ்து இயேசுவினால் உண்டான வாக்குதத்தம் எதைப் பற்றியது??
ஜீவனைப் பற்றியது. 2 தீமோ 1:1
4205: தீமோத்தேயுவிடத்திலுள்ள எந்த விசுவாசத்தைப் பவுல் நினைவு கூறுகின்றார்??
மாயமற்ற விசுவாசம். 2 தீமோ 1:4
4206: தீமோத்தேயுவின் பாட்டியின் பெயர் என்ன??
லோவிசாள். 2 தீமோ 1:5
4207: தீமோத்தேயுவின் தாயின் பெயர் என்ன??
ஐனிக்கேயாள். 2 தீமோ 1:5
4208: பவுல் தீமோத்தேயுவின் மேல் தன் கைகளை வைத்தபடியால் தீமோத்தேயு எதைப் பெற்றான்??
தேவ வரத்தை. 2 தீமோ 1:6
4209: தேவன் நமக்கு கொடாத ஆவி எது??
பயமுள்ள ஆவி. 2 தீமோ 1:7
4210: தேவன் நமக்கு கொடுத்திருக்கும் ஆவி எப்படிப்பட்டது??
பலமும் ; அன்பும்; தெளிந்த புத்தியுமுள்ள ஆவி. 2 தீமோ 1:17
4211: பவுல் எதற்காகத் தன்னுடன் தீங்கனுபவிக்க தீமோத்தேயுவிடம் கூறுகின்றார்??
சுவிசேஷத்திற்காக. 2 தீமோ 1:8
4212: எதைக் குறித்து வெட்கபடாமலிருக்க வேண்டும்??
கர்த்தரைப் பற்றிய சாட்சியைக் குறித்து. 2 தீமோ 1:8
4213: கர்த்தர் எதன்படி நம்மை இரட்சிக்கவில்லை??
நம்முடைய கிரியையின்படி. 2 தீமோ 1:9
4214: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமானதினாலே எது வெளிப்பட்டது??
கிருபை. 2 தீமோ 1:10
4215: பவுலை விட்டு எந்த நாட்டினர் யாவரும் விலகினார்கள்??
ஆசியா நாட்டிலிருக்கிற யாவரும். 2 தீமோ 1:15
4216: ஆசியா நாட்டிலிருக்கிறவர்களில் சிறப்பான இருவர் பவுலை விட்டு விலகினார்கள் அவர்கள் யார்??
பிகெல்லு, எர்மொகெனே. 2 தீமோ 1:15
4217: கர்த்தர் யாருடைய வீட்டாருக்கு இரக்கம் கட்டளையிடுவார்??
ஒநேசிப்பேரு. 2 தீமோ 1:16
4218: பவுலின் எதைக் குறித்து ஒநேசிப்பேரு வெட்கப்படவில்லை??
பவுலின் விலங்கைக் குறித்து. 2 தீமோ 1:16
4219: ஒநேசிப்பேரு எபேசுவிலே செய்த பற்பல உதவிகளை நன்றாய் அறிந்தவன் யார்??
தீமோத்தேயு. 2 தீமோ 1:18
4220: தன்னுடைய பிழைப்புக்கடுத்த அலுவல்களில் யார் சிக்கிக் கொள்ள மாட்டான்??
தண்டில் சேவகம் பண்ணுகிறவன். 2 தீமோ 2:4
4221: மல்யுத்தம் பண்ணுகிறவன் எதன்படி பண்ண வேண்டும்??
சட்டத்தின் படி. 2 தீமோ 2:5
4222: பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் எதில் பங்கடைய வேண்டும்??
பலனில். 2 தீமோ 2:6
4223: பவுலின் கருத்துப்படி எது கட்டப்பட்டிருக்கவில்லை??
தேவ வசனம். 2 தீமோ 2:9
4224: நாம் உண்மை இல்லாதவராக இருந்தாலும் இயேசு எவ்வாறிருக்கிறார்??
உண்மையுள்ளவராயிருக்கிறார். 2 தீமோ 2:13
4225: ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாததும் கவிழ்த்து போடுகிறதற்கு ஏதுவானது எது??
வாக்குவாதம். 2 தீமோ 2:14
4226: எவ்விதமான வீண்பேச்சுக்கு விலகி இருக்க வேண்டும்??
சீர்கேடான வீண் பேச்சுகளுக்கு. 2 தீமோ 2:16
4227: கள்ளப் போதகர்களுடைய வார்த்தை எதைப்போல படரும்??
அரிப்பிளவையைப் போல. 2 தீமோ 2:17
4228: அரிப்பிளவையைப் போல படரும் தன்மையுள்ள இருவர்??
இமநேயும் பிலேத்தும். 2 தீமோ 2:17
4229: கர்த்தர் யாரை அறிவார்??
தம்முடையவர்களை. 2 தீமோ 2:19
4230: கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிறவன் எவனும் எதை விட்டு விலக வேண்டும்??
அநியாயத்தை விட்டு. 2 தீமோ 2:19
4231: ஒருவன் அநியாயத்தை விட்டு விலகி தன்னைச் சுத்திகரித்துக் கொண்டால் அவன் எவ்விதமாய் இருப்பான்??
பரிசுத்தமாக்கப்பட்டவனாய். 2 தீமோ 2:21
4232: எவ்வித இருதயத்தோடே கர்த்தரைத் தொழுது கொள்ள வேண்டும்??
சுத்த இருதயத்தோடே. 2 தீமோ 2:22
4233: எவைகள் சண்டைகளைப் பிறப்பிக்கும்??
புத்தியீனமும், அயுக்தமுமான தர்க்கங்கள். 2 தீமோ 2:23
2234: எப்பொழுது கொடிய காலங்கள் வரும்??
கடைசி நாட்களில். 2 தீமோ 3:1
2235: மோசேக்கு எதிர்த்து நின்றவர்கள் யார்??
யந்நேயும், யம்பிரேயும். 2 தீமோ 3:8
2236: பாவங்களால் நிறைந்த மனுஷர்கள் எதற்கு எதிர்த்து நிற்கிறார்கள்??
சத்தியத்திற்கு. 2 தீமோ 3:8
2237: சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிறவர்கள் எவ்வித புத்தியுள்ள மனுஷர்கள்??
துர்ப்புத்தியுள்ளவர்கள். 2 தீமோ 3:8
2238: பவுலுக்கு எந்த பட்டணங்களில் துன்பங்கள் உண்டானது??
அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா. 2 தீமோ 3:11
2239: கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் எதை அநுபவிப்பார்கள்??
துன்பத்தை. 2 தீமோ 3:12
2240: மோசம் போக்குகிறவர்கள் யார்??
பொல்லாதவர்களும், எத்தர்களுமானவர்கள். 2 தீமோ 3:13
4241: ஒருவனை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக மாற்றுகிறது எது??
பரிசுத்த வேத எழுத்துக்கள். 2 தீமோ 3:15
4242: வேதவாக்கியங்கள் எவைகளுக்கெல்லாம் பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது??
உபதேசத்திற்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர் திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும். 2 தீமோ 3:17
4243: பவுல் எவற்றை சாட்ச்சியாக வைத்து கட்டளையிடுகிறார்??
இயேசு கிறிஸ்துவின் பிரசன்னமாகுதலையும், அவருடைய இராஜ்யத்தையும். 2 தீமோ 4:1
4244: சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் எதை ஜாக்கிரதையாய் பிரசங்கம் பண்ண வேண்டும்??
திருவசனத்தை. 2 தீமோ 4:2
4245: எதை ஜனங்கள் பொறுக்க மனமற்றவர்களாயிருக்கின்றனர்??
ஆரோக்கியமான உபதேசத்தை. 2 தீமோ 4:3
4246: நல்ல போராட்டம் போராடி ஓட்டத்தை முடித்தவன் யார்??
பவுல். 2 தீமோ 4:7
4247: நீதியின் கிரீடம் யாருக்கு கொடுக்கப்படும்??
அவர் பிரசன்னமாகுதலை விரும்புகிற யாவருக்கும். 2 தீமோ 4:8
4248: இப்பிரபஞ்சத்தின் மீது நம்பிக்கை வைத்து பவுலை விட்டு பிரிந்து சென்றவன் யார்??
தேமா. 2 தீமோ 4:10
4249: தேமா பவுலை விட்டு பிரிந்து எந்த பட்டணத்துக்கு போனான்??
தெசலோனிக்கே பட்டணத்துக்கு. 2 தீமோ 4:10
4250: பவுலை விட்டு பிரிந்த கிரெஸ்கே எங்கு சென்றான்??
கலாத்தியா நாட்டிற்கு. 2 தீமோ 4:10
4251: பவுலைப் பிரிந்து தீத்து எந்த நாட்டிற்குச் சென்றான்??
தல்மாத்தியா நாட்டிற்கு. 2 தீமோ 4:10
4252: ஊழியத்தில் பவுலுக்குப் பிரயோஜனமாயிருந்தவன் யார்??
மாற்கு. 2 தீமோ 4:11
4253: பவுலின் மேலங்கியும் புஸ்தகங்களும் விசேஷமாக தோல் சுருளும் யாரிடம் இருந்தது??
கார்ப்பு என்பவனிடம். 2 தீமோ 4:13
4254: அலெக்சாந்தர் என்ன தொழில் செய்தவன்??
கன்னான். 2 தீமோ 4:14
4255: எதன் வாயிலிருந்து நான் இரட்சிக்கப்பட்டேன் என்று பவுல் கூறுகின்றார்??
சிங்கத்தின் வாயிலிருந்து. 2 தீமோ 4:17
4256: கர்த்தர் எல்லா தீமையினின்றும் தன்னை இரட்சித்து எதை அடையும்படி காப்பாற்றுவார் எனப் பவுல் நம்பினார்??
பரம இராஜ்யத்தை அடையும் படி. 2 தீமோ 4:18
4257: கொரிந்து பட்டணத்தில் இருந்து விட்டவன் யார்??
எரஸ்து. 2 தீமோ 4:20
4258: மூப்பனாக நியமிக்கப்படுபவரின் பிரதானமான குணம் எது??
குற்றம் சாட்டப்படாதவன். தீத்து 1:6
4259: கண்காணியானவன் யாருக்கு ஏற்றவிதமாய் இருக்க வேண்டும்??
தேவனுடைய உக்கிராணக்காரனுக்கு ஏற்றவிதமாய். தீத்து 1:7
4260: கண்காணியானவன் எவ்வித ஆதாயத்தை இச்சிக்கக் கூடாது??
இழிவான ஆதாயத்தை. தீத்து 1:7
4261: கண்காணியானவனுக்கு இருக்க வேண்டிய மூன்று பண்புகள் யாவை??
நீதிமானும், பரிசுத்தனும், இச்சையடக்கமுள்ளவனும். தீத்து 1:8
4262: ஓயாப் பொய்யர் என்று பவுல் யாரைக் குறிப்பிடுகிறார்??
கிரேத்தா தீவார். தீத்து 1:12
4263: எவ்வித உபதேசத்தைப் பேசும் படி தீத்துவுக்கு பவுல் கட்டளையிடுகிறார்??
ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளை. தீத்து 2:1
4264: முதிற்வயதுள்ள ஸ்திரீகள் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும்??
பரிசுத்தத்திற்கு ஏற்ற விதமாய். தீத்து 2:3
4265: நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பிக்க வேண்டியவன் யார்??
தீத்து. தீத்து 2:7
4266: நாம் வெறுக்கவேண்டியவைகள் யாவை??
அவபக்தியையும், லௌகீக இச்சைகளையும்
4267: நாம் எதை நம்பி இவ்வுலகில் ஜீவனம் பண்ணுகிறோம்??
ஆனந்த பாக்யத்தை நம்பி. தீத்து 2:13
4268: எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்க பிரசன்னமானது எது??
தேவகிருபை. தீத்து2:11
4269: முற்காலத்தில் எவ்வித பாவத்துக்குட்பட்டிருந்தோம்??
புத்தியீனம் கீழ்ப்படியாமை, வழிதப்பி நடத்தல், இச்சைகள் துன்பங்கள் ஆகியவற்றிற்கு. தீத்து 3:3
4270: முற்காலத்தில் எவற்றோடு ஜீவனம் பண்ணி வந்தோம்??
பொறாமையோடும், துர்குணத்தோடும். தீத்து 3:3
4271 : நம்மை தேவன் எவ்விதம் இரட்சித்தார்??
தமது இரக்கத்தினாலும் மறுஜென்ம முழுக்கினாலும் பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும். தீத்து 3:5
4272: நாம் எதினாலே நீதிமான்களாக்கப்பட்டோம்??
அவரது கிருபையினாலே. தீத்து 3:6
4273: எது செய்ய நாம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்??
நற்கிரியை செய்ய. தீத்து 3:8
4274: மனுஷனுக்கு நன்மையும் பிரயோஜனமுமானது எது??
நற்கிரியை செய்வது. தீத்து 3:8
4275: மனுஷனுக்கு அப்பிரயோஜனமும் வீணுமானது எது??
வாக்குவாதங்கள். தீத்து 3:9
4276: எந்த நம்பிக்கையின்படி நாம் சுதந்தரரானோம்??
நித்திய ஜீவன் உண்டாகும் என்கிற நம்பிக்கையின் படி. தீத்து 3:6
4277: பவுலின் பிரியமுள்ளவனும் உடன் வேலைக்காரனுமாயிருந்தவன் யார்??
பிலமோன். பில 1
4278: பவுல் பிலமோனுக்கு எழுதிய நிருபம் யார் யாருக்கு எழுதப்பட்டது??
அப்பியாளுக்கும், அர்க்கிப்புக்கும், சபைக்கும். தீத்து 2
4279: பவுலின் உடன் போர்ச்சேவகன் யார்??
அர்கிப்பு. பில 2
4280: பிலமோனிடத்தில் உள்ள எது பிறருக்குத் தெரியப்படுகின்றது??
சகல நன்மைகளும். பில 6
4281: யாருடைய உள்ளங்கள் பிலேமோனினாலே இளைப்பாறுதல் அடைந்துள்ளது??
பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள். பிலோ 7
4282: பவுல் பெற்ற மகன் என்று அவர் யாரைக் குறிப்பிடுகின்றார்??
ஒநேசிமுவை. பிலோ 10
4283: பவுலின் உள்ளம் போலிருக்கிறவன் என்று யாரை குறிப்பிடுகிறார்??
ஒநேசிமுவை. பிலோ 12
4284: சரீரத்தின் படியும் கர்த்தருக்குள்ளும் பவுலின் பிரியமான சகோதரன் யார்??
ஒநேசிமு. பிலோ 16
4285: கிறிஸ்து இயேசுவினிமித்தம் பவுலோடு காவலில் வைக்கப்பட்டிருக்கிற இன்னொருவர் யார்??
எப்பாப்பிரா. பிலோ 23
4286: யாரைக் கொண்டு உலகங்கள் உண்டாக்கப்பட்டன??
குமாரனாகிய இயேசுவைக் கொண்டு. எபிரேயர் 1:2
4287: யாரைப் பார்க்கிலும் விசேஷித்த நாமத்தைக் குமாரனாகிய இயேசு தரித்துக்கொண்டார்??
தேவதூதர்களைப் பார்க்கிலும். எபிரேயர் 1:4
4288: இயேசுவை யார் ஜெநிப்பித்தார்??
பிதாவாகிய தேவன். எபிரேயர் 1:5
4289: கர்த்தருடைய ராஜ்யத்தின் செங்கோல் எப்படிப்பட்டது??
நீதியுள்ளது. எபி 1:8
4290: எவ்வித தைலத்தினால் இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டார்??
ஆனந்த தைலத்தினால். எபி 1:9
4291: வானமும் பூமியும் எல்லாம் எதைப்போல பழமையாய்ப் போம்??
வஸ்திரத்தைப் போல். எபிரேயர் 1:12
4292: வானத்தையும் பூமியையும் எதைப்போல கர்த்தர் சுருட்டுவார்??
சால்வையைப் போல. எபிரேயர் 1:12
4293: தேவனாகிய கர்த்தருடைய எது முடிந்து போவதில்லை??
ஆண்டுகள். எபிரேயர் 1:12
4294: பணிவிடை ஆவிகள் எதற்காக அனுப்பப்படுகிறார்கள்?
ஊழியம் செய்வதற்காக. எபிரேயர் 1:14
4295: வசனம் யார் மூலமாய் சொல்லப்பட்டது??
தேவதூதர்கள் மூலமாய். எபிரேயர் 2:7
4296: கீழ்ப்படியாமைக்கு எவ்வித தண்டனை வரும்??
நீதியான தண்டனை. எபிரேயர் 2:2
4297: வசனம் முதலாவது யார் மூலமாய் அறிவிக்கப்பட்டது??
கர்த்தர் மூலமாய். எபிரேயர் 2:3
4298: எதைக் குறித்து கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு தப்பித்துக் கொள்ள முடியாது??
இரட்சிப்பை. எபிரேயர் 2:4
4299: கர்த்தர் எதை தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை??
இனிவரும் உலகத்தை. எபிரேயர் 2:5
4300: கர்த்தரின் கிரியைகளின் மேல் யாரைக் கர்த்தர் அதிகாரியாக வைத்தார்??
மனுஷனை. எபிரேயர் 2:7
4301: மரணத்துக்கு அதிகாரியானவன் யார்??
பிசாசானவன். எபிரேயர் 2:14
4302: மரணபயம் எவ்வளவு காலம் இருக்கும்??
ஜீவகாலமெல்லாம். எபிரேயர் 2:15
4303: தேவதூதருக்கு உதவியாக கைகொடாமல் யாருடைய சந்ததிக்கு உதவியாகக் கை கொடுத்தார்??
ஆபிரகாமின் சந்ததிக்காக. எபிரேயர் 2:16
4304: அவர் சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே யாருக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்??
சோதிக்கப்படுகிறவர்களுக்கு. எபிரேயர் 2:18
4305: அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிறவர் யார் ??
கிறிஸ்து இயேசு. எபி 3:1
4306: தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தவன் யார்??
மோசே. எபிரேயர் 3:2
4307: தன்னை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறவர் யார்?
கிறிஸ்து இயேசு. எபிரேயர் 3:2
4308: நம்பிக்கையினாலே எது உண்டாகும்??
தைரியம். எபிரேயர் 3:6
4309: மேன்மைபாராட்டுதல் எதனால் வரும் ??
நம்பிக்கையினால் வரும். எபிரேயர் 3:6
4310: ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான எவ்வித இருதயம் இருக்ககூடாது??
அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம். எபிரேயர் 3:12
4311: கோபமூட்டுதலில் நடந்தது என்ன??
இருதயத்தை கடினப்படுத்தினார்கள். எபிரேயர் 3:15
4312:எகிப்திலிருந்து கர்த்தரின் ஜனத்தை யாரால் புறப்படப்பண்ணினார்??
மோசேயினால். எபிரேயர் 3:16
4313:பாவஞ் செய்தவர்களின் சவங்கள் எங்கே விழுந்து போயிற்று??
வனாந்தரத்தில். எபிரேயர் 3:17
4314: எதினாலே அவர்கள் இளைப்பாறுதலில் பிரவேசிக்கக் கூடாமலிருந்தது??
அவிசுவாசத்தினால். எபிரேயர் 3:19
4315: இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறவர்கள் யார்??
விசுவாசித்தவர்கள். எபிரேயர் 4:3
4316: கர்த்தருடைய கிரியைகள் எப்போது முடிந்திருந்தது??
உலகத்தோற்ற முதல். எபிரேயர் 4:3
4317: வெகு காலத்துக்கு பின்பு தங்கள் இருதயத்தைக் கடினபடுத்தாதிருங்கள் என்று எங்கு சொல்லப்பட்டிருக்கிறது??
தாவீதின் சங்கீதத்தில். எபிரேயர் 4:7
4318: யார் அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தவில்லை??
யோசுவா. எபிரேயர் 4:8
4319: இருபுறமும் கருக்குள்ள பட்டயம் எது??
தேவனுடைய வார்த்தை. எபிரேயர் 4:12
4320: வானங்கள் வழியாய்ப் பரலோகத்திற்குப் போனவர் யார்??
தேவகுமாரனாகிய இயேசு. எபிரேயர் 4:14
4321: நமக்கு இருக்கிற பிரதான ஆசாரியர் நம்முடைய எதைக் குறித்து பரிதபிக்கக்கூடியவர்??
பலவீனங்களைக் குறித்து. எபிரேயர் 4:15
4322: நமக்கு இருக்கிற பிரதான ஆசாரியரிடம் எது இல்லாதிருந்தது??
பாவம் இல்லாதிருந்தது. எபி 4:15
4323: ஏற்ற காலத்தில் நமக்கு கிடைப்பது எது??
சகாயஞ் செய்யும் கிருபை. எபிரேயர் 4:16
4324: ஜனங்களுடைய பாவங்களுக்காக பலியிட வேண்டியது யார்??
பிரதான ஆசாரியன். எபிரேயர் 5:3
4325: ஆசாரிய ஊழியத்துக்கு என்று ஒருவன் யாரால் அழைக்கப்பட வேண்டும்??
தேவனால். எபிரேயர் 5:4
4326: ஆசாரிய ஊழியத்துக்கு தேவனால் அழைக்கப்பட்டவன் யாரைப் போல அழைக்கப்பட்டிருக்க வேண்டும்??
ஆரோனைப் போல. எபிரேயர் 5:4
4327: கிறிஸ்துவை தேவன் எந்த நிலைக்கு உயர்த்தினார்??
பிரதான ஆசாரியத்துவ நிலைக்கு. எபிரேயர் 5:5
4328: மெல்கிசதேக்கின் முறைமையின்படி ஆசாரியரானவர் யார்??
கிறிஸ்து. எபிரேயர் 5:6
4329: எந்த கிரியைகளுக்கு நீங்கலாக வேண்டும்??
செத்த கிரியைகளுக்கு. எபிரேயர் 6:1
4330: தேவனுடைய குமாரனை மறுபடியும் சிலுவையில் அறைகிறவர்கள் யார்??
மறுதலித்து போனவர்கள். எபிரேயர் 6:6
4331: தன் மேல் பெய்கிற மழையைக் குடிக்கின்றது எது??
நிலம். எபிரேயர் 6:7
4332: எந்த நிலம் தகாததாய்ப் போம்??
முள் பூண்டுகளை முளைப்பிக்கிற நிலம். எபிரேயர் 6:8
4333: வாக்குதத்தமான ஆசீர்வாதங்களை எதனால் சுதந்தரித்துக் கொள்ள வேண்டும்??
விசுவாசத்தினால். எபிரேயர் 6:11
4334: ஆபிரகாமுக்கு தேவன் என்ன பண்ணினார் ??
வாக்குதத்தம். எபிரேயர் 6:13
4335: தேவன் வாக்குதத்தம் பண்ணினதைப் பெற ஆபிரகாம் என்ன செய்தார்??
பொறுமையோடு காத்திருந்தான். எபிரேயர் 6:15
4336: மனுஷர் யார் பேரில் ஆணையிடுவார்கள்??
தன்னிலும் பெரியவர்கள் பேரில். எபிரேயர் 6:16
4337: எதற்காக ஆணையிடப்படுகின்றது??
உறுதிப்பண்ணும்படி. எபிரேயர் 6:16
4338:சகல விவாதத்துக்கும் முடிவு எது??
ஆணையிடுதல். எபிரேயர் 6:16
4339: எத்தனை மாறாத விசேஷங்கள் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது??
இரண்டு. எபிரேயர் 6:18
4340 : கர்த்தருடைய மாறாத விசேஷங்கள் எதை அளிக்கிறது??
ஆறுதல் அளிக்கிறது. எபிரேயர் 6:18
4341: கர்த்தர் நமக்கு முன் வைத்திருக்கும் எது நமது ஆத்தும நங்கூரமாயிருக்கிறது??
நம்பிக்கை. எபிரேயர் 6:19
4342: இயேசு யாருடைய மறைமையின்படியான நித்திய பிரதான ஆசாரியன்??
மெல்கிசதேக்கின் முறைமையின்படி. எபிரேயர் 6:20
4343: மெல்கிசதேக் என்பவன் யார்??
சாலேமின் ராஜா. எபிரேயர் 7:1
4344: மெல்கிசதேக்குக்கு ஆபிரகாம் என்ன கொடுத்தான்??
தசமபாகம். எபிரேயர் 7:2
4345: நீதியின் ராஜா என்பவர் யார்??
மெல்கிசதேக். எபிரேயர் 7:2
4346: தகப்பனும் தாயும் இல்லாதவன் யார்??
மெல்கிசதேக். எபிரேயர் 7:3
4347: ஜீவனின் முடிவுடையவனாயிராதவன் யார்??
மெல்கிசதேக். எபிரேயர் 7:3
4348: மரிக்கிற மனுஷர்கள் எதை வாங்குகிறார்கள்??
தசமபாகம். எபிரேயர் 7:8
4349:தன் தகப்பனின் அரையில் இருந்தவன் யார்??
லேவியானவன். எபிரேயர் 7:9
4350: ஆரோனின் முறைமையின்படி அழைக்கப்படாமல் ஆசாரியனானவன் யார்??
மெல்கிசதேக். எபிரேயர் 7:11
4351: நம்முடைய கர்த்தர் எந்த கோத்திரத்தில் தோன்றினார்??
யூதா கோத்திரத்தில். எபிரேயர் 7:14
4352: ஒன்றையும் பூரணப்படுத்தாது எது??
நியாயப்பிரமாணம். எபிரேயர் 7:19
4353: ஆணையினாலே ஆசாரியராக்கப்பட்டவர் யார்??
இயேசுவானவர். எபிரேயர் 7:22
4354: நியாயப்பிரமாணத்துக்குப் பின்பு எது உண்டானது??
ஆணை உண்டானது. எபிரேயர் 7:28
4355: மகத்துவ ஆசனம் எங்கு உள்ளது??
பரலோகத்தில். எபிரேயர் 8: 1
4356: பூமியில் செய்யப்படும் ஆராதனை எதன் சாயலுக்கு ஒத்திருக்கிறது??
பரலோகத்திலுள்ளவைகளுக்கு. எபிரேயர் 8:5
4357: புது உடன்படிக்கையை கர்த்தர் எங்கு எழுதுவார்??
அவர்களுடைய இருதயத்திலே. எபிரேயர் 8:10
4358: கர்த்தர் ஜனங்களின் அநியாயங்களை எவ்வாறு மன்னிப்பார்??
கிருபையாய் மன்னிப்பார். எபிரேயர் 8:12
4359: மகா பரிசுத்த ஸ்தலம் எந்த திரைக்குள்ளே இருந்தது??
இரண்டாம் திரைக்குள்ளே. எபிரேயர் 9:3
4360: தூப கலசம் எங்கு இருந்தது??
மகா பரிசுத்தஸ்தலம் எனப்பட்ட கூடாரத்தில். எபிரேயர் 9:3
4361: உடன்படிக்கை பெட்டிக்குள் எவைகள் வைக்கப்பட்டிருந்தது??
மன்னா வைக்கப்பட்டிருந்த பொற்பாத்திரம், ஆரோனுடைய துளிர்த்த கோல்
உடன்படிக்கையின் கற்பலகைகள். - எபிரேயர் 9:4
4362: உடன்படிக்கைப் பெட்டிக்கு மேலே எதுவைக்கப்பட்டிருந்தது??
மகிமையுள்ள கேரூபீன்கள். எபிரேயர் 9:5
4363: இரண்டிம் கூடாரத்தில் யார் பிரவேசிப்பார்கள்??
பிரதான ஆசாரியன் மாத்திரம். எபிரேயர் 9:7
4364: ஜனங்களுடைய தப்பிதங்களுக்காக பலி செலுத்துகிறவன் யார்??
பிரதான ஆசாரியன். எபிரேயர் 9:7
4365:முதலாம் கூடாரம் நிற்குமளவும் எங்கு போகும் மார்க்கம் வெளிப்படவில்லை??
பரிசுத்தஸ்தலத்திற்கு. எபிரேயர் 9:8
4366: கிறிஸ்துவானவர் எவைகளின் இரத்தத்தினால் மீட்ப்பை உண்டாக்கவில்லை??
வெள்ளாட்டுக்கடா, இளங்காளையின் இரத்தத்தினால். எபிரேயர் 9:13
4367:கிறிஸ்து எதினால் மீட்பை உண்டு பண்ணினார்??
சொந்த இரத்தத்தினால். எபிரேயர் 9:12
4368: நித்திய மீட்பு யாரிடமிருந்து வருகிறது??
மகா பிரதான ஆசாரியராகிய கிறிஸ்துவிடமிருந்து. எபிரேயர்9:13
4369: இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எதைச் சுத்திகரிக்கிறது??
மனச்சாட்ச்சியை சுத்திகரிக்கிறது. எபிரேயர் 9:14
4370: புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறவர் யார்??
இயேசு கிறிஸ்து. எபிரேயர்9:15
4371: எங்கே மரணசாசனம் உண்டோ அங்கே எது உண்டாக வேண்டும்??
மரணம். எபி 9:16
4372: எப்பொழுது மரண சாசனம் உறுதிப்படும்??
மரணமுண்டான பின்பு. எபிரேயர் 9:17
4373: இரத்தமில்லாததினால் பிரதிஷ்டை பண்ணப்படாதது எது??
முதலாம் உடன்படிக்கை. எபிரேயர் 9:18
4374: இரத்தம் சிந்துதலில்லாமல் எது உண்டாகாது??
மன்னிப்பு. எபிரேயர் 9:22
4375: எவைகளின் இரத்தம் பாவங்களை நிவிர்த்தி செய்யமாட்டாது??
காளை, வெள்ளாட்டுக்கடா ஆகியவைகளின் இரத்தம். எபிரேயர் 10:4
4376: புஸ்தகச்சுருளில் யாரைக் குறித்து எழுதியிருக்கிறது??
இயேசு. எபிரேயர் 10:7
4377: நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கும் பலிகள் யாவை??
சர்வாங்க தகனபலி, பாவநிவாரண பலி. எபிரேயர் 10:8
4378: இயேசு கிறிஸ்து பலியிடப்பட்டதன் சித்தம் என்ன??
ஜனங்கள் பாவமன்னிப்படைந்து பரிசுத்தமாக்கப்பட. எபிரேயர் 10:10
4379: பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்தி செய்யக்கூடாத பலிகளைச் செலுத்துகிறவன் யார்??
ஆசாரியன். எபிரேயர் 10:11
4380: பாவங்களுக்காக ஒரே பலி செலுத்தியவர் யார்??
இயேசு கிறிஸ்து. எபிரேயர் 10:12
4381: கிறிஸ்து யாரை ஒரே பலியினாலே பூரணப்படுத்தியிருக்கிறார்??
பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை. எபிரேயர் 10:14
4382: கர்த்தர் செய்யும் புது உடன்படிக்கையில் அவருடைய பிரமாணங்களை எங்கே வைப்பார்??
அவர்கள் இருதயத்தில் வைப்பார். எபிரேயர் 10:16
4383: பாவங்கள் மன்னிக்கப்பட்டதுண்டானால் இனி எது செலுத்த தேவையில்லை??
பலி செலுத்த தேவையில்லை. எபிரேயர் 10:18
4384: இயேசுவானவர் தமது எவ்வித திரைவழியாய் மார்க்கத்தை உண்டு பண்ணினார்??
மாம்சமாகிய திரை வழியாய். எபிரேயர் 10:19
4385: இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரைவழியாய் எவ்வித மார்க்கத்தை உண்டு பண்ணினார்??
புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை. எபிரேயர் 10:19
4386: தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மகா ஆசாரியர் யார்??
இயேசு கிறிஸ்து. எபிரேயர் 10:21
4387: வாக்குத்தத்தம் பண்ணினவர் எவ்விதமாயிருக்கிறார்??
உண்மையுள்ளவராயிருக்கிறார். எபிரேயர் 10:23
4388: எதை விட்டு விடலாகாது??
சபை கூடி வருதலை. எபிரேயர் 10:25
4389: சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய் என்ன செய்யக்கூடாது??
பாவம். எபிரேயர் 10:26
4390: மோசேயின் பிரமாணத்தைத் தள்ளுகிறவன் எதைப் பெற மாட்டான்??
இரக்கம் பெற மாட்டான். எபிரேயர் 10:28
4391: கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எதற்கு பாத்திரன்??
கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரன். எபிரேயர் 10:29
4392: பழிவாங்குதல் யாருக்குரியது??
தேவனுக்குரியது. எபிரேயர் 10:30
4393: நிலையுள்ளதுமான சுதந்தரம் எங்கு இருக்கிறது??
பரலோகத்தில். எபிரேயர் 10:34
4394: மிகுந்த பலனுக்கேதுவான எதை விட்டு விடக்கூடாது??
தைரியத்தை. எபிரேயர் 10:35
4395: வாக்குதத்தம் பண்ணப்பட்டதை அடைய எது வேண்டும் என்று பவுல் சொல்லுகிறார்??
பொறுமை. எபிரேயர் 10:36
4396: நம் ஆத்துமா ஈடேற என்ன செய்ய வேண்டும்??
விசுவாசிக்க வேண்டும். எபிரேயர் 10:39
4397: நம்பப்படுகிறவைகளின் உறுதி எது??
விசுவாசம். எபிரேயர்11:1
4398: முன்னோர்கள் எதினாலே நற்சாட்சி பெற்றார்கள்??
விசுவாசத்தினாலே. எபிரேயர் 11:2
4399: விசுவாசத்தினாலே மேலான பலிகளைச் செலுத்தினவன் யார்??
ஆபேல். எபிரேயர் 11:4
4400: விசுவாசத்தினாலே நீதிமான் என்று சாட்சி பெற்றவன் யார்??
ஆபேல். எபிரேயர் 11:4
4401: தேவன் எடுத்துக்கொண்டபடியினாலே காணாமல் போனவன் யார்??
ஏனோக்கு. எபிரேயர் 11:5
4402: தேவன் உண்டென்று விசுவாசிக்க வேண்டியவன் யார்??
தேவனிடத்தில் சேருகிறவன். எபிரேயர் 11:6
4403: விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்கு சுதந்திரவாளியானவன் யார்??
நோவா. எபிரேயர் 11:7
4404: வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப் போல சஞ்சரித்தவன் யார்??
ஆபிரகாம். எபிரேயர் 11:9
4405: தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரமுள்ள நகரத்துக்காக காத்திருந்தவன் யார்??
ஆபிரகாம். எபிரேயர் 11:10
4406: வாக்குதத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணியவள் யார்??
சாராள். எபிரேயர் 11:11
4407: தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டவர் யார்??
ஆபிரகாமின் சந்ததியார். எபிரேயர் 11:13
4408: விசுவாசத்தினாலே யாக்கோபு யாருடைய குமாரரை ஆசீர்வதித்தான்??
யோசேப்பின் குமாரரை. எபிரேயர் 11:21
4409: இஸ்ரவேல் புத்திரர் எகிப்தைவிட்டு புறப்படுவார்கள் என்று விசுவாசித்தவன் யார்??
யோசேப்பு. எபிரேயர் 11:22
4410: யோசேப்பு அந்நிய காலத்தில் எதைக் குறித்து கட்டளை கொடுத்தான்??
தன் எலும்புகளைக் குறித்து. எபிரேயர் 11:22
4411: அநித்தியமான பாவசந்தோஷங்களை வெறுத்தவன் யார்??
மோசே. எபிரேயர்11:25
4412: இனி வரும் பலன் மேல் நோக்கமாயிருந்தவன் யார்??
மோசே. எபிரேயர் 11:26
4413: இரத்தம் பூசுதலாகிய நியமத்தை ஆசரித்தவன் யார்??
மோசே. எபிரேயர் 11:28
4414: வேவுகாரரை சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டவள் யார்??
ராகாப் என்னும் வேசி. எபிரேயர் 11:31
4415: விசுவாசத்தினாலே கிதியோன் என்ன செய்தான்??
மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலை இரட்சித்தான். எபிரேயர்11:32
4416: விசுவாசத்தினாலே பாராக் என்ன செய்தான்??
சிசெராவைக் கொன்றான். எபிரேயர் 11:32
4417: விசுவாசத்தால் விசுவாச வீரர்கள் எதை நடப்பித்தார்கள்??
நீதியை நடப்பித்தார்கள். எபிரேயர் 11:33
4418: நம்மைச் சுற்றி நெருங்கி நிற்பது எது??
பாவம். எபிரேயர் 12:1
4419: நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் எவ்விதம் ஓட வேண்டும்??
பொறுமையோடு ஓட வேண்டும். எபிரேயர் 12:1
4420: எதற்கு விரோதமாக போராட வேண்டும்??
பாவத்துக்கு. எபிரேயர் 12:4
4421: எதை அற்பமாக எண்ணக்கூடாது??
கர்த்தருடைய சிட்ச்சையை. எபிரேயர் 12:5
4422: கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை எதன் பொருட்டு சிட்சிக்கிறார்??
நாம் அவருடைய பரிசுத்தத்தில் பங்குள்ளவர்களாகும் பொருட்டு. எபிரேயர் 12:10
4423: யாவரோடும் நாம் எப்படியிருக்க வேண்டும்??
சமாதானமாயிருக்க வேண்டும். எபிரேயர் 12:14
4424: எப்படியிருக்கும்படி நாட வேண்டும்??
பரிசுத்தமாயிருக்கும்படி. எபிரேயர் 12:14
4425: எது இல்லாமல் கர்த்தரை தரிசிப்பதில்லை??
பரிசுத்தமில்லாமல். எபிரேயர் 12:14
4426: கசப்பான வேர் உண்டானால் எது உண்டாகும்??
கலக்கம் உண்டாகும். எபிரேயர் 12:15
4427: ஜீவனுள்ள தேவனுடைய நகரம் எது??
பரம எருசலேம். எபிரேயர் 12:22
4428: புது உடன்படிக்கையின் மத்தியஸ்தர் யார்??
இயேசு கிறிஸ்து. எபிரேயர் 12:24
4429: யாருடைய இரத்தம் பேசினது??
ஆபேலின் இரத்தம். எபிரேயர் 12:24
4430: தெளிக்கப்படும் இரத்தம் எவைகளை பேசும்??
நன்மையானவைகளை. எபிரேயர் 12:24
4431: சகோதரருக்குள்ளே நிலைத்திருக்க வேண்டியது எது??
சகோதர சிநேகம். எபிரேயர் 13:1
4432: அன்னியரை உபசரித்ததில் சிலர் அறியாமல் யாரை உபசரித்ததுண்டு??
தேவதூதர்களை. எபிரேயர் 13:2
4433: விவாகம் யாவருக்குள்ளும் எப்படிப்பட்டது??
கனமுள்ளது. எபிரேயர் 13:4
4435: எதினால் அலைப்புண்டு திரியாதிருக்க வேண்டும்??
பலவிதமான அந்நிய போதனைகளினால். எபிரேயர் 13:9
4436: இருதயம் எதினாலே ஸ்திரப்படுகிறது நல்லது??
கிருபையினாலே. எபிரேயர் 13:9
4437: ஜனங்களை பரிசுத்தம் பண்ணும்படியாக இயேசு எங்கே பாடுபட்டார்??
நகர வாசலுக்குப் புறம்பே. எபிரேயர் 13:12
4438: உதடுகளின் கனி என்பது என்ன??
ஸ்தோத்திரப்பலி. எபிரேயர் 13:15
4439: மறக்க கூடாது எது??
நன்மை செய்ய. எபிரேயர் 13:16
4440: எதைப் பண்ண மறவாதிருக்க வேண்டும்??
தான தர்மம் பண்ண. எபிரேயர் 13:16
4441: எல்லாவற்றிலும் எவ்விதமாய் நடந்து கொள்ள வேண்டும்??
யோக்கியமாய். எபிரேயர் 13:18
4442: ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரானவர் யார்??
கர்த்தராகிய இயேசு. எபிரேயர் 13:20
4443: யாக்கோபு நூல் யாருக்கு எழுதப்பட்டிருக்கிறது??
சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கு. யாக்கோபு 1:1
4444: விசுவாசத்தின் பரீட்சை எதை உண்டாக்க வேண்டும்??
பொறுமையை உண்டாக்க வேண்டும். யாக் 1:3
4445: காற்றில் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்குஒப்பாயிருக்கிறவன் யார்??
சந்தேகப்படுகிறவன். யாக் 1:6
4446: யார் எதையாகிலும் பெறலாம் என்று நினைக்க வேண்டாம்??
சந்தேகப்படுகிறவன். யாக் 1:7
4447: யார் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவன்??
இருமனமுள்ளவன். யாக் 1:8
4448: புல்லின் பூவைப்போல் ஒழிந்து போகிறவன் யார்??
ஐசுவரியவான். யாக் 1:10
4449: சோதனையை சகிக்கிறவன் எப்பொழுது ஜீவ கிரீடத்தைப் பெறுவான்??
உத்தமனென்று விளங்கினபின்பு. யாக் 1:12
4450: தேவன் தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு எதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்??
ஜீவ கிரீடத்தை. யாக் 1:12
4451: தேவன் எதினால் சோதிக்கிறவரல்ல??
பொல்லாங்கினால். யாக் 1:13
4452: மனுஷன் எதினால் சிக்குண்டு சோதிக்கப்படுகிறான்??
சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு. யாக் 1:14
4453: இச்சை கர்ப்பந்தரித்து எதைப் பிறப்பிக்கும்??
பாவத்தைப் பிறப்பிக்கும். யாக் 1:15
4454: பாவம் பூரணமாகும் போது எதைப் பிறப்பிக்கும்??
மரணத்தைப் பிறப்பிக்கும். யாக் 1:15
4455: நன்மையான எந்த ஈவும் எங்கிருந்து உண்டாகிறது??
பரத்திலிருந்து உண்டாகிறது. யாக் 1:17
4556: கேட்கிறதற்கு எவ்வாறிருக்க வேண்டும்??
தீவிரமாயிருக்க வேண்டும். யாக் 1:19
4557: கோபிக்கிறதற்கு நாம் எவ்வாறிருக்க வேண்டும்??
தாமதமாயும் இருக்க வேண்டும். யாக் 1:19
4558: பேசுகிறதற்கு நாம் எவ்வாறிருக்க வேண்டும்??
பொறுமையாயிருக்க வேண்டும். யாக் 1:19
4559: மனுஷனுடைய கோபம் யாருடைய நீதியை நடப்பிக்க மாட்டாது??
தேவனுடைய நீதியை. யாக் 1:20
4460: தேவ வசனம் எதை இரட்சிக்க வல்லமையுள்ளதாயிருக்கிறது??
ஆத்துமாக்களை இரட்சிக்க. யாக் 1:21
4461: தன் நாவை அடக்காதவன் எதை வஞ்சிக்கிறான்??
தன் இருதயத்தை. யாக் 1:26
4462: எது மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது??
உலகத்தால் கறைபடாததும் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் விசாரிப்பதும். யாக் 1:27
4463: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை எவ்விதமாய்ப் பற்றிக்கொள்ளக் கூடாது??
பட்சபாதமாய் பற்றி கொள்ள கூடாது. யாக் 2:1
4464: தேவ வசனத்தை போதிக்கிறவர்களை ஒடுக்குகிறவர் யார்??
ஐசுவரியவான்கள். யாக் 2:6
4465: உன்னிடத்தில் அன்பு கூருகிறது போல யாரிடம் அன்பு கூர வேண்டும்??
பிறனிடத்தில் அன்பு கூர வேண்டும். யாக் 2:8
4466: உன்னிடத்தில் அன்பு கூருகிறது போல பிறனிடத்திலும் அன்பு கூர வேண்டும் என்பது எவ்வித பிரமாணமாக உள்ளது??
ராஜரிக பிரமாணமாயுள்ளது. யாக் 2:8
4467: இரக்கம் செய்யாதவனுக்கு எவ்வித நியாயத்தீர்ப்பு கிடைக்கும்??
இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு. யாக் 2:13
4468: நியாயத்தீர்ப்புக்கு முன்பாக எது மேன்மை பாராட்டும்??
இரக்கம் மேன்மை பாராட்டும். யாக் 2:13
4469: விசுவாசத்தை எதினால் பிறருக்கு காண்பிக்க முடியும்??
கிரியைகளினால். யாக் 2:18
4470: தேவனுடைய சிநேகிதன் என்றெண்ணப்பட்டவன் யார்??
ஆபிரகாம். யாக் 2:23
4471: ஆவி இல்லாத சரீரம் எப்படியிருக்கும்??
செத்ததாயிருக்கும். யாக் 2:26
4472: அநேகர் போதகராவதை விரும்பாதவர் யார்??
யாக்கோபு. யாக் 3:1
4473: பெரிய கப்பல்களை திருப்பிக் கொண்டு செல்வது எது??
சுக்கான். யாக் 3:4
4474: சிறிய அவயமாயிருக்கிறது எது??
நாவு. யாக் 3:5
4475: பெருமையானவைகளைப் பேசும் சிறிய அவயம் எது??
நாவு. யாக் 3:5
4476: நாவை எதாக யாக்கோபு சித்தரிக்கிறார்??
நெருப்பாக. யாக் 3:6
4477: நம்முடைய முழு சரீரத்தையும் கறைபடுத்தும் அவயம் எது??
நாவு. யாக் 3:6
4478: உலகம் எதினால் நிறைந்திருக்கிறது??
அநீதியினால். யாக் 3:6
4479: சகலவிதமான மிருகங்கள் பறவைகள் நீர் வாழும் ஜந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் எதினால் அடக்கப்படும்??
மனுஷ சுபாவத்தால். யாக் 3:7
4480: எதை அடக்க யாராலும் கூடாது??
நாவை அடக்க. யாக் 3:8
4481: மனுஷன் யாருடைய சாயலில் படைக்கப்பட்டான்??
தேவனுடைய சாயலில். யாக் 3:9
4482: எதற்கு விரோதமாகப் பொய் சொல்லாதிருக்க வேண்டும்??
சத்தியத்துக்கு விரோதமாக. யாக் 3:14
4483: வைராக்கியம் இருக்கும் இடத்தில் எது உண்டு??
கலகம் உண்டு. யாக் 3:16
4484: விரோதம். இருக்குமிடத்தில் எது உண்டு??
சகலதுர்ச் செய்கைகளுமுண்டு. யாக் 3:26
4485: நீதியாகிய கனியானது யாரால் உண்டாயிருக்கிறது??
சமாதானத்தை நடப்பிக்கிறவராலே. யாக் 3:18
4486: யுத்தங்களும் சண்டைகளும் எதினால் உண்டாகிறது??
போர் செய்கிற இச்சைகளினால். யாக் 4:1
4487: தேவனுக்கு விரோதமான பகை எது??
உலக சிநேகம். யாக் 4:4
4488: எதை வீணாய்ச் சொல்லுகிறதென்று எதை நினைக்கக் கூடாது??
வேத வாக்கியங்களை. யாக் 4:5
4489: தேவன் யாருக்கு எதிர்த்து நிற்கிறார்??
பெருமையுள்ளவர்களுக்கு. யாக் 4:6
4490: தேவன் யாருக்கு கிருபையளிக்கிறார்??
தாழ்மையுள்ளவர்களுக்கு. யாக் 4:6
4491: யார் துயரப்பட்டு துக்கித்து அழ வேண்டும்??
இருமனமுள்ளவர்கள். யாக் 4:9
4492: கர்த்தருக்கு முன்பாக நாம் என்ன செய்ய வேண்டும்??
தாழ்மைப்பட வேண்டும். யாக் 4:10
4493: மனுஷனுடைய ஜீவன் எதைப் போலிருக்கிறது??
புகையைப் போலிருக்கிறது. யாக் 4:14
4494: கொஞ்ச காலத்தில் தோன்றி பின்பு தோன்றாமற் போவது எது??
புகை. யாக் 4:14
4495: ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும் அதைச் செய்யாமற் போனால் அது அவனுக்கு எதுவாயிருக்கும்??
பாவமாயிருக்கும். யாக் 4:17
4496: எது கூக்குரலிடுகிறது??
ஐசுவரியவான்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்ட வேலைக்காரரின் கூலி. யாக் 5:4
4497: நியாதிபதி எங்கே நிற்கிறார்??
வாசற்படியில் நிற்கிறார். யாக் 5 :9
4498: யாருடைய பொறுமையைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம்
யோபுவின். யாக் 5:11
4499: ஒருவன் வியாதிப்பட்டிருந்தால் யாரை வரவழைக்க வேண்டும்??
சபையின் மூப்பர்களை. யாக் 5:14
4500: எது மிகவும் பெலனுள்ளதாயிருக்கும்??
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல். யாக் 5: 16
4501: பேதுரு தன் முதல் கடிதத்தை யாருக்கு எழுதுகின்றார்??
,சிதறி இருக்கிறவர்களுக்கு. 1 பேதுரு 1:1
4502: பரிசுத்தமாகுதலை கட்டளையிடுகிறவர் யார்??
ஆவியானவர். 1 பேதுரு 1:2
4503: பரிசுத்த ஆவியானவர் நடப்பிக்கும் கிரியைகளை உற்றுப்பார்க்க ஆசையாய் இருந்தவர்கள் யார்??
தேவதூதர்கள். 1 பேதுரு 1:12
4504: முன்னே ஜனங்கள் எதினால் இச்சையின்படி நடந்தார்கள்??
அறியாமையினால். 1 பேதுரு 1:14
4505: இவ்வுலகில் நாம் யாராக சஞ்சரிக்கிறோம்??
பரதேசிகளாக. 1 பேதுரு 1:17
4506: அழிவுள்ள வஸ்துக்களாகிய இரண்டு பொருட்கள் யாவை??
பொன், வெள்ளி. 1 பேதுரு 1:18
4507: உலகத் தோற்றத்துக்கு முன்னே குறிக்கப்பட்டிருந்தவர் யார்??
கர்த்தராகிய இயேசு. 1 பேதுரு 1:20
4508: சகோதரருக்குள்ளே சிநேகம் எப்படி அமைய வேண்டும்??
மாயமற்ற சிநேகமாயிருக்க வேண்டும். 1 பேதுரு 1:22
4509: எவ்வித இருதயத்தோடே ஒருவரிலொருவர் அன்பு கூர வேண்டும்??
சுத்த இருதயத்தோடே. 1 பேதுரு 1:22
4510:அழிவில்லாத வித்தாக இருப்பது எது??
தேவ வசனம். 1 பேதுரு 1:23
4511: தேவ வசனம் எது உள்ளது??
ஜீவன் உள்ளது. 1 பேதுரு 1:23
4512: என்றென்றைக்கும் நிலைத்திருப்பது எது??
கர்த்தருடைய வசனம். 1 பேதுரு 1:25
4513: தேவனுக்கு பிரியமான பலி எது??
ஆவிக்கேற்ற பலி. 1 பேதுரு 2:5
4514: விசுவாசிகள் எவ்வித ஆசாரியக் கூட்டத்தாயிருக்கிறார்கள்??
பரிசுத்த ஆசாரியக்கூட்டம். 1 பேதுரு 2:5
4515: விசுவாசிக்கிறவர்களுக்கு விலையேறப்பெற்றதாக இருப்பது எது??
மூலைக்கல்லாகிய கிறிஸ்து. 1 பேதுரு 2:7
4516: நம்மை எவ்வித ஆசாரியக்கூட்டமாக கர்த்தர் தெரிந்து கொண்டார்??
ராஜரீக ஆசாரியக்கூட்டமாக. 1 பேதுரு 2:9
4517:மாம்ச இச்சைகள் எதற்கு விரோதமாய்ப் போர் செய்கிறது??
ஆத்துமாவுக்கு. 1 பேதுரு 2:11
4518: நன்மை செய்து பாடுபடும் போது எவ்விதம் சகிக்க வேண்டும்??
பொறுமையோடே சகிக்க வேண்டும். 1 பேதுரு 2:20
4519: கிறிஸ்துவின் வாயில் எது காணப்படவில்லை ??
வஞ்சனை. 1 பேதுரு 2 :22
4520: கிறிஸ்து யாருக்கு தம்மை ஒப்புவித்தார்??
நியாயமாய்த் தம்மை தீர்ப்பு செய்கிறவர்களுக்கு. 1 பேதுரு 2:23
4521: நாம் எதற்கு சாக வேண்டும்??
பாவத்திற்கு. 1 பேதுரு 2:24
4522: நாம் எதற்கு பிழைத்திருக்க வேண்டும்??
நீதிக்கு. 1 பேதுரு 2:24
4523: மனுஷனுக்கு தேவையான அலங்கரிப்பு எது??
அழியாத அலங்கரிப்பு. 1 பேதுரு 3:4
4524: சாராள் ஆபிரகாமை யார் என்று அழைத்தாள்??
ஆண்டவன் என்று. 1 பேதுரு 3:6
4525: யாவருக்குள்ளும் இருக்க வேண்டியது எது??
இரக்க சிந்தை. 1 பேதுரு 3:8
4526: பொல்லாப்பை விட்டு நீங்கி என்ன செய்ய வேண்டும்??
நன்மை செய்ய வேண்டும். 1 பேதுரு 3:11
4527: கர்த்தருடைய கண்கள் யார் மேல் நோக்கமாயிருக்கிறது??
நீதிமான்கள் மேல். 1 பேதுரு 3:12
4528: கர்த்தராகிய தேவனை இருதயத்தில் என்ன செய்ய வேண்டும்??
பரிசுத்தபடுத்த வேண்டும். 1 பேதுரு 3:15
4529: எதை செய்து பாடனுபவிப்பது நல்லது??
நன்மை செய்து. 1 பேதுரு 3:17
4530: நோவா உண்டு பண்ணினபேழையிலே எத்தனை பேர் மாத்திரம் பிரவேசித்தார்கள்??
எட்டு பேர் மாத்திரம். 1 பேதுரு 3:20
4531: நோவாவின் பேழையிலே ஜலத்தினால் காக்கப்பட்டது எதற்கு ஒப்பனையாயிருக்கிறது??
ஞானஸ்நானத்துக்கு. 1 பேதுரு 3:21
4532: நியாயத்தீர்ப்பு யாருக்கெல்லாம் வரும்??
உயிரோடிருக்கிறவர்களுக்கும் , மரித்தோர்களுக்கும். 1 பேதுரு 4:5
4533: எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிருப்பதால் நாம் எவ்விதமான புத்தியுள்ளவர்களாயிருக்க வேண்டும்??
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்க வேண்டும். 1 பேதுரு 4:7
4534:எதற்கு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்??
ஜெபம் பண்ணுவதற்கு. 1 பேதுரு 4:7
4535: அன்பு எதை மூடும்??
திரளான பாவங்களை. 1 பேதுரு 4:8
4536: ஒருவருக்கொருவர் என்ன செய்ய வேண்டும்??
உதவி செய்ய வேண்டும். 1 பேதுரு 4:10
4537: பற்பல கிருபையுள்ள ஈவுகளை பகிர்ந்து கொடுப்பவன் யார்??
நல்ல உக்கிராணக்காரன். 1 பேதுரு 4:10
4538: ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் என்ன செய்யக்கூடாது??
வெட்கப்படக்கூடாது. 1 பேதுரு 4:16
4539: நியாயத்தீர்ப்பு யாருடைய வீட்டில் துவக்குகிறது??
தேவனுடைய வீட்டில். 1 பேதுரு 4:17
4540: யார் இரட்சிக்கப்படுவது அரிது??
நீதிமான்களே இரட்சிக்கப்படுவது அரிது. 1 பேதுரு 4:18
4541: இனி வெளிப்படும் மகிமைக்கு பங்காளி யார்??
அப்போஸ்தலனாகிய பேதுரு. 1 பேதுரு 5:1
4542: கர்த்தருடைய மந்தையை எவ்வித ஆதாயத்துக்காக மேய்க்கக்கூடாது??
அவலட்சணமான ஆதாயத்துக்காக. 1 பேதுரு 5:2
அவலட்சணமான ஆதாயத்துக்காக. 1 பேதுரு 5:2
4543: மேய்ப்பன் மந்தைக்கு எதாக இருக்க வேண்டும்??
மாதிரியாக இருக்க வேண்டும். 1பேதுரு 5:3
4544: யாருக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கிறார்??
பெருமையுள்ளவர்களுக்கு. 1 பேதுரு 5:5
4555: நாம் ஏன் கவலைகளை எல்லாம் தேவன் மேல் வைக்க வேண்டும்??
அவர் நம்மை விசாரிக்கிறவராதலால். 1 பேதுரு 5:7
4556: எதில் உறுதியாயிருக்க வேண்டும்??
விசுவாசத்தில். 1 பேதுரு 5:9
4557: யாருக்கு எதிர்த்து நிற்க வேண்டும்??
பிசாசானவனுக்கு. 1 பேதுரு 5:9
4558: பேதுரு அப்போஸ்தலன் எழுதிய முதல் நிருபம் யார் கையிலே கொடுத்து அனுப்பப்பட்டது??
சில்வானுவின் கையில். 1 பேதுரு 5:12
4459: பேதுரு வாழ்த்து சொல்லியனுப்பிய சபை எது??
பாபிலோனிலுள்ள சபை. 1 பேதுரு 5:13
4460: வாழ்த்து சொல்லுகிற பேதுருவின் குமாரன் என்று அறியப்பட்டவன் யார்??
மாற்கு. 1 பேதுரு 5:15
4461: தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் எது பெருகும்??
கிருபையும் சமாதானமும். 2 பேதுரு 1:2
4462: உலகத்துக்கு கேடு எதனால் உண்டாயிற்று??
இச்சையினால். 2 பேதுரு 1:4
4463: தேவபக்தியோடே எதைக் கூட்டிக் கொள்ள வேண்டும்??
சகோதர சிநேகம். 2 பேதுரு 1:7
4464: இவர் என் நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று எந்த பர்வதத்தில் இருக்கையில் கொடுக்கப்பட்டது??
பரிசுத்தபர்வதத்தில். 2 பேதுரு 1:18
4465: வானத்திலிருந்து பிறந்த அந்த சத்தத்தை கேட்டவர்கள் யார்??
அப்போஸ்தலர். 2 பேதுரு 1:18
4466: இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போல இருப்பது எது??
கர்த்தருடைய வசனம். 2 பேதுரு 1:19
4467: தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் எதினால் ஏவப்பட்டுத் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்??
பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு. 2 பேதுரு 1:21
4468: கேட்டுக்கேதுவான வேதபுரட்டுகளை பேசுகிறவர்கள் யார்??
கள்ளப் போதகர்கள். 2 பேதுரு 2:1
4469: பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் எதினால் கட்டி வைப்பார்??
சங்கிலிகளினால். 2 பேதுரு 2:4
4470: அவபக்தியாய் நடப்பவர்களுக்கு வரும் ஆக்கினைக்கு திருஷ்டாந்தமாக எந்த பட்டணங்களை வைத்தார்??
சோதோம், கொமோரா. 2 பேதுரு 2:6
4571: காம விகார நடக்கையினால் நாள் தோறும் இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமான் யார்??
லோத்து. 2 பேதுரு 2:8
4572: கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களை எதினின்று இரட்சிக்கிறார்??
சோதனையினின்று. 2 பேதுரு 2:9
45 73: நியாயத்தீர்ப்புக்குட்பட்டவர்கள் யார்??
துணிகரகாரர்கள். 2 பேதுரு 2:10
4574: விசுவாசிகள் அறிய வேண்டிய முதல் காரியம் என்ன??
கடைசி நாட்களில் பரியாசக்காரர் வருவார்கள். 2 பேதுரு 3:3
4575: பூமி எதிலிருந்து தோன்றியது ??
ஜலத்திலிருந்து. 2 பேதுரு 3:5
4576: அழிந்து போகும் நாள் வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது எது??
வானமும் பூமியும். 2 பேதுரு 3:7
4577: கர்த்தருக்கு ஒரு நாள் எத்தனை வருஷத்தைப் போலிருக்கும் ??
ஆயிரம் வருஷத்தைப் போல. 2 பேதுரு 3:8
4578: ஒருவரும் கெட்டு போகாமலிருக்க வேண்டும் என்று விரும்பி கர்த்தர் எவ்வாறிருக்கிறார்??
நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். 2 பேதுரு 3:9
4579: இரவிலே திருடன் வருகிற விதமாய் வருவது எது??
கர்த்தருடைய நாள். 2 பேதுரு 3:10
4580: கர்த்தருடைய நீடிய பொறுமையை எது என்று எண்ண வேண்டும்??
இரட்சிப்பு என்று. 2 பேதுரு 3;14
4581: யோவான் எதைக் குறித்து அறிவிக்கிறார்??
ஜீவ வார்த்தை. 1 யோவான் 1:1
4582: ஒளியாய் இருக்கிறவர் யார்??
தேவன். 1 யோவான் 1:5
4583: தேவனில் எவ்வளவேனும் இல்லாதது எது??
இருள். 1 யோவான் 1:5
4584: நமக்கு எது இல்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிப்போம்??
பாவம். 1 யோவான் 1:8
4585: நமக்கு பாவம் இல்லையென்போமானால் நமக்குள் இராதது எது??
சத்தியம். 1 யோவான் 1:8
4586: நாம் எவைகளை அறிக்கையிட வேண்டும்??
நம்முடைய பாவங்களை. 1 யோவான் 1:9
4587: நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி யார்??
இயேசு கிறிஸ்து. 1 யோவான் 2:2
4588: எதைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்??
இயேசு கிறிஸ்துவின் வசனம். 1 யோவான் 2:5
4589: தன் சகோதரனிடத்தில் அன்பு கூருகிறவன் எதில் நிலை கொண்டிருக்கிறான்??
ஒளியில். 1 யோவான் 2:10
4590: இருளில் இருந்து இருளில் நடக்கிறவன் யார்??
தன் சகோதரனைப் பகைக்கிறவன். 1 யோவான் 2:11
4591: வாலிபரில் எது நிலைத்திருக்கிறது??
தேவவசனம். 1 யோவான் 2:14
4592: உலகத்தில் அன்பு கூருகிறவனிடத்தில் இல்லாதது எது??
பிதாவின் அன்பு. 1 யோவான் 2:15
4593: யார் என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்??
தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் நிலைத்திருப்பான். 1 யோவான் 2:17
4594: யார் வருகிறானென்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்??
அந்திக்கிறிஸ்து. 1 யோவான் 2:18
4595: யாரை மறுதலிக்கிறவன் அந்திக்கிறிஸ்துவாயிருக்கிறான்??
பிதாவையும் குமாரனையும். 1 யோவான் 2:22
4596: எது நம்மில் நிலைத்திருக்க வேண்டும்??
ஆதிமுதல் கேள்விப்பட்டது. 1 யோவான் 2:24
4597: எதை அளிப்பேன் என்பதே பிதா நமக்குச் செய்த வாக்குதத்தமாயிருக்கிறது??
நித்திய ஜீவன். 1 யோவான் 2:25
4598: சகலத்தையும் குறித்து நமக்கு போதிப்பது எது??
பரிசுத்தராலே பெற்ற அபிஷேகம். 1 யோவான் 2:27
4599: உலகம் யாரை அறியவில்லை??
பிதா. 1 யோவான் 3:1
4600: எதை மீறுகிறது பாவம்??
நியாயப்பிரமாணம். 1 யோவான் 3:4
4601: பாவஞ் செய்கிற எவனும் யாரை அறியவில்லை??
குமாரனை. 1 யோவான் 3:6
4602: நீதியுள்ளவனாயிருக்கிறவன் யார்??
நீதியைச் செய்கிறவன். 1 யோவான் 3: 7
4603: ஆதி முதல் பாவஞ்செய்கிறவன் யார்??
பிசாசானவன். 1 யோவான் 3:8
4604: பாவஞ் செய்யாதவன் யார்??
தேவனால் பிறந்தவன். 1 யோவான் 3:9
4605: தேவனால் பிறந்தவனுக்குள் தரித்திருப்பது எது??
தேவனுடைய வித்து. 1 யோவான் 3:9
4606: பொல்லாங்கனால் உண்டாயிருந்தவன் யார்??
காயீன். 1 யோவான் 3:12
4607: யாரைப் போலிருக்க வேண்டாம் என்று யோவான் எழுதியிருக்கிறார்??
காயீன். 1 யோவான் 3:12
4608: நாம் சகோதரரிடத்தில் அன்பு கூருகிறபடியால் எதை விட்டு நீங்கியிருக்கிறோம்??
மரணம். 1 யோவான் 3:14
4609: தன் சகோதரனைப் பகைக்கிறவன் யாராய் இருக்கிறான்??
மனுஷ கொலைபாதகன். 1 யோவான் 3:15
4610: நாம் எவைகளினால் அன்பு கூர வேண்டும்??
கிரியைகளினாலும் உண்மையினாலும். 1 யோவான் 3:18
4611: இயேசு கிறிஸ்து நமக்கு கட்டளையிட்ட கற்பனை எது??
ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும். 1 யோவான் 3:23
4612: யாரை அறிக்கை பண்ணுகிற ஆவி தேவனால் உண்டாயிருக்கிறது??
மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை. 1 யோவான் 4:2
4613: தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறவன் யார்??
அன்புள்ளவன். 1 யோவான் 4:7
4614: தம்முடைய ஒரே பேறான குமாரனை அனுப்பினதால் வெளிப்பட்டது எது??
தேவன் நம் மேல் வைத்த அன்பு. 1 யோவான் 4:9
4615: அன்பில் பூரணப்படாதவன் யார்??
பயப்படுகிறவன். 1 யோவான் 4:18
4616: தேவனிடத்தில் அன்பு கூருகிறவன் யாரிடத்தில் அன்பு கூரவேண்டுமென்கிற கற்பனையைப் பெற்றிருக்கிறோம்??
தன் சகோதரன். 1 யோவான் 4:21
4617: தேவனுடைய கற்பனைகள் எப்படிப்பட்டவைகளல்ல??
பாரமானவைகள். 1 யோவான் 5:3
4618: உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் எது??
நம்முடைய விசுவாசம். 1 யோவான் 5:4
4619: பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் எவர்கள்??
பிதா வார்த்தை பரிசுத்த ஆவி. 1 யோவான் 5:7
4620: தன்னைக் காக்கிறவன் யார்??
தேவனால் பிறந்தவன். 1 யோவான் 5:18
4621: பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது எது??
உலகம் முழுவதும். 1 யோவான் 5:19
4622: எவைகளுக்கு விலகி நம்மை காத்துக்கொள்ள வேண்டும்??
விக்கிரகங்களுக்கு. 1 யோவான் 5:21
4623: நமக்குள் நிலைத்திருக்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடிருக்கிறதும் எது??
சத்தியம். 2யோவான் 1
4624:சத்தியத்தின் படி நேசிக்கிறவளும் தெரிந்து கொள்ளப்பட்டவளும் யார்??
அம்மாள். 2 யோவான் 2
4625: நாம் எதின் படி நடப்பதே அன்பு??
தேவனுடைய கற்பனைகள். 2 யோவான் 6
4626: யாரை அறிக்கப்பண்ணாதவன் அந்திக்கிறிஸ்து??
மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை. 2 யோவான் 8
4627: யோவான் தனது மூன்றாம் நிருபத்தை யாருக்கு எழுதினார்??
காயுவுக்கு. 3: யோவான் 1
4628: எதற்கு உடன்வேலையாட்களாயிருக்க வேண்டும் என்று யோவான் கூறினார்??
சத்தியம். 3 யோவான் 8
4629: யோவானுக்கு விரோதமாகப் பொல்லாத வார்த்தையை அலப்பினவன் யார்??
தீயோத்திரேப்பு. 3 யோவான் 9
4630: எல்லாராலும் நற்சாட்சி பெற்றதுமல்லாமல் சத்தியத்தாலும் நற்சாட்சிப் பெற்றவன் யார்??
தேமேத்திரியு. 3 யோவான் 12
4631: யூதா யாருடைய சகோதரன்??
யாக்கோபு. யூதா 1
4632: எதைக் குறித்து எழுதும்படி யூதா கருத்துள்ளவனாயிருந்தார்??
பொதுவான இரட்சிப்பு. யூதா 3
4633: பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்டது எது??
விசுவாசம். யூதா 3
4634: தூதர்கள் தங்களுடைய எதைக் காத்துக்கொள்ளவில்லை??
ஆதிமேன்மையை. யூதா 6
4635: மோசேயின் சரீரத்தைக் குறித்து பிசாசுடனே தர்க்கித்தவன் யார்??
பிரதான தூதனாகிய மிகாவேல். யூதா 9
4636: தேவனையும் இயேசுவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்கள் யார் கூலிக்காக செய்த வஞ்சகத்தில் விரைந்தோடினார்கள்??
பிலேயாம். யூதா 11
4637: தேவனையும் இயேசுவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்கள் யார் எதிர்த்து பேசின பாவத்திற்குள்ளாகி கெட்டுப்போனார்கள்??
கோரா. யூதா 11
4638: ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையானவன் யார்??
ஏனோக்கு. யூதா 14
4639: நாம் எதின் மேல் உறுதிப்படுத்திக் கொண்டு பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ண வேண்டும்??
மகா பரிசுத்தமான விசுவாசம். யூதா 20
4640: நாம் எதை வெறுத்து தள்ள வேண்டும்??
மாம்சத்தில் கறைபட்டிருக்கிற வஸ்திரம். யூதா 23
4641: திவ்ய வாசகன் என்பவர் யார்??
யோவான். வெளிப்படுத்துதல் 1:1
4642: இயேசு கிறிஸ்து யாரை அனுப்பி தம்முடைய ஊழியக்காரனுக்கு வெளிப்படுத்தினார்??
தம்முடைய தூதன். வெளி 1:1
4643: தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்தவர் யார்??
யோவான். வெளி 1:2
4644: யோவான் யாரை குறித்து சாட்சியாக அறிவித்திருக்கிறார்??
இயேசு கிறிஸ்துவை. வெளி 1:2
4645: எதை வாசிக்கிறவனும் கேட்கிறவர்களும் பாக்யவான்கள்??
வெளிப்படுத்தின தீர்க்கதரிசன வசனங்கள். வெளி 1:3
4646: சமீபமாயிருப்பத எது??
காலம். வெளி 1:3
4647: யோவான் எங்கே உள்ள சபைகளுக்கு கடிதம் எழுதினார்??
ஆசியா. வெளி 1:4
4648: ஆசியாவில் இருந்த சபைகள் எத்தனை??
ஏழு. வெளி 1:4
4649: உண்மையுள்ள சாட்சி என்று அழைக்கப்படுபவர் யார்??
இயேசு கிறிஸ்து. வெளி 1:5
4650: மரித்தோரிலிருந்து முதற் பிறந்தவர் யார்??
இயேசு கிறிஸ்து. வெளி 1:5
4651: யோவான் இருந்த தீவின் பெயர் என்ன??
பத்மு தீவு. வெளி 1:9
4652: யோவான் எவைகளினிமித்தம் பத்மூ தீவில் இருந்தார்??
தேவவசனம், கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி. வெளி 1:9
4653: ஏழு சபையின் பெயர்கள் என்ன??
-
எபேசு
-
சிமிர்னா
-
பெர்கமு
-
தியத்தீரா
-
சர்தை
-
பிலதெல்பியா
-
லவோதிக்கியா
வெளி 1:11
4654: மனுஷகுமாரனுக்கொப்பானவரின் வாயிலிருந்து புறப்பட்டது எது??
இருபுறமும் கருக்குள்ள பட்டயம். வெளி 1:16
4655: எவைகளின் இரகசியத்தை எழுதும் படி மனுஷகுமாரன் யோவானிடம் கூறினார்??
ஏழு நட்சத்திரங்கள், ஏழு பொன் குத்து விளக்குகள். வெளி 1:20
4656: ஏழு குத்து விளக்குகள் எதைக் குறிக்கும்??
ஏழு சபைகள். வெளி 1:20
4657: ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்ட சபை எது??
எபேசு. வெளி 2:4
4658: எபேசு சபை எந்த மதஸ்தாரின் கிரியைகளை வெறுத்தது??
நிக்கொலாய். வெளி 2:6
4659: தேவனுடைய பரதீசின் மத்தியிலிருப்பது எது??
ஜீவ விருட்சம். வெளி 2:7
4660: ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் தரித்திரத்தையுடைய சபை எது??
சிமிர்னா. வெளி 2:9
4661: மரணபரியந்தம் உண்மையாயிருப்பதால் கிடைப்பது என்ன??
ஜீவகிரீடம். வெளி 2:19
4662: சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் குடியிருந்த சபை எது ??
பெர்கமு. வெளி 2:13
4663: சாத்தான் குடிகொண்டிருந்த இடத்தில் உண்மையுள்ள சாட்ச்சியாயிருந்தவன் யார்??
அந்திப்பா. வெளி 2:13
4464: யாருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் பெர்கமு சபையில் உள்ளனர்??
பிலேயாம். வெளி 2:14
4465: ஜெயங்கொள்ளுகிறவனுக்கு எது புசிக்கக்கொடுக்கப்படும்??
மறைவான மன்னா. வெளி 2:17
4466: வெண்மையான குறிகல்லில் எழுதப்பட்டிருப்பது என்ன??
புதிய நாமம். வெளி 2:17
4467: தன்னை தீர்க்கதரிசி என்று சொல்லுகிற ஸ்திரீயானவள் யார்??
யேசபேல். வெளி 2:20
4468: உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்ததாயிருந்த சபை எது??
சர்தை. வெளி 3:2
4469: திருடனைப் போல கர்த்தர் எச்சபையின் மேல் வருவார்??
சர்தை சபை. வெளி 3:3
4470: திறந்த வாசல் எச்சபையினருக்கு முன்பாக வைக்கப்படும்??
பிலதெல்பியா. வெளி 3:8
4471: பூச்சக்கரத்தின் மீது வரும் சோதனை காலத்திற்குத் தப்பும் சபை எது??
பிலதெல்பியா. வெளி 3:10
4472: தேவனுடைய நகரத்தின் நாமம் என்ன??
புதிய எருசலேம். வெளி 3:12
4473: குளிருமல்ல அனலுமல்ல என்றழைக்கப்பட்ட சபை எது??
லவோதிக்கேயா. வெளி 3:15
4474: யோவானோடே பேசின சத்தம் எதைப் போன்றது??
எக்காள சத்தம். வெளி 4:1
4475: சிங்காசனத்தில் வீற்றிருந்தவர் பார்வைக்கு எவைகளுக்கு ஒப்பாயிருந்தார்??
வச்சிரக்கல், பதுமராகம். வெளி 4:3
4476: சிங்காசனத்தை சுற்றியிருந்தது எது??
வானவில். வெளி 4:3
4477: வானவில்லானது பார்வைக்கு எதைப்போல தோன்றியது??
மரகதம். வெளி 4:3
4478: ஏழு அக்கினி தீபங்கள் என்பது எதைக் குறிக்கின்றது??
தேவனுடைய ஏழு ஆவிகள். வெளி 4;5
4479: சிங்காசனத்திற்கு முன்பாக இருந்தது எது??
கண்ணாடிக்கடல். வெளி 4:6
4480: கண்ணாடிக்கடல் எதற்கு ஒப்பாயிருந்தது??
பளிங்கு. வெளி 4:6
4481: சிங்காசனத்தின் மத்தியிலும் அதைச் சுற்றிலும் எத்தனை ஜீவன்களிருந்தன??
நான்கு. வெளி 4:6
4482: முதலாம் ஜீவன் எதற்கு ஒப்பாயிருந்தது??
சிங்கம். வெளி 4:7
4483: இரண்டாம் ஜீவன் எதற்கு ஒப்பாயிருந்தது??
காளை. வெளி 4:7
4484: மூன்றாம் ஜீவன் எதைப்போன்ற முகமுள்ளதாயிருந்தது??
மனுஷ முகம். வெளி 4:7
4485: நான்காம் ஜீவன் எதற்கு ஒப்பாயிருந்தது??
பறக்கிற கழுகு. வெளி 4:7
4486: உள்ளும் புறம்பும் எழுதப்பட்ட புஸ்தகம் எத்தனை முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டிருந்தது???
ஏழு. வெளி 5:1
4487: புஸ்தகம் யாரும் திறக்க பாத்திரவானாயிராததால் அழுதவர் யார்??
யோவான். வெளி 5: 4
4488: தாவீதின் வேர் என்று அழைக்கப்பட்டவர் யார்??
இயேசு. வேளி 5:5
4489: புஸ்தகத்தை திறப்பதற்கு ஜெயம் கொண்டவர் யார்??
இயேசு கிறிஸ்து. வெளி 5:5
4490: தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்காலம் யாருடைய ஜெபங்களால் நிறைந்திருக்கிறது??
பரிசுத்தவான்கள். வெளி 5:8
4491: நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடியவர்கள் யார்??
4 ஜீவன்களும் 24 மூப்பர்களும். வெளி 5:10
4492: முதல் முத்திரையை உடைத்த போது யோவான் எதைக் கண்டார்??
வெள்ளைக் குதிரை. வெளி 6:1&2
4493: வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவனுக்கு கொடுக்கப்பட்டது என்ன??
ஒரு கிரீடம். வெளி 6:2
4494: இரண்டாம் முத்திரையை உடைத்த போது புறப்பட்டது எது??
சிவப்புக் குதிரை. வெளி 6:4
4495: சிவப்பு குதிரையின் மேல் ஏறியிருந்தவனுக்கு பூமியிலிருந்து எதை எடுத்துப் போடும் படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது??
சமாதானம். வெளி 6:4
4496: சிவப்புக் குதிரையின் மேலிருந்தவனுக்கு கொடுக்கப்பட்டது என்ன??
ஒரு பெரிய பட்டயம். வெளி 6:4
4497: எவைகளை சேதப்படுத்தாதே என்ற சத்தத்தை யோவான் கேட்டார்??
எண்ணெய் திராட்சரசம். வெளி 6:6
4498: மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் ஏறியிருந்தவனுக்கு பெயர் என்ன??
மரணம். வெளி 6:8
4499: மரணம் என்பவனின் பின் சென்றது எது??
பாதாளம். வெளி 6:8
4500: இரத்த சாட்சிகள் எதைக் குறித்து ஆண்டவரிடம் முறையிட்டார்கள்??
தங்கள் இரத்தம். வெளி 6:10
4501: இரத்த சாட்சிகளுக்கு கொடுக்க பட்டது எது??
வெள்ளை அங்கிகள். வெளி 6:11
4502: எந்த முத்திரை உடைக்கப்பட்டபோது பூமி மிகவும் அதிர்ந்தது??
ஆறாம் முத்திரை. வெளி 6:12
4503: ஆறாம் முத்திரை உடைபட்ட போது சூரியன் எதைப்போல கறுத்தது??
கறுப்புக் கம்பளி. வெளி 6:12
4504: ஆறாம் முத்திரை உடைபட்ட போது சந்திரன் எதைப் போலானது??
இரத்தம். வெளி 6:12
4505: ஆறாம் முத்திரை உடைபட்ட போது பூமியில் விழுந்தவை எவை??
நட்சத்திரங்கள். வெளி 6:13
4506: சுருட்டப்பட்ட புஸ்தகம் போல விலகிப்போனது எது??
வானம். வெளி 6:14
4507: தங்கள் இடங்களை விட்டு அகன்று போனவை எவை??
மலைகள், தீவுகள். வெளி 6: 14
4508: நான்கு திசையின் தூதர்கள் எதைப் பிடித்திருந்தார்கள்??
நான்கு காற்றுகள். வெளி 7:1
4509: ஜீவனுள்ள தேவனுடைய வேறொரு தூதன் எங்கேயிருந்து ஏறி வந்தான்??
சூரியன் உதிக்குந்திசை. வெளி 7:2
4510: சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறி வந்த தூதனின் கையில் இருந்தது என்ன??
ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோல். வெளி 7:2
4511: யாருடைய நெற்றிகளில் முத்திரை போடுமட்டும் சேதமிருக்காது??
தேவனுடைய ஊழியக்காரர்கள். வெளி 7:3
4512: இஸ்ரவேலரில் முத்திரை போடப்பட்டவர்களின் தொகை எவ்வளவு??
ஒரு லட்சத்திநாற்பத்திநாலாயிரம் பேர். வெளி 7:4
4513: எண்ணக்கூடாத திரளான ஜனங்கள் எதை தரித்திருந்தார்கள்??
வெள்ளை அங்கி. வெளி 7:9
4514: வெள்ளை அங்கிதரித்திருந்தோர் எதற்கு முன்பாக நின்றார்கள்??
சிங்காசனம். வெளி 7:9
4515: வெள்ளை அங்கி தரித்திருந்தோர் யாருக்கு முன்பாக நின்றார்கள்??
ஆட்டுக்குட்டியானவர். வெளி 7:9
4516: வெள்ளை அங்கித் தரித்தவர்கள் தங்கள் அங்கிகளை யாருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்தவர்கள் ??
ஆட்டுக்குட்டியானவர். வெளி 7:14
4517: வெள்ளை அங்கி தரித்தவர்கள் எங்கே நடத்தப்படுவார்கள்??
ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு. வெளி 7:17
4518: ஏழாம் முத்திரையை உடைத்த போது பரலோகத்தில் உண்டானது என்ன??
அமைதல். வெளி 8:1
4519: பரலோகத்தில் எவ்வளவு நேரம் அமைதல் உண்டாயிற்று??
ஏறக்குறைய அரைமணி நேரம். வெளி 8:1
4520: ஏழாம் முத்திரையை உடைத்த போது எத்தனை தூதர்கள் வந்தார்கள்??
ஏழு. வெளி 8:2
4521: ஏழு தூதர்களின் கையில் கொடுக்கப்பட்டது என்ன??
ஏழு எக்காளங்கள். வெளி 8:2
4522: சிங்காசனத்திற்கு முன்பாக இருந்தது என்ன??
பொற்பீடம். வெளி 8:3
4523: சகலபரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும் படி தூதனுக்குக் கொடுக்கப்பட்டது என்ன??
மிகுந்த தூபவர்க்கம். வெளி 8:3
4524: பலிபீடத்து நெருப்பினால் நிரப்பப்பட்டது எது??
தூபகலசம். வெளி 8:5
4525: முதலாம் தூதன் எக்காளம் ஊதும் போது உண்டானவை எவை??
கல்மழையும் அக்கினியும். வெளி 8:7
4526: எவைகளில் மூன்றிலொரு பங்கு சேதமாயிற்று??
கப்பல்கள். வெளி 8:9
4527: தீவட்டியைப் போல எரிந்து வானத்திலிருந்து விழுந்தது எது??
பெரிய நட்சத்திரம். வெளி 8:10
4528: தீவட்டியைப் போல் விழுந்த நட்சத்திரத்தின் பெயர் என்ன??
எட்டி. வெளி 8:11
4529: ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதிய போது வானத்திலிருந்து விழுந்தது எது??
நட்சத்திரம். வெளி 9:1
4530: பாதாளக்குழியின் திறவுகோல் யாருக்கு கொடுக்கப்பட்டது??
ஐந்தாம் தூதன். வெளி 9:1
4531 : பாதாளக்குழியின் புகையிலிருந்து எவைகள் புறப்பட்டு வந்தன??
வெட்டுக்கிளிகள். வெளி 9:3
4532: வெட்டுக்கிளிகளுக்கு எதற்கு ஒப்பான வல்லமை கொடுக்கப்பட்டது??
பூமியிலுள்ள தேள்களின் வல்லமை. வெளி 9:3
4533: தேவனுடைய முத்திரையைத் தரித்திராதவர்களை சேதப்படுத்துவது எது??
வெட்டுக்கிளிகள். வெளி 9:4
4534: வெட்டுக்கிளிகளுக்கு எவர்களைக் கொலை செய்ய உத்தரவு கொடுக்கப்படவில்லை??
நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷர்.
வெளி 9:5
4535: வெட்டுக்கிளிகள் எத்தனை மாதம் தங்கள் உத்தரவுகளை நிறைவேற்றும் ??
5 மாதம். வெளி 9:4&5
4536: மனுஷர்கள் எதைத் தேடியும் அதைக் காணாதிருப்பார்கள்??
சாவு. வெளி 9:6
4537: மனுஷர்களுக்கு விலகி ஓடிப்போவது எது??
சாவு. வெளி 9:6
4538: யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருப்பது எது??
வெட்டுக்கிளிகளின் உருவம். வெளி 9:7
4539: வெட்டுக்கிளிகளின் தலைகளின் மேல் இருந்தது என்ன??
பொன்மயமான கிரீடம் போன்றவை. வெளி 9:7
4540 : வெட்டுக்கிளிகளின் முகங்கள் யாருடைய முகங்கள் போலிருந்தன??
மனுஷர். வெளி 9:7
4541: எதனுடைய கூந்தல் ஸ்திரீகளின் கூந்தலைப் போலிருந்தது??
வெட்டுக்கிளிகள். வெளி 9:8
4542: வெட்டுக்கிளிகளின் சிறகுகளின் இரைச்சல் எதன் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன??
இரதங்கள். வெளி 9:9
4543: வெட்டுக்கிளிகளின் ராஜன் யார்??
பாதாளத்தின் தூதன். வெளி 9:11
4544: எபிரேய பாஷையிலே பாதாள தூதனுக்கு பெயர் என்ன??
அபெத்தோன். வெளி 9:11
4545: கிரேக்க பாஷையிலே பாதாள தூதனுக்கு பெயர் என்ன??
அப்பொல்லியோன். வெளி 9:11
4546: எந்த நதியண்டையில் தூதர்கள் கட்டப்பட்டிருந்தார்கள்??
ஐபிராத்து. வெளி 9:14
4547: எத்தனை தூதர்கள் ஐபிராத்து நதியண்டையில் கட்டப்பட்டிருந்தார்கள்??
4. வெளி 9:14
4548: மனுஷரில் எத்தனை பங்கைக் கொல்லும் படி தூதர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது??
மூன்றில் ஒரு பங்கு. வெளி 9:15
4549: குதிரைச் சேனைகளாகிய இராணுவங்களின் தொகை எவ்வளவு??
இருபது கோடி. வெளி 9:16
4550: எதனுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப் போலிருந்தன??
குதிரைகள். வெளி 9:17
4551: எதனுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன??
குதிரைகள். வெளி 9:17
4552: குதிரைகளின் வால்கள் எவைகளுக்கு ஒப்பாயிருந்தன??
பாம்புகள். வெளி 9:19
4553: காணவும் கேட்கவும் நடக்கவும் கூடாதவைகள் எவை??
விக்கிரகங்கள். வெளி 9:20
4554: பலமுள்ள தூதன் எங்கேயிருந்து இறங்கினான்??
வானம். வெளி 10:1
4555: பலமுள்ள தூதனைச் சூழ்ந்திருந்தது எது??
மேகம். வெளி 10:1
4556: பலமுள்ள தூதனின் முகம் எதைப்போலிருந்தது??
சூரியன். வெளி 10:1
4557: பலமுள்ள தூதனின் கால்கள் எதைப்போலிருந்தது??
அக்கினி ஸ்தம்பங்கள். வெளி 10:1
4558: பலமுள்ள தூதனின் கையில் இருந்தது என்ன??
திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம். வெளி 10:2
4559: சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தவன் யார்??
பலமுள்ள தூதன். வெளி 10:3
4560: ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே நிறைவேறுவது எது??
தேவரகசியம். வெளி 10:6
4561: யார் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்??
ஏழாம் தூதன். வெளி 10:6
4562: தேவன் யாருக்கு அறிவித்தபடி தேவரகசியம் நிறைவேறும்??
தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள். வெளி 10:6
4563: பலமுள்ள தூதனிடமிருந்து சிறு புஸ்தகத்தை வாங்கி புசித்தவர் யார்??
யோவான். வெளி 10:10
4564: சிறுபுஸ்தகம் யோவானின் வாய்க்கு எப்படியிருந்தது??
தேனைப் போல மதுரமாய். வெளி 10:10
4565: சிறுபுஸ்தகம் யோவானின் வயிற்றுக்கு எப்படியிருந்தது??
கசப்பாய். வெளி 10:10
4566: யோவானிடம் எதற்கு ஒப்பான அளவு கோல் கொடுக்கப்பட்டது??
கைக்கோல். வெளி 11:1
4567: ஆலயத்திற்கு புறம்பான பிரகாரம் யாருடையது??
புறஜாதியார். வெளி 11:2
4568: பரிசுத்தநகரத்தை மிதிப்பவர்கள் யார்??
புறஜாதியார். வெளி 11:2
4569: பரிசுத்தநகரத்தை புறஜாதியார் எத்தனை மாதம் மிதிப்பார்கள்??
42 மாதம். வெளி 11:2
4570: இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய் தீர்க்கதரிசனம் சொல்பவர்கள் யார்??
இரண்டு சாட்சிகள். வெளி 11:3
4571: இரண்டு சாட்சிகள் எத்தனை நாட்கள் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்??
1260 நாட்கள். வெளி 11:4
4572: பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்கள் யார்??
இரண்டு சாட்சிகள். வெளி 11:4
4573: இரண்டு விளக்கு தண்டுகள் என்பது யாரைக் குறிக்கின்றது??
இரண்டு சாட்சிகள். வெளி 11:4
4574: இரண்டு சாட்சிகளின் வாயிலிருந்து புறப்பட்டு சத்துருக்களைப் பட்சிப்பது எது??
அக்கினி. வெளி 11:5
4575: மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அதிகாரம் பெற்றவர்கள் யார்??
இரண்டு சாட்சிகள். வெளி 11:6
4576: தண்ணீரை இரத்தமாக மாற்ற அதிகாரம் பெற்றவர்கள் யார்??
இரண்டு சாட்சிகள். வெளி 11:6
4577: பூமியை சகலவித வாதைகளாலும் வாதிக்க அதிகாரம் பெற்றவர்கள் யார்??
இரண்டு சாட்சிகள். வெளி 11:6
4578: இரண்டு சாட்சிகளோடே யுத்தம் பண்ணுவது எது??
பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம். வெளி 11:7
4579: இரண்டு சாட்சிகளைப் கொன்று போடுவது எது??
பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம். வெளி 11:7
4580: மகா நகரத்தின் விசாலமான வீதியில் கிடப்பது எது??
இரண்டு சாட்சிகளின் உடல்கள். வெளி 11:8
4581: இரண்டு சாட்சிகளின் உடல்கள் கிடக்கும் இடம் எது??
சோதோம், எகிப்து. வெளி 11:8
4582: ஞானார்த்தமாய் சொல்லப்படும் நகரங்கள் எவை??
சோதோம், எகிப்து. வெளி 11:8
4583: நம்முடைய கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட இடம் எது??
சோதோம், எகிப்து. வெளி 11:8
4584: இரண்டு சாட்சிகளின் உடல்கள் எத்தனை நாள் வீதியில் கிடக்கும்??
3/2 நாள். வெளி 11:9
4585: யாருடைய உடல்களை கல்லறையில் வைக்கவொட்டார்கள்??
இரண்டு சாட்சிகள். வெளி 11:10
4586: பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினவர்கள் யார்??
இரண்டு சாட்சிகள். வெளி 11:10
4587: இரண்டு சாட்சிகளின் மரணத்தினிமித்தம் ஒருவருக்கொருவர் எதை அனுப்புவார்கள்??
வெகுமதிகள். வெளி 11:10
4588 மூன்றரை நாளுக்குப்பின் இரண்டு சாட்சிகளின் உடல்களில் பிரவேசித்தது எது??
ஜீவ ஆவி. வெளி 11:11
4589: சோதோம் நகரத்தில் எத்தனை பங்கு இடிந்து விழுந்தது??
பத்தில் ஒன்று. வெளி 11:13
4590: சோதோமில் பூமி யதிர்ச்சியினால் எத்தனை மனுஷர்கள் அழிந்தார்கள்??
7,000 பேர். வெளி 11:13
4591: ஏழாம் தூதன் எக்காளம் ஊதிய போது கர்த்தருக்கும் கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களானவை எவை??
உலகத்தின் ராஜ்யங்கள். வெளி 11:15
4592: தேவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்த எவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்??
24 மூப்பர்கள். வெளி 11:16
4593: யார் நியாயத்தீர்ப்படைகிறதற்குக் காலம் வந்தது??
மரித்தோர். வெளி 11:18
4594: எவர்களுக்குப் பலனளிக்கிறதற்குக் காலம் வந்தது??
-
தேவனுடைய ஊழியக்காரர்
-
பரிசுத்தவான்கள்
-
பயபக்தியாயிருந்த சிறியோர்
-
பெரியோர்
வெளி 11:18
4595: தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது எது??
பரலோகத்தில். வெளி 11:19
4596: தேவனுடைய ஆலயத்தில் காணப்பட்டது எது??
உடன்படிக்கையின் பெட்டி. வெளி 11:19
4597: சூரியனை அணிந்திருந்தவள் யார்??
ஒரு ஸ்திரீ. வெளி 12:1
4598: ஸ்திரீயின் பாதங்களின் கீழே இருந்தது என்ன??
சந்திரன். வெளி 12:1
4599:ஸ்திரீயின் சிரசின் மேல் இருந்தது என்ன??
கிரீடம். வெளி 12:1
4600 : ஸ்திரீயின் சிரசின் மேல் எத்தனை நட்சத்திரமுள்ள கிரீடம் இருந்தது??
12. வெளி 12:1
4601: பிரசவ வேதனை யடைந்தவள் யார்??
சூரியனை அணிந்திருந்த ஸ்திரீ. வெளி 12:2
4602: ஸ்திரீ பிரசவவேதனையடைந்து அலறியபோது வானத்தில் தோன்றிய வேறொரு அடையாளம் என்ன??
வலுசர்ப்பம். வெளி 12:3
4603: வலுசர்ப்பத்துக்கு எத்தனை தலைகள் இருந்தன??
7 தலைகள். வெளி 12:3
4604: வலுசர்ப்பத்துக்கு எத்தனை கொம்புகள் இருந்தன??
பத்து. வெளி 12:3
4605: வலுசர்ப்பத்தின் தலையின் மேல் எத்தனை முடிகள் இருந்தன??
ஏழு. வெளி 12:3
4606: ஏழு தலைகளையுடைய வலுசர்ப்பத்தின் நிறம் என்ன??
சிவப்பு. வெளி 12:3
4607: வலுசர்ப்பத்தின் எப்பகுதி நட்சத்திரங்களை விழத்தள்ளியது??
வால். வெளி 12:4
4608: வலுசர்ப்பத்தினால் எத்தனை பங்கு நட்சத்திரங்கள் பூமியில் விழத்தள்ளப்பட்டது??
மூன்றில் ஒரு பங்கு. வெளி 12:4
4609: பிறந்த குழந்தையை பட்சித்து போடும் படி நின்றது எது??
வலுசர்ப்பம். வெளி 12:4
4610: ஸ்திரீயானவள் என்ன குழந்தையைப் பெற்றெடுத்தாள்??
ஆண் குழந்தை. வெளி 12:5
4611: தேவனிடத்திற்கும் சிங்காசனத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது எது??
ஆண் குழந்தை. வெளி 12:5
4612: ஸ்திரீயானவள் எங்கே ஓடிப்போனாள்??
வனாந்தரம். வெளி 12:6
4613: வனாந்தரத்தில் போஷிக்கப்பட்டவள் யார்??
சூரியனை அணிந்திருந்த ஸ்திரீ. வெளி 12:6
4614: ஸ்திரீயானவள் எத்தனை நாள் வனாந்தரத்தில் போஷிக்கப்பட்டாள்??
1260 நாள். வெளி 12:6
4615: யுத்தம் உண்டானது எங்கே??
வானம். வெளி 12:7
4616: வலுசர்ப்பத்தோடே யுத்தம் பண்ணினவர்கள் யார்??
மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும். வெளி 12:7
4617: உலகமனத்தையும் மோசம்போக்குகிறது யார்??
சாத்தான். வெளி 12:9
4618: பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்டது எது??
வலுசர்ப்பம். வெளி 12:9
4619: பழைய பாம்பு என்று அழைக்கப்பட்டது எது??
வலுசர்ப்பம். வெளி 12:9
4620: பூமியிலே விழத்தள்ளப்பட்டது எது??
வலுசர்ப்பம். வெளி 12:9
4621: வலுசர்ப்பத்தோடே பூமியிலே விழத்தள்ளப்பட்டவர்கள் யார்??
அதைச் சேர்ந்த தூதர். வெளி 12:9
4622: எவைகள் உண்டாயிருக்கிறது என்று வானத்திலுண்டான சத்தம் கூறியது??
-
இரட்சிப்பு
-
வல்லமை
-
தேவனுடைய ராஜ்யம்
-
கிறிஸ்துவின் அதிகாரம்
வெளி 12:10
4623: யார் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழ்த்தப்பட்டுப் போனான்??
சகோதரர். வெளி 12:10
4624: சகோதரர் மரணத்துக்குத் தப்பும் படி எவைகளினால் பிசாசை ஜெயித்தார்கள்??
ஆட்டுக்குட்டியின் இரத்தம், தங்கள் சாட்சியின் வசனம். வெளி 12:11
4625: யாருக்குக் கொஞ்ச காலம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது??
பிசாசானவன். வெளி 12:12
4626: ஆண்பிள்ளையைப் பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தியது எது??
வலுசர்ப்பம். வெளி 12:13
4627: பெருங்கழுகின் சிறகுகள் யாருக்குக் கொடுக்கப்பட்டது??
ஸ்திரீ. வெளி 12:14
4628: வலுசர்ப்பத்திற்கு விலகி வனாந்தரத்திற்குச் சென்றவள் யார்??
ஸ்திரீ. வெளி 12:14
4629: ஸ்திரீயானவள் எத்தனை காலங்கள் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திற்குப் போனாள்??
-
ஒரு காலம்
-
காலங்கள்
-
அரைகாலம்
வெளி 12:14
4630: ஸ்திரீயை வெள்ளத்தால் அழிக்கும் படி முயற்சித்தது எது??
வலுசர்ப்பம். வெளி 12:15
4631: ஸ்திரீயின் மேல் கோபங்கொண்டது எது??
வலுசர்ப்பம். வெளி 12:17
4632: ஸ்திரீயின் சந்ததியாரோடு யுத்தம் பண்ணச் சென்றது எது ??
வலுசர்ப்பம். வெளி 12:17
4633: ஸ்திரீயின் சந்ததியார் எதைக் கைக்கொண்டார்கள்??
தேவனுடைய கற்பனைகள். வெளி 12:17
4634: ஸ்திரீயின் சந்ததியார் யாரைக் குறித்த சாட்சியை உடையவர்கள்??
இயேசு கிறிஸ்து. வெளி 12:17
4635: கடற்கரை மணலின் மேல் நின்று கொண்டிருந்தவர் யார்??
யோவான். வெளி 13:1
4636:சமுத்திரத்திலிருந்து எழும்பிவருவதாக யோவான் கண்டது என்ன??
மிருகம். வெளி 13:1
4637: சமுத்திரத்திலிருந்து வந்த மிருகத்திற்கு எத்தனை தலைகள் இருந்தன??
ஏழு. வெளி 13:1
4638: சமுத்திரத்திலிருந்து வந்த மிருகத்திற்கு எத்தனை கொம்புகள் இருந்தன??
பத்து. வெளி 13:1
4639: சமுத்திரத்து கொம்புகள் மேல் இருந்தது என்ன??
10 முடிகள். வெளி 13:1
4640: சமுத்திரத்து மிருகத்தின் தலைகளின் மேல் இருந்தது என்ன??
தூஷணமான நாமம். வெளி 13:1
4641: சமுத்திரத்து மிருகம் எந்த மிருகத்தை போலிருந்தது??
சிறுத்தை. வெளி 13:2
4642: சமுத்திரத்து மிருகத்தின் கால்கள் எதைப்போலிருந்தன??
கரடியின் கால்கள். வெளி 13:2
4643: சிங்கத்தின் வாயை உடைய மிருகம் எது??
சமுத்திரத்து மிருகம். வெளி 13:2
4644: சமுத்திரத்து மிருகத்துக்கு தன் சிங்காசனத்தைக் கொடுத்தது எது??
வலுசர்ப்பம். வெளி 13:2
4645: தன் பலத்தையும் அதிகாரத்தையும் வலுசர்ப்பம் எதற்குக் கொடுத்தது??
சமுத்திரத்து மிருகம். வெளி 13:2
4646: எதினுடைய தலைகளிலொன்று சாவுக்கேதுவான காயமுண்டாயிருந்தது??
சமுத்திரத்து மிருகம். வெளி 13:3
4647: பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே எதைப் பின்பற்றினார்கள்??
சமுத்திரத்து மிருகம். வெளி 13:3
4648: பூமியிலுள்ள ஜனங்கள் எவைகளை வணங்கினார்கள்??
வலுசர்ப்பம், சமுத்திரத்து மிருகம். வெளி 13:4
4649: சமுத்திரத்து மிருகத்துக்கு எவைகளை பேசும் வாய் கொடுக்கப்பட்டது??
பெருமையானவைகள், தூஷணங்கள். வெளி 13:5
4650: சமுத்திரத்து மிருகத்துக்கு எத்தனை மாதம் யுத்தம் பண்ண அதிகாரம் கொடுக்கப்பட்டது??
42 மாதம். வெளி 13:5
4651: சமுத்திரத்து மிருகம் யாரை தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்தது??
தேவனை. வெளி 13:6
4652: தேவனுடைய நாமத்தையும் அவருடைய வாசஸ்தலத்தையும் தூஷித்தது எது??
சமுத்திரத்து மிருகம்
4653: சமுத்திரத்து மிருகம் எங்கே வாசமாயிருக்கிறவர்களைத் தூஷித்தது??
பரலோகத்தில். வெளி 13:6
4654: சமுத்திரத்து மிருகத்துக்கு எவர்களை ஜெயிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது??
பரிசுத்தவான்கள். வெளி 13:7
4655: எதில் பேரெழுதப்படாதவர்கள் சமுத்திரத்து மிருகத்தை வணங்குவார்கள்??
ஜீவபுஸ்தகம். வெளி 13:8
4656: எதுமுதல் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்படாதவர்கள்
சமுத்திரத்து மிருகத்தை வணங்குவார்கள்??
உலகத்தோற்றம். வெளி 13:8
4657:பட்டயத்தினாலே கொல்லுகிறவன் எதினாலே கொல்லப்பட வேண்டும்??
பட்டயம். வெளி 13:10
4658: யாருடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும் என்று கூறப்பட்டுள்ளது??
பரிசுத்தவான்கள். வெளி 13:10
4659: வெறொரு மிருகம் எங்கேயிருந்து எழும்பினது??
பூமி. வெளி 13:11
4660: பூமியிலிருந்து எழும்பின மிருகத்திற்கு எத்தனை கொம்புகளிருந்தன??
இரண்டு. வெளி 13:11
4661: பூமியிலிருந்தெழும்பின மிருகத்தின் கொம்புகள் எதற்கு ஒப்பாயிருந்தன??
ஆட்டுக்குட்டி. வெளி 13:11
4662: பூமியிலிருந்தெழும்பின மிருகம் எதைப்போல பேசியது??
வலுசர்ப்பம். வெளி 13:11
4663: சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்திருந்தது எது??
சமுத்திரத்து மிருகம். வெளி 13:12
4664: பட்டயத்தினாலே காயப்பட்டு பிழைத்தது எது??
சமுத்திரத்து மிருகம். வெளி 13:14
4665: எந்த மிருகத்தின் சொரூபம் பேசியது??
சமுத்திரத்து மிருகம். வெளி 13:15
4666: எந்த சொரூபத்தை வணங்காத யாவரும் கொலை செய்யப்படுவார்கள்??
சமுத்திரத்து மிருகம். வெளி 13:15
4667: எதினுடைய முத்திரையை தரித்துக்கொள்ள வற்புறுத்தப்பட்டது??
சமுத்திரத்து மிருகம். வெளி 13:17
4668: எதிலே ஞானம் விளங்குவதாக கூறப்படுகிறது??
மிருகத்தின் இலக்கம். வெளி 13:18
4669: மிருகத்தின் இலக்கத்தை எவன் கணக்கு பார்க்கக்கடவன்??
புத்தியுள்ளவன். வெளி 13:18
4670: மிருகத்தின் இலக்கம் யாருடைய இலக்கமாயிருக்கிறது??
மனுஷன். வெளி 13:18
4671: மிருகத்தின் இலக்கம் என்ன??
666. வெளி 13:18
4672: ஆட்டுக்குட்டியானவர் எந்த மலையில் நின்றதாக யோவான் கண்டார்??
சீயோன் மலை. வெளி 14:1
4673: பிதாவின் நாமம் எழுதப்பட்டிருந்தவர்கள் எத்தனை பேர்??
1,44,000 பேர். வெளி 14:1
4674 இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் எம்மலையில் நின்றிருந்தார்கள்??
சீயோன் மலை. வெளி 14:1
4675: பிதாவின் நாமம் எழுதப்பட்டிருந்த இடம் எது??
நெற்றி. வெளி 14:1
4676: பிதாவின் நாமம் தரிக்கப்பட்டவர்கள் யாரோடே கூட நின்றார்கள்??
ஆட்டுக்குட்டியானவர். வெளி 14:1
4677: பெருவெள்ள இரைச்சல் போல சத்தம் எங்கேயிருந்து உண்டானது??
வானம். வெளி 14:2
4678: சிங்காசனத்திற்கு முன்பாக புதுப்பாட்டை பாடியவர்கள் யார்??
சுரமண்டலக்காரர். வெளி 14:3
4679: சுரமண்டலக்காரரின் பாடல் யார் மட்டும் கற்று கொள்ள கூடியதாயிருந்தது??
1,44,000 பேர். வெளி 14:3
4680: 1,44,000 பேர் எங்கேயிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்??
பூமி. வெளி 14:3
4681: ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் யார்??
மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். வெளி 14:4
4682: ஆட்டுக்குட்டியானவரை பின்பற்றியவர்கள் யார்??
மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். வெளி 14:4
4683: மனுஷரினின்று முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள் யார்??
1,44,000 பேர். வெளி 14:4
4684: மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள் யாருக்கு முதற்பலனாக காணப்பட்டார்கள்??
தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும். வெளி 14:4
4685: மீட்டுக்கொள்ளப்பட்டவர்களின் வாயில் எது காணப்படவில்லை??
கபடம். வெளி 14:5
4686: எந்த மகாநகரம் விழுந்தது என்று தூதன் கூறினான்??
பாபிலோன். வெளி 14:8
4687: தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தவள் யார்??
பாபிலோன். வெளி 14:8
4688: தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்டது எது?
தேவனுடைய உக்கிரமாகிய மது. வெளி 14:10
4689: அக்கினியாலும் கந்தகத்தாலும் வாதிக்கப்படுபவர்கள் யார்??
மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்கள். வெளி 14:10
4690: எதின் சொரூபத்தை வணங்கினவர்களுக்கு இரவும் பகலும் இளைப்பாறுதல் இல்லாமற் போகும்??
மிருகம். வெளி 14:11
4691: தேவனுடைய கற்பனைகளைக் காத்துக்கொள்கிறவர்கள் யார்??
பரிசுத்தவான்கள். வெளி 14:12
4692: பரிசுத்தவான்கள் கடைபிடிக்கும் முக்கிய செல்வம் எது??
பொறுமை. வெளி 14:12
4693: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் எதைவிட்டொழிந்து இளைப்பாறுவார்கள்??
தங்கள் பிரயாசங்கள். வெளி 14:13
4694: கர்த்தருக்குள் மரிக்கிறவர்களோடே கூடப்போவது என்ன??
கிரியைகள். வெளி 14:13
4695: ஆம் என்று திருவுளம் பற்றுகிறவர் யார்??
ஆவியானவர். வெளி 14:13
4696:மனுஷகுமாரனுக்கொப்பானவர் எதின் மேல் உட்கார்ந்திருந்தார்??
மேகம். வெளி 14:14
4697: மனுஷகுமாரனுக்கொப்பானவர் தமது சிரசின் மேல் எதை வைத்திருந்தார்??
பொற்கிரீடம். வெளி 14:14
4698: மனுஷகுமாரனுக்கொப்பானவர் கையில் வைத்திருந்தது என்ன??
கருக்குள்ள அரிவாள். வெளி 14:14
4699: எதின் பயிர் முதிர்ந்தது என்று தூதன் கூறினான்??
பூமி. வெளி 14:15
4700: கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருந்த தூதன் எங்கிருந்து புறப்பட்டு வந்தான்??
பரலோகத்திலுள்ள தேவாலயம். வெளி 14:17
4701: அக்கினியின் மேல் அதிகாரமுள்ள தூதன் எங்கிருந்து புறப்பட்டு வந்தான்??
பலிபீடம். வெளி 14:17
4702: கருக்குள்ள அரிவாளால் பூமியின் எப்பழங்கள் அறுக்கப்பட்டன??
திராட்சப்பழங்கள். வெளி 14:19
4703: திராட்சப்பழங்கள் தேவனுடைய எந்த ஆலையில் போடப்பட்டது??
கோபாக்கினை. வெளி 14:19
4704: தேவனுடைய கோபாக்கினை என்னும் ஆலை எங்கே இருந்தது??
நகரத்திற்கு புறம்பே. வெளி 14:20
4705: நகரத்திற்கு புறம்பே உள்ள ஆலையில் மிதிக்கப்பட்டது என்ன??
திராட்சைப் பழங்கள். வெளி 14:20
4706: தேவனுடைய கோபாக்கினை என்னும் ஆலையிலிருந்து புறப்பட்டு வந்தது என்ன??
இரத்தம். வெளி 14:20
4707:ஆலையிலிருந்து இரத்தம் எவ்வளவு தூரம் புறப்பட்டு சென்றது??
1600 ஸ்தாதி. வெளி 14:20
4708: குதிரைகளின் கடிவாளம் மட்டும் பெருகி வந்தது என்ன??
இரத்தம். வெளி 14:20
4709: எவைகளுடைய ஏழு தூதரை யோவான் வானத்திலே கண்டார்??
ஏழு வாதைகள். வெளி 15:1
4710: கண்ணாடிக்கடலில் கலந்திருந்தது என்ன??
அக்கினி. வெளி 15:2
4711: கண்ணாடிக்கடலருகே நின்றிருந்தவர்கள் யார்??
ஜெயங்கொண்டவர்கள். வெளி 15:2
4712: ஜெயங்கொண்டவர்கள் எதைப்பிடித்துக் கொண்டு கண்ணாடிக்கடலருகே நின்றார்கள்??
தேவசுரமண்டலங்கள். வெளி 15:2
4713: தேவனுடைய ஊழியக்காரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர் யார்??
மோசே. வெளி 15:3
4714: ஜெயங்கொண்டவர்கள் எவர்களுடைய பாட்டைப் பாடுவார்கள்??
மோசே, ஆட்டுக்குட்டியானவர். வெளி 15:3
4715: எது வெளியரங்கமாயின??
தேவனுடைய நீதியான செயல்கள். வெளி 15:4
4716: பரலோகத்திலே காணப்படும் ஆலயம் என்பது எது??
சாட்சியின் கூடாரம். வெளி 15:5
4717: ஏழு வாதைகளுடைய ஏழு தூதர்கள் எங்கிருந்து புறப்பட்டார்கள்??
ஆலயம். வெளி 15:6
4718: சுத்தமும் பிரகாசமுமான வஸ்திரம் தரித்திருந்தவர்கள் யார்??
ஏழு வாதைகளுடைய ஏழு தூதர்கள். வெளி 15:6
4719: தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்திருந்தவை எவை??
பொற்கலசங்கள். வெளி 15:7
4720: தேவனுடைய மகிமையினாலும் வல்லமையினாலுமா உண்டானது எது??
புகை. வெளி 15:8
4721: தேவனுடைய வல்லமையினால் உண்டான புகையால் நிறைந்தது எது??
தேவாலயம். வெளி 15:8
4722: தேவனுடைய கோபகலசங்களை உடைய தூதர்கள் எத்தனை பேர்??
ஏழு தூதர்கள். வெளி 16:1
4723: தேவனுடைய கோபகலசங்களை எங்கே ஊற்றும்படி தூதர்களிடம் கூறப்பட்டது??
பூமியின் மேல். வெளி 16:1
4724: முதலாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்??
பூமி. வெளி 10:2
4725: முதலாம் தூதனால் ஏற்பட்ட வாதை எது??
பொல்லாத கொடிய புண். வெளி 16:2
4726: இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்??
சமுத்திரம். வெளி 16:3
4727: இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஊற்ற அது எதைப் போலாயிற்று??
செத்தவனுடைய இரத்தம். வெளி 16:3
4728: மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்??
ஆறுகள், நீருற்றுகள். வெளி 16:4
4729: மூன்றாம் தூதனால் ஏற்பட்ட வாதை எது??
இரத்தம். வெளி 16:4
4730: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் கூறியவன் யார்??
தண்ணீர்களின் தூதன். வெளி 16:5
4731: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் கூறியவன் யார்??
தண்ணீர்களின் தூதன். வெளி 16:5
4732: மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்கள் யாருடைய இரத்தத்தைச் சிந்தியவர்கள்??
பரிசுத்தவான்கள், தீர்க்கதரிசிகள். வெளி 26:6
4733: மிருகத்தை வணங்குகிறவர்களுக்கு தேவன் எதை குடிக்க கொடுத்தார்??
இரத்தம். வெளி 16:6
4734: சத்தியமும் நீதியுமானவைகள் எவைகள்??
தேவனுடைய நியாயத்தீர்ப்புகள். வெளி 16:7
4735: நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்??
சூரியன். வெளி 16:8
4736: ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்??
ஐபிராத் நதி. வெளி 16:12
4737: சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வருபவர்கள் யார்??
ராஜாக்கள். வெளி 16:12
4738: யாருக்கு வழி ஆயத்தமாகும்படி ஐபிராத் நதியின் தண்ணீர் வற்றிப்போனது??
ராஜாக்கள். வெளி 16:12
4739: வலுசர்ப்பம் மிருகம் மற்றும் கள்ளத்தீர்க்கதரிசிகளின் வாயிலிருந்து வந்தது என்ன??
அசுத்த ஆவிகள். வெளி 16:13
4740: மூன்று அசுத்த ஆவிகளும் எதற்கு ஒப்பாக காணப்பட்டது??
தவளைகள். வெளி 16:13
4741: பிசாசுகளின் ஆவிகள் எதைச் செய்தன??
அற்புதங்கள். வெளி 16:14
4742: சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடப்பது என்ன??
யுத்தம். வெளி 16:14
4743: பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைக் கூட்டிச் சேர்க்கும்படி சென்றது யார்??
பிசாசுகளின் ஆவிகள். வெளி16:14
4744: இதோ திருடனைப் போல் வருகிறேன் என்ற சத்தம் எங்கேயிருந்து உண்டானது??
தேவாலயம். வெளி 16 :1-15
4745: நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு எதைக் காத்து கொள்ள வேண்டும்??
வஸ்திரங்களை. வெளி 16:15
4746: பூமியின் ராஜாக்கள் எந்த இடத்திலே கூட்டி சேர்க்கப்பட்டார்கள்??
அர்மகெதோன். வெளி 16:16
4747: அர்மகெதோன் என்பது எந்த பாஷையில் அழைக்கப்பட்டுள்ளது??
எபிரெயு. வெளி 16:16
4748: ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை எதின் மேல் ஊற்றினான்??
ஆகாயம். வெளி 16:17
4749: ஏழாம் தூதன் கலசத்திலுள்ளதை ஊற்றியபோது பிறந்த பெருஞ்சத்தம் என்ன??
ஆயிற்று. வெளி 16:17
4750: ஆயிற்று என்கிற சத்தம் எங்கேயுள்ள சிங்காசனத்திலிருந்து பிறந்தது??
பரலோகத்தின் ஆலயம். வெளி 16;17
4751: எந்த தூதன் கலசத்தை ஊற்றியபோது சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டானது??
ஏழாம் தூதன். வெளி 16:18
4752: மகா நகரம் எத்தனை பங்காக பிரிக்கப்பட்டது??
மூன்று. வெளி 16:19
4753: தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரம் யாருக்கு கொடுக்கப்பட்டது??
மகாபாபிலோன். வெளி 16:19
4754: ஏழாம் தூதன் கலசத்தை ஊற்றியதால் அகன்று போனவை எவை??
தீவுகள். வெளி 16:20
4755: ஏழாம் தூதன் கலசத்தை ஊற்றியதால் காணப்படாமல் போனவை எவை??
பர்வதங்கள். வெளி 16:20
4756: பெரிய கல்மழை எங்கேயிருந்து மனுஷர் மேல் விழுந்தது??
வானம். வெளி 16:21
4757: எதன் நிறையான கல்மழை வானத்திலிருந்து விழுந்தது??
தாலந்து. வெளி 16:20
4758: மகா கொடியதாயிருந்த வாதை எது??
ஏழாம் வாதை. வெளி 16:21
4759: திரளான தண்ணீர்கள் மேல் உட்காந்திருந்தவள் யார்??
மகா வேசி. வெளி 17:1
4760: மகா வேசியோடே வேசித்தனம் பண்ணினவர்கள் யார்??
பூமியின் ராஜாக்கள். வெளி 17:1
4761: ஆவிக்குள் வனாந்திரத்திற்குக் கொண்டு போகப்பட்டவர் யார்??
யோவான். வெளி 17:3
4762: யோவான் வனாந்தரத்தில் கண்ட மிருகத்துக்கு எத்தனை தலைகள் இருந்தன??
ஏழு. வெளி 17:3
4763: யோவான் வனாந்தரத்தில் கண்ட மிருகத்துக்கு எத்தனை கொம்புகள் இருந்தன??
10. வெளி 17:3
4764: யோவான் வனாந்தரத்தில் கண்ட மிருகம் எப்படிப்பட்ட நாமங்களால் நிறைந்தது??
தூஷணமான. வெளி 17:3
4765: தூஷணமான நாமங்களால் நிறைந்த மிருகத்தின் நிறம் என்ன??
சிவப்பு. வெளி 17:3
4766: ஏழு தலையும் பத்து கொம்புகளையும் உடைய மிருகத்தின் மேல் உட்கார்ந்திருந்தவள் யார்??
ஒரு ஸ்திரீ. வெளி 17:3
4767:இரத்தாம்பரமும் சிவப்புமான ஆடையைத் தரித்திருந்தவள் யார்??
மகா வேசி. வெளி 17:4
4768: பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களாலும் சிங்கரிக்கப்பட்டிருந்தவள் யார்??
மகா வேசி. வெளி 17:4
4769:மகா வேசி தன் கையால் எதை பிடித்திருந்தாள்??
பொற்பாத்திரம். வெளி 17:4
4770: மகா வேசியின் பொற்பாத்திரம் எதினால் நிறைந்திருந்தது??
வேசித்தனமாகிய அருவருப்புகளும், அசுத்தங்களும். வெளி 17:4
4771: இரகசியம் என்ற பதம் யாருடைய நெற்றியில் எழுதியிருந்தது??
மகா வேசி. வெளி 17:5
4772: மகா பாபிலோன் என்பது யாரைக் குறிக்கிறது??
மகா வேசி. வெளி 17:5
4773: வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் எது??
மகாபாபிலோன். வெளி 17:5
4774: மகாவேசியின் நெற்றியில் எத்தனை நாமங்கள் எழுதப்பட்டிருந்தன??
மூன்று. வெளி 17:5
4775: பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுவினுடைய சாட்ச்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருந்தவள் யார்??
மகா வேசி. வெளி 17:6
4776: மகா வேசியைக் கண்டு ஆச்சரியப்பட்டது யார்??
யோவான். வெளி 17:6
4777: ஏன் ஆச்சரியப்படுகிறாய் யார் யாரிடம் கேட்டது??
தூதன் யோவானிடம். வெளி 17:7
4778: எவைகளின் இரகசியத்தை யோவானுக்குக் காண்பிப்பேன் என்று தூதன் கூறினான்??
ஸ்திரீ மற்றும் அவளைச் சுமக்கிற மிருகம். வெளி 17:7
4779: பாதாளத்திலிருந்து ஏறி வந்து நாசமடையப்போவது எது??
யோவான் கண்ட மிருகம். வெளி 17:7
4780: இருந்தும் இராமற்போனதும் இனி இருப்பதுமாயிருப்பது எது??
யோவான் கண்ட மிருகம். வெளி 17:8
4781: மிருகத்தின் இரகசியத்தில் விளங்குவது எது??
ஞானமுள்ள மனம். வெளி 17:9
4782: ஏழு தலைகளையுடைய மிருகத்தின் தலைகள் எதைக் குறிக்கின்றது??
ஏழு மலைகள். வெளி 17:9
4783: ஏழு மலைகளும் யார் உட்கார்ந்திருக்கிற மலைகளைக் குறிக்கிறது??
மகா வேசி. வெளி 17:9
4784: ஏழு மலைகள் என்பது யாரைக் குறிக்கிறது??
ஏழு ராஜாக்கள். வெளி 17:10
4785: ஏழு ராஜாக்களில் விழுந்தவர் எத்தனை பேர்??
ஐந்து. வெளி 17:10
4786:ஏழு ராஜாக்களில் இன்னும் வராதவர்கள் எத்தனை பேர்??
ஒருவன். வெளி 17:10
4787: கொஞ்சக்காலம் தரித்திருக்க வேண்டியவன் யார்??
இன்னும் வராத ஒரு ராஜா. வெளி 17:10
4788: எட்டாவதானாயிருப்பது எது??
இருந்ததும் இராததுமாகிய மிருகம். வெளி 17:11
4789: இருந்ததும் இராததுமாயிருக்கிற மிருகம் எதிலிருந்து தோன்றுகிறதாயிருக்கும்??
ஏழிலிருந்து. வெளி 17:11
4790: நாசமடைய போகிறவனாயிருப்பவன் யார்??
எட்டாவதான ராஜா. வெளி 17:11
4791: பத்து கொம்புகள் என்பது யாரைக் குறிக்கும்??
10 ராஜாக்கள். வெளி 17:12
4792: மிருகத்தின் கொம்புகள் குறிக்கும் ராஜாக்கள் இன்னும் பெறாதது எது??
இராஜ்யம். வெளி 17:12
4793: மிருகத்துடனே கூட ராஜாக்கள் போல் அதிகாரம் பெற்றுக் கொள்ளுகிறவர்கள் யார்??
10 ராஜாக்கள். வெளி 17:13
4794: 10 ராஜாக்களும் எவ்வளவு நேரமளவும் அதிகாரம் பெற்றுக் கொள்ளுவார்கள்??
ஒருமணி நேரம். வெளி 17:12
4795: ஒரே யோசனையுள்ளவர்கள் யார்??
10 ராஜாக்கள். வெளி 17:13
4796: தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்துக்குக் கொடுப்பவர்கள் யார்??
10 ராஜாக்கள். வெளி 17:13
4797: பத்து ராஜாக்களும் யாருடனே யுத்தம் பண்ணுவார்கள்??
ஆட்டுக்குட்டியானவர். வெளி17:14
4798: 10 ராஜாக்களை யுத்தத்தில் ஜெயிப்பவர் யார்??
ஆட்டுக்குட்டியானவர். வெளி 17:14
4799: ஆட்டுக்குட்டியானவரோடே இருக்கிறவர்கள்எப்படிப்பட்டவர்கள்??
அழைக்கப்பட்டவர்களும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களும், உண்மையுள்ளவர்களுமானவர்கள். வெளி 17:14
4800: வேசி உட்கார்ந்திருந்த தண்ணீருக்கு ஒப்பிடப்பட்டவர்கள் யார்??
ஜனங்கள், கூட்டங்கள், ஜாதிகள், பாஷைக்காரர். வெளி 17:15
4801: பத்து ராஜாக்களும் யாரைப் பகைப்பார்கள்??
வேசி. வெளி 17:16
4802: வேசியைப் பாழும் நிர்வாணமுமாக்குபவர்கள் யார்??
பத்து ராஜாக்கள். வெளி 17:16
4803: பத்து ராஜாக்களும் வேசியினுடைய எதைப் பட்சிப்பார்கள்??
மாம்சத்தை. வெளி 17:16
4804: வேசியை நெருப்பினால் சுட்டெரிப்பவர்கள் யார்??
பத்து ராஜாக்கள். வெளி 17:16
4805:யார் தங்கள் இருதயத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கு கர்த்தர் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்??
பத்து ராஜாக்கள். வெளி 17:17
4806: பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரம் யார்??
மகா வேசி. வெளி 17:18
4807:வெறொரு தூதன் எதை உடையவனாய் வானத்திலிருந்து இறங்கி வந்தான்??
மிகுந்த அதிகாரம். வெளி 18:1
4808: மிகுந்த அதிகாரமுடைய தூதனால் பிரகாசமானது எது??
பூமி. வெளி 18:1
4809: எந்த நகரம் விழுந்தது விழுந்தது என்று தூதன் சத்தமிட்டான்??
மகா பாபிலோன். வெளி 18:2
4810: பேய்களுடைய குடியிருப்பு என்பது எது??
மகாபாபிலோன். வெளி 18:2
4811: அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளின் கூடு எது??
மகாபாபிலோன். வெளி 18:2
4812: மகா வேசியோடே வேசித்தனம் பண்ணினவர்கள் யார்??
பூமியின் ராஜாக்கள். வெளி 18:3
4813: மகா வேசியின் செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானவர்கள் யார்??
பூமியின் வர்த்தகர். வெளி 18:3
4814: யாருடைய பாவம் வானபரியந்தம் எட்டியது??
மகா வேசி. வெளி 18:5
4815: யாருடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்??
மகா வேசி. வெளி 18:5
4816: தன்னை மகிமைப்படுத்தி செல்வச்செருக்காய் வாழ்ந்தவள் யார்??
மகா வேசி. வெளி 18:7
4817: நான் ரஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன் என்று எண்ணியவள் யார்??
மகா பாபிலோன். வெளி 18:7
4818: ஒரே நாழிகையில் சாவும் துக்கமும் பஞ்சமும் யாருக்கு வரும்??
மகா பாபிலோன். வெளி 18:8
4819: மகா பாபிலோன் வேகிறதினால் அழுது புலம்புவர்கள் யார்??
பூமியின் ராஜாக்கள். வெளி 18:9
4820: பூமியின் வர்த்தகர்கள் யாருக்காக அழுது புலம்புவார்கள்??
மகா பாபிலோன். வெளி 18:11-13
4821: தங்கள் சரக்குகளை இனி கொள்வாரில்லாதபடியால் அழுது புலம்புவர்கள் யார்??
பூமியின் வர்த்தகர்கள். வெளி 18:11-13
4822: எது இச்சித்த பழவர்க்கங்கள் அதை விட்டு நீங்கிப்போயின??
மகா பாபிலோனின் ஆத்துமா. வெளி 18:14
4823: ஒரே நாளிகையிலே யாருடைய அவ்வளவு ஐசுவரியமும் அழிந்து போனது??
மகாபாபிலோன். வெளி 18:16
4824: எவர்கள் தங்கள் தலைகளில் புழுதியைய் போட்டுக்கொண்டார்கள்??
மாலுமிகள். வெளி 18:19
4825: மகா பாபிலோனின் உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானவர்கள் யார்??
சமுத்திரத்தில் கப்பல்களையுடைய அனைவரும். வெளி 18:19
4826: ஒரு நாழிகையிலே பாழாய்ப் போனவள் யார்??
மகா பாபிலோன். வெளி 18: 19
4827: மகா பாபிலோனுக்காக அழுது துக்கித்து ஓலமிடுபவர்கள் யார்??
மாலுமிகள், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள், கப்பலாட்கள்
சமுத்திரத்தில் தொழில் செய்பவர்கள். வெளி 18:17-19
4828: பரலோகம் யாரைக் குறித்து களிகூரவேண்டும் என்று தூதன் கூறினான்??
மகா பாபிலோன். வெளி 18:20
4829: எந்த மகா நகரம் இனி ஒருபோதும் காணப்படாமற் போகும்??
மகா பாபிலோன். வெளி 18:21
4830: தூதன் பெரிய எந்திரகல்லையொத்ததை எங்கே எறிந்தான்??
சமுத்திரத்தில். வெளி 18:21
4831: எவர்களுடைய சத்தம் இனி மகாபாபிலோனில் கேட்கப்படுவதில்லை??
சுரமண்டலக்காரர், கீதவாத்தியக்காரர், நாகசுரக்காரர், எக்காளக்காரர். வெளி 18:22
4832: எந்தத் தொழிலாளியும் இனி யாரிடத்தில் காணப்படுவதில்லை??
மகா பாபிலோன். வெளி 18:22
4833: மகா பாபிலோனில் இனி பிரகாசியாமலிருப்பது எது??
விளக்கு வெளிச்சம். வெளி 18:23
4834: மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி எங்கே கேட்கப்படுவதில்லை??
மகா பாபிலோன். வெளி 18:23
4835: மகா பாபிலோனின் வர்த்தகர் எங்கே பெரியோர்களாயிருந்தார்கள்??
பூமியில். வெளி 18:23
4836: யாருடைய சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்கள்??
மகா பாபிலோன். வெளி 18:23
4837: தீர்க்கதரிசிகள் மற்றும் பரிசுத்தவான்களின் இரத்தமும் யாரிடத்தில் காணப்பட்டது??
மகா பாபிலோன். வெளி 18:24
4838: பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் யாரிடத்தில் காணப்பட்டது??
மகா பாபிலோன். வெளி 18:24
4839: எங்கே திரளான ஜனங்கள் இடுகிற ஆரவாரத்தை யோவான் கேட்டார்??
பரலோகம். வெளி 19:1
4840: பரலோகத்தில் திரளான கூட்டம் சத்தமிட்ட வார்த்தை எது??
அல்லேலூயா. வெளி 19:1
4841: இரட்சணியம், மகிமை, கனம், வல்லமை இவைகள் யாருக்குரியவைகள்??
தேவனாகிய கர்த்தர். வெளி 19:1
4842: சத்தியமும் நீதியுமானவைகள் எவைகள்??
கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள். வெளி 19:1
4843: மகா வேசி தன் வேசித்தனத்தினால் எதைக் கெடுத்தாள்??
பூமியை. வெளி 19:2
4844: மகா வேசிக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தவர் யார்??
தேவனாகிய கர்த்தர். வெளி 19:2
4845:தேவனாகிய கர்த்தர் எதற்காக மகா வேசியினிடத்தில் பழிவாங்கினார்??
தம்முடைய ஊழியக்காரரின் இரத்தம். வெளி 19:2
4846: யாருடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்று ஜனக்கூட்டம் கூறினார்கள்??
மகா வேசி. வெளி 19:3
4847: வணக்கமாய் விழுந்து ஆமென் அல்லேலூயா என்று சொல்லி தேவனைத் தொழுதவர்கள் யார்??
24 மூப்பர்களும், 4 ஜீவன்கள்ளும். வெளி 19:4
4848: தேவனுடைய ஊழியக்காரரும் அவருக்கு பயப்படுகிறவர்களும் அவரைத் துதியுங்கள் என்ற சத்தம் உண்டான இடம் எது??
சிங்காசனம். வெளி 19:5
4849: யாருடைய கலியாணம் வந்தது??
ஆட்டுக்குட்டியானவர். வெளி 19: 7
4850: ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்துக்குத் தன்னை ஆயத்தம் பண்ணியவள் யார்??
ஆட்டுக்குட்டியானவரின் மனைவி. வெளி 19:7
4851: எங்கே திரளான ஜனங்கள் இடுகிற ஆரவாரத்தை யோவான் கேட்டார்??
பரலோகம். வெளி 19:1
4852: பரலோகத்தில் திரளான கூட்டம் சத்தமிட்டு வார்த்தை எது??
அல்லேலூயா. வெளி 19:1
4853: சத்தியமும் நீதியுமானவைகள் எவைகள்??
கர்த்தருடைய நீயாயத்தீர்ப்புகள். வெளி 19:1
4854: மகா வேசி தன் வேசித்தனத்தினால் எதைக் கெடுத்தாள்??
பூமியை. வெளி 19:2
4855: மகாவேசிக்கு நியாயத்தீர்ப்பு கொடுத்தவர் யார்??
தேவனாகிய கர்த்தர். வெளி 19:2
4856: தேவனாகிய கர்த்தர் எதற்காக மகா வேசியினிடத்தில் பழிவாங்கினார்??
தம்முடைய ஊழியக்காரரின் இரத்தம். வெளி 19:2
4857: யாருடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்று ஜனக்கூட்டம் கூறினார் கள்??
மகா வேசி. வெளி 19:3
4858: வணக்கமாய் விழுந்து ஆமேன் அல்லேலூயா என்று சொல்லி தேவனைத் தொழுதவர்கள் யார்??
24 மூப்பர்களும், 4ஜீவன்களும். வெளி 19:4
4859: தேவனுடைய ஊழியக்காரரும் அவருக்கு பயப்படுகிறவர்களும் அவரைத் துதியுங்கள் என்ற சத்தம் உண்டான இடம் எது??
சிங்காசனம். வெளி 19:5
4860: யாருடைய கலியாணம் வந்தது??
ஆட்டுக்குட்டியானவர். வெளி 19:7
4851: ஆட்டுக்குட்டியானவரின்மனைவி தன்னை ஆயத்தம் பண்ணிக்கொள்ள கொடுக்கப்பட்டது என்ன??
சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம். வெளி 19:8
4852: ஆட்டுக்குட்டியானவரின் மனைவிக்கு கொடுக்கப்பட்ட வஸ்திரம் யாருடைய நீதிகள் என்றழைக்கப்படுகிறது??
பரிசுத்தவான்கள். வெளி 19:8
4853: ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்??
பாக்கியவான்கள். வெளி 19:8
4854: தேவதூதனை வணங்கும் படி அவன் பாதத்தில் விழுந்தவர் யார்??
யோவான். வெளி 19:10
4855: தன்னை ஓர் ஊழியக்காரனாக யோவானிடம் கூறியவன் யார்??
தேவதூதன். வெளி 19:10
4856: தன் காலில் விழுவதைத் தடுத்து தேவனைத் தொழுது கொள் என்று யோவானிடம் கூறியவன் யார்??
தேவதூதன். வெளி 19:10
4857: இயேசுவைப் பற்றின சாட்சி எதின் ஆவியாயிருக்கிறது??
தீர்க்கதரிசனம். வெளி 19:10
4858: பரலோகம் திறந்திருக்கையில் காணப்பட்டது என்ன??
வெள்ளைக் குதிரை. வெளி 19:11
4859: உண்மையும் சத்தியமுமுள்ளவர் எக்குதிரையின் மேல் ஏறியிருந்தார்??
வெள்ளைக் குதிரை. வெளி 19:11
4860: நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுகிறவர் யார்??
வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவர். வெளி 19:11
4861: வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவரின் கண்கள் எதைப்போலிருந்தன??
அக்கினி ஜீவாலை. வெளி 19:12
4862: வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவரின் சிரசின் மேல் இருந்தது என்ன??
அநேக கிரீடங்கள். வெளி 19:12
4863: தமக்கேயன்றி வெறொருவருக்கும் தெரியாத நாமம் யாருடைய சிரசின் மேல் எழுதியிருந்தன??
வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்தவர். வெளி 19:12
4864: தேவனுடைய வார்த்தையானவர் எதில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தை தரித்திருந்தார்??
இரத்தம். வெளி 19:13
4865: வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்த வரின் நாமம் எது??
தேவனுடைய வார்த்தை. வெளி 19:13
4866: வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்திருந்தவர்கள் யார்??
பரலோகத்திலுள்ள சேனைகள். வெளி 19:14
4867: தேவனுடைய வார்த்தையானவரை தொடர்ந்து பின் சென்றவர்கள் யார்??
பரலோகத்தின் சேனைகள். வெளி 19;14
4868: தேவனுடைய வார்த்தையானவரின் வாயிலிருந்து புறப்பட்டது எது??
கூர்மையான பட்டயம். வெளி 19:15
4869: யாரை வெட்டும்படி தேவனுடைய வார்த்தையானவரின் வாயிலிருந்து பட்டயம் புறப்பட்டது??
புறஜாதிகள். வெளி 19:15
4870: இருப்புக்கோலால் புறஜாதிகளை அரசாளுபவர் யார்??
தேவனுடைய வார்த்தையானவர். வெளி 19:15
4871: சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிப்பவர் யார்??
தேவனுடைய வார்த்தை யானவர். வெளி 19:15
4872: ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர் என்னும் நாமம் யாருடைய வகைகள்??
தேவனுடைய வார்த்தை யானவர். வெளி 19:16
4873: ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர் என்னும் நாமம் யாருடைய வஸ்திரத்தின் மேலும் தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது??
தேவனுடைய வார்த்தை யானவர். வெளி 19:16
4874: சூரியனில் நின்று கொண்டிருந்தவன் யார்??
தூதன். வெளி 19:17
4875: சூரியனில் நின்று கொண்டிருந்த தூதன் எவைகளை சத்தமிட்டு அழைத்தான்??
பறவைகள். வெளி 19:17
4876: மகா தேவன் கொடுக்கும் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் யார்??
பறவைகள். வெளி 19;17-18
4877: மிருகமும் பூமியின் ராஜாக்களும் யாரோடே யுத்தம் பண்ண கூடி வந்தார்கள்??
தேவனுடைய வார்த்தை யானவர். வெளி 19:19
4878: யுத்தத்தில் பிடிக்கப்பட்டது எது??
மிருகம். வெளி 19:20
4879: மிருகத்தோடு கூட பிடிக்கப்பட்டவன் யார்??
கள்ளத்தீர்க்கதரிசி. வெளி 19:20
4880: கள்ளத்தீர்க்கதரிசி எவர்களை மோசம் போக்கினான்??
மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்கள் சொரூபத்தை வணங்கினவர்கள். வெளி 19:20
4881: அக்கினி கடலில் எரிந்தது என்ன??
கந்தகம். வெளி 19:20
4882: கந்தகம் எரிகிற அக்கினி கட்டிலில் தள்ளப்பட்டவர்கள் யார்??
மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும். வெளி 19:20
4883: குதிரையின் மேல் ஏறினவரின் வாயிலிருந்து புறப்பட்ட பட்டயத்தால் கொல்லப்பட்டவர்களின் மாம்சத்தினால் திருப்தியடைந்தவை எவை??
பறவைகள். வெளி 19:21
4884: வானத்திலிருந்து இறங்கி வந்த தூதனின் கையில் எதின் திறவுகோல் இருந்தது??
பாதாளம். வெளி 20:1
4885: பெரிய சங்கிலியை கையிலே பிடித்திருந்தவன் யார்??
வானத்திலிருந்திறங்கி வந்த தூதன். வெளி 20:1
4886: பாதாளத்தின் திறவுகோலை உடைய தூதன் எதைப் பிடித்து பாதாளத்தில் அடைத்து வைத்தான்??
வலுசர்ப்பம். வெளி 20:2
4887: வலுசர்ப்பமானது எத்தனை வருடம் கட்டி வைக்கப் பட்டது??
1000 வருஷம். வெளி 20:2
4888: ஜனங்களை மோசம் போக்காத படிக்கு பாதாளத்திலே தள்ளப்பட்டது எது??
வலுசர்ப்பம். வெளி 20:2
4889: வலுசர்ப்பத்தை பாதாளத்தில் அடைத்து வைத்து அதின் மேல் தூதன் எதைப் போட்டான்??
முத்திரை. வெளி 20:2
4890: கொஞ்ச காலம் விடுதலையாக வேண்டுவது எது??
வலுசர்ப்பம். வெளி 20: 3
4891:இயேசுவிற்கு சாட்சியாய் வாழ்ந்தவர்கள் இயேசுவு டன் எத்தனை வருடங்கள் அரசாண்டார்கள்??
1000 வருடம். வெளி 20:4
4892:எவைகளினிமித்தம் சிரச்சேதம் பண்ணப்பட்ட வர்கள் கிறிஸ்துவுடன் 1000வருஷம் அரசாண்டார்கள்??
இயேசுவைப் பற்றிய சாட்சி, தேவனுடைய வசனம். வெளி 20:4
4893: எதை வணங்காமலும் அதின் முத்திரையைத் தரித்து கொள்ளாமலும் இருந்தவர்கள் 1000வருஷம் அரசாண்டார்கள்??
மிருகமும் அதின் சொரூபமும். வெளி 20:4
4894: எதை நெற்றியிலும் கையிலும் தரிக்காதவர்கள்1000 வருஷம் அரசாண்டார்கள்??
மிருகமும் அதின் சொரூபமும். வெளி 20:4
4895: ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையாதவர்கள் யார்??
மரணமடைந்த மற்றவர்கள். வெளி 20:5
4896: எதற்குப் பங்குள்ளவன் பாக்யவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்??
முதலாம் உயிர்த்தெழுதல். வெளி 20:6
4897: முதல் உயிர்த்தெழுதலில் பங்கு பெற்றவர்கள் மேல் அதிகாரம் பாராட்ட முடியாதது எது??
இரண்டாம் மரணம். வெளி 20:6
4898: தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருக்கிறவர்கள் யார்??
முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குள்ளவன். வெளி 20:6
4899: ஆயிரம் வருட அரசாட்சி யின் முடிவில் விடுதலை பெறுபவன் யார்??
சாத்தான். வெளி 20:7
4900: பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகள் யார்??
கோகு, மாகோகு. வெளி 20:8
4901:கோகையும் மாகோகையும் மோசம் போக்கு படிக்கு புறப்படுபவன் யார்??
சாத்தான். வெளி 20:8
4902: சாத்தான் எவர்களை யுத்தத்திற்கு கூட்டிக்கொள்ளும்படிக்கு புறப்படுவான்??
கோகையும் மாகோகையும். வெளி 20:8
4903: யாருடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்??
கோகு, மாகோகு. வெளி 20:8
4904: பூமியெங்கும் பரம்பினவர்கள் யார்??
கோகேகு, மாகோகு. வெளி 20:9
4905: கோகுவும் மாகோகுவும் எவைகளை வளைந்து கொண்டார்கள்??
பரிசுத்தவான்களுடைய பாளையம், பிரியமான நகரம். வெளி 20:9
4906: தேவனால் வானத்திலிருந்து எது இறங்கி கோகுவையும் மாகோகுவையும் பட்சித்து போட்டது??
அக்கினி. வெளி 20:9
4907: அக்கினியும் கந்தகமுமான கடலில் தள்ளப்படுபவன் யார்??
பிசாசானவன். வெளி 20:10
4908: வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின் மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டவர் யார்??
யோவான். வெளி 20:11
4909: வெள்ளைச் சிங்காசனத்தில் வீற்றிருந்தவருடைய சமுகத்திலிருந்து அகன்று போனவை எவை??
வானம், பூமி. வெளி 20:11
4910:எவைகளுக்கு இடம் காணப்படவில்லை??
வானம், பூமி. வெளி 20:11
4911:மரித்தோராகிய சிறியோரும் பெரியோரும் யாருக முன்பாக நின்றார்கள்??
தேவனுக்கு முன்பாக. வெளி 20:12
4912: மரித்தோர் தேவனுக்கு முன்பாக நின்றபோது திறக்கப்பட்டவை எவை??
புஸ்தகங்கள். வெளி 20:12
4913: மரித்தோர் தேவனுக்கு முன்பாக நின்றபோது திறக்கப்பட்ட வேறொரு புஸ்தகம் எது??
ஜீவ புஸ்தகம். வெளி 20:12
4914: தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தவர்கள் யார்??
மரித்தோர். வெளி 20:12
4915:மரித்தோர் எவைகளில் எழுதப்பட்ட படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்??
தேவனுக்கு முன்பாகத் திறக்கப்பட்ட புஸ்தகங்கள். வெளி 20:12
4916: தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தவை எவை??
சமுத்திரம், மரணம், பாதாளம். வெளி 20:13
4917: மரணமும் பாதாளமும் எதிலே தள்ளப்பட்டன??
அக்கினிக்கடல். வெளி 20:14
4918: மரித்தோர் நியாயத்தீர்ப்படைவது எத்தனையாவது மரணம்??
இரண்டாம் மரணம். வெளி 20:13-14
4919: ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படாதவன் எங்கே தள்ளப்படுவான்??
அக்கினிக்கடல். வெளி 20:15
4920: புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டது யார்??
யோவான். வெளி 20:1
4921:முந்தின வானமும் முந்தின பூமியும் என்ன ஆனது??
ஒழிந்து போனது. வெளி 21:1
4922: புதிய வானமும் புதிய பூமியும் காணப்பட்ட போது இல்லாமற் போனது எது??
சமுத்திரம். வெளி 21:1
4923:பரலோகத்திலிருந்து இறங்கி வந்த பரிசுத்த நகரம் எது??
புதிய எருசலேம். வெளி 21:2
4924: புதிய எருசலேம் என்பது என்ன??
பரிசுத்த நகரம். வெளி 21:2
4925: தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருநதது எது??
புதிய எருசலேம். வெளி 21:2
4926: தேவனுடைய வாசஸ்தலம் எவர்களிடத்திலிருக்கிறது??
மனுஷர்களிடம். வெளி 21:3
4927: மனுஷர்களிடம் வாசமாயிருப்பவர் யார்??
தேவன். வெளி 21:3
4928: தேவன் யாருடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்??
மனுஷர்கள். வெளி 21:4
4929: மரணமும் துக்கமும் அலறுதலும் வருத்தமும் எங்கே இல்லை??
புதிய எருசலேம். வெளி 21:4
4930: முந்தினவைகள் என்ன ஆயின??
ஒழிந்து போயின. வெளி 21:4
4931: சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவர் கூறியது என்ன??
நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன். வெளி 21:5
4932: சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்த வரின் வசனங்கள் எப்படிப்பட்டவைகள்??
சத்தியமும் உண்மையுமானவைகள். வெளி 21:5
4933: தாகமாயிருப்பவனுக்கு இலவசமாய் கிடைப்பது எது??
ஜீவத்தண்ணீர். வெளி 21:6
4934: எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்பவன் யார்??
ஜெயங்கொள்ளுகிறவன். வெளி 21:7
4935: தேவனுடைய பார்வையில் ஜெயங்கொள்ளுகிறவன் யார்??
அவருடைய குமாரன். வெளி 21:7
4936: இரண்டாம் மரணம் என்று கூறப்படட்டுள்ளது எது??
அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல். வெளி 21:8 .
4937: பெரிதும் உயரமுமான பர்வதத்தில் ஆவியில் கொண்டு போகப்பட்டவன் யார்??
யோவான். வெளி 21:10
4938: எருசலேமாகிய பரிசுத்த நகரம் எதைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கி வந்தது??
பரலோகம். வெளி 21:10
4939: தேவனுடைய மகிமையை அடைந்தது எது??
பரிசுத்த நகரம். வெளி 21:10
4940: ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டி யார??
புதிய எருசலேம். வெளி 21:10
4941: புதிய எருசலேம் எவை களைப் போன்று பிரகாசமாயிருந்தது??
இரத்தினக்கல், வச்சிரக்கல். வெளி 21:11
4942: புதிய எருசலேமுக்கு எப்படிப்பட்ட மதில் இருந்தது??
பெரிதும் உயரமுமான. வெளி 21:12
4943: புதிய எருசலேம் நகரத்திற்கு எத்தனை வாசல்களிருந்தன??
12 வாசல்கள். வெளி 21:12
4944: புதிய எருசலேமின் வாசல்களின் அருகே இருந்தவர்கள் யார்??
12 தூதர்கள். வெளி 21:13
4945: புதிய எருசலேமின் பன்னிரண்டு வாசல்களிலேயும் யாருடைய நாமம் எழுதப்பட்டிருந்தது??
இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார். வெளி 21:13
4946: நகரத்தின் மதிலுக்கு எத்தனை அஸ்திபாரக் கற்களிருந்தன??
12. வெளி 21:14
4947: அஸ்திபாரக் கற்கள் மேல் யாருடைய நாமங்கள் பதிந்திருந்தன??
ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்கள். வெளி 21:14
4948: யோவானோடே பேசினவன் அளக்கிறதற்காக எதைப் பிடித்திருந்தான்??
பொற்கோல். வெளி 21:15
4949: யோவானோடே பேசினவன் எவைகளை அளக்கிறதற்குப் பொற்கோலைப் பிடித்திருந்தான்??
நகரத்தையும் அதின் வாசல்களயும், மதில்களையும். வெளி 21:15
4950: எருசலேம் நகரம் எவ்வடிவத்திலிருந்தது??
சதுரம். வெளி 21:16
4951: எருசலேம் நகரத்தின் அளவு என்ன??
12;000 ஸ்தாதி. வெளி 21:16
4952: எருசலேம் நகரத்தின் மதிலின் அளவு என்ன??
144 முழம். வெளி 21:17
4953: எருசலேம் நகரத்தின் மதில் எதினால் கட்டப்பட்டிருந்தது??
வச்சிரக்கல். வெளி 21:18
4954: எருசலேம் நகரம் எப்படி இருந்தது??
சுத்தப்பொன்னாய். வெளி 21:18
4955: எருசலேம் நகரம் எதற்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது??
தெளிந்த பளிங்கு. வெளி 21:18
4956: நகரத்து மதிலின் அஸ்திபாரங்கள் எவைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததன??
சகலவித இரத்தினங்கள். வெளி 21:19
4957: முதலாம் அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??
வச்சிரக்கல். வெளி 21:19
4958: இரண்டாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??
இந்திர நீலம். வெளி21:19
4959: மூன்றாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்ப்பட்டிருந்தது??
சந்திரகாந்தம். வெளி 21:19
4960: நான்காவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??
மரகதம். வெளி 21:19
4961: ஐந்தாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??
கோமேதகம். வெளி 21:20
4962: ஆறாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??
பதுமராகம். வெளி 21:20
4963: ஏழாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??
சுவர்ண ரத்தினம். வெளி 21:20
4964: எட்டாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??
படிகப்பச்சை. வெளி 21:20
4965: ஒன்பதாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??
புஷ்பராகம். வெளி 21:20
4966: பத்தாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??
வைடூரியம். வெளி 21:20
4967:பதினோராவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??
சுநீரம். வெளி 21:20
4968: பன்னிரண்டாவது அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது??
சுகந்தி. வெளி 21:20
4969: நகரத்தின் பன்னிரண்டு வாசல்களும் எவைகளாயிருந்தன??
12 முத்துக்கள். வெளி 21:21
4970: தெளிவுள்ள பளிங்கு போல சுத்த பொன்னாயிருந்தது எது??
நகரத்தின் வீதி. வெளி 21:21
4971: புதிய எருசலேமின் ஆலயம் யார்??
கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவரும். வெளி 21:22
4972: நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்க எவைகள் இல்லை??
சூரியன், சந்திரன். வெளி 21:23
4973: நகரத்தை பிரகாசிப்பது எது??
தேவனுடைய மகிமை. வெளி 21:23
4974: நகரத்தின் விளக்கு யார்??
ஆட்டுக்குட்டியானவர். வெளி 21:23
4975: நகரத்தின் வெளிச்சத்தில் நடப்பவர்கள் யார்??
இரட்சிக்கப்படுகிற ஜனங்கள். வெளி 21:24
4976: தங்கள் மகிமையையும் கனத்தையும் நகரத்திற்குள்ளே கொண்டு வருபவர்கள் யார்??
பூமியின் ராஜாக்கள். வெளி 21:24
4977: இராக்காலம் இல்லாத இடம் எது??
புதிய எருசலேம் நகரம். வெளி 21:25
4978: எதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதில்லை??
புதிய எருசலேம். வெளி 21:25
4979: எவைகள் புதிய எருசலேமில் பிரவேசிப்பதில்லை??
தீட்டுள்ளதும், பொய்யையும் அருவருப்பையும் நடப்பிக்கிறவைகள். வெளி 21:27
4980: புதிய எருசலேம் நகரத்தில் பிரவேசிப்பவர்கள் யார்??
ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவர்கள். வெளி 21:27