top of page
பிரபலமானவர்கள் இயேசுவை பற்றி பேசுவதால்
அவர்கள் தேவனுடைய ராஜியத்துக்குறியவர்கள் அல்ல !!
 
இன்றைக்கு பிரபலமானவர்கள் இயேசுவை பற்றி பேசுவதையோ   அல்லது வேதாகமத்தை படிக்கிறேன் என்று சொல்வதையோ பார்த்து ரோம்ப excite ஆகாதீர்கள்.
 
இன்றைக்கு எல்லா Group களிலும் பிரதமர் மோடிக்கு ஒருவர் ஜெபிக்கும் video வை பதிவிட்டு...மோடி அவர்கள் Prayer பண்ணுகிறார் என்று post பண்ணி கொண்டிருக்கிறார்கள். 
 
சமீபத்தில் அரசியல்வாதிகள் நடிகை நடிகைகள் இயேசுவை ஏற்று கொண்டேன் என்று சொல்லி கொண்டு இறுதியில் பின்வாங்கி போனது உங்களுக்கு தெரியும்.
 
அநேக அரசியல்வாதிகள் மற்றும் பிரபலமானவர்கள் வேதாகமத்தை படிக்கிறார்கள். மகாத்மா காந்தி வேதாகமத்தை படித்தவர் தான்..... விவேகானந்தர் நித்தியத்துக்கு இயேசு தான் வழி என்று சொன்னார். அதற்காக அவர்கள் தேவனுடைய ராஜியத்துக்குள் வந்து விடவில்லை.
 
அநேக பிரபலமானவர்கள் ஊழியக்காரரிடம் வந்து ஜெபிக்கிறார்கள், ஆனால் அவர்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டார்களா? இரட்சிக்கப்பட்டார்களா? என்றால் இல்லை.. சமீபத்தில் வைகோ மேடைகளில் இயேசுவை பற்றி பேசினார். ஒரு ஊழியக்காரர்  வைகோ கிறிஸ்துவை ஏற்று கொண்டதாக  சொன்ன ஒரு clip எல்லா  இணைய தளங்களிலும் உலா வந்தது. இது பற்றி ஒரு நிருபர் வைகோ விடம் கேட்டபோது அவர் அதை எல்லாருக்கும் முன்பாக...நான் இயேசுவை ஏற்று கொண்டதாக சொல்லவேயில்லை மேலும் நான் கிறிஸ்தவன் அல்ல என்று மறுத்தார். அது எல்லா Channel களிலும் செய்தி தாள்களிலும் வெளி வந்தது. அந்த ஊழியக்காரருக்கு தர்ம சங்கடமாகிவிட்டது.
 
Modi அவர்கள் இயேசு தான் உண்மையான தேவன் அவர் தான் வழி அவர் தான் சத்தியம் என்று அறியட்டும் எனவே பொறுத்திருப்போம். அதற்காக ஊக்கத்தோடு ஜெபிப்போம், அதை விட்டு விட்டு இவர் மனம் மாறி  விட்டதை போல  ஒருவர் அவருக்காக ஜெபிக்கும் video clip ஐ எடுத்து எல்லாருக்கும் forward பண்ணி கொண்டிருக்க வேண்டாம். கர்தருக்கு சித்தமானால் அவர் இரட்சிக்கப்படுவார்.
 
சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ரஜினி காந்த் இயேசுவை பற்றி பேசியதை அநேகர் ஏதோ இவர் இயேசுவை ஏற்று கொண்டது போல இணையத்தளங்களில் பரப்பி கொண்டிருந்தனர். நடிகர் ரஜினி காந்த் இயேசுவை பற்றி பேசியவுடன் கிறிஸ்துவின் நாமம் மகிமைபடுமா?? நிச்சயமாக இல்லை. நீங்கள் மறைமுகமாக ரஜினி காந்தின் பெயரை பிரஸ்தாபபடுத்துகிறீர்கள் என்பதே உண்மை.
 
சில வருடங்களுக்கு முன்பு ஒரு நடிகை இயேசு தான் உண்மையான தேவன் என்று மேடைகளில் வைராக்கியமாகபேசி வந்தார் அதை அனைவரும் இணையத்தளத்தில் பதிவிட்டு கொண்டிருந்தனர். ஆனால் சமீபத்தில் அவர் ஒரு கோவிலில் பூஜை செய்தது எல்லா TV channel களிலும் வெளிவந்தது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் கிறிஸ்தவர் என்று எல்லாருக்கும் தெரியும். ஒரு பிரபலமான TV channel ல் கிறிஸ்துவை பற்றியும் வேதாகமத்தை பற்றியும் அவர் அழகாக பேசியிருந்தார். அவர் தேர்தலில் ஜெயித்த போது அவர் ஊழியக்காரர் மூலமாக ஜெபிக்கும் காட்சிகளை அநேக கிறிஸ்தவர்கள் இணையதளங்களில் பதிவிட்டு கொண்டாடினார்கள்.ஆனால் அவர் பதவிக்கு வந்த போது அவர் விக்கிரகங்களுக்கு பூஜை செய்து சாமி கும்பிடும் காட்சிகள் வெளி வந்தன. இதை பார்த்த இவர்கள் அதிர்சியடைந்தனர். ஜகன் குடும்பத்தினர் இரட்சிக்கப்பட்டவர்களாக இருந்த போதிலும் இவரால் பதவிக்காக உலகத்துக்கு சிநேகிதனாக இருப்பதை தவிர்க்க முடியவில்லை. (எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது, லூக்கா 16-13) என்று இயேசு சொன்ன சத்தியத்தை இப்பொழுதாவது விளங்கி கொண்டீர்களா? உலகத்துக்கு சிநேகிதர்களாகிய இவர்கள் இயேசுவை விட்டு விட்டு உலகத்துக்கு ஒத்த வேஷம் தரித்து விடுவார்கள் இவர்களை விபச்சாரர்கள் என்று வேதம் சொல்கிறது. (விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். யாக்கோபு 4:4)ஒரு பிராமண சகோதரி எங்களிடம் இயேசு தான் மெய்யான தேவன் என்று எனக்கு நன்றாக தெரியும்.ஆனால் எனக்கு என் குடும்பத்தை பகைத்து விட்டு வர முடியாது என்றார்.
 

சில வருடங்களுக்கு முன்பாக குவைத் நாட்டின் இளவரசர் இயேசு தான் மெய்யான வழி,அவர் தான் ஜீவனுள்ள தேவன் என்று அறிக்கையிட்டார். உடனே ஒரு நிருபர் அவரிடம் நீங்கள் இப்படி பேசியதால் உங்கள் நாட்டில் உங்களை கொன்று விடுவார்களே என்று கேட்டார், அதற்கு அவர் என்னை கொன்றால் அடுத்த நிமிடத்தில் நான் பரலோகத்தில் இயேசுவோடு இருப்பேன் என்றார். இப்படி சொன்னதற்காக அவரது அதிகாரங்களை அந்த அரசாங்கம் பறித்து கொண்டது. இயேசுக்காக எல்லாவற்றையும் நஷ்டமாக விட்டேன் என்று பவுல் சொன்னபடி இதுவல்லவா உண்மையான சாட்சி இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயேசு தான் நித்திய ஜீவனுக்கான வழி என்கிற சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.இன்றைக்கு கிறிஸ்தவர்கள் பிரபலமானவர்கள் இயேசுவை பற்றி பேசுவதை பற்றி தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள். ஆனால் இயேசுவுக்கு எல்லாம் தெரியும்,அவர் எல்லாவற்றையும் அறிந்தவர். (அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. 

மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை. யோவான் 2:24.25) மேலே உள்ள வசனத்தில் இயேசு அவர்கள் இருதயத்தை அறிந்திருந்தபடியால் அவர்களை நம்பி இணங்கவில்லை என்ற வார்த்தையை கவனித்தீர்களா?

தேவனோ  தனது ஊழியத்துக்காக சாதாரணமானவர்களை அழைத்து பயன்படுத்தினார். அன்றைக்கு வேதாகமத்தை கற்று தேர்ந்த பிரபலமானவர்களை ஒரு போதும் அவர் ஊழியத்துக்கு அழைக்கவில்லை. அந்த சாதாரணமானவர்கள் உலகமெங்கிலும் போய் சுவிசேஷம் அறிவித்தார்கள்.இயேசுவுக்காக தங்கள் ஜீவனையே கொடுத்தார்கள்.இரத்த சாட்சியாக மரித்தார்கள். அவருக்கு யார் எப்படி பட்டவர்கள் என்று தெரியும்.இன்றைக்கு பல தலைமுறைகளாக கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் கூட சலுகைகளுக்காக அரசாங்கத்தில் தங்களை இந்து என்று பதிவு செய்கிறார்கள் தங்கள் பிள்ளைகளை இந்து என்று பள்ளியில் சேர்க்கிறார்கள். மனிதர்களுக்கு முன்பாக என்னை மறுதலிப்பவனை என் பிதாவுக்கு முன்பாக மறுதலிப்பேன் என்று இயேசு சொன்னார்.
 
இன்றைக்கு சில ஊழியக்காரர்கள் பிரபலமானவர்களை சந்தித்து வேதாகமத்தை கொடுத்து ஜெபிப்பதை படம் எடுத்து வெளியிடுகிறார்கள் இது சுயவிளம்பரமா? அல்லது வீண்புகழ்சியா அல்லது இயேசுவை விட இந்த பிரபலமானவர்களை மகிமை படுத்துகிறார்களாஎன்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் கொடுத்த வேதாகமத்தை படித்து அவர்கள் இரட்சிக்கப்படும் போது மாத்திரமே தேவ நாமம் மகிமைபடும். இதற்காக நாம் ஜெபிக்க வேண்டும். அநேக பிரபலமானவர்கள் இரட்சிக்கப்பட்டு ரகசிய கிறிஸ்தவவர்களாக வாழ்கின்றனர், அவர்கள் வெளியே வந்து  இயேசுவே மெய்யான ஜீவனுள்ள தேவன்.அவர் தான் வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார் என்று தேவனை மகிமைபடுத்தும் படி ஜெபியுங்கள்.(வார்த்தைகளினாலாவது கிரியைகளினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். கொலோசெயர் 3-17) ஆமென்.
bottom of page