top of page

அநேகரை பரலோகத்துக்கு ஆதாயப்படுத்துகிற நீங்கள் பரலோகத்துக்கு போக தகுதியுடையவர்களாக இருக்கிறீர்களா??

 

இன்றைக்கு ஊழியம் செய்யும் அநேகர் ஊழியத்தில் வரங்கள் வல்லமைகள் செயல்படுவதில் அதிகமாக சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து ஊழியத்துக்கு அனுப்பிய 70 பேர்களும் திரும்பி வந்து உம் நாமத்தினாலே பிசாசுகள் கீழ்படிகின்றன,நோய்கள் குணமாகுகின்றன என்று சொன்ன போது உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதியிருப்பதற்க்காக சந்தோஷப்படுங்கள் என்றார். ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். லூக்கா 10-20.

அதாவது என்ன தான் ஊழியம் செய்தாலும் பரலோகத்துக்கு தகுதியுடையவர்களாக இருப்பது தான் முக்கியம், உலகத்தையே ஆதாயப்படுத்தியும் நீங்கள் பரலோகத்துக்கு போகமுடியவில்லையென்றால் மிகவும் பரிதாபத்துக்குறிவர்களாவீர்கள், இன்றைக்கு ஊழியம் செய்கிற அநேகருக்கு தாங்கள் செய்கிற ஊழியமே பரலோகத்துக்கு போக தடையாக இருக்கிறது என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.  என் சித்தத்தின் படி ஊழியம் செய்யாதவர்கள் பரலோகத்துக்கு போகமாட்டார்கள் என்று இயேசு சொன்னார்.யாருக்கு அதிகம் கொடுக்கப்படுகிறதோ அவர்களிடம் அதிகம் கேட்கப்படும்.ஆரம்ப காலத்தில் தேவனை நேசித்து உண்மையும் உத்தமுமாக ஊழியம் செய்த அநேகர் இன்று பணத்துக்கும் புகழுக்கும் அடிமையாகி பின்வாங்கின நிலையில் காணப்படுகிறார்கள்.  இவர்கள் தங்கள் சுயபெருமைக்காக அநேக காரியங்களை ஏற்படுத்துகிறார்கள்.

 

 ஊழியத்திலும் சபைகளிலும் தேவ நீதிக்கு கீழ்படியாமல் தங்கள் சுயநீதியை செயல்படுத்துகிறார்கள்ஆனால், இவர்களால் வழி நடத்தப்பட்ட அநேக ஜனங்கள் சத்தியத்துக்கு கீழ்படிந்து பரலோகத்தை சுதந்தரிக்கிறார்கள். பணத்துக்காகவும் புகழுக்காகவும் தேவ சித்தத்தை புறக்கணித்த  ஊழியக்காரர்களை பரலோகமும் புறக்கணிக்கும்.  எனவே தேவசித்தத்தின் படி ஊழியம் செய்யாமல் நரகத்துக்கு போவதை விட ஊழியம் செய்யாமல் பரலோகத்துக்கு போவது நலமாயிருக்கும். எனவே என்ன தான் ஊழியம் செய்தாலும் ஊழியத்தில் பெரிய காரியங்களை செய்தாலும் அநேகரை கிறிஸ்துவுக்குள் ஆதாயப்படுத்தினாலும் முதலாவது நீங்கள்  பரலோகத்துக்கு தகுதியுடையவர்களாக இருக்கிறீர்களா என்பதில் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருங்கள்.  தேவனுக்காக ஊழியம் செய்தால் உண்மையும் உத்தமுமாக அவர் சித்தப்படி செய்யுங்கள். உங்களை ஊழியத்துக்கு அழைத்த எஜமான் என்ன செய்ய சொல்லுகிறாறோ அதற்க்கு கீழ்படியுங்கள், பிசாசானவன் நீங்கள் இடைவிடாமல் ஊழியம் செய்ய தடைபண்ணுவதில்லை, ஆனால் தேவ சமுகத்தில் காத்திருந்து தேவசித்தத்தை அறிந்து கொண்டு அவர் சித்தத்தை மாத்திரம் செய்ய விடுவதில்லை. நீங்கள் ஊழியத்தில் ஓய்வே இல்லாமல் ஓடி கொண்டிருப்பதால் சந்தோஷப்படாதீர்கள். ஆண்டவர் செய்ய சொன்னதை செய்து கொண்டிருக்கிறீர்களா என்பதே முக்கியம். எவ்வளவு ஊழியம் செய்தீர்கள் என்பது அல்ல எஜமான் செய்ய சொன்னதை செய்தாயா என்று சந்திப்பின் நாளிலே உங்களிடம் கணக்கு கேட்கப்படும்.

என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. யாக்கோபு 3-1.

bottom of page