top of page

உங்கள் வாலிபர்களை பாதுகாத்து கொள்ளுங்கள்

 

இன்றைக்கு பிசாசானவன் தமிழ்நாட்டில் எழுப்புதலுக்கு எதிராக அதிகாரத்தை கொண்டு மாம்ச புயபலத்தோடும் ஆவிக்குறிய ரீதியிலும் வல்லமையாக செயல்படுகிறான்.

 

சாத்தான் கொண்டு வரும் ஆவிக்குறிய போராட்டம் தான் கள்ள உபதேசம். தேவ ஜனங்களை வஞ்சிக்கும் இந்த உபதேசத்தை பேசுகிறவர்கள் சத்தியத்தை அழகாக ஆழமாக பேசுவார்கள். இதை கேட்கிறவர்கள் சரியான சத்தியத்தை தானே பேசினார்கள் என்று மயங்கி விடுவார்கள். ஆனால் இறுதியில் அதற்குள்ளாக போய் அதில் மறைந்திருக்கும் வேதாகமத்துக்கு புறம்பான வஞ்சிக்கப்பட்ட உபதேசத்துக்குள் நடத்தப்பட்டு வீழ்ந்து விடுகிறார்கள்.

 

பெரும்பாலான துர் உபதேசங்கள் அமெரிக்க தேசத்திலே உருவாக்கப்பட்டு பின்பு உலகெமெங்கும் பரவி வருகிறது சமீப காலமாக சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் பலவிதமான துர் உபதேசங்கள் தீவிரமாக பரவி வருகின்றன. தமிழ்நாட்டில் அநேக இடங்களில் சாத்தானிய சபைகள் ரகசியமாக ஸ்தாபிக்கப்படுகின்றனஎன்ற தகவல் நம்மை அதிர்ச்சியடைய செய்கிறது. சாத்தானிய சபைகள் ரகசியமாக வீடுகளில் வைத்தே நடைப்பெறுகிறது. இவர்கள் பெரும்பாலும் வாலிபர்களையே குறி வைக்கின்றனர். இவர்களை ஏமாற்றி அழைத்து சென்று பிசாசின் வல்லமைகளால் மயக்கி பின் தங்கள் சாம்ராஜியங்களை விஸ்தாரிக்க பயன்படுத்துகின்றனர், மேலும் இப்படி வஞ்சிக்கப்பட்டவர்களை அந்தகார இருளின் வல்லமைகளோடு அதாவது ஆவி உலகத்தோடு தொடர்பு கொள்ள செய்து இயற்கைகப்பாற்பட்ட அனுபவங்களையும் வல்லமைகளையும் பெற்று கொள்ள செய்து பின்பு இவர்களை தேவ ஊழியங்களுக்கு விரோதமாக பயன்படுத்துகின்றனர்.

 

எனவே உங்கள் பிள்ளைகளை அவர்கள் நண்பர்கள் எங்காவது அழைத்து செல்ல வரும் போது மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளும்படி சொல்லுங்கள். அடுத்ததாக கிருபையின் உபதேசம்,இவர்கள் இயேசு கிறிஸ்து நாம் செய்த பாவங்களுக்காகவும் நாம் செய்ய போகும் பாவங்களுக்காகவும் மரித்துவிட்டார், நம் பாவத்துக்காக கிரயம் செலுத்தி விட்டார். எனவே எப்படி ஜீவித்தாலும் நமக்கு பரலோகம் நிச்சயம் என்று சொல்லி கொண்டு மறைமுகமாக ஜனங்களை தங்கள் ஆசை இச்சைகளின் படி நடக்க செய்கிறார்கள். படிபடியாக இவர்களது உபதேசத்தை கேட்பவர்கள் தேவனுக்கு பயப்படும் பயத்திலிருந்து விலகி ரகசிய பாவங்களில் விழுந்து விடுகிறார்கள்.

 

அடுத்ததாக, சமீப காலமாக Jesus only என்ற கள்ள உபதேசம் சென்னையில் பரவி வருகிறது. Bernham என்ற கள்ள போதகரால் உருவாக்கபட்டது தான் jesus only என்ற கள்ள உபதேசம். இதை உருவாக்கிய Branham தன்னை கிறிஸ்து என்று சொல்லி கொண்டு பிசாசை போல தன்னை உயர்த்தி கொண்டு இறுதியில் வீழ்ந்து போனான். இவனை பின் பற்றிய பலரும் இவனை மாதிரியே பெருமையினால் விழுந்து போனார்கள். எந்த ஒரு தீர்க்கதரிசியையும் கனிகளினால் நிதானித்து அறிந்து கொள்ளுங்கள் என்று இயேசு கிறிஸ்து எச்சரித்தார். பிசாசினால் ஆளுகை செய்யப்பட்டு வீழ்ந்து போன இவனை பின்பற்றுகிறவர்களும் இவனை போலவே பெருமையினால் ஆளுகை செய்யப்பட்டு தங்களை உயர்த்தி கொள்ளவே விரும்புகிறார்கள். பிதா குமாரன் பரிசுத்தாவி நாமத்தினாலே ஞானஸ்நானம் எடுத்தவர்களை பிசாசுக்கு அதாவது சர்ப்பத்துக்கு பிறந்தவர்கள் என்கிறார்கள்.

 

இயேசு கடைபிடிக்க சொன்ன கட்டளையை அவமாக்கி ஜனங்களை மறுதலிக்க செய்கிறார்கள். இவர்கள் குறிப்பாக வாலிபர்களை பயமுறுத்தி மூளை சலவை செய்து தங்கள் உபதேசங்களை கடைபிடிக்க செய்கிறார்கள். பிதாவும் பரிசுத்தாவியானவரும் இயேசுவே என்று தான் சொல்லி வேதாகமத்தின் அடிப்படை சத்தியத்தையே புரட்டுகிறார்கள். இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுப்பவர்கள் மாத்திரமே பரலோகம் போவார்கள் என்று சொல்லி ஏற்கனவே ஞானஸ்நானம் எடுத்தவர்களை மீண்டுமாய் ஞானஸ்நானம் கொடுத்து வஞ்சிக்கிறார்கள். பல நூதன உபதேசங்களை போதிக்கிறார்கள். இவர்களிடம் புறஜாதிகள் இரட்சிக்கபட வேண்டும் என்ற ஆத்தும பாரம் கிடையாது. கிறிஸ்தவர்களையே குறி வைத்து அவர்கள் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களை குழப்பி தங்கள் மார்க்கத்தானாக்குகிறார்கள். சாத்தானை போல தேவனுக்கு நிகராக தன்னை உயர்த்தி கொண்டு கடைசியில் மரித்து போன Branham ன் போதனைகளையே பின்பற்றுகிற வஞ்சிக்கும் ஆவியை உடைய இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். சாத்தான் ஏவாளை வஞ்சித்தது போல வேத வசனங்களை அருமையாக பேசி இறுதியில் கள்ள உபதேசத்தை திணிக்கிறார்கள், இவர்கள் ஆட்டு தோலை போர்த்திய ஓநாய்கள். இவர்களிடமிருந்து உங்கள் வாலிபர்களை பாதுகாத்து கொள்ளுங்கள். இவர்கள் பிற ஊழியக்காரர்களையும் பரிசுத்தாவியானவரின் கிரியைகளையும் தரக்குறைவாக விமர்சிக்கிறார்கள்,வீழ்ந்து போன ஒருவனுடைய கொள்கைகளை பின்பற்றுகிற இவர்கள் அவனது அடிச்சுவடுகளை பின்பற்றி இறுதியில் வீழ்ச்சிக்குள்ளாக கடந்து போகிறார்கள். இவர்களில் பலர் இந்த கள்ள உபதேசத்தை பரப்ப அமெரிக்காவிலிருத்து பணத்தை பெற்று கொள்கிறார்கள். அமெரிக்காவில் இந்த குழுவினர் எலிசா எலியாவின் ஆவியை பெற்று கொண்டது போல ஆராதனை என்ற பெயரில் Bernham ஆவியை பெற்று கொள்ளும் படி அவனை அழைக்கிறார்கள்.

 

அடுத்ததாக, யேகோவா சாட்சிகள் என்று தங்களை கூறி கொள்ளும் இவர்கள் இயேசு கிறிஸ்து ஒரு தீர்க்கதரிசி மேலும் அவர் தேவனல்ல என்று கூறி கொள்கிறார்கள். இவர்கள் அழகாக உடை அணிந்து கொண்டு நகரத்தில் பல இடங்களில் நின்று கொண்டு வாலிபர்களை அழைத்து செல்கிறார்கள். இவர்கள் சபையில் ஆண் பெண் பாகுபாடில்லாமல் கட்டி தழுவி தங்கள் அன்பை பரிமாறி கொள்ளும் விஷயத்தில் அநேக வாலிபர்கள் விழுந்து போய்விடுகின்றனர்.

 

அடுத்ததாக கிறிஸ்லாம் என்ற கள்ள உபதேசம். இவர்கள் பழைய ஏற்பாட்டு கொள்கைகளின்படி விருத்தசேதனம் பண்ணும் படி உபதேசிக்கிறார்கள். பவுல் தீமோத்தேயுக்கு விருத்தசேதனம் பண்ணியதை முன் நிறுத்துகிறார்கள். இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஒன்று தான் என்று சொல்கிறார்கள். இலுமினாட்டிகள் இவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.

 

அடுத்ததாக, ஆராதனை வீரன் என்ற பேரில் தன்னை உயர்த்தி கொண்டு வாலிபர்களை தன்பக்கம் திருப்பி வசியம் செய்து மேடையில் தேவமகிமையை திருடும் ஆராதனை வீரர்கள். வேதாகமஆராதனை ஒழுங்கிலிருந்து வாலிபர்களை உலகத்துக்கு ஒத்த வேஷம் தரிக்க செய்து இறுதியில் அவர்களை அவர்களின்ஆசை இச்சையின் படி செய்ய வைத்து பாவத்தில் விழுந்து போக செய்யும் ஆராதனை என்ற போர்வையில் செயல்படும் சாத்தானிய ஆவிகள். சென்னை பட்டணத்திலிருந்து தான் இத்தகய கள்ள உபதேசங்களும் பொல்லாத காரியங்களும் அதிகமாக எழும்புகிறது. ஏனென்றால் தோமாவின் சிந்தப்பட்ட இரத்தத்துக்கு தேவன் பதில் கொடுக்கும்படியாக ஒரு பெரிய எழுப்புதலை கட்டளையிட்டிருக்கிறார், அந்த காலம் நெருங்கி விட்டது. அதற்கு எதிராக பிசாசு தீவிரமாக தமிழ்நாட்டில் யுத்தம் பண்ணுகிறான். ஆத்தும ஆதாயம் செய்யும் சபைகளை அழிக்கும்படி அதிகாரத்தை பயன்படுத்துகிறான், அவனது இலக்கு வாலிபர்கள் மேல் தான். வாலிபர்கள் மூலம் தேவசித்தத்தின் படி பெரும் ஆத்தும அறுவடை நடக்கும். இதை தடுக்கவே பிசாசானவன் முதலாவது வாலிபர்களை குறிவைக்கிறான். இன்றைக்கு வேதாகமத்துக்கு புறம்பாக அநேக நுதன உபதேசங்களை பிசாசு கொண்டு வந்து ஜனங்களை கவிழ்த்து போடுகிறான். நட்சத்திர ஹோட்டல்களில் தான் அதிகமாக பணத்தை செலவழித்து இத்தகய நூதன உபதேசங்கள் பரப்பபடுகின்றன. எனவே இத்தகய இடங்களில் biblical conference என்ற போர்வையில் நடக்கும் காரியங்களுக்கு போவதை தவிர்த்து விடுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு வேதாகமத்தை சரியாக போதியுங்கள். கள்ள போதகங்களை விதைக்கும் சாத்தானின் கிரியைகள் அழிக்கப்பட ஜெபியுங்கள்,அந்தி கிறிஸ்துவின் ஆவியை உடைய கள்ள போதகர்களையும் கள்ள தீர்க்கதரிசிகளையும் நிதானித்து அறியுங்கள். உங்கள் சபைக்கும் உங்கள் போதகருக்கும் அறிமுக மில்லாத இடத்தில் நடக்கும் Bible study என்ற பேரில் நடக்கும் கூடுகைகளை கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள். Whatsapp மற்றும் Media மூலம் உங்களை குறிவைக்கும் கள்ள உபதேசங்களை நிதானித்து அறிந்து அதிலிருத்து விலகி உங்களை காத்து கொள்ளுங்கள்.

 

ஒரு கப் பாலில் ஒரு துளி விஷம் இருப்பதை கண்டுபிடிக்க முடியாதப்படி கள்ள உபதேசம் உங்களை வஞ்சித்துவிடும். பரலோகத்துக்கு பிரவேசிக்கமுடியாதபடி உங்களை தடை செய்யும் இத்தகய பொல்லாத கள்ள உபதேசங்களுக்கு உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் விலக்கி பாதுகாத்து கொள்ளுங்கள். ( அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.

2 பேதுரு 2 ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். மாற்கு 13-22.

வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு. தீத்து 3-10. ஆமென்.

bottom of page