top of page

யேசபேலின் ஆவியினால் ஆளுகை செய்யப்பட்ட சபைகள்.

ன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை. 

1 இராஜாக்கள் 21

 

கிறிஸ்து சபைக்கு தலையாயிருக்கிறார், ஸ்திரிக்கு புருஷன் தலையாயிருக்கிறான். இந்த யசபேலின்ஆவி, சபை நடத்தும் ஊழியக்காரனையே ஆளுகை செய்து சபையையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து கொள்கிறது. இந்த ஆவி ஒரு பெண் மூலமாக செயல்படும். பெரும்பாலான சபைகளில் ஊழியக்காரனின் மனைவி மூலமாகவோ அல்லது ஏதாவது ஒரு பெண் மூலமாகவோ இந்த ஆவி செயல்படுகிறது.அந்த சபையில் அந்த ஆவியை உடைய  பெண் தான் முக்கிய முடிவுகளை எடுப்பார்.

சில சபைகளில் செயல்படும் இத்தகய ஆவி தீர்க்க தரிசனம் என்கிற பேரில் குறி சொல்லும். இந்த ஆவி இருக்கும் சபைகளில் ஜனங்களிடம் எந்த ஆவிக்குறிய மாற்றமும் இருக்காது, ஜனங்கள் அப்படியே இருப்பார்கள்.

 

இந்த ஆவி ஆளுகை செய்கிற சபைகளில் உள்ள ஊழியக்காரன் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இத்தகய ஆவியை சார்ந்து கொண்டு பெலவீனமான  இருப்பார்கள். தேவ  திட்டங்களையும் தேவ தரிசனங்களையும் சபையில் செயல்படுத்த தடையாக இருப்பது இந்த ஆவி தான்.  இந்த ஆவியினால் கட்டப்பட்ட  பெண்ணின் ஆலோசனையை கேட்டு தான் ஊழியக்காரர் முடிவுகளை எடுப்பார்.

 

மேலும் பல சபைகள் உடைந்து போவதற்கு பெண்கள் பின்புலத்தில் கிரியை செய்கிற இந்த ஆவிகள் தான் காரணம். இத்தகய ஆவி தான் பல சபைகளில் பிரிவினையை உண்டாக்குகிறது. சபைகளில் அதிகாரத்தில் இருக்கும் மனிதர்களின் பின்புலத்தில் கூட இந்தஆவியை பெற்ற ஒரு பெண் இருக்க கூடும்.

 

எனக்குத் தெரிந்த ஒரு ஊழியக்காரர் கேரளாவில் ஒரு சபைக்கு ஊழியத்துக்காக சென்றார். அவர் மேடையில் இருக்கும்போது முன்பாக ஒரு பெண் வெள்ளை உடை அணிந்து ட்ரம் அடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இவர்  சபையின் ஊழியக்காரரைப் பார்த்து இந்த பெண் யார்? அந்த பெண்ணிடம் ஒரு அசுத்த ஆவி செயல் பட்டு கொண்டிருக்கிறதை காண்கிறேன் என்றார். இதை சொன்னவுடனே, அந்த ஊழியக்காரருக்கு கோபம் வந்துவிட்டது.அவர் இவரை பார்த்து, இந்த பெண் தான் இந்த சபையிலே முக்கியமானவர். தீர்க்கதரிசியும் கூட, நீங்கள்  இப்படி எல்லாம் தவறாக பேசக்கூடாது என்று கடிந்து கொண்டு செய்திக்கு பதிலாக கடைசி ஜெபத்தை மாத்திரம் கொடுத்தார். இவர் அந்த ஜெபத்தை செய்வதற்காக மைக் எடுத்த போது அந்தப் பெண் தன் கையில் வைத்திருந்த அந்த ட்ரம் ஐ கீழே எரிந்து விட்டு ஆட ஆரம்பித்தார். எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சி. மேலும், அந்த பெண்ணிடம் இருந்த ஆவி நீ என்னை கண்டுபிடித்து விட்டாய் என்று இவரை பார்த்து கத்த ஆரம்பித்தது. இறுதியில் அந்த பெண்ணிடம் இருந்த பிசாசு துரத்தப்பட்டது. அந்த சபையின் ஊழியக்காரர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.

 

இங்கிலாந்து தேசத்தில் ஒரு  சபையின் ஊழியக்காரரின் மனைவி ஊழியத்தில் தலையிட ஆரம்பித்தார்.அந்த சபையில்,  ஜெபிக்கிற குழுவினர் இருந்தார்கள். இவர் அவர்களிடம், என்னை கேட்காமல் ஜெபிக்க கூடாது என்று கட்டளையிட்டார். இப்படி பல காரியங்களில் தலையிட ஆரம்பித்தார். இறுதியில் அந்த ஊழியக்காரர் தன் மனைவியின் அனுமதியின்றி எதையும் செய்ய மாட்டார். கடைசியில் அந்த சபையே உடைந்து சிதறி விட்டது.

 

பல சபைகளில் இந்த ஆவி பெண்கள் மூலமாக சபையின் அதிகாரத்தை தங்கள் கையில் கொண்டு வந்து விடுகிறது. பல சபைகளில் ஊழியக்காரர்கள் இத்தகய ஆவியை உடைய பெண்களிடம் அடிமையாக இருக்கின்றார்கள் என்பது அதிர்ச்சியடைய செய்கிறது. பல சபைகளில் தேவ சித்தத்திற்கு மாறாக பொறுப்பாளர்களை இந்த ஆவி தான் நியமிக்கிறது. சில ஊழியக்காரர்கள் வேசித்தனமுடைய இத்தகய ஆவியினால் விபச்சாரம் என்கிற பாவத்தில் விழுந்து தங்கள் ஊழியத்தையே இழந்து போகிறார்கள்.

 

ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறைஉண்டு: என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். வெளிப்படுத்தினத விசேஷம் 2:20

 

கிறிஸ்து தான் சபைக்கு தலையாயிருக்கிறார் என்பதில் ஊழியக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஊழியக்காரர்கள் தேவ சமூகத்தில் காத்திருந்து தேவ ஆலோசனை படி முடிவுகளை எடுக்க வேண்டும். கிறிஸ்து தங்களுக்கு கொடுத்த அதிகாரத்தை யாருக்கும் கொடுத்து விட கூடாது. மனைவி புருஷனுக்கு எல்லா காரியத்திலும் கீழ்ப்படிந்திருக்க கடவள் என்கிற கட்டளை ஊழியக்காரிகள் வாழ்க்கையில் கடைபிடிக்கப்பட வேண்டும்.

 

கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். எபேசியர் 5-23

 

இன்றைக்கு குறி சொல்லக்கூடிய பல பெண்கள் தங்களை தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொண்டு சபையில் எழும்புகிறார்கள். இவர்கள் சபையில் குழப்பத்தையே உண்டு பண்ணுகிறார்கள். ஏவாளோடு பிசாசு பேசினது போல இவர்களோடு பேசி, ஆதாம் வீழ்ந்தது போல ஊழியக்காரர்களையும் வீழ்ச்சியடைய செய்கிறார்கள்.

 

அந்த நாட்களில் பெண்கள் சபைகளில் பேச அனுமதிக்கப்படவில்லை. பெண்கள் சபைகளில் பேசுவது அயோக்கியமாய் இருக்கும் என்று பவுல் குறிப்பிடுகிறார்.

 

அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள். ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே. 1 கொரிந்தியர் 14-35

 

சபைகளில் உங்கள் ஸ்திரிகள் பேசாமலிருக்கக்கடவர்கள். பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை.  அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும். வேதமும் அப்படியே சொல்லுகிறது.

1 கொரிந்தியர் 14:34

 

மேலும் பவுல்,  உபதேசம் பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்கவேண்டும். என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். 1 தீமோத்தேயு 2:11-14

 

பல சபைகள் பிரிந்து உடைந்து போவதற்கு பின்புலத்தில் பெண்கள் காரணமாக இருக்கிறார்கள். அவர்களை சாத்தான்  எளிதாக  தன் வசம் கொண்டு வந்து அவர்களை பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறான் ஏனென்றால் பெண்கள் பலவீனமான பாண்டம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களுடைய பலவீனத்தை சாத்தான் எளிதாக பயன்படுத்தி விடுகிறான். இன்றைக்கு பல சபைகளை பெண்கள் நடத்தினாலும் முதலாவது அழகாக நன்றாக எழும்பி பிரகாசிக்கிறார்கள். கடைசியில் விழுந்து போவதை பார்க்கலாம். ஏனென்றால்? பிசாசின் கண்ணியில் எளிதாக அகப்பட்டு விடுகிறார்கள்.

பெண்களை பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருங்கள்.

 

 

இது ஒரு உண்மை சம்பவம். ஒரு கிராமத்தில் ஒரு முதிர்ந்த ஊழியக்காரர் பல வருடங்களாக ஒரு சபையை நடத்திக் கொண்டிருந்தார். அந்த சபையில் ஒரு 20,30 பேர்கள் தான் இருந்தார்கள். ஆனால் அந்த பகுதியில்  ஒரு சபை எழும்பினது, புதிதாய் அந்த எழும்பிய அந்த சபையை நடத்தினவர் ஒரு பெண். அநேக ஜனங்கள் அந்த சபையில கடந்து வந்து வர ஆரம்பித்தார்கள். அந்த சபை பெருக ஆரம்பித்தது அப்பொழுது இந்த ஊழியக்கார தேவ சமூகத்தில் போய், ஆண்டவரே நான் இவ்வளவு வருஷமாய் நான் ஊழியம் செய்கிறேன், உண்மையும் உத்தமமாய் ஊழியம் செய்றேன், என் சபையில் பல வருடங்களாக குறைந்த விசுவாசிகள் தான் இருக்கிறார்கள். ஆனால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சபையில் ஏராளமான பேர் வருகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்தார். ஆண்டவர் அவருடைய ஜெபத்தை கேட்டு வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அந்த சபைக்கு போ அங்கே நான் எல்லாவற்றையும் வெளிப்படுத்துவேன் என்றார்.

 

அடுத்த ஞாயிற்றுக்கிழமை இந்த ஊழியக்காரர் அந்த சபைக்கு போய் முன் வரிசையில் உட்கார்ந்தார். அந்த அந்த பெண் ஊழியக்காரர் வந்து ஆராதனை நடத்தும்படி மைக்கை எடுத்தார். இந்த ஊழியக்காரரை பார்த்தவுடன் அதிர்ச்சியில் அப்படியே நின்று கொண்டிருந்தார். அவரால் சிறிது நேரம் அசைய முடியவில்லை திடீரென்று அவர் ஆட ஆரம்பித்தார் மைக்கை தூக்கி எறிந்தார்கள் நான் யார் தெரியுமா? என்று அந்த ஆவி பேச ஆரம்பித்தது, அது அவரை நோக்கி ஆக்ரோஷமாக வந்தது இவர் கையை நீட்டி அந்த பிசாசை துரத்தினார். அந்த பெண் அப்படியே மயங்கி கீழே விழுந்தார். ஜனங்கள் எல்லாம் அதிர்ச்சி அடைந்தார்கள்.

 

ஊழியக்காரர்களே! வரங்களையோ திறமையையோ  வைத்து யாருக்கும் ஊழியப் பொறுப்புகளை கொடுக்காதீர்கள். ஊழியப் பொறுப்புகளை கொடுக்கும் போது தேவ ஆலோசனையின் படி செய்யுங்கள். உங்கள் மனைவி சொல்லும் ஆலோசனைகளை கண்ணை மூடிக்கொண்டு செயல்படுத்தாதீர்கள். அழைப்பு உங்களுக்கு. உங்கள் மனைவிக்கு அல்ல. பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனை படி சபையை நடத்துங்கள். கிறிஸ்து தான் உங்களுக்கு தலை. மனைவியை தலையாக வைக்கும் பட்சத்தில் ஊழியத்தில் தேவ மகிமையை இழந்து போவீர்கள். ஒரு வேளை உங்கள் மனைவியை பயன்படுத்த ஆண்டவர் சொன்னால் மாத்திரமே பயன்படுத்துங்கள். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பது ஒரளவுக்கு உண்மை தான்.

ஏதேன் தோட்டத்தில் ஆதாமுக்கு தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களை இழந்ததற்கு முக்கிய காரணம் பிசாசின் குரலை கேட்டு கொண்டிருந்த பெண்.ஆபிரகாமை தேவ சித்தத்திற்கு மாறாக வேலைக்காரியோடு கூடச் செய்தது பெண் தான்.

 

 

அப் 2-18 ல் ஊழியக்காரிகள் மேலும் ஆவியை ஊற்றுவேன் என்று தேவன் சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையாக பரிசுத்த ஆவியினால் நிரப்பபட்டு தீர்க்கதரிசனம் சொல்கிற,ஜெபிக்கிற மேலும்  தேவனால் பயன்படுத்த படும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை அவர்கள் கனிகளினால்  பகுத்தறியுங்கள்.பரிசுத்த ஆவியானவரால் நிரப்பபட்டு தான் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்.

மேலும், வெளிப்புறமான பரிசுத்த அலங்காரத்தையும் வரங்களையும் வைத்து யாரையும் பகுத்தறிய வேண்டாம். பிசாசினால் ஆளுகை செய்யப்படவர்கள் யாராயிருந்தாலும் அவர்களிடம் பெருமை மறைந்திருக்கும். வானத்துக்கு ஏறுவேன் என்று செயல்படுவார்கள்.

 

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. 1 பேதுரு 3-4

 

எனவே பிரியமானவர்களே, உங்கள் சபைக்காகவும் உங்கள் சபை ஊழியக்காரர் குடும்பத்துக்காகவும் தொடர்ந்து ஜெபியுங்கள்.சபை கிறிஸ்துவின் கன்மலையின் மேல் அதாவது கிறிஸ்துவின் உபதேசத்தின் மேல் கட்டப்பட்டிருக்க வேண்டும்.தேவனுடைய அதிகாரத்தின் கீழ் பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனையின் படி சபை நடத்தப்பட வேண்டும்.இன்றைக்கு பல சபைகள் தேவனுடைய ஆலோசனையிலிருந்து மனித ஆலோசனைக்கு கடந்து போய் விட்டது.

இன்றைக்கு சபைகளில் தேவ நீதியையும் தேவ சித்தத்தையும் நிறைவேற்றுவதற்கு எதிராக செயல்படும் இந்த ஆவிகளை கட்டி ஜெபியுங்கள். எப்படியென்றால்? அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். ரோமர் 10-3

bottom of page