top of page

நீ கர்த்தருடையவன் என்று எழுது.......

Write that you belong to the Lord........

ருவன், நான் கர்த்தருடையவன் என்பான், ஒருவன் தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான். ஏசாயா 44:5

 

 

  • நீ கர்த்தருடையவன் என்று அறிக்கை பண்ணு. 
    நீ எந்த இடத்திலும் கர்த்தருடையவன் என்று கையெழுத்து போடு.

 

முதலாவது தேவனுடைய ராஜியத்தையும் அதன் நீதியையும் தேடாத  கிறிஸ்தவர்கள் குறைவில் தான் இருக்கிறார்கள். பல கிறிஸ்தவர்கள் அரசாங்க சலுகைகளுக்காக தேவனை மறுதலிக்கிறார்கள்.
 

ஞாயிற்று கிழமைகளில் ஆலயத்துக்கு வந்து நீர் மாத்திரம் போதும் என்கிறார்கள். வேலைத்தலங்களில்  தாங்கள் இந்து என்று சொல்லி அரசாங்கத்தின் சலுகைகளை பெற்று கொள்கிறார்கள். இப்படி தங்கள் பிள்ளைகளுக்கு சாபத்தை வைத்து போகிறார்கள்.
 

உலக ஆசீர்வாதத்திற்காக தங்களை இந்து என்று எழுதி நாங்கள் விக்கிரகத்துக்கு உரியவர்கள் என்று அரசாங்கத்தில் பதிவிடுகிறார்கள். உலக பொருளுக்காக தேவனை உதாசினம் பண்ணி நாங்கள் இந்துக்கள் என்று தங்களை சொல்லி கொள்ளுகிற இவர்கள் பாரம்பரிய ஆவிக்குறிய சபைகளில் தான் இருக்கிறார்கள்.
 

தேவனையும் அரசாங்கத்தையும் ஏமாற்றும் இவர்கள் சத்தியத்தை அறிந்தும் தவறு செய்வதால் ஒரு  சிறையிருப்புக்குள் தான் இருக்கிறார்கள். இவர்கள் புதிதாக இரட்சிக்கப்பட்ட ரகசிய கிறிஸ்தவர்ள் அல்ல. மூன்று தலைமுறைகளாக அரசாங்கத்தையும் தேவனையும் ஏமாற்றும் மாயமாலக்காரர்கள். இவர்கள் ஆவிக்குறிய சபைக்கு போனாலும்   அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. ஏசாயா 44:18

 

அன்றைக்கு இயேசுவோடு இருந்த யூதாஸ் பணத்துக்காக இயேசுவை காட்டி கொடுத்தான். அவன் இயேசுவை காட்டி கொடுக்க வந்த போது ரபி வாழ்க என்று ஆராதித்தான். அதே மாதிரி ஞாயிற்று கிழமைகளில் இயேசு வாழ்க என்று ஆராதிக்கிற இவர்கள் மற்ற நாள்களில் பணத்துக்காக நான் இயேசுவுக்குறியவனல்ல என்று வேலைத்தலங்களில் அவரை மறுதலிக்கிறார்கள்.
 

இவர்களிடம் சலுகைகள் மூலம் வரும் பண ஆசை எல்லா தீங்குக்கும் வேராயிருக்கிறது என்பதை அறியாமல் இவர்கள் மனக்கண் அடைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் கண் சொருகி போன குருடராயிருக்கிறார்கள். நகையை மாத்திரம் கழற்று என்று ஓயாமல் பிரசங்கம் பண்ணும் இவர்கள் சபையின் போதகர்கள் இவைகளை கண்டித்து உணர்த்தாதபடியால், குருடருக்கு வழிகாட்டும் குருடராயிருக்கிறார்கள்.

 

 

ஆனால் ஒரு கூட்டம் புற மதத்தினர் இயேசுவை ஏற்று கொண்டு அவரை உண்மையாய் தேடி கண்டடைகிறார்கள். அவர்கள் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். அவர்கள் தேவனுக்காக எதையும் இழக்க தயாராயிருக்கிறார்கள். இவர்கள் தான் இருளிலிருந்து வெளிச்சத்துக்கு வந்தவர்கள்.

 

 

தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. 2 கொரிந்தியர் 6:16

 

எனவே எந்த இடத்திலும் நான் இயேவுக்குறியவன், அவருடைய இரத்தத்தால் மீட்கப்பட்டேன், அவர் தன் ஜீவனை கொடுத்து என்னை கிரயத்துக்கு வாங்கியிருக்கிறார் என்று அறிக்கை பண்ணு.

 

 

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். யோவான் 1:12

 

எனவே நீ தேவனுடைய பிள்ளையாயிருந்தால் ஏசாயா 44-5 ன் படி நான் கர்த்தருடையவன் என்று கையெழுத்து போடு.

 

அப்பொழுது இயேசு கிறிஸ்து, நான் உலகத்தானல்லாதது போல இவர்களும் உலகத்தாரல்ல என்று சாட்சி கொடுப்பார்.

 

 

பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன், அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது, அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள், அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம், ஆவியானவரும் ஆம் என்று திருவுளம் பற்றுகிறார் என்று சொல்லிற்று.  வெளிப்படுத்தினத விசேஷம் 14:13

 

ஆமென்.

bottom of page