top of page

தெளிந்த புத்தி

 

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். 2 தீமோத்தேயு 1 பரிசுத்தாவியானவர் ஒரு மனிதனுக்கு தெளிந்த புத்தியை தருகிறார்.தெளிந்த புத்தி ஒரு மனிதனுக்கு வரும் போது அவன் பாவம் எது பரிசுத்தம் எது என்பதை தெளிவாக பகுத்தறிந்து பாவத்துக்கு விலகி பழைய மனிதனின் பாவ சுபாவங்களை களைந்து போட்டு விட்டு இயேசுவின் சாயலாய் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனிதனாக மாறுகிறான்.பரிசுத்த ஆவியானவர் தேவ அன்பினால் அவனை நிரப்பி சகல சத்தியத்துக்கும் கீழ்படியும் படி நடத்துகிறார்.ஒருவன் தேவபெலத்தினால் அதிகமாக நிரப்பபடும் போது அந்த பெலனும் கிருபையும் முடிவு பரியந்தம் அவனை நிலை நிறுத்துகிறது. (கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்திரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.) 


1 பேதுரு 1 :5 தகப்பனை விட்டு விலகி போன அந்த கெட்ட குமாரன் புத்தி தெளிந்தவுடன் தன் தகப்பன் வீட்டிற்கு போக வேண்டும் என்று தீர்மானம் எடுத்தான்.பிசாசின் வல்லமையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு வாலிபன் புத்தி தெளிந்து இயேசுவின் பாதத்திலே அமர்ந்திருந்தான்.இன்றைக்கு அநேகர் பரிசுத்தாவியானவர் அருளும் தெளிந்த புத்தியை பெற்று கொள்ளாததினால் உலக ஆசை இச்சைகளுக்கும்,மனிதன் உருவாக்கிய பாரம்பரிய உபதேசங்களுக்கும் வஞ்சிக்கப்பட்ட பொய்யான உபதேசங்களுக்கும் அடிமையாகி அதற்கு ஒத்த வேஷம் தரிக்கின்றனர்.ஆனால் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுபவர்கள் மாத்திரமே சத்தியம் என்ற மேச்சலுக்குள் நடத்தப்பட்டு அமர்ந்த தண்ணீர் என்ற சந்தோஷமும் புத்திக்கெட்டாத சமாதானமும் நிறைந்த தெளிந்த புத்தியை பெற்று கொள்கிறார்கள்,இவர்கள் தான் பரிசுத்தாவியானவரின் பிரசனத்தை வாஞ்சித்து தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கை இயேசுவின் பாதத்தில் காத்திருந்து பெற்று கொள்கிறார்கள்.இவர்கள் தான் அதிகமாய் கனி கொடுத்து பிதாவை மகிமைபடுத்துவார்கள்.அல்லேலுயா.

bottom of page