top of page

வேறொருதேற்றரவாளன்

 

இன்றைக்கு சில ஊழியக்காரர்கள் பரிசுத்த ஆவியானவர் தான் இயேசு கிறிஸ்து. மேலும், இயேசு தான் பரிசுத்த ஆவியானவராக வந்திருக்கிறார் என்று  பிரசங்கிக்கிறார்கள்.

ஆனால் இயேசுவோ தன் சீஷர்களிடம் நான் அல்ல வேறு ஒரு தேற்றரவாளனை அனுப்புவேன்.அவர் தான் சத்திய ஆவியானவர் அவர் உங்களை சகல சத்தியத்துக்குள்ளும் நடத்துவார் என்றார்.

 

என்னை குறித்து சாட்சி கொடுக்க வேறொருவர் இருக்கிறார் என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.  யோவான் 5:31

 

என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன். யோவான் 5:32

இயேசு கிறிஸ்துவால் சொல்லப்பட்ட அந்த இரண்டு வசனங்களிலும் வேறொருவர் என்ற வார்த்தை பயன்படுத்தபட்டிருப்பதை காணலாம்.அப்படியென்றால் அந்த வேறொருவர் யார்?

 

  • வேறொரு தேற்றரவாளன்

 

 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்*

யோவான் 14:16

 

ஒரு வேளை இயேசு கிறிஸ்து தான் பரிசுத்த ஆவியானவர் என்றால் நான் தான் அந்த பரிசுத்த ஆவியானவர் என்று சொல்லியிருப்பார்.மேலும் வேறொரு தேற்றரவாளனை அனுப்புவேன் என்று சொல்லியிருக்க மாட்டார். மேலும் மத் 10-20 ல் பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர் என்று இயேசு சொன்னதை கவனித்தீர்களா?

 

யோவான் 16 ம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து நான் என்னை அனுப்பினவரிடத்தில் போகிறேன் என்றார். 7 ம் வசனத்தில் நான் உண்மையை சொல்கிறேன், நான் போகிறது உங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும்.நான் போகாவிட்டால் பரிசுத்த ஆவியானவர் உங்களிடத்தில் வர மாட்டார். நான் போவேனாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். இந்த வசனத்தின் ஆரம்பத்தில் நான் உண்மையை சொல்கிறேன் என்று இயேசு கிறிஸ்து குறிப்பிட்டதை கவனித்தீர்களா?பொய் சொல்ல அவர் மனுஷன் அல்ல.ஆமென்.

நான் போய் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன் என்று இயேசு சொல்லியிருக்க பரிசுத்த ஆவியானவர் தான் இயேசு என்று தவறாக பேசுகிறவர்கள் யார்?பொய் தானே சொல்கிறார்கள்?

 

  • என்னை குறித்து சாட்சி கொடுப்பார்

 

அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.

யோவான் 16:14

 

 பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள், அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன். யோவான் 16:15

 

அப்போஸ்தலர் அதிகாரம் முழுவதும் ௧வனமாக வாசித்தீர்களென்றால் ஆதி அப்போஸ்தலர்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சித்தப்படி வழி நடத்தியவர் பரிசுத்த ஆவியானவரே. பரிசுத்த ஆவியானவர் பேசினார்,நிரப்பினார், பிரித்து விட்டார்,போகாத படிக்கு தடை செய்தார்,அவர்கள் மேல் இறங்கினார் என்று அவரது செய்கைகளை காணலாம். இன்றைக்கு பரிசுத்த ஆவியால் நிரம்புகிறவர்கள் கர்த்தராகிய இயேசுவையே மகிமைபடுத்துவார்கள்.

இயேசுவை இந்த உலகத்தில் வெளிப்படுத்துகிறவர் பரிசுத்த ஆவியானவரே.ஒரே நேரத்தில் உலகெங்கிலும் நடக்கும் ஆராதனைகளில் கர்த்தராகிய இயேசுவை வெளிப்படுத்தி மகிமைபடுத்துகிறவர் ஆவியானவரே.இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாக இந்த உலகத்தில் செயல்படுகிறவர் பரிசுத்த ஆவியானவரே.அவரே என்னை குறித்து சாட்சி கொடுப்பார்.மேலும் என்னிடத்திலிருந்து உங்களுக்கு அறிவிப்பார் என்று இயேசு சொன்னதை கவனியுங்கள்.

 

  • கிறிஸ்து எங்கே இருக்கிறார் 

 

நான் பிதாவிடமிருந்து புறப்பட்டு உலகத்துக்கு வந்தேன்.மறுபடியும் உலகத்தை விட்டு பிதாவிடத்திற்கு போகிறேன் என்று இயேசு கிறிஸ்து யோவான் 16-28ல் சொல்கிறார்.மேலும் யோவான் 17-11 ல் நான் இனி உலகத்தில் இருக்கமாட்டேன்.நான் உம்மிடத்திற்கு வருகிறேன் என்று மறுபடியுமாக சொல்வதை காணலாம்.

இயேசு ஒருகாலும் பொய் சொல்ல மாட்டார்.இல்லையா?இன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாக உலகத்திலிருந்து  இயேசுவை நமக்கு காண்பிப்பவர் பரிசுத்த ஆவியானவரே.

 

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். கொலோசெயர் 3:1

 

அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார் தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.1 பேதுரு 3-22

 

  • அவர் வானத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டார்.

 

கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்போஸ்தலர் 1:11

மேல் சொல்லப்பட்ட  சம்பவத்தில் தேவ தூதர்கள் கூட இயேசு கிறிஸ்து எப்படி வானத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டாரோ  அப்படியே வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று சாட்சி கொடுப்பதை காணலாம்.

 

ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவஎக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார் அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 1 தெசலோனிக்கேயர் 4-11.

 கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். 2 தெசலோனிக்கேயர் 1-8

 

மேற் சொல்லப்பட்ட வசனங்களிலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வானத்துக்கு எப்படி போனாரோ அப்படியே வருவார்.ஆமென்.

 

 

  • ஸ்தேவான் கண்ட பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரை பற்றிய தரிசனம்

 

அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய் வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய (பிதா) வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு;

அப்போஸ்தலர் 7:55

 

அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். அப்போஸ்தலர் 7:5.

மேற் சொல்லப்பட்ட சம்பவத்தை நன்றாக ஆராய்ந்து பாருங்கள்.பரிசுத்த ஆவியானவர் பூமியில் இருக்கிறார்.பரலோகத்தில் கர்த்தராகிய  இயேசுவானவர் பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதை காணலாம்.

 

சில ஊழியக்காரர்களும் சில கள்ள போதகர்களும் தங்களுக்கு கேடுண்டாக்க வேதாகமத்தை புரட்டுகிறார்கள் இவர்கள் பரிசுத்த ஆவியானவர் தான் இயேசு என்கின்றனர் வேத வசனத்தின் படி இது தவறான உபதேசம். சிலர் தங்கள் தவறான கொள்கைகளுக்கேற்ப தவறாக உபதேசிக்கிறார்கள். மேலும் சிலர் கர்த்தரே ஆவியானவர் என்ற வசனத்தின் படி இயேசுவே ஆவியானவர் என்று சொல்கின்றனர்.இந்த இடத்தில் இந்த கர்த்தரே என்கிற வார்த்தை முழுக்க முழுக்க பரிசுத்த ஆவியானவரையே அடையாளப்படுத்துகிறது. ஒரு வேளை இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்தி  மகிமைபடுத்துகிற பரிசுத்த ஆவியானவரை கர்த்தரே என்று சொல்வதில் தவறில்லையே.

 

அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்தஆவியைப்பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.

அப்போஸ்தலர் 2:33

 

இவர்கள் கொள்கையின் படி இதே வசனத்தை...

 

இயேசு தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி இயேசுவை பெற்று நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இயேசுவை பொழிந்தருளினார். அப்போஸ்தலர் 2:33

இவர்களது கொள்கையே வசனத்தின் படி தவறாக இருக்கிறது.

 

 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார். தேவன் அவருடனே கூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

அப்போஸ்தலர் 10-38

 

நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! எபிரேயர் 9:14

மேல் சொல்லப்பட்ட வசனங்களை ஒருமுறை கூட ஒவ்வொரு வார்த்தையாக படியுங்கள்.தெளிவாக விளங்கி கொள்வீர்கள்

 

அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராயிருக்கிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை. நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார். எபிரேயர் 5-5

 

இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார். இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களை உண்டாக்கினார். எபிரேயர் 1-2

 

அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன். அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்:  நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன். நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன். நீதிமொழிகள் 8:26-30

 

மேற் சொல்லப்பட்ட வசனங்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பற்றிய காரியங்களை பற்றி தயவு செய்து ஆராய்ந்து பாருங்கள். யோவான் 8-58 ல் ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பாகவே நான் இருக்கிறேன் என்று இயேசு சொன்னதை சற்று நினைவுபடுத்தி பாருங்கள்.இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமான சர்வ வல்லமையுள்ள தேவன்.அவர் தேவனோடு இருந்தார்.தேவனாக இருந்தார்.அல்லேலூயா.

 

பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு. அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.  1 கொரிந்தியர் 8-6

 

இப்பொழுது இயேசு கிறிஸ்து மூலமாக உலகங்கள் உண்டாக்கப்பட்டது.இயேசு கிறிஸ்து பிதா அல்ல,இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவர் அல்ல என்று ஓரளவு புரிந்திருப்பீர்கள்.

 

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.  யோவான் 1-18

 

(லூக்கா 9-35 ல் இவர் என் நேசக்குமாரன் இவருக்கு செவி கொடுங்கள்.என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.

 

இவர் (இயேசு கிறிஸ்து)என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றார்.  2 பேதுரு 1-17)

 

தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.  1 யோவான் 4-9

 

ஆகையால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்று பேதுரு சாட்சி கொடுக்கிறான்.  அப்போஸ்தலர் 2-36

 

இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறவன் இரட்சிக்கப்படுவான். (இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.  யோவான் 20:31)

 

இயேசு கிறிஸ்து தான் பிதா இயேசு கிறிஸ்து தான் பரிசுத்த ஆவியானவர் என்று  மனிதர்கள் சொல்வதை நம்பாதீர்கள். வேத வசனங்களை நீங்களே தியானித்து அறிந்து கொள்ளுங்கள். வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்து சத்தியத்தை அறிந்து தெளிவாக கொள்ளுங்கள்.

 

இயேசுவை கிறிஸ்து அல்ல பிதா என்று மறுதலிக்கிறவன் பொய்யன்.என்று வேதம் சொல்கிறது

அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. யோவான் 3-18 என்ற  வசனத்தின் படி கர்த்தராகிய இயேசு தான் பிதா என்று சொல்கிறவன் எப்படி குமாரனுடைய நாமத்தில்  விசுவாசமுள்ளவனாயிருக்க முடியும்.

 

இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன் பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.  1 யோவான் 2:22  இந்த வசனத்தை திரும்ப திரும்ப படியுங்கள்.உங்களுக்கு உண்மை புரியும்.

 

 குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். 1 யோவான் 2:23

 

நாம் பேசும் வீணான வார்த்தைகள் குறித்து நியாயதீர்ப்பின் நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று இயேசு சொன்னார்.இன்றைக்கு தெய்வத்துவத்தின் ஆழங்களை அறிந்து கொள்ளாமல் தவறாக உபதேசிக்காதீர்கள்.வேதாகமத்தை தொடர்ந்து படியுங்கள்.உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

 

தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு, தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.  பிரசங்கி 5-2

 

கள்ளத்தீர்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.  2 பேதுரு 2:1

 

(பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை பரிசுத்தஆவி என்பவர்களே. இம்மூவரும் (எண்ணங்களிலும் செய்கைகளிலும்) ஒன்றாயிருக்கிறார்கள்.  1 யோவான் 5:7

பரலோகத்தில் சாட்சியிடுகிற தெய்வத்துவத்தின் முப்பரிமாணத்தை அறிந்து கொள்ளுங்கள்.

 

மேலும், தமது முதற்பேறானவரை(இயேசுவை) உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் யாவரும் அவரை(இயேசுவை)    தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.  எபிரேயர் 1-6

 

ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.  ரோமர் 10-13

 

இப்பொழுது புரிகிறதா?ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வணக்கத்துக்குறியவர்.அவரை தொழுது கொள்ளுகிறவன் இரட்சிக்கப்படுவான். அவர் மனிதன், தீர்க்கதரிசி என்று சொல்பவன் நிச்சயம் இரட்சிக்கபட முடியாது.

 

அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு குமாரன் வந்து நமக்கு புத்தியை தந்திருக்கிறாரென்றும் அறிவோம்;

 

அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.  1 யோவான் 5-20

 

பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.  1 பேதுரு 1-2

 

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது  அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்   சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. 

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.  யோவான்.1-1-4

 

மேற் சொல்லப்பட்ட இந்த  காரியத்தை அப்போஸ்தலனாகிய யோவான் தெளிவுபடுத்துகிறார்.

 

ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.  அந்த ஜீவன் வெளிப்பட்டது. பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை(இயேசுவை) நாங்கள் கண்டு, அதைக் குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். நீங்கள் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம். எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. 1 யோவான் 1:1-3

 

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.  2 கொரிந்தியர் 13-14

bottom of page